Sunday, 2 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


இயற்கை வளக் கொள்ளைக்கெதிராக- மக்கள் இணையமும்.

Posted: 02 Nov 2014 09:32 PM PST

இயற்கை வளக் கொள்ளைக்கெதிராக- மக்கள் இணையமும்.


நடுவண் அரசை கலைக்க ஒரு சட்டம் வேண்டும் ! ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்...

Posted: 02 Nov 2014 09:17 PM PST

நடுவண் அரசை கலைக்க ஒரு சட்டம் வேண்டும் !

ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்தி மாநில அரசை கலைக்கலாம். இதை கருத்தில் கொண்டே பல போராட்டங்களை மாநில அரசுகள் ஒடுக்கி வருகிறது. ஆனால் அந்த சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போனதற்கு காரணம் நடுவண் அரசாக இருக்கும் போது ஏன் மாநில அரசை கலைக்க வேண்டும்? நடுவண் அரசை அல்லவா கலைக்க வேண்டும் !

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் 90 விழுக்காடு நடுவண் அரசை கண்டித்து தான் நடக்கிறது. இப்போது மீனவர்கள் தூக்கு தண்டனையை எதிர்த்து நடத்தப்பட்ட தொடர்வண்டி போராட்டம், சாலை மறியல் உட்பட பல போராட்டங்கள் நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவே அமைந்துள்ளது. ஈழப் பிரச்சனை, மீனவர் படுகொலை, இந்தித் திணிப்பு, மீத்தேன் எரிவாயு, அணு உலை என எல்லா போராட்டங்களும் நடுவண் அரசை எதிர்த்தே நடைபெறுகிறது. இப்போராட்டங்கள் எல்லாம் எதிர்காலத்தில் இன்னும் வீரியம் பெறுமே தவிரே குறையப்போவதில்லை.

நடுவண் அரசு தொடர்ந்து மாநில மக்களின் உரிமைகளுக்கு எதிராகவே செயல்படும் நிலையில் நடுவண் அரசு கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே அனைத்து தரப்பு மக்களாலும் முன்வைக்கப்பட வேண்டும். 356 சட்டப் பிரிவைப் போலவே தேசிய இன மக்களுக்கு எதிராக செயல்படும் நடுவண் அரசை கலைக்க புதிய சட்டப்பிரிவை உருவாக்க நாம் அனைவரும் கோரிக்கை வைக்க வேண்டும். அப்போது தான் தேசிய இனங்களின் உரிமைகள் காக்கப்படும். இல்லையெனில் காலம் முழுவதும் மக்கள் அடிமைகளாக போராட்டம் மட்டுமே நடத்திக் கொண்டிருக்க வேண்டிவரும். சிந்திப்போம், செயல்படுவோம்.

@இராச்குமார் பழனிசாமி

சாலையோர மரங்களை பட்டு போக செய்து கடத்தும் கும்பல்! நாமக்கல் அருகே சாலையோரம் உள்...

Posted: 02 Nov 2014 08:46 PM PST

சாலையோர மரங்களை பட்டு போக செய்து கடத்தும் கும்பல்!

நாமக்கல் அருகே சாலையோரம் உள்ள மரங்களை பட்டு போக செய்து அவற்றை சில கும்பல் கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோரங்களில் ஏராளமான புளிய மரங்கள் மற்றும் பனை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக எண்ணிட்டு அவற்றை கணக்கில் வைத்துள்ளனர். இந்த மரங்கள் திடீரென பட்டு போகின்றன. இவற்றில் புளிய மரங்களை விட, வறட்சியை தாங்கி வளரும் பனை மரங்கள்தான் அதிக அளவில் பட்டு போகின்றன.

இந்த மரங்கள் தானாக பட்டுப்போவதில்லை. பட்டுப்போக வைத்து, அதை கடத்தும் செயலில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகிறது என தற்போது நாமக்கல் பகுதியில் புகார் எழுந்துள்ளது.

பனை மரங்களை கடத்துவதற்காக, பனை மரங்களின் உச்சியில் உள்ள குருத்தில் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் போன்றவற்றை ஊற்றி விடுகின்றனர். இதனால் மரங்களின் சருகுகள் முழுமையாக காய்ந்து விழுந்து விடுகின்றன. நாளடைவில் மரங்கள் பட்டுப் போய் விடுகின்றன. இந்த மரங்களை நெடுஞ்சாலை துறையினர் இயற்கையாகவே பட்டுப் போனதாக கருதி கணக்கில் இருந்து நீக்கி விடுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில கும்பல், இரவு நேரங்களில் மரங்களை வெட்டி கடத்தி விடுகின்றனர்.

இயற்கையாகவே மரம் பட்டுப் போனதா அல்லது செயற்கையாக பட்டுப்போனதா என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் அக்கறை காட்டாததே, இத்தகைய கடத்தலுக்கு காரணம் என புகார் கூறுகின்றனர் பொதுமக்கள். நெடுஞ்சாலைத் துறையினர் அக்கறை காட்டாததால் சாலையோரத்தில் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு போகவேண்டிய வருவாயை சில கும்பல் கொள்ளையடித்து வருகிறது என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுபோன்று செயற்கையாக மரங்களை பட்டுப் போக செய்து மரங்களை கடத்தும் கும்பலை, அரசு உடனடியாக தடுக்க நடவடிக்கை வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

செய்தி, படங்கள்: கு.ஆனந்தராஜ், விகடன்


அழகு தமிழ்நாடு! ஆரணி!

Posted: 02 Nov 2014 06:59 PM PST

அழகு தமிழ்நாடு! ஆரணி!


#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால் - குறள் இயல்: #குடியியல் - அதிகாரம்: #பெரும...

Posted: 02 Nov 2014 05:54 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால் - குறள் இயல்: #குடியியல் - அதிகாரம்: #பெருமை

#உரை:
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.

#Translation:
Greatness is absence of conceit; meanness, we deem,
Riding on car of vanity supreme.

#Explanation:
Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.


அழகு கொடைக்கானல்!

Posted: 02 Nov 2014 09:31 AM PST

அழகு கொடைக்கானல்!


#அருண்மொழிவர்மன் - ராஜ ராஜ சோழன் தமிழ் இன குழு ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் சோழ...

Posted: 02 Nov 2014 07:27 AM PST

#அருண்மொழிவர்மன் - ராஜ ராஜ சோழன்

தமிழ் இன குழு ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் சோழ மன்னர்கள் மட்டுமல்ல அனைத்து மன்னர் வம்சமும் அனைவருக்கும் உரிமை உண்டு.

நமக்காக உருவாக்க பட்டதே நம்மால் உருவாக்க பட்டதே நமக்குள் உருவாக்க பட்டதே தலைமை.

@Nambi Arulnambi


தமிழிசையும் கர்நாடக இசையும் !! தமிழ் இசை மரபுக்கும் கர்நாடக இசை மரபுக்கும் உள்ள...

Posted: 02 Nov 2014 07:24 AM PST

தமிழிசையும் கர்நாடக இசையும் !!

தமிழ் இசை மரபுக்கும் கர்நாடக இசை மரபுக்கும் உள்ள வேறுபாடு இன்னும் பல தமிழர்களுக்கு தெரியவில்லை. இந்தியாவில் தோன்றிய எல்லா இசை மரபுக்கும் ஆதாரமாக விளங்குவது தமிழிசையே என்பதை தமிழிசை முனைவர் திரு. நல்லசிவம் அவர்கள் தெளிவாக விளக்குகிறார். தஞ்சை பல்கலையில் பேராசிரியராக பணிபுரியும் நல்லசிவம் ஏன் நாம் தமிழிசையை கைவிட்டோம், எவ்வாறு நாம் அதை மீட்டெடுக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

தமிழிசையை மீட்பது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். தமிழிசையை மறந்த தமிழர்கள் தங்கள் பண்பாட்டையும் மறந்து விட்டனர் என்பதை நாம் உணர்தல் வேண்டும் . புரியாத கர்நாடக இசையில் மதிமயங்கி ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே கர்நாடக இசையை கற்றுக் கொள்ளும் நிலையில் , நம் தமிழ் இசை எல்லோருக்கும் பொதுவானது , இயல்பானது , இயற்கையானது என்பதை நாம் உணர்ந்து நம் குழந்தைகளுக்கு தமிழிசையை கற்றுக் கொடுக்க முன்வரவேண்டும் .

பண்பாட்டு சுற்றுலா சென்ற போது நாங்கள் தமிழ்ப் பல்கலையில் மெய்யியல் துறையை சேர்ந்த திரு நல்லசிவம் அவர்களை பேட்டி கண்ட போது இந்த காணொளி படமாக்கப்பட்டது.


தமிழிசை - கர்நாடக இசை. பேராசிரியர் நல்லசிவம்

தமிழ்ச்செல்வன் அண்ணாவின் நினைவு நாள் இன்று!

Posted: 02 Nov 2014 07:19 AM PST

தமிழ்ச்செல்வன் அண்ணாவின் நினைவு நாள் இன்று!


எதிரி நாட்டின் மீது போர் எடுத்து அந்த நாட்டையே நிர்மூலமாகுவது வழக்கம். அப்படி ஒர...

Posted: 02 Nov 2014 07:14 AM PST

எதிரி நாட்டின் மீது போர் எடுத்து அந்த நாட்டையே நிர்மூலமாகுவது வழக்கம். அப்படி ஒரு சம்பவம் இராஜராஜன் காலத்திலும் நடந்தது. "வம்பு சண்டைக்கு போவதில்லை, வந்த சண்டையை விடுவதில்லை" என்பதை யார் கடைபிடித்தார்களோ இல்லையோ சோழர்கள் அதை சரியாக கடைபிடித்தார்கள். தன் நாட்டு தூதுவன் ஒருவனை சேரர்கள் சிறைப்பிடித்து வைக்கிறார்கள். அந்த தூதுவனை காப்பாற்ற சோழர்களின் படை களமிறங்குகிறது. சேர நாட்டின் மீது படை எடுத்து உதகையை (ஊட்டி அல்ல) தீ வைத்து எரித்து அந்த நகரையே நிர்மூலமாக்கி நாடு திரும்புகிறது அந்த படை. தர்மமற்ற செயலில் அவர்கள் ஈடுபட்டதால் இவர்களும் தர்மமற்ற முறையில் தாக்கினார்கள். ஆனால் அப்படி செய்தது இராஜராஜனுக்கு விருப்பமில்லை போலும். இந்த போர் வெற்றியை தன் மெய்க்கீர்த்தியில் அவர் கடைசி வரை இடம் பெறச் செய்யவேயில்லை!. இப்படி நடந்த செய்தியே பிற்காலங்களில் பாடப்பட்ட உலாக்களில் "உதகை தீ உய்த்த உரையேன்" என்ற பாடலின் மூலம் தான் தெரியவருகிறது!

@சிவபாதசேகரன்


பிற மன்னர்களின் மெய்கீர்த்திகளில் வருவது போல் எதிரியின் மூக்கை அறுத்தேன், நாக்கை...

Posted: 02 Nov 2014 07:13 AM PST

பிற மன்னர்களின் மெய்கீர்த்திகளில் வருவது போல் எதிரியின் மூக்கை அறுத்தேன், நாக்கை அறுத்தேன், சிரத்தை வெட்டினேன் என்று வன்முறைப் புகழ்பாடும் மெய்கீர்த்தியாய் இல்லாமல், வென்ற நாடுகளுடன் சேர்த்து, தோற்ற மன்னர்களின் பெயர்களையும் சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்தும் மெய்கீர்த்தியாய் இல்லாமல். ராஜராஜனின் மெய்கீர்த்தியில் எந்த ஒரு இடத்திலும் தோற்ற மன்னர்களின் பெயர்களை சுட்டப்பெறவில்லை, ஆச்சர்யமாக சோழர்களின் ஜென்ம விரோதிகளான பாண்டியர்களை, சிங்களவர்களை கூட அவர் வென்றிருந்தாலும், அவர்கள் இருவரையும் வைரமுத்து "அழகான ராட்சசி' என்று பாடல் எழுதியதைப் போல் எதிரிகளை "முரட்டெழில் சிங்களர்' என்றும், "தேசுகொள்ளப்பட்ட செழியர்" என்றும் ராஜராஜன் மிகுந்த மரியாதையுடன் அழைத்திருக்கிறார்!.

- Dr. கலைக்கோவன்.


நமக்கு பாரதி "பெரிதினும் பெரிது கேள்" என்றார். அப்துல் கலாம் "கனவு காணுங்கள்" என...

Posted: 02 Nov 2014 07:12 AM PST

நமக்கு பாரதி "பெரிதினும் பெரிது கேள்" என்றார். அப்துல் கலாம் "கனவு காணுங்கள்" என்றார். இவற்றை இராஜராஜனுக்கு யார் கூறியது?. அவர் பெரிதினும் பெரிது கேட்டார், கனவு கண்டார், அதை திட்டமாக்கினார், அதோடு முடித்தும் காட்டினார்!. எங்கிருந்து கற்கள் வந்தது, அது எப்படி மேலேறியது என்ற கேள்வியை ஒதுக்கிவிட்டு. வளர்ந்த நாடுகளாய் இன்றைக்கு இருக்கும் பல நாடுகளில் வாழ்ந்த மனிதர்கள் காட்டுவாசிகளாய் இருந்த காலகட்டத்தில் இதை எப்படி யோசித்துப் பார்க்க முடிந்தது என்பது தானே பெரிய கேள்வி! தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் பார்த்தாலே மூச்சு பேச்சில்லாமல் போகும் விஷயத்தை, ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டி முடித்ததும் கோயிலைப் பார்த்து அந்த மனிதன் என்ன யோசித்திருப்பார்? கடைசி கல் உச்சியில் சென்று அமர்ந்ததும். "இதோடு பணி முடிந்தது" என்று 216 அடி உயரத்தில் இருந்து கொண்டு ஒருவன் கீழிருக்கும் தன் மக்களைப் பார்த்து உரக்க கத்தி இருந்தால். அந்த மக்கள் அன்றைக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சியில் குதூகளித்திருப்பார்கள்! பூமி உள்ளவரை இந்த கோயில் இருக்கும், இந்த கோயில் உள்ளவரை நம் மன்னனின் பெயரும் இந்த சமகாலத்தில் நம்முடைய பெயர்களும், நம் சோழ தேசத்தின் புகழும் நிலைத்திருக்கும் என்பதை அறிந்து அந்த மக்கள் எப்படி ஆரவாரித்திருப்பார்கள்!. சற்றே கண்களை மூடு யோசித்துப் பாருங்கள்!.

-சிவபாதசேகரன்.


காஞ்சிபுரத்திற்கு அருகே இருக்கும் களக்காட்டூர் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு கிராம அதிக...

Posted: 02 Nov 2014 07:10 AM PST

காஞ்சிபுரத்திற்கு அருகே இருக்கும் களக்காட்டூர் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு கிராம அதிகாரி தஞ்சை செல்ல விழைகிறார். இராஜராஜனை நேரில் சந்தித்து "உங்கள் நலனுக்காக விளக்கெரிக்க ஆசைப்படுகிறேன்" என்று இராஜராஜனிடன் அவர் சொல்ல அதற்கு இராஜராஜன் "என் ஒருவர் நலனுக்காக விளக்கெரிப்பதை விட இந்த நாட்டு மக்கள் நலனுக்காக வையுங்கள் என்று கூறி அவரை சமாதானம் செய்து ஊருக்கு அனுப்பிவைக்கிறார். ஊருக்கு திரும்பிய அந்த அதிகாரி மன்னன் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாட்டு மக்களின் நன்மைக்காக விளக்கெரித்ததோடு நில்லாமல் தங்களை இவ்வளவு ஆழமாக நேசிக்கும் தன் மன்னனுக்கும் சேர்த்து இரண்டு விளக்குகளை வைத்திருக்கிறார் அந்த அதிகாரி! மக்களுக்காக மன்னன். மன்னனுக்காக மக்கள்.

@சசி தரன்


அண்ணனைக் கொன்று அப்பனைக் கொன்றெல்லாம் ஆட்சியை பிடித்த மன்னர்களுக்கு மத்தியில். த...

Posted: 02 Nov 2014 07:09 AM PST

அண்ணனைக் கொன்று அப்பனைக் கொன்றெல்லாம் ஆட்சியை பிடித்த மன்னர்களுக்கு மத்தியில். தன் அண்ணன் அநியாயமாக கொல்லப்பட்ட பிறகு தனக்கு வரவேண்டிய அரசபதவியை துச்சமாக நினைத்து நியாயப்படி தன் சிற்றப்பன் தான் ஆள வேண்டும் என்று உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக்கொடுத்தவர் இராஜராஜன். உத்தம சோழன் 16 ஆண்டுகள் ஆட்சி செய்து விலகிய பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார் இந்த மனிதர். பதவியை விட்டுக்கொடுத்து பதினாறு ஆண்டுகள் அமைதியாக அமர்ந்திருந்த ஒரே மனிதன் உலக வரலாற்றிலேயே இவர் மட்டுமாகவே இருக்க முடியும்!.

@சசி தரன்


இராசராச சோழன் சமாதியில் மேல் கூரை அமைக்கபட்டுள்ளது... சுற்று சுவர் எழுப்பியவர்...

Posted: 02 Nov 2014 07:06 AM PST

இராசராச சோழன் சமாதியில் மேல் கூரை அமைக்கபட்டுள்ளது...

சுற்று சுவர் எழுப்பியவர் மலேசிய தமிழர் ஒருவர். மேல் கூரையை உள்ளூர் இளைஞர்கள் அமைத்துள்ளனர்...

இடம் : உடையாளூர், தஞ்சை மாவட்டம்


மக்கள் முதல்வர் விடுதலையாக.,மக்கள் முதல்வர் பதவியேற்க என்று பல்வேறு கோவில்களில்...

Posted: 02 Nov 2014 06:54 AM PST

மக்கள் முதல்வர் விடுதலையாக.,மக்கள் முதல்வர் பதவியேற்க என்று பல்வேறு கோவில்களில் "பொதுமக்கள்" நேர்த்திக்கடன் என்று வளைத்து வளைத்து ஜெயா ப்ளஸ் டிவியில் காட்டினார்கள்.

ஒருவர் கூட கோவிலில் கடவுள் சிலையைப் பார்க்கவில்லை,மனமுருக வேண்டியவாறும் இல்லை.எல்லா முகங்களும்,இடித்து பிடித்தபடி கேமராவை நோக்கிய படியே இருந்தது.கல்யாண வீட்டிற்கு வந்து பொண்ணு-மாப்பிளையிடம் கவரைத் தந்து விடீயோவிற்கு போஸ் தந்த மாதிரியே இருந்தது.

ஆஸ்காருக்கு அனுப்பி வைங்க..

@G Durai Mohanaraju

காடு திருத்தி விளைச்சல் நிலமாக மாற்றுபவர்களுக்கு மானியம் கொடுத்தான் ராசராசன், என...

Posted: 02 Nov 2014 06:49 AM PST

காடு திருத்தி விளைச்சல் நிலமாக மாற்றுபவர்களுக்கு மானியம் கொடுத்தான் ராசராசன், எனவே விளைச்சல் நிலங்கள் அதிகரித்தன, அந்த விளைச்சல் நிலங்களுக்கு பாசன வசதியையும் தவறாமல் செய்தான். தமிழக பாசன வரலாற்றில் சோழர்களின் காலம் பொற்காலம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இன்று அதே சோழநாட்டில் விளைச்சல் நிலங்களை ஒழித்து பாலையாக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் நிறுவனத்திற்கு மான்யம் கொடுக்கிறது அரசாங்கம். ஆறுகள், ஏரிகள் தூர் வாராமல் தமிழகம் பாலையாகிறது.

நாம் இராசராச சோழர் எந்த சாதி என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

கணியன் பூங்குன்றன்....

குறிஞ்சி நிலத்தில் குடியரசு நடத்தி, முல்லை நிலத்தில் முடியாட்சி நடத்தி, மருத நில...

Posted: 02 Nov 2014 06:42 AM PST

குறிஞ்சி நிலத்தில் குடியரசு நடத்தி,
முல்லை நிலத்தில் முடியாட்சி நடத்தி,
மருத நிலத்தில் பேரரசு நடத்திய,
எம் தமிழினத்தின் வழியில்,

இப்புவியின் பெரும்பான்மை நிலத்தை தன் காலடியில் ஆண்டு,
எம் இனத்தின் வலிமையை இவ்வுலகிற்கே பறைசாற்றிய எம் முப்பாட்டன்
அருண் மொழி வர்மனுக்கு பிறந்தநாள் இன்று!!!........

அவரை ஒரு சாதிக்கு மட்டுமே உரியவன் என்று சொந்தம் கொண்டாடுவதை விட,
அவரது வழியில் தமிழினம் மீண்டும் இவ்வுலகை ஆள தேவையான சூழ்நிலையை உருவாக்குவதும்,
தமிழர்கள் நாம் இழந்துவிட்ட வரலாற்று ஆளுமையை மீண்டும் பெறுவதுமே,
அவரது பெயரை உச்சரிக்கும் தகுதியை எவருக்கும் கொடுக்கும்!!!....

அப்படியான எம் முன்னோர்களை பெறுமைப்படுத்தும் திசையில் பயனிப்போம்...


எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க பயபுள்ளைக... :D

Posted: 02 Nov 2014 06:38 AM PST

எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க பயபுள்ளைக... :D


கத்தோலிக்க திருச்சபையின் போப்பான போப் ஃபிரான்சிஸ் உயிரிகளின் வளர்ச்சிக்கான 'டார்...

Posted: 02 Nov 2014 06:04 AM PST

கத்தோலிக்க திருச்சபையின் போப்பான போப் ஃபிரான்சிஸ் உயிரிகளின் வளர்ச்சிக்கான 'டார்வினின் படிவளர்ச்சி கொள்கையும்' (Theory of evolution), பிரபஞ்சத்தின் தொடக்கத்திற்கான 'பெருவெடிப்பு கொள்கையையும்' (Big Bang theory) உண்மை என தெரிவித்துள்ளார். இதற்கு மேலே அவர் சொல்லும் விஷயங்கள் முரண்பாடுகளாக இருந்தாலும், அவரே இந்த அறிவியல் விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதனால், சுமார் ஒரு நூற்றாண்டாக இந்த ஆகச்சிறந்த அறிவியல் கண்டுபிடுப்புகளை சரியாகவோ அல்லது சுத்தமாகவோ புரிந்துகொள்ளாமல் எதிர்த்து வந்தவர்கள், இப்போது, இவற்றில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முயற்சிப்பார்கள் என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம் மற்றவர் தெரிந்து கொள்வதை எதிர்க்காமலாவது இருப்பார்கள் என தோன்றுகிறது.
.
எதிர்கால உலக சமூகம் என்பது சிறப்பான ஒன்றாக இருக்கும் என்றால் அதன் மிக முக்கிய அம்சங்கள், அறிவியல் முறையில் உலகை புரிந்து கொள்வதும், உண்மையை திறந்த மனதோடு அணுகுவதும் தான். அந்த சமூகத்தை நோக்கிய மிக நீண்ட மனித பயணத்தில், இந்த அறிவிப்பு ஒரு தவிர்க்க இயலாத புள்ளி.

@சகலகலா ஜீன்ஸ்

"இவன் ரொம்ப சிம்பிளா இருக்கான்யா "என்பது பணக்காரர்களுக்காகவே உருவாக்கப்பட்ட வாக்...

Posted: 02 Nov 2014 04:48 AM PST

"இவன் ரொம்ப
சிம்பிளா இருக்கான்யா "என்பது பணக்காரர்களுக்காகவே உருவாக்கப்பட்ட
வாக்கியமாகவே இருக்கிறது..!

#ஏழையை
பார்த்து யாரும்
அப்படி சொல்வதில்லை!!!

@காளிமுத்து

Posted: 02 Nov 2014 04:39 AM PST


வரி ஒழுங்கா கட்டாத பயலுக பூரா சுவிஸ் பேங்ல அக்கவுண்ட் வச்சிருக்கான்.. அவங்களை ஒன...

Posted: 02 Nov 2014 04:24 AM PST

வரி ஒழுங்கா கட்டாத
பயலுக பூரா சுவிஸ்
பேங்ல அக்கவுண்ட்
வச்சிருக்கான்..
அவங்களை ஒன்னும்
பண்ணாதீக.
அப்பப்ப ஸ்டேட்
பேங்க்ல, பென்சன் பணத்த
செலவுக்கு எடுக்கறவன்
கிட்ட 20
ஓவா புடுங்குங்க...

@இளையராஜா

கடையேழு வள்ளல்கள் பற்றி அறிந்திருப்போம். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்கள்...

Posted: 01 Nov 2014 10:22 PM PDT

கடையேழு வள்ளல்கள் பற்றி அறிந்திருப்போம். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்கள் யார்?

#முதலேழு
#வள்ளல்கள்
1.சகரன்
2.காரி
3.நளன்
4.துந்துமாரி
5.நிருதி
6.செம்பியன்
7.விராடன்

#இடையேழு
#வள்ளல்கள்
1.அக்குரன்
2.அந்திமான்
3.கர்னன்
4.சந்தன்
5.சந்திமான்
6.சிசுபாலன்
7.வக்கிரன்

#கடையேழு
#வள்ளல்கள்
1.பாரி
2.ஆய்
3.எழினி
4.நள்ளி
5.மலயன்
6.பேகன்
7.ஓரி

இன்னைக்கு என்ன ஸ்பெஷல்???

Posted: 01 Nov 2014 09:54 PM PDT

இன்னைக்கு என்ன ஸ்பெஷல்???


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


நீங்கள் மாடு வாங்கி மேய்கும் அளவு பெரிய பணக்காரா சார்? மாட்டின்அடக்கவி லை சுமார...

Posted: 02 Nov 2014 07:57 AM PST

நீங்கள் மாடு வாங்கி மேய்கும்
அளவு பெரிய பணக்காரா சார்?

மாட்டின்அடக்கவி
லை சுமாராக 30,000ஒருநாள்
வட்டி15 ரூபாய்,மாட்டுகொ
ட்டகைசெலவு 50,000
ஒருநாள் வட்டி 25ரூபாய்,புல்
மற்றும் தீவனம் வளர்க்கும்
நிலத்தின்
மதிப்பு 300,000ஒருநாள்
வட்டி150ரூபாய், ஒரு நாள்
தீவன செலவு 6
கத்தை சோளதட்டு210
ரூபாய்,கலப்பு தீவனம் 100
ரூபாய்,தவிடு 50 ரூபாய்
பராமரிப்பு செலவுகூலி (அட்வான்ஸ்20000
,30000
வாங்கிகொண்டு ஓடிவுடும்
ஆட்கள் கணக்கு இதில்
சேர்க்கபடவில்லை ) 200
ரூபாய்,கூட்டுறவ
ு சங்கத்திற்க்க்க
ு பால்கொண்டு செல்ல
வாகனம்,பெட்ரோல்
செலவு(செல்லும் வழியில்
போலிஸ் மாமூல் சேர்க்கமல்)
,15
ரூபாய் ,மருத்துவசெலவு (மாட்டிடம்
உதைபடுவது,மாட்ட ுகாலில்
மிதிபட்டு விரல்கள்கானாமல்
போவது,மாட்டுவால ில்
அடிபட்டு கண்
போவது இவைகள் சேர்க்காமல்)
10 ரூபாய் மொத்தமாக எந்த
விசேசங்களிலும்
கலந்துகொள்ளாமல்
மாட்டையே பார்த்து கொண்டு மாடு மேய்பதால்
பெண் கிடைகாமல் திருமணம்
செய்யாமல்
வாழ்கையை அர்பணம்
செய்தமைக்கு 5ரூபாய்
மொத்தசெலவு சுமாராக
800ரூபாய் ஒரு மாட்டில்
கிடைக்கும் பால் 12லிட்டர்
கன்றுக்கு 2 லிட்டர் போக 10
லிட்டர் விலை 25ரூபாய்=250
செலவு 775 பால்பணம்
250=நஸ்டம் 525
ஒரு லிட்டர் உற்பத்தியால்
நஸ்டம் 52.50 ரூபாய்

@ indupriya mp
..

காலை வணக்கம் தமிழர்களே .......

Posted: 01 Nov 2014 07:35 PM PDT

காலை வணக்கம் தமிழர்களே .......


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:)

Posted: 02 Nov 2014 08:31 AM PST

:)


யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப...

Posted: 02 Nov 2014 08:15 AM PST

யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.

உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கிறது
துடைப்பதற்கு
உன் கைகள் இருக்கிறது.

இனி யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..
உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை.

தோல்விகளை கண்டு அஞ்சாதே
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே
முதலில் உன்னை வென்று
பின் உலகை வெல்ல வா....

உடலில் உயிரும்
உணர்வில் துணிவும்
இருக்குவரை போராடு...

உன் எதிரிகளின் மூக்குகளை
உன் நம்பிக்கைகளால் உடை
நட அடுத்தவன்
கைகளைப்பிடித்து அல்ல
உன் கால்களைக்கொண்டு....!

(y) (y)

Relaxplzz

இதை ஷேர் செய்யுங்கள் நண்பர்களே ( இது மிக மிக முக்கியமான பதிவு) தமிழர்கள் நன்றா...

Posted: 02 Nov 2014 08:00 AM PST

இதை ஷேர் செய்யுங்கள் நண்பர்களே ( இது மிக மிக முக்கியமான பதிவு)

தமிழர்கள் நன்றாக படித்து தெரிந்து கொள்ளவும் அனுபவித்தவர்கள் சொல்லுகிறார்கள் ஏற்றுகொள்ளுங்கள் இதை உங்கள் நண்பர்களிடம் மற்றும் உங்கள் உறவினர்களிடம் கூறவும் .....

அரேபியாவில் ஆடு மேய்த்தவர் (வேண்டாம் வெளிநாட்டு மோகம்!)
நீண்ட பைஜாமா குர்தா.. கையில் ஒரு சூட்கேஸ். விமான நிலையத்தின் வெளியே தன்னைக் கடந்து செல்பவர்களிடம் "எக்ஸ்கியூஸ் மீ.. சார் ஒரு நிமிடம்" எனச் சொல்லி சூட்கேசைத் தூக்கிக் காண்பிக்கிறார் அந்த வாலிபர். சூட்கேசின் வெளிப்புறத்தில் 'அரேபியாவில் ஆடு மேய்த்தவன்' என எழுதப்பட்டிருந்தது. இவர் மனநலம் சரியில்லாதவரா.. என்ற ஐயம் தான் நமக்கும் முதலில் எழுந்தது. அவரிடம் பேசியபோது.. அவரது உயரத்தை விட அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது.

அவர் பெயர் சேரன். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். பொங்கல் தினத்தன்று நாம் அவரிடம் பேசினோம்.. அன்றைக்கும் சூட்கேஸ் சகிதம் மெரீனா பீச்சிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.. இனி சேரன் நம்மிடம்..

"திட்டக்குடியில், மனைவி, மகனுடன் வசித்து வருகிறேன். தொடக்கத்தில் டெய்லர் வேலை செய்து சிலருக்கு வேலைகொடுத்து வந்தேன். 1994களிலேயே ஆறாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சம்பாதித்து வந்தேன். வெளிநாடு போவதற்கு கடன் வாங்கி ஏஜெண்டிடம் எண்பதாயிரம்" கொடுத்தேன். 'வெளிநாட்டிலும் டெய்லர் வேலைதான் பார்ப்பேன்' என ஏஜெண்டிடமும் ஸ்டிரிக்டாகச் சொன்னேன்.

அவரும் 'என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. அங்க உங்களை ஆடுமாடு மேய்க்கவா அனுப்பப் போறோம். டெய்லரிங் விசா தான் வாங்கித் தருவோம்.'என்றார். இதெல்லாம் 1995-ல் நடந்தது. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, வெளிநாடு போக ஏற்பாடு செய்துவிட்டதாகச் சொல்லி கூட்டிட்டுப் போனாங்க.

மும்பையில் விமானம் ஏறி ரியாத்தில் இறங்கினோம். அங்கிருந்து அல்பஹா என்ற ஊருக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து நூற்றைம்பது கி.மீட்டர் தொலைவிலுள்ள காடும் மலையும் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏராளமான டென்ட் கொட்டகைகள் இருந்தன. சில கட்டடங்களும் இருந்தன. அதில் ஒரு கட்டட உரிமையாளர் முன்பாக என்னைக் கொண்டு போய் நிறுத்தினாங்க. மின்சார வசதி இல்லாத பகுதி அது.. 'இங்கு நமக்கு என்ன வேலை தரப்போறாங்க..' என யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என்னை கூட்டிச் சென்ற டிரைவரிடம் அங்கிருந்த உரிமையாளர் ஏதோ சொல்ல அவர் என்னிடம் அதை மொழி பெயர்த்தார். 'உனக்கு இங்கு ஆடு மேய்க்கிற வேலை. மாசம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளமும் ஆறு மாதத்துக்குப் பிறகு தான்.' என்றார். எனக்கு பூமியே பிளந்து அதுக்குள்ளாற நான் விழறது மாதிரி தோணுச்சு.

'எனக்கு டெய்லர் வேலை. செலவு போக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்னு சொல்லித்தானே கூட்டியாந்தீங்க..' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆடுமேய்க்கத்தான் மூன்றாண்டு ஒப்பந்தம் போட்டு உன்னைக் கூட்டிவந்தோம். எங்களை மீறி நீ வெளியில் போகமுடியாது. அப்படி போனால் நாங்க சொல்லவில்லையென்றாலும் கூட போலீசார் உன்னை கைது செய்வார்கள்..' என மிரட்டியதோடு பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். ஒரு தகரக் கொட்டகையைக் காண்பித்து, அங்கு போய் தங்கிக்கொள்.. என்றார்கள்.

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன். அதிகாலையில் தூங்கிவிட்டேன். முதலாளி வந்து பிரம்பால் அடித்து எழுப்பினார். கொஞ்சம் காய்ந்து போன ரொட்டித்துண்டுகளையும் ஐந்து லிட்டர் தண்ணீர் கேனையும் தந்து அறுபது ஆடுகளைக் காண்பித்து 'மேய்ச்சுட்டு வா..' என்றார். காலை எட்டு மணிக்கு கொளுத்தும் வெயிலில் ஆடுகளோடு கிளம்பினேன். மாலை ஏழு மணிக்கு களைச்சு போய் திரும்பினேன். கொஞ்சம் அரிசியும் பருப்பும் தந்து சமைச்சு சாப்பிட்டுக்கோ.. என்றார்.

மறுநாள் காலை ஐந்து ஜோடி வெள்ளை நிற பைஜாமா குர்தா தந்து 'போட்டுக்கோ.. இதை போட்டுட்டு தான் ஆடு மேய்க்கப் போகணும்' என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஷேக் மாதிரி கற்பனை செய்து கொண்டேன். கம்பீரமாக நடந்து ஆடு மேய்க்கப்போனேன்.

அன்று மாலை வீடு திரும்பியதும் முதலாளி என்னை ஏற இறங்க பார்த்துட்டு கடுப்பானார். கோபத்துடன் உள்ளே போனவர் பிரம்புடன் வந்து என்னை விளாசினார். காரணம் புரியாமல் அடி வாங்கிக்கொண்டேன்.
"எதுக்கு அடிச்சீங்க-?' என்றேன். வெள்ளை பைஜாமாவில் ஒட்டியிருந்த அழுக்கைக் காண்பித்து, 'ஆடு மேய்க்க அனுப்பினால் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறாய்.. இனி அப்படி நடந்தால் தொலைச்சுப்போடுவேன்' என்றார். அப்போது தான் அவர் வெள்ளை நிற பைஜாமா தந்ததன் மர்மம் புரிந்தது.

என்னைப் போல தமிழர்கள் பலர் ஆடு மேய்ப்பதைப் பார்த்தேன்.
ஆறு மாதம் முடிந்ததும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தந்தார்கள். அது என் சாப்பாட்டுக்கே செலவானது. அதுவும் பாதி வயிறுக்குத் தான் சாப்பிட முடிந்தது. கொஞ்சம் அதிகமாக சம்பளம் தாருங்க.. என்றால் போலீசில பிடித்து கொடுத்துடுவேன் என மிரட்டினாங்க. என்னைப் போல லட்சக்கணக்கான தமிழன் அங்கு இப்படி வேலை செய்கிறான். நகர்புறங்களில் வாழும் தமிழன் காரைத் துடைத்தும் கடைகளைப் பெருக்கி கழுவிவிட்டும் சொற்பமாக சம்பாதிக்கிறான். யார் முகத்திலும் நீங்கள் சிரிப்பைப் பார்க்கமுடியாது.

அங்கிருக்கும் தமிழர்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் இருந்தாலும் யாருக்கும் யாராலும் பொருளாதாரரீதியாக உதவி செய்யமுடியாது. கவலையைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும்.

மூணு வருசத்துக்குப் பிறகு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பினாங்க. ஊருக்கு வந்ததும் எனக்கு மனதே சரியில்லை. ஏமாத்திப் போட்டாங்களேங்கிற வருத்தம். கூட்டிட்டுப் போய் ஆடு மேய்க்க வைச்சுட்டாங்களேன்னு கோபம். குடிக்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் எனக்குள் தெளிவு பிறந்தது. 'எதுக்கு குடிக்கணும். நம்மைப் போல பிறர் பாதிக்காமல் இருப்பதற்கான சமூகச் சேவையைச் செய்யலாமே' எனத் தோன்றியது. உடனடியாக சில மாத குடிப்பழக்கத்தை உதறினேன்.

என்ன செய்யலாம் என யோசித்தபோது தான் சூட்கேசில் 'வெளிநாட்டில் ஆடுமேய்த்தவன்' என எழுதி வலம் வந்தேன். பலர் பார்த்துக் கேட்டார்கள். விஷயத்தைச் சொன்னேன். வெளிநாடு செல்வதால் ஏற்படும் விளைவுகளை விளக்கினேன். நம் உழைப்பை உள்ளூரிலேயே கொடுக்கலாமே என்றும் அறிவுறுத்தினேன். 1998-லேயே இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிட்டேன். அரேபியாவில் ஆடுமேய்த்த அதே சீருடையில் தான் என் பிரசாரம் இன்றைக்கும் தொடர்கிறது.

இப்பவும் மாதத்துக்கு பதினைந்து நாள் சென்னை மெரீனா பீச், கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், விமானநிலையம் மற்றும் தமிழகத் திலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் செல்லும் விமானநிலையங்களுக்கு இதே சூட்கேசோடு போகிறேன். துண்டு நோட்டீஸ் கொடுக்கிறேன்.

இந்த சூட்கேஸ் சமாச்சாரத்தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் என் மனைவி தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தத் தொடங்கிவிட்டாள். இப்படி பெட்டியோடு போறது மனதுக்கு ஆறுதலாகவும் சமூக சேவையாகவும் இருக்கிறது. என்னை அப்படியே விட்டுவிடுன்னு என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். 'என் கூட வர்றப்ப மட்டும் இந்த சூட்கேஸைக் கொண்டு வராதீங்க..' என்றாள். இப்போது அதற்கும் ஓ.கே. நானும் அவ்வப்போது டெய்லர் வேலை பார்க்கிறேன்.

ஆரம்பத்தில் தனி மனிதனாக பிரசாரம் செய்து வந்த என் பின்னால் வெளிநாடு போய் நொந்து வந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்பு என்னையொத்த கருத்தைக் கொண்ட சிலரை இணைத்து மீட்பு அறக்கட்டளை உருவாக்கினேன். அவரவர் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் போட்டு அதை நடத்திட்டு வர்றோம்.

வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்து தகவல் வந்தவுடன் களத்தில் இறங்கிவிடுவோம். இதுவரை எழுநூறு பேரை மீட்டிருக்கிறோம்.
டிசம்பர் மாதம் மலேசியாவில் இறந்த அழகப்பன், பெருமாள் என்கிற இரு தொழிலாளர்கள் உடலை அரசின் செலவில் இங்கு கொண்டு வந்தோம். எங்கள் தொடர் முயற்சியால் அரசே இறங்கி வந்து செய்த வேலை இது.

நான் இப்ப சொல்றது ரொம்ப முக்கியம் சார்" எனப் பீடிகையோடு தொடர்ந்தார்..

"தன் பிள்ளை நல்லா படிக்கணும்னுதான் நினைக்கணுமே தவிர வெளிநாட்டில் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. இதை வலுவா சொல்லுங்க சார்.." என்றவாறே பெட்டியுடன் கிளம்பினார் சேரன்....

நன்றி நண்பர்களே ....

Thanks to Mr. Rajeev Rajan.

Relaxplzz


"முகங்கள்"

கவித.... கவித... <3 விக்கல் வரும்போதெல்லாம் யாரோ நினைக்கிறார்கள் என்று சொல்லதெல...

Posted: 02 Nov 2014 07:50 AM PST

கவித.... கவித... ♥

விக்கல்
வரும்போதெல்லாம்
யாரோ நினைக்கிறார்கள்
என்று சொல்லதெல்லாம்
பொய்...!
அது உண்மையாக
இருந்திருந்தால்
என் காதலி
விக்கியே
செத்திருப்பாள்..

;-) ;-)

Relaxplzz

ஜிகர்தண்டா பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 02 Nov 2014 07:40 AM PST

ஜிகர்தண்டா பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:)

Posted: 02 Nov 2014 07:30 AM PST

:)


நாங்களும் கேப்போம்ல டவுட்டு :P :P . டாக்டர், என் வலது கால் முட்டி ரொம்ப வலிக்கு...

Posted: 02 Nov 2014 07:15 AM PST

நாங்களும் கேப்போம்ல டவுட்டு :P :P
.

டாக்டர், என் வலது கால் முட்டி ரொம்ப வலிக்குது. என்ன செய்வது என்றே தெரியல

டாக்டர்: வயசாகுது இல்லையா? எலும்புகள் தேமானம் அடைவதால் வழி இருக்க தான் செய்யும். கவலைப்பட வேண்டாம்.

இடது காலுக்கும் அதே வயசு தானே ஆகுது? அது வலிக்க வில்லையே?

எப்படி?????!!!????

டாக்டர்: :O :O :O

# இப்ப பதில் சொல்லுங்க.. நாங்களும் கேப்போம்ல டவுட்டு :P :P

Relaxplzz

கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோப...

Posted: 02 Nov 2014 07:00 AM PST

கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.

அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.தன் மேல்துண்டால் துடைத்து விட்டு,

"இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர்.

அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை
பார்த்து சொன்னார்,

"ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால்
அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை.

அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது
காலில் விழுந்து அழுதான். அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்,

"இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார்.

அவன் எழுந்து கேட்டான்

"நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?"
என்று.

அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்,

"நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?"

Relaxplzz


ஆசிரியர்: " ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம்? மாணவன்: "இரும்பு" ஆ...

Posted: 02 Nov 2014 06:50 AM PST

ஆசிரியர்: " ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம்?

மாணவன்: "இரும்பு"

ஆசிரியர் : எப்படிப்பா ?" இரண்டின் எடையும் ஒன்று தானே ?"

மாணவன்: அய்யா "உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன். ஒரு கிலோ இரும்பையும் வீசுகிறேன், எது கனம் என்று நீங்கள் சொல்லுங்கள் "

ஆசிரியர் :???? :O :O

Relaxplzz

முதலில் யார் சமாதானம் ஆவது?? என்ற ஈகோ இல்லாத இடத்தில், எத்தனை முறை சண்டை வந்தாலு...

Posted: 02 Nov 2014 06:40 AM PST

முதலில் யார் சமாதானம் ஆவது?? என்ற ஈகோ இல்லாத இடத்தில், எத்தனை முறை சண்டை வந்தாலும் உறவு தோற்பதில்லை. ♥


:)

Posted: 02 Nov 2014 06:30 AM PST

:)


பேச்சுலர் to குடும்பஸ்தன்.. 1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9...

Posted: 02 Nov 2014 06:15 AM PST

பேச்சுலர் to குடும்பஸ்தன்..

1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள்.

2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப் பட்டிருக்கும்.

3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லி இருப்பீர்கள். இப்ப மனைவி கேட்கற ஒரு கேள்விக்கு குறைந்த பட்சம் நான்கு பதிலேனும் சொல்வீர்கள்.

4. நண்பர்களுடன் செலவழித்த பல மணி நேரம் இனி சிலமணி நேரங்களாகக் குறையும்.

5. எங்க டா போறேன்னு அம்மா கேட்டப்ப, வந்து சொல்லறேன்னு சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது.

6. ஒட்டிக் கொண்டே இருந்த உடன் பிறப்புகள் சற்று தூரம் சென்றதாய் உணர்வீர்கள்.

7. அடிக்கடி கைபேசியை வீட்டில் மறந்து விட்டுச் செல்வீர்கள்.

8. நான் வருகிறேன் என்று சொல்லாமல், நான் வரட்டுமா? என்று உங்கள் வீட்டுக்கு வர உங்கள் தந்தையே அனுமதி கேட்கும் நிலைமை வந்திருக்கும்.

9. எல்லாப் பக்கமும் பிரச்சனை என்ற போதும் அலுவலக வேலைகள் தடையில்லாமல் நடந்திருக்கும். இப்ப காலைல காபி போடறப்ப வந்த சண்டைக்கே வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பீர்கள்.

10. திருமணத்திற்கு பின், இழப்புகள் ஆண்களுக்கும் தான் என்றுச் சொன்னால் இங்கு யாரும் நம்பப்போவதில்லை என்பதை உங்கள் மனம் அடிக்கடி உங்களிடம் சொல்லிச் செல்லும்.

Relaxplzz

மனுஷன்டா :) (y) ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வ...

Posted: 02 Nov 2014 06:00 AM PST

மனுஷன்டா :) (y)

ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வது, திரைத் துறையில் என்னவிதமான சிரமம், சங்கடத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது?

நிறைய விஷயங்கள் இருக்கு. ஒண்ணு ரெண்டை மட்டும் சொல்றேன். தேங்காய்ல சூடத்தை வெச்சு கொளுத்தி கேமராவுக்குச் சுத்தி எடுத்துட்டு வருவாங்க. நான் எடுத்துக்க மாட்டேன்னு சொல்வேன்.

அப்ப சிலர், 'எங்க மனசு புண்படுமேனு நினைச்சாவது இந்தக் கற்பூரத்தைத் தொட்டு கண்ல ஒத்திக்கலாம்ல'னு கேப்பாங்க. உடனே, 'என் மனசு புண்படும் கிறதுக்காக நீங்க தேங்காய் சுத்தாம இருக்கலாம்ல'னு திருப்பிக் கேட்டுடுவேன்.

இதேபோல சினிமாவுல இன்னொரு மிகப் பெரிய காமெடி இருக்குது. ஒரு காட்சியில செத்துப்போற மாதிரி நடிச்சா, அப்படி நடிச்சு முடிச்ச பிறகு கேமராவை ஒருமுறை பார்த்து சிரிக்கச் சொல்வாங்க.

அதாவது 'ஆள் சாகலை... திரும்ப எந்திரிச்சு சிரிச்சுட்டார்'னு விதியை ஏமாத்துறோமாம். ஆனா, நான் சிரிக்க மாட்டேன்னு சொல்வேன். 'இல்ல சார் சிரிச்சிடுங்க'னு விடாப்பிடியா நிப்பாங்க. 'சிரிக்காட்டி நான் நிஜமாவே செத்துடுவேன்னு பயப்படுறீங்களா?'னு கேட்பேன்.

யார் என்ன சொன்னாலும் சிரிக்க மாட்டேன்னு உறுதியா இருப்பேன். எங்க போனாலும் எனக்கு இது பெரிய போராட்டமா இருக்கும்.

அதே மாதிரி ஈழப் பிரச்சினையில், மனசுல அவ்வளவு ஆதங்கம், கோபம், சோகம் இருக்கு. அதை எல்லாத்தையும் மேடையில் கொட்டித் தீர்த்தால், கண்டிப்பா எனக்கு ஜெயில்தான்.

அப்படி நான் ஜெயில், கோர்ட், கேஸ்னு அலைஞ்சேன்னா, தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவாங்க. அதான் மனசுல இருக்கிறதைக்
கொட்டித் தீர்க்காமல் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல்.
அது என் மனசாட்சியை ரொம்ப உறுத்தும்!

- விகடன் மேடை

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் பசித்திரு... தனித்திரு... விழித்திரு... இப்படி மூன்றுமாக இருந...

Posted: 02 Nov 2014 05:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

பசித்திரு...
தனித்திரு...
விழித்திரு...
இப்படி மூன்றுமாக இருந்தால்
மூன்றின் முதலெழுத்தும் ஆன "பதவி"
நிச்சயம்...

Relaxplzz

பெற்ற பிள்ளைகளிடம் தங்கப்பதக்கம் சிவாஜி கணக்காக விறைப்பாக நடந்து கொள்பவர்களை காம...

Posted: 02 Nov 2014 05:37 AM PST

பெற்ற பிள்ளைகளிடம் தங்கப்பதக்கம் சிவாஜி கணக்காக விறைப்பாக நடந்து கொள்பவர்களை காமெடி பீஸாக்குவதற்கென்றே பிறப்பெடுக்கின்றன பேரப்பிள்ளைகள் !!.

- Kali muthu.


"சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 2

:)

Posted: 02 Nov 2014 05:30 AM PST

:)


இத சொன்னா என்னைய கேனையன்னு சொல்றனுங்க ;-) 1.சினிமாக் கூத்தாடிகளை கடவுளெனக் கொண்...

Posted: 02 Nov 2014 05:15 AM PST

இத சொன்னா என்னைய கேனையன்னு சொல்றனுங்க ;-)

1.சினிமாக் கூத்தாடிகளை கடவுளெனக் கொண்டாடும் தமிழன் இருக்கும்வரை ஒருகோடி ஆண்டுகளானாலும் இச்சமூகம் உருப்படப்போவதில்லை.

2.உங்களுக்குப் பிடிக்காத வரன் வருதா? கம்னு, வாக்காளர் அட்டையிலிருக்கிற படத்தைக் குடுத்தனுப்பிச்சிருங்க. கண்டிப்பா ரிஜக்ட் ஆகிடும்..

3.ஓட்ஸ் சாப்பிட்டா உடம்பு குறையுதாம், எனக்கென்னமோ ஓட்ஸ் தான் குறையர மாதிரி இருக்கு

4.மனைவி எவ்வளவுதான் திட்டி கழுவி கழுவி ஊத்துனாலும், அசையாம கல்லு மாதிரி கணவன் இருப்பதால்தான், "கல்லானாலும் கணவன்"னு சொல்றாங்க

5.டாஸ்மாக்கை நடத்தும் அரசு விவசாயத்தையும் ஏற்று நடத்தலாம்..

6.ரெண்டு வீலுக்கும் MRF டயர் போட்டாலும்... பிரேக் புடிச்சாதான் வண்டி நிற்கும்!!

7.படிச்ச ஃபார்முலா, தியரம் எல்லாம் பார்க்கிற உத்தியோகத்துல யூஸ் பண்ணனும்'னா வாத்தியார் வேலைக்கு தான் போகணும்

8.படைப்பை விமர்சிக்க படைப்பாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சிறந்த ரசனையாளனாய் இருந்தால் போதும்.

- களவாணிபய.

Relaxplzz

உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா? **************************************** *...

Posted: 02 Nov 2014 05:00 AM PST

உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா?
****************************************

**படிப்பை ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள்.

**தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம் குழந்தையுடன் இருப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

**இரவுச் சாப்பாட்டின் போதுகுழந்தையின் வகுப்புப் பற்றியும்,பாடத்தைப் பற்றியும்,நண்பர்கள் பற்றியும் பேச்சுக் கொடுங்கள்.

**அகராதியில் தினசரி ஒரு வார்த்தை கற்றுக் கொள்ளப் பழக்குங்கள்.

**வெளியூருக்குப் போனால் அவ்வூர் இருக்கும் இடம், போகும் வழி பற்றி விளக்குங்கள்.

.**குழந்தையை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள்.மிகச் சிறிய சுலபமான விஷயத்திற்குப் பாராட்டுவது தவறு.

**ஒரு புதிய விஷயத்தைக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டுமானால் ,அதற்குப் பழக்கமான வேறொன்றைக் காட்டி விளக்குங்கள்.

**எங்காவது செல்லும் போது,வழியில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளுக்கு விளக்கம் கொடுங்கள்.

**சாலை விதிகளைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்.

**குழந்தையிடம் அடிக்கடி சொல் விளையாட்டு விளையாடுங்கள்.

**ஓரிடத்துக்குப்போய் வந்த பின் அதைப்பற்றி வர்ணித்துப் பேசக் குழந்தையைக் கேளுங்கள்.

**குழந்தைகளை அடக்காமல் ,நிறையக் கேள்விகேட்க இடம் கொடுக்க வேண்டியது அவசியம்.புரிகிற மாதிரி முழுமையாகப் பதில் கொடுங்கள்.

**படிப்பது ஒரு சந்தோசமான விஷயம் என்பதை உங்கள் குழந்தை அறியும் வண்ணம் படியுங்கள்.

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்... மனிதராக வாழத்தான் அதிக...

Posted: 02 Nov 2014 04:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்...
மனிதராக வாழத்தான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது !!

- Kali muthu

ஆம்புலன்ஸ்சை பாத்தவுடனே ஒதுங்கி நிக்கிறவன் வெளிநாட்டுக்காரன்... ஆம்புலன்ஸ் பின்...

Posted: 02 Nov 2014 04:50 AM PST

ஆம்புலன்ஸ்சை பாத்தவுடனே ஒதுங்கி நிக்கிறவன் வெளிநாட்டுக்காரன்...

ஆம்புலன்ஸ் பின்னாடியே போனா சீக்கிரம் போயிடலாம்னு கண்டுபிடிச்சவன் நம்மூர்க்காரன்...

- Salem S N Arul

எந்த தருணத்திலும் விட்டுக்கொடுக்காத அன்பு தான் மேலானது..!! <3

Posted: 02 Nov 2014 04:40 AM PST

எந்த தருணத்திலும் விட்டுக்கொடுக்காத அன்பு
தான் மேலானது..!! ♥


:)

Posted: 02 Nov 2014 04:30 AM PST

:)


விஷாலின் திருட்டு விசிடி நடவடிக்கைகள் ஒவ்வொரு படம் வரும்போதும் படம் பிடிக்கப்பட்...

Posted: 02 Nov 2014 04:15 AM PST

விஷாலின் திருட்டு விசிடி நடவடிக்கைகள் ஒவ்வொரு படம் வரும்போதும் படம் பிடிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது. அவரும் யாரையாவது பிடித்து உலுக்கிக் கேள்விகள் கேட்கிறார்.

அறிவுத் திருட்டு குற்றம்தான், இவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் சில அடிப்படையான கேள்விகள்:

- அத்துமீறி ஒருவரின் இடத்தில் நுழைவதும் அவரை அடா புடா என்று ஏசுவதும் சட்டப்படி குற்றம். அவர் குற்றமற்றவராக இருந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்?

- திருட்டு விசிடி விற்பவர் சட்டத்தை மீறுகிறார் என்றால் இவர்கள் என்ன செய்கிறார்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு சட்டத்தை மீறுவோம் என்ற போட்டியா?

- காவல் துறை என்ன செய்கிறது? ஒவ்வொருவரும் தாங்கள் சந்தேகப்பட்ட நபரின் வீட்டுக்குள் அல்லது கடைக்குள் நுழைந்து சோதனையிடத் தொடங்கலாமா?

குறைந்த பட்சம் நான் பார்த்த வீடியோவில் காவல் துறையைச் சார்ந்த யாரும் இல்லை. இந்த செயல்களை அனுமதிப்பதன் மூலம் தன்னுடைய மதிப்பைத் தானே தாழ்த்திக் கொள்கிறது காவல் துறை.

- கடையில் டிவிடி வாங்கிப் பார்ப்பவர்களை விட டோரண்டுகள் மூலம் தரவிறக்கிப் பார்ப்பவர்களை என்ன செய்ய முடியும்? பெரும்பாலான படங்கள் பென் டிரைவ்களில்தான் சுற்றுகின்றன.

- இந்த வேகத்தை, உணர்ச்சியை சேரன், கமல் போன்றவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்குப் பின் நிற்பதிலும் காட்டலாமே? எனக்கென்னவோ அவர்கள் செய்வது தொலைநோக்குள்ள முயற்சியாகத் தெரிகிறது. ஆனால் இது போன்ற நேரங்களில் அவர்கள் திட்டமிட்டு தனிமைப் படுத்தப்படுகிறார்கள். இதன் பின்னணியிலும் திரைத்துறையினரே இருக்கிறார்கள். ரிஸ்க்தான், சில தலைகள் உருளும்தான். ஆனால் எந்த மாற்றமுமே அப்படித்தான்.

- ஆங்கிலப் படங்கள், பிற மொழிப்படங்கள், பாடல்களை அப்பட்டமாகக் காப்பி அடித்து பிறகு ரூம் போட்டு யோசித்த மாதிரி திரைத்துறையைச் சார்ந்தவர்களே கூச்சமின்றி பேசும்போது பைரசி ஒரு குற்றம் இல்லை என்ற எண்ணத்தை இவர்கள் விதைக்கிறார்கள். மக்களின் நேர்மையைக் கேள்வி கேட்கும் அதே நேரத்தில் திரைத்துறையும் தன்னை அலசிக் கொள்வது அவசியம்.

- தொழில் நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் அதை அரவணைத்துத் தொழில் செய்வது புத்திசாலித்தனம். படங்கள் ஒரே நேரத்தில் டிவிடி, டிடிஎச், ஐடியூன்ஸ், ப்ளே ஸ்டோர் என்று வெளியானால் குறைந்த விலையில் அனைவரும் காண வழி கிடைக்கும். திருட்டி விசிடிகள் தேவை குறைந்து தானாக ஒழியும். இப்போதைக்கு முப்பதாண்டு பழைய சடங்கு ஒன்றை வலிந்து திணிக்கும் முயற்சிதான் இங்கே நடக்கிறது. மாற்று முயற்சிகள் தியேட்டர் லாபிகளால் முடக்கப்படுகின்றன.

- ஷான்.

Relaxplzz

நேற்று கடைத் தெருவிற்கு சென்று கொண்டிருந்தேன் அங்கு ஒரு முதியவரை பார்த்தேன். அவர...

Posted: 02 Nov 2014 04:00 AM PST

நேற்று கடைத் தெருவிற்கு சென்று கொண்டிருந்தேன் அங்கு ஒரு முதியவரை பார்த்தேன். அவருக்கு சுமார் அறுபது வயது இருக்கும். ஒரு பிச்சைக் காரன் அவரிடம் தர்மம் கேட்டார், உடனடியாக பையில் இருந்து ஒரு பத்து காசை கொடுக்க அந்த பிச்சைக் காரருக்கு ஆத்திரம் வந்தது.. செல்லாத காச தர்மம் பன்னுறியே யா.. நீ எல்லாம் நல்லா இருப்பியா என்று திட்டிய படி சென்றார்.. என்ன கொடுமடா பத்து காச வேணாம்னு சொல்லுறானேனு முதியவர் புலம்பிக்கொண்டே சென்றார்..

பின்னர் ஒரு இட்லி கடையில் ரெண்டு இட்லி எவளோ அம்மா என்று கேட்டார். பத்து ரூபா என்றார் அந்த அம்மா.. என்னது பத்து ரூபாயா என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. ஏம்மா ரெண்டு இட்லி பத்து காசுதானமா பத்து ரூபாங்கற என்றார்... பெரியவரே எந்த லோகத்துல இருக்கீங்க பத்து காசெல்லாம் எப்போவோ செல்லாதுன்னு சொல்லிட்டாங்க... நாட்டுல என்ன நடக்குதுன் தெரியாம தோளுல துண்ட போட்டுகிட்டு கிளம்பி வந்துறது... போங்க பெரியவரே என்று அனைவரும் அவரை ஏளனம் செய்து சிரித்தனர்...

அவர் முகம் வாடிப் போனார்.. அவரிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன். அய்யா நான் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தேன்.. நீங்கள் எந்த ஊர்..?? என்ன செய்கிறீர்கள்? பிள்ளைகள் இருக்கிறார்களா? என்று கேட்டேன். நான் இதே ஊர் தான். பிள்ளைகள் இல்லை நான் ஒன்டிக்கட்டை என்றார். நீங்க செய்திகள் பார்ப்பது இல்லையா?? நட்டு நடப்புகள் எதையும் அறியாமல் இருக்கிறீர்களே.. ஐந்து பைசா பத்து காசு இதெல்லாம் செல்லாக் காசிகிவிட்டது. இரண்டு இட்லி பத்து முதல் இருபது ரூபாய் வரை விலை ஏறிவிட்டது. மலிவு விலை உணவகத்தில் ஏழைகுக்கு மட்டுமே கம்மி விலையில் உணவு கிடைக்கும். பணக்காரர்கள் ஐந்து நட்சத்திர உணவகத்தில் உண்பார்கள். பிச்சைக் காரனுக்கு தர்மம் செய்ய எண்ணினால் கூட பத்து ரூபாய் போட வேண்டும் இல்லை என்றான் நம்மையும் பிச்சை எடுக்க அழைப்பான். நம் நாடு வளர்ந்துவிட்டது. இந்தியா வல்லரசாக உயர்ந்து கொண்டிருப்பதால் தான் இந்த மாற்றங்கள் என்றேன்.

முதியவர் என்னைப் பார்த்து சிரித்தார்.. என்ன பெரியவரே சிரிகிறீங்க என்று கேட்டேன். முப்பது நாப்பது வருடத்திற்கு முன் ஒரு விபத்தில் நான் நினைவுகளை இழந்து படுத்த படுக்கையாக கோமாவில் இருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்புதான் நினைவு திரும்பியது, உடல்நலம் தேறியதும் ஊரை சுற்றி பார்க்க வந்தேன்.. எனக்கு நாட்டு நடப்பு தெரியும், இந்த நாற்ப்பது ஆண்டுகளில் இந்தியா இவ்வளவு மாறி இருக்கும் என்று நினைக்கவில்லை. என் காலத்தில் ஏழை பணக்காரன் இருவருக்கும் ஒரே விலையில் தான் இட்லி.. ஆனால் இப்பொழுது ஏழைக்கு மலிவுவிலை உணவகம், பணக்காரனுக்கு ஐந்து நட்சத்திர உணவகம்... இதற்கு பெயர் முன்னேற்றமா??? அனைத்து மக்களுக்கும் அனைத்து பொருட்களும் ஒரே விலையில் கிடைத்தால் அன்று தான் நம் நாடு முன்னேறியதாக அர்த்தம்...

இந்த ஏற்றத்தாழ்வை முன்னேற்றம் என்று சொல்பவன் மூடன் என்றார்... என் காலத்தில் பத்து ரூபாயை வைத்து ஒரு வாரம் சாப்பிடலாம், இந்த காலத்தில் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது இதற்க்குப் பேர் முனேற்றம்.. சிரிக்கத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றார்...

அவர் பார்பதற்கு கிறுக்கன் போல் இருந்தாலும் அவர் சொன்னது அனைத்துமே மறுக்க முடியாது உண்மை!

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஒரு வெற்றியின் போது உலகம் நம்மை பற்றி தெரிந்து கொள்கிறது .ஒரு...

Posted: 02 Nov 2014 03:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

ஒரு வெற்றியின் போது உலகம் நம்மை பற்றி தெரிந்து கொள்கிறது .ஒரு தோல்வியின் போது நாம் உலகை பற்றி தெரிந்து கொள்லாம்:)

#களவாணி பய

தோல்வி தரும் வலி(மை) உணரப்படாத இதயங்களில் வெற்றி வாழ்வதில்லை.. (Y)

Posted: 02 Nov 2014 03:40 AM PST

தோல்வி தரும் வலி(மை)
உணரப்படாத இதயங்களில்
வெற்றி வாழ்வதில்லை.. (Y)


:)

Posted: 02 Nov 2014 03:30 AM PST

:)


படித்ததில் மிகமிக சிரித்தது: இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான். அங்கே ஒர...

Posted: 02 Nov 2014 03:15 AM PST

படித்ததில் மிகமிக சிரித்தது:

இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு
செல்கிறான்.

அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய
கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதைப் பார்க்கிறான்.

இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன ?

எமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும்.

இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்??

எமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவன்: அப்படியானால் எங்கள் நாட்டு அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே தொங்கவிடப்பட்டுள்ளன?

எமன்: ஓ அவையா..!! அவை எங்கள் அலுவலகங்களில் மின்விசிறிகளுக்குப் பதிலாக தொங்கவிடப்பட்டுள்ளன .

பிடித்திருந்தால் பகிரவும்

Relaxplzz

படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்: ஆரோக்கியமான வாழ்க்க...

Posted: 02 Nov 2014 03:00 AM PST

படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்:
ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள் :

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்
கையில் சிறிதளவு உப்பைத்
தடவிக் கொண்டால் கையில்
சப்பாத்தி மாவு ஒட்டாது.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில்
பாத்திரங்களை கழுவினால்
பாத்திரங்கள் பளபளப்பாக
இருக்கும்.

*அரிசி மற்றும் காய்கறிகள்
கழுவிய தண்ணீரை வீணாக்காமல்
செடிகளுக்கு ஊற்றினால்
செடிகள் செழிப்பாக இருக்கும்.

*வெயில் காலத்தில் பெருங்காயம்
கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க
பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல்
பெருங்காய டப்பாவில் போட்டால்
பஞ்சு போல் மிருதுவாக
இருக்கும்.

*ரவா,மைதா உள்ள டப்பாவில்
பூச்சி, புழுக்கள் வராமல்
இருப்பதற்கு கொஞ்சம்
வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி,
புழுக்கள் வராது.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல்
இருக்க இஞ்சியின்
தோலை சீவி விட்டு கொஞ்சம்
தட்டி தயிரில் போட்டால்
புளிக்கவே புளிக்காது.

*காய்கறிகளை வேகவைக்கும்போது
அதிக தண்ணீர் வைத்து வேக
வைக்க கூடாது. ஏன் என்றால்
காய்கறிகளில் உள்ள வைட்டமின்
சத்துகள் போய்விடும். அதில்
உள்ள மனமும் போய்விடும்.
காய்ந்த
மிளகாயை வறுக்கும்போது நெடி வரும்.
அவை வராமல்
இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால்
நெடி வராது.

*பச்சை மிளகாயை காம்புடன்
வைக்காமல்
காம்பை எடுத்து விட்டு நிழலான
இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

*நெய் ப்ரெஷ்ஷாக
இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால்
ப்ரெஷ்ஷாக இருக்கும்.

*காபி டிகாஷன்
போடுவதற்கு முன்
சுடு தண்ணீரில் டிகாஷன்
பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன்
போட்டால் சீக்கிரம் காப்பித்தூள்
இறங்கிவிடும்.

*சீடை செய்யும்போது அது வெடிக்காமல்
இருப்பதற்காக சீடையை ஊசியால்
குத்திய பிறகு எண்ணெய்யில்
போட்டால் வெடிக்காது.

*சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும்
கட்டையில் முதலில்
உருண்டையாக
போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக
மடித்து உருட்டி போட்டால்
சப்பாத்தி மிருதுவாக
இருக்கும்.

*முட்டைகோசில் உள்ள
தண்டை வீணாக்காமல் சாம்பாரில்
போட்டு சாப்பிட்டால் மிகவும்
சுவையாக இருக்கும்.
கொழுக்கட்டை மாவு பிசையும்
போது ஒரு கரண்டி பால்
சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால்
விரிந்து போகாமல் இருக்கும்.

*எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில்
வைக்கும்போது உப்பைத்
துணியில் முடிந்து வைத்தால்
காரல் வாடை வராது.
இட்லி சாம்பாரில் கடைசியாக
மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்,
கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில்
போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில்
அரைத்து சாம்பாரில் போட்டால்
கூடுதல் சுவையாக இருக்கும்.

*சமையலில் உப்பு அதிகமாக
போய்விட்டால்
உருளைகிழங்கை அதில்
அறிந்து போட்டால்
உப்பை எடுத்துவிடும்.

*தோசை சுடும்போது தோசைக்கல்லில்
மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல்
இருந்தால் அதற்கு கொஞ்சம்
புளியை ஒரு வெள்ளைத்துணியில்
கட்டி, அதை எண்ணெய்யில்
தொட்டு கல்லில்
தேய்த்துவிட்டு தோசை சுட்டால்
நன்றாக வரும்.

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் கேள்வி கேட்கிறது ரொம்ப சிம்பிள்... பதில் சொல்றது ரொம்பக் கஷ்ட...

Posted: 02 Nov 2014 02:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

கேள்வி கேட்கிறது ரொம்ப சிம்பிள்...
பதில் சொல்றது ரொம்பக் கஷ்டம்...
இதை ஊட்டம்மாக்கள் புரிஞ்சுக்கிட்டா இந்நாள் மட்டும் இல்லை எந்நாளும் கணவர்களுக்கு நந்நாள் ஆகும்...

- சதீஷ் குமார் தேவகோட்டை