Monday, 9 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எல்லா இடத்திலும் முகம் சுளிக்காமல் லஞ்சம் குடுத்துட்டு சாக்கடை அள்றவங்ககிட்ட போய...

Posted: 09 Mar 2015 11:24 AM PDT

எல்லா இடத்திலும் முகம்
சுளிக்காமல் லஞ்சம்
குடுத்துட்டு சாக்கடை அள்றவங்ககிட்ட
போய் 'கவர்ண்மெண்ட்
சம்பளம் குடுக்குதுல்ல?'
ன்றாங்க.

@காளிமுத்து


எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகள்(பன்னாட்டு கம்பெனிகள்) கோடிகளில் புரள...

Posted: 09 Mar 2015 07:56 AM PDT

எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகள்(பன்னாட்டு கம்பெனிகள்) கோடிகளில் புரள,,
தாய் மண்ணில் தத்தி தவழ்ந்த #விவசாயி, தெருக்கோடியில் புரள்கிறான்,

- தினேஷ்


அழகு தமிழ்நாடு! தூங்கா நகரம்!

Posted: 09 Mar 2015 06:30 AM PDT

அழகு தமிழ்நாடு! தூங்கா நகரம்!


துரத்தப்படும் இந்தியாவின் மகள்! இந்தியாவின் மகள் ஆவணப்படம் பல முறை தடை செய்யப்ப...

Posted: 09 Mar 2015 02:03 AM PDT

துரத்தப்படும் இந்தியாவின் மகள்!

இந்தியாவின் மகள் ஆவணப்படம் பல முறை தடை செய்யப்பட்டுள்ளது. யூடியூப், டேய்லி மோசன், விமோ என ஒவ்வொரு தளத்திலும் யாராவது தரவேற்றம் செய்தால் இரண்டு மணி நேரத்தில் அழிக்கப்படுகிறது. "தில்லி நீதிமன்ற வழிகாட்டுதலின் பெயரில்" என்ற குறிப்புடன் அந்த பக்கங்கள் தெரிகின்றன.

சளைக்காமல் தரவேற்றிக் கொண்டுள்ள யாரோ பலரின் உதவியால் அந்த ஆவணப் படத்தை பார்த்தேன். குற்றவாளியின் பேட்டி மட்டுமல்ல, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் அப்பா, அம்மா, நண்பன், குற்றவாளிகளின் வக்கீல்கள், வழக்கை கையாண்ட அதிகாரிகள் என அனைவரையும் பேட்டி கண்டுள்ளனர்.

போராட்டக் காட்சிகளுடன் தொடங்கும் ஆவணப்படம் ஆண்களும் பெண்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வன்முறைக்கு எதிராக முழக்கமிடுவதையும், போராட்டத்தை அடக்க தாமதமில்லாமல், தயக்கமும் இல்லாமல் காவல்துறை வந்து குவிந்ததைக் காட்டுகின்றனர். "பொறுப்புணர்வு பற்றி நீங்கள் பேசத் தொடங்கினால் அது அரசுகளை அச்சப்படுத்தும்" என்கிறார் ஒரு கருத்தாளர்.

போராட்டத்தில் பங்கெடுத்த ஒரு பெண், வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியபடி காவலர்களுடன் வாக்குவாதம் செய்ததை நினைவுகூர்கிறார்.

*
அந்தப் பெண்ணை பால் இன்பத்துக்காக பலாத்காரம் செய்யவில்லை என்பதும். இரவு நேரத்தில் ஒரு பெண் தன் நண்பனுடன் வெளியே சென்றால் அது தவறாகத்தான் இருக்கும் என்ற முன் முடிவும், அந்த முன் முடிவோடு அவளை அதட்டியபோது அவள் எதிர்த்துப் பேசுவதை பொறுக்க முடியாத ஆதிக்கமும்தான் கரணம் என்பதும் தெரிகிறது.

'பாடம் கற்பிக்கிறேன்' என்றபடி பலாத்காரத்தை தொடங்கியதாக சொல்கிறான் குற்றவாளி. அவனின் முன்முடிவு எத்தனை தவறானது, அந்தப் பெண்ணின் குடும்ப பின்னணி என்ன? மருத்துவக் கல்விக்கு தன்னை எப்படி தயார்படுத்திக் கொண்டார் என்பதையும் ஒப்பிட்டுக் காட்டுகிறது ஆவணம்.

இன்றைக்கும் பெண்கள் பற்றிய முன் முடிவுகள் பலரிடமும் நிலவுகின்றன. தில்லி பாலியல் பலாத்கார செய்தி பத்திரிக்கையில் வந்தபோதும் உண்மையை முழுமையாக அறியாமலே பலரும் பெண்ணின் நடத்தை பற்றி பேசியதை நினைத்துப் பார்கிறேன்.
ஆணாதிக்க அடிப்படையிலான இந்த முன்முடிவுகள்தான் படுகொலைக்கு காரணமாக அமைந்தன என்பதுடன், ஆவணத்தில் பலாத்காரத்துக்கு ஆதரவாக பேசியிருக்கும் அனைவரிடமும் அத்தகைய கருத்துக்கள் இருப்பதை படம் காட்டியது. "எங்கள் கலாச்சாரம் உயர்ந்தது. அதில் பெண்களுக்கு இடம் கிடையாது" என்கிறார் ஒரு வழக்கறிஞர். "என் மகளாக இருந்தாலும் பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பேன் என்கிறார் இன்னொருவர்"

*
"அவன் ஒரு சைக்கோ – கொன்று வீசுங்கள் அவனை – பிரச்சனை முடியட்டும்" என்று சுலபமாக முடியும் பிரச்சனை அல்ல பாலியல் பலாத்காரங்கள். நம் அனைவரிடமும் சகஜமாகப் புழங்கும் ஆணாதிக்கக் கருத்துகளை வீழ்த்தாமல் சாத்தியம் இல்லை. குற்றத்தையும் குற்றவாளியையும் சமூகத்தில் இருந்து தனித்துப் பார்க்க முடியாது என்று உணர்த்துகிறது.

ஆனால், இந்த ஆவணப்படத்தில் பெண்ணின் பெயரை வெளியிட்டு விட்டார்கள். குற்றவாளியை பேட்டிகண்டுவிட்டனர் என்று மட்டும் சொல்லி – தடை செய்வதில் முனைப்பாக இருக்கிறது அரசு.

நேற்று நள்ளிரவு வரையில் ஒவ்வொரு தளமாக முடக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

*
அதே சமயம் – பாலியல் கல்வியை தவறாக போதிக்கும் எராளமான இணையதளங்களும், பெண் உடலை, பாலியலை மிக மோசமான முறையில் விளக்கும் பல தளங்களும் தடை செய்யப்பட முடியாத வகையில் இன்றும் தொடர்கின்றன.

#சிந்தன்

@ மாற்று (http://maattru.com/chasing-indias-daughter/)

ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சி மாவட்டம்!

Posted: 09 Mar 2015 01:11 AM PDT

ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சி மாவட்டம்!


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


மருத்துவர் : என்ன பிரச்சினை??? பெண் : எனது மகனுக்கு பத்து வயதாகிறது... இருந்தும...

Posted: 09 Mar 2015 05:35 AM PDT

மருத்துவர் : என்ன பிரச்சினை???

பெண் : எனது மகனுக்கு பத்து வயதாகிறது... இருந்தும் வாயில் விரல் வைத்துக்கொண்டேயிருக்கிறான்.... என்ன செய்வதென்றே தெரியவில்லை...

மருத்துவர் : அவனுக்குரிய அளவினைவிட அதிக இடுப்பளவு கொண்ட ஆடையினை கொடுங்கள்...

பிரச்சினை சில மாதங்களில் சரியானவுடன்...

பெண் : எப்படி நீங்கள் இந்த யோசனையினைக் கூறினீர்கள்....???

மருத்துவர் : அந்த ஆடையின் அளவு பெரியதாக இருந்தால் அதனை சரியாக போடுவதற்கே அவனுக்கு நேரம் சரியாகயிருக்கும்... அப்படியிருக்கையில் வாயில் விரல் வைக்க அவனுக்கு தோன்றாது....

பெண்ணுக்கு மகிழ்ச்சி...

இதனை மற்றவர்களைப்போல் படித்துவிட்டு மட்டும் சென்றால் நீங்கள் சாதாரண மக்களில் ஒருவர்தான்...

எந்தவொரு கதையினைப் படித்தாலும் அதன் மூலம் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தினைப் பெற முடியுமா என்று சிந்திக்க வேண்டும்...

இக்கதையினை படித்தவுடன் எனக்குத் தோன்றியது....

வாழ்க்கையில் ஒரு பிரச்சினையில் இருக்கும்போது அதிலிருந்து எப்படி வெளிவர போகிறோம் என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்போம்... ஆனால் அதை விட பெரிய பிரச்சினை வந்தால் நமக்கு முன்னால் இருந்த பிரச்சினை எப்படி சரியானது என்றுகூட தெரியாமல் இருப்போம்...

இதைப்போல் உங்களுக்கு என்ன கருத்து தோன்றுகிறது என்பதையும், உங்களின் மனதில் தோன்றும் பிற கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்...

பா விவேக்

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


https://www.facebook.com/kmakshay.akki/posts/387707151401262

Posted: 09 Mar 2015 09:30 AM PDT

Posted: 08 Mar 2015 06:53 PM PDT


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


தெரிந்து கொள்ளுங்கள் 1. உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது" 2...

Posted: 09 Mar 2015 10:10 AM PDT

தெரிந்து கொள்ளுங்கள்

1. உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"

3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"

4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - "கொசு"

6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல்
(111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

11. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி" என்று சொல்லக் கேட்டிருப்போம்., ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்.

12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...

Relaxplzz

குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் முதலுதவி செய்வது எப்படி? குழந்தைகள் தவறுதலா...

Posted: 09 Mar 2015 09:59 AM PDT

குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் முதலுதவி செய்வது எப்படி?

குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச் சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது.

தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால், அதை எடுப்பதற்கு, 'ஹீம்லிக் மெனுவர்' ( HEIMLICH MANEUVER) என்ற செய்முறை இருக்கிறது. இந்த முதல் உதவி சிகிச்சை முறைப்படி தெரிந்தவர்கள், அதை உபயோகித்துப் பொருளை எடுக்கலாம். இல்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்குப் போய்விட வேண்டும்.

ஏனென்றால், விழுங்கிய எட்டு நிமிடங்களுக்குள் அந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நொடியும், தங்க நொடிதான். எட்டு நிமிடங்களுக்குப் பிறகும் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லவில்லை என்றால், விளைவு விபரீதம் ஆகிவிடும்.

Relaxplzz


"சுட்டீஸ் பக்கம்"

:D :D Relaxplzz

Posted: 09 Mar 2015 09:55 AM PDT

சாதாரண மனிதன், யோசிக்கும்போது தூங்குவான்....... சாதனை மனிதன், தூங்கும்போதும் யோ...

Posted: 09 Mar 2015 09:50 AM PDT

சாதாரண மனிதன்,
யோசிக்கும்போது தூங்குவான்.......

சாதனை மனிதன்,
தூங்கும்போதும் யோசிப்பான்.......
..
..
..
..
..
..
..
#:P :P
இப்ப தெரியிதா ஏன் வகுப்பறையில் மாணவன் தூங்குகிறான் என்று....

- Yogesh

எழுதப்பட்ட காகிதமாய் இருக்காதீர்கள் வரையப்பட்ட ஓவியமாய் இருங்கள் புன்னகையோடு

Posted: 09 Mar 2015 09:45 AM PDT

எழுதப்பட்ட காகிதமாய் இருக்காதீர்கள்

வரையப்பட்ட ஓவியமாய் இருங்கள் புன்னகையோடு


<3 Relaxplzz

Posted: 09 Mar 2015 09:40 AM PDT

அழகு... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 09 Mar 2015 09:35 AM PDT

அழகு...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


:) Relaxplzz

Posted: 09 Mar 2015 09:32 AM PDT

அம்மா!!புலி வருது... :P :P

Posted: 09 Mar 2015 09:22 AM PDT

அம்மா!!புலி வருது... :P :P


:( Relaxplzz

Posted: 09 Mar 2015 09:16 AM PDT

சிரிக்க சிந்திக்க ஒரு குட்டிக்கதை ஒருத் துறவியும் அவரது சீடர்களும் ஒரு ஆற்றின்...

Posted: 09 Mar 2015 09:10 AM PDT

சிரிக்க சிந்திக்க ஒரு குட்டிக்கதை

ஒருத் துறவியும் அவரது சீடர்களும் ஒரு ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறுக்கரைக்கு சென்றுக் கொண்டிருந்தார்கள். நீர் கழுத்தளவு ஓடிக்கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த ஒரு இளம்பெண் அக்குழுவினரை நோக்கி "யாராவது என்னை அந்தப் பக்கம் சேர்த்து விடுங்கள் எனக்கு நீரில் செல்ல அச்சமாக உள்ளது என்றாள்.

நாங்கள் துறவறம் மேற்கொண்டுள்ள்ளோம் பெண்களை தொடக்கூடாது அது பாவமானக் காரியம் என்று அவளை சீடர்கள் அனைவரும் விரட்டினர் அவள் மீண்டும் மீண்டும் கெஞ்சினாள். அனவரும் விரட்டவே தலைமை துறவியிடம் கெஞ்சினாள். சீடர்கள் துறவியிடம் நாம் அனைவரும் துறவறம் மேற்கொண்டுள்ளோம் நீங்கள் அப்பெண்ணை தொடக்கூடாது அது பாவமானக் காரியம் என்று அவரையும் தடுத்தார்க்கள்.

துறவி அனைவரையும் பார்த்தார். பின் தன் இருக்கரங்களால் அப்பெண்னை உயரே தூக்கி தலைக்கு மேலே பிடித்தவாறு வேகமாக நடந்து ஆற்றைக் கடந்தார். சீடர்களும் தங்களுக்குள் துறவியின் செயலைக் கண்டித்தவாறே அவரைப்பின் தொர்டந்து ஆற்றின் அக்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

கரையில் அவளை துறவி இறக்கி விட்டு தன் சீடர்களுடன் பயணத்தை மௌனமாகத் தொடர்ந்தார். சீடர்கள் தலைமைத் துறவியிடம் "என்ன இருந்தாலும் நீங்கள் அந்தப் பெண்ணை தூக்கியிருக்ககூடாது" அது நமது கொள்கைகளுக்கு விரோதம் என்று வெகு நேரமாகசொல்லியவாறே வந்தனர்.

அப்போது திடீரென்று துறவி நின்றார். பின் தம் சீடர்களை நோக்கி "நான் எப்போதோ அந்த சுமையை இறக்கிவிட்டு விட்டேன். நீங்க அனைவரும் இன்னும் ஏன் சுமந்து வந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுக் கேட்டார்.

அவர் கூற்றில் இருந்த உண்மை அவர்களுக்கு அப்போது தான் உரைத்தது. தாங்கள் மனதளவில் பக்குவமடையாததையும் துறவி தன் மனதால் அப்பழுக்கற்றவராய் இருப்பதையும் உணர்ந்தனர். அவரிடம் தங்கள் செயலுக்கு மன்னிப்ப்பு கோரினர்.

கதையின் நீதி: நாம் செய்யும் எந்த செயலும் அதில் நியாமும் நீதியும் இருந்தால் அதை நிறைவேற்றிவிட்டு நம் கடமையை எப்போதும்போல் செய்யவேண்டும். அதுதான் இறைவனுக்கு உகந்தக் காரியம் ஆகும்

Relaxplzz

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...! 1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்த...

Posted: 09 Mar 2015 09:00 AM PDT

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...!

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி விடாதீர்கள்.

13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன்.

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும்,கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

Relaxplzz


"சிந்தனைகள்"

(y) Relaxplzz

Posted: 09 Mar 2015 08:54 AM PDT

நேற்று பெண்கள் தினம் என்பதுகூட தெரியாமல் கடந்து இருக்கும் ஏழை அடித்தட்டு பெண்களு...

Posted: 09 Mar 2015 08:50 AM PDT

நேற்று பெண்கள் தினம் என்பதுகூட தெரியாமல் கடந்து இருக்கும் ஏழை அடித்தட்டு பெண்களுக்கு நமது முதற்கண் வாழ்த்துக்கள்...

இவர்களுக்காக கொண்டாட வேண்டும் தினம் தினம் பெண்கள் தினம்...

(y) (y)


நானும் ஆபிஸ்ல தீயா வேலை செய்யனும்னு தான் பாக்கறேன். * * * * * * * * * * * * * ஆன...

Posted: 09 Mar 2015 08:45 AM PDT

நானும் ஆபிஸ்ல தீயா வேலை செய்யனும்னு தான் பாக்கறேன்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஆனா.. ஆபிஸ் எரிஞ்சிடுமேன்னுதான் பயமா இருக்கு…!!

பள்ளிக் காலத்தில் இதை வைத்து விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 09 Mar 2015 08:40 AM PDT

பள்ளிக் காலத்தில் இதை வைத்து விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 09 Mar 2015 08:31 AM PDT

பணம் பத்தும் செய்யும் :)

Posted: 09 Mar 2015 08:20 AM PDT

பணம் பத்தும் செய்யும் :)


கல்யாணம் கட்டிக்கப்போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது......

Posted: 09 Mar 2015 08:10 AM PDT

கல்யாணம் கட்டிக்கப்போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது....

காலங்காலமா புருசன் வீடு போகப்போற பொண்ணே....ன்னுதான் பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கோம் நாம... ஆனா, பசங்க என்ன பண்ணனும்கறத கண்டுக்கறதே இல்ல...

5 Marriage Lessons that Mothers Should Give to their Sons

1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே
கூடாது....

மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில்,
20 ஆண்டுகால அனுபவம் இருக்கு.. ஆனா உன் மனைவி உன்னை மாதிரிதான்..இந்த வாழ்க்கைக்கு புதுசு..உன்னை நான் வளர்த்த மாதிரிதான்... அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க... அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும்... அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்...

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி...

மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி ...அம்மா இல்லை .
உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும்தான் வேலை... ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்டா....

3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...

மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள்... அவளை மதிக்கவேண்டும்.. உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து...வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருடா...

4. புகுந்த வீடு வந்த மனைவியை..இயல்பாக உணர வைக்க
உதவி செய்யணும்..

பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்டா...

5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்....

காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...

ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்டா.....

உங்க அப்பா என்னை எப்படி நடத்தறாரோ...அதுபோல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்துடா மகனே..

உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்....!!!!

நன்றி Selvi Shankar

Relaxplzz

இவர் பேரு டாக்டர். ராமசாமி.. எங்க தென்காசி ஊர்க்காரர் தான்.. கவர்மெண்ட் டாக்டர...

Posted: 09 Mar 2015 08:00 AM PDT

இவர் பேரு டாக்டர். ராமசாமி.. எங்க தென்காசி ஊர்க்காரர் தான்..

கவர்மெண்ட் டாக்டராக இருந்து ரிட்டையர்ட் ஆனவர். எங்க ஊருக்கே குடும்ப டாக்டர் இவர் தான்.. டாக்டர் பீஸ் வெறும் 10 ரூபாய்தான்.. கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் கஷ்டப்படுறவங்களுக்கு உதவணும்னு இந்த சேவையை செய்து வருகிறார்..

5 நிமிடம் பார்க்கவே, 500 ரூபாய் வசூலிக்கும் டாக்டர்களிடையே, சேவை மனப்பான்மையோடு, அனைத்து நோயாளிகளுக்கும் மனம் கோணாமல் சிகிச்சை அளிக்கிறார்..

- Ambuja Simi

Relaxplzz


"அழகு தமிழ்நாடு" பத்மனாதபுரம் அரண்மனை, குமரி மாவட்டம்

Posted: 09 Mar 2015 07:54 AM PDT

"அழகு தமிழ்நாடு"

பத்மனாதபுரம் அரண்மனை, குமரி மாவட்டம்


"அழகு தமிழ்நாடு"

ஒரு இந்தி காரன் வந்து பக்கத்து தெருவுக்கு வழி கேட்டான்... . . உதர் சைடு லெப்டு உ...

Posted: 09 Mar 2015 07:45 AM PDT

ஒரு இந்தி காரன் வந்து பக்கத்து தெருவுக்கு வழி கேட்டான்...
.
.
உதர் சைடு லெப்டு உதர் சைடு..ரைட்டு ன்னேன் ...
.
கியா கியா..ன்னான் ...
.
இந்தி ஒழிக..ன்னுட்டு கெளம்பிட்டேன்
.
யாருகிட்ட... :P :P

- ரிட்டயர்டு ரவுடி

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 09 Mar 2015 07:40 AM PDT

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 09 Mar 2015 07:33 AM PDT

கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P 1) போலிஸ் : திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல தி...

Posted: 09 Mar 2015 07:20 AM PDT

கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P

1) போலிஸ் : திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?

வீட்டுக்காரன் : சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா!

போலிஸ் : ????

2) மனைவி : ''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...''

கணவன் : ''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது...''

மனைவி : ????

3) மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!

ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!

மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

ஆசிரியர் : ????

4) டைரக்டர் : இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.

ஹீரோ : எனக்கு நீச்சல் தெரியாதே.

டைரக்டர் : கவலைப்படாதீங்க சார்…குளத்துல தண்ணியே இருக்காது.

ஹீரோ : ????

5) நபர் 1 : உங்கள் சொந்த ஊர் எது?

நபர் 2 : அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லங்க,
சொந்த வீடுதான் இருக்கு.

நபர் 1 : ???

6) நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?

குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க...

நீதிபதி: ????

Relaxplzz

:) Relaxplzz

Posted: 09 Mar 2015 07:11 AM PDT

கதைசொல்றேன் வாங்க.. இது புதுக்கதையில்லைங்க. நம்ம தமிழ்சினிமாவுல 90கள்ல வந்த பெ...

Posted: 09 Mar 2015 07:02 AM PDT

கதைசொல்றேன் வாங்க..

இது புதுக்கதையில்லைங்க.

நம்ம தமிழ்சினிமாவுல 90கள்ல வந்த பெரும்பாலானபடங்களோட கதையத்தாஞ்சொல்லப்போறேன்.

பச்சைப்பசேல்னு ஒரு கிராமம்.

அந்தகிராமத்துல ஒரேயொரு பெரியவீடு.

அட.. அது நம்ம பண்ணையாரோடவீடு.

அவருக்கு ரெண்டுபசங்க.

ரெண்டுபேருமே தடித்தாண்டவராயனுங்களா இருப்பாங்க.

ஊர்ல நடக்குற எல்லா அட்டூழியத்துக்கும் அவங்கதான் காரணமாயிருப்பாங்க.
நிச்சயமா, நாலஞ்சு பொண்ணுங்களே நாசமாக்கியிருப்பானுங்க.

அவங்களுக்கு அழகா ஒரு தங்கச்சி.

அட.. அவங்கதாங்க நம்ம ஹீரோயின்.

அவங்க, நிச்சயமா வெளியூர்ல காலேஜ்படிப்புமுடிச்சிட்டு,
அவங்களோட காலேஜ்ஃபிரண்ட்ஸ்களோட
ஒரு நீளமானகார்ல ஊருக்கு வருவாங்க.

மிடிதான் போட்டுருப்பாங்க.

அந்த ஃப்ரெண்ட்ஸ்குரூப்ல நிச்சயமா ஒரு பொண்ணு ரொம்ப குண்டாயிருப்பாங்க.

இனிமேதாங்க கதையே.

அந்த கார் வர்றவழியில ஒருத்தருமேல சேத்தை வாரியெறைச்சிடும்.
இல்லாட்டி, ஒரு வயசானவர்மேல லேசா இடிச்சிடும்ங்க.

நாம அப்படியே துடிச்சிப்போவோம்.

வண்டி இடிச்சிட்டு நிக்காம போய்ட்டேயிருக்கும்.

அதாவது, அவங்க திமிர்பிடிச்சவங்கனு நமக்கு சொல்லாமசொல்றாங்களாம்.

அப்போதான் நம்ம ஹீரோ என்ட்ரியாவாரு.

அந்த காரைவழிமறிச்சி, வண்டியிலவுள்ள பொண்ணுங்களையெல்லாம் வெளியில இழுத்துவிட்டு ஒரு பாட்டு.

அந்தப்பாட்டுல, ஹீரோயின் ஹீரோவை முறைக்கிறதும், கைய நீட்டிநீட்டி ஏதோ சொல்லவர்றதும் செம தமாஸாருக்கும்.

பாட்டு முடியும்போது ஹீரோயின் சேத்துல விழுந்துடுவாங்க.

அட... இதத்தான் ரீவேன்ஜ்..னு சொல்றாங்க.

யூ...யூ... ப்ளட்டி..இடியட்..னு திட்டிக்கிட்டே வண்டியை எடுத்துகிட்டு அந்த சேறுபடிஞ்ச ட்ரெஸ்ஸோட வீட்டுக்குள்ள நுழைவாங்க.

டாடி....

என்னம்மா ஆச்சு.. ஏன் இப்படி ட்ரெஸ்பூரா சேறு..?

வழியில ஒருத்தவன் எங்களை அவமானப்படுத்திட்டான் டாடி..

ஒடனே பண்ணையாரு ஒரு சவுண்டு விடுவாரு.

சட்டுனு அந்த ரெண்டு அண்ணனுகளும் என்ட்ரியாவாங்க.

யாருடா அவன் நம்ம பொண்னுகிட்டையே வம்பிழுத்தது?

உடனே ஹீரோயின், ஹீரோபத்தின அடையாளத்தை சொல்லுவாங்க.

ஓ.. அவனா..!
அவனுக்கு நம்மகிட்ட வம்பிழுக்குறதே பொழப்பாகிட்டுனு ஹீரோவ பழிவாங்க ப்ளான்போடுவாங்க பாருங்க..
அதுதாங்க சொச்சகதை.

ஏன்னா, ஏற்கனவே நம்ம ஹீரோவுக்கும் பண்ணையாரேட பசங்களுக்கும் நெறையா வம்புதும்பு இருந்திருக்கும்ங்க.

அப்படியே ஹீரோ ஸைடுக்குப்போனா...

ஹீரோவுக்கு அம்மா, தங்கச்சி.
சின்ன குடிசைவீடு.
ஹீரோவ சுத்தி நாலஞ்சு சின்னப்பசங்க.

இதுக்கு இடையில அந்த வில்லன்-பண்ணையாருபசங்க போடுற எல்லா ப்ளானையும் நம்ம ஹீரோ தவிடுபொடியாக்குவாரு.

அவரு நல்லவருனு அப்போதான் நம்ம ஹீரோயின் அம்மணிக்கு தெரியவரும்.
அதை யார்சொல்வா தெரியுமா?
ஹீரோயினோட அம்மா.

அப்புறமென்ன...
ஒருதலைக்காதல்தான்.

கனவுலயே ரெண்டு டூயட் முடிஞ்சிடும்.

அப்பவும் ஹீரோ காதலை ஏத்துக்கமாட்டாரு.

ஒடனே, ஹீரோயின் அவங்கவீட்டு அடுப்பாங்கரைக்கு போவாங்க.

அங்க, "விஷம்"னு எழுதி ஒட்டின ஒரு பாட்டிலிருக்கும்.

அதை குடிச்சிருவாங்க.

இந்தவிஷயம் நம்ம ஹீரோவுக்கு தெரிஞ்சிடும்.

நிச்சயமா அவரு அப்போ வயல்ல வேலைபார்த்துட்டுருப்பாரு.

வேலைய அப்படியேபோட்டுட்டு
வரப்புல ஓடிவருவாரு.

அதுக்குள்ள,
வைத்தியர் நம்ம ஹீரோயினுக்கு மாத்துமருந்துகொடுத்து காப்பாத்தியிருப்பாரு.

ஹீரோயின் கண்ணுமுழிச்சி பாப்பாங்க.
எதிர்ல நம்ம ஹீரோ.

அப்புறமென்ன..?

ஒரு பாட்டு.

அந்தப்பாட்டுல,
ஹீரோ எப்போ என்கிட்ட உன்னைய குடுப்பேனு கேக்குறமாதிரியும், உடனே ஹீரோயின், "கழுத்துல மாலையப்போட்டா நா ஒனக்கு சொந்தம்"னு சொல்றமாதிரியும்
வரி வரும்.
அதாவது, ஹீரோயின் நம்ம பண்பாட்டோட சின்னமாம்.

கதை அப்படி இப்படினு க்ளைமேக்ஸ்க்கு வந்துடும்ங்க.

வில்லனுகளோட செமத்தியான ப்ளான் அப்போதான் இம்ப்ளிமெண்டாகும்.

என்னா ப்ளான் தெரியுமா?

நம்ம ஹீரோவோட குடும்பத்தை காட்டுலவுள்ள பாழடைஞ்ச பங்களாக்குள்ள கட்டிப்போட்ருவாங்க.

இந்த விஷயத்தை ஹீரோயினோட தோழிமூலமா ஹீரோவுக்கு தெரியவரும்.

அவ்வளவுதான்.

எப்படியாயிருந்தாலும் ஹீரோதான் ஜெயிப்பாருனு தெரிஞ்சும் நாம வெட்கங்கெட்டத்தனமா அடுத்து என்னநடக்கும்னுதெரியாதமாதிரியே பார்த்துட்டுருப்போம்.

ஹீரோ ஓடுவாரு.

கேமரா, அவரோட காலையே காட்டுவாங்க.

அங்க பங்களாவுல, ஹீரோவோட அம்மா, தங்கச்சிய கட்டிப்போட்டு அவங்க வாய்ல ப்ளாஸ்த்ரிய ஒட்டி, அவங்கமேல மண்ணெண்ணைய ஊத்துவாங்க.

செமையான பேக்ரௌண்டு மியூசிக்.

பங்களாவாசல்ல நாலஞ்சு அடியாளுங்க.
ஒரு அஞ்சுநிமிஷம் சண்டை.

எல்லாரையும் அடிச்சிநொறுக்கிட்டு நம்ம ஹீரோ பங்களாகதவை ஒடச்சிகிட்டு உள்ளபோவாரு.

உள்ளபோனா எக்கச்சக்க அடியாளுங்க.

அவங்ககூட சண்டைபோட்டுகிட்டே அம்மாவையும் தங்கச்சியையும் அவுத்துவிட்டுடுவாரு.

அப்புறமென்ன..!

அவங்களும் களத்துல எறங்கிடுவாங்க.

அப்போ, அடியாளுங்கள்ல
ரெண்டுமூனு காமெடி பீஸுங்க இருப்பாங்க.

அவங்களோட இவங்க சண்டைபோடுவாங்க.

சிரிப்புமூட்டுறாங்களாம்.

கடைசியா ஒருவழியா எல்லா அடியாளுங்களையும் அடிச்சிநொறுக்கிட்டு வில்லனுகளையும் துவம்சம்பண்ணிட்டு பண்ணையாரை கொல்லபாப்பாரு நம்ம ஹீரோ.

அப்போதான் ஹீரோவோட அம்மா கத்துவாங்க...
தம்பி... அவர கொன்னுடாதப்பா..
அவரு யாருதெரியுமா..னு ஒரு ஃப்ளாஷ்பேக்.

பண்ணையாரும், ஹீரேவோட அம்மாவும் அண்ணன்-தங்கைனு நம்மளை திகைக்கவச்சிடுவாங்க.

அப்போதான் நம்ம ஹீரோயின் வருவாங்க.

அத்தைனு..கட்டிபிடிச்சிப்பாங்க.

ஹீரோவும் பண்ணையாரை மன்னிச்சுடுவாரு.

எல்லாரும் ஒட்டுமொத்தமா நின்னு குரூப்ஃபோட்டாவுக்கு போஸ்குடுக்குறமாதிரி போஸ்குடுத்துகிட்டே வணக்கம்சொல்வாங்க.

அம்புட்டுதேன்.

இப்படிசொல்றதால நம்ம தமிழ்சினிமாவை கிண்டல்பண்றதா அர்த்தமில்லீங்க.

இந்தமாதிரி சராசரிகதைகளில்லாம எவ்வளவோபடங்கள் வந்துச்சு.

அந்தமாதிரியானபடங்களையெல்லாம் அடிச்சுக்கவேமுடியாதுங்க.

என்ன... நாஞ்சொல்றது சரிங்களா..?

- ஃபீனிக்ஸ் பாலா

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 2

இது போன்ற வேலைகளை எல்லா சாதியினரும் செய்யும் நாளில் இடஒதுக்கீட்டை ரத்து செய்யலாம...

Posted: 09 Mar 2015 06:50 AM PDT

இது போன்ற வேலைகளை எல்லா சாதியினரும் செய்யும் நாளில் இடஒதுக்கீட்டை ரத்து செய்யலாம்...


"ரிலாக்ஸ் ப்ளீஸ்" பக்கம் 3லட்சம் வாசக நண்பர்களை கடந்து பயணிக்கின்றது.. இதை சாத்த...

Posted: 09 Mar 2015 06:45 AM PDT

"ரிலாக்ஸ் ப்ளீஸ்" பக்கம் 3லட்சம் வாசக நண்பர்களை கடந்து பயணிக்கின்றது.. இதை சாத்தியப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.. இணைந்திருங்கள்...

அனைவருக்கும் மிக்க நன்றி


ஹெட்ஃபோனில் நாய்க்குட்டி !!! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 09 Mar 2015 06:40 AM PDT

ஹெட்ஃபோனில் நாய்க்குட்டி !!!

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


சும்மா... சும்மா... 1