Thursday, 7 August 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சமஸ்கிரத மொழியே இந்தியாவின் 'ஆன்மா'. அதை கட்டாயப் பாடமாக்க சட்டம் உருவாக்கப்பட்ட...

Posted: 07 Aug 2014 08:40 AM PDT

சமஸ்கிரத மொழியே இந்தியாவின் 'ஆன்மா'. அதை கட்டாயப் பாடமாக்க சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது !

சென்ற மாதம் 25 ஆம் தேதி இந்திய பாராளுமன்றத்தில் சமஸ்கிரத மொழியை இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாயப்பாடமாக்க ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது இந்திய அரசு. அதை இந்திய அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. சம்ஸ்கிருத மொழியே இந்தியாவின் 'ஆன்மா' என்றும் அது தான் இந்திய பண்பாட்டையும் வேர்களையும் தாங்கி நிற்கக் கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு சமஸ்கிருத மொழி ஊக்குவிப்பு சட்டம் என்ற பெயரை வைத்துள்ளது இந்தி அரசு.

இது நாள் வரை இந்தியை மட்டுமே இந்தி அல்லாத மக்களிடம் திணித்து வந்த இந்திய அரசு இனிமேல் சமஸ்கிருத மொழியையும் பலமாக திணிக்கும் வேலையை தொடங்கிவிட்டது. இந்தியாவின் முதல் செம்மொழியான தமிழ் மொழியை ஊக்குவிக்க எந்த செயல் திட்டமும் இந்திய அரசுக்கு இல்லை . மாறாக தமிழர்கள் அனைவரும் சமஸ்கிருதம் , ராமாயணம் , மகாபாரதம், வேதங்கள் முதலிய ஆரிய நூல்களை கட்டாயமாக பயில வேண்டும் என்ற திட்டத்தை வலுக்கட்டாயமாக திணிக்கிறது இந்தியம். இந்த சட்டத்தை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டம் இயற்றி உள்ளது. விரைவில் இந்த சட்டத்தை முன்னெடுக்க அனைத்து மாநில அரசுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் எனத் தெரிகிறது .

வழக்கம் போல் இந்த அநீதிக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூடிய ஒரே இனம் தமிழினம் தான் !

https://docs.google.com/file/d/0B6AdL-KjqrPpQlRlaGRaMU1aaUE/


:(

Posted: 07 Aug 2014 08:40 AM PDT

:(


பாகிஸ்தான் எல்லைக்குள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தா...

Posted: 07 Aug 2014 08:30 AM PDT

பாகிஸ்தான் எல்லைக்குள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் பிடித்து சென்றுள்ளது.
அந்த ராணுவ வீரரை மீட்க விரைந்து இந்திய ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியுடன் கொடி அமர்வு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

# ஒரு ராணுவ வீரரை காப்பாற்ற இந்த அளவுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் இந்தியாவின் முயற்சி நல்ல விஷயம்தான்.ஆனால் இலங்கை ராணுவம் தமிழக மீனவனை சுட்டு கொன்றாலும், அடித்து துன்புறுத்தினாலும் எருமை மாட்டு மேல மழை பெய்த மாதிரி தேமேன்னு இருக்கீங்களே ஏன்?

உங்க ராஜதந்திரத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் பிரதமரை கூப்பிட்டு விருந்து கொடுத்து அந்த ராணுவ வீரனை காப்பாற்றலாமே?

ஏற்கனவே இலங்கைக்கு விருந்துகொடுத்த முன் அனுபவம் இருக்கே!

@நம்பிக்கை ராஜ்

காங்கிரஸ் அரசைப்போல் பாஜக அரசை நினைக்க வேண்டாம் - நவீன நாசா பொன்.ராதாகிருஷ்ணன்...

Posted: 07 Aug 2014 06:47 AM PDT

காங்கிரஸ் அரசைப்போல் பாஜக அரசை நினைக்க வேண்டாம் - நவீன நாசா பொன்.ராதாகிருஷ்ணன்

# அவுங்க வெறும் குமாரு, நீங்க சுமார் மூஞ்சி குமாரு!

- நம்பிக்கை ராஜ்

இலங்கை ராணுவத்தில் புதிதாக நாய் படை சேர்ப்பு - செய்தி. இலங்கைக்கு எப்போதும் இல்...

Posted: 07 Aug 2014 06:16 AM PDT

இலங்கை ராணுவத்தில் புதிதாக நாய் படை சேர்ப்பு - செய்தி.

இலங்கைக்கு எப்போதும் இல்லாத ஆதரவை வழங்குவோம் -சுப்பிரமணிய சாமி.

இரண்டும் வேறு வேறு செய்தி

- பூபதி முருகேஷ்

ராஜபக்‌சவை இடித்தால் சுப்பிரமணியன் சுவாமிக்கு வலிப்பதேன்!? வரலாற்றின் குப்பைத்...

Posted: 07 Aug 2014 06:08 AM PDT

ராஜபக்‌சவை இடித்தால் சுப்பிரமணியன் சுவாமிக்கு வலிப்பதேன்!?

வரலாற்றின் குப்பைத் தொட்டியை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு, வலியப் போய் மலர் மாலைகள் சூட்டவிருக்கிறது இந்தியா. ராஜபக்சவை உலகின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கும் போது, அவரிடம் இராணுவப் பாடம் கேட்பதற்குத் தயாராகிறது இந்தியா.

இந்த மாதம் 18-20 தேதிகளில், கொழும்பில் நடக்கும் இராணுவக் கருத்தரங்குக்கு இந்தியப் பிரதிநிதிகள் செல்லப் போவதாகத் தகவல். செப்டம்பர் மாதம் 18-21 தேதிகளில், ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு ஒன்றைக் கூட்டி, 'ஆசிய சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புதல்' என்பது பற்றி பேச இருக்கிறார் ராஜபக்ச. போகிற போக்கைப் பார்த்தால், அதற்கும் பா.ஜ.க தனது பிரதிநிதியை அனுப்பக்கூடும்போல.

இராணுவக் கருத்தரங்கம், அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு... என்றெல்லாம் நடத்துவதற்கான தேவை ராஜபக்சவுக்கு இருக்கிறது. ஏனெனில், ஐக்கிய நாடுகள் சபை தன் விசாரணை ஆணையத்தை அமைத்துவிட்டது.

ராஜபக்ச வலிய வலிய பல நாடுகளுக்குச் சென்று கை குலுக்கினாலும், ஐ.நா வாக்கெடுப்பில் அவர்களுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கின்றன.

அமெரிக்கா பக்கம் போகவே முடியவில்லை. லண்டனுக்கு ஒரு தடவை சென்ற போது, தலைமறைவாகத் தப்பி வந்ததே பெரும்பாடு ஆகிவிட்டது. கனடா, விசா தரத் தயங்குகிறது.

கொமன்வெல்த் போட்டிகளைப் பார்க்க ஏன் போகவில்லை? என்று கேட்டால், 'பாதுகாப்புக் காரணங்களுக்காக' என்று எழுதுகின்றன கொழும்பு பத்திரிகைகள்.

இந்தியாவுக்குள் வந்து போனாலும் ஏராளமான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி சொந்த தேசத்துக்குள் முடங்கிக்கிடக்கிறார் ராஜபக்ச.

சரி, இலங்கைக்குள் அமைதியாக இருக்க முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் என்பதால், அலரி மாளிகையில் அலறல் சத்தம் அதிகமாகக் கேட்கிறது.

இதுவரை புலிப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த ராஜபக்சவால், போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும் இலங்கை மக்களுக்கு எந்த சுபிட்சத்தையும் காட்ட முடியவில்லை.

கடன்... கடன்... மேலும் கடன்'. நாடே கடனில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. குடியானவனின் கஞ்சிக் கலயத்தையும் பறிக்கும் நோக்கத்தோடு பண்ணையார்கள் கடன் கொடுப்பதைப் போல, இலங்கைக்கு சீனா சில்லறைகளை வீசி வருகிறது.

வட்டி கட்ட முடியாத நிலையில், திருகோணமலைப் பகுதியில் 1,200 ஏக்கர் நிலத்தை சீனாவுக்குத் தாரை வார்த்துவிட்டார்கள். எல்லா இடங்களிலும் சீனத் தொழிலாளர்கள் வந்து விட்டதால், சிங்களத் தொழிலாளர்கள் சினத்தோடு திரிகிறார்கள்.

ராஜபக்ச சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர். பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய தேசியக் கட்சி. அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இப்போது எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டார். 'கடந்த காலங்களில் இந்து மகா சமுத்திரத்தின் நித்திலம் என்றும் தர்ம தீபம் என்றும் வர்ணிக்கப்பட்ட நம் நாடு, இன்று உலகின் இழிவான நாடுகளின் வரிசையில் இணைந்துவிட்டது' என்று பிரசாரம் செய்கிறார் ரணில்.

ராஜபக்சவின் கூட்டணிக் கட்சிகள், விலக நேரம் பார்த்து வருகின்றன. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிலரே, ஆட்சிக்கு எதிராகக் கருத்துகள் சொல்லி வருகிறார்கள்.

'இருளை எதிர்க்கும் உங்களுக்கு' என்று ஜூலை 31-ம் தேதி நள்ளிரவில் சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் நாடு முழுக்க போஸ்டர் ஒட்டினார்கள் சிலர். அந்தச் சிலர் யார் என்றே ஆட்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 'முதலாம் முன்னணி' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் 'நாங்கள்தான் ஒட்டினோம்' என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணிலைச் சந்தித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ராஜபக்ச இப்போது இருக்கும் சுதந்திர கட்சி, சந்திரிகா குமாரதுங்காவின் அப்பா ஆரம்பித்தது. சந்திரிகாவை விரட்டிவிட்டு மகிந்த சகோதரர்கள் கட்சியைக் கைப்பற்றி விட்டார்கள். அதனால், அவர்களைக் கவிழ்க்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு இருக்கிறார் சந்திரிகா.

பல்வேறு சர்ச்சைகளுக்கு அடித்தளமிட்ட பெண் நீதிபதி ஷிராணியைப் பொது வேட்பாளராக நிறுத்த பலரும் முயற்சித்து வருகிறார்கள். 'மகன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி ஆக்குங்கள்' என்று மகிந்தாவின் மனைவி சிராந்தி கோரிக்கை வைக்கிறார். மகிந்தாவின் தம்பிகளான பஷில், கோத்தபாயவுக்கும் - சிராந்திக்குமான யுத்தத்தின் வெளிப்பாடு இது.

இப்படி எல்லா வலிகளும் உடம்பில் வந்த பிறகு அத்தனையையும் மறைக்க, சண்டையையே சாதனையாகக் காட்டி மொத்தத்தையும் திசை திருப்ப நினைக்கும் ராஜபக்சவின் தந்திரம்தான் இராணுவக் கருத்தரங்கமும், ஆசிய அரசியல் கட்சிகளின் ஆலோசனையும். இதில் இந்தியா கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?

'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்று சொல்லிவிட்டு அப்பாவி மக்களை வாழைக்குலைகளைப் போல வெட்டிச் சாய்த்த இரக்கமற்றவர்களிடம் இரத்தப் பாடம் கற்றாக வேண்டுமா?

போர் நடக்காத நாடு எதுவும் இல்லை. ஆனால், போர் நெறிமுறைகள் அனைத்தையும் மீறி நடந்த அக்கிரமப் போர் அவர்கள் செய்தது.

மருத்துவமனைகள், பள்ளிகள் மீது கொத்துக் குண்டுகளைப் போட்டு, தடை செய்யப்பட்ட வெள்ளை பொஸ்பரஸை மக்கள் வாழும் பகுதியில் வீசி, பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தவர்கள் அவர்கள்.

2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட கணக்கின்படி வன்னிப் பகுதி மக்கள் தொகை, 4,29,059. 2009-ம் ஆண்டு மே மாதம் போர் முடிந்த பிறகு முகாம்களுக்குத் திரும்பியவர்கள் 2,82,380. மீதம் உள்ள 1,46,679 பேரைத் துள்ளத் துடிக்கக் கொன்று குவித்தவர்கள் அவர்கள்.

அட தமிழர்கள் சொல்வதை நம்ப வேண்டாம். ஐ.நா அமைத்த குழுவில் இந்தோனேசியாவைச் சேர்ந்த மார்சுகி தாருஸ்மான், ஐக்கிய அமெரிக்கர் ஸ்டீவன் ரட்னர், தென் அமெரிக்கர் யஸ்மின் சூக்கா ஆகியோர் கூறுவதை நம்பலாமே!

இவர்கள் அளித்த அறிக்கையில், 'சிறு குழந்தைகளின் உடல்கள் சிதறி மேலே மரங்களில் சிக்கிக்கொண்டிருந்தன' என்று சொல்லப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு, புது மாத்தளன், முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகள் மீது ஒவ்வொரு நாளும் எத்தனை தடவை குண்டு வீசப்பட்டன என்று அந்த அறிக்கையில் உள்ளது.

ஒரே நாளில் ஒன்பது முறை புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது குண்டுகள் வீசப்பட்டன.

மருத்துவமனைகள், கோவில்கள், பள்ளிகள் மீது குண்டு வீசக் கூடாது என்பதுதான் முதல் பாடம். அதையே மீறிய கொடூரர்களிடம் என்ன பாடம்?

கொலை செய்யப்படும் முன் அல்லது பின் வன்புணர்ச்சி அல்லது பாலியல் வன்முறை நிகழ்ந்திருக்கலாம் என்ற உறுதியான ஊகத்தை ஏற்படுத்துகிறது' என்று ஐ.நா அறிக்கை சொல்கிறது.

மகளையும் தாயையும் ஒரே நேரத்தில் நிர்வாணமாக்கி பாலியல் வேட்டையாடிய பாவிகள். வன்புணர்ச்சி செய்து கொன்ற காட்சியை ஒளிபரப்பிய சனல் 4, கொல்லப்பட்ட உடலின் பெண் உறுப்பில் துப்பாக்கியை நுழைத்து 'பாலியல் அசைவுகளை' மேற்கொண்டதைக் காட்டத் தயங்கியது.

நாடு முழுக்க நடந்தது நரபலி. அதுவும் இனப் பலி!

இப்போதும் அங்கு நிலைமை எதுவும் மாறிவிடவில்லை. வானத்தில் இருந்து கொத்துக் குண்டுகள் வீசவில்லையே தவிர, போர் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இப்போது நடப்பது உளவியல் போர். உணர்வற்ற பிண்டங்களாக தமிழர்களை மாற்றும் போர். உடம்பில் உயிர் இருக்கும். ஆனால், சித்த பிரமை பிடித்தவர்களைப்போல உருமாற்றி வருகிறார்கள்.

தமிழர்கள் பெரும்பான்மை இருந்தால்தானே வடக்கு, கிழக்கை இணைக்கச் சொல்வார்கள், தனி நாடு கேட்பார்கள்... என்று மொத்தப் பகுதியிலும் சிங்களக் குடியேற்றம் நடந்து வருகிறது.

பத்திரங்கள் தமிழர்களிடம் உள்ளது. ஆனால், நிலங்கள் சிங்களவர் வசம்.

இலங்கையில் ஒரே இனம்தான் உள்ளது. அது சிங்களவர்கள் மட்டும்தான். இஸ்ரேலைப்போல இலங்கையும் ஒரே இனத்தைக்கொண்ட நாடு.

தென்னந்தோப்புகளில் இடையிடையே வாழைச்செடிகளும் கடுகுச் செடிகளும் செழிப்பாக வளர்ந்தாலும், அதை தென்னந்தோப்பு என்றுதான் சொல்வோம்'' என்று பொதுபல சேனாப் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொக்கரித்திருக்கிறார்.

சமீபத்தில் தமிழ் முஸ்லீம்களை வேட்டையாடிய அமைப்பு இதுதான்.

இவை அனைத்தையும் சொரணையே இல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. மறைமுகமாக உதவிகள் செய்தது. அதனாலேயே தமிழகத் தேர்தலில் மரண அடி வாங்கியது. இப்போது பா.ஜ.க-வின் நேரம்.

ராஜபக்சவையும் நரேந்திர மோடியையும் கூடிக் குலாவ வைக்கத் துடிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.

'மோடியின் கீழ் இந்தியா - உலகுக்கும் தெற்காசியாவுக்கும் தேவை' என்ற தலைப்பில் கொழும்பு சென்று ஜூலை 21-ம் தேதி பேசினார் சு.சுவாமி.

ஒரு வாரம்கூட ஆகவில்லை. 'மோடிக்கு ஜெயலலிதா காதல் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்' என்று இலங்கை இராணுவத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் செய்தி போடுகிறது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும், தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று துணிச்சலாகத் தீர்மானம் இயற்றிய ஜெயலலிதா மீது, ராஜபக்ச கூட்டத்துக்கு கோபம் இருக்கலாம்.

ஆனால், மோடியையும் சேர்த்துக் கொச்சைப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சுவாமி வெண்சாமரம் வீசி தனது விசுவாசத்தைக் காட்டுகிறார்.

'இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை ஜெயலலிதா தீர்மானிக்க முடியாது' என்பது சுவாமியின் கட்டளை. அப்படியெனில், இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் இவருக்கு என்ன அக்கறை?

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரைக் கொச்சப்படுத்துவதற்கு இலங்கைக்கு உரிமை உள்ளது என்றால், லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றவர்களைக் கண்டித்துத் தீர்மானம் இயற்ற தமிழக முதல்வருக்கு உரிமை இல்லையா?

இலங்கை அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களை தமிழக மக்கள் தோற்கடித்து விட்டார்கள்' என்று கொழும்பில் போய்ச் சொல்லும் உரிமையை பா.ஜ.க தலைமை சுவாமிக்குக் கொடுத்துள்ளது.

சபாஷ்! தோற்றுப்போனது பா.ஜ.க கூட்டணியில் இருந்த வைகோதான்.

இந்தியாவின் தேர்தல் அரசியலை கொழும்பில் பேச முடியுமானால், கொழும்புக் கொலைகளை தமிழக முதல்வர் பேசக் கூடாதா?

இலங்கை அரசுக்கு எதிராகக் குரல்கொடுத்த ஜெயலலிதாதான், 39-க்கு 37 இடங்களில் வென்றார். அதே சமயம் சிங்களவர்களோடு கைகோத்திருந்த காங்கிரஸ் கட்சிதான் 40க்கு 0 வாங்கியது.

இதை இந்தியா முழுக்க ஜெயித்து, தமிழகத்தில் தோற்ற மோடி உணர வேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பை எம்.ஜி.ஆர்-தான் உருவாக்கினார்' என்று ஜெயவர்த்தனா சொன்னதில் இருந்துதான், ஈழப் பிரச்சினையில் தமிழகம் ஒரே குரலாக ஒலித்தது.

இப்போதும் இலங்கை இராணுவ வலைதளத்தில் ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்திய விவகாரத்திலும் தமிழகம் ஒருமுகம் கண்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஈழ அனல் அடிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு இது.

வயிற்றில் குத்துவது போல வந்து முகத்தில் குத்த வேண்டும் என்பது 1983-ம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது ஜெயவர்த்தனா சிங்களவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்.

30 ஆண்டுகள் ஆன பிறகும் குத்திக்கொண்டே இருக்கிறார்கள், தமிழர்கள் கத்திக்கொண்டே இருக்கிறார்கள்!

- ப.திருமாவேலன், விகடனில்


Posted: 07 Aug 2014 03:45 AM PDT


Posted: 07 Aug 2014 12:45 AM PDT


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


சிதம்பர ரகசியம் என்பது மட்டுமல்ல.சிதம்பரமே பரம ரகசியம் ! =======================...

Posted: 07 Aug 2014 04:41 AM PDT

சிதம்பர ரகசியம் என்பது மட்டுமல்ல.சிதம்பரமே பரம ரகசியம் !
==========================================================
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் :
இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Center Point of World's Magnetic Equator ).
பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது,
இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
"பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன.
இது 4 வேதங்களை குறிக்கின்றது, பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.


சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்... படம் 1...

Posted: 06 Aug 2014 08:14 PM PDT

சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்...

படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் காகம்.

படம் 2 : மாட்டி இருக்கும் அந்த கயிறை கண்டறிந்து அதை எப்படி மின்சார கம்பியில் படாமல் கழற்றலாம் என பார்க்கும் காகம் .

படம் 3,4 : வழியை கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம்.

படம் 5 : காப்பாற்றியதும் , இரண்டும் சந்தோஷமாக பறக்கும் அற்புதமான காட்சி...!

- ஜெகன் கனேசன்


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


சம்பள நாள் என்பது என்ன? பேயை ( pay ) வாங்கி பிசாசு (மனைவி) கையில் கொடுக்கும் நாள்..

Posted: 07 Aug 2014 09:48 AM PDT

சம்பள நாள் என்பது என்ன?
பேயை ( pay ) வாங்கி பிசாசு (மனைவி) கையில் கொடுக்கும் நாள்..

Nachunu oru caption sollunga paakalam. ..

Posted: 07 Aug 2014 09:36 AM PDT

Nachunu oru caption sollunga paakalam. ..


நுங்கம்பாக்கம், ராமாபுரம், தங்கசாலை, அண்ணாநகர், துறைமுகம், மதுரவாயல், பெருங்குடி...

Posted: 07 Aug 2014 06:49 AM PDT

நுங்கம்பாக்கம், ராமாபுரம், தங்கசாலை, அண்ணாநகர், துறைமுகம், மதுரவாயல், பெருங்குடி உள்ளிட்ட 15 இடங்களில் முதல்கட்டமாக "அம்மா திரையரங்குகள்" அமைக்கப்படவுள்ளன. திரையரங்குகள் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணம் 25 ரூபாயாக நிர்ணயிக்கப்படும். இவற்றில் அனைவரும் பார்க்கக்கூடிய தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்படும். முற்றிலும் குளிர்சாதன வசதிகொண்ட இத்திரையரங்குகளில் நவீன ஒலி அமைப்புகளும் பொருத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் புதிய திரைப்படங்களே இவற்றில் திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Naanum paathikka pattu iruken. :'(

Posted: 07 Aug 2014 05:28 AM PDT

Naanum paathikka pattu iruken. :'(


Ithu than sir life

Posted: 07 Aug 2014 04:32 AM PDT

Ithu than sir life


இன்றைய தகவல்...

Posted: 07 Aug 2014 02:12 AM PDT

இன்றைய தகவல்...


வேட்டி விளம்பரத்துக்குனு சொல்லி சல்யூட் அடிக்க வச்சி, இப்போ எதுக்கெல்லாம் பயன்பட...

Posted: 06 Aug 2014 10:49 PM PDT

வேட்டி விளம்பரத்துக்குனு சொல்லி சல்யூட் அடிக்க வச்சி, இப்போ எதுக்கெல்லாம் பயன்படுத்துறாங்க பாருங்க...பாவம் ஜெயராம் ..

Credits :நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்


இதாம்மா உங்கள் பெண்கள் பாதுகாப்பு..?

Posted: 06 Aug 2014 10:03 PM PDT

இதாம்மா உங்கள் பெண்கள் பாதுகாப்பு..?


Posted: 06 Aug 2014 09:12 PM PDT


கஷ்டமான நேரத்துல சிரிங்க, உங்களுக்கு நல்லது நடக்குதோ இல்லையோ, உங்களைக் கண்டு பொற...

Posted: 06 Aug 2014 07:54 PM PDT

கஷ்டமான நேரத்துல சிரிங்க,
உங்களுக்கு நல்லது நடக்குதோ
இல்லையோ, உங்களைக்
கண்டு பொறாமை படுறவங்கள
கடுப்பேத்தும்.

Good morning frnds

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஆறு வயது பையன் அவன். எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று அவன...

Posted: 07 Aug 2014 09:18 AM PDT

ஆறு வயது பையன் அவன்.
எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது.

அவன் அந்தக் குழந்தையை வெகு தீவிரமாக நேசிக்கத் தொடங்கினான்.

ஆனால் அவள் யாரென்பதை தேடிக் கண்டுபிடிக்க மட்டும் அவனால் முடியவில்லை.

இருபது வருடங்களுக்குப் பிறகு..

அவனுடைய மனைவி அலமாரியை ஒதுங்க வைக்கும்போது டைரிக்குள் அந்த புகைப்படத்தை கண்டுபிடித்தாள்.

"இந்த போட்டோ உங்களுக்கு எப்படிங்க கிடைச்சது?"
"ஏன் கேக்குற?"
"இது என்னோட போட்டோதான். ரொம்பப் பிடிச்சது. வீடு மாத்தும்போது எப்படியோ தொலஞ்சு போனது உங்ககிட்ட கிடச்சு இருக்கு.." சொல்லியப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

நீதி::::: சனி பிடிக்கணும்னு இருந்தா எத்தனை வருஷம் ஆனாலும் விடாது.. !
***
:P :P

நோ.. நோ... சண்டைக்கெல்லாம் வரப்படாது.. நெட்ல சுட்டது தான்

Photo Aa Photography


குசும்பு... 2

மூளைக்கொரு வேலை

Posted: 07 Aug 2014 09:08 AM PDT

மூளைக்கொரு வேலை


'இனிமையைக் கண்டு, வாழ்வை செழுமையாக்குவோம்!’ ஒருமுறை, மகாத்மாவைக் கண்டித்து மிக...

Posted: 07 Aug 2014 08:59 AM PDT

'இனிமையைக் கண்டு, வாழ்வை செழுமையாக்குவோம்!'

ஒருமுறை, மகாத்மாவைக் கண்டித்து மிக நீளமான கடிதம் ஒன்றை ஒருவர் எழுதியிருந்தார். அதைப் படித்துப் பார்த்த காந்திஜி, அதிலிருந்த குண்டூசியை மாத்திரம் எடுத்துக்கொண்டு, கடிதத்தைக் கிழித்தெறிந்தார். 'இந்தக் கடிதத்தில் குண்டூசி ஒன்றுதான் பயனுள்ளது' எனச் சிரித்தபடியே சொன்னாராம். அப்படிப்பட்ட திடமான உள்ளமே, மிகப் பெரிய எதேச்சதிகாரத்தை எதிர்க்கிற துணிவை நமக்குப் பெற்றுத் தந்தது.

காமராஜரைப் பற்றி சிலர் அவதூறு பரப்பினர்; நேர்மையாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, நிறைய சொத்துச் சேர்ப்பதாக எழுதினார்கள். அவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ''நான் நேர்மையானவன். என்மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டுக்கெல்லாம் பதில் சொல்லி, என் நேர்மையை நிருபிக்கவேண்டிய அவசியம் இல்லை, எனக்கு யானைக்கால் நோய் இல்லை என்பதற்காக, எல்லோரிடமும் என் காலைத் தூக்கிக் காட்டவேண்டிய அவசியமில்லை'' என நறுக்குத்தெறித்தாற்போல் பதில் சொன்னார்.

மற்றவர்களின் கடும் விமர்சனங்களால் உண்டான வலியை, தம் பணியால் மகிழ்ச்சியுறுவோரின் புன்னகை போக்கிவிடும்.

இயேசுவைச் சிலுவை யில் அறைந்த அநியாயமும், லிங்கனைச் சுட்டுக் கொன்ற அவலமும் நிகழ்ந்த கொடுமையான உலகம் இது! ஆனால், சங்ககாலப் பாடல் ஒன்றில் கூறப்படுவதுபோல, 'இவ்வுலகம் இன்னாதது தான். ஆனால், இதிலிருக்கும் இனிமையைக் கண்டு, வாழ்வை செழுமையாக்குவோம்!'

( 'எப்போதும் இன்புற்றிருக்க' தொடரில் - வெ. இறையன்பு)

- Vikatan EMagazine.


# படித்ததில் பிடித்தது #- 2

:)

Posted: 07 Aug 2014 08:52 AM PDT

அருமையான க்ளிக்

Posted: 07 Aug 2014 08:40 AM PDT

அருமையான க்ளிக்


தாய்மை <3

Posted: 07 Aug 2014 08:30 AM PDT

தாய்மை ♥


நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார...

Posted: 07 Aug 2014 08:15 AM PDT

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன்
சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய்
வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
என்று புரியும் என்று அடிக்கடி சவால்
விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து,
ஒருநாள் நீங்க வீட்ல
இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..
காலைல
குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள்
சொல்லிக்கொடுத்து
சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
செஞ்சுதான் பாருங்களேன்..
என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில்
இருக்க..
இவள் ஆபீஸ் போனாள்..
ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..

முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..

வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்
வருபவர்களை கண்டித்தாள்..
கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட
நினைத்தபோது,
ஓர் அலுவலரின் மகள் திருமண
வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண
மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம்
ஒன்றை சொல்லிவிட்டு,
மணமக்களின்
கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..
பந்தியில்
உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த
'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்
என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..
அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும்
கணவனுக்கும் என பைக்குள்
பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,
கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்
இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
அத்தனையும்
குரங்குகள்..
சொல்றதை கேட்க மாட்டேங்குது..
படின்னா படிக்க மாட்டேங்குது..
சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல
படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள
கெடுத்து வச்சிருக்கே
என்று பாய..

அவளோ,
அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...
என்றவாறே
உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்
பிள்ளைகள்..

விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
'ஏங்க..
இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?
இவன் எதிர்வீட்டு பையனாச்சே ' என்று அலற..
ஓஹோ ,
அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும்
ஒன்று புரிந்தது..

இல்லாள் என்றும் ,
மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
தொடங்கி நம் மூதாதையர்கள்
சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும்
பிள்ளைகளுக்கு வளமான
வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..

அதுபோல,
பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்
அளப்பரியது..

ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
இது ஆணுக்கு,
இது பெண்ணுக்கு என்று
குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில்
ஒரு குடும்பம்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
கணவன்மீது மனைவியோ,
மனைவிமீது கணவனோ ஆதிக்கம்
செலுத்தாமல்
அன்பால் சாதிக்கும்
மனநிலையை கொண்டிருந்தால்தான்
எல்லா வளமும்
பெற்று பல்லாண்டு வாழ
முடியும்...

மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்..

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே உலகில் கப்பல் கண்டுபிடித்தவன்...

Posted: 07 Aug 2014 07:53 AM PDT

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே

உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.

கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?
காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.

கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.

.இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்:
தமிழா-------------மியான்மர்.
சபா சந்தகன்-----மலேசியா
ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா
கடாலன்------------ஸ்பெயின்
நான்மாடல் குமரி----------பசிபிக் கடல்
சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிகோ
திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து
கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும்,கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன


"தமிழ் - தமிழர் பெருமை" - 2

அரிய புகைப்படம்...! இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி...

Posted: 07 Aug 2014 07:44 AM PDT

அரிய புகைப்படம்...!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி...


"அரிய புகைப்படங்கள்"

(y)

Posted: 07 Aug 2014 07:30 AM PDT

(y)


Face bookஐ தமிழில் மாற்றினால்... facebook - மூஞ்சி புத்தகம் home - வூடு statu...

Posted: 07 Aug 2014 07:15 AM PDT

Face bookஐ தமிழில் மாற்றினால்...

facebook - மூஞ்சி புத்தகம்

home - வூடு

status - வாய்க்கு வந்தத உளறு...

post - தபால் டப்பா

comment - காரித்துப்பு

reply - திருப்பித் துப்பு

angry bird - கவட்ட விளாட்டு

people you may know - தெரிஞ்ச மொகரயா பாரு...

warning - மரியாதை கெட்டுபோகும் நாயி நாயி

search - மாதா கோயிலு (யோவ் அது church யா)

you are blocked for 30 days - 30 நாளைக்கு மூடிட்டு இரு

friend request- மச்சி என்ன சேர்த்துக்கோ

chat- கடலை

like- புடிச்சா அமுக்கி போடு

settings- எதயாவது மாத்து

fake id- ஊரை ஏமாத்து

poke- மூஞ்சில குத்து

notifications- எவனோ என்னமோ அனுப்பிகீறான்

criminal case- குற்றம் நடந்தது என்ன

farm ville - கம்பியூட்டர் விவசாயம்

developer - அடிமை

follow - பின்னாலே போ

inbox - உள்ளே போ

update info- மேல சொல்லு மேல சொல்லு

groups- குட்டி செவுரு

wall- பெரிய செவுரு

recent activity- கொஞ்சம் மின்னாடி இன்னா பண்ணினு இருந்த

logout - வெளிய போடா அயோக்கிய ராஸ்கலு...


குசும்பு... 3

கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..? பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய...

Posted: 07 Aug 2014 06:59 AM PDT

கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..?

பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.
சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மாவிற்கு...
மைதா - 1 1/2 கப்
முட்டை - 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோட்டிங்கிற்கு...
பிரட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!!


"தினம் ஒரு சுவை"

இரு கரம் கூப்பி கடவுளை வணங்குவதை விட பசி என்று ஒரு கரம் நீட்டும் மனிதனின் பசியை...

Posted: 07 Aug 2014 06:44 AM PDT

இரு கரம் கூப்பி கடவுளை வணங்குவதை விட
பசி என்று ஒரு கரம் நீட்டும் மனிதனின் பசியை போக்கிப்பார்
அவனுக்கு நீதான் கடவுள்


"சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 3

(y)

Posted: 07 Aug 2014 06:30 AM PDT

(y)


ஒரு இன்ஸ்பெக்டர் தன் மகனிடம் ... "டேய் என்னடா இது? எனக்குப் பொறந்த புள்ளயா நீ ....

Posted: 07 Aug 2014 06:15 AM PDT

ஒரு இன்ஸ்பெக்டர் தன் மகனிடம் ...

"டேய் என்னடா இது? எனக்குப் பொறந்த புள்ளயா நீ ...

எல்லா சப்ஜெக்டிலும் இவ்வளவு குறைவா மார்க் வாங்கி இருக்க ... எனக்குகேவலமா இருக்குடா"
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
"இந்தாங்க 50 ரூபா வச்சுக்குங்க ... மேட்டர இத்தோட
முடிங்க. அம்மாகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க"

:P :P

காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச்...

Posted: 07 Aug 2014 06:00 AM PDT

காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார்.

சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது.

ஓர் இடத்தில் நின்றவர், "இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?'' எனக் கேட்டார்.

உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரியவில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.

அங்கு மேலே இருந்த ஒரு டியூப் லைட்டைச் சுட்டிக் காட்டிய காமராஜர், "இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே...ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்க...'' என்றார்.

## இதுவரை காமராஜர் கட்டிய எதிலும் அவர் சம்மந்தமான எதையும் குறிப்பிட சொன்னதே இல்லை... ""மாமனிதர்""


"காமராஜர் ஒரு சகாப்தம்"

குழிபணியாரம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 07 Aug 2014 05:45 AM PDT

குழிபணியாரம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:)

Posted: 07 Aug 2014 05:30 AM PDT

:)


கணவர் தெரிந்து கொள்ள வேண்டிய மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்: * உடலில் சதை போடுவத...

Posted: 07 Aug 2014 05:15 AM PDT

கணவர் தெரிந்து கொள்ள வேண்டிய மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்:

* உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும். உடனே மிகவும் சந்தோஷமாகி விடுவார்கள்.

* உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும்.

* வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமாவில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

* காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. அவர்கள் தேவையை அவர்களே பொறுப்பாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

* விடுமுறை நாட்களில் விரும்பியபடி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

* எந்த ஒரு விஷயத்தையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது.

* சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும். அலுவலம் விடுமுறை தினங்களில் கணவர் சமைக்க வேண்டும் என்று மனைவி விரும்புவார்கள். அன்று ஒரு நாள் மட்டுமாவது சமையலுக்கு விடுமுறை கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

* "இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…' என பாராட்ட வேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் கணவர் பாராட்ட வேண்டும் என்று விரும்புவார்கள்.

via Malaimalar

நான் குய்க்கப் போறேன், நீங்க நீங்க வர்ரீங்களா என் கூட குய்க்க... :)

Posted: 07 Aug 2014 05:00 AM PDT

நான் குய்க்கப் போறேன், நீங்க நீங்க வர்ரீங்களா என் கூட குய்க்க... :)


மக்கள் சக்தியால் மீண்ட பயணி! ஆஸ்திரேலியா ரயில் நிலையத்தில் நடைமேடைக்கும் ரயிலுக...

Posted: 07 Aug 2014 04:45 AM PDT

மக்கள் சக்தியால் மீண்ட பயணி!

ஆஸ்திரேலியா ரயில் நிலையத்தில் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் பயணி ஒருவரின் கால் சிக்கியது. அவரை சக பயணிகளின் முயற்சியால் அவரை மீட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மக்கள் சக்தியால் முடியாது ஒன்றும் இல்லை என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது!

video : http://www.foxnews.com/world/2014/08/06/australian-commuters-tip-train-car-to-help-trapped-man/


உண்மை

Posted: 07 Aug 2014 04:30 AM PDT

உண்மை


பொது அறிவு 1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம் 2) உலகில் உயரமான விலங...

Posted: 07 Aug 2014 04:15 AM PDT

பொது அறிவு

1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)

6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)
7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்
9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்
10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்

11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து
12) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்
13) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா
14) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா

16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி
17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்
19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்
20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்

21) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்
25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா

26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்
27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி
29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை
30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்

31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியாஆர்ணல்டி
32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா
33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி
34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர் 35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்

36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா
37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா
38) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை
39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா
40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா

41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா)
42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்
43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து
44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா
46)உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

டிவிட்டரில் நெகிழ வைக்கும் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம்! நீங்கள் டிவிட்டர் பயன...

Posted: 07 Aug 2014 04:00 AM PDT

டிவிட்டரில் நெகிழ வைக்கும் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம்!

நீங்கள் டிவிட்டர் பயனாளி என்றால் இந்த சிறுவனின் புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கலாம். யுத்ததின் அழிவுக்கு மத்தியில் நம்பிக்கைக்கு அடையாளமாக கருதப்படும் இந்த புகைப்படம் இதுவரை டிவிட்டரில் பத்தாயிரம் முறைக்கு மேல் பகிரப்பட்டு, பார்த்தவர்கள் உள்ளங்களை எல்லாம் உருக்கிக் கொண்டிருக்கிறது.

ஆறு வயது மதிக்கத்தக்க பாலஸ்தீன சிறுவன் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பையை மாட்டிக்கொண்டு, 'நானும் ஒரு பத்திரிகையாளர்' என்று போஸ் கொடுத்த புகைப்படம்தான் அது. போர்க்களத்தில் செய்தி சேகரித்து கொண்டிருந்த ஸ்வீடன் பத்திரிகையாளர் சோமர்ஸ்டிராம் சிறுவனின் தீரத்தை பார்த்து வியந்து அந்த காட்சியை கிளிக் செய்து டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான மோதலால் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி போர்க்களமாகி இருக்கிறது. ராக்கெட் தாக்குதல், குண்டு வீச்சு ,பதில் தாக்குதல் என காஸா கலங்கிக்கொண்டிருக்கிறது.
காஸா இடிபாடுகளுக்கு மத்தியில் அந்த ஆறு வயது சிறுவன் யாசன் , ஸ்வீடன் பத்திரிகையாளர் சோமர்ஸ்டிராம் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே அவரை சந்தித்து பேசியிருக்கிறான். சிறுவர்களுக்கே உரிய அப்பாவித்தனத்துடனும், கண்களில் கனவுகளுடனும் , " நான் ஒரு பத்திரிகையாளன். இங்கு நடக்கும் செய்திகளை சேகரிக்கிறேன். இதுதான் எனது பத்திரிகையாளர் சட்டை " என்று அவன் கூறியிருக்கிறான்.

பழைய பிளாஸ்டிக் பை ஒன்றை மாட்டிக்கொண்டு பத்திரிகையாளர்போல அந்த சிறுவன் போஸ் கொடுத்ததை பார்த்த சோமர்ஸ்டிராம் உடனே தனது ஹெல்மெட்டை கழற்றி சிறுவன் தலையில் அணிவித்து அவனது பத்திரிகையாளர் தோற்றத்தை பூர்த்தி செய்து படம் எடுத்திருக்கிறார். " நான் பத்திரிகையாளர் ஆடை அணிந்திருக்கிறேன். பெரியவனாகி பத்திரிகையாளராக ஆவேன். புகைப்படங்கள் எடுப்பேன்' என்று அப்போது சிறுவன் கூறியிருக்கிறான்.

சோமர்ஸ்டிராம், இந்த சிறுவனின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 'தானே தயாரித்த பிளாஸ்டிக் சட்டையுடன் பத்திரிகையாளர் போல போஸ்கொடுக்கும் காஸாவை சேர்ந்த சிறுவன்' எனும் வாசகத்துடன் இந்த படத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.
அவ்வளவுதான் டிவிட்டரில் அந்த படத்தை பார்த்தவர்கள் எல்லாம் நெகிழ்ந்து போய்விட்டனர். யுத்த பூமியிலும் சிறுவனின் நம்பிக்கையும் அவனது அப்பாவித்தமான தோற்றமும் பார்த்தவர்களை உருக வைத்தது. உடனே அதை ரிடீவிட் செய்தனர். இது வரை பத்தாயிரம் முறைக்கு மேல் இந்த படம் பகிர்ந்து கொள்ளப்படுள்ளது.
புகைப்படத்தை பார்த்தவர்கள் பின்னூட்டம் மூலம் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

அழிவுக்கு மத்தியில் நம்பிக்கையின் அடையாளமாக இந்த படம் அமைந்திருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

டிவிட்டரில் பகிரப்பட்ட சிறுவனின் புகைப்படம்: https://twitter.com/ekmathia/status/494778921838452738/photo/1

- சைபர்சிம்மன்

Thanks vikatan


அடி ஆத்தி இவகளுக்கு மட்டும் தனி சட்டமா :P

Posted: 07 Aug 2014 03:45 AM PDT

அடி ஆத்தி இவகளுக்கு மட்டும் தனி சட்டமா :P


(y)

Posted: 07 Aug 2014 03:30 AM PDT

(y)


ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்ணினார்கள்.இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. இறுதியி...

Posted: 07 Aug 2014 03:14 AM PDT

ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்ணினார்கள்.இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. இறுதியில் ஒரு வழியாக பெண்ணின் அப்பா சமாதானமாகி காதலனைப் பார்க்க வேண்டும் என்றார். மகள் தன் காதலனை வீட்டிற்கு கூட்டி வந்தாள்.பொண்ணோட அப்பாவும் அவனும் பேச ஆரம்பித்தார்கள்.

"என்னப்பா உன் எதிர்காலத் திட்டம் என்ன?"பெண்ணின் அப்பா அவனிடம் கேட்டார் .

பையன் யோசிக்காமல் பதில் சொன்னான். "அதெல்லாம் கடவுள் பாத்துப்பார் சார் .

"சரிப்பா காலேஜ் முடிச்சதும் என்ன பண்ணலாம்னு இருக்க?" அடுத்த கேள்வியை கேட்டார்.

" அதெல்லாம் கடவுள் பாத்துப்பார் சார்" மீண்டும் அதே பதிலை சொன்னான்.

"கல்யாணம் பண்ணினா குடும்பம் நடத்த..., குழந்த குட்டி... பணத்துக்கு என்ன பண்ணுவ?" மூன்றாவது கேள்வியை கேட்டார்.

" அதெல்லாம் கடவுள் பாத்துப்பார் சார்". அதே பதிலை சொன்னான்.

பெண்ணின் அப்பா சொன்னார் "தம்பி உன்னை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உன்னை மருமகனா ஏத்துக்க சம்மதம்"

பொண்ணு ஒடிவந்து சந்தோஷாத்துடன் கேட்டாள், "பையன் எப்படிப்பா?

அவளின் அப்பா பெருமையோடு சொன்னார் "ஓ தங்கமான பையன்! என்னை கடவுளா நினைக்கிறான்..!!"

:P :P


குசும்பு... 1

உலகம் போற்றும் விஞ்ஞானியான ஐசக் நியுட்டன் பார்லிமெண்ட் மெம்பராக 1689-90 மற்றும்...

Posted: 07 Aug 2014 03:01 AM PDT

உலகம் போற்றும் விஞ்ஞானியான ஐசக் நியுட்டன் பார்லிமெண்ட் மெம்பராக 1689-90 மற்றும் 1701-1702 ஆகிய வருடங்களில் இருந்தார். இந்தக் காலங்களில் அவர் பாராளுமன்ற சபையில் பேசியது என்ன தெரியுமா ?

" ஜன்னல் கதவை மூடுங்கள் . காற்று பலமாக அடிப்பதால் என் விக் பறந்து விடும் போல் இருக்கிறது "
என்று மட்டும்தான்.

இதைத் தவிர வேறு எதுவும் அவர் பேசியதில்லை.

via சாத்தப்பன் நா.


அரிய தகவல்கள்

இன்று வரைக்கும், எந்த விவசாயியும் வயல் வரப்பில் கூட செருப்பு அணிந்து பார்த்ததில்...

Posted: 07 Aug 2014 02:44 AM PDT

இன்று வரைக்கும்,
எந்த விவசாயியும்
வயல் வரப்பில் கூட
செருப்பு அணிந்து பார்த்ததில்லை..

#தொழில்_பக்தி


"சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 2

:)

Posted: 07 Aug 2014 02:30 AM PDT

:)