Wednesday, 4 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 04 Mar 2015 05:30 PM PST


வேத காலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் முக்கிய விருந்தே மாட்டு கறி தான் அதுவும் கன்...

Posted: 04 Mar 2015 10:40 AM PST

வேத காலத்தில் திருமண
நிகழ்ச்சிகளில் முக்கிய
விருந்தே மாட்டு கறி தான்
அதுவும் கன்று குட்டிகள்
தான்

எந்த வேதத்தில்
பசு புனிதம்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது?

எந்த வேதத்தில்
அல்லது உங்க புனித
நூலில் பசுவை கொல்ல
கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது?

இன்றும் வைதீக
முறைப்படி நடக்கும்
திருமண நிகழ்ச்சிகளில்
தேங்காயை உருட்டி விளையாடி கொண்டிருக்கும்
பொழுது புரோகிதர்
கௌஹூ கௌஹூ....
என்ற
மந்திரத்தை ஒதுகிறாரே அது என்ன
மந்திரம்?

மாட்டுகறி சாப்பிடுவதற்கான மந்திரம் தானே....

நிலைமை இப்படி இருக்க
பசு எப்போது புனிதமானது??

துரோகிகளிடம் "கோபம்" இருக்காது. கோபப்படுகிறவர்களிடம் "துரோகம்" நிச்சயமாக இருக்க...

Posted: 04 Mar 2015 09:45 AM PST

துரோகிகளிடம்
"கோபம்" இருக்காது.

கோபப்படுகிறவர்களிடம்
"துரோகம்" நிச்சயமாக
இருக்காது.

@D Latha

முகநூலில் பள்ளி பெண்கள் பாட்டிலோடு குடிக்கும் போட்டோ என்று உலாவுகிறது. அதன் உண்ம...

Posted: 04 Mar 2015 06:57 AM PST

முகநூலில் பள்ளி பெண்கள் பாட்டிலோடு குடிக்கும் போட்டோ என்று உலாவுகிறது. அதன் உண்மைத் தன்மை பற்றி தெரியவில்லை. ஆனால் பல பிரபலங்கள் பகிர்ந்து ஸ்டேட்டஸ் போட்டு கலாச்சார காவலர்களாக மாறியிருக்கின்றனர்.

குறைந்தபட்சம் மனிதத்தன்மை இருக்க வேண்டும். நடுப்பக்கத்தில் வார இதழ்கள் போடும் கவர்ச்சி படம் போன்ற செயல் இது. அவர்கள் பணவியாபாரத்திற்காக செய்கிறார்கள். இவர்கள் லைக் வியாபாரத்திற்காக செய்கிறார்கள். இந்த கலாச்சார காவலர்கள் குறைந்த பட்சம் தாங்கள் வாழ்நாளில் ஒரு நாள்கூட குடிக்காதவர்களாக இருந்திருந்தால் மட்டுமே பேச தகுதியுடையவர்கள். எல்லாவற்றையும் செய்தியாக்கும் வேலையை செய்யாதீர்கள். மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்த வேண்டாம். லைக்கிற்காக மெண்டல் ஆக வேண்டாம்.

@சின்சுலா ரிஷ்நியாட்டி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (இது சாதிகட்சியில்லைன்னா வேறு எதுய்யா சாதி கட்சி)...

Posted: 04 Mar 2015 06:53 AM PST

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (இது சாதிகட்சியில்லைன்னா வேறு எதுய்யா சாதி கட்சி)

2014 பாராளுமன்ற தேர்தல்

மொத்தம் போட்டியிட்ட இடங்கள் : 14
ரிசர்வ் தொகுதிகள் : 2
தலைவர் : விஜயகாந்த் நாயுடு
தலைவர் சாதியை சேர்ந்த வேட்பாளர்கள் எண்ணிக்கை - 8 (கிட்டத்தட்ட 60%)
தலைவர் சாதியை சேர்ந்த‌ மாவட்ட செயலாளார்கள் - 50%

இந்த கட்சி சாதிக்கட்சி இல்லையாம், இந்த கட்சி தேசியமாம் முற்போக்காம் திராவிடமாம் கழகமாம்....

இந்த விடைத்தாள் ரோகிணியுடையவை. அவள் தற்போது நம்மிடையே இல்லை. 16 வயதிலேயே ரயில் ம...

Posted: 04 Mar 2015 06:48 AM PST

இந்த விடைத்தாள் ரோகிணியுடையவை. அவள் தற்போது நம்மிடையே இல்லை. 16 வயதிலேயே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாள். அவள் மரணத்துக்குக் காரணமானவர்களைக் காப்பாற்ற அரசுத் தரப்பு வழக்கறிஞரே அனைத்து முயற்சிகளும் செய்தார். என்ன விவரம் அது?

அவள் பெயர் கோமதி. அவளுக்கு படிக்கவேண்டும் என்று நிறைய ஆசை…. குடும்பத்தில் வறுமை தாண்டவமாடினாலும், அவளை ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்கிறார்கள். நன்றாகப் படித்து ஏதாவது ஒரு வேலைக்குப் போகலாம் என்ற கனவோடு அவள் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவசர அவசரமாக திருமணம் ஏற்பாடு செய்கிறார்கள். 'நான் படிக்கணும்…. ஸ்கூலுக்குப் போகணும்' என்று அழுது அடம் பிடிக்கிறாள். 'கல்யாணம் பண்ணிக்கிட்டு ஸ்கூலுக்கு போலாம்மா… உன்னை யாரு தடுத்தது' என்று பெற்றோரும் உற்றாரும் சொல்லிய சமாதானத்தை அவள் நம்புகிறாள். 'தாலி மட்டுத்தானே.. அதை ஒளிச்சு மறைச்சுட்டு ஸ்கூலுக்குப் போலாம்' என்று அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டு திருமணத்துக்கு சம்மதிக்கிறாள். திருமணத்துக்கு மறுநாள், அவள் சீருடை அணிந்து பள்ளிக்குக் கிளம்புவதைப் பார்த்து அவள் பெற்றோரும், உறவினர்களும் சிரித்தபடியே இனி பள்ளிக்குக் செல்ல முடியாது என்று கூறுகின்றனர். கருக்கப்பட்ட தனது கனவுகளை மனதில் சுமையாக ஏற்றிக் கொண்டு தன் புதிய வாழ்க்கையை பழகிக் கொள்வதற்குள் குழந்தைகள்.

நம்மால்தான் படிக்க முடியவில்லை… நமது பிள்ளைகளையாவது நன்றாக படிக்க வைப்போம் என்ற ஆசையோடு இருந்தவளுக்கு பிறந்த பெண்தான் ரோகிணி.

துறுதுறுவென்று ஒடியாடித் திரிந்தவளை, கான்வெண்ட்டில் படிக்க வைக்க தாய் விரும்புகிறாள்.கணவனுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை. சிறுநீரகத்தில் பெரிய கோளாறு. மருத்துவ செலவு செய்வதா…. மகளைப் படிக்க வைப்பதா என்ற குழப்பம். ஆனால், கோமதி தெளிவாக இருந்தாள். மகளைப் படிக்க வைத்தே ஆக வேண்டும். தன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செய்த பொருளுதவியால், எப்படியோ தட்டுத் தடுமாறி குடும்பத்தை ஓட்டுகிறாள். மகளை பொன்னேரியில் உள்ள ஸ்ரீ மாதாஜி பள்ளியில் சேர்க்கிறாள். மகள் ரோகிணியோ, பள்ளியே வியக்கும் வகையில் படிக்கிறாள். ஆறாம் வகுப்பு சேர்த்ததும் தடுமாறியவள், ஏழாம் வகுப்பு முதல், தொடர்ந்து முதல் ரேங்க். மற்ற மாணவ மாணவியருக்கு அவளே முன்னுதாரணமாகத் திகழ்ந்தாள்.

இதற்கிடையே பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்றன. ரோகிணி, ஸ்ரீ மாதாஜி பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெறுகிறாள். அவளைப் பெற்ற கோமதிக்கோ பெருமை பிடிபடவில்லை. ரோகிணியை கட்டிப்பிடித்து உச்சி முகர்கிறாள். ரோகிணியோ… இதெல்லாம் என்னம்மா…. நான் படிச்சி… கலெக்டராகிக் காட்றேன் பாரு… அப்போ உன்னை வண்டியிலேயே கூட்டிட்டுப் போவேன் என்கிறாள்.

ப்ளஸ் ஒன் எந்த பள்ளியில் சேர்க்கலாம் என்று குழப்பம் ஏற்படுகிறது. , ரோகிணியே நான் பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்கிறேன் என்கிறாள். ஏற்கனவே என்னோடு ஸ்பெஷன்ல் கிளாஸில் படித்தவர்கள் அங்கே உள்ளார்கள், அதனால் நான் அங்கேயே படிக்கிறேன் என்கிறாள். அவள் விருப்பப்படியே, பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்க்கிறாள். அவளுக்கு டொனேஷன் எதுவும் இல்லை. பள்ளியிலேயே முதல் மாணவியாயிற்றே… அவளை சேர்த்துக் கொள்ள பள்ளிகள் போட்டி போடாதா ?

பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி வள்ளுர், அத்திப்பட்டில் இருக்கிறது. ரோகிணி வீட்டிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரம். தினமும் ரயிலில் பள்ளிக்குச் செல்வாள் ரோகிணி. பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாக ரோகிணி தேர்ச்சி பெற்றதால், அவளின் புகைப்படத்தை பள்ளி ப்ளெக்ஸ் போர்டு போட்டு பெருமையாக பறைசாற்றுகிறது. ஆனால், அதுவே அவளுக்கு பெரும் தலைவலியாக அமைகிறது. ரயில் நிலையத்தில் விடலைப்பருவ வாலிபர்கள், தொடர்ந்து ரோகிணியை கிண்டல் செய்கிறார்கள். என்னைக் காதலிக்கிறாயா…. நீ அழகா இருக்க…. என்னைக் கல்யாணம் பண்ணிக்க… என்ற ரீதியில் இந்தக் கிண்டல் தொடர்கிறது. 16 வயதுப் பெண்ணான ரோகிணிக்கு அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. தன் பெற்றோரிடம் சொல்லி முறையிடுகிறாள். அவர்கள் அவள் பள்ளியிலேயே அவளோடு படிக்கும் பார்த்திபன் என்ற இளைஞனிடம் சொல்லி, ரோகிணியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்கின்றனர்.

ரோகிணியின் பெற்றோர் சொல்லியபடி, பார்த்திபன், ரோகிணியை தினமும் ரயில் நிலையத்திலிருந்து கூட்டிச் செல்வது, அனுப்பி வைப்பது என்று கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறான். ரோகிணி, பார்த்திபனை அண்ணன் என்றே அழைக்கிறாள். கூடப் பிறந்த தங்கை இல்லாததால், ரோகிணியை பார்த்திபன் சொந்தத் தங்கையாகவே பார்த்துக் கொள்கிறான். ரோகிணியின் தாய் கோமதியும், பார்த்திபனை மகன் போலவே பார்த்துக் கொள்கிறாள். ரோகிணிக்கு உணவு கட்டுகையில், பார்த்திபனுக்கும் சேர்த்து உணவு கட்டுவது… ரோகிணி வரத் தாமதமானால் பார்த்திபனை போன் செய்து தொந்தரவு செய்வது என்று சிறப்பாகவே இவர்கள் வாழ்வு போய்க் கொண்டிருக்கிறது.

மக்கள் நலப்பணியாளர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியதன் மூலம் மக்கள் நலப்பணியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த ரோகிணியின் தந்தையின் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள். இருந்த ஒரே வேலையும் போனதால், ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத ரோகிணியின் தந்தை ஞானரத்தினம் வேலை தேடிக்கொண்டே இருக்கிறார்.

அம்மா இந்த வீட்ல ஒரே ரூம்தாம்மா இருக்கு… நம்ப வேற வீட்டுக்கு போலாம்மா என்கிறாள். எல்லாப் பசங்களும் சாப்பிட நெறய்ய எடுத்துட்டு வர்றாங்கம்மா…. நீ எனக்கு சாப்பாடு மட்டும்தான் கட்டிக் குடுக்கற… வேற எதுவும் குடுக்க மாட்ற.. அப்பாக்குதான் நல்ல வேல கெடச்சுடுமே… எனக்கு ஸ்கூலுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் குடும்மா என்று தொண தொணவென்று பேசிக்கொண்டே இருக்கிறாள். குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது..

மறுநாள் பள்ளிக்குச் சென்று விட்டு, வீடு திரும்புகையில் வழக்கம் போல தன் அண்ணன் பார்த்திபனோடு ரயில் நிலையத்தில் அமர்ந்து, அவள் அம்மா கட்டிக் கொடுத்த உணவை சாப்பிடுகிறாள் ரோகிணி. அப்போது ரயிலில் சென்ற தமிழ் ஆசிரியர் செந்தில், ரோகிணியையும், பார்த்திபனையும் பார்க்கிறார். உடனே பள்ளியின் தாளாளர் மணிவண்ணனிடம் இந்த விபரத்தை தொலைபேசியில் தெரிவிக்கிறார்.

மணிவண்ணன் சற்று நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வருகிறார்.

"உங்களுக்கு லவ் பண்ண இதுதான் இடமா… ? வேற எடம் கெடைக்கலயா… இந்த வயசுலயே உனக்கு ஆம்பளை தேடுதாடி…" என்று கத்துகிறார்… பார்த்திபனின் தலையில் கொட்டுகிறார். உடனே அந்த இடத்தில் கூட்டம் கூடுகிறது. யாருய்யா நீ.. சின்னப்பசங்கள அடிக்கிற… என்று கேட்கிறார்கள். மணிவண்ணன், "நான் இவர்கள் படிக்கும் பள்ளியின் தாளாளர்… இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றேன்னு ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்காங்கன்னு கம்ப்ளெய்ன்ட் வந்துச்சு.. அதான் கையும் களவுமா பிடிக்கலாம்னு வந்தேன்.. இவங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டு படிக்க அனுப்பிச்சா… இதுங்க ஊரு மேயிது" என்கிறார். அவர் பள்ளியின் தாளாளர் என்று அறிந்ததும் கூட்டம், அப்படியே அவர் பக்கம் சாய்கிறது.. அங்கே இருந்தவர்கள்.. மொளச்சு மூணு எலை விடல… இவளுக்கு ……………. ……… என்று பேசுகிறார்கள். இதுங்கல்லாம் எங்க உருப்படப்போகுது… அப்பா அம்மாவ ஏமாத்திட்டு இந்த வயசுலயே… இதுங்களுக்கு…………………. கேக்குது. என்று பேசுகிறார்கள்…. இன்னொரு அம்மா "இப்படி ஒரு ஜென்மம்.. இதுங்கள்ளாம் உயிரோட இருக்கறதுக்கு ஓட்ற ட்ரெயின்ல குதிச்சு சாகலாம்" என்கிறார்.

ரோகிணி கூனிக்குறுகிப் போகிறாள். உண்மையிலேயே காதலித்திருந்தால், அவளுக்கு பெரிய அவமானமாக இருந்திருக்காது… அண்ணன் தங்கையாகப் பழகியவர்களை இப்படிப் பேசுகிறார்களே.. என்று புழுங்குகிறாள். மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தவள், நேராக படுத்து தூங்குகிறாள். இரவு சாப்பிடவில்லை. காலையில் எழுந்ததும், அவள் தங்கை சுவாதியிடம் என்னோட ட்ரெஸ்ஸையெல்லாம் நீ போட்டுக்க என்கிறாள். எதுவும் புரியாத அவள் தங்கை, சரி என்கிறாள். நேராக அவள் அம்மாவிடம் சென்று, "அம்மா உன்னை எப்பவவாது திட்டியிருந்தா கோச்சுக்காதம்மா" என்கிறாள்.. எதுவுமே புரியாத கோமதி, பயாலஜி க்ளாஸ் இருக்குன்னு சொன்னியே கௌம்புடி" என்கிறாள்.

ரயில் நிலையத்தில் பார்த்திபன் காத்திருக்கிறான். இருவரும் பொன்னேரி ரயில்நிலையத்தின் அருகே உள்ள ரயில்பாதை பாலத்தில் நடந்து செல்கிறார்கள். எதிரே ரயில் வருகிறது. ரோகிணி முன்னே செல்கிறாள். பார்த்திபன் பின்னே வருகிறான். ரயில் ட்ரைவர் சத்தமாக ஹார்ன் அடிக்கிறார். இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி கும்பிட்டபடி ரயிலை நோக்கி நடந்து செல்கிறாள் ரோகிணி. ரயில் அவள் மீது மோதி அவளை சின்னாபின்னமாக்குகிறது. அவள் பின்னே வந்த பார்த்திபன் பயந்துபோய் பாலத்தின் மேலிருந்து கீழே குதிக்கிறான். கீழே இருந்த பாறைகளில் சிக்கி அவன் கால் மற்றும் தொடை எலும்புகள் நொறுங்குகின்றன.

வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. பள்ளிச் சீருடையை வைத்து, பள்ளிக்குத் தகவல் அனுப்பப்படுகிறது. தாளாளர் மணிவண்ணன் வருகிறார். காவல்துறையினர் அவரை விசாரித்ததும், இவர்கள் இருவரும் காதலர்கள்… நான் கூட முந்தாநாள்தான் கண்டித்தேன்.. வீட்டில் காதலுக்கு அனுமதி தராததால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கூறுகிறார். தினகரனும், சன் டிவியும், காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்று செய்தி வெளியிடுகிறது.

ரோகிணியின் குடும்பம் அலங்கோலமாகி அழுது புலம்புகிறது. ரோகிணியின் பள்ளி நோட்டுக்களை எடுத்து மடியில் போட்டுக் கொண்டு அழுகிறாள் கோமதி. அப்போது அந்த நோட்டிலிருந்து ஒரு கடிதம் வந்து விழுகிறது.

"வாக்குமுலம் என்று தொடங்கும் அந்தக் கடிதம், எங்களுடைய சாவுக்கு எங்கள் பள்ளி Correspondent தான் முழுக்க முழுக்க காரணம். ஏனென்றால் எனக்கு ஒரு அண்ணன் இருந்தான். அவன் என் உடன் பிறக்காவிட்டாலும் உடன் பிறந்த பாசமான அண்ணன் போலத்தான் இருந்தான். …. என்று தொடங்கும் அந்தக் கடிதம், ரோகிணியின் மனவேதனையை வெளிப்படுத்துகிறது.

"எங்களுடைய சாவுக்கு Correspondent ஒருத்தர் மட்டுமே காரணம். எங்கள் சாவிற்குப் பிறகு அங்கே படிக்கும் மாணவர்களுக்கு ஒரு புதிய காலம் பிறக்க வேண்டும். Correspondentக்கு ஒரு நல்ல தண்டனை கிடைக்க வேண்டும். இனிமேல் அவர் யாரையும் இழிவுபடுத்திப் பேசக் கூடாது. பின்பு, அண்ணன் தங்கை என்று கூறிவிட்டு யாராவது காதல் செய்வார்களா ? அதைவிட அவமானம் வேறு எதுவும் இல்லை." என்று எழுதியிருக்கிறாள் ரோகிணி….

இதற்குப் பிறகு நடந்த கொடுமை,... இந்தக் கடிதம் காவல்துறையினரிடம் கொடுக்கப்பட்டதும், காவல்துறையினர் பள்ளியின் தாளாளர் மீது 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்கின்றனர்.

இந்த மணிவண்ணன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். அந்த முன்ஜாமீன் மனு, நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம் நீதிபதி சுந்தரேஷ், நான் முன்ஜாமீன் தர மாட்டேன், மனுவை தள்ளுபடி செய்யப்போகிறேன், அந்த மணிவண்ணன் ஒரு நாளாவது சிறையில் இருக்க வேண்டும் என்கிறார். இதனால் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த முன்ஜாமீன் மனுவை வாய்தா வாங்கிக் கொண்டே தள்ளிக் கொண்டு போகிறார்கள். இறுதியாக ஏப்ரல் இறுதி வாரத்தில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோடை விடுமுறைக்குப் பிறகு இந்த மனுவை ஒத்தி வையுங்கள் என்று நீதிபதியிடம் கேட்டு, மனு தள்ளி வைக்கப்படுகிறது. இந்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஏ.என்.தம்பிதுரை.

நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 2012 இறுதி கோடை நீதிமன்றமாக, ஜாமீன் வழங்கும் நீதிபதியாக அமர்கிறார் நீதிபதி அருணா ஜெகதீசன். அவரிடம் ஏற்கனவே நிலுவையில் உள்ள முன்ஜாமீன் மனுவை மறைத்து, புதிய முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்கிறார்கள். அவர் விசாரித்து விட்டு, பள்ளித் தாளாளர் மணிவண்ணனுக்கு முன்ஜாமீன் வழங்குகிறார். இந்த மனுவின் விசாரணையின்போதும் அரசுத் தரப்பில் வாதாடியவர், ஏ.என்.தம்பிதுரை.

சரி… ஏற்கனவே நிலுவையில் உள்ள முன்ஜாமீன் மனு என்ன ஆனது ? கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பழைய முன்ஜாமீன் மனு நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, மனுவை வாபஸ் வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்து வாபஸ் வாங்கிக் கொள்கிறார்கள்.

நீதிமன்ற வட்டாரங்களில் விசாரித்தால் இந்த மோசடியான முன்ஜாமீன் மனுவை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, தம்பிதுரைக்கு 25 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். இது குறித்து மேலதிக விபரங்களை விசாரிக்க இயலவில்லை. ஆனால், இது குறித்து தன்னிடம் நேரடியாக புகார் வந்தும், இந்த முன்ஜாமீனை ரத்து செய்ய தம்பிதுரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற மர்மத்துக்கு அவர்தான் விடை சொல்ல வேண்டும்.

இந்தத் தம்பித்துரை தான் நீதிபதியாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்பது கடைசி முக்கிய செய்தி.

பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளை தூரத்தில் இருந்து எப்படி கவனித்து வர வேண்டும் என்பதற்கு இந்த சோகமான சம்பவம் ஒரு உதாரணம். இந்த சிறுமிகள் போல எண்ணற்ற சிறுமிகள் தங்கள் வாழ்வை தினம் தினம் பினம் தின்னிகளுக்கு இரையாக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

@சாங்கிய ரிஷி


"இஸ்லாமிய பெண்களை பலாத்காரம் செய்து கொல்ல வேண்டும்" என்ன கேவலமாக பொதுவில் பா.ஜ.க...

Posted: 04 Mar 2015 06:47 AM PST

"இஸ்லாமிய பெண்களை பலாத்காரம் செய்து கொல்ல வேண்டும்" என்ன கேவலமாக பொதுவில் பா.ஜ.க எம்.பி. யோகி ஆதித்யனா பேசியிருக்கிறார்.

பதவியில் இருந்தால் என்ன வேண்டுமானலும் சொல்லலாமா??? இந்த் வார்த்தைகளுக்கு பின் எவ்வளவு காழ்ப்புணர்ச்சியும் வக்கிரமும் இருக்க வேண்டும்... இவர்கள் எல்லாம் ஒரு பெண்ணின் கருவில் இருந்து வந்தவர்கள் தானே????

இவர்களுக்கு இப்படி சொல்லும் அதிகாரம் எங்கிருந்து வருகிறது? இப்படிப்பட்ட அறிக்கை விடுபவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வேலைக்காரர்கள் என்பதை மறந்து விட்டு பதவியில் இருப்பதாலேயே என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தடித்தனம் எங்கிருந்து வருகிறது...

எந்த மதத்தில் சொல்லி இருக்கிறது இல்லை எந்த கடவுள் சொல்லி இருக்கிறார் பெண்களை வன்புணர்வு செய்து கொல்ல ஒன்றும் தெரியாத சிறு குழந்தைகளை கொல்ல சொல்லி???
அருவெறுப்பாக இருக்கிறது இத்தகைய மனிதர்களுடன் தான் பயணிக்கிறோம் என நினைக்கும் போது.

@கமலி பன்னீர்செல்வம்

மாட்டை உண்பதற்கு தடை! சரி கோவிலில் பலியிடுவதை எப்போது தடுக்கப்போகிறீர்??

Posted: 04 Mar 2015 01:41 AM PST

மாட்டை உண்பதற்கு தடை! சரி கோவிலில் பலியிடுவதை எப்போது தடுக்கப்போகிறீர்??


அழகு தமிழ்நாடு! நேமம், திருவள்ளூர் மாவட்டம்! படம் : கலாநிதி

Posted: 04 Mar 2015 01:02 AM PST

அழகு தமிழ்நாடு! நேமம், திருவள்ளூர் மாவட்டம்!

படம் : கலாநிதி


பசு நமக்கு பால் தருகிறது அதனால் அதை கொல்லக்கூடாது! # டேய் பசு நமக்காடா பால் தரு...

Posted: 04 Mar 2015 12:59 AM PST

பசு நமக்கு பால்
தருகிறது அதனால்
அதை கொல்லக்கூடாது!

# டேய்
பசு நமக்காடா பால்
தருது! அது அதோட
கன்னுக்குட்டிக்கு தருதுடா!
கன்னுக்குட்டி வயித்துல
அடிச்சுட்டு பசுவ
ஏமாத்தித்தான் நாம பால
கறக்குறோம்!

@வா.வேல்முருகன்

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


நம்மை சிறு வயதில் அடித்ததால் தான் என்னவோ... இன்று இந்த அளவுகோல் காணாமலே போய்விட்...

Posted: 03 Mar 2015 07:18 PM PST

நம்மை சிறு வயதில் அடித்ததால் தான் என்னவோ... இன்று இந்த அளவுகோல் காணாமலே போய்விட்டது...

பள்ளிப்பருவ நினைவுகள் என்றுமே அகலாது....மனதை விட்டு மற்றும் வாழ்க்கையினை விட்டு.........

பா விவேக்


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 04 Mar 2015 10:17 AM PST


Posted: 03 Mar 2015 09:52 PM PST


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஒருத்தன் என்கிட்ட இன்பாக்ஸ்ல வந்து , எதுக்கு என்னோட ஸ்டேடஸ்லாம் #காப்பி அடிக்கிற...

Posted: 04 Mar 2015 09:25 AM PST

ஒருத்தன் என்கிட்ட இன்பாக்ஸ்ல வந்து ,
எதுக்கு என்னோட ஸ்டேடஸ்லாம் #காப்பி அடிக்கிறனு கேக்குறான்!!
ஏன்டா டேய்
குட் நைட்ட,
குட்_நைட்னு தானடா சொல்ல முடியும் :O

- காட்டு பூச்சி

நம்ப முடிகிறதா. இது ஒரு ஓவியம். பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Mar 2015 09:20 AM PST

நம்ப முடிகிறதா. இது ஒரு ஓவியம்.

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


நீதிபதி:எப்படி ஆக்ஸிடன்ட் ஆச்சு? அவன்:ஒரே இருட்டு நான் 80கிலோ மீற்றர் வேகத்தில...

Posted: 04 Mar 2015 09:10 AM PST

நீதிபதி:எப்படி ஆக்ஸிடன்ட் ஆச்சு?

அவன்:ஒரே இருட்டு நான் 80கிலோ மீற்றர்
வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது,
என் காரில் பிரேக் பிடிக்கவில்லை.நான் எவ்வளவோ
முயற்சி செய்தும் வண்டியை என்னால நிறுத்த முடியல.

நீதிபதி:அப்புறம்?

அவன்:எனக்கு எதிரே வீதியில ஒரு பக்கம் 2 பேர்
நடந்து போனதையும் மற்றொருபுறம் ஒரு கல்யாண
ஊர்வலத்தையும் பார்த்தேன்.நீங்களே சொல்லுங்க
நீதிபதி ஐயா நான் என்ன செய்திருக்கணும்.

நீதிபதி;கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக
அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கணும்.

அவன்:அப்படித்தான் சாமி நானும் நெனச்சு செஞ்சேன்.

நீதிபதி:அப்படினா,வெறும் 2 பேர் தானே செத்திருக்கணும்
எப்படி 50 பேர் செத்தாங்க..?

அவன்:அப்படி கேளுங்க நான் அந்த 2 பேர் மேல மோதினபோது
ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள
ஓடிட்டான்.அதுல தான் இப்படி ஆயிடுச்சு.

நீதிபதி:?????? :O :O

Relaxplzz

உஷார், உஷார், உஷார்... எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட...

Posted: 04 Mar 2015 09:00 AM PST

உஷார், உஷார், உஷார்...

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய 'கைத்திறமை' யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.

போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.

இந்தப் படத்தில் போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளை ப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.

ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது.

மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.

பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டை.

பிறகு, அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.

நிஜ முட்டையும் போலி முட்டையும்.

நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை. நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாகப் பேச்சு. ஆப் பாயில் போடும் போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.

போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.
ஆனாலும் சீன போலி முட்டைத் தயாரிப்பாளர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. காரணம் காசு! ஒரு கிலோ கோழி முட்டை 60 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போலி முட்டை ஒரு கிலோ தயாரிக்க 6 ரூபாய் தான் செலவாகிறது. ஏன் தயாரிக்க மாட்டார்கள்.

உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன..

Relaxplzz


:) Relaxplzz

Posted: 04 Mar 2015 08:55 AM PST

68 :- ஆண்டுகளாய்த்தான் நீ இந்தியன் 200 :- ஆண்டுகளாய்த்தான் நீ கிருத்துவன் 800...

Posted: 04 Mar 2015 08:50 AM PST

68 :- ஆண்டுகளாய்த்தான் நீ இந்தியன்

200 :- ஆண்டுகளாய்த்தான் நீ கிருத்துவன்

800 :- ஆண்டுகளாய்த்தான் நீ இசுலாமியன்

2000:- ஆண்டுகளாய்த்தான் நீ இந்து

ஆனால்
100000
ஆண்டுகளுக்கு முன்பே மனித
இனம் தோன்றிய காலம் முதல்
குமரி கண்டம் லெமூரிய கண்டம்
நாகரீக காலம் தொட்டு,
2 கண்டங்களில் 13
தேசங்களை கட்டி ஆண்ட
வீர தமிழனடா நீ....

தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா!!!!!

(y) (y)

Relaxplzz

ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது : ஜெயலலிதா....

Posted: 04 Mar 2015 08:45 AM PST

ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது : ஜெயலலிதா.

அதான் உங்க கட்சிக்காரங்க, ''அம்மா ரயில்" விட்டிருக்காங்களே... இது போதாதா...

- ilayaraja


என்னையும் பிடிக்குமா உங்களுக்கு..?????

Posted: 04 Mar 2015 08:38 AM PST

என்னையும் பிடிக்குமா உங்களுக்கு..?????


:) Relaxplzz

Posted: 04 Mar 2015 08:30 AM PST

செம்ம அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Mar 2015 08:23 AM PST

செம்ம அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:( Relaxplzz

Posted: 04 Mar 2015 08:17 AM PST

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல .. உலகில் அதிக குடிசைகளை கொண்ட ஒரு நாடு இந்திய...

Posted: 04 Mar 2015 08:10 AM PST

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல ..

உலகில் அதிக குடிசைகளை கொண்ட ஒரு நாடு இந்தியா
மேலை நாடுகளில் வாகனங்கள் சுமக்கும் பொதிகளை விட இங்கு மனிதன் அதிக பொதி சுமக்கிறான்..

அரை கிளாஸ் நுரை பத்து ரூபாய் ...அதற்க்கு பெயர் டீ யாம்..

ஒரு வாழைக்காயை அல்லது ஒரு உருளைகிழங்கை இருபது துண்டாக வெட்டி போடும் ஒரு பஜ்ஜியின் விலை 8 ரூபாய் ..அதுவே கொஞ்சம் சட்னி வைத்தால் பத்து ரூபாய்..

நாயர் கடையில ஒரு தயிர்தாசம் ..லெமன் சாதம் தக்காளி சாதம் 30 ரூபாய் ..

நாட்டில் ஒருவேளை உணவு மட்டுமே உட்கொண்டு விட்டு பசியுடன் உறங்க செல்லும் மக்களின் எண்ணிக்கை மட்டும் 35 கோடி

ஏழை மக்கள் பசிக்காக சாப்பிடும் ஒரு புரோட்டாவின் விலை 15 ரூபாய்

ஆனால் மக்களின் இதயம் என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற வளாகத்தில் தரமான அரிசி ஐந்து வகை பொரியலோடு ஆறு வகை குழம்புகளோடு வடை பயாசத்தோடு கொண்டு பரிமாறப்படும் ஒரு உணவின் வெறும் 28 ரூபாய் ..

ஏர் பிடிக்கும் உழவனும் உழைக்கும் மக்களும் வறுமை கோட்டுக்கு பின்னால் தூக்கு மேடையின் முன்னால் ..ஆனால் இதை சில மூதேவிகள் பொருளியல் உயர்வு என்கிறார்கள் ...

உங்களுக்கு தெரிஞ்சதையும் கொஞ்சம் போடுங்கையா...

# படித்ததில் பிடித்தது #

Relaxplzz

**ஆண் அழகன் ** கோபத்தின் உச்சியிலும் ஒரு பெண்ணிடம் தகாத வார்த்தை பேசாததிலும்,...

Posted: 04 Mar 2015 08:00 AM PST

**ஆண் அழகன் **

கோபத்தின் உச்சியிலும் ஒரு பெண்ணிடம் தகாத வார்த்தை பேசாததிலும்,

ஒரு பெண்ணை ரசிக்கிறேன் என்ற பெயரில் அவள் கூனிக் குறும்படி அவள் அங்கங்களை வர்ணிக்காததிலும்,

எந்த சூழ்நிலையிலும் ஒரு பெண்ணின் கண்ணீருக்கு காரணமாகாமல் இருத்தலிலும் தான்,

ஆண்மையின் வீரம் இருக்கிறது.

உடலில் இருப்பதல்ல வீரம். செய்யும் செயலிலும்,பேசும் வார்த்தைகளிலும், மனதில் இருக்கும் எண்ணங்களிலும் இருப்பதே வீரம்.
.
.
.
அத்தகைய வீரத்தை உடையவனே உண்மையான ஆணழகன். :)

Relaxplzz

Photo Aa Photography


எந்த இடத்திலும் தான் அழகுனு ஆணவம் காட்டாமல் செல்லும் பெண்தான் உலகின் பேரழகி

Posted: 04 Mar 2015 07:50 AM PST

எந்த இடத்திலும் தான் அழகுனு ஆணவம் காட்டாமல்
செல்லும் பெண்தான் உலகின் பேரழகி


கார்ப்பரேட் நிறுவனங்கள்., பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தவில்லை - மாநிலங்களவையில்...

Posted: 04 Mar 2015 07:45 AM PST

கார்ப்பரேட்
நிறுவனங்கள்.,
பணக்காரர்களுக்காக
ஆட்சி நடத்தவில்லை -
மாநிலங்களவையில்
மோடி ஆவேசம்...

இதை இட்லினு சொன்னா சட்னி கூட
நம்பாது... :D

- ஆனந்தன்.

இந்த இரு ஜாம்பவான்களின் நடிப்பை பார்த்து அசந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Mar 2015 07:40 AM PST

இந்த இரு ஜாம்பவான்களின் நடிப்பை பார்த்து அசந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 04 Mar 2015 07:30 AM PST

திஸ் ஈஸ் ரியல்லி வெரி பேட் யார்..... ;-)

Posted: 04 Mar 2015 07:20 AM PST

திஸ் ஈஸ் ரியல்லி வெரி பேட் யார்..... ;-)


எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து அதிர்ச...

Posted: 04 Mar 2015 07:10 AM PST

எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை
வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து
அதிர்ச்சியாக இருந்தது.

நாயின் வாயிலிருந்த முயல்
இறந்துவிட்டது தெரிந்தது.
என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது
என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத்
தெரிந்தால்....?....

நெஞ்சம் பதறியது. என்ன செய்வது என
சற்று சிந்தித்தபின் ...
நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி,
வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக
அதை குளிப்பாட்டி,
பின் யாருக்கும் தெரியாமல்
சத்தமில்லாமல்
பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.

ஈரமான முயலைப் பார்த்ததும்
"அதிக குளிர் தாங்காமல் முயல்
இயற்கையாக
இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார்
ஏமாந்து போவார்கள்'
என மனதிற்குள் நினைத்து
என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.

நேற்று எதேச்சையாக என்னைப்
பார்த்துவிட்ட
பக்கத்து வீட்டுக்காரர்,
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா"
என்று கேட்டார்.
எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.

எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,
"தெரியாதே என்ன விஷயம்...?" என நான்
சொல்ல,
பக்கத்து வீட்டுக்காரர்,
"கடந்த சில நாட்களுக்கு முன்னாடி
எங்கள் வீட்டு முயல் உடல்
நிலை சரியில்லாமல்
இறந்து விட்டது."என்றார்

"அப்படியா...!!!??"

"ஆமாம்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா,
எவனோ ஒரு லூசுப்பய ...
நாங்கள் புதைத்த
முயலை தோண்டி யெடுத்து
குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள
போட்டிருக்கான்"

# இந்த அசிங்கம் உனக்கு தேவையா

:O :O

Relaxplzz

எளிய இயற்கை மருத்துவம் :- துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து ட...

Posted: 04 Mar 2015 07:00 AM PST

எளிய இயற்கை மருத்துவம் :-

துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும்.

அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம்.

இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.

தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

சித்தரத்தையைச் சிறிதளவு எடுத் துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும்.

இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.

வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.

தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.

Relaxplzz


2 வயசு குழந்தைக்கு எதுக்குடா இண்டர்வியு? அதுல பாஸ் பண்ண கோச்சிங் வேற! நாடு வெளங...

Posted: 04 Mar 2015 06:50 AM PST

2 வயசு குழந்தைக்கு எதுக்குடா இண்டர்வியு?

அதுல பாஸ் பண்ண கோச்சிங் வேற! நாடு வெளங்கிடும்!


மனைவி தன் கணவனிடம் ஒரு போர்டைப் படித்து சொல்கிறாள் பட்டுச் சேலை ரூ.15 பனாரஸ் ச...

Posted: 04 Mar 2015 06:45 AM PST

மனைவி தன் கணவனிடம் ஒரு போர்டைப் படித்து சொல்கிறாள்

பட்டுச் சேலை ரூ.15

பனாரஸ் சேலை ரூ .10

நைலான் சலே ரூ.8

கார்டன் சேலை ரூ. 5

"என்னங்க. ஐநூறு ரூவா குடுங்க, ஐம்பது சேலைய மொத்தமா வாங்கிட்டு வரேன்"

கணவன் " அடியே லூசு, அது அயர்ன் பண்ற கடை"

:D :D

Relaxplzz

இது போன்று வைக்கோலில் ஏறி விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (Y) #கி...

Posted: 04 Mar 2015 06:40 AM PST

இது போன்று வைக்கோலில் ஏறி விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

#கிராமத்து_நினைவுகள்


:) Relaxplzz

Posted: 04 Mar 2015 06:29 AM PST

ஹா ஹா.. :D :D

Posted: 04 Mar 2015 06:20 AM PST

ஹா ஹா.. :D :D


துள்ளித்திரிந்ததொரு காலம் பள்ளிப்பயின்ற தொரு காலம்...!!! • தனி படுக்கையில் அல்ல...

Posted: 04 Mar 2015 06:10 AM PST

துள்ளித்திரிந்ததொரு காலம் பள்ளிப்பயின்ற தொரு காலம்...!!!

• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாக இருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
.
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை
உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

Relaxplzz

எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன்...

Posted: 04 Mar 2015 06:00 AM PST

எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார்...

பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார்...

பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார்...

இருபத்திரண்டுவயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்...

இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார்...

எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் "ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் " கடையில் ஆடை எடுத்து அணிந்தார்...

எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார்...

இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது. என்னை சிலையாக்க தன்னை உளியாக்கி தியாகம் செய்த தாயுமானவன் என் தந்தை...!

- நந்தமீனாள்

Relaxplzz


உதாசீனங்கள் தொடரும் பொழுது..... உண்மை அன்பும் தூர ஓடி விடுகிறது.........!!

Posted: 04 Mar 2015 05:50 AM PST

உதாசீனங்கள் தொடரும் பொழுது..... உண்மை அன்பும் தூர ஓடி விடுகிறது.........!!


தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சரியக்குறியுடன் மாற்ற...

Posted: 04 Mar 2015 05:45 AM PST

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.

இந்த
வாக்கியத்தை ஆச்சரியக்குறியுடன்
மாற்றுங்கள் பார்ப்போம்..

மாணவன்: டேய்
மச்சான், 'figure' டா! :D :D

வெங்காயத்தில் அருமையான படைப்புகள்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Mar 2015 05:40 AM PST

வெங்காயத்தில் அருமையான படைப்புகள்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)