Friday, 24 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஏசி தியேட்டர்களில் 50 ரூபாயும் மற்ற தியேட்டர்களில் 30 ரூபாயும் மட்டுமே டிக்கெட்...

Posted: 24 Oct 2014 09:24 PM PDT

ஏசி தியேட்டர்களில் 50
ரூபாயும் மற்ற
தியேட்டர்களில் 30
ரூபாயும்
மட்டுமே டிக்கெட்
கட்டணம்
வசூலிக்கவேண்டும்
என்கிற அரசின்
உத்தரவை சினிமாக்காரங்க
மதிக்காதபோது,
திருட்டு விசிடி பார்க்காதீங்க
என்கிற அவர்களின்
வேண்டுகோளை மட்டும்
நாம் ஏன் மதிக்கணும்

டீவில காட்டுன சப்பாத்தி மேக்கர்ல சப்பாத்தி பொப்னு பூரி மாதிரி வருது!! வூட்ல இருக...

Posted: 24 Oct 2014 09:09 PM PDT

டீவில காட்டுன
சப்பாத்தி மேக்கர்ல
சப்பாத்தி பொப்னு பூரி மாதிரி வருது!!
வூட்ல இருக்கிற
சப்பாத்தி மேக்கர்ல
சப்பாத்தி அப்பளம்
மாதிரி வருது!!
குருமால
முக்காமண்நேரம்
ஊரபோட்டும் கடிக்க
மிடில!!

டீவில
பாத்துட்டு எர்வாமேட்டின்
வாங்குறவன் நிலைமைய
நெனச்சு மனச
தேத்திக்கிட்டேன்!

@சத்தி லிங்க்

திராவிடம் என்றால் என்ன??? தட்டுல இருக்கும் இட்லி தமிழன் உணவே அல்ல ஆரிய உணவுன்னு...

Posted: 24 Oct 2014 08:52 PM PDT

திராவிடம் என்றால்
என்ன???

தட்டுல இருக்கும்
இட்லி தமிழன்
உணவே அல்ல ஆரிய
உணவுன்னு சொல்லிட்டு இட்லிய
சட்டியோடு களவான்ட்டு ஓடுவது!!!

@சத்தி லிங்க்

விட்டுக்கொடுத்தல் என்பது "உனக்கு பிடிக்காததை நான் செய்யவில்லை. எனக்குப் பிடிக்கா...

Posted: 24 Oct 2014 01:49 PM PDT

விட்டுக்கொடுத்தல்
என்பது "உனக்கு பிடிக்காததை நான்
செய்யவில்லை. எனக்குப்
பிடிக்காததை நீ
செய்யாதே"
என்றே பெரும்பாலும்
பொருள்
கொள்ளப்படுகிறது.

@கனா காண்கிறேன்

எழுபதுகளுக்கு பிறகு கணவன்/மனைவிகளில் தங்களின் வாழ்க்கை பயணத்தை முதலில் நிறைவு செ...

Posted: 24 Oct 2014 11:46 AM PDT

எழுபதுகளுக்கு பிறகு கணவன்/மனைவிகளில் தங்களின்
வாழ்க்கை பயணத்தை முதலில்
நிறைவு செய்பவர்கள்
பாக்கியசாலிகள்!

@எழிலன்

வெட்கம் மானம் ரோசம் உள்ளவங்களா இருந்தா ............டீஸ ல் வெலை ஏற்றத காரணம் காட்...

Posted: 24 Oct 2014 11:06 AM PDT

வெட்கம் மானம் ரோசம்
உள்ளவங்களா இருந்தா ............டீஸ
ல் வெலை ஏற்றத காரணம்
காட்டி அத்தியாவசிய
பொருட்களோட வெலைய
எத்துன அத்தினி பேரும்
இப்ப
குறைங்கடா பார்க்கலாம்

#டீசல் விலை குறைப்பு

- களவாணி பய

ஸ்பேனரை யார் வேண்ணா கண்டுபிடித்திரு க்கலாம், ஸ்பேனர் லூசா இருந்தா ஒரு ரூபாய் காய...

Posted: 24 Oct 2014 09:25 AM PDT

ஸ்பேனரை யார்
வேண்ணா கண்டுபிடித்திரு
க்கலாம், ஸ்பேனர்
லூசா இருந்தா ஒரு ரூபாய்
காயினை கிரிப்புக்கு கொடுத்து போல்ட்டை திறக்கலாம்னு கண்டறிந்தவன்
தமிழன்

@பிரபின் ராஜ்

சேமிப்பு அவசியம் தான் அதற்காக நம்மை முழுவதும் வருத்தி நம் சந்ததிகளுக்கு சேமிக்க...

Posted: 24 Oct 2014 09:13 AM PDT

சேமிப்பு அவசியம் தான்
அதற்காக
நம்மை முழுவதும்
வருத்தி நம்
சந்ததிகளுக்கு சேமிக்க
அவசியம் இல்லை நாம்
வாழ்கையை ரசிக்காமல்

@franchis

உனக்கு பசி தீர்ந்ததுக்கு அப்பறம் நீ சாப்படற அந்த ஒரு இட்லி.. வேற ஒருத்தனுது - #க...

Posted: 24 Oct 2014 08:41 AM PDT

உனக்கு பசி தீர்ந்ததுக்கு அப்பறம்
நீ சாப்படற அந்த
ஒரு இட்லி.. வேற
ஒருத்தனுது - #கத்தி

நீ படம் எடுக்க
செலவு செய்ததுக்கு மேல
வசூலாகிற அந்த
காசு எல்லாம்... தமிழனோடது...

@இளையராஜா

"ஹலோ சைக்கியாட்ரிஸ்டுங்களா?" "ஆமாங்க" "கல்யாணம் ஆனதிலிருந்தே என் மனைவி எங்கிட்...

Posted: 24 Oct 2014 03:55 AM PDT

"ஹலோ சைக்கியாட்ரிஸ்டுங்களா?"

"ஆமாங்க"

"கல்யாணம் ஆனதிலிருந்தே என் மனைவி எங்கிட்டப் பேசவே மாட்டேங்கறா. நான் என்ன செய்யறேன் எங்க போறேன்னு ஒரு வார்த்தை கூடக் கேட்க மாட்டேங்கறா. கம்முன்னு இருக்கா. என்ன செய்ய டாக்டர்?"

"நீங்க எங்க இருக்கீங்க?"

"தென்காசியில் டாக்டர்"

"நேராக் காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் போங்க"

"சரி டாக்டர்! அப்பறம்...."

"நூத்தி எட்டு தேங்காய் ஒடைங்க"

"அப்பறம் சரியாயிடுமா டாக்டர்"

"சரியாகறதா? கடவுளே இப்படி ஒரு மனைவி அமைஞ்சதுக்கு உனக்கு ஆயிரம் நன்றின்னு சொல்லி வேலையைப் பாத்திட்டுப் போய்கிட்டே இருங்க"

@ராமானுஜம் கோவிந்தன்

The first discovery of rock painting in Tamil Nadu was at Mallapadi in Dharmapur...

Posted: 24 Oct 2014 01:40 AM PDT

The first discovery of rock painting in Tamil Nadu was at Mallapadi in Dharmapuri district in 1978 by K.V. Raman, then Head of the Department of Ancient History and Archaeology of the University of Madras

The first discovery of prehistoric paintings -- in white pigment and ascribed to the megalithic age -- was made in Tamil Nadu ... 1980, on a rock in Mallapadi in Dharmapuri District (which also has the largest concentration of rock paintings in the State). Of the 50 or so rock-cut paintings discovered it might be 500 B.C.

http://www.tnarch.gov.in/cons/paint.htm

In Tamil

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/mallapa.htm

Photo Courtesy: Manonmani Pudhuezuthu

https://www.facebook.com/photo.php?fbid=821112091237061&set=pcb.1442545455991982&type=1&theater

@Ancient Tamil Civilization


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


அக்டோபர் 24: ஆங்கிலேயே ஏகாதிபத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காக போராடியவர்களின்வ...

Posted: 24 Oct 2014 12:23 AM PDT

அக்டோபர் 24: ஆங்கிலேயே ஏகாதிபத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காக போராடியவர்களின்வீரம் செறிந்த முன்னோடிகளான மருது சகோதரர்கள் தூக்கிலிடப் பட்ட நாள் இன்று.


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


படித்ததில் பிடித்தது... என்னா ஒரு வில்லத்தனம்... கணவன் - செல்லம் எந்திாிடா நம்...

Posted: 24 Oct 2014 02:23 AM PDT

படித்ததில் பிடித்தது...

என்னா ஒரு வில்லத்தனம்...

கணவன் - செல்லம் எந்திாிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க

மனைவி - கடுப்புடன் கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகுல அதுக்குள்ள வந்துட்டாங்களா ? வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வர மாட்டாங்க, இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்

கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...
மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்

ஐந்து நிடங்கள் கழித்து...

கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி.
.
மனைவி - ஐயா....! ஜாலி

கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது

மனைவி (சற்று அதிா்ச்சியுடன்) - வந்தது எங்க அப்பா அம்மாவா ?

கணவன் (மனதிற்குள் சிாித்தி கொண்டே ) - ஆமா

கடவுள் உருவத்தை லெக்கின்ஸில் அச்சிட்டதை கண்டித்தவர்கள் தான்,லஷ்மி வெடி வாங்கி வெ...

Posted: 24 Oct 2014 01:55 AM PDT

கடவுள் உருவத்தை லெக்கின்ஸில் அச்சிட்டதை கண்டித்தவர்கள் தான்,லஷ்மி வெடி வாங்கி வெடிக்கிறார்கள்...

உபயோகமான வரிகள். படித்து பகிருங்கள் 1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலு...

Posted: 23 Oct 2014 11:21 PM PDT

உபயோகமான வரிகள். படித்து பகிருங்கள்

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.

சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

தனி கட்சி ஆரம்பிக்கப் போறார்னு சொன்னாங்க, பிஜேபி னு சொன்னாங்க,அதிமுக னு கூட சொன்...

Posted: 23 Oct 2014 09:59 PM PDT

தனி கட்சி ஆரம்பிக்கப் போறார்னு சொன்னாங்க, பிஜேபி னு சொன்னாங்க,அதிமுக னு கூட சொன்னாங்க... கடைசியில கம்யூணிஸ்ட்ல இல்ல சேர்ந்திருக்காரு.
#நீ_நடிகண்டா

போஸ்டர்ர்ர்: விஜய் முதல்வரா... விஜய் ரசிகர்கள் விஜய்க்கு நல்லது செய்யறாங்களா? இ...

Posted: 23 Oct 2014 09:19 PM PDT

போஸ்டர்ர்ர்: விஜய் முதல்வரா...

விஜய் ரசிகர்கள் விஜய்க்கு நல்லது செய்யறாங்களா? இல்லை கெட்டது செய்யறாங்களா? ஒண்ணும் புரியமாட்டேங்குது.கத்தி படத்தை வெளியே கொண்டுவருவதற்குள் படாதபாடு பட்டுட்டார்.இந்த நிலையில் திருச்சியில் கத்தி பட போஸ்டரில் முதல்வரே வருக என்று போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர் விஜய்யின் விசிறிகள்.....


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


iT'S OFFICIAL #Kaththi breaks all South film records on its first day -TOTAL -2...

Posted: 24 Oct 2014 06:53 AM PDT

iT'S OFFICIAL

#Kaththi breaks all South film records on its first day -TOTAL -23.80 CR TN/Kerala / Karnataka & NorthIndia-16.45Cr OVERSEAS-7.35CR. - A.R.M

Congratulations for creating a new record- 1st day = Rs 23.70 Cr . Awesome! - @Sri50

இந்தியாவுல விலைவாசிக்கு பிறகு சர்ர்ர்ர்ர்ருன்னு போறது ஹரியின் திரைக்கதை தான்.!!...

Posted: 24 Oct 2014 06:03 AM PDT

இந்தியாவுல விலைவாசிக்கு பிறகு சர்ர்ர்ர்ர்ருன்னு போறது ஹரியின் திரைக்கதை தான்.!!

#பூஜை

Next Blockbuster On The Way ..

Posted: 23 Oct 2014 11:13 PM PDT

Next Blockbuster On The Way ..


ஒரு அமேரிக்கன் மல்டி நேஷனல் கம்பேனி 200 விவசாய கிராமங்கள அழிச்சிருக்கு, அதுல எது...

Posted: 23 Oct 2014 12:23 PM PDT

ஒரு அமேரிக்கன் மல்டி நேஷனல் கம்பேனி 200 விவசாய கிராமங்கள அழிச்சிருக்கு, அதுல எதுத்து நின்ன கிராமம் "தன்னூத்து". அதுகாக அவங்க குடுத்த வெல 9 விவசாயிங்களோட உயிர். இந்த கொடுமைய உங்களுக்கு தெரியப்படுத்த முயற்சி பண்ணி,பண்ணி முடியல. 3 வேல பசி எடுக்கும் போது சாப்பாடு ஞாபக வர நமக்கு அத விவசாயம் பண்ணவங்களோட ஞாபக என்னய்காது வந்துருக்க. கடந்த 30 வருசத்துல 12,456 ஏரிகள் மூடபட்ருக்கு, 27 ஆயிரத்துக்கும் மேல குளங்கள் அழிக்கப்பட்ருக்கு, 7 ஆறுகள் மூடபட்ருக்கு, 1,67,512 ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்ருக்கு. தாமரபரணி ஆறுலயிருந்து ஒரு கோலா கம்பேனி ஒரு நாளைக்கு 9 லட்ச லிட்டர் தண்ணி எடுக்குறாங்க. இதுல விவசாயத்துக்கு தண்ணி எங்கயிருக்கும், விவசாயி தற்கொல பண்ணிக்காம என்ன பண்ணுவா. அவங்க பசிக்கு பிச்ச கேக்கல சார், விவசாயத்துக்கு தண்ணி கேக்குறாங்க. தன்னூத்து கிராமம் மட்டுமில்ல சொந்த ஊர விட்டு ஓடி போன அத்தன விவசாயிகளுதா. 20 வருசத்துக்கு முன்னால விவசாயம் பண்ணவ இன்னைக்கு சிட்டில கோயில் வாசல்ல பிச்ச எடுக்குறா, பாளத்துக்கு கீழ துணி தொவக்குறா, சாக்கட அள்றா. உங்கள்ள நெரய பேருக்கு தெரியாத ஒரு விஷயத்த சொல்றேன், இந்தியா முழுக்க ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி தற்கொல பண்ணிக்கிறா, அவங்க குடும்பமே தெருக்கு வருது இது கடந்த 10 வருசமா நடந்திட்டு வருது. அவங்களோட பரம்பரையே உங்களுக்கு சாப்பாடு போடுறதுக்காக வாழ்ந்த குடும்பம் கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது. 2002லயிருந்து இதுவரைக்கும் ஒரு 10 லட்ச விவசாயிகள் இந்த தொழிலயே விட்டு வேற வேலைக்கு போய்டாங்க. இப்போ மீத்தேன் வாயு, அத எடுக்குறதுக்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம் ரெண்டு ஃடிஸ்டிக்லையும் 1,64,819 ஏக்கர் நிலப்பரப்ப ஒரு மல்டி நேஷனல் கம்பேனி அழிக்கப்போது, அந்த விவசாய குடும்போயேல்லா பசில சாகபோது. 5000 கோடி கடன் வாங்குன ஒரு பியர் ஃபேக்ட்ரி ஓனர் என்னால அந்த கடன கட்ட முடியலைனு கை தூக்குறா, ஆனா அவே தற்கொல பண்ணிக்கல, அவனுக்கு லோன் குடுத்த அதிகாரிங்களும் தற்கொல பண்ணிக்கல, ஆனா 5000 ரூவா கடன் வாங்குன ஒரு விவசாயி அத கட்ட முடியாம, வட்டி மேல வட்டி ஏறி, பூச்சி மருந்து குடிச்சு தற்கொல பண்ணிக்கிறா. இதயெல்லா கவனிக்க சிட்டில இருக்க உங்களுக்கு நேர இல்ல, இத சொல்ல தா டீ.வி சேனல்ட கேட்டோ, ஆனா டீ.வில லேகியோவிக்கவும், சமையல் செய்யவும், டான்ஸ்க்கு மார்க்கு போடவும் டைம் இருக்கு, ஒரு கிராமோ அழிய போறத சொல்ல ரெண்டு நிமிஷ இல்ல. இந்தியாவுக்கு ஃபேக்ட்ரியே வேணாம்ணு நாங்க சொல்ல வரல, குடிக்குற பால்லயிருந்து தயார் பண்ற சோப்பு வேணா. முட்ட, மீனு, கேரட்லயிருந்து எடுக்குற பேர்னஸ் கீரீம் வேணா. தக்காளி, ஆரஞ்சு, பாதாம்ல தயாரிக்குற அழகு சாதண பேக்ட்ரி வேணா. இந்தியால விட்டமீண் குறைபாடுனால ஒரு நாளைக்கு 5000 குழந்தைங்க இறந்து போறங்கய்யா. பணக்காரே யூஸ் பண்ற ஒரு காண்டம்ல ஃஸ்டாபேரி ஃபேலேவர் வேணும்னா, ஒரு ஏழ குழந்த தன்னோட வாழ்க்கைய்ல ஃஸ்டாபேரிய நெனச்சு பாக்க முடியுமா...
(சாதாரண தண்ணி, அதுல என்ன அவ்லோ பணமா கிடைக்கும்)
யோவ்.... சாதாரண தண்ணியா...
2ஜினா என்னய்யா..?
அலைக்கட்றை.. காத்து..
வெறும் காத்தமட்டுமே வித்து கோடி கோடியா ஊழல் பண்ற ஊர்யா இது, செல்போன் ஆடம்பரம் தண்ணி அத்யாவசியம்.....

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


காமத்திற்கு மத்தியில் வாழும் காதல்! உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டு டெல்லியில் ஆசி...

Posted: 24 Oct 2014 09:00 AM PDT

காமத்திற்கு மத்தியில் வாழும் காதல்! உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டு

டெல்லியில் ஆசிட் வீச்சால் வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார்.

இந்தியாவின் தலைநகரம் டெல்லியை சேர்ந்தவர் லஷ்மி, வயது 24.

9 ஆண்டுகளாக தைரியமாக வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அழகு பெண், பார்ப்பவர்களுக்கு வினோத பொருளாய் தென்படுகிறார்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? யாரால் நேர்ந்தது? என்று ஆராய்ந்தால் மிக கொடுமையான சம்பவம் அவளது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது என்பது தான் உண்மை.

பள்ளிப்பருவ காலத்தில் குடும்பம்- நண்பர்கள் என அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு பட்டாம்பூச்சி போன்று சிறகடித்து கொண்டிருந்த காலம் அது.

15 வயதான போது, பக்கத்து வீட்டு தோழியின் சகோதரன் காதலிப்பதாய் கூறியுள்ளார். அத்தருணத்தில் காதலையும், காதலிப்பதாய் சொன்ன நபரையும் வெறுத்து ஒதுக்கியுள்ளார், பல்வேறு முயற்சிகள் செய்தும் அவ்விளைஞனின் முயற்சிகள் தோல்வியில் முடிந்து போனது.

இதனால் கோபமடைந்த அவ்விளைஞன், லஷ்மியின் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளான், துடிதுடித்துப் போனாள், இதன்பின் பத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டும் பலனில்லாமல் போனது.

எந்தவொரு ஆண்மகனும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை.

காலங்கள் கடந்து போக, அலுவலகம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தாள். அங்கு தான் அவளுக்கு அலோக் தீக்ஷித் என்ற சமூக ஆர்வலரின் நட்பு கிடைத்தது.

லஷ்மியின் வாழ்க்கையில் நடந்த சோகம், அலோக் மனதில் நீங்கா வடுவாய் இருந்தது. அவளை தனது துணைவியாக ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார், லஷ்மியின் சம்மதத்தை கேட்டுள்ளார்.

ஆனால் லஷ்மியோ தன்னைவிட அழகிலும், அறிவிலும் உயர்ந்தவர் என்ற காரணத்தால் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறார்.

உடனே சமூகத்தின் பார்வையில் கணவன்- மனைவி என்ற கோட்பாட்டிற்குள் நாம் நுழையாமல் நம் வாழ்க்கையை தொடருவோம் என்று அலோக் கூறவே, பச்சைக் கொடி காட்டியுள்ளார் லஷ்மி.

இருவரும் மிக சந்தோஷமாக தங்களது இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் அரங்கேறிவரும் கொடூரங்களுக்கு மத்தியில் இப்படியான காதலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.....

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் அம்மா முறுக்கு சுடும் போது மட்டும் சாமி பக்தி பயங்கரமா வந்துர...

Posted: 24 Oct 2014 08:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

அம்மா முறுக்கு சுடும் போது மட்டும் சாமி பக்தி பயங்கரமா வந்துரும் நமக்கு...

முதல் முறுக்கை கிண்ணத்தில் போட்டு சாமிக்கு முன்னாடி வச்சுருவேன்...
அப்பத்தான் அடுத்த முறுக்கு நமக்கு கிடைக்கும்...

#தீபாவளி_நினைவலைகள்

- சதீஷ் குமார் தேவகோட்டை

பகிரவும்

Posted: 24 Oct 2014 08:40 AM PDT

பகிரவும்


:P :P

Posted: 24 Oct 2014 08:30 AM PDT

:P :P


ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறே...

Posted: 24 Oct 2014 08:15 AM PDT

ஆசிரியர்: நான் உனக்கு முதலில்
இரண்டு கோழி தருகிறேன்.
அடுத்து இரண்டு கோழி தருகிறேன்.
இப்ப
உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும

மாணவன்: 5 இருக்கும் சார்!

ஆசிரியர்:
நல்லா கேளு.....
முதல்லே இரண்டு கோழி தர்றேன்,
மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப
உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?

மாணவன்: 5 தான் சார்.

ஆசிரியர்
(பெருமூச்சு விட்டவாறு):
உஷ்....முடியலடா . சரி, இதுக்குப்
பதில்
சொல்லு.

முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன்.
அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன்.
மொத்தம்
எத்தனை ஆப்பிள் இருக்கும்?

மாணவன்: 4 சார்.

ஆசிரியர்: தப்பிச்சேன்.... இப்ப
கோழிக்கு வருவோம் ,
2 கோழி தர்றேன். பிறகு 2
கோழி தர்றேன்.
உன்கிட்டே மொத்தம்
எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 சார்.

ஆசிரியர்: அடேய் லூசுப்பயலே.....
எப்படிறா 5 கோழி வரும்?

மாணவன்:
என்கிட்டே ஏற்கனவே வீட்டில்
ஒரு கோழி இருக்கு சார்.

ஆசிரியர்: ? ? ? :O :O

Relaxplzz

படத்தைப் பத்தியே பேசுரத நிறுத்திட்டு, படம் என்னத்தைப் பேசுதோ அது பத்திப் பேசத் த...

Posted: 24 Oct 2014 08:00 AM PDT

படத்தைப் பத்தியே பேசுரத நிறுத்திட்டு, படம் என்னத்தைப் பேசுதோ அது பத்திப் பேசத் தொடங்குங்கப்பா.

மல்டி நேசனல் கம்பெனிகள் நம் நாட்டுக்குச் செய்யும் துரோகத்தைப் பத்தி அந்த மல்டி நேசனல் கம்பெனியின் பணத்தைக் கொண்டே படம் எடுத்து மக்களுக்கு சொன்னார் என்றால்...

ஒரு மல்டி நேசனல் குளிர்பானத்தின் பிராண்ட் அம்பாசடரைக் கொண்டே, அந்த குளிர்பானத்தால் நாட்டுக்கு விளையும் அபாயத்தை மக்களுக்கு விளக்கிச் சொன்னார் என்றால்...

சமகால அரசியல்வாதிகளின் ஊழல்களை எல்லாம் அவங்க ஒத்துழைப்போடவே விவரமாய் படம் எடுத்துச் சொன்னார் என்றால்...

விவசாய நிலம் அழிவது பற்றி, விவசாயி தற்கொலை பற்றி, மீடியா இதை எல்லாம் கண்டுக்காதது பற்றி இதுபோல் வழக்கமாய் குறும்படத்தில் மட்டுமே வரும் சங்கதிகள் பற்றி சர்வதேச அளவிலான வியாபாரப்படத்தில் வரவைத்திருக்கிறார் என்றால்....

தம்பி முருகதாசு நமக்குப் பண்ணுரது நல்ல காரியந்தானே கண்ணுகளா?

படத்தைப் பத்தியே பேசுரத நிறுத்திட்டு, படம் என்னத்தைப் பேசுதோ அது பத்திப் பேசத் தொடங்குங்கப்பா.

தானும் பண்ணமாட்டோம், தள்ளியும் படுக்க மாட்டோம்னா எப்பிடி கண்ணுகளா.... :)

- குண சேகரன்

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் வெடிக்காத வெடிமருந்தை எல்லாம் ஒன்னுசேர்த்து வெடிகுண்டு ஆராய்ச...

Posted: 24 Oct 2014 07:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

வெடிக்காத வெடிமருந்தை எல்லாம் ஒன்னுசேர்த்து வெடிகுண்டு ஆராய்ச்சியில இறங்கி கையைச் சுட்டுக்கொண்டது

#அதுஒரு_தீபாவளிக்_காலம்

- விவிகா சுரேஷ்

தன்னம்பிக்கையின் சிகரம்.. (y)

Posted: 24 Oct 2014 07:40 AM PDT

தன்னம்பிக்கையின் சிகரம்.. (y)


:)

Posted: 24 Oct 2014 07:30 AM PDT

:)


உங்களுடையது உண்மையான காதலா? கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்... * உண்மையாக காதலின் ம...

Posted: 24 Oct 2014 07:15 AM PDT

உங்களுடையது உண்மையான காதலா? கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்...

* உண்மையாக காதலின் முதல் அறிகுறியே தியாகம் தான், காதலன்/காதலியின் சந்தோஷத்திற்காக எதையும் தியாகம் செய்வது.

* உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுடன், ஒவ்வொரு நாளும் ஸ்பெஷலாக உணரச் செய்வது, எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள்.

* உண்மையான காதலாக இருப்பின், நீங்கள் கஷ்டப்படுவதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது, நீங்களே எதிர்பாராதவிதமாக கஷ்டப்படுத்தினால் கூட அவர்கள் பதிலுக்கு உங்களை சந்தோஷப்படுத்தவே செய்வர்.

* உங்கள் காதலன்/காதலி சத்தியம் செய்து கொடுத்து எந்த ஒரு சூழ்நிலையிலும் அதனை மீறாமல் இருந்தால் உங்கள் மீது உயிரையே வைத்துள்ளார்கள் என்று அர்த்தம்.

* கஷ்ட காலத்திலும் உங்களை விட்டு விலகிவிடாமல், ஆறுதலாக இருப்பது, உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நிறைய கஷ்டத்தை தாங்கிக் கொள்வார்கள்.

* உங்கள் காதலன்/காதலி உங்களுக்கு பலவற்றை செய்தும், உங்களிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகி வந்தால், அந்த காதலை மிஸ் பண்ணிடாதீங்க!

Relaxplzz

இவர் யார் என்று தெரியுமா.??? இவர்தான் முனைவர் டெஸ்ஸி தாமஸ் ஐதராபாத்தில் உள்ள பா...

Posted: 24 Oct 2014 07:00 AM PDT

இவர் யார் என்று தெரியுமா.???

இவர்தான் முனைவர் டெஸ்ஸி தாமஸ் ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் அக்னி-5 ஏவுகணைக்கான திட்டப்பணி இயக்குனர். இந்தியாவில் ஏவுகணை திட்டப்பணி ஒன்றிற்கு தலைமை தாங்கும் முதல் பெண் அறிவியலாளர் என்ற பெருமை கொண்டவர்.

டெசி கேரளாவின் ஆலப்புழையைச் சேர்ந்தவர். திருச்சூரில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் புணேயில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பு கழகம் வழிப்படுத்திய ஏவுகணைக் கல்வியில் தொழில்நுட்ப முதுகலைப் பட்டம் பெற்றார்.

3000 கிமீ வீச்சுள்ள அக்னி-3 ஏவுகணைத் திட்டப்பணியில் டெசி இணை திட்டப்பணி இயக்குநராகப் பணியாற்றினார். தொடர்ந்து 2011இல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட அக்னி-4 ஏவுகணையின் திட்டப்பணியில் இயக்குநராகப் பணியாற்றினார். 5000 கிமீ வீச்சுள்ள அக்னி-5 திட்டப்பணிக்கு திட்ட இயக்குநராக 2009ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஐதராபாத்தில் உள்ள மேம்பட்ட அமைப்புகள் ஆய்வகத்திலிருந்து செயலாற்றினார். ஏப்ரல் 2012இல் இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

கடற்படையில் ஓர் உயர் இயக்குநரான சரோஜ் பட்டேலை மணந்துள்ள இவருக்கு தேஜஸ் என்ற மகன் உள்ளார்..

வாழ்த்துக்கள் மேடம்...!

She is the first woman scientist to head a missile project in India.

she is the Project Director for many missile project in Indian Defence Research and Development Organisation.
She was the Master mind and was responsible for success of 3,000 km range Agni-III missile project, Mission Agni IV project, 5,000 km range Agni-V in 2009.The missiles were successfully tested on 19 April 2012.

"We are all proud of our country. Agni-C is one of our greatest achievements"

Agni-V missile is most powerful and Dangerous weapon that will make the world fear India.
Once fired It cannot be stopped,It travels faster than a Bullet and can carry 1000 kg of nuclear weapon and It has 5000 km Range.
It can be configured to launch small satellite and
can be used later to shoot down the enemy satellites in orbits.
It can be launched only on direct order of the Prime minister.

Because of her India now features among the super powers

We salute her outstanding contribution for making India self-reliant in the field of missile technology.

She is the real hero. She isn't celebrity, she is ordinarily human with extraordinary compassion But Indian media forget her.

God bless her with strength.

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் புதுப்படத்துக்கு டிக்கெட் கிடைக்காம காலையில இருந்து நைட்டு வர...

Posted: 24 Oct 2014 06:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

புதுப்படத்துக்கு டிக்கெட் கிடைக்காம காலையில இருந்து நைட்டு வரைக்கும் கொலப்பசியோட தியேட்டரை காவல் காத்தது

#அதுஒரு_தீபாவளிக்_காலம்

- விவிகா சுரேஷ்

ஷூ-வில் செய்த நாய்கள்

Posted: 24 Oct 2014 06:40 AM PDT

ஷூ-வில் செய்த நாய்கள்


:)

Posted: 24 Oct 2014 06:30 AM PDT

:)


-டேய் எங்கடா போற ? -முறுக்கு செய்ய மாவு அரைக்க போறேன் -அதுக்கு ஏன்டா ஒளிஞ்சு ஒ...

Posted: 24 Oct 2014 06:15 AM PDT

-டேய் எங்கடா போற ?

-முறுக்கு செய்ய மாவு அரைக்க போறேன்

-அதுக்கு ஏன்டா ஒளிஞ்சு ஒளிஞ்சு போற ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.

.
..
.

-அம்மா தான் நைசா அரச்சுட்டு வரச்சொன்னாங்க

:D :D

Relaxplzz

!!..நான்கு சுவர்களுக்குள் எங்கள் வாழ்க்கை..!! நெஞ்செல்லாம் இளமையின் மோகம், ஒரு...

Posted: 24 Oct 2014 06:00 AM PDT

!!..நான்கு சுவர்களுக்குள் எங்கள் வாழ்க்கை..!!

நெஞ்செல்லாம் இளமையின் மோகம், ஒரு புறம்..!

பஞ்சாய் பற்றி எரியும் தனிமையின் பாரம் மறு புறம்..!!

சகோதிரிகளின் வாழ்க்கயைப் பற்றிய கவலை,

வீட்டிலோ தலைக்கி மேலாகக் கடன்..!!

சகோதரர்களின் படிப்பைப் பற்றிய கவலை,

புறப்பட்டோம் வெளிநாட்டிற்கு உடன்..!!

நிழலே இல்லாத பாலைவனம்..

இருப்பினும், அதுவே எங்களுக்கு உணவளிக்கும் பூங்காவனம்..!!

எங்களை வாட்டி எடுக்கும் இன்ஜிநியர் ஒரு பக்கம்..

அவரயும் வாட்டி எடுக்கும் manager மறு பக்கம்..

அனைவரயும் வரட்டி போல் வாட்டி எடுக்கும் வெயில் இருக்கின்றதே..,

அந்தோ...எங்கள் துக்கம்..!!

வேலை முடிந்து , வீட்டிற்குச் செய்யும் தொலைபேசி அழைப்பில்

வருமே ஒரு வகைப் புன்னகை..!!

அதற்கு இந்த உலகத்தில் இல்லை; ஈடு இணை..!!

கணவன் தன் மனைவியோடு..,

மகன் தன் தாயோடு,

தகப்பன் தன் மகனோடு,

சகோதரன் தன் சகோதரிகளோடு..

காதலன் தன்னை மனப்பதற்கான நேரம் வந்தும்,

தனக்காக காத்திருக்கும் அவனின் காதலியோடு.,

பேரன் தன் பாட்டியோடு..!!

அந்த தொலைபேசி அழைப்பு ஒன்று போதும்..,

எங்களின் உழைப்பின் களைப்பே இல்லாது போன்று ஆகிவிடும்..

எங்களுக்கு மாத உணவின் செலவிற்காக எடுப்பதைத் தவிர்த்த்து,

மீதத்த்தை இம்மி அளவில் கூட எங்களுக்கென சேர்த்து வைக்காமல் வீட்டிற்கு அனுப்பும் என் போன்ற இன்ஜிநியர்கள் எத்தனயோ பேர்-இருக்க,

பாவம்..!! கூலி தொழில் செய்யும் தொழிலார்களின் நிலமயைப் பற்றி என்ன சொல்வது..!

விடிந்ததும் காலெந்தரை (calender) பார்க்கும் பழக்கம்..

விடுமுறை நாள் வரும் வரைக்கும் இதுவே எங்களின் அன்றாட வழக்கம்..!!

பண்டிகைத் திருநாளோ,

இல்லை;

ஈதுப் பெருநாளோ..

எங்களுக்கு தெரிந்ததெல்லாம் பெட்ஷீட்டிற்குள் உறக்கம்..

அந்தோ... உறக்கம் கூட வராமல் கண்ணீர் எங்கள் கண்களில் ஒரு ஓரமாய் வடிந்திருக்கும்..!!

தலைப் பிள்ளையாய் பிறந்தது.

எங்கள் தலை எழுத்து தானோ..!!

சிந்தும் வேர்வை எங்களுக்கு பாரம் அல்ல..!!

இறைவன் எங்களுக்காக கொடுத்த வரம்..!!

(Dedicated to all the youths who r in abroad and also to all the elderly born kid in the family..)

- Faiz

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் நீர் விழும்போது 'ஸ்ஸ்ஸ்' என்று வலி தாங்காமல் கதறும் கல் தான்...

Posted: 24 Oct 2014 05:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

நீர் விழும்போது 'ஸ்ஸ்ஸ்' என்று வலி தாங்காமல் கதறும் கல் தான் தோசையை உருவாக்குகிறது

#பார்த்ததில்_பிடித்தது

முட்டையில் அழகிய முகம்... <3

Posted: 24 Oct 2014 05:40 AM PDT

முட்டையில் அழகிய முகம்... ♥


:)

Posted: 24 Oct 2014 05:30 AM PDT

:)


எவ்வளவு வெயிட்? ----------------------------- வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தா...

Posted: 24 Oct 2014 05:15 AM PDT

எவ்வளவு வெயிட்?
-----------------------------
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.

மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

"இது எவ்வளவு வெயிட் இருக்கும்?"

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

"இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல"

வாத்தியார் தொடர்ந்தார். "இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?"

"ஒண்ணுமே ஆகாது சார்"

"வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?"

"உங்க கை வலிக்கும் சார்"

"ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…"

"உங்க கை அப்படியே மரத்துடும் சார்"

"வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?"

"இல்லை சார். அது வந்து…"

"எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?"

"கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்"

"எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?"

# இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு. :)

Relaxplzz

என் பிள்ளைகளை கல்வியில் சிறந்து விளங்க செய்வேன் , கலைகளில் சிறந்து விளங்க செய்வே...

Posted: 24 Oct 2014 05:00 AM PDT

என் பிள்ளைகளை கல்வியில் சிறந்து விளங்க செய்வேன் ,
கலைகளில் சிறந்து விளங்க செய்வேன் என்பதையெல்லாம் விட...

பிள்ளைகளை, பிள்ளைகளின் பிள்ளைகளை சுத்தமான காற்றை சுவாசிக்க செய்வேன் என உறுதிகொள்வோம்...
இயற்கையை பாதுகாப்போம்..

- சரவண அரசு.


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் வெட்கம் மானம் ரோசம் உள்ளவங்களா இருந்தா ............டீஸல் வெலை...

Posted: 24 Oct 2014 04:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

வெட்கம் மானம் ரோசம் உள்ளவங்களா இருந்தா ............டீஸல் வெலை ஏற்றத காரணம் காட்டி அத்தியாவசிய பொருட்களோட வெலைய எத்துன அத்தினி பேரும் இப்ப கொறைங்கடா பார்க்கலாம் # டீஸல் விலை குறைப்பு

- களவாணி பய

அண்ணன் ரெடி, யாரு வர்ரா சண்டைக்கு...??? ;-)

Posted: 24 Oct 2014 04:40 AM PDT

அண்ணன் ரெடி, யாரு வர்ரா சண்டைக்கு...??? ;-)


:)

Posted: 24 Oct 2014 04:30 AM PDT

:)


ஐன்ஸ்டீன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் பரிசோதகர் அவரிடம் டிக்கெ...

Posted: 24 Oct 2014 04:15 AM PDT

ஐன்ஸ்டீன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் பரிசோதகர் அவரிடம் டிக்கெட் கேட்டார்... ஐன்ஸ்டீன் டிக்கெட்டை தேடி கொண்டிருந்தார்....

அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்ட பரிசோதகர்.... "பரவாயில்லை ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்தார்.

அபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறிப் பார்த்தார்.

அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். "ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு கஷ்டபடுகிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை." என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.

ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, "உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!" என்றார்.

உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர். அப்புறமென்ன…டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார்.

ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், "டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?" என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்.

Relaxplzz

நிலக்கடலை நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் ச...

Posted: 24 Oct 2014 04:00 AM PDT

நிலக்கடலை

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் எந்த அம்மாவும் என் அம்மா போல் இருக்க முடியாது என எல்லோரையும்...

Posted: 24 Oct 2014 03:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

எந்த அம்மாவும் என் அம்மா போல்
இருக்க முடியாது என
எல்லோரையும் நினைக்க வைப்பதே
அம்மாக்களின் அதிசயம்..! ♥

- Sheila Chowdry

உங்கள் குழந்தை பருவத்தில் இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தியிருந்தால் ஒரு லைக் ப...

Posted: 24 Oct 2014 03:40 AM PDT

உங்கள் குழந்தை பருவத்தில் இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தியிருந்தால் ஒரு லைக் போடுங்க .. (y)


:)

Posted: 24 Oct 2014 03:30 AM PDT

:)


ரசித்தது! ஒரு நேர்முகத்தேர்வுக்காக ஐந்து பெண்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்க...

Posted: 24 Oct 2014 03:15 AM PDT

ரசித்தது!

ஒரு நேர்முகத்தேர்வுக்காக ஐந்து பெண்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் ஒரு அறையில் அமர வைக்கப்பட்டனர். அங்கு தங்களுக்குள் அரட்டை அடித்துச் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

இதைக் கண்ட அதிகாரி தனது பணியாளரை அழைத்து அவர்களைப் பேசாமல் இருக்கச் சொல் என்றார்.

பணியாளர் போன சில நிமிடத்தில் அங்கு அமைதியாகி விட்டது.

அதிகாரிக்கு ஆச்சர்யம். அவர் பணியாளரிடம் விசாரித்தார்.

பணியாளர் சொன்னார். அந்தப் பெண்களிடம் "உங்களில் மூத்தவர் யார்?" என்றேன் அவ்வளவுதான். சத்தமே இல்லை..கப் ப் சிப்... :P :P

Relaxplzz