Friday, 3 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சிகரெட் பிடித்தால் உடல்நலத்துக்கு பாதிப்பில்லை,கேன்சர் வராது - பாஜக எம்பி சியாமா...

Posted: 03 Apr 2015 09:03 AM PDT

சிகரெட் பிடித்தால்
உடல்நலத்துக்கு
பாதிப்பில்லை,கேன்சர்
வராது - பாஜக எம்பி
சியாமா சரண் குப்தா.

இவர் 'ஷ்யாம் பீடி'
கம்பெனியின்
ஓனராம். வருடத்திற்கு
200 - 250 கோடிக்கு
யாவாரம்
பண்ணுகிறாராம். நல்லா
இருக்கு ராசா உன்
வியாபார தந்திரம்...

@இளையராஜா

கன்னட தேசிய இனத்தவர் எங்கு சென்று எத்தகைய சாதனை நிகழ்த்தினாலும் தங்கள் தேசியக் க...

Posted: 03 Apr 2015 08:35 AM PDT

கன்னட தேசிய இனத்தவர்
எங்கு சென்று எத்தகைய
சாதனை நிகழ்த்தினாலும்
தங்கள் தேசியக் கொடியை
தூக்கி நிறுத்துவதில்
முனைப்பு
காட்டுகிறார்கள்..

நம்ம தான் இன்றும்
நமக்குன்னு ஒரு
கொடியை
உருவாக்காமல் இந்திய
கொடியை
புடிச்சிக்கிட்டு
திரியுரோம்..


அப்பா! ஏம்பா அம்மாவ மிதிச்சிட்டு போற.. மகனே, இதுவா அம்மா. இது வெறும் பொம்மை தான...

Posted: 03 Apr 2015 08:32 AM PDT

அப்பா! ஏம்பா அம்மாவ
மிதிச்சிட்டு போற..

மகனே, இதுவா
அம்மா. இது வெறும்
பொம்மை தானேடா.

எங்க விளையாட்டுல்ல இந்த பொம்மை தான்
அம்மா.

ஆஹா! நான் அம்மாவை
மிதிச்சிட்டேன்னு உள்ள
இருக்கற உங்க
அம்மாகிட்ட
சொல்லிடாதடா..

சாக்லேட் வாங்கி
தருவியா, சொல்ல
மாட்டேன்...

சரிடா...
:)

@இளையராஜா

கன்னடன் கன்னடனாக இருக்கும் போது, தெலுங்கன் தெலுங்கனாக இருக்கும் போது, மலையாளி மல...

Posted: 03 Apr 2015 08:21 AM PDT

கன்னடன்
கன்னடனாக இருக்கும் போது, தெலுங்கன்
தெலுங்கனாக இருக்கும் போது, மலையாளி
மலையாளியாக இருக்கும் போது

தமிழன் மட்டும் ஏன்
திராவிடனாகத் திரிக்கப்பட வேண்டும் ?

முல்லைப் பெரியாறும்,
ஒகனேக்கல்லும்,
காவிரியும்,
பாலாறும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முடக்கப்படும்போது, தமிழ்நாட்டின் வளங்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டுமா?

இதுதான் இந்திய இறையாண்மையின் இலக்கணமா?

அல்லது இந்தியக் கட்டப் பஞ்சாயத்தில் கிடைக்கும் ஞாயமா?

கடந்த 1956 ல் மொழி வழி மாநிலமாக இந்தியா பிரிக்கப்படும்போது மொழி இன அடிப்படையிலான உரிமைகளுக்கு அது அங்கீகாரம் அளித்தது!

ஆனால், மராட்டிய இன உணர்வுகளும், சீக்கிய இன உணர்வுகளும், கன்னடத், தெலுங்கு, மலையாள மற்றும் பிற இன உணர்வுகளும் உரிமைகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் மதிக்கப்படும் போது தமிழர்களின் உரிமையும் தாகமும் மட்டும் நசுக்கப்படுவது ஏன்?

அந்தந்த மாநிலங்களை அவரவர் ஆளும்போது,

தமிழ்நாடு மட்டும் திறந்த வீடாகவும் வேலியில்லாக் காடாகவும் யார் வேண்டுமானாலும் ஆளலாம், ஆட்டம் போடலாம், ஏறி மேயலாம் என்ற
நிலை இருப்பது ஏன்?

வந்தேறிகள் ஆளவும் ஏய்க்கவும அரட்டவும் உருட்டவும் அவர்கள் வைத்திருக்கிற கைத்தடிதான் திராவிடம் என்கிற பொய்ப்பூச்சு!

அடுத்து, பெரியார் என்கிற ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிற பெயர்!

தமிழர்கள் ஏய்க்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் காலாகாலமாக நடந்து வருகின்ற ஒன்றுதான். தாக்கினால் திருப்பி அடிப்பார்கள் என்கிற நிலை இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவுகிறது. அல்லது ஏறி மேய்கிறார்கள்!

மலேசியாவிலோ, பர்மாவிலோ, ஈழத்திலோ, கர்நாடகத்திலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் தாய்த் தமிழகம் கொதித்து எழும் என்கிற நிலை இருந்தால் பத்தரைக் கோடித் தமிழனைத் தொட எந்தக் கொம்பனுக்கும் உலகில் துணிவிருந்திருக்காது.

மாறாக, பர்மாவின் சயாம் நகரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோதோ,

கர்நாடகத்தில் தமிழர்கள் வெட்டித் துண்டாடப்பட்டபோதோ,

மும்பையிலும் மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டபோதோ,
பர்மாவிலிருந்து தமிழர்
விரட்டப்பட்டபோதோ,

ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொடுமையாகக் கொன்றொழிக்கப்பட்டபோதோ

தாய்த் தமிழகத்தில் எதிர்ப்பில்லை, கொதிப்பில்லை, கொந்தளிப்பில்லை! காரணம் என்ன?

திராவிடம் என்ற நச்சு போதைபோல் ஏறி சித்தம் சிதைந்து கிடக்கிறான் தமிழன்!

ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது!

ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது!

இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது.
மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது!
பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது!

இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது!

உலகமே இப்படி இருக்கும்போது,
அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும்போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்?

மூத்தஇனம் இங்கே முடங்கிக் கிடப்பதே தன் அடையாளத்தை இழந்ததால்தான்! தமிழனைத் திராவிடனாக திரித்து சிதைத்துவிட்டார்கள்.

மீண்டும் இழந்த தமிழன் என்கிற அந்த அடையாளத்தை நாம் உணர்ந்து தக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க இயலும்.

இதில் சமரசம் செய்து கொண்டு அரசியல் களத்தில் ஆராவாரம் செய்து யார் களம் இறங்கினாலும் அவர் தமிழினத்தின் எதிரியாகத்தான் இருப்பார்..


கடந்த பத்து மாதங்களில் மோடியின் செல்வாக்கு சரிவு--இந்தியா டூடே இவங்க ஆட்சிக்கு...

Posted: 03 Apr 2015 07:39 AM PDT

கடந்த பத்து மாதங்களில்
மோடியின் செல்வாக்கு
சரிவு--இந்தியா டூடே

இவங்க ஆட்சிக்கு
வந்ததுலருந்து சுத்தி
சுத்தி "மாடு-சாணம்-
கோமியம்" ன்னு
அங்கயே தான்
இருக்கானுங்க...


இதுக்கு நடிகர்
ராமராஜனை
பிரதமராக்கிருக்கலாம்.

@துரை மோகன்

சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்...

Posted: 03 Apr 2015 02:32 AM PDT

சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்...


திராவிட மொன்னைகளுக்கு.... திருச்சியை சேர்ந்த ஒரு தமிழ்குடும்பம் 30 ஆண்டுகளாக கர...

Posted: 03 Apr 2015 01:59 AM PDT

திராவிட மொன்னைகளுக்கு....

திருச்சியை சேர்ந்த ஒரு தமிழ்குடும்பம் 30 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசிந்து வந்தது. அவர்களது மகள் புற்றுநோயால் இறந்து விட்டாள். அவரை அடக்கம் செய்ய சென்ற பொழுது இந்த மாயானத்தில் அனுமதிக்கமுடியாது. வேற பக்கம் போங்கன்னு சொல்லியிருக்கான்னு. அந்த குடும்பம் கடைசியாக கஷ்டப்பட்டு திருச்சிக்கு வந்து அடக்கம் பண்ணியிருக்காங்க.

கர்நாடகாகாரனும் திராவிடன் தானே? இந்த மனிதாபிமானம் இல்லாத செயலை செய்யும் அவனை திராவிடன் என்று கொஞ்ச வேண்டுமா?

தமிழன் எல்லா பக்கமும் அடி வாங்கிகிட்டு இருப்பான்.
திராவிடம் பேசி கல்லா கட்டும் உங்களுக்கு நாங்க பொத்திட்டு இருக்கனுமா?

@வால் பையன்

ஊழலில் திளைக்கும் அரசியல் வாதிகளே... லஞ்சத்தில் கொழிக்கும் அரசு ஊழியர்களே.. ஏழைய...

Posted: 02 Apr 2015 11:06 PM PDT

ஊழலில் திளைக்கும்
அரசியல் வாதிகளே...
லஞ்சத்தில் கொழிக்கும்
அரசு ஊழியர்களே..
ஏழையின் நேர்மையைப்
பாருங்கள்..

@கவிதா


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


நிலத்தில் விளைந்ததை விற்று காசாக்கியது அந்தக்காலம்... நிலத்தையே விற்று காசாக்கு...

Posted: 03 Apr 2015 09:33 AM PDT

நிலத்தில் விளைந்ததை விற்று காசாக்கியது அந்தக்காலம்...

நிலத்தையே விற்று காசாக்குவது இந்தக்காலம்...

இனிய இரவாகட்டும்...

@ Indupriya MP
...


உறவினர் சுதா அவர்களின் கட்டுரை. விகடனில் வெளியாகிய இக்கட்டுரையில் வெளிநாட்டு வாழ...

Posted: 03 Apr 2015 07:58 AM PDT

உறவினர் சுதா அவர்களின் கட்டுரை. விகடனில் வெளியாகிய இக்கட்டுரையில் வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய கருத்துக்களை அனுபவத்துடன் குறிப்பிட்டுள்ளார்... அவை உங்கள் பார்வைக்கு

ஆஹா....அமெரிக்க வாழ்க்கை!

'ஏய்... அவங்க பையன் அமெரிக்காவுல வேலை பார்க்குறானாம்..!', 'அவரோட பொண்ணை அமெரிக்கா மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கார்!' என்றெல்லாம் அமெரிக்கா பற்றிய ஆச்சர்யம் நம் மக்களுக்கு அதிகம்! அந்த அமெரிக்க வாழ்க்கையின் சாரத்தை இங்கு சொல்கிறார், சுதா பாபுலால் பிரசாத்.

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த இவர், திருமணத்துக்குப் பின் கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவின், செயின்ட் லூயிஸ் நகரில் வசித்து வருகிறார்.

''முதல்ல, பிரசவத்துல இருந்து ஆரம்பிக்கலாம். நம்ம ஊர்ல பேறுகாலம்னா அம்மா, பாட்டி, அத்தை, பெரியம்மா, சித்தினு ஒரு பட்டாளமே ஆஸ்பிட்டலுக்கு படை எடுத்து வந்துடுவாங்க. இங்க கணவர்தான் மனைவியையும் குழந்தையும் கவனிச்சாகணும். பிரசவப் பொழுதில் கணவர் அருகில் இருக்கலாம். அப்போ மயக்கம் போட்டு விழுற அப்பாக்கள் நிறைய பேர் (அவங்களுக்கும் ஒரு பெட் ரெடி பண்ணிடுவாங்க தானே!). பிரசவத்தப்போ மனைவி அருகில் கணவன் இருக்கிற வழக்கம் இங்க உண்டு. இதுல நல்லது, கெட்டது ரெண்டுமே இருக்கு. சிலருக்கு, தன் மனைவி மீதான பாசம் அதிகமாகும். சிலர், ரெண்டாவது குழந்தை வேண்டவே வேண்டாம்னு முடிவுக்கு வந்துடுவாங்க.

குழந்தைகளை வளர்க்க செல்லப் பிராணிகள்

அமெரிக்காவுல குழந்தை வளர்ப்பு என்பது, சுலபம்னுதான் சொல்லணும். நம்மூர்ல ரெண்டு குழந்தைகளை வளர்க்குறதுக்குள்ள நாக்குத் தள்ளிவிடும். இங்க ஐந்து குழந்தைகளைக் கூட சிரமமில்லாம வளர்த்துடலாம். அந்த ஐந்து குழந்தைகளுக்கும் துணைக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு செல்லப் பிராணி வாங்கிக் கொடுத்துடறாங்க (நமக்கு அதுக்கெல்லாம் கட்டுப்படி ஆகாது சாமி!). பிறந்த குழந்தையைக் கூட 'பேபி மானிட்டர்' பொருத்தின தனி ரூம்ல தூங்க வெச்சுடுவாங்க. அந்த ரூம் முழுக்க பொம்மைகள், கார்ட்டூன், சுவரொட்டினு அழகா இருக்கும். மானிட்டர்ல 'குவா குவா'னு சத்தம் கேட்கும்போது மட்டும் குழந்தையை கவனிக்குறாங்க. நம்ம ஊர்க் குழந்தைங்க எவ்வளவு கொடுத்து வெச்சவங்கனு தோணும்.

குழந்தைகள் வளரும்போதே 'ப்ளீஸ்', 'தாங்க் யூ', 'ஸாரி' போன்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொடுக்குறது, குப்பையை குப்பைத்தொட்டியில மட்டும்தான் போடணும்னு நல்ல பழக்கங்கள் சொல்லிக் கொடுக்குறாங்க. குழந்தைங்க கீழ விழுந்தாக்கூட, தானா எழட்டும்...அப்போதான் சுயமா செயல்படுவாங்கங்கிறது இவங்களோட எண்ணம்.

இந்த நாட்டைப் பொருத்தவரைக்கும் குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குற்றம். அதனால குட்டீஸ் ஏதாச்சும் தப்புப் பண்ணினா, டிவி நேரம், இன்டர்நெட், பாக்கெட் மணினு அவங்களோட சலுகைகளை திருப்பி எடுத்துக்குறதுதான் தண்டனை. பதினாறு, பதினேழு வயது ஆன பிறகு, பிள்ளைங்க வீட்டைவிட்டு வெளியேறிடுவாங்க. பார்ட் டைம் ஜாப் பார்த்து, கல்லூரிக்கு ஃபீஸும் கட்டிக்கிறாங்க. கிறிஸ்துமஸ், தேங்கஸ் கிவ்விங் போன்ற பண்டிகைகளுக்கு மட்டும் வீட்டுக்கு 'டின்னர்'க்கு வர்றாங்க.

எளிய, இனிய திருமணம்

கல்யாணம்னா, விரும்பியவங்களோடு நிச்சயம் ஆன பின்தான் அம்மா, அப்பாகிட்டயே சொல்லுவாங்க. நம்ம ஊரு கல்யாணத்துல சும்மா திருவிழா மாதிரி ஸ்பீக்கர் செட்டு, சீரியல் லைட்டுனு களைகட்டும். ஆனா, அமெரிக்கத் திருமணங்களில் மணமக்கள் இரண்டு பேர், அவங்களோட நண்பர்கள் ஆறு பேர், பெற்றோர் மற்றும் உறவினர்கள் பத்து பேர், ஃபோட்டோகிராஃபர்கள் இரண்டு பேர்... ஆக மொத்தம் 20 பேர்னு திருமணம் நடக்கும். (அட, நம்ம ஊரு ரெஜிஸ்டர் ஆஃபீஸ் கல்யாணம்கூட இதைவிட கலகலப்பா இருக்கும்ங்க!)

உணவும் மருத்துவமனையும்

செட்டிநாட்டு சமையல், நாஞ்சில்நாட்டு சமையல், கொங்குநாட்டு சமையல்னு மாவட்டத்துக்கு மாவட்டம் அடுப்படி விதவிதமா மணக்குறது நம்ம ஊர்ல மட்டும்தான். அமெரிக்கா முழுக்க உணவுனா பர்கர், ஃப்ரைடு சிக்கன் மற்றும் ஃபெரன்ச் ஃப்ரைஸ் மட்டுமே. மத்தபடி நூடுல்ஸ், பாஸ்தா, பீட்சானு மற்ற நாடுகளிலிருந்து கடன் வாங்கிய உணவுகள் கொஞ்சம். இங்க ஃப்ரைடு ஃபுட் மற்றும் கூல் டிரிங்ஸ் சாப்பிட்டு கிட்டத்தட்ட 34% மக்கள் அதிக எடையோட இருக்காங்க. அதுக்கு டெக்னாலஜியும் ஒரு காரணம்னு சொல்லலாம். சுவிட்ச் போட்டா துணி துவைச்சிடலாம், பாத்திரம் கழுவிடலாம், உட்காந்துட்டே ரிமோட் வச்சு வேக்யூம் கிளீனரால வீட்டை சுத்தம் செய்யலாம்.

அப்புறம், இங்க விலைவாசியும் அதிகம்தாங்க. குறிப்பா இந்த ஊர்ல நான் போகப் பயப்படுற இடம், மருத்துவமனை. சிகிச்சை எல்லாம் நல்லா இருக்கும், ஆனா ஃபீஸ்னு சொல்லி நம்ம சொத்தை எழுதிக் கேட்பாங்க. இங்க ஒரு சொத்தைப் பல்லை பிடுங்குற காசுல, நம்ம ஊர்ல ஒரு கல்யாணத்தையே நடத்திடலாம். அதனால இங்க ஹெல்த் இன்சூரன்ஸ் ரொம்ப ரொம்ப அவசியம்.

உல்டா பழக்க வழக்கங்கள்

அமெரிக்கர்கள் நிறைய விஷயங்கள்ல நம்ம பழக்க வழக்கத்தில் இருந்து உல்டாவா இருப்பாங்க. சாலையில் வலது பக்கமாதான் போகணும். நம்ம ஊர்ல எலக்ட்ரிக் பிளக் பாயின்ட், சுவத்தோட பாதி உயரத்துல இருக்கும். இங்க, தரையிலிருந்து ஓரடி உயரத்தில் இருக்கும். கதவில் சாவி போடுறதுகூட தலைகீழாகத்தான் போடுவங்க (நல்லவேளை, இந்த ஊர்ல, மத்தவங்கள மாதிரி நடக்கக்கூடதுனு, தலைகீழா நடக்கலப்பா சாமி)!

வருங்காலத்துக்கு மட்டுமே சேர்த்து வைக்காம, வாழ்க்கையை அனுபவிக்கணும்னு நினைப்பாங்க. வார விடுமுறைனா, சோத்து மூட்டையக் கட்டிகிட்டு பீச்சு, பார்க்குனு குடும்பத்தோட எங்கயாச்சும் கிளம்பிடுவாங்க. கூட ரெண்டு, மூணு நாள் விடுமுறைனா, வண்டி கட்டிகிட்டு வெளியூர்களுக்கு சுற்றுப் பயணம் போயிடுவாங்க. நாம ஒரு பஸ்ல இடம் போடுறத்துக்கு, ஜன்னல் வழியா கர்ச்சீஃப் போடுறது, செருப்பு, அட சிலர் குழந்தையக் கூட போடுவாங்க தானே? ஆனா, இந்த ஊர்ல வரிசையில நின்னுதான் பஸ்ல ஏறணும். குழந்தைகள் முன்னாடி ஓடினாகூட அவங்களை கண்டிச்சு வரிசையில நிக்கவைப்பாங்க.

சாலை விதிமுறைகள்

ஆம்புலன்ஸ் , தீயணைப்பு வண்டி வந்தா, சாலையில் செல்லும் வாகனங்கள் வழிவிட்டு சாலையோரமா நின்னுடுவாங்க. அவை கடந்தபிறகுதான் மத்தவங்க கிளம்புவாங்க. இங்க எனக்கு பிடிச்ச இன்னொரு முக்கியமான அம்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு எங்க போனாலும் முன்னுரிமை இருக்கும். அதேபோல் அவங்க மத்தவங்கள எதிர்பார்க்காம எல்லா இடங்களுக்கும் போறதுக்கு ஏற்ற சௌகரியங்களும் இருக்கும்.
இந்தியாவைப் பற்றி அமெரிக்கர்களின் எண்ணம்

இந்தியா என்றாலே, காரமான சாப்பாடு, வெப்பமான ஊர், நல்ல மக்கள் மற்றும் பிரம்மாண்டமான திருமணங்கள்... இந்த நாலும்தான் பிரதானமா அவங்க நினைவில் வரும் விஷயங்கள். அதேபோல, இந்தியர்கள் என்றாலே சாஃப்டுவேர் மேதைகள் என்ற எண்ணமும் அவங்களுக்கு இருக்கு. இந்தியர்களின் கல்யாணங்களிலும், உடை, அணிகலன்களிலும் அமெரிக்கர்களுக்கு அதிக ஆர்வம் உண்டு.

நான் பியூட்டி பார்லரோ... ஹாஸ்பிட்டலோ போகும்போது, என்கிட்ட அவங்க அதிகமா விசாரிப்பது இந்தியத் திருமணங்களைப் பற்றிதான். என் அம்மா இங்க வந்து சில மாதங்கள் எங்களுடன் தங்கியிருந்தாங்க. அவங்க வெளியே சொல்லும்போதெல்லாம் அம்மாவோட புடவையைப் பார்த்து, ஆர்வமா விசாரிப்பாங்க. அதேபோல, என் மகள் அணிந்திருக்கும் வெள்ளிக் கொலுசுகளைப் பற்றியும் விசாரிப்பாங்க.

அமெரிக்காவின் வரலாறு சில நூற்றாண்டுகள்தான். ஆனா, தமிழ்நாட்டின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள். கரிகால சோழன் திருச்சி கல்லணையை கட்டி கிட்டத்தட்ட 13 நூற்றாண்டுக்கு அப்புறம்தான் கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டுபிடிச்சாரு. ஆனாலும், அமெரிக்கர்கள் தங்களின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை பொக்கிஷம்போல பாதுகாக்குறது, பாராட்டத்தக்க விஷயம்!''

அமெரிக்க வாழ்வைப் பற்றிய பிம்பம் கிடைத்தது, சுதாவின் வார்த்தைகளில்.

நன்றி : சுதா பாபுலால் பிரசாத்

பா விவேக்


உண்மையாகவே இருந்தாலும் அதை நம் நாட்டவர் கூறினால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.......

Posted: 02 Apr 2015 07:44 PM PDT

உண்மையாகவே இருந்தாலும் அதை நம் நாட்டவர் கூறினால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை....

அதற்காகத்தான் வெளிநாட்டவர்கள் கூறும் பெருமைகளைக் கூறுகிறோம்... இனியாவது நம் மொழி வளர்ச்சியில் சற்று ஆர்வம் காட்டுவோம்

நன்றி : சத்தியம் தொலைக்காட்சி மற்றும் ரமேஷ்

பா விவேக்



Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


சச்சின் தேர்ந்தெடுத்த கிராமம் குட்டி சிங்கப்பூராக மாறியது! கிரிக்கெட் ஜாம்பவான்...

Posted: 03 Apr 2015 09:00 AM PDT

சச்சின் தேர்ந்தெடுத்த கிராமம் குட்டி சிங்கப்பூராக மாறியது!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தத்து எடுத்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிராமம் புட்டம்ராஜு கண்டிகா, சிங்கப்பூர் போல காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசின் ஒவ்வொரு எம்.பிக்களும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதனை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டப்படி எம்.பியான சச்சின் டெண்டுல்கரும் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த புட்டம்ராஜு கண்டிகா கிராமத்தை தத்தெடுத்தார். சாலை வசதி, மருத்துவ வசதி, மின்சார வசதி என்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு நோயாளி கிராமம் போல காட்சியளித்த புட்டம்ராஜு கண்டிகாவை அழகிய முன்மாதிரி கிராமமாக மாற்ற சச்சின் கனவு கண்டார்.

அதன்படி, இந்த கிராமத்தில் கான்கிரீட் சாலைகள், சுற்றிலும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. பாதாள சாக்கடைத் திட்டம், 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு கிராமத்தினர் உடல் நலனை கருத்தில் கொண்டு கிராமத்தில் குட்டி மருத்துவமனை, குழந்தைகள் கல்வி கற்க பள்ளிகூடம், விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபம் உள்ளிட்டவை சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர கிராமம் முழுவதும் பசுமையாக்க மரக்கன்றுகள் நடப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கிராமத்தை மேம்படுத்தும் பணிக்காக சச்சின் தனது எம்.பி.நிதியில் இருந்து ரூ.2.75 கோடியும் மத்திய அரசு ரூ.3 கோடியும் வழங்கியது. அதேபோல் அடிக்கடி பணிகளை பார்வையிட்டு தேவைப்பட்ட மாற்றங்களையும் சச்சின் செய்து வந்தார். அழுக்கடைந்த கிராமத்தை குட்டி சிங்கப்பூர் போல மாற்றிய சச்சின் இது குறித்து கூறுகையில், பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு பாருங்கள், நான் திட்டமிட்டதை விட அற்புதமான கிராமமாக மாறியிருக்கும் என்று தெரிவித்தார்.

Thanks Dinakaran


:D Relaxplzz

Posted: 03 Apr 2015 08:10 AM PDT

ஏப்ரல் 3: புகழ்பெற்ற ராணுவ அதிகாரி 'பீல்டு மார்ஷல்' சாம் மானெக்‌ஷா பிறந்த தினம்...

Posted: 03 Apr 2015 08:05 AM PDT

ஏப்ரல் 3: புகழ்பெற்ற ராணுவ அதிகாரி 'பீல்டு மார்ஷல்' சாம் மானெக்‌ஷா பிறந்த தினம் இன்று

1971 இந்தியா - பாகிஸ்தான் போரின் போது 14 நாட்களில் பாகிஸ்தானை சரணடையச் செய்தவர். 1962 சீனப் போரில் இந்தியா பின்வாங்கிய போது படைப்பிரிவுக்கு இவரை தலைமை ஏற்கச் சொன்னார் நேரு. சீனப் படை மேலும் முன்னேறுவதை இவர் வெற்றிகரமாகத் தடுத்தார். 1969 இந்தியாவின் ராணுவத் தலைமைத் தளபதியானார்.


பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த ரவுடிங்க, கள்ளச்சாராயம் காய்ச்சினவங்க, கஞ்சா...

Posted: 03 Apr 2015 07:50 AM PDT

பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த ரவுடிங்க, கள்ளச்சாராயம் காய்ச்சினவங்க, கஞ்சா வித்தவங்க எல்லாம், இப்ப ரியல் எஸ்டேட் அதிபராகவும், கல்வி நிறுவனத் தலைவர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் மாறி விட்டனர்.

பாவம், இந்த விவசாய மக்கள்தான் இன்னமும் பிழைக்கத் தெரியாம இருக்காங்க..


இளையராஜா. ஏ.ஆர் ரஹ்மான்.தேவா இவர்களின் இசைக்கு உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா??...

Posted: 03 Apr 2015 07:45 AM PDT

இளையராஜா. ஏ.ஆர் ரஹ்மான்.தேவா
இவர்களின் இசைக்கு உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா???
.
.
.
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அம்மா அம்மான்னு பாடினா அது இளையராஜா
ஹம்மா ஹம்மான்னு பாடினா அது
ரஹ்மான்
யம்மா யம்மான்னு பாடினா அது
தேவா
அம்புட்டுதேன்

:P :P

Relaxplzz

(y) Relaxplzz

Posted: 03 Apr 2015 07:30 AM PDT

தர்பூசணி, இளநீர், மோர் என்று பல கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தந்தாலும்...

Posted: 03 Apr 2015 06:45 AM PDT

தர்பூசணி, இளநீர், மோர் என்று பல கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தந்தாலும் நுங்குக்கு என்று தனிச் சிறப்புகள் பல உள்ளன.

* முகப்பரு வறண்ட சருமம் உள்ளவர்கள் நுங்கின் நீரை தடவினாலே போதும் விரைவில் பொலிவான சருமத்தை பெறலாம்.

* நுங்கில் 10-11 சதவீதம் சர்க்கரை சத்தும், இரண்டு சதவீதம் புரதச் சத்தும் உள்ளன.

* கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டீ காம்ப்ளக்ஸில் உள்ள தையாமின், ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. (இதுக்கெல்லாம் மாத்திரை வாங்கி திங்காம நுங்கை தின்னுங்க)

* அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.

* கோடையில் ஏற்படும் வேர்க்குரு நீங்க நுங்கை தொடர்ந்து சாப்பிடலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து வேர்க்குரு பட்டுப் போகும்.

* நுங்கை பால் மற்றும் தேனுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நுங்கை சர்பத்தில் இட்டு சிலர் சாப்பிடுவர். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு சுவையான பானமாகவும் கருதப்படுகிறது.

* தாய்லாந்தில் பனை மரங்கள் அதிகம். அங்குள்ளவர்கள் நுங்கை எடுத்து பாட்டில்களில் பதப்படுத்தி உலகம் எங்கும் ஏற்றுமதி செய்கின்றனர். ஆனா நம்ம ஊர்ல தாய்லாந்த விட பனைமரங்கள் அதிகம் சும்மா அங்கயும் இங்கயும் மிக மலிவா கிடைக்குற நுங்கை இன்னும் நாம் ஏளனமாக தான் பார்க்கிறோம்.

* இந்த கோடைக்கு ஒரு முறையேனும் நுங்கை ருசித்து பாருங்க.

Relaxplzz


பரிட்சையின் கடைசி நிமிடங்களில் இப்படி எழுதிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க......

Posted: 03 Apr 2015 06:40 AM PDT

பரிட்சையின் கடைசி நிமிடங்களில் இப்படி எழுதிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 03 Apr 2015 06:27 AM PDT

அரிதான புகைப்படம்...

Posted: 03 Apr 2015 06:03 AM PDT

அரிதான புகைப்படம்...


"அரிய புகைப்படங்கள்"

:) Relaxplzz

Posted: 03 Apr 2015 05:21 AM PDT

பூனை வளர்த்தது போதும் யானை வளர்த்தால் என்ன ? யோசனை வந்தது. மகளிடம் சொன்னேன்....

Posted: 03 Apr 2015 04:57 AM PDT

பூனை வளர்த்தது போதும்
யானை வளர்த்தால் என்ன ?
யோசனை வந்தது.

மகளிடம் சொன்னேன்.
முதலில் மருண்டாள்.

ஐயோ அப்பா...
யானையை யார் தருவார் ?

கேரளம் சென்றால்
வாங்கி வரலாம்.

பூனை என்றால் கட்டிலடி போதும்
யானை எங்கே உறங்கும் ?

வெளியிடத்தில்
கொட்டடி அமைக்கலாம்.

பூனைக்குக் கொஞ்சம்
பால்போதும்
யானைக்கு உண்ண
என்ன தருவது ?

கரும்புக் கட்டுகள்
வாங்கிப் போடுவோம்.

பூனையை நானே
குளிப்பாட்டுவேன்...
யானையை எப்படிக் குளிப்பாட்டுவேன் ?

தண்ணீர் காட்டு
தானே குளிக்கும்.

பூனை குழிதோண்டிக் கழிக்கும்
யானைச் சாணத்தை என் செய்வது ?

யானைச் சாணத்தைத்
திங்குதிங்கென்று மிதிப்போம்
கால்நோவு தீரும்.

பூனையை நான் தூக்குவேன்
யானையை என்னால்
தூக்க முடியாதே...

யானை
உன்னைத் தூக்கி
தன் கழுத்தில் அமரவைக்கும்

ஐ... யானை... யானை...

பாப்பாவின் கனவில்
வீட்டு முற்றத்தில் யானை நிற்கிறது.

யானையின் முன்காலைக்
கட்டிக்கொள்கிகிறாள்.

யானை
தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறுகிறது !

- கவிஞர் மகுடேசுவரன்

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

என் ப்ரெண்ட் ஜெகன் வீட்டுக்கு போயிருந்தேன்.. புதுசா ஜெர்மன் ஷேப்பர்டு நாய் ஒண...

Posted: 03 Apr 2015 04:45 AM PDT

என் ப்ரெண்ட் ஜெகன் வீட்டுக்கு
போயிருந்தேன்..

புதுசா ஜெர்மன் ஷேப்பர்டு நாய்
ஒண்ணு வாங்கியிருக்காங்க...

" என்னடா பேரு..? "

" பைரவ். "

" பைரவ்னா..?!! "

" பைரவ்னா.. நாய்னு அர்த்தம்.."

" அட ... அதுக்கு நீ அதை நாய்னே
கூப்பிடலாமே..!!!? "

" கிர்ர்ர்ர்ர்...!!! "

:O :O

- Venkat Gokulathil

:) Relaxplzz

Posted: 03 Apr 2015 04:42 AM PDT

:) Relaxplzz

Posted: 03 Apr 2015 04:29 AM PDT

#இந்தியர்கள் 1. அமெரிக்காவில் மருத்துவமணையில் 38% மருத்துவர்கள் இந்தியர்கள். 2...

Posted: 03 Apr 2015 04:18 AM PDT

#இந்தியர்கள்

1. அமெரிக்காவில் மருத்துவமணையில் 38% மருத்துவர்கள் இந்தியர்கள்.

2. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவணமான நாசாவில் 36% சதவித வேலை செய்யும் பணியாளர்கள் இந்தியர்கள்.

3. அமெரிக்காவில் வசிக்கும் 12%அராய்ச்சியாளர்கள் இந்தியர்கள்.

4. உலக அளவில் பல கிளைகள் கொண்ட IBM நிறுவணத்தில் பணியாற்றும் 28% பேர் இந்தியர்கள்.

5. INTEL நிறுவணத்தில் வேலை செய்யும்17% பேர் இந்தியர்கள்.

6. உலகில் தலை சிறந்த நிறுவணமான மைக்ரோசாப்ட microsoft நிறுவணத்தில் 34% அதிகமாக வேலை செய்பவர்கள் இந்தியர்கள்.

7. உலக பணக்காரரும், இங்கிலேந்தில் நம்பர் ஒன் செல்வந்தரும், இரும்புகளின் ராஜா என் அழைக்கப்படும் லச்சுமி மிட்டல். ஒரு இந்தியர்.

8. ஆராய்ச்சி படிப்பு முடிப்போரின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 898. தற்போது இது, 18 ஆயிரத்து 730 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு காரணம் இந்தியாவின் உயர்கல்வி முறை சிறப்பாக இருப்பது தான் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 3

வீட்ல சாப்பிட்டுட்டு இருக்கும் போது யாராவது சொந்தக்காரங்க வந்துட்டா.. " வாங்க...

Posted: 03 Apr 2015 03:45 AM PDT

வீட்ல சாப்பிட்டுட்டு இருக்கும் போது
யாராவது சொந்தக்காரங்க வந்துட்டா..

" வாங்க கொஞ்சம் சாப்பிட்டுட்டு
போகலாம்"னு சொல்லலாம்...

அதுவே துணி துவைச்சிட்டு இருக்கும் போது
வந்துட்டா..

" வாங்க.. வந்து ரெண்டு துணி துவைச்சி
குடுத்துட்டு போங்கன்னா " சொல்ல முடியும்..?!!

:O :O

- Venkat Gokulathil

#அப்பா என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் என் தந்தை...

Posted: 03 Apr 2015 03:29 AM PDT

#அப்பா

என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் என் தந்தையின் ஓயாத உழைப்பை

நான் பொய் சொல்லி பணம் கேட்கும்போது உருத்தவில்லை, ஆனால் நான் கேட்டதற்கு அதிகமாக நீ கொடுத்தபோது வலித்து

உன் தோள்களில் என்னோடு சேர்த்து எவ்வளவு பாறம் இருந்தாலும் நீ சோர்வுற்றதில்லை

நீ என்னை பற்றி அதிகமாகவே மற்றவர்களிடம் புகழும்போதுதான் தெரிந்தது என் மீது நீ கொண்ட நம்பிக்கை

மோசமாக சண்டையிட்டு கோபித்து பேசாமல் இருந்தாலும், நான் சாப்பிடேனா என்று வாய் தவறி கேட்டுவிடும் குழந்தைதான் என் அப்பா!

பலர் நாத்திகன் ஆனதற்கு இரண்டு காரணங்கள்!
ஒன்று கடவுள் இல்லையென்பது
இரண்டு தன் தந்தை இருக்கிறார் என்று...

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 2

:) Relaxplzz

Posted: 03 Apr 2015 03:21 AM PDT

அன்பே நீ தோசை, எனக்கு உன் மேல ஆசை, அன்பே நீ இட்லி, உன் அண்ணன் தான் ஜெட்லி, அன்...

Posted: 03 Apr 2015 03:10 AM PDT

அன்பே நீ தோசை,
எனக்கு உன் மேல ஆசை,

அன்பே நீ இட்லி,
உன் அண்ணன் தான் ஜெட்லி,

அன்பே நீ கெட்டி சட்னி
என்னை போடாதே பட்னி

அழகே நீ ஒரு ஊத்தப்பம்
உன்னை பார்த்தால் வருது ஏப்பம்

கண்ணே நீ ஒரு பச்சடி
எனக்கு ஒரு இச்சடி

அன்பே நீ புரோட்டா,
பொண்ணு கேட்டு வரட்டா?

அன்பே நீ அப்பம்,
ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,

அன்பே நீ பூரி,
இத படிச்சுட்டு துப்பாத காரி.

அன்பே நீ கையேந்தி பவன்,
உனக்காக கையேந்துறான்

இவன்.
-Jos

:P :P

Relaxplzz

:D Relaxplzz

Posted: 03 Apr 2015 03:04 AM PDT

குளிர்ந்த தண்ணீர் என் செல்லத்திற்கு சேராது....... எண்ணெய் பலகாரம் என் மகனுக்கு ச...

Posted: 03 Apr 2015 02:50 AM PDT

குளிர்ந்த தண்ணீர் என் செல்லத்திற்கு சேராது....... எண்ணெய் பலகாரம் என் மகனுக்கு சேராது.... கசப்பான வைத்தியம் நான் சாப்டுகிறேன் ...என் தங்கத்திற்கு நல்லது..... என் பவுனு இன்னும் தூங்கல .... எனக்கும் தூக்கம் வேண்டாம்.... இன்னும் என்னெல்லாம் சொல்ல உன் தியாகத்தை.....

By நெஞ்சோடு உன் நினைவு.


"தாய்மைக் கவிதைகள்"

எங்க வீதில ஒரு பொண்ணு "மம்மீ IRON MAN வந்துட்டாரு"ன்னு கத்திட்டு ஓடுச்சு. என்னட...

Posted: 03 Apr 2015 02:45 AM PDT

எங்க வீதில ஒரு பொண்ணு "மம்மீ IRON MAN வந்துட்டாரு"ன்னு கத்திட்டு ஓடுச்சு.

என்னடா ஹாலிவுட் சூப்பர் ஹீரோ நம்ம ஊருக்கு வராரான்னு ஆர்வமா பார்த்தா இஸ்திரி தள்ளுவண்டிக்காரர் வாராரு.

போமா உன் இங்கிலீஷ்ல தீய வைக்க.. :(

- Boopathy Murugesh

வேப்பம்பழம் சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 03 Apr 2015 02:42 AM PDT

வேப்பம்பழம் சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஞாபகம், அனுபவம் இருக்கா..?

:) Relaxplzz

Posted: 03 Apr 2015 02:31 AM PDT

:D Relaxplzz

Posted: 03 Apr 2015 02:22 AM PDT

:P Relaxplzz

Posted: 03 Apr 2015 02:15 AM PDT

:) Relaxplzz

Posted: 03 Apr 2015 02:09 AM PDT

ஜப்பானிய கோட்பாடு : ஒருவர் ஒரு வேலையை செய்ய முடியும் என்றால் நீயும் கூட அதைச் ச...

Posted: 03 Apr 2015 02:00 AM PDT

ஜப்பானிய கோட்பாடு :

ஒருவர் ஒரு வேலையை செய்ய முடியும் என்றால்
நீயும் கூட அதைச் செய்யலாம்.!!

யாருமே செய்ய முடியவில்லை என்றால்
நீ கண்டிப்பாக செய்ய வேண்டும்.!!

இந்தியக் கோட்பாடு:

ஒருவர் ஒரு வேலையை செய்ய முடியும் என்றால்
அவரே அந்த வேலையைச் செய்யட்டும்.!

யாராலும் செய்ய முடியவில்லை என்றால்
நான் மட்டும் எப்படி செய்ய முடியும் ?

# இதனால்தான் ஜப்பான் ஒரு வளர்ந்த நாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.!

- Ganapathy Subramanian

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4