Thursday, 16 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 16 Oct 2014 06:50 PM PDT


ஐரோப்பிய யூனியனில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்.

Posted: 16 Oct 2014 11:54 AM PDT

ஐரோப்பிய யூனியனில்
தமிழீழ விடுதலைப்
புலிகள் மீதான
தடை நீக்கம்.

நான் லாரில கிளீனரா இருக்கும் போது ஆந்திரா-சட்டிஸ்கர்,ஆந்திரா-மஹாராஷ்டிரா எல்லைப்...

Posted: 16 Oct 2014 08:40 AM PDT

நான் லாரில கிளீனரா இருக்கும் போது ஆந்திரா-சட்டிஸ்கர்,ஆந்திரா-மஹாராஷ்டிரா எல்லைப்பகுதில நக்சல்கள் ஆதிக்கம் அதிகம்...

அந்த வழில போகனும்னா நக்சல் குழுவின் அனுமதி வேணும்...இல்லன்னா சில இடங்களில் லாரி மேல தாக்குதல் நடக்கும்..

நாலு மணிநேரத்துக்கு ஒரு தடவ அத்தனை லாரியும் ஒன்னா சேர்ந்து வரிசையா நிப்போம்..நக்சல் ஜீப் ரெண்டு வரும்...

20 லாரி இருந்தாலும் முன்னாடி ஒரு ஜீப் பின்னாடி ஒரு ஜீப் பாதுகாப்புக்கு வரும்...

கட்டணம் எவ்வளவு தெரியுமா?
7 வருசம் முன்னாடி வெறும் 20 மட்டும் ஒரு லாரிக்கு...அதுவும் அவிங்களுக்கு டீசல் போடவே சரியாகிரும்...அது நக்சல் ஏரியா..அங்க என்ன நடந்தாலும் நம்ம மேலதான் பழி விழும்னு தெரிஞ்சு நக்சல்கள் குடுக்கும் பாதுகாப்பு அது..சில இடங்களில் இரவில் பயணம் செய்ய அனுமதியே இல்லை....

நானே டிரைவரா மாறி போகும்போது சில வித்தியாசமான அனுபவமும் கிடைச்சிருக்கு..

ரோட்டு ஓரமா நிறுத்தி நானும்,இன்னொரு டிரைவரும் சமையல் செஞ்சுட்டு இருந்தோம்...திடீர்னு பரபரப்பா பத்து பேரு துப்பாக்கியோட வந்து சோறு,குழம்பு மட்டும் குடுன்னு கேட்டானுக...

குழம்பு ரெடியாகைலைன்னு சொன்னதும் துப்பாக்கிய தூக்கி ஓரமா வச்சுட்டு என்கூட சேர்ந்து வெங்காயம் உரிக்க ஆரம்பிச்சுட்டானுக...

சமையல் செய்யும் போதே சொல்லிட்டேன்...நீங்க எல்லோரும் சாப்பிட்டுட்டு அப்புறம் மத்தவங்கலுக்கு எடுத்துட்டு போங்கன்னு...ஏன்னா எனக்கு அப்பவே கம்யூனிசம் பேசும் தோழர்கள் பலரோட நட்பு இருந்தது...

பொறுமையா சாப்பிட்டுட்டு செல்வா மாமா பண்ணுன சமையலை மறுபடி செஞ்சு அவங்க கொண்டு வந்த பாத்திரத்துல எடுத்துட்டு போனாங்க...

போகும் போது செல்வா மாமா காலில் விழுந்துட்டான் ஒருத்தன்...எங்க மாமா கூட செலவுக்கு காசு எதுவும் வேணுமான்னு கேட்டப்போதான் அவங்க சொன்னாங்க நாங்க நக்சல் குரூப்புன்னு...

எங்க செல்வா மாமா ஊருக்கு திரும்பி வீரர் வரைக்கும் அதைத்தான் பேசிட்டு இருந்தார்....

நான் பார்த்த வரைக்கும் நக்சல்கள் பதவிக்கோ, பணத்துக்கோ, அதிகாரத்துக்கோ போராடுபவர்கள் அல்லர்.....

தனது வாழ்வுரிமைக்காக போராடும் ஒருவகையான போராளிகள் மட்டுமே....


வாழ்க்கையின் மதிப்பு என்னவென்பதை, வீணாக்கப்பட்டக் காலத்தை விட வேறெதுவாலும் தெளிவ...

Posted: 16 Oct 2014 07:40 AM PDT

வாழ்க்கையின் மதிப்பு என்னவென்பதை, வீணாக்கப்பட்டக் காலத்தை விட வேறெதுவாலும் தெளிவாகப் புரியவைக்க முடியாது. :(

@கனா காண்கிறேன்

"இந்தி - நேஷனல் லேங்குவேஜ் - இது கூட தெரியாம இந்தியாவுல இருக்கீங்களா???" "தமிழ்...

Posted: 16 Oct 2014 07:30 AM PDT

"இந்தி - நேஷனல் லேங்குவேஜ் - இது கூட தெரியாம இந்தியாவுல இருக்கீங்களா???"

"தமிழ் - இண்டர்நேஷனல் லேங்குவேஜ் - இதுகூட தெரியாம உலகத்துல இருக்கீங்களா??"

இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி என கிழக்கிந்திய கம்பெனியின் மாநிலங்களில் பேசப்படும் மொழிகள் அம்மாநிலத்தை தாண்டி சென்றதில்லை...

ஆனால் தமிழ் பல நாடுகளில் அலுவலக மொழி.. இங்கிலாந்தில் Call Center வேலைகளிலோ, பல மொழி சார்ந்த சார்ந்த வேலைகளின் மொழி பட்டியலில் ஜப்பானிய மொழி, சீன மொழியுடன் தமிழும் ஒரு உலக மொழியாக இருக்கும்... இந்தி என்றால் அங்கு என்னவென்றே தெரியாது...

@Agazhvaan GGanesh

2,500-year-old labyrinth discovered in Dharmapuri Archaeologists Believe It To...

Posted: 16 Oct 2014 07:00 AM PDT

2,500-year-old labyrinth discovered in Dharmapuri

Archaeologists Believe It To Be The Largest In The World

A 2,500-year-old labyrinth has been excavated in Kambainallur village in Dharmapuri district of Tamil Nadu.Archaeologists believe it could well be the largest in the world.With a complicated network of paths, labyrinths have been a fertility symbol associated with many cultures. They represent a unique pattern of consciousness and have been used as meditation tool since the Neolithic period.

Ancient people used to worship labyrinths to be blessed with a child, to attain success in their pursuits and for long life for their cattle, experts say."All the rituals were in practice since the ancient period. Every ritual followed today is just an extension of the fertility cult in this region," said Sugavana Murugan, who along with Sad hanandham Krishnakumar, discovered the site a month ago. Even though it is difficult to find one's way inside a labyrinth, it is believed that those who come out through the right path are blessed by the almighty , he said.

Soon after the discovery, the duo sent details with pictures to Jeff Saward, a London-based expert in the field of labyrinths and mazes, for his opinion. After studying it in detail, Saward said, "The pattern is exactly same as the one which is found on the clay tablet from Pylos in Greece, one of the oldest laby rinths in clay found in the world."

The labyrinths and mazes, according to Saward, have been found to be in existence since the Neolithic period. "Maze is a multi-curved category where we have multiple pathways to reach our goal whereas in labyrinths there is only one pathway which leads inexorably to the goal from the point of entry," said Saward, who is editor of `Caerdroia', the journal of mazes and labyrinths.

This square labyrinth found in Kambainallur contains seven paths. "This labyrinth has been under worship from time immemorial. It was found among cist burials, which has made it easy for archeologists to predict its age," said Murugan, who is a member of the Krishnagiri District Archaeological Research Centre.

Source:

http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=2500-year-old-labyrinth-discovered-in-Dharmapuri-05102014006005#

http://www.megalithindia.in/2014/08/a-mysterious-megalith-from-dharampuri.html

http://www.mcs.ca/vitalspark/2010_conciousness/209la01.html

In Tamil...Page 18...

http://epaper.dailythanthi.com/firstpage.aspx?keys=13


காதலிகளுக்கு மட்டும் அழகு குறைவதே இல்லை... அவர்களுக்கு வயதானாலும் கூட... முதல்...

Posted: 16 Oct 2014 06:05 AM PDT

காதலிகளுக்கு மட்டும் அழகு குறைவதே இல்லை...
அவர்களுக்கு வயதானாலும் கூட...

முதல் பார்வையில் எனது வயிற்றில் உருண்ட அதே உணர்வுகள் அவளை இப்போது பார்க்கும் போதும் உயிர்பெற்றுவிட்டன....

அவளை விட அவளது கணவனுடன் தான் அதிகம் பேசினேன்...
ஆனால்...
அவனை விட அவளைத் தான் அதிகம் கவனித்தேன்...

"ச்சீ... அடுத்தவன் மனைவியைப் போய் இப்படி,..", ஆறாம் அறிவு கேவலமாய் பார்க்கும் பார்வைகளை... ஆழ்மனது கண்டு கொண்டதாக தெரியவில்லை...

"அவனுக்கு மனைவி ஆகும் முன்னே எனக்கு காதலி..." இந்த கேடுகெட்ட ஆறுதலை ஆழ்மனது உதிர்க்கும் முன் அதை அழித்துவிடுகிறது அவளது ஐந்து மாதக் கைக்குழந்தையின் சிரிப்பு...

"இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று" தொலைவில் கேட்ட அந்த பாடலைப் பாடும் வானொலியை அடித்து நொறுக்கி விட எத்தனித்தது சிந்தனை...

எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் கடவுளை விட குடும்ப சூழ்நிலைகளே ஆட்கொண்டு விட்டன எங்களிருவருக்கும்...

காலத்தின் சாபக்கேடாய் அவளது திருமணத்திற்கே சென்று அட்சதை போடும் துர்பாக்கியவதியாய் ஆனேன்..

தாலி கட்டும் கடைசி நிமிடம் வரை அவளின் கண்கள் என்னையே வெறித்துகொண்டு இருந்தது... "இப்போதாவது உன் காதலை சொல்லுடா" என்ற பார்வைமொழி பரிதவித்தது...

தகுதியும் தைரியமும் இல்லாத நிலையில் ஒரு ஆணாய் இல்லாமல்... ஒரு கோழையாய் என்னால் அழ மட்டுமே முடிந்தது...

கல்யாணக் கோலத்தில் நின்று... திரைப்படங்களின் கதாநாயகனாய் திருமணத்தை நிறுத்தி தன் கரம் பற்றி இழுத்தால்.,,.என்னோடு ஓடிவர, அவளது கால்கள் தயாராய் தான் இருந்தது...

ஆனாலும் அவளின் அப்போதைய பார்வை
திராணியற்ற என்னை ஏளனம் செய்தது... கண்களில் காதலோடு கண்ணீரும் வழிந்தது...

காலங்கள் கரைந்தோடிய ஓர் நாளில் அவளை சந்தித்தேன்....

"ஹீ இஸ் மை கிளாஸ்மேட் ____ " என்று கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்...

அவளது கணவனோடு சில நிமிடங்கள் பேசிய பின் அவளின் முகம் பார்த்தேன்...
இன்னும் அவள் பார்வையின் மின்சாரத்தை எவனும் பிடுங்கவில்லை,,,

ஏக்கங்கள் ததும்பிய அவளது பார்வைகளை தவிர்த்து விட அவளிடம் விடை பெற்றேன்...

சிறிது தூரம் சென்ற பின் திரும்பினாள்...
நான் புன்னகைத்தேன்...
அவளும் புன்னகைத்தள்....

உடன் நடக்கும் அவளது கணவனின் கைகளை தன்னுடன் கோர்த்துக்கொண்டாள்...
இருவரும் நடந்து சென்றனர்...
நெருக்கமாக...
இன்னும் நெருக்கமாக...
இன்னும் இன்னும் நெருக்கமாக....

இப்போது தான் அவள் என் காதலை புரிந்துகொண்டாள்...
அதனால் அவளது கணவனை மேலும் காதலிக்க தொடங்கிவிட்டாள்...

காதலிகளுக்கு மட்டும் அழகு குறைவதே இல்லை அவர்கள் நமக்கு கிடைக்காமல் போனாலும் கூட..


தனிதனியே செய்யும் சாதம், கூட்டு, பொறியல், சாம்பார், ரசம் போன்ற பலவற்றை ஒரே பாத்த...

Posted: 16 Oct 2014 05:01 AM PDT

தனிதனியே செய்யும்
சாதம், கூட்டு,
பொறியல், சாம்பார், ரசம்
போன்ற
பலவற்றை ஒரே பாத்திரத்தில்
போட்டு கிளறுவதே சைனீஸ்
பாஸ்ட்புட்....

@பிரபின் ராஜ்

மனைவியை பெற்ற அப்பாவுக்கு தான் தெரியும், தீபாவளிக்கு துணி எடுக்க தன் மகளுடன் கடை...

Posted: 16 Oct 2014 04:57 AM PDT

மனைவியை பெற்ற
அப்பாவுக்கு தான்
தெரியும், தீபாவளிக்கு துணி எடுக்க தன்
மகளுடன்
கடைக்கு போன
மருமகன் என்ன
பாடுபடுவானோ என்று... :)

@இளையராஜா

ரஜினியின் அரசியல் பிரவேசம்!!!! ஆயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில் மக்கள் நலனில்...

Posted: 16 Oct 2014 03:45 AM PDT

ரஜினியின் அரசியல் பிரவேசம்!!!!

ஆயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஆண்ட எத்தனையோ மன்னர்கள், பேரரசர்கள் உண்டு. தமிழனின் பெருமையாக அவர்கள் கட்டிய பல்லாயிரக்கணக்கான கோவில்களையும் மாட அரண்மனைகளையும், கொட்டாரங்களையும் நம்மால் காட்ட முடிகிறது. ஆனால் எனக்கு தெரிந்து மக்கள் நலனுக்காக மன்னர்கள் கட்டிய ஒரே ஒரு மருத்துவமனையையோ, கல்விக் கூடத்தையோ, ஆராய்ச்சி கூடத்தையோ, பயிற்சிக் கூடத்தையோ நம்மால் காட்ட முடியவில்லை.

மீனாக்ஷி அம்மன் கோவில் உலக அதிசயம், மகாபலிபுரம் சிற்பக் கலையின் உச்சம் என்று மார்தட்டும் நம்மால், அக்காலத்தில் பஞ்சத்திலும் பட்டினியிலும் செத்தவர்களுக்கு தொழில் கற்றுக் கொடுக்கவோ, அறியாமையை அகற்ற கல்வி கற்றுக் கொடுக்கவோ, பிணி தீர்க்கும் மருத்துவ வசதிக்கோ அரசர்கள் எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை. ஆயிரம் ஆண்டுகால கோவில் என்று பெருமையுடன் காட்டும் நம்மால் ஆயிரம் ஆண்டுகால கல்லூரி என்றோ, ஆயிரம் ஆண்டு கால மருத்துவமனை என்றோ காட்ட எதுவுமே இல்லை.

ஆனால் குடிக்கும் கூத்திற்கும் என்றும் ஆதரவு அளிக்கும் சமூகம் நம் தமிழ் சமூகம். கோவிலில் ஆடுபவர்களுக்கு கிராமத்தை எழுதி வைக்கும் பெருமை கொண்டது. அறிஞர்களும் அறிவியலாளர்களும், சிந்தனையாளர்களும் பட்டினியில் சாகும் போது ஆட்டக்காரர்களுக்கு அணி செய்து அழகு பார்த்த பரம்பரை நாம். அதனாலேயே அறிவும் அறிவியலும் சிந்தனையும் வளரவில்லை நம் சமூகத்தில். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லிய வள்ளுவருக்கு பிறகு இரண்டாயிரம் வருடம் தேவைப்பட்டது பிறப்பால் மனிதன் சமம் என்று பெரியார் வந்து சுயமரியாதை சொல்லிகொடுக்க!!

சுயமரியாதை இல்லாத, அடிமை குணத்துடன், பிற்போக்கு எண்ணம் கொண்ட, குறுகிய எண்ணத்துடன், சுயநலம் மிக்க அடுத்தவனுக்கு என்ன நடந்தாலும் தான் நல்ல இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, பொறாமையும் வஞ்சமும் கொண்ட, அறிவுசார் விசயங்களில் ஆர்வம் இல்லாத ஒரு இனமாகவே தமிழர் இனம் இருந்து வந்துள்ளது. விதிவிலக்குகள் இருக்கலாம். இன்றும் அவ்வாறே உள்ளது.

மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டு சிறுகுழந்தை கால்வாயில் விழுந்து இறந்தாலும் அஜித் விஜய் சண்டையே டுவிட்டர் ட்ரெண்டில் முன்னிலை வகிக்கிறது. வெப்சைட் நடத்துபவர்களிடையே ஒரு பேச்சு உண்டு. தமிழில் நடிகைகளை பற்றி நாலு வரி எழுதினால் போதும். வெற்றிகரமாக வெப்சைட் நடத்தலாம் என்று. முற்றிலும் உண்மை. உலகத்தை பற்றி கவலைப்படாமல் இன்று நீ கூத்தில் கவனம் செலுத்தினால் நாளை உன் குழந்தை கால்வாயில் சாகும் போது பக்கத்து வீட்டில் எந்திரன் படம் பார்த்துக்கொண்டு இருப்பர்.

அறிவியலாளர்களும், மெத்தபடித்தவர்களும் வெளிநாடு செல்கின்றனர் என்றால், "கூமுட்டைகளே! உங்களோடு சேர்ந்து என்னையும் இது எந்த நடிகையின் தொப்புள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட சொல்கிறீர்களா? நானாவது நானோ டெக்னாலஜி பற்றி ஆராய்கிறேன். உங்கள் பரம்பரையில் அறிவியலாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையை எனக்கு தெரியும்" என்று தான் அர்த்தம்.

புற நோயளியாக ஐம்பது ருபாய் கொடுக்க வக்கில்லாத தண்டம் எல்லாம் முன்னூறு ரூபாய்க்கு முதல் ஷோ பார்த்தால் உனக்கு எந்த முட்டாள் வைத்தியன் மருத்துவம் பார்ப்பான்? கூடங்குளம் வெடித்து எவன் செத்தால் என்ன, எனக்கு கரண்ட் வந்தால் போதும். யார் ஆட்சிக்கு வந்தால் என்ன டாஸ்மாக் போதும். புறணி பேச சினிமா கிசுகிசு போதும். சாலை வசதி, குடிநீர் வசதி, கல்வி வசதி போன்ற அடிப்படை உரிமைகளை கூட ஆட்சியாளர்களிடம் கேட்டு பெறமுடியாத பொறுக்கி தின்னிகள் தான் நாம்.

இந்நிலையில் அடுத்த மன்னனை தேட ஆரம்பித்து விட்டோம். ஆயிரம் ஆண்டு கழித்து ஐநூறு கோடி வசூல் செய்த படம் எங்கள் முதல்வர் நடித்தது என்று வரலாறு பேசும். நாமோ சிறு குழந்தைகளை கால்வாயிடமும், வளர்ந்த மூடர்களை டாஸ்மாக்கிடமும் பறிகொடுத்து, எப்போதும் மூடர்களாய் எழுபிறப்பும் அறிவிலிகளாய் இருப்போம். வாருங்கள் அடுத்த முதல்வரை இருட்டுக்குள் தேடுவோம்!!

வாருங்கள் அடுத்த முதல்வரை இருட்டுக்குள் தேடுவோம்!!


வங்கியில் இரவல் பேனா கேட்டவர் சட்டைப் பையில் இரண்டு ஸ்மார்ட் போன்கள்! @பாஸ்கரன்

Posted: 16 Oct 2014 03:34 AM PDT

வங்கியில்
இரவல்
பேனா
கேட்டவர்
சட்டைப் பையில்
இரண்டு
ஸ்மார்ட் போன்கள்!

@பாஸ்கரன்

மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவனின் கனவை நிறைவேற்றி நெகிழச்செய்த ஐதராபாத் போ...

Posted: 16 Oct 2014 03:31 AM PDT

மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவனின் கனவை நிறைவேற்றி நெகிழச்செய்த ஐதராபாத் போலீஸ் கமிஷனர்...

மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றியது ஐதராபாத் காவல்துறை. சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவனை ஐதராபாத் போலீஸ் கமிஷனர் நாற்காலியில் உட்கார வைத்து சிறுவனின் வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளனர்.

சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவன் 'Terminally-ill' நோயாளி ஆவார். டெர்மினலி இல் என்றால் அவருக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் சம்பவிக்கும். காரணம் இவருக்கு இருக்கும் நோய்க்கு எந்த வித சிகிச்சையும் பலனளிக்காது என்று முடிவுகட்டப்பட்ட ஒரு நோயாளி ஆவார் அவர்.

சாதிக்கிற்கு இருக்கும் நோய்க்கு மருத்துவ தீர்வு கிடையாது என்ற செய்தி அவரது குடும்பத்தினருக்கு 5 மாதங்கள் முன்புதான் தெரியவந்துள்ளது. இவர் எம்.என்.ஜே. இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆன்காலஜி என்ற அரசு மருத்துவக் கழகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் சாதிக்கின் தந்தை மொகமது ரஹீமுதீன், விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவென்றே செயல்படும் 'மேக் எ விஷ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டு காவல்துறையில் உயர் பதவியாற்ற வேண்டும் என்ற சாதிக்கின் தீராத அவாவை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

அந்த அமைப்பின் உதவியுடன் ஐதராபாத் உயர்மட்ட காவல்துறையுடன் தொடர்பு கொண்டு சாதிக்கை ஒருநாள் கமிஷனர் நாற்காலியில் அமரவைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் நன்றாக இஸ்திரி போடப்பட்ட போலீஸ் சீருடை, பதக்கங்கள், சாதனை பேட்ஜ்கள், பளபளக்கும் ஷூக்கள், தெலங்கானா போலீஸ் என்று பொறிக்கப்பட்ட போலீஸ் துறை பெல்ட் ஆகியவற்றுடன் கமிஷனருக்கேயுரிய மிடுக்குடன் சாதிக் ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.

ஒருநாள் கமிஷனர் கையெழுத்திடுவதற்காக கோப்புகள் சாதிக் மேசையில் வைக்கப்பட்டன.

ஐதராபாத் நகர கமிஷனர் எம்.மகேந்தர் ரெட்டி நெகிழ்ச்சியுடன் சாதிக்கை வரவேற்று தனது நாற்காலியில் சிறுவனை உட்காரச் செய்தார். சில மணி நேரங்கள் கமிஷனராக சாதிக் பணியாற்றவும் அனுமதித்தார்.

என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு சாதிக் சட்டென, "நான் ரவுடிகளைப் பிடிப்பேன்" என்றார் உற்சாகமாக. மேலும் நகரை அமைதியாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், போக்குவரத்து விவகாரங்களை கவனிப்பேன் என்றும் 10 வயது கமிஷனர் கூறி அனைவரையும் அசத்தினார்.

முன்னதாக புதிய கமிஷனரை எப்படி வரவேற்க வேண்டுமோ அத்தகைய சடங்குகளுடன் கமிஷனர் அலுவலகத்தில் சாதிக்கிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவன் சாதிக் கமிஷனர் அலுவலக கட்டிடத்தில் நடந்து வந்த போது, 'புதிய கமிஷனரை' காவல்துறை ஊழியர்கள் வரவேற்றனர்.

அதன் பிறகே கமிஷனர் மகேந்தர் ரெட்டியின் அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்தார் சாதிக்.

செய்தியாளர்களிடம் சாதிக் கூறும் போது, "என்னுடைய 3 மாமாக்கள் ராணுவத்தில் சேவை புரிந்து வருகின்றனர். மேலும் இரண்டு பேர் கரீம்நகரில் காவல்துறையில் சேவை செய்து வருகின்றனர்" என்றார்.

மகனின் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்ட கசப்பான நிலையில் சற்றே மகிழ்ச்சியடைந்த தந்தை மொகமது ரஹிமுதீன், "எனது மகன் போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் வாழ்க்கை அவனை வேறு ஒன்றிற்கு காத்திருக்கச் செய்துள்ளது" என்றார்.

"மரணத்தை எதிர்நோக்கும் சிறுவனின் கனவை நிறைவேற்ற முடிந்தது எங்களுக்கு மன நிறைவை அளிக்கிறது" என்று கமிஷனர் மகேந்தர் ரெட்டி தெரிவித்தார்

- தி இந்து


அடிவாங்கிய அரசாங்க பேருந்துகளில் 'அல்ட்ரா டீலக்ஸ்' என்று எழுதியிருப்பதை பார்க்கு...

Posted: 16 Oct 2014 03:17 AM PDT

அடிவாங்கிய அரசாங்க பேருந்துகளில் 'அல்ட்ரா டீலக்ஸ்' என்று எழுதியிருப்பதை பார்க்கும்போதெல்லாம் நடத்துனரிடம் கேட்க தோன்றுகிறது,

"சங்கூதுற வயசுல சங்கீதா...!!!"

- பூபதி முருகேஷ்

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போ...

Posted: 16 Oct 2014 02:46 AM PDT

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.
அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்....
அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு..ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.
அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்....
அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு..

- மாத்தியோசி

இதெல்லாம் நியாயமா?? நீங்களே சொல்லுங்க.. 1.பர்சனல் வொர்க் எதுவும் ஆபீஸ் கம்ப்யூட...

Posted: 16 Oct 2014 12:45 AM PDT

இதெல்லாம் நியாயமா?? நீங்களே சொல்லுங்க..

1.பர்சனல் வொர்க் எதுவும் ஆபீஸ் கம்ப்யூட்டர் ல பார்க்க கூடாது.facebook கூட திறக்க கூடாது ன்னு சொல்றாங்க. ஆனா ஆபிஸ் கம்ப்யூட்டர் ர வீட்டுக்கு கொண்டு வந்து விடிய விடிய ஆபீஸ் வொர்க் பாக்கலாம் ன்னு சொல்றாங்க.

2.கிளாஸ் ல பாடம் நடத்தறப்ப தூங்க கூடாது சொல்றாங்க. ஆனா வீட்ல தூங்கற நேரத்துல டீ குடிச்சி , முகத்த கழுவி, நின்னுட்டு, நடந்துட்டேவாது படிக்கணும் ன்னு சொல்றாங்க.

3.பரிட்சைக்கு ஒண்ணுமே படிக்கலைன்னு சொல்றாங்க. ஆனா,எக்ஸாம் ஹால் ல பக்கம் பக்கமா எழுதறாங்க. முதல் மதிப்பெண் வேற வாங்கறாங்க

4.நல்லா மேக்கப் போட்டு வறாங்க.இன்னைக்கு டைம் ஆயிட்டுன்னு சரியா பவுடர் கூட அடிக்கலைன்னு சொல்றாங்க.

5.தெரியாதுன்னு பதில் சொன்னா திட்டறாங்க.ஆனா பதில் தெரியாதுன்னு தெரிஞ்சே தான் கேள்வி கேக்கறாங்க.

6.பொய் பேசறது தப்பு ன்னு சொல்றாங்க.ஆனா உண்மைய பேசினா உதைக்கறாங்க.

7.பொண்ணுங்க ஏமாத்தறாங்க ன்னு மூச்சி வாங்க பேசறாங்க.ஆனா கடன் வாங்கியாவது டாப் பப் செய்றத மட்டும் நிறுத்தவே மாட்டறாங்க.

8.சூரியன் கூட விடிய காலைல எழும்புது.நீ ஏன் 10 மணி வரை தூங்கறன்னு கேட்கறாங்க.ஆனா சூரியன் சாயங்காலம் 6 மணிக்கே தூங்க போயிருது, அதனால தான் காலைல 6 மணிக்கே எழும்புது.நான் 10 மணிக்கு தான தூங்க போனேன்.இதை சொன்னா அடிக்க வறாங்க.

-ஆதிரா.

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


அன்னமிவள் வயதோ பதினாறு ஆண்டுகள் போயின அறுநூறு இன்னும் இவள் முதுமை எய்தவில்லை...

Posted: 16 Oct 2014 08:30 AM PDT

அன்னமிவள் வயதோ பதினாறு
ஆண்டுகள் போயின அறுநூறு
இன்னும் இவள் முதுமை எய்தவில்லை
என்னதான் ரகசியம் தெரியவில்லை

--- கவியரசு கண்ணதாசன்

பா விவேக்


அமெரிக்காவின் மிகப்பெரும் எம்பயர் ஸ்டேட் கட்டட் மாதிரி 30 மடங்கு பெரிதான பரமிடுக...

Posted: 16 Oct 2014 07:30 AM PDT

அமெரிக்காவின் மிகப்பெரும் எம்பயர் ஸ்டேட் கட்டட் மாதிரி 30 மடங்கு பெரிதான பரமிடுகளை 4500 ஆண்டுகட்கு முன்பு கட்டிய எகிப்தியர்கள் பேசிய எகிப்திய மொழி இன்று இல்லை..
உலகத்தின் மாபெரும் வல்லரசை 2800 ஆண்டுகட்கு முன்னர் உருவாக்கிய ரோமாபுரி மன்னர்கள் வளர்த்த இலத்தின் மொழி, இன்று யாருடைய தாய்மொழியும் இல்லை..
மகான் புத்தர் தம் புரட்சிகரமான கருத்துகளை 2600 ஆண்டுகட்கு முன் பரப்பிய பாலி மொழி, அறவே அழிந்துவிட்டது..
உலகை என் காலடியில் பணிய வைப்பேன் என்ற எழுச்சியோடு படை நடத்திச் சென்று ஆசியாவின் முக்கிய பகுதிகளை வென்ற மகா அலெக்சாந்தர் 2300 ஆண்டுகட்கு முன்பு பேசிய கிரேக்க மொழி, இன்று திரிந்து விட்டது..
வரலாற்றின் போ்கையே மாற்றி அமைத்த அன்பரசர் ஏசுநாதர் 2000 ஆண்டுகட்கு முன்பு தம் கருத்துகளை போதித்த அரமிக் மொழி (ஹுப்ரூ மொழியின் கிளை மொழி) இன்று வழக்கிழ்து விட்டது..
ஆனால், இந்தப் பழம்பெரும் மொழிகள் வாழ்ந்து சிறந்த காலத்தில் தானும் வளமாக வாழ்ந்து, இன்று தன் பழைய தோழமை மொழிகள் அனைத்தும் மாண்டு போன போதும், நீண்ட மனித வரலாற்றின் பார்வையாளனாக, இன்றும் இளமையோடு வாழும் ஓரே மொழி நம் தமிழ் மொழி மட்டுமே..
ஆனால், இந்த வளம் கொழிக்கும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள்.., தமிழ் மொழியை பேச தயங்குவது ஏன்??
என் தமிழுக்கு அழிவில்லை.....
தமிழில் பேச தயங்குவதால் தமிழுக்கு எந்த இழப்பும் இல்லை...!!


#Veerapandiya Kattabommannan... இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்...

Posted: 16 Oct 2014 06:25 AM PDT

#Veerapandiya Kattabommannan...

இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்...


வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்று! இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் த...

Posted: 15 Oct 2014 09:29 PM PDT

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்று!

இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் தீரமும் கொண்டது. மகாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்வதற்கு முன், இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி துவங்குவதற்கு முன் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடியவர்கள் பலர். அதில் முன்னின்று, வியூகம் அமைத்துப் போரிட்டவர்கள் பாளையக்காரர்கள். அந்தப் பாளையக்காரர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டற்ற காளை போல் பொங்கியெழுந்து, வெள்ளையரோடு நேருக்கு நேர் நின்று, வீரசமர் புரிந்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். ஓங்காரம் எழுப்பி வெள்ளையனை மிரளச் செய்தவன். அவரின் நினைவு தினம் இன்று..

veerapandiya kattabomman (Vikatan)


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


ஜீவா என்னும் சினிமா - பலே! பலே!! கிரிக்கெட் என்பது எப்படி முழுக்க முழுக்கப் சாத...

Posted: 16 Oct 2014 10:29 AM PDT

ஜீவா என்னும் சினிமா - பலே! பலே!!

கிரிக்கெட் என்பது எப்படி முழுக்க முழுக்கப் சாதி சுரண்டல் கிடங்காக இருக்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளாராம் இயக்குநர் சுசீந்திரன். உண்மையிலேயே இது ஒரு படம் அல்ல - சமூகத் தொண்டு- விழிப்புணர்வும்கூட என்கிறார்கள்!

ஜீவா என்ற கதாநாயகனை உருவாக்கி, அவனுக்குக் கிரிக்கெட்டில் மிகப் பெரிய அளவிற்குத் திறமை இருந்தும் இந்திய அணியில் இடம் கிடைக்காததற்குக் காரணம் என்ன? ரஞ்சி டிராஃபி என்பது என்ன? அதில் இடம் பிடிப்பது யார்? தேர்வு செய்வதற்கு என்ன அளவுகோல் என்பதை சும்மா புரட்டிப் புரட்டி எடுத்துள்ளாராம்.

கருத்துள்ள படமா பாருங்க நண்பர்களே. மனித மாண்புகளும், மனித நேயமும் வலுப்பெறனும்..அதான் சிறந்த படம்!


Posted: 16 Oct 2014 07:19 AM PDT


காவல்நிலையத்திற்குப் போகும் போது, ரவுடியாகவே இருந்தாலும் பிளேட கூட கீழபோட்டுட்டு...

Posted: 16 Oct 2014 02:05 AM PDT

காவல்நிலையத்திற்குப் போகும் போது, ரவுடியாகவே
இருந்தாலும் பிளேட கூட கீழபோட்டுட்டுத்தான்
போவா, ஆனா இங்கே என்னடானா 22வயசு பையன்
கத்தி எடுத்துட்டு காவல்நிலையத்திற்குப் போனானாம்,
எஸ்.ஐ.யேவே இடுப்புல குத்துனானாம்..! கொஞ்சம்
நம்பற மாதிரி பொய் சொல்லுங்கப்பா.

மூன்று பேருக்கு 15 வருட சிறைத்தண்டனை தரப்பட்டது. ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள ஏதா...

Posted: 15 Oct 2014 08:16 PM PDT

மூன்று பேருக்கு 15 வருட சிறைத்தண்டனை தரப்பட்டது.
ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள ஏதாவது அவர்கள் கேட்கலாம்..

முதல் ஆள்,"எனக்கு 500 புத்தகங்கள் வேண்டும்" என்றான்.

இரண்டாம் ஆள், "எனக்கு சிறையில் உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் வேண்டும்"

மூன்றாவது ஆள்,"எனக்கு ஒரு லட்சம் சிகரெட்கள் வேண்டும்"

15 வருடம் கழித்து மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர்..

முதல் ஆள்," நான் நிறைய தெரிந்து கொண்டேன் ஒரு லைப்ரரி அமைப்பேன்"

இரண்டாம் ஆள்,"நான் உடலை வலுவாக்கினேன் ஜிம் வைப்பேன்"

மூன்றாம் ஆள், நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன்"என்றான்

எல்லோருக்கும் ஆச்சர்யம் போகும்போது லட்சம் சிகரெட் கேட்டவன் எப்படி திருந்தினான் என்று.

அவன் சொன்னான், "தீப்பெட்டி கேக்க மறந்துட்டேன்ப்பா..

போட்டியில் ஜப்பான் காரனும்,இந்தியனும் கலந்துகொண்டார்கள்.... ஒரு லிட்டர் பெட்ரோலி...

Posted: 15 Oct 2014 11:34 AM PDT

போட்டியில் ஜப்பான்
காரனும்,இந்தியனும்
கலந்துகொண்டார்கள்....
ஒரு லிட்டர் பெட்ரோலில்
எவ்ளோ தூரம்
போகிறோம்,என்பதுதான்
போட்டி...
ஒரே கம்பெனியின்
தயாரிப்பான
இரண்டு பைக்குகள்...
முதலில் ஜப்பானியர்
போட்டியை துவங்கினார்,
1லிட்டரில் 40
கி.மீ.சுற்றி வந்தார்,பெட்ரோல்
தீர்ந்துவிட்டது..,
அடுத்து வந்த நம்மநாட்டுகாரன்
,அதே 1 லிட்டரில் 40 கி.மீ
வண்டி நின்றது.அப்பொழு
துதான் தனக்கு தெரிந்த
மொத்த வித்தையையையும்
இறக்கினான்.,
பெட்ரோல் டேங்
மூடியை திறந்து வாயால்
ஊதிவிட்டு....... ஸ்டார்ட்
செய்தான். 2 கிமீ ஓடியது.
வண்டியை.தரையில்
வழப்பக்கமா சரிச்சி போட்டு......
மீண்டும்,ஸ்டார்ட்
செய்து 2கிமீ.ஓட்டினான்.
அப்புறம் இடப்பக்கம்
சரிச்சு போட்டு.....2
கிலோமீட்டர் ஓட்டினான்.
ஆகமொத்தம் போட்டில
நம்மஆளு ஜெயிச்சிட்டான்..
ஜப்பான் காரன்
சொன்னான்,பைக்க
கண்டுபிடிச்சது என்னமோ நாங்கதான்,
ஆனால் அதை எப்படிலாம் ஓட்ட
வேண்டும் என்பதை உங்களிடம்
இருந்துதான் கற்றுகொள்ள
வேண்டும்.

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


மூளைக்கொரு வேலை

Posted: 16 Oct 2014 09:40 AM PDT

மூளைக்கொரு வேலை


:)

Posted: 16 Oct 2014 09:30 AM PDT

:)


மரணப்படுக்கையில் இருந்த அந்த மனிதனுக்காக பிரார்த்திக்க வந்தார் பாதிரியார். பக்க...

Posted: 16 Oct 2014 09:15 AM PDT

மரணப்படுக்கையில் இருந்த அந்த மனிதனுக்காக பிரார்த்திக்க வந்தார் பாதிரியார்.

பக்கத்தில் ஓர் இருக்கை இருந்தது. தனக்குப் பிரார்த்திக்கத் தெரியாதென்றும், சில ஆண்டுகளாய் இறைவனுக்காக இருக்கை போட்டு, அதில் கடவுள் இருப்பதாய்க் கருதி உரையாடி வருவதாகவும் சொன்னான்.

"இதுவே போதும்! இனி ஏன் பிரார்த்தனை!! விடைபெற்றார் பாதிரியார். இருக்கை விவகாரம் குடும்பத்துக்குத் தெரியாது.

மறுநாள் அந்த மனிதன் இறந்தான்.

படுக்கையைவிட்டு எழுந்து தலையை எதிரிலுள்ள இருக்கையில் தலைவைத்திருந்தான்.

கேள்விப்பட்ட பாதிரியார் சொன்னார்,

"கடவுளின் மடியில் கடைசி மூச்சை விட்டிருக்கிறான். இது எத்தனை பேருக்கு வாய்க்கும்?"

இதயத்தில் அன்பிருந்தால் எதிர் இருக்கையிலும் இறைவன் இருப்பான்.

:) :)

Relaxplzz

இன்று மாவீரன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களின் நினைவுநாள்..... 03.01.1740 அன்...

Posted: 16 Oct 2014 09:00 AM PDT

இன்று மாவீரன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களின் நினைவுநாள்.....

03.01.1740 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிஜய கட்டபொம்மு மண இணையருக்கு மகனாக பிறந்தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன்.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு ஆண் உடன்பிறப்புகளும், ஈஸ்வர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு பெண் உடன்பிறப்புகளும் இருந்தனர்.

ஆதியில் திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் "பாஞ்சாலன்" நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது.

இந்த அரச மரபில் 47வது மன்னனாக வந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். 02.02.1790 இல் பாஞ்சாலங்குறிச்சியில் அரசுக் கட்டில் ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனது துணைவியார் வீரஜக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.

09 ஆண்டுகள், 08 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனிடம், கிழக்கிந்தியக் கம்பெனியார் 1793 இல் கப்பம், வரி என்பன கேட்டனர். 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன்துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797-1798 இல் முதல்முறையாக போர் தொடுக்கப்பட்டு, போரில் வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் ஆலன்துரை தோற்று ஓடினார்.

நெல்லை மாவட்டக் ஆட்சியர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைச் சந்திக்க அழைத்தார். பல இடங்களுக்கு அலைக் கழித்தார். இறுதியில் 10.09.1798 இல் இராமநாதபுரத்தில் செவ்வி கண்டார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். வீரபாண்டிய கட்டபொம்மன் போரிட்டு வெற்றி வீரராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தடைந்தார்.


05.09.1799 இல் பானர்மன் என்ற ஆங்கில தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. போரில் பல வெள்ளையர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். திருச்சி வரை சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச் சந்தித்து, விரைவில் வந்து விடுகிறேன் என்று வீட்டாரிடம் விடைபெற்றுவிட்டு, ஒரு தண்டிகை, ஏழு குதிரைகள், ஐம்பது வீரர்கள், தம்பியர், தளபதிகளோடு சித்தார்த்தி ஆண்டு ஆவணித்திங்கள் 22ஆம் நாள் (07.09.1799) இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறி வடதிசை வழியே விரைந்து சென்றார்.

09.09.1799 இல் வெள்ளையர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. 01.10.1799 இல் புதுக்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார். 16.10.1799 இல் கயத்தாற்றில் தூக்கில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் மாவீரன் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் பாஞ்சாலஞ்குறிச்சி கோட்டை அமைந்துள்ளது.

தோழமையுடன்
தமிழ்ச்செல்வன்

Relaxplzz


:)

Posted: 16 Oct 2014 08:50 AM PDT

நமக்கு அழகியாய் தெரியும் பெண்கூட; அவளுடைய கணவணுக்கு பிசாசுதான்... #கணவன்_மனநிலை...

Posted: 16 Oct 2014 08:40 AM PDT

நமக்கு அழகியாய் தெரியும் பெண்கூட; அவளுடைய கணவணுக்கு பிசாசுதான்...

#கணவன்_மனநிலை

Kalimuthu


:)

Posted: 16 Oct 2014 08:30 AM PDT

:)


ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான். அந்த பெண் "என்னை கை விடமாட்டி...

Posted: 16 Oct 2014 08:15 AM PDT

ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்.

அந்த பெண் "என்னை கை விடமாட்டியே " என்று கேட்டாள் .

அவன் "நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் " என்று சொன்னான் .

ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது .

அப்போ பையன் கேட்டான் " இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா" ?

அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி .

அந்த பையனுக்கு பார்வை இல்லை.

அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.

சிறுது தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான் .

" என்னை கல்யாணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை

என்னுடைய இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ " என்று...

Relaxplzz

இஞ்சினியரிங் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு.. // பகிர்ந்து மாணவர்கள் பயன் பெற உதவு...

Posted: 16 Oct 2014 08:00 AM PDT

இஞ்சினியரிங் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு.. // பகிர்ந்து மாணவர்கள் பயன் பெற உதவுங்கள் //

Cognizant நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) சென்னையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கான நேர்முகத் தேர்வு சென்னையில் October-17 அன்று நடைபெற உள்ளது.

மேலதிக தகவல்கள் :

Job Description:

Any Graduate freshers are eligible.

BE / B.TECH / ME / M.TECH / MCA / MSC IT / MSC / MBA/LIFE SCIENCE GRADUATES ARE NOT ELIGIBLE.

Desired Candidates:

Should have good communication skill

Willingness to work in night shifts is mandatory

Should not have any outstanding arrears

Cognizant Walkin Details:

Walk-in Date: 15th to 17th October 2014

Interview Timings: 10 AM - 1 PM

Interview Venue:

Cognizant Technology Solutions,
Old.no.165/New.no.110
Menon Eternity Building,
St'Mary's Road,
Alwarpet,
Chennai-18.

//பகிர்ந்து பயன்பெறுங்கள்//

Relaxplzz


FBம் ட்விட்டரும் போரடிக்குதா? வாழ்க்கைல ஏதாவது உருப்படியா செய்ய நேரம் வந்திருச்ச...

Posted: 16 Oct 2014 07:50 AM PDT

FBம் ட்விட்டரும் போரடிக்குதா? வாழ்க்கைல ஏதாவது உருப்படியா செய்ய நேரம் வந்திருச்சு !..

கிளம்புங்க... ;-) ;-)

- Kali Muthu


Iphone6 Rs.500 only ன்னு ஒரு மெயில் வந்துருக்கு ...அடையார் ஆனந்த பவன் போயி நாலு...

Posted: 16 Oct 2014 07:40 AM PDT

Iphone6 Rs.500 only ன்னு ஒரு மெயில் வந்துருக்கு ...அடையார் ஆனந்த பவன் போயி நாலு பேரு நைட்டு டிபன் சாப்பிட்டாலே பில்லு 600 ரூபாய் வருது .. இவனுக ஐபோன் 500 ரூபாய்க்கு தரேன்னு சொல்றானுக...

ரெண்டு இட்லிய கெட்டி சட்னியோட உருட்டி பார்சல் பண்ணி அனுப்பி வைப்பாங்க போல ;-)

- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

:) Relaxplzz

Posted: 16 Oct 2014 07:30 AM PDT

பெண்களே.. சகோதரிகளே.. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் புகைப்படங்களை பகி...

Posted: 16 Oct 2014 07:15 AM PDT

பெண்களே.. சகோதரிகளே.. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் புகைப்படங்களை பகிரவேண்டாம் என்ற வேண்டுகோள் அடிக்கடி பலருடைய பதிவுகளாக வருவதை பார்க்கமுடிகிறது. அதற்கு அவர்கள் சொல்கிற காரணம் , அந்தப் படங்களை மார்ஃபிங் செய்து தவறாக சித்தரித்து நிர்வாணப்படங்களாக வெளியிட்டு விடுவார்கள் என்பதுதான். அவர்களின் வேண்டுகோள் உண்மையிலேயே ஒரு வித அக்கறையில் "பெண்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே" என்ற நல்லெண்ணம் காரணமாகத்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

இதற்கு பின்னால் பிற்போக்குத்தனமும் பெருஞ்சோகமும் இருப்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இதுவரைக்கும் எந்த ஆம்பள ஆட்களுக்கும் இதுபோன்ற எந்த கோரிக்கையும் வந்ததில்லை. காரணம் என்ன? நாம் ஆம்பளை.. நம்ம மூஞ்சிகளை கிராபிக்ஸ் செஞ்சு போட்டா ஒரு நாயும் சீண்டாது. அப்படியே போட்டாலும் நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. யார் கண்டார் , அந்த பலான கிராபிக்ஸ் வீடியோவை பார்த்து நாம் ரசிக்கவும் செய்யலாம், அதை நண்பர்களுக்கு பெருமிதம் பொங்க காட்டவும் செய்யலாம். அவர்கள் அவமானப்பட்டு கூனி குறுகும் ஒரு விஷயம் நம்மை மட்டும் எதுவுமே செய்வதில்லை. ஒரே காரணம் என்ன? அவர்கள் பெண்கள், நாம ஆண்கள்.

இங்கு பிரச்சினை என்ன? பெண்களா..? இல்லவே இல்லை. நிச்சயம் ஆண்கள் தான். கலாச்சாரம் , கற்பு என்றெல்லாம் ஜல்லியடித்து பல ஆண்டுகாலமாக அவர்கள் மீது ஆண் சமூகம் செய்துவரும் வன்முறையை ஏன் நாம் நிறுத்தவில்லை ? ஒரு பெண்ணின் உடம்பை புனிதப்படுத்துதல் என்ற பெயரில் அவர்களை மேலும் மேலும் மன உளைச்சல்களுக்கு ஆளாக்குகிறோம் என்பது நமக்கு ஏன் உறைக்கவில்லை? ஒரு பெண் உடம்பை கணவனைத்தவிர வேறு யாராவது பார்த்துவிட்டால் , அவ்வளவு தான்.. அந்த குடும்பத்துக்கே பேரவமானம்...

அந்தப் பெண் அதன்பிறகு வாழத்தகுதியற்றவள்.. அவளின் புனிதம் கெட்டுப்போய்விட்டது.. இதுதானே இங்கு காலம் காலமாக நமக்கு போதிக்கப்பட்டு வருகிறது? சினிமாவில் கூட என்ன செய்கிறார்கள்? ஒரு பெண்ணை கற்பழிக்கக்கூட வேண்டாம், அவள் ஜாக்கெட்டை கிழித்துவிட்டு அறையிலிருந்து தலைமுடியை கலைத்துவிட்டு வந்தாலே போதும் அந்த பெண்ணை அவமானப்படுத்த. ஒரு ஆம்பளையை அவமானப்படுத்தவேண்டுமென்றால் கூட அவனை பொம்பளை என்று சொன்னால் போதும். ஆம்பள என்பது அவ்வளவு உசத்தி இங்கே..!

இந்த ஆம்பளத் திமிர் தானே, ஒரு பொண்ணு போட்டோவை நிர்வாணமாக்கி ரசிக்க வைக்கிறது? ஒரு பொண்ணு குளிப்பதை படம் எடுத்து அந்த பெண்ணை அதை வைத்தே மிரட்டி படுக்க கூப்பிடுகிறது? இந்த ஆம்பளத்திமிர் தானே கூட்டத்தில் ஒரு பொண்ணு சிக்கினால் அவள் மார்பகத்தை இடிக்க வைக்கிறது? என்ன காரணம்? ஒண்ணு ஆம்பளத்திமிர் இன்னொன்று பெண்களால் இது எதையும் வெளியில் சொல்ல முடியாது. சொன்னால் அது அவர்களுக்குத்தான் அவமானம். அவர்களோடு சேர்த்து அவர்கள் குடும்பமே அவமானப்படவேண்டும். அதுதானே..?

இந்த ஆம்பளத் திமிரை அடக்குவதற்கு எந்த முயற்சியும் எடுக்காத நாம, பெண்களை மட்டும் என்ன சொல்கிறோம்?
"நீ பேஸ்புக் ல போட்டோ போடாதே... வாட்ஸப் ல add பண்ணாத.. ஜீன்ஸ் போடாத..!" ஏனென்றால் அவர்களின் உடம்பு தான் நமக்கு புனிதம். அதைத் தொடர்ந்து புனிதப்படுத்தி வருவதும் அதை காப்பாற்றிவருவதும் மட்டுமே நாம் அவர்கள் மேல் காட்டுகிற அதிகபட்ச அக்கறை..!

- Sivasankaran Saravanan

Relaxplzz

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல...

Posted: 16 Oct 2014 07:00 AM PDT

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்... காவலரை கண்டு பயப்பட தேவையில்லை...

அவர்கள் உங்களை மிரட்டுவது 1000 ரூபாய் ஃபைன்...அவர்களுக்கு லஞ்சம் தரதேவையில்லை...

நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை...

15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் பொதுமானது...

இது சட்டத்தில் இருப்பதுதான்...நமக்குதான் தெரியவில்லை....

license இல்லையா vehicle papers இல்லையா...

பணத்த எடுனு போலிஸ் சொன்னா...

நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி
செல்லான்வாங்கிக்கோங்க..

உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது ஒரு share ஐ மட்டுமே...
தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம்.

Relaxplzz


வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...!!!" அதற்கு அவமானம் தெரியாது.....

Posted: 16 Oct 2014 06:50 AM PDT

வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...!!!"

அதற்கு அவமானம் தெரியாது...!!!"

விழுந்தவுடன் அழுது முடித்து,

திரும்பவும் எழுந்து நடக்கும்...!!!

Relaxplzz


அருமை

Posted: 16 Oct 2014 06:40 AM PDT

அருமை


:) Relaxplzz

Posted: 16 Oct 2014 06:30 AM PDT

ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கும் பொழுது கொள்ளைக்காரன் " யாரும் நகராதீர்கள், பணம் ந...

Posted: 16 Oct 2014 06:15 AM PDT

ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கும் பொழுது கொள்ளைக்காரன் " யாரும் நகராதீர்கள், பணம் நாட்டின் உடையது, உங்கள் உயிர் உங்களுடையது " என்றான்..

எனவே அனைவரும் அமைதியாக இருந்தனர், இது தான் "மனம் மாற்றும் கருத்து ".

ஒரு பெண் மேசையில் படுத்திருந்தாள், ஒரு கொள்ளைக்காரன் "நங்கள் கற்பழிக்க வரவில்லை கொள்ளையடிக்க வந்திருக்கிறோம், ஒழுங்காய் கீழே உக்காரு " என்றான்.

இது தான் "தொழில் முறை யுக்தி", கவனம் சிதறாமல் இருப்பதற்கு.

கொள்ளையடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒருத்தன் கேட்டான் "எவ்வளவு பணம் இருக்குது னு எண்ணுவோம்".

இன்னொருவன் " அட முட்டாளே, டிவி'ல நியூஸ் போடுவாங்க அதுல பாத்துக்கலாம்" என்றான்.

இது தான் "அனுபவம்" என்பது, திறமைகளை விட பெரியது.

அவர்கள் கொள்ளை அடித்து சென்ற பிறகு வங்கி மேலாளர், ஊழியரிடம் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள் என்றார், ஆனால் அவன் "நாம ஒரு 10 கோடி எடுத்துட்டு, மொத்தம் 50 கோடின்னு கணக்கு சொல்லிடலாம்" என்றான்.

இது தான் "அலைகளை நோக்கி நீந்து" என்பது.

அதை கேட்டு மேலாளர் சொன்னார், "மாதா மாதம் கொள்ளை நடந்தால் நல்லா இருக்கும்"

இது தான் "அலுப்பின் வெறுப்பு", வேலையை விட சொந்த சந்தோசம் தான் முக்கியம் இவர்களுக்கு.

மறுநாள் டிவி'யில் 100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது. அந்த கொள்ளைக்காரன் ஆக்ரோஷத்துடன் "நாங்கள் உயிரை பணயம் வைத்து 30 கோடி தான் கொள்ளை அடித்தோம், ஆனால் அவர்கள் 70 கோடி கொள்ளை அடித்துவிட்டனர், கொள்ளை அடித்தவனை விட படித்தவனே மிக கேவலமாக நடந்து கொள்கிறான்"

இதுவே "அறிவு தங்கத்துக்கு நிகரானது" என்று சொல்லப்படுகிறது.

அந்த வங்கி மேலாளர் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார், கொள்ளை சம்பவத்தால் தான் இழந்த பங்கு சந்தையை மீட்டார்.

இது தான் "வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது".

இப்பொழுது சொல்லுங்கள், இதில் யாரு உண்மையான கொள்ளைக்காரன் ??

#நம்மூரு_நிகழ்வு_இதுவே

Relaxplzz

சத்தான உணவை சாப்பிட்டு, கடும் உடற்பயிற்சிகள் செய்து, தசைகளை, உடலை வலுவேற்றி மிக...

Posted: 16 Oct 2014 06:00 AM PDT

சத்தான உணவை சாப்பிட்டு, கடும் உடற்பயிற்சிகள் செய்து, தசைகளை, உடலை வலுவேற்றி மிக ஆரோக்கியமா இருக்கிற ஆணுக்கு (கறுப்பா இருந்தாலும் பிரச்சனையில்லை) மிஸ்டர் மெட்ராஸ் பட்டம்.

உணவைக் குறைச்சு, நிர்ணயிக்கப்பட்ட உடல் வளைவுகளும், அளவுகளும் வரணும்னு அதுக்கேத்த உடற்பயிற்சி செஞ்சு, முடி முதல் கால்விரல் நகம் வரை பாலிஷ் போட்டு, ஜீரோ சைஸ்ல இருக்கிற நோஞ்சான் பொண்ணுக்குத்தான்(கட்டாயம் வெள்ளைத் தோலா இருக்கணும்) மிஸ் மெட்ராஸ் பட்டமாம்.

என்னங்க இது அநியாயம் ?

- Geeta Ilangovan.

Relaxplzz


நீயும் நானும் வாழ இல்லம் வேண்டாம், ஒரு குடையும் கொஞ்சம் மழையும் இருந்தால் போதும...

Posted: 16 Oct 2014 05:45 AM PDT

நீயும் நானும் வாழ இல்லம் வேண்டாம்,
ஒரு குடையும் கொஞ்சம் மழையும்
இருந்தால் போதும்.....

♥ ♥

- திவ்ய தர்ஷினி


:) Relaxplzz

Posted: 16 Oct 2014 05:30 AM PDT

திருமணம் செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்று யோசிக்கும் ஆணா நீங்கள்...??? உடனே செ...

Posted: 16 Oct 2014 05:15 AM PDT

திருமணம் செய்து கொள்ளலாமா, வேண்டாமா
என்று யோசிக்கும் ஆணா நீங்கள்...???

உடனே செய்து கொள்ளுங்க...
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
நல்ல மனைவி கிடைத்தால் நீங்க சந்தோஷமா இருப்பீங்க...!!!

இல்லை என்றால் ஞானியாகி விடுவீங்க...!!!
எப்படிப்பாத்தாலும் கடைசியில நாமதான் ஜெயிக்கரோமில்ல...!!!

:P :P

- Salem S N Arul

Relaxplzz

நெல்லை எக்ஸ்பிரஸில் சென்னையில் இருந்து நம்ம ஊருக்கு ஒரு பயணம். இரவு 8.10 சென்னை...

Posted: 16 Oct 2014 05:00 AM PDT

நெல்லை எக்ஸ்பிரஸில் சென்னையில் இருந்து நம்ம ஊருக்கு ஒரு பயணம்.

இரவு 8.10 சென்னையில ஏறியதும் உடனே திருநெல்வேலி வந்து விடாதா என்று ஓரு ஏக்கம்.

கொஞ்ச தூரம் வரை வேடிக்கை பார்ப்போம்.

திருச்சி வரை ஒரு தூக்கம்.

பிறகு ரயிலில் மதுரை வர மறுபடியும் குட்டி தூக்கம் அங்க முழிச்சுக்குவோம்.

எப்போ நம்ம ஊரு வரும்னு ஒரு ஏக்கம் மனதில் இருக்கும்.

காலையில் நம்ம அப்பா/அம்மா,தம்பி/தங்கச்சிய பார்க்க போறோம் என்கிற சந்தோஷத்தில் மறுபடியும் ஒரு குட்டி தூக்கம்.

கோவில்பட்டி வந்ததும் மனசுக்குள்ள ஒரு பூரிப்பு. நம்ம எல்லைக்குள்ள வந்துட்டா மாதிரி.

இன்னும் 1 மணி நேரத்துல ஊருக்கு போய்விடுவோம் என்ற அளவில்லாத சந்தோஷத்தில் இருப்போம்.

சங்கர்நகர் வந்ததும் மக்கா ஊருக்கு வந்துட்டேன் மக்கா திருநெல்வேலி ஸ்டேஷனுக்கு வந்துருடானு ஒரு ஃபோன போடுவோம் நம்ம உயிர் நண்பனுக்கு.

அதிகாலை வந்ததும் ஒரு மனம் கலந்த காற்று வீசும் பாருங்க அய்ய்ய்யோ அப்படி ஒரு மனம் நமது மாவட்ட காற்றுக்கும் ஏதோ உணர்வு இருப்பது போல்.

திருநெல்வேலி தோராயமா காலை 8.00மணிக்கு இறங்கி நம்ம மண்ணுல கால வைச்சதும் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு வரும்.

சொர்க்கமே என்றாலும் அது நம்ம நெல்லை மாவட்டம் போல வருமா..!

- Rajan Nellai. Relaxplzz


உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் கடவுள் கொடுத்த ஒரே செல்வம...

Posted: 16 Oct 2014 04:45 AM PDT

உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் கடவுள் கொடுத்த ஒரே செல்வம் "24 மனி நேரம்"...

அதை நல்வழியில் செலவு செய்தவன் வெற்றி பெறுகிறான்,தீய வழியில் செலவு செய்தவன் தோல்வி அடைகிறான்....

- திவ்ய தர்ஷினி


:) Relaxplzz

Posted: 16 Oct 2014 04:30 AM PDT

மாணவன் : டீச்சர்...நேத்து நீங்க சொன்னா மாதிரியே.. இன்னைக்கி நாங்க அஞ்சு பேரும் ச...

Posted: 16 Oct 2014 04:15 AM PDT

மாணவன் : டீச்சர்...நேத்து நீங்க
சொன்னா மாதிரியே..
இன்னைக்கி நாங்க
அஞ்சு பேரும்
சேர்ந்து ஒரு பாட்டியை,
ரோட்டுக்கு இந்த பக்கத்துல
இருந்து அந்தப்
பக்கமா கொண்டு வந்து விட்டோம்

டீச்சர்...! :)

டீச்சர் : வெரிகுட்...!! நல்ல
காரியம்! வயசானவுங்க
சாலையை கடக்க
இப்படித்தான்
உதவி செய்யணும்!!.................

அதுசரி.......
ஒரு பாட்டிக்கு எதுக்கு அஞ்சு பேர்....?!

மாணவன் : பின்ன என்ன டீச்சர்...!
அவங்க
வரவே மாட்டேன்னு அடம்
பிடிச்சாங்க...! நாங்க
அஞ்சு பேரும்தான்
சேர்ந்து இழுத்து பிடிச்சு கொண்டுவந்து விட்டோம்....!

:O :O :P

Relaxplzz

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்து...

Posted: 16 Oct 2014 03:59 AM PDT

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.

1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

Relaxplzz


இயற்கை வைத்தியம்

சில நேரங்களில் சிலர் சம்பளமின்றியே பாதுகாவலாகிறார்கள்... ;-) - முத்துப்பேட்டை ம...

Posted: 16 Oct 2014 03:50 AM PDT

சில நேரங்களில்
சிலர்
சம்பளமின்றியே
பாதுகாவலாகிறார்கள்... ;-)

- முத்துப்பேட்டை மாறன்


மாங்காய் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 16 Oct 2014 03:40 AM PDT

மாங்காய் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 16 Oct 2014 03:30 AM PDT