Wednesday, 10 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மற்ற ஆண்கள் முன்னிலையில் தன் மனைவியிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பை ஒரு அதட்ட...

Posted: 10 Jun 2015 11:04 AM PDT

மற்ற ஆண்கள்
முன்னிலையில் தன்
மனைவியிடம் இருந்து
வரும் தொலைபேசி
அழைப்பை ஒரு
அதட்டலோடு தான் பேச
ஆரம்பிப்பான் தமிழன்

#பொண்டாட்டிய மிரட்டி
வச்சிருக்காய்ங்
கலாமாம்...

@விவிகா சுரேஷ்

கலைஞர் வீட்டு திருமண விழாவில் இரண்டு திருடர்கள் கைது : செய்தி யோவ் கைய எடுங்கயா...

Posted: 10 Jun 2015 08:11 AM PDT

கலைஞர் வீட்டு திருமண
விழாவில் இரண்டு
திருடர்கள் கைது :
செய்தி

யோவ் கைய
எடுங்கயா... அவங்க
மாப்பிள்ளை
வீட்டுக்காரங்க...

@பூபதி

2012ம் ஆண்டு அணு உலைக்கு எதிராக கடலில் இறங்கி கூடங்குளம் மக்கள் போராடும் போது இந...

Posted: 10 Jun 2015 04:32 AM PDT

2012ம் ஆண்டு அணு
உலைக்கு எதிராக கடலில்
இறங்கி கூடங்குளம் மக்கள்
போராடும் போது
இந்திய விமானப்படையின்
இந்த விமானம் தாழ்வாக
பறந்து மக்களுக்கு
குண்டு வீசுவதை போல
பயம் காட்டியது
இதில் ஒருவர் இறந்தும்
போனார்.....
இந்த விமானம் நேற்று
காணாமல்
போய்விட்டது......

@ரகு


கருணாநிதி இல்லத் திருமணத்தில் திருட வந்த இருவர் பிடிபட்டனர். #அதானே... எங்க வந்...

Posted: 10 Jun 2015 04:21 AM PDT

கருணாநிதி இல்லத்
திருமணத்தில் திருட
வந்த இருவர் பிடிபட்டனர்.

#அதானே... எங்க வந்து?? யாருகிட்ட??

@கி ரமேஷ்குமார்

பரிணாம வளர்ச்சியில குரங்குல இருந்து மனுசன் வந்தான்னு சொன்னா... அப்ப ஏன் இப்ப இரு...

Posted: 10 Jun 2015 01:51 AM PDT

பரிணாம வளர்ச்சியில குரங்குல இருந்து மனுசன் வந்தான்னு சொன்னா... அப்ப ஏன் இப்ப இருக்குற குரங்குல இருந்து மனுசன் வரலைன்னு கேக்குறவங்களைப் பாத்தா எனக்கு அழுகுறதா சிரிக்கிறதான்னு தெரியலைங்க....

பரிணாமங்குறது... ஓவர்நைட்லயோ அல்லது ஒரே பாட்டுல பணக்காரனாகுறது மாதிரியோ கிடையாதுங்க. சிலபல மில்லியன் வருடங்கள் ஆகும். இன்னொன்னையும் கவனிக்கனும். பரிணாம மாற்றத்துக்கு உட்படுற உயிரினங்கள் எதுன்னு பாத்தா... சூழலுக்குத் தகுந்த தங்களை தக்கவைத்துக்கொள்ள முடியாத உயிரினங்கள்தான் அப்படி மாறும்.

இன்னைக்கு இருக்குற குரங்குகள் நம் தற்போதைய புவிச்சூழலுக்கு ஏத்த மாதிரி வாழப் பழகிக்குச்சுங்க. அதுனால அது பரிணாம மாற்றம் அடைய வேண்டியதில்லை. அதாவது தேவையும் சூழலும்தான் பரிணாம மாற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள். புரிஞ்சுக்குங்க.

அப்புறம்.. மனிதன் தோன்றியது... குரங்குகள்ல இருந்துன்னு சொன்னா... இன்னைக்கு இருக்குற குரங்குகள்ல இருந்து இல்லை. கொரில்லா, சிம்பன்ஸி, போனபோ, அப்புறம் மனுசன் இவங்களுக்கெல்லாம் ஒரு பொது மூதாதையர் உண்டு. அதுல இருந்து கிளை விட்ட இனங்கள்தான் இந்த நாலும்.

மனுசனும், டக்குனு... அந்த மூதாதையர்கிட்ட இருந்து இன்னைக்கு இருக்குற மனுசன் மாதிரி பொறந்து வந்துரலை. Homo habilis, Homo erectus, Homo antecessor, Homo heidelbergensis, Neanderthals, Homo rhodesiensis, Homo rudolfensis, Homo sapiens idaltu, Homo sapiens sapiensனு படிப்படியா.. தலைமுறை தலைமுறையா.. இன்னைக்கு 46 குரோமோசாம்களோட இப்ப இருக்குற ஒரு சராசரி மனுசக் கூட்டமா வந்துருக்கோம்.

மாற்றங்கள் வெளித்தோற்றத்துல மட்டும் இல்லைங்க. உடல் உள்ளுறுப்புகள், ஏன் நம்ம டிஎன்ஏ ஆர்என்ஏ..ல கூட மரபணுக்கள் மாற்றம் பெற்று வந்துருக்கோம். இன்னைக்கு இருக்குற இந்த Homo sapiens sapiens கூட ஒரே மாதிரி இல்லை. ஒவ்வொரு கண்டத்துலயும் இருக்குற மனுசன் எத்தனை வித்தியாசப்படுறான்?

அப்டீன்னா... பரிணாம வளர்ச்சி முடிந்துவிட்டதா..? மனிதன்தான் பரிணாமத்தின் உச்சியான்னு கேட்டா... இப்போதைக்கு உங்களைச் சமாளிக்கிறதுக்கு ஆமான்னும் சொல்லலாம். உண்மையச் சொல்லனும்னா இல்லைன்னும் சொல்லலாம்.

என்னைப் பொறுத்தவரை சூழலுக்குத் தகுந்து தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்காத ஒரே உயிரினம் மனுசன்தான். அவன்தான் தனக்கேற்றவாறு சூழலை வடிவமைக்க முயற்சி செய்யுறான். அதுனால கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க... நம்மகிட்ட இருக்குற பரிணாம மாற்றம் புலப்படும்.

கரடு முரடான பாதைகள்ல, மலைகள்ல, மரங்கள்ல ஏறிப்போகனும்னா வழுக்கி விழுந்துறாம இருக்க நம் கால் விரல்கள் அவற்றை இறுக்கிப் பிடிக்கும். அந்த விரல்கள் சற்றே உறுதியாக இருக்க விரல் நுனிகளில் நகங்கள்.

ஆனால் இன்னைக்கு செருப்பும் ஷூவும் போட்டுக்கிட்டு சமதளமான சீரான பாதையில நடக்குறதுக்கு... பழகிக்கிட்ட நமக்கு கால் விரல்களின் பயன்பாடு குறைஞ்சுருச்சு... அதுனால பயன்தராத விரல்களில் முதலிடத்துல இருக்குற சுண்டு விரல் இன்னைக்கு நிறைய சுருங்கிருச்சு.. சிலபேருக்கு அது தரையிலேயே படுறது இல்லை. அதுல இருக்குற நகம் கூட பலருக்கு ஒழுங்கா முழுசா வளர்றது இல்லை.

பலபேருக்கு... ஞானப்பல் முளைக்கிறதே இல்லை. என் தாத்தா காலத்துலயெல்லாம் நிறையப் பேருக்கு உடம்புல, கை கால்கள்ல முடி நிறைய இருக்கும். இப்ப அது தேவையில்லாமப் போச்சு. இன்னும் சில நூறு வருடங்கள்ல... நாம பிறக்கும்போதே வழுக்கையோட பிறந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை.

இது உடல்ரீதியான பரிணாம மாற்றம். இன்னொன்னு... அறிவு. அறிவியலார்களின் கருத்துப்படி அடுத்த வரப்போற சூப்பர் ஹ்யூமன் அறிவால பரிணாம மாற்றம் பெற்றவனா இருப்பானாம். இதெல்லாம் கேள்வி கேக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் ஆற அமர்ந்து உட்கார்ந்து யோசிச்சாலே புரிஞ்சுரும். நம்ம பாட்டன் காலத்துல அறிவு எப்படி இருந்துச்சு... இன்னைக்கு நம்ம பசங்க காலத்துல அறிவு எப்படி இருக்குன்னு...

பரிணாமங்குறதை... நீங்களும் நானும் ஒக்காந்து பேசிலாம் டக்குனு ஒரு முடிவுக்கு வரமுடியாதுங்க... படிக்க ஆரம்பிச்சா... விக்கிரமாதித்தன் கதைய விட படுபயங்கரமா... கதைக்குள் கதை, கதைக்குள் கதைக்குள் கதைன்னு... இங்கே கிளைக்குள் கிளை, கிளைக்குள் கிளைன்னு... சுவாரஸ்யமா பிரிஞ்சு போகும்...

அதுனால..., கேள்வி கேளுங்க தப்பில்லை. ஆனா, இத்தனை காலங்கள் காடு மேடு, கடல் தீவுன்னு அலைஞ்சு திரிச்சு, ஆதாரங்கள் சேகரிக்கப் பாடுபட்டு... ஒரு கருத்துச் சொன்னா... என்ன ஏதுன்னு அதைப் படிச்சுப் பாக்காமயே... எங்க வாத்தியாரு அது பொய்யின்னு சொன்னாரு... அதுனால அது பொய்தான்னு சொன்னா எப்டீங்க...?

உங்க வாத்தியாருக்கு என்ன பிரச்சனையோ... உங்க அறிவைப் பலிகடாவா ஆக்கிட்டாரு. நீங்களாச்சும் சுதாரிச்சுக்க வேணாமா...?

கேள்வி கேளுங்க... உங்க அறிவை வளர்த்துக்குறதுக்காக கேள்வி கேளுங்க... அடுத்தவங்களைப் பொய்யாக்குறதுக்காக கேள்வி கேக்காதீங்க...

@Babu Pk


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் *ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலை...

Posted: 10 Jun 2015 08:45 AM PDT

*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்

*ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான

*செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!

*கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும

*கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.

*நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*10th 12th ரிசல்ட் பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான்

*ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.

*சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.

*போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்

*ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது

*நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை
அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
கோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை
இதெல்லாம் போச்சு.

*நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...

*5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,

*மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை

இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.

பா விவேக்

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!! * இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்ற...

Posted: 09 Jun 2015 09:34 PM PDT

சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

* இன்றே செய்து முடிக்கக் கூடியதை 'நாளை' என்று ஒத்திப் போடாதீர்கள்.

* நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

* பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.

* விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.

* பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.

* எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.

* விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.

* கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.

* மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.

* கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


Posted: 10 Jun 2015 02:59 AM PDT


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


“அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டுமாம்.... அப்படி ஒரு தடவை கதவை தட்டும்போதே ,...

Posted: 10 Jun 2015 07:10 AM PDT

"அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டுமாம்....
அப்படி ஒரு தடவை கதவை தட்டும்போதே , அதை விட்டுடாம வீட்டுக்குள்ளே பிடிச்சு தள்ளி கதவை சாத்திடணும்.."

# இன்று நான் ரசித்த நண்பரின் பதிவு இது...!

டி.எம்.எஸ். , தன் ஆரம்ப கால வாழ்வில் ...இப்படி ஒருமுறை தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை , உடனடியாக உள்ளே பிடித்துத் தள்ளி கதவை சாத்தியிருக்கிறார் ...
அதனால்தான் பல ஆண்டுகள் பட உலகில் அவர் பட்டத்தை பறக்க விட்டிருக்கிறார்...

'தூக்குத்தூக்கி' என்று ஒரு படம்...சிவாஜி நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்தது...

அந்தப் படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள்..
சிவாஜிக்கு பின்னணி பாடுவதற்காக , அப்போது பிரபலமாக விளங்கிய பாடகர் திருச்சி லோகநாதனிடம் கேட்டபோது அவர் சொன்னார்...

"ஒரு பாடலுக்கு ஐநூறு ரூபாய். எட்டும் பாடுவதற்கு எட்டாயிரம்"
."எட்டாயிரமா..? கொஞ்சம் குறைச்சுக்கலாமே..?" என்று தயாரிப்பாளர்கள் கேட்க...

"அப்படி ரேட்டைக் குறைத்துக்கொண்டு என்னால் பாட முடியாது. வேணும்னா உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன். மதுரையிலிருந்து செளந்தரராஜன் என்கிற புதுசா ஒரு பாடகர் வந்திருக்கிறார். அவரைக் கேட்டுப்பாருங்கள்" ...

திருச்சி லோகநாதனின் அந்த ஆலோசனையைக் கேட்டு ஆளுக்கு ஒரு பக்கம் தேடி, அடுத்த நாளே தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.ஸைப் பிடித்தார்கள்.

"எட்டுப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள். மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பளம் தர முடியும்.... ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா?" என்று தயக்கத்துடன் தயாரிப்பு தரப்பு கேட்க....வேகமாகத் தலையாட்டினார் டி.எம்.எஸ்.

காரணம்....மதுரை பஜனை மடங்களில் பாடி, அதற்குச் சன்மானமாக காப்பி ..காராச்சேவு, பக்கோடா மற்றும் இரண்டு ரூபாய் வாங்கிய காலம் அது...

ஆனால்..அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
"தூக்குதூக்கி" கதாநாயகன் சிவாஜி சொன்னார்.. 'பராசக்தி'யில் குரல் கொடுத்த சி.எஸ். ஜெயராமன்தான் எனக்குப் பொருத்தமாக இருக்கும்... அந்த ஜெயராம பிள்ளையைப் பாடவைக்காமல், நேற்று வந்தவரை எல்லாம்…" என்று அதிருப்தியுடன் சிவாஜி இழுக்க...

பார்த்தார் டி.எம்.எஸ்..! கதவைத் தட்டும் அதிர்ஷ்டத்தை உள்ளே பிடிச்சு தள்ளி கதவை சாத்திடணும் என்று உறுதியான முடிவை உடனே எடுத்தார்...

. சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சிவாஜியிடம் ஒரு சவால் விட்டார்...

" நான் பாடுவதை ஒலிப்பதிவு செய்து கேளுங்கள். பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக்கொள்கிறேன்"
அசராமல் டி.எம்.எஸ். சொன்னதை , அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டார் சிவாஜி.

மளமளவென்று மூன்று பாடல்களை ஒலிப்பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக்காட்டினார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.

சிவாஜிக்கு ஒரே சந்தோஷம்... "அட..என் குரல் மாதிரியே பாடி இருக்காரே...நல்லா வந்திருக்கு. எல்லாப் பாட்டையும் நீங்களே பாடுங்க"

'பெண்களை நம்பாதே…', 'ஏறாத மலைதனிலே…' ..என தூக்குத்தூக்கியின் அத்தனை பாடல்களையும் டி.எம்.எஸ்ஸே பாடி அமர்க்களப்படுத்தினார்...!

# டி.எம்.எஸ்.வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தை , அதிர்ஷ்டம் என்பதா..? தைரியம் என்பதா..?

# இதற்கு நண்பர் தன் பதிவில் சொன்ன பதில் பொருத்தமாக இருக்கிறது...

"அதிர்ஷ்டம் என்பது ஒருதலைக்காதல் ..
தைரியசாலிகளை மட்டுமே அது எப்போதும் காதலிக்கிறது...!"

- John Durai Asir Chelliah

Relaxplzz

இதுதாண்டா போலீஸ்.... நேற்று மாலை நண்பரின் வீட்டிற்க்கு சென்றிருந்தேன், பர்சனல்...

Posted: 10 Jun 2015 07:10 AM PDT

இதுதாண்டா போலீஸ்....

நேற்று மாலை நண்பரின் வீட்டிற்க்கு சென்றிருந்தேன், பர்சனல் விஷயமாக...

அப்போது அவரின் பாஸ்போர்ட் விஷயத்திற்க்காக எழும்பூர் காவல் அதிகாரி வந்திருந்தார்.

வெரிஃபிகேஷன் டீட்டெய்ல்ஸ் முடிந்தவுடன் புறப்பட தயாரானார்.

திடீரென்று என் நண்பர் அவரின் கையில் 200 ரூபாயை திணித்தார்.

நானும் கொஞ்சம் அதிர்ந்து செய்வதரியாமல் போலீஸ்காரரை பார்த்துக்கொண்டு நின்றேன்.

சிரித்துக்கொண்டே அந்த பணத்தை வாங்கிய அதிகாரி என் நண்பரின் குழந்தையை கூப்பிட்டார். குழந்தையின் கையில் நண்பர் கொடுத்த 200 ரூபாயை கொடுத்து "நல்ல புஸ்தகம் வாங்கிக்கோம்மா" என்று சொல்லிவிட்டு. "சார்...இந்த வேலைக்குத்தான் எனக்கு அரசாங்கத்தில் சம்பளம் கொடுக்குறாங்க தயவு செய்து இந்த மாதிரி விஷயங்களை ஊக்குவிக்காதீர்கள்" என நாசூக்காக சொல்லிவிட்டு சென்று விட்டார்.

நண்பர் கூனிக்குறுகிப்போனார். மன்னிப்பும் கேட்டார். வேறுயாராவது இருந்திருத்தால் என் நண்பரை உண்டு இல்லை என ஆக்கியிருப்பார்கள். ஆனால் இந்த நல்ல போலீஸ்காரர் இந்த சம்பவத்தை டீல் செய்த விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

நண்பர் செய்வதறியாமல் சாரி சார்....என சொல்லிட்டு செய்வதறியாஅமல் கையை பிசைந்துக்கொண்டு என்னைப்பார்த்தார்.

லஞ்சம் வேண்டாம் என்று சொன்னாலும் பொது மக்கள் விடுவதில்லை. தவறு செய்பவர்களை விட தவறு செய்ய தூண்டுபவர்கள்தான் குற்றவாளிகள்.

அதிகாரியின் முகம் என் கண் முன் நின்றது. அவருக்கு என் சல்யூட். இவர்கள் மாதிரி நல்லவர்கள் இருப்பதால் தான் சென்னையில் இன்னும் மழை பெய்கிறது போலும்.

அந்த அதிகாரியின் பெயர் எனக்கு தெரியவில்லையென்றாலும் அவரின் நேர்மை என்னை நெகிழச்செய்து இந்த பதிவை அவருக்கு சமர்ப்பணம் செய்ய வழிவகுத்ததில் மகிழ்ச்சியே!

நன்றி Selva Kumar

Relaxplzz

பொது அறிவு தகவல்கள் :- புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை வாலில்லாத...

Posted: 10 Jun 2015 04:10 AM PDT

பொது அறிவு தகவல்கள் :-

புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை

வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx)

ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள்

முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள்

உலகின் மக பெரிய கங்காரு - சிவப்பு கங்காரு

எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு - அப்போசம் (ஒருவகையான எலி )

ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள்

மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது - ஈ

மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி - தேவாங்கு

எலும்பு கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி மீன்

பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்

Relaxplzz

பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை கூறுங்கள்! ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று...

Posted: 10 Jun 2015 03:10 AM PDT

பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை கூறுங்கள்!

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது, மூடன் அறிவாளியாகலாம் பைத்தியம் தெளிந்த சித்தமுடையவனாகலாம் ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டுக்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தாமஸ் ஆல்வா எடிசன் மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. அல்பிரட் ஐன்ஸ்டைன் போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள் உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்.

Relaxplzz

வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில் இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு...

Posted: 09 Jun 2015 09:10 PM PDT

வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில்
இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு முறிவு
ஏற்பட்டது.

மருத்துவர் மாவுக்கட்டு போட்டுவிட்டு
" பாட்டி, இன்னும் 1 மாசத்துக்கு மாடிப் படி ஏறக்
கூடாது.." என்று சொல்லிப் போனார்.

ஒரு மாதத்துக்குப் பின், மாவுக்கட்டை மருத்துவர்
அகற்றும் போது பாட்டி கேட்டாள்..

"டாக்டர்.. இனி படியில் ஏறலாமில்லையா..?"

"ஓ.எஸ்.. தாராளமா.."

"நன்றி டாக்டர்.. தண்ணி பைப்பை புடிச்சி மாடி
ஏறுவது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு."

:P :P

Relaxplzz

ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங...

Posted: 09 Jun 2015 08:15 PM PDT

ஒரு பெரிய குரு இருந்தார்.
முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர்.

அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்த ாங்க.
பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங ்க.
அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான்.

அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக் காக மட்டும்
பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. 'என்னப்பா பண்ண லாம்?'னு கேட்டார்.

'அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான்
இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங ்க திரும்புவேன்'னான்.

பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக் கு ஒரு 'சபாஷ்' போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.

தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சுது. 'எப்படிப்பா இருந்தது என் பேச்சு?'னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.

'அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா , நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும்
அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!'னான். அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்!

நீதி...மத்தவங்களுக் கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்...!!

Relaxplzz

இந்தத் தகவல் உங்களிடத்தில் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தலாம் !! உலகத்தில் ஐந்து...

Posted: 09 Jun 2015 06:00 PM PDT

இந்தத் தகவல் உங்களிடத்தில் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தலாம் !!

உலகத்தில் ஐந்து மிகப் பெரும் பணக்கார்களின் பெயர்களைச் சொல்லுங்கள் ?

ஐந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர்களை சொல்லுங்கள் ?

சமீபமாக நோபல் பரிசு பெற்ற பத்து நபர்களின் பெயர்களைச் சொல்லுங்கள் ?

இந்தக் கேள்விகளுக்கு மிகச் சரியான பதில்களை சொல்வதற்கு நாம் மிகவும் தடுமாறிப் போய்விடுவோம். ஏனென்றால் நேற்றைய தலைப்புச் செய்திகளைக் கூட நாம் மறந்து விடுகிறோம்.. ஏனென்றால் சாதனைகள் நம் மனதில் நிற்காது.!விருதுகளும் மறக்கப்பட்டு விடும்.

இப்பொழுது வேறு ஐந்து கேள்விகளைப் பார்ப்போம் :

உங்களது பள்ளிப் பருவத்தில் சிறந்த ஐந்து ஆசிரியர்களின் பெயர்களை கூறுங்கள்?

உங்களின் கடினமான நேரத்தில் உங்களுக்கு உறுதுணையாக இருந்த ஐந்து நண்பர்களின் பெயர்கள்?

உங்களுக்கு நல்ல விஷயங்களை தங்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொடுத்த ஐந்து நபர்களின் பெயர்கள்?

உங்களின் திறமையை கண்டறிந்து அவற்றை உங்களுக்கு தெரியப்படுத்தியவர்களின் பெயர்கள்?

நீங்கள் மகிழ்ச்சியோடு உங்கள் நேரத்தை செலவிடும் ஐந்து நபர்களின் பெயர்கள்?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் வெகு எளிதாக பதில் கூறி விடுவீர்கள். ஏனென்றால் உங்கள் வாழ்க்கைக்கு உதவியர்கள் எல்லாம் நாம் அன்றாடம் சந்திக்கும் வெகு
சாதாரண மக்களே.!

உங்கள் உலகத்தை அழகு படுத்தியர்கள் இத்தகைய சாதாரண மனிதர்கள்தான். எனவே அவர்களை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள் ! அவர்களோடு சந்தோஷமாக இருங்கள். எப்பொழுதுமே வாழ்வில் சிறப்பான விஷயங்கள் சாதாரணமாகத்தான் இருக்கும்.!! எளிமையாகத்தான் இருக்கும்!

- கணபதி சுப்பிரமணியன்

Relaxplzz

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 10 Jun 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


ஒரு அடுக்கு மாடில தீப்பிடிச்சிருச்சாம்.உடனே தீயணைப்பு வீரர்கள் பறந்து வந்து மாடி...

Posted: 10 Jun 2015 08:21 AM PDT

ஒரு அடுக்கு மாடில தீப்பிடிச்சிருச்சாம்.உடனே தீயணைப்பு வீரர்கள் பறந்து வந்து மாடில இருக்கிறவங்கள கீழே குதிக்க சொல்லி கீழ வலையோட நின்னாங்க.

முதல்ல ஒரு வக்கீல் பொண்ணு குதிச்சது...வலைய சரியா பிடிக்காததால கீழ விழுந்துடுச்சு.! லேசான அடி.

ரெண்டாவது லெக்சரர் பொண்ணு ...
இதுவும் குதிச்சது ..!

கீழே இருந்தவங்க சரியான டைரக் ஷன் இல்லாம வலையை அங்கயும் இங்கயும் ஆட்டி இதுவும் மிஸ்ஸாகி கீழே விழுந்துடுச்சு.

அடுத்தது அரசியல்வாதி பொண்ணு வந்து நின்னது...

கீழ தீயணைப்பு வீரர்கள் "குதி.., குதி..!"ன்னாங்க,

ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு சத்தமா அந்தப் பொண்ணு சொன்னிச்சு...

" நான் உங்கள நம்ப மாட்டேன். உங்களால எனக்கு முன்னாடி குதிச்ச ரெண்டு பொண்ணுங்க வீணா அடிபட்டிடுச்சுங்க... அதனால வலையை கீழே வச்சுட்டு விலகி நில்லுங்க. நானே வலைல கரெக்டா குதிச்சுக்கறேன்....!"


கணவன்;- நேத்து ராத்திரி.. நான் குடிச்சிட்டு வந்தப்போ.. நீ பேசிய வார்த்தை ஒவ்வொன்...

Posted: 10 Jun 2015 07:19 AM PDT

கணவன்;- நேத்து ராத்திரி.. நான் குடிச்சிட்டு வந்தப்போ.. நீ பேசிய வார்த்தை ஒவ்வொன்னும் என்னை செருப்பால அடிச்சது போல இருந்துச்சு..!!

மனைவி;- அடப் போங்க.. குடிச்சியிருந்ததால.. உங்களுக்கு தெரியல.. நெசமாவே நான் செருப்பால தான் அடிச்சேன்..!!


அதிர்ச்சியூட்டும் கப்பல் விபத்துக்கள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு

Posted: 10 Jun 2015 07:10 AM PDT

அதிர்ச்சியூட்டும் கப்பல் விபத்துக்கள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு


அதிர்ச்சியூட்டும் கப்பல் விபத்துக்கள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு
www.indiasian.com
Top 10 Ship Crash Compilation

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 10 Jun 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 10 Jun 2015 06:18 AM PDT


Posted: 10 Jun 2015 06:15 AM PDT


தல தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தது இல்லன்னு யாருடா சொன்னது?

Posted: 10 Jun 2015 05:32 AM PDT

தல தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தது இல்லன்னு யாருடா சொன்னது?


தல தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தது இல்லன்னு யாருடா சொன்னது?
www.indiasian.com
south indian big star ajith's adsvedisment

Posted: 10 Jun 2015 05:14 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 10 Jun 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 10 Jun 2015 04:12 AM PDT


✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்... சூப்பரா இருந்தா...

Posted: 10 Jun 2015 03:33 AM PDT

✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


சிறுநீரகக் கற்கள்.. தமிழ்ச் சித்தர்களின் ஓர் எளிய தீர்வு.! மனித உடலின் கழிவுகளை...

Posted: 10 Jun 2015 03:09 AM PDT

சிறுநீரகக் கற்கள்.. தமிழ்ச் சித்தர்களின் ஓர் எளிய தீர்வு.!
மனித உடலின் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் முக்கியமான உறுப்புதான் சிறுநீரகம். இடுப்புக்கு சற்றே மேலாக வயிற்றுக்கு பின் புறத்தில்,முதுகு தண்டின் அருகாமையில் அமைந்திருக்கும். இதன் முக்கிய வேலை குருதியில் இருக்கும் தேவையற்ற அல்லது மிகையாக இருக்கும் உப்புகளை பிரித்து நீராக வெளியேற்றுவதே ஆகும். இவை தவிர உடலில் இருக்கும் அமிலங்களின் அளவினை கண்காணித்து சமநிலையை பேணும் பணியினையும் சிறுநீரகம் செய்கிறது.
சிறுநீரக பாதிப்புகள் பலவாக இருந்தாலும், இந்த பதிவில் சிறுநீரக கற்களை பற்றி மட்டுமே தகவல்களை பகிர விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லிட்டர் அளவுக்காவது தண்ணீரை உள்ளெடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு குறைவாக நீரை உள்ளெடுக்கும் போது சிறுநீரகம் பிரிக்கும் கழிவு உப்பின் செறிவானது சிறுநீரில் அதிகரிக்கும். இந்த உப்புகள் சிறுநீரக பாதையில் படிமஙக்ளாக படிந்து கற்களாய் உருவாகும்.
நாளடைவில் இவ்வாறு உருவாகும் கற்கள் சிறு நீரகபாதையில் தடையினை உண்டாக்கி அடைப்பை ஏற்படுத்தும். அப்போது தாங்க இயலாத அளவில் வலி உண்டாகும். ஆங்கில மருத்துவத்தில் பல புதிய முறைகளும் தீர்வுகளும் இருந்தாலும், சிகிச்சைகள் செலவு கூடியதும் பக்க விளைவுகளை உண்டாக்குவதாகவும் கருத்துக்கள் உள்ளன.
இந்த கற்களை கரைத்து வெளியேற்ற நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரெ எளிமையான இயற்கை மருத்துவ முறைகள் பலவற்றை சொல்லியுள்ளனர்.
சிறுநீரக கற்களை முற்றாக கரைத்து சிறுநீரில் வெளியேற வைக்க தினமும் காலையில் வாழை தண்டு சாறு எடுத்து ஒரு குவளை வீதம் பதினைந்து நாட்கள் அருந்தினால் எத்தகைய சிறுநீரக கல்லும் முற்றாக கரைந்து வெளியேறும் என்று சொல்லும் தேரையர், வாழைத் தண்டு சாற்றினை பதினைந்து நாள் இடைவெளியில் ஒரு தடவை வீதம் அருந்தி வருபவர்களுக்கு சிறுநீரக நோய்கள் எப்போதும் அண்டாது என்றும் சொல்கிறார்.


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 10 Jun 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


#பொண்ணுங்ககிட்ட ஏம்மா உங்களுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்னு நினைக்கிறீங்க?...

Posted: 10 Jun 2015 02:33 AM PDT

#பொண்ணுங்ககிட்ட
ஏம்மா உங்களுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்னு நினைக்கிறீங்க?
* நல்லா படிச்சிருக்கணும்.
* நல்லா சம்பாதிக்கணும்.
* நான் கேக்குறதெல்லாம் வாங்கி தரணும்.
* கோவமே படக்கூடாது.
* என் சமையல் பத்தி குறை சொல்லகூடாது.
* அடிக்கடி வெளியே கூட்டிட்டு போகணும்.
* அவரும் வீட்டு வேலைய செய்யணும்.
* எப்போமே என்னை சந்தோசமா வச்சிக்கணும்.
(53% girls are said)
#பசங்ககிட்ட
தம்பிகலா நீங்க எந்த மாதிரி பெண்னை எதிர்பாக்குறீங்க?
* வீட்டுக்கு ஏத்த மருமகளா,
* அம்மா அப்பாவே நல்லா கவணிக்கிற மாதிரி,
* என்னோட இன்ப துன்பத்துல பங்கு எடுத்துக்கணும்.
* அவ படிப்பு எதுவானாலும் ஓக்கே.
* அவ அழகு ஒரு விசயமே இல்ல.
* மொத்தத்தில் அவள் Homely Girl ஆ இருக்கணும்.
(87% Boys are said)
எல்லா பசங்கலோட எதிர்பார்ப்பும் ஒரே மாதிரி தான் இருக்கு.அதான்யா ஆம்பல சிங்கத்தின் வர்க்கம்.
என்ன தான் பசங்க சும்மா ஊர் சுத்துனாலும்,பொண்ணு பாக்கும்போது குடும்பஸ்தனா மாறிடுவாங்க.
இதை ஏற்றுகொண்டவர்கள் LIKE பண்ணுங்க.
சிங்கம் எவ்ளோ பேருனு பாக்கலாம்.


Posted: 10 Jun 2015 02:08 AM PDT


இந்த சின்ன வயசுல எவ்ளோ கஷ்ட்டத்த அனுபவிச்சிருக்கான்..!! gasp emoticon tongue emo...

Posted: 10 Jun 2015 01:53 AM PDT

இந்த சின்ன வயசுல எவ்ளோ கஷ்ட்டத்த அனுபவிச்சிருக்கான்..!! gasp emoticon tongue emoticon சிறுவனின் சோக கதையை கேட்டால் நீங்க அப்படியே ஷாக் ஆகிடுவீங்க ..என்னமா பீல் பண்ணி சொல்லுறான் பய



விழுந்து விழுந்து சிரிக்கணுமா இந்த வீடியோவை பாருங்க

Posted: 10 Jun 2015 01:39 AM PDT

விழுந்து விழுந்து சிரிக்கணுமா இந்த வீடியோவை பாருங்க



மனதார பாராட்டுங்கள்... பகவத்கீதை போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் சிறுமி ரூ.11 ல...

Posted: 10 Jun 2015 01:30 AM PDT

மனதார பாராட்டுங்கள்... பகவத்கீதை போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் சிறுமி ரூ.11 லட்சத்தை ஆதரவற்ற,ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக கொடுத்தார். உதவும் என்னம் கொண்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள்.


Posted: 10 Jun 2015 01:07 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 10 Jun 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 10 Jun 2015 12:59 AM PDT


கடை திறப்புவிழாக்கு ஒரு விசித்திரமான உடை அணிந்து பரபரப்பை கிளப்பிய நடிகை வீடியோ

Posted: 10 Jun 2015 12:10 AM PDT

கடை திறப்புவிழாக்கு ஒரு விசித்திரமான உடை அணிந்து பரபரப்பை கிளப்பிய நடிகை வீடியோ


கடை திறப்புவிழாக்கு ஒரு விசித்திரமான உடை அணிந்து பரபரப்பை கிளப்பிய நடிகை வீடியோ
www.indiasian.com
Rhea Chakraborty

Posted: 10 Jun 2015 12:06 AM PDT


Posted: 09 Jun 2015 11:05 PM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 09 Jun 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


ஜெசிக்க பாடிய முதல் திரைப்பாடல், இணையத்தில் கலக்கும் வீடியோ

Posted: 09 Jun 2015 10:10 PM PDT

ஜெசிக்க பாடிய முதல் திரைப்பாடல், இணையத்தில் கலக்கும் வீடியோ


ஜெசிக்க பாடிய முதல் திரைப்பாடல், இணையத்தில் கலக்கும் வீடியோ
www.indiasian.com
Jessica's First Movie Song

Posted: 09 Jun 2015 10:04 PM PDT


******* பாலில் கலக்கப்படும் 3 விஷ(ய)ங்களை எப்படி கண்டறிவது ? . முதல் கலப்படம் எல...

Posted: 09 Jun 2015 09:03 PM PDT

*******
பாலில் கலக்கப்படும் 3 விஷ(ய)ங்களை எப்படி கண்டறிவது ?
.
முதல் கலப்படம் எல்லோருக்கும் தெரிந்த தண்ணீர்.
.
பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை
வழ வழப்பான செங்குத்து தளத்தில் வழிய விட்டால்
தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும்
.
கலப்பட பால் எந்த அடையாளமும் ஏற்படுத்தாது
உடனடியாக வழிந்து விடும்..
.
அடுத்து பால் திக்காக தெரிய வேண்டுமென்பதற்காக
அதில் ஒரு வகை மாவு கலக்கப்படுகிறது.
.
இதைக் குடிக்கும் குழந்தைகளின் வயிறு அதோகதிதான்
.
வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை
ஒரு துளி விட்டால் அது ஷேக் மட்டும்தான் ஆகும்.
.
ஆனால் மாவு கலந்த பாலைவிட்டால் அது தரையில்
ஒட்டி நிற்காமல், உருண்டோடும்.
.
பாலில் கலக்கப்படும் மூன்றாவது விஷயம் சோப்புப் பவுடர்
.
பாலைக் கெடுத்து விடாதா என்றுதானே யோசிக்கிறீர்கள்.
.
அப்படி பால் கெட்டுப் போகாதபடிக்கு, அதை இன்னும்
சில கெமிக்கல் பிராசஸ் செய்கிறார்கள்.
.
இந்தப் பாலை கொதிக்க வைத்து ஆற்றினால் பாலில்
நுரை பொங்கி வழியும்.
.
பாலில் நுரை அதிகமாக இருந்தால் இனி உஷாராயிடுங்க..!
.
பாலில் கலப்படம் செய்வதில் உச்சக்கட்ட கொடுமையான
விஷயம் இதுதான்.
.
டிடெர்ஜென்ட் பவுடர், எண்னெய் எல்லாம் சேர்த்து
பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.
.
சில பிராண்டட் நிறுவனங்கள் எங்கள் பாலில் 100% பாக்டீரியா கிடையாது என்று விளம்பரம் செய்கின்றன.
.
உண்மையில் இது தவறு.
.
பாலின் சுவையே சில `நல்ல' பாக்டீரியாக்களால்தான்.
.
பால் பாக்கெட்டின் மீது அது பேக் செய்யப்பட்ட தேதி இருக்கும்.
பேக் செய்யப்பட்டு 2 நாட்களுக்குள் இருந்தால் மட்டும்
அந்தப் பாலை வாங்கலாம்.
.
அதற்கு மேல் என்றால் வேண்டவே வேண்டாம்!
என்று சொல்லிவிடுங்கள் ...
.
எல்லா மாடுகளுமே சிறிதளவு பாலை தன் கன்றுக்காக
மடியிலேயே நிறுத்தி வைத்துக் கொள்ளும்.
.
இயற்கை அவைகளுக்கு சொல்லிக் கொடுத்த தாய் அன்பு.
.
அந்தப் பாலையும் அதன் மடியிலிருந்து பிடுங்குவதற்கு
மாடுகளுக்கு நரம்புத் தளர்ச்சியை உண்டு பண்ணும்
ஆக்ஸிடோஸின் இன்ஜெக்ஷனை அதன் கழுத்தில் போட்டுவிட்டு
.
பிறகு பால் கறக்கிறார்கள். நரம்புகள் தளர்ந்து போன
அந்த மாட்டிடம் இருந்துவருவது பால் மட்டுமல்ல..
.
அதன் ரத்தமும் சேர்ந்துதான்!
.
இந்தப் பாலைக் குடிப்பதால் நமக்குக் கிடைப்பது
விட்டமினோ, கால்சியமோ அல்ல..
.
தீவிரமான வாதநோய்தான்!


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 09 Jun 2015 09:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]