Friday, 17 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


கருப்பு பணம் வைத்திருப்போர் பட்டியலை வெளியிட முடியாது-பிஜேபி

Posted: 17 Oct 2014 09:11 AM PDT

கருப்பு பணம்
வைத்திருப்போர்
பட்டியலை வெளியிட
முடியாது-பிஜேபி


பெரிய மனசு என்பது வேறொன்றுமில்லை. நம்மிடம் எவ்வித ஆதாயமோ, உதவியோ எதிர்பார்க்காமல...

Posted: 17 Oct 2014 07:40 AM PDT

பெரிய மனசு என்பது வேறொன்றுமில்லை. நம்மிடம் எவ்வித ஆதாயமோ, உதவியோ எதிர்பார்க்காமல், எந்த வித ஈகோவும் இல்லாமல் நம்மள ஒருத்தர் பாராட்டுராரே அவரிடம் இருப்பதே பெரிய மனசு!

- கனா காண்கிறேன்

மாமல்லபுரத்தில் உள்ள நாடக மேடை இது. நாடகம், நாட்டியம் என்று அனைத்தும் இந்த அரங்க...

Posted: 17 Oct 2014 06:05 AM PDT

மாமல்லபுரத்தில் உள்ள நாடக மேடை இது. நாடகம், நாட்டியம் என்று அனைத்தும் இந்த அரங்கில் தான் நடக்கும்.

பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக்குப் பிறகே மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்கிறது வரலாற்று ஆய்வுகள்.

- பா விவேக்


தீபாவளி போனஸ் உண்டுங்களா முதலாளி???

Posted: 17 Oct 2014 05:25 AM PDT

தீபாவளி போனஸ் உண்டுங்களா முதலாளி???


பூமி தன்னைத்தானே சுற்றிக் கொல்வதோடு, சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உண்மையை கண...

Posted: 17 Oct 2014 03:45 AM PDT

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொல்வதோடு, சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உண்மையை கண்டுபிடித்து முதன்முதலில் உலகுக்குச் சொன்ன கோபர்நிக்கசை கொடுமைப்படுத்தியும், கல்லால் அடித்தும் கொலை செய்தனர்.

கோபர்நிக்கசின் ஆய்வைப் பின்பற்றி, பைபிள் கோட்பாட்டுக்கு எதிராக, பூமியைத்தான் எல்லா கிரகங்களும் சுற்றுகின்றன என்றும் பிரபஞ்சம் எல்லையற்றது என்றும் கருத்தைப் பதிவு செய்த புருனேவை 9 ஆண்டுகள் இருட்டுச்சிறையிலடைத்து உயிருடன் எரித்துக் கொன்றது மதவெறிக் கும்பல்.

அதே கருத்தை தக்க ஆய்வுகளுடன் வெளியிட்ட கலீலியோ வாழ்நாள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். சுமார் 360 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 1992-அக்டோபரில் ரோமன் கத்தோலிக்க மதபீடம் கலீலியோ போன்ற அறிஞர்கள் சொன்ன கருத்துதான் சரி என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டது.

பூமி உருண்டையானது என்று உரைத்த ரோஜா பேக்கன் நாடுகடத்தப்பட்டு 25 ஆண்டுகள் கடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார்.

மனித உடல் கூறின் வரலாறு பற்றி எழுதிய வெசாலியஸ் என்ற அறிஞர் கிறித்தவ மத கட்டுக்கதைக்கு எதிரான செய்தியை எழுதியதால் பாதிரியார்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.

அரிஸ்ட்டார்க்கஸ், பித்தகோரஸ் முதலாக மதத்தின் கோரப் பசிக்கு ஆளான அறிஞர்கள் பலர் உளர்.

மதங்களின் ஆக்டோபஸ் கரங்களையும் மீறி, இன்று அறிவியல் வளர்ச்சி இந்தளவு பரவலாக்கப்பட்டிருப்பதற்கு, உயிரைப் பயைம் வைத்து உண்மைக்காய் உறுதியாய் நின்ற அறிவியல் அறிஞர்கள் மனத்துணிவும்-ஆய்வுப் புலமையும் தான் காரணம்.

நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அறிவியல் சாதனங்களிலும் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் இரத்தம் தேய்த்த வரலாறு புதைந்துகிடக்கிறுது.

--குரங்கின் தூதுவன்

தமிழ் திரைப்பட நடிகர்களின் இரட்டை நிலை !... - Puducherry * புதுச்சேரி * Pondichéry

Posted: 17 Oct 2014 03:18 AM PDT

தமிழ் திரைப்பட நடிகர்களின் இரட்டை நிலை !...

- Puducherry * புதுச்சேரி * Pondichéry


வெளிநாடுகளில் கறுப்புப்பணத்தை வைத்திருப்போரின் பெயர்களை வெளிப்படுத்த முடியாது. -...

Posted: 17 Oct 2014 02:08 AM PDT

வெளிநாடுகளில்
கறுப்புப்பணத்தை வைத்திருப்போரின்
பெயர்களை வெளிப்படுத்த
முடியாது. -
உச்சநீதிமன்றத்தில்
மோடி அரசு

இதையே தான் அந்த காங்கிரஸ்காரனும் சொன்னான்.

ஆர்க்கிமிடீஸ் தத்துவம்..... ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் மதுரையை தலைநகராக கொண்ட...

Posted: 17 Oct 2014 01:40 AM PDT

ஆர்க்கிமிடீஸ் தத்துவம்.....

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் மதுரையை தலைநகராக கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டவர்.சோழர்கள்,சேரர்கள்,மற்றும்
ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில்
வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய
நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.
சோழர்களை போரில் வென்றதன் விளைவாக
நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது.

ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார்.இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில்
இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும்
திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர்
கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர்
கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார
தானம்'' செய்தார்.

துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக
கொடுப்பதாகும்.ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.ஜடா வர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி,அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை,அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ? ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக்கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை. முதலில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி(குளம்) மண்டபத்தை காட்டினான்.அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை (நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரணங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள். கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது.பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தான்.

ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்.

@வசந்தகுமார்


ஜெயலலிதாவுக்கு ஜாமீன்! ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: தண்டனைய...

Posted: 17 Oct 2014 12:12 AM PDT

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்!

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்
வழங்கியது உச்ச
நீதிமன்றம்:
தண்டனையையும்
நிறுத்தி வைத்தும்
உத்தரவு!

மிகவும் பேர் பெற்ற ஒரு மதத் தலைவர், மன நல மருத்துவ மனை ஒன்றினைப் பார்வையிட வந்தா...

Posted: 16 Oct 2014 10:55 PM PDT

மிகவும் பேர் பெற்ற ஒரு மதத் தலைவர், மன நல மருத்துவ மனை ஒன்றினைப் பார்வையிட வந்தார்.

அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும் ஓரிடத்தில் உட்கார வைத்திருந்தனர்.

மதத் தலைவர் அவர்களிடம் பேச விரும்பினார். அங்கிருந்த அதிகாரிகள் மகிழ்வுடன் சம்மதித்தனர். அவரும் பேச ஆரம்பித்தார்.மன நலம் அற்ற அந்த நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஒரே ஒரு நோயாளி மட்டும் அவர் பேசுவதை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அவருடைய இமைகள் கூட அசையவில்லை.மதத் தலைவரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.மன நல மருத்துவ மனை என்பதால் மதத் தலைவர் எதையும் எதிர் பார்க்கவில்லை.

ஆனால் அந்த ஆள் தீவிரமாகக் கவனித்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

பேச்சு முடிவுற்றதும் அந்த ஆள் எழுந்து போய் அங்கிருந்த வார்டனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

மதத் தலைவரும் தன்னுடைய பேச்சுக் குறித்து அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார்.

பின்னர் வார்டனிடம்,

"அந்த ஆள் என்ன சொன்னார்" என்று வினவ,

வார்டன் சிறிது தயங்கிவிட்டு சொன்னார்,

''என்ன கொடுமையடா சாமி, இவனெல்லாம் வெளியே இருக்கிறான், நான் உள்ளே இருக்கிறேன்' என்கிறான் அய்யா"

@Jayant Prabhakar

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


காதலிக்கும் பெண்கள் பார்க்க வேண்டியது...

Posted: 17 Oct 2014 04:28 AM PDT

காதலிக்கும் பெண்கள் பார்க்க வேண்டியது...



மரத்தை வழிபட்டு வந்தான் ஆதித்தமிழன், மூடத்தனம் என்றது, முட்டாள் என்றது.. இன்று ஆ...

Posted: 16 Oct 2014 10:30 PM PDT

மரத்தை வழிபட்டு வந்தான் ஆதித்தமிழன்,
மூடத்தனம் என்றது, முட்டாள் என்றது..
இன்று ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது
சேலை கட்டிய மரங்கள் மட்டுமே..


ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி…! ஒரு காலத்தில் மரத்தை வெட்டி பிழைப...

Posted: 16 Oct 2014 07:30 PM PDT

ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி…!

ஒரு காலத்தில் மரத்தை வெட்டி பிழைப்பை நடத்தியவர், மரம் வெட்டியது…தவறு என்று உணர்ந்து, இப்போது மரக்கன்றுகளை சுற்றுப்புறத்தில் நட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாதான் அவர்.''பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு கூட ஒதுங்குனது இல்ல சாமி, எனக்கு தொழிலே குழி வெட்டுறதும், மரம் வெட்டுறதுதான். 30 வருசமா மரத்தை மட்டும்தான் வெட்டினேன், எனக்கு ஒரே ஒரு பையன்தான். மரம் வெட்டித்தான் பையனை வாத்தியாருக்குப் படிக்க வச்சேன். வாத்தியார் வேலை கிடைச்சதும், 'இனிமேல் மரம் வெட்டல்லாம் போக வேண்டாம் வீட்டுல ஓய்வு எடுங்கனு!' சொல்லிட்டான்.

நானும் ஒருவாரம் வீட்டுல சும்மா இருந்து பாத்தேன். என்னால இருக்க முடியலை, நேரமும் போகலை. வாராவாரம் என்னைப் பாக்க மகன் வந்திடுவான். 'மரம் வெட்டித்தான என்னைப் படிக்க வச்சீங்க… எத்தனை மரம் வெட்டுனீங்களோ அத்தனை மரம் நடுங்க. மரம் வெட்டுறது பாவம், அந்தப் பாவத்தை பிழைப்புக்காக செஞ்சுட்டீங்க, இனிமேல் மரம் நடுங்கன்னு!' பாடம் சொன்னான்.

கட்டிலில் படுத்திருந்த நான், எந்திரிச்சு உட்கார்ந்து மகன் சொன்னதை நினைச்சுப்பாத்தேன். ''அட.. நிழல் கொடுத்திக்கிட்டுருந்த எத்தனை மரங்களைக் கட்டடம் கட்டுறதுக்கும், மரப்பலகை போடுறதுக்கும் வெட்டி சாய்ச்சு காசு வாங்கிருக்கோம், இனிமேல் மரத்தை நடுறது மட்டும்தான் நம்ம குறிக்கோள்''னு முடிவெடுத்தேன். மறுநாளே மரம் வெட்ட பயன்படுத்துன கோடாரியை வித்துட்டு மண் வெட்டி, சட்டி, கடப்பாறை, பூவாளி, களைக்கொடத்தின்னு மரம் நட தேவையான சாமான்களை வாங்கியாந்தேன். அதோட அஞ்சு வேம்பு கன்னுகளையும் கையோட எங்க ஊருக்குள்ளயே நட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க.

"இவ்வளவு காலமா…. ஒத்த மரம் கூட விடாம வெட்டிட்டு இப்போ என்ன புதுசா மரம் நடுற.. ''ன்னு கிண்டலாப் பேசுனாங்க.. ஆனா, அதையெல்லாம் காதுல வாங்காம மரக்கன்னுகள நட ஆரம்பிச்சேன், சிலர் வேணும்னே கன்னை பிடுங்கிப் போட்டுருவாங்க, நூறு கன்னு வச்சா… அதுல பத்து வளர்ந்து வந்தாக்கூட சந்தோசம்தான் எனக்கு.

மகன் மாசம் ரெண்டாயிரம் ரூபாயை செலவுக்காக தருவான். அதுல முந்நூறு ரூபாயைத் துண்டா ஒதுக்கி பாண்டியன் கிராம பேங்குல போட்டு வச்சுடுவேன். தேவைப்படும் போது அதை எடுத்து மரக்கன்னுகளை வாங்குவேன். கோடை காலத்துல வாடகைக்கு வண்டி தண்ணி ஊத்துறதுக்கும் வச்சுக்குவேன். முதல்ல கன்று பதினைஞ்சு ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் விலைக்கு வாங்கித்தான் நட்டுட்டு வந்தேன். அப்புறம், வயக்காடு, காடுகரை, கம்மாய்னு போகும் போது கண்ணுல அரசு, வேம்பு..ன்னு ஏதாவது செடிகள் தென்பட்டா… அப்படியே வேரோடப் பிடுங்கி பாக்கெட்டுல மண்ணைப் போட்டு நிரப்பி வீட்டுக்கு கொண்டு வளர்த்து, நடுவேன். இதுக்காக எப்பவுமே பத்து பிளாஸ்டிக் பேப்பரை, டவுசர் பையில போட்டு வச்சிருப்பேன்.

யாரு கன்றுகள் கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம கொடுத்திடுவேன். ஆனா, நூறு கன்னு கேட்டா இருபத்தைந்து கன்னுகள்தான் கொடுப்பேன். கேட்டதை விடக் குறையா கன்னுகள் கொடுத்தாத்தான் இருக்குறத வச்சு ஒழுங்கா தன்ணீர் ஊத்திப் பராமரிப்பாங்க. அப்போதான் மரத்தோட அருமை தெரியும்.

பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் காலேஜ், முதியோர் இல்லம், ராஜபாளையம் அரசு மருத்துவமனை, அக்கம்பக்கத்து கிராமங்கள்னு இதுவரைக்கும்…ஆறாயிரம் மரக் கன்னுகளை நட்டுருக்கேன். இப்போ எனக்கு வயசு 76 ஆனாலும் என்னோட ஆயுசு வரைக்கும் மரம் நடுவேன். யாரும் மரத்தை வெட்டாதீர்கள்.. அது பாவம்.. நமக்கு நிழல் தருது, காற்றை சுத்தமாக்குது. மரத்தை பாத்தா மனசு இளகும். அதனால யாரும் மரத்தை வெட்டாதீங்க" என்று வேண்டுகோள் வைத்தார்.

பா விவேக்


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


இவருக்கு கொடுக்கலாம் நோபல் பரிசு புதுக்கோட்டை மாவட்டத்துல உள்ள எல்லா போலீஸ் ஸ்...

Posted: 17 Oct 2014 09:42 AM PDT

இவருக்கு கொடுக்கலாம் நோபல் பரிசு
புதுக்கோட்டை மாவட்டத்துல உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் என்னுடைய செல்போன் நெம்பரை வச்சுருக்காங்க. இதுவரைக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பிணங்களை ஏத்தியிருக்கேன். உடம்பு சரியில்லாம சீரியசா இருக்கிறவங்க, விபத்துல சிக்கினவங்கன்னு நான் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்ததில் 1000 பேர் பிழைச்சிருப் பாங்க. சுமார் 2000-ம் பேருக்கு பிரசவத்துக்கு உதவி செஞ்சிருக்கேன்.
கடந்த 44 ஆண்டுகளில் தனது சொந்தக் காரில் வாடகை வாங்காமல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்களை மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு ஏற்றிச்சென்று உதவியுள்ளார். நூற்றுக்கணக்கான பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்து உள்ளிட்ட அவசர உதவிக்காக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றவர்களில் நிறைய பேர் பிழைத்து உள்ளனர் என்ற இந்த வியக்க வைக்கும் பட்டியலுக்குச் சொந்தக்காரர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த கணேசன்.
ஏழை மக்களுக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்ட '515' கணேசன் என்று அழைக்கப்படும் 62 வயதான எஸ்.கணேசன், தனது சேவை குறித்து கூறியது:
குடும்பச் சூழ்நிலையால் 8-ம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடரமுடியாமல் அப்போதிலிருந்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். அப்போ ஆலங்குடியில வசதியில்லாத ஒரு குடும்பத்தினர் இறந்துபோன உறவினரின் சடலத்தை காரில் எடுத்துச் செல்ல வழியில்லாம தள்ளுவண்டியில வச்சு அவங்களே வீட்டுக்கு தள்ளிக்கொண்டு போனதைப் பார்த்து மனசுக்கு ரொம்ப வேதனையாகிடுச்சு. \
ஊரில் 2 வாடகைக் கார் இருந்தும் அவங்க காரில் பிணத்தை எல்லாம் ஏத்துறதில்லை. இந்த சம்பவத்துக்கு அப்புறம் இரும்பு வியாபாரம் செய்து சேர்த்து வச்சிருந்த ரூ.17 ஆயிரத்தைக் கொண்டு 44 வருஷத்துக்கு முன்னாடி 515 என்ற பதிவு எண்ணுள்ள காரை வாங்கினேன்.
அவசர தேவைக்காக தவிக்கிறவங்களுக்கு மட்டும் அந்தக் காரை வாடகை வாங்காமல் ஓட்டவேண்டும் என்பதே என் லட்சியம். பெரும்பாலும் பிரசவம், விபத்து, அனாதைப் பிணங்களை ஏற்றிச்செல்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். எத்தனையோ அனாதைப் பிணங்களை நானே குழிவெட்டி அடக்கம் செய்திருக்கேன். நானா காசு கேட்க மாட்டேன். ஒருசிலர் டீசல் போடுறதுக்கு மட்டும் காசு கொடுப்பாங்க.
ஒரு முறை சென்னையில இருந்து ஒரு பிணத்தை ஏத்திக்கிட்டு வர போயிருந்தேன். ஆலங்குடியில இருந்து நான் டீசல் போட்டுக்கிட்டு வந்துட்டேன். நீங்க டீசல் மட்டும் போடுங்க. ஊருக்கு போயிருவோம் என்றேன். என்னை அங்கே வரச்சொன்ன பெண்ணிடம் கையில காசு இல்லை. டக்குனு தாலியைக் கழற்றிக் கொடுத்து இதை அடகு வச்சு டீசல் போட்டுக்கிட்டு வாங்கன்னாங்க. இதுக்காடா நம்ம கார் வாங்குனோம்னு மனசு கொதிச்சுப் போச்சு. வேண்டாம்மான்னு சொல்லிட்டு அங்கேயே கொஞ்சம் கடன் வாங்கி டீசல் போட்டுக்கிட்டு பிணத்தை ஊருக்கு கொண்டுவந்து சேர்த்தேன்.
இப்ப வச்சுருக்குறது 17-வது காரு. இதை 2 வருஷத்துக்கு முன்னாடி ரூ.40 ஆயிரத்துக்கு வாங்கினேன். பிணம் ஏத்துறதுக்குன்னே சகல வசதியோட இப்ப ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தாலும், என்னுடைய காரும் ஓடிக்கிட்டேதான் இருக்குது. இப்போது அவ்வளவாக பிரசவ உதவி கேட்டு யாரும் வருவதில்லை.
எனக்குன்னு ஒரு குழி நிலம்கூட கிடையாது. இன்றைக்கும் பழைய இரும்பு வியாபாரம்தான் செய்கிறேன். அதை வச்சுத்தான் காரை பராமரிக்கிறேன். 5 மகள்களில் 4 பேருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டேன். ஏழை சனங்களுக்கு இறுதிக்கட்டத துல உதவி செய்யுறது மனசுக்கு ரொம்பவும் திருப்திகரமா இருக்கு. நாம பொறந்த இந்த வாழ்க்கைக்கு ஏதோ அர்த்தம் இருக்குங்கிறத நினைக்கிறப்போ சந்தோஷமா இருக்கு. என் உயிர் இருக்கும்வரை ஏழைகளுக்காக இந்த சேவையைத் தொடர்வேன்" என்றார்.

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


மூளைக்கொரு வேலை

Posted: 17 Oct 2014 09:40 AM PDT

மூளைக்கொரு வேலை


:)

Posted: 17 Oct 2014 09:30 AM PDT

:)


பிறந்ததைக் கொன்றால் என்ன? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன? ஒரு நடுத்தர வயதுப் பெண...

Posted: 17 Oct 2014 09:15 AM PDT

பிறந்ததைக் கொன்றால் என்ன?
பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன?

ஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று, "டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்" என்றாள்.

"என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன்" என்றாள்.

டாக்டர், " அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்றார்.

அவள், "நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன்" என்றாள்.

டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார், "உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறதென்று நினைக்கிறேன். இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை " என்றார்.

"தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார்" என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

டாக்டர், "இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம்" என்றார்.

"உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல்" என்றார்.

அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், "வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம்" என்றாள்.

"ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி" என்றார்.

அந்தப்பெண் "இரண்டு குழந்தையும் வேண்டும்" என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.

Relaxplzz

India's another BIG achievement - World's BIGGEST telescope செவ்வாய்க்கு ராக்க...

Posted: 17 Oct 2014 09:00 AM PDT

India's another BIG achievement - World's BIGGEST telescope

செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பி ஒரு சாதனை செய்த கையோடு அடுத்த சாதனைக்கு இந்தியா ரெடியாயிடுச்சு.

TMT (Thirty Meter Telescope) என்னும் 100 அடிக்கும் அகலமான - உலகத்திலே பெரிய டெலஸ்கோப் ஒன்றை அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் நிறுவ போறாங்க ஐந்து நாட்டு காரங்க.

அதில் இந்தியா, ஜப்பான், சைனா , கனடா மற்றூம் அமெரிக்கா இனைந்து இந்த பெரிய டெலஸ்கோப்பை 2022 ஆம் ஆண்டுக்குள் செயல்பட இப்பவே வேலையை ஆரம்பிச்சிட்டாங்க.

அக்டோபர் 7 ஆம் தெதி பூமிப்பூஜை போட்டு ஆரம்பிக்கபட்ட இந்த டெலஸ்கோப் பல சிறப்பு வகையை கொண்டது. adaptive optics (AO) என்னும் டெக்னாலஜியை கொண்ட முதல் தரை வழி டெலஸ்கோப் ஆகும். இதன் மூலம் வான் சாஸ்திரத்தை மிக மிக துள்ளியமாக கணிக்க மட்டுமில்லமல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் நிகழும் நிகழ்வுகளை கூட இங்கிருந்து சர்வ சாதாரணமாய் காண முடியும்.

நமது பிரதமர் நரேந்திர மோடி 1299.8 கோடிகளை இதற்காக ஒதுக்கயுள்ளார் என்பது கூடுதல தகவல்.இன்னைக்கு லான்ச் பண்ணீன மூனாவது நேவிகேஷனல் ராக்கெட் மற்றூம் சாட்டிலைட் சக்ஸச் என்பதும் கூடுதல் தகவல்

- Ravi Nag

Relaxplzz


:P

Posted: 17 Oct 2014 08:50 AM PDT

:P


ரவா தோசை இப்படி ஆகிடுச்ச.. 󾰕󾰮 #வூட்டம்மா வர்ரதுக்குள்ள தடயத்தை அழிக்கனும்... :P :P

Posted: 17 Oct 2014 08:40 AM PDT

ரவா தோசை இப்படி ஆகிடுச்ச..
𾰕𾰮
#வூட்டம்மா வர்ரதுக்குள்ள தடயத்தை அழிக்கனும்... :P :P


:(

Posted: 17 Oct 2014 08:30 AM PDT

:(


நான் அவளிடம் என்னுடைய காதலை சொல்ல ரொம்ப நாட்களாக தயங்கிகொண்டிருந்தேன். இன்று எ...

Posted: 17 Oct 2014 08:15 AM PDT

நான் அவளிடம் என்னுடைய காதலை சொல்ல ரொம்ப நாட்களாக தயங்கிகொண்டிருந்தேன்.

இன்று என்னவானாலும் பரவாயில்லையென்று அவள் மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் "I Love You" என்று தட்டி விட்டேன்.

அனுப்பியவுடன் மனதில் ஒரு கலவரம் - அவள் இதை எப்படி எடுத்துக் கொள்வாள்?

ஆச்சரியம்!!!

சில நொடிகளில பதில் எஸ்.எம்.எஸ். வந்தது. என்ன அனுப்பியிருப்பாள்? "சம்மதம்" என்றா? அல்லது "நல்ல நட்பை கொச்சை படுத்திய நீயும் ஒரு மனுஷனா" என்றா? மனம் பரபரத்தது. .

ஒருவேளை பதில் எதிர்மறையாய் இருந்தால்..?

இதயம் திக் திக் என்றது.. மனதிற்குள் ஆண்டவனை மனமுருக வேண்டினேன். (கடைசியாய் இப்படியெல்லாம் வேண்டியது தேர்வின் போது).

எப்படியோ தைரியத்தை வரவழைத்து மொபைல்-ஐ ஓபன் செய்தேன்.

அழகிய ஆங்கிலத்தில் ஒரு மெசேஜ் கீழ்க்கண்டவாறு இருந்தது.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

"YOUR BALANCE IS TOO LOW. MESSAGE SENDING FAILED."

:P :P

Relaxplzz

அறியாதவர்கள் அறிந்து கொள்ள...! நீங்கள் குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை...

Posted: 17 Oct 2014 08:00 AM PDT

அறியாதவர்கள் அறிந்து கொள்ள...!

நீங்கள் குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு பின்னே பல இரகசியங்கள் மறைந்து காணப்படுகிறது...!

அந்த இரகசியங்கள் இதுதான்....




► அக்குதிரையின் இரண்டு முன்னங்கால்களும் நிலத்தில் இருந்து எழுந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் இறந்திருக்கிறான் என அர்த்தம்.

► அக்குதிரையின் ஒரு முன்னங்கால் நிலத்திலிருந்து உயர்ந்து நின்றால், அவ்வீரன் போர்க்களத்தில் காயப்பட்டு பின்னர் இறந்து இருக்கிறான் என அர்த்தம்.

► அக்குதிரையின் இரண்டு முன்னங்கால்களும் நிலத்தில் பதிந்து இருந்தால், அவ்வீரன் இயற்கை நோயால் இறந்து இருக்கிறான் என அர்த்தம்.

Relaxplzz


எனக்கு டாக்டர் பட்டமா.??? நான் என்ன பெருசா சாதிச்சுட்டேன்..! இப்படியும் ஒரு தலை...

Posted: 17 Oct 2014 07:50 AM PDT

எனக்கு டாக்டர் பட்டமா.??? நான் என்ன பெருசா சாதிச்சுட்டேன்..!

இப்படியும் ஒரு தலைவர் (y) (y)


எது..???

Posted: 17 Oct 2014 07:40 AM PDT

எது..???


:)

Posted: 17 Oct 2014 07:30 AM PDT

:)


"ஹலோ ரேடியோ மிர்ச்சி தானே.." "ஆமா சொல்லுங்க சார்..." " நான் பேசுறது தெளிவா கேக...

Posted: 17 Oct 2014 07:15 AM PDT

"ஹலோ ரேடியோ மிர்ச்சி தானே.."

"ஆமா சொல்லுங்க சார்..."

" நான் பேசுறது தெளிவா கேக்குதா..?''

" ஆமா சார்.. நல்லாவே கேக்குது..."

" என் பொண்டாட்டியும் இப்போ ரேடியோ மிர்ச்சி கேக்கிறா சார்..."

"நல்லது... சொல்லுங்கள்..."

"நான் போன் பண்ணினா எடுக்கல சார்.."

"அதனாலென்ன விஷயத்திற்கு வாருங்கள்.."
*
*
*
*
*
"அடியே காமாட்சி.... நான் சொல்றது கேக்குதா... சீக்கிரமா மோட்டார் போடுமா. நம்ம வெளிவீட்டு பாத்ரூம்ல தண்ணியில்ல... நான் உள்ளே இருக்கேன்... சீக்கிரம்..."

:P :P

Relaxplzz

அம்மா, அப்பா: கூலி வேலை - - மகள் : எம்எல்ஏ -------------------------------------...

Posted: 17 Oct 2014 07:00 AM PDT

அம்மா, அப்பா: கூலி வேலை - - மகள் : எம்எல்ஏ
---------------------------------------------------------------------

முன்னாள் சட்டமன்ற தொகுதி, திருவட்டார் முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ்.

அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித் துக் கொண்டிருந்தார். யாரும் அவருடன் இல்லை. தனி மனுஷி!

"ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்எல்ஏன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடையாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க" என்கிறார். இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருப்பவர்.

'எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்எல்ஏன்னு நடத்துனர் கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக்கிறாங்க.

சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்' என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல்லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.

'உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?' என்றால், பெரியதாக சிரித்த வர்… 'ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து' என்று நம்மை பதற்றப் பட வைக்கிறார்.

கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்!

"சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார்கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?" என்று சொல்கிறார் திருமதி. லீமா ரோஸ் அவர்கள்.

இது நடந்தது அவர் எம்.எல்.ஏவாக இருந்தபோது. காமராஜரின் வாரிசுகள் என்று சொல்லத்தகுதியான ஆட்களில் இவரும் ஒருவர். (ஜாதியை வைத்து இல்லை நேர்மையை வைத்து). கம்முநிஷ்ட்களில் இன்று இவர்களைப்போன்ற நல்லவர்களை பார்ப்பது அரிதாகிக்கொண்டே வருகிறது.

இப்படியும் சில உண்மையான அரசியல்வாதிகள், மக்களால் மறைக்கபட்ட அரசியல்வாதிகள். நல்லவர்களை கோட்டைவிட்டுவிட்டு ஊழல்வதிகளையும், ஜாதி தீவிரவாதிகளையும் கோட்டைக்கு அனுப்பிவிட்டு அரசியல்வாதிகளையே குற்றம் சொல்லும் கூட்டத்தில் நானும் ஒருவன் என்று நினைக்கும் போது கேவலமாய் இருக்கிறது.

- Balasubramanian Saraswathy

Relaxplzz


உலகத்தையே செல்போனுக்குள் கொண்டுவர முயற்ச்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்... நாம...

Posted: 17 Oct 2014 06:50 AM PDT

உலகத்தையே செல்போனுக்குள் கொண்டுவர முயற்ச்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்...

நாம் செல்போனுக்கு வெளியே ஒருஉலகம் இருப்பதையே மறந்து கொண்டிருக்கிறோம் !

- Kali Muthu


காவல்துறை உங்கள் நண்பன்...இவருக்கு ஒரு like போடலாமே.. (y)

Posted: 17 Oct 2014 06:40 AM PDT

காவல்துறை உங்கள் நண்பன்...இவருக்கு ஒரு like போடலாமே.. (y)


:)

Posted: 17 Oct 2014 06:30 AM PDT

:)


:)

Posted: 17 Oct 2014 06:30 AM PDT

:)


நம் தாய் நம்மை கருவில் சுமந்தார் தந்தை நம்மை தோளில் சுமந்தார் ஆனால் நாம் வளர...

Posted: 17 Oct 2014 06:15 AM PDT

நம் தாய் நம்மை கருவில் சுமந்தார்

தந்தை நம்மை தோளில் சுமந்தார்

ஆனால் நாம் வளர்ந்த பிறகு அவர்களை தோளில் சுமக்க வேண்டாம் நம் வீட்டில் சரி ஒரு இடம் கொடுக்கலாமே..

அப்படி கொடுக்காததால் தான் பல பெற்றோர்கள் முதுமை வந்ததும் முதியோர் இல்லத்தில் அனாதையாக வாழ்கின்றார்கள்..........

முதியோர் இல்லத்தில் பெற்றோரை தவிக்க விடுபவர்களே பெற்றோரை சேர்க்கும் போதே உங்களுக்கான இடத்தையும் பதிவு செய்யுங்கள் நாளை உங்கள் நிலையும் இதுவாகத்தான் இருக்கும்..

Relaxplzz

அடிக்கடி ஒலிக்கும் அழைப்பு மணி, அவப்போது அடிக்கும் அலைபேசி, நீ பேசிப்போன சில வா...

Posted: 17 Oct 2014 06:00 AM PDT

அடிக்கடி ஒலிக்கும் அழைப்பு மணி,
அவப்போது அடிக்கும் அலைபேசி,

நீ பேசிப்போன சில வார்த்தைகள்,
நீ எழுதி அனுப்பிய கடிதம்,

மறந்து விட்டுச்சென்ற சில பொருட்கள்,
உன் முகம் காட்டிய கண்ணாடி,

இவை அனைத்தும் உன்னை எனக்கு நினைவூட்டிகொண்டே இருக்கிறது.

நாம் வாழ பணம் சேகரிக்க சென்றுவிட்டாய்,

நாம் வாழ்ந்த நாட்களின் நினைவுகளை நான் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.

#நந்தமீனாள்

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 1

எதிர்பார்ப்புக்கள் இல்லா மனம் ஒன்று வேண்டும்...! இனியேனும்.... ஏமாற்றங்கள் இல்லா...

Posted: 17 Oct 2014 05:45 AM PDT

எதிர்பார்ப்புக்கள் இல்லா
மனம் ஒன்று வேண்டும்...!
இனியேனும்....
ஏமாற்றங்கள் இல்லாமல்
வாழ்வதற்கு ....

Relaxplzz


(y)

Posted: 17 Oct 2014 05:30 AM PDT

(y)


தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்.. இன்று உலகிலேயே மிக அதிகமான உயிர் இழப்பை உண்...

Posted: 17 Oct 2014 05:00 AM PDT

தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..

இன்று உலகிலேயே மிக அதிகமான உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம், சாலை விபத்து...

1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்...

இதனால் தனி மனித இழப்பு, அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு, பொருளாதார இழப்பு போன்றவைகள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றவராகின்றார்கள்...

இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று...

நாம் ஒவ்வொருவரும் அக்கரை எடுத்து செயல்பட்டால் இதை மாற்றியமைக்க முடியும்...

* மிக அதிக வேகம்.....

* தலைக்கவசம் அணியாமல் செல்வது....

* மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுதல்...

* செல் போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது...

* சரியான ஓய்வின்றி, உறக்கமின்றி வாகனத்தை ஓட்டுவது...

* போக்குவரத்து வாகன விதிமுறைகளை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுவது...

இவைகள் தான், பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகின்றது...

இரத்த தானம் செய்யுங்கள்...! சாலைகளில் சிந்தாதீர்கள்...!

உங்கள் உயிரும், உங்களது இரத்தமும், உங்களது உடற்பாகங்களும் விலைமதிப்பற்றது என்பதை உணருங்கள்...

* பசித்தவனுக்கு தான் தெரியும் பசியின் கொடுமை...

* விழுந்தவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை...

* இழந்தவனுக்குத்தான் தெரியும் உறவின் பெருமை...!

Relaxplzz


குழந்தைகள் நடைபழகும் வரை கைகொடுங்கள்... நடக்கத்தொடங்கிய பின் நம்பிக்கை கொடுங்கள்...

Posted: 17 Oct 2014 04:45 AM PDT

குழந்தைகள் நடைபழகும் வரை கைகொடுங்கள்...
நடக்கத்தொடங்கிய பின் நம்பிக்கை கொடுங்கள்.

(y) (y)


:)

Posted: 17 Oct 2014 04:30 AM PDT

:)


மிகவும் பேர் பெற்ற ஒரு மதத் தலைவர், மன நல மருத்துவ மனை ஒன்றினைப் பார்வையிட வந்தா...

Posted: 17 Oct 2014 04:15 AM PDT

மிகவும் பேர் பெற்ற ஒரு மதத் தலைவர், மன நல மருத்துவ மனை ஒன்றினைப் பார்வையிட வந்தார்.

அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும் ஓரிடத்தில் உட்கார வைத்திருந்தனர்.

மதத் தலைவர் அவர்களிடம் பேச விரும்பினார். அங்கிருந்த அதிகாரிகள் மகிழ்வுடன் சம்மதித்தனர். அவரும் பேச ஆரம்பித்தார்.மன நலம் அற்ற அந்த நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஒரே ஒரு நோயாளி மட்டும் அவர் பேசுவதை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அவருடைய இமைகள் கூட அசையவில்லை.மதத் தலைவரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.மன நல மருத்துவ மனை என்பதால் மதத் தலைவர் எதையும் எதிர் பார்க்கவில்லை.
ஆனால் அந்த ஆள் தீவிரமாகக் கவனித்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

பேச்சு முடிவுற்றதும் அந்த ஆள் எழுந்து போய் அங்கிருந்த வார்டனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
மதத் தலைவரும் தன்னுடைய பேச்சுக் குறித்து அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார்.

பின்னர் வார்டனிடம்,
"அந்த ஆள் என்ன சொன்னார்" என்று வினவ,
வார்டன் சிறிது தயங்கிவிட்டு சொன்னார்,

''என்ன கொடுமையடா சாமி, இவனெல்லாம் வெளியே இருக்கிறான், நான் உள்ளே இருக்கிறேன்' என்கிறான் அய்யா"

:P :P

Relaxplzz

''முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது, 'நான் ஆண...

Posted: 17 Oct 2014 04:00 AM PDT

''முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர்.
பொதுக்கூட்டத்தில்
பேசிக்கொண்டு இருந்தபோது, 'நான்
ஆண்களிடம் தனியாகப் பேச வேண்டும்.
ஆகவே, பெண்கள் எல்லோரும்
சென்று விடுங்கள்' என்றாராம்.

பெண்கள்
சென்றவுடன் எம்.ஜி.ஆர். ஆண்களிடம்,
'விஷயம் ஒன்றுமில்லை. இங்கு கூட்டம்
அதிகம். எல்லோரும் ஒரே நேரத்தில்
கலைந்து சென்றால் நெரிசல் அதிகம்
இருக்கும். அதனால்தான் முதலில்
பெண்களை போகச் சொன்னேன்.
இனி நீங்களும் செல்லலாம்' என்றாராம்!'

# இப்படியும் மக்கள் நலனில் அக்கரை கொண்ட தலைவர்கள் இருந்தனர் :)

Relaxplzz


ஷொப்பிங் மால்களில் சேமித்த ''கெளரவம்'' ஒரு சாலையோரத்து ஏழை வியாபரியிடம் விற்கப...

Posted: 17 Oct 2014 03:45 AM PDT

ஷொப்பிங் மால்களில் சேமித்த ''கெளரவம்''
ஒரு சாலையோரத்து ஏழை
வியாபரியிடம் விற்கப்படுகிறது.
பேரம் பேசும்போது..!

- Kali muthu.


:)

Posted: 17 Oct 2014 03:30 AM PDT

:)


உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் 1.ஒரு கப் தயிரை தவறாமல்...

Posted: 17 Oct 2014 03:15 AM PDT

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்

1.ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!

2.தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!

3.தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!

4.குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!

5.மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!

Relaxplzz