Thursday, 6 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகு தமிழ்நாடு!

Posted: 06 Nov 2014 07:00 PM PST

அழகு தமிழ்நாடு!


அழகு தமிழ்நாடு!

Posted: 06 Nov 2014 10:40 AM PST

அழகு தமிழ்நாடு!


பாலுட்டி, சோறூட்டி வளர்த்த பெற்றோர்களை அணாதை ஆசிரமத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டி...

Posted: 06 Nov 2014 09:43 AM PST

பாலுட்டி, சோறூட்டி வளர்த்த
பெற்றோர்களை அணாதை ஆசிரமத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் ஒரு "நாயை"கட்டி போட்டு பாலூட்டி, சோறூட்டி வளர்க்கிறது சமுகம்.

@உஸ்மான்

Posted: 06 Nov 2014 09:39 AM PST


அவங்களே கையோட குப்பைய கொண்டு வந்து கொட்டி, அவங்களே கேமராவுக்கு போஸ் கொடுத்து குப...

Posted: 06 Nov 2014 09:13 AM PST

அவங்களே கையோட
குப்பைய
கொண்டு வந்து கொட்டி,
அவங்களே கேமராவுக்கு போஸ்
கொடுத்து குப்பையை கூட்டிய
காட்சி... டெல்லியில்
பாஜகவினர் நடத்திய
கூத்து...


பனியாரம் செஞ்சேன்.. உங்க வீட்டுக்காரருக் கு புடிக்குமேனு கொண்டு வந்தேன்.. இவளுக...

Posted: 06 Nov 2014 08:34 AM PST

பனியாரம் செஞ்சேன்..
உங்க வீட்டுக்காரருக்
கு புடிக்குமேனு கொண்டு வந்தேன்..

இவளுகளால நான் எத்தன
தடவதான்
நெலத்துக்கு ரத்தம்
குடுக்கறது
:(

@N S Vel Rajan

Posted: 06 Nov 2014 08:05 AM PST


காதல் தோல்விதான் மிகப்பெரிய துன்பமென்று நினைத்துக்கொள்கிறார்கள், கல்யாணம் ஆகும்வ...

Posted: 06 Nov 2014 07:08 AM PST

காதல் தோல்விதான்
மிகப்பெரிய
துன்பமென்று
நினைத்துக்கொள்கிறார்கள்,
கல்யாணம் ஆகும்வரை..!

- ஷிலா

ATM ல 5 தடவைக்கு மேல பணம் எடுத்தால் (அட நம்ம அக்கௌண்டேருந்து தாங்க ) 20 ருபாய் க...

Posted: 06 Nov 2014 04:12 AM PST

ATM ல 5 தடவைக்கு மேல பணம் எடுத்தால் (அட நம்ம அக்கௌண்டேருந்து தாங்க ) 20 ருபாய் கூடுதலாக சார்ஜ் பண்ணுவாங்களாம்.. !!!!

அதனால நாம என்ன பண்ணனும்.. எல்லாருமே சிரமம் பார்க்காம
ஒரு 5-6 தடவை.. ஒவ்வொருத்தரும்..

பேங்குக்கு போய் வெறும் 100- 100 ருபாயா Withdraw பண்ணனும்..!!

இப்படியே ஒவ்வொரு 100 ருபாய்க்கும் பேங்க்ல கூட்டம் கூடணும்..

பேங்க்ல வேலை செய்யுறவங்க காண்டாகி அவங்களே போராட்டம் பண்ணனும்..
அந்த லெவலுக்கு போகணும்.. !!

அப்பதான் இந்த சட்டம் மாறும்.. நம்ம சவுகரியத்துக்கு தான் ATM மிஷின் வச்சிருக்காங்க..

ATM ல பணம் எடுக்க கூடாதுன்னா சம்பளத்தை Cash ஆ குடுக்க சொல்லுங்க..!

#இந்த விஷயத்தை நாம சீரியஸா எடுத்துக்கலேன்னா..
நம்ம தலைல மிளகாய் அரைப்பது தொடரும்..!!

மௌனத்தால் சாதித்தது ஒன்றுமில்லையென்றாலும், இழந்தது இல்லை. @களவாணி பய

Posted: 06 Nov 2014 03:11 AM PST

மௌனத்தால்
சாதித்தது ஒன்றுமில்லையென்றாலும்,
இழந்தது இல்லை.

@களவாணி பய

சிங்கார சென்னை!

Posted: 06 Nov 2014 02:49 AM PST

சிங்கார
சென்னை!


தேனி மாவட்டம் தப்பித்தது, சிக்கபோவது திருப்பூர் மாவட்டம்.... கேரள அரசின் அநீதி:...

Posted: 06 Nov 2014 02:14 AM PST

தேனி மாவட்டம் தப்பித்தது, சிக்கபோவது திருப்பூர் மாவட்டம்....
கேரள அரசின் அநீதி: பாம்பாற்றில் புதிய அணை!
====================================================

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமராவதி அணை 1958 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. மேலும் 26க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இதற்கு ஆண்டுக்கு 15 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், பெரும்பாலான ஆண்டுகளில் சுமார் 8 டி.எம்.சி. தண்ணீர்தான் வருகிறது.
பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய நதிகளின் மூலம் அமராவதி அணைக்கு தண்ணீர் வருகிறது.

தற்சமயம், தமிழக - கேரள எல்லையில் உள்ள மறையூர் அருகே காந்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டிசேரி என்ற இடத்தில் 26 கோடி செலவில் ஒரு புதிய அணை கட்ட திட்டமிட்டு, 03.11.2014 ஆம் நாள் திருவனந்தபுரத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி அவர்கள் அடிக்கல் நாட்டி உள்ளார். இந்த அணை கட்டப்பட உள்ள பட்டிசேரியில் நடந்த விழாவில், கேரள நீர் பாசனத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த அணை 75 அடி உயரத்தில், 440 அடி நீளத்தில் கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் தண்ணீரில் 2 டி.எம்.சி. அளவுக்கு பாதிக்கப்படும்.

காவிரி நடுவர் மன்றத்தில், காவிரியின் கிளை நதியான அமராவதியும் காட்டப்பட்டு இருப்பதால் காவிரி ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், கேரள அரசும் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், காவிரி ஆணையம், சுற்றுச்சூழல்துறை, நீர்வளம், மின்சாரத்துறை ஆகிய அமைப்புகளின் ஒப்புதலை பெறாமலேயே அணையைக் கட்ட முடிவு செய்துள்ளது சட்டவிரோதமான செயலாகும்.

கீழ் பாசனப்பகுதி அரசின் அனுமதி இல்லாமல் மேல் பகுதியில் அணை கட்டுவது சட்டவிரோதமாகும்.

கேரள அரசின் இந்தப் புதிய அணை கட்டும் திட்டத்தால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 60ஆயிரம் ஏக்கர் பாசனப் பகுதி பாதிக்கப்படுவதுடன், பெரும்பகுதி பாலைவனமாகும் சூழ்நிலையும் ஏற்படும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையையும் இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும்.

தென்தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறில், பென்னி குக் அணையை உடைத்து தமிழகத்துக்கு பெரும் கேடு செய்ய அனைத்து வழிகளிலும் முயன்று தோற்றுப்போன கேரள அரசு, கொங்கு மண்டலத்தின் வாழ்வாதாரங்களில் ஒன்றான பாம்பாற்றுக்குக் குறுக்கே புதிய அணை கட்ட முனைந்துள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

@வைகோ


Posted: 06 Nov 2014 02:14 AM PST


# படித்ததில் பிடித்தது # கடவுளே நான் இதில் ஜெயித்து விட்டால் உனக்கு பொங்கல் வைக...

Posted: 06 Nov 2014 01:59 AM PST

# படித்ததில் பிடித்தது #

கடவுளே நான் இதில் ஜெயித்து விட்டால் உனக்கு பொங்கல் வைக்கிறேன்
எனக்கு மட்டும் கேட்டது கிடைத்து விட்டால் உனக்கு கிடா வெட்டுகிறேன்
வருவோரெல்லாம் வியாபாரம் பேசுகிறார்கள்..

கடவுள் தீர்மானித்து விட்டார்.
நாளைக்கே கோவில் வாசலில் எழுதி ஒட்டிவிடவேண்டும்

"வெற்றி விற்பனைக்கு அல்ல" என்று..

ஜிம்முக்கு போன மொத ரெண்டு நாள் யாரயாவது புடிச்சு உதைக்கணும் போல இருக்கு, மூணாவது...

Posted: 06 Nov 2014 01:53 AM PST

ஜிம்முக்கு போன மொத
ரெண்டு நாள்
யாரயாவது புடிச்சு உதைக்கணும்
போல இருக்கு,
மூணாவது நாள் நம்மள
நாலு பேர் உதைச்ச
மாதிரி இருக்கு....

@காளிமுத்து

" தமிழர் சாதித்த சிற்பக்கலை " இடம் : திருக்குறுங்குடி, திருநெல்வேலி மாவட்டம்

Posted: 06 Nov 2014 01:17 AM PST

" தமிழர் சாதித்த சிற்பக்கலை "

இடம் : திருக்குறுங்குடி, திருநெல்வேலி மாவட்டம்


ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்த 2 லட்சம் தமிழர்களின் விண்ணப்பங்களை அற்ப காரணம் க...

Posted: 06 Nov 2014 01:12 AM PST

ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்த 2 லட்சம் தமிழர்களின் விண்ணப்பங்களை அற்ப காரணம் கூறி மத்திய அரசு நிராகரித்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.....

மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது அளிக்கப்படும் சான்றிதழ் நகல்களுக்கு "சான்றொப்பம் (Attested) தேவையில்லை" என்று முதலில் கூறியது.தெற்கு ரயில்வே தேர்வுகளுக்கு வேலை கனவோடு தகுதியுள்ள பல லட்சம் தமிழர்கள் விண்ணப்பித்தார்கள்.

தேர்வு நேர சமயத்தில் "சான்றொப்பம்" (Attested) இல்லாததால் 2 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது" என்று தேர்வு வாரியம் அறிவிக்கிறது.

தமிழ்நாட்டில் நிரப்பபடப்போகும் பணிகளுக்கு தமிழர்களால் தேர்வெழுத முடியாத நிலையை மத்திய அரசு வேண்டுமென்றே செய்துள்ளது.....

தமிழ்நாட்டில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களுக்கு வெளி மாநிலத்துக்காரர்கள் எல்லாம் தேர்வெழுதுகிறார்கள்.அவர்களுக்கு தேர்வில் கூடுதல் நேரம் போன்ற சலுகைகள் எல்லாம் கொடுக்கப்படுகிறது.

தமிழர்களாகிய நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலையை மத்திய அரசு திட்டமிட்டு செய்துள்ளது.....

@நல்ல சிவம்

1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்.. யாரும் போராடவில்லை... மல்டி பிளெகஸ் தியேட்டர்களில...

Posted: 06 Nov 2014 12:12 AM PST

1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்..
யாரும் போராடவில்லை...

மல்டி பிளெகஸ் தியேட்டர்களில்
1/2 லிட்டர் தண்ணீர் 25 ரூபாய்..
யாரும் போராடவில்லை..
புட்டிகளில் அடைக்கப்பட்ட
300 மிலி குளிர்பானத்தின் விலை
70 ரூபாய்..
யாரும் போராடவில்லை..

திரையரங்குகளில்
டிக்கெட் விலையுயர்த்தி
மூன்று நாட்களுக்குள்
கொள்முதலையும் லாபத்தையும்
ஈட்டும் யுத்திக்கு எதிராக
யாரும் போராடவில்லை...

வணிக வளாகங்களில்
ஒரு இட்லி 30 ரூபாய்..
யாரும் போராடவில்லை..
100% விலையுயர்த்தி
30% தள்ளுபடியோடு விற்கும்
துணிக்கடைகளுக்கு எதிராக
யாரும் போராடவில்லை..

பால்விலையேற்றத்திற்கெதிராக
போராட்டம்..!

அநாவசியங்களுக்கு
அதிகமாய்ச் செலவழிப்பவர்கள்
அத்தியாவசியங்களுக்கு
செலவழிக்கத் தயங்குவது
பெருவணிகர்களின் சூத்திரங்கள்
வெற்றி பெற்றிருப்பதன் சாட்சி..

சுருக்குக்கயிறை ஊஞ்சலெனவும்
ஊஞ்சலை சுருக்கெனவும் பார்க்கும்படி
குருடாக்கப்பட்ட சமுதாயமாய் மாறியாயிற்று..

பால்விலையேற்றம்
மாடுகளை மட்டுமே நம்பிவாழும்
ஏழை விவசாயிகளின் மனங்களில்
சிறு மகிழ்ச்சியை எழுதியிருக்கிறது..

கொள்முதலுக்கும் வருவாய்க்கும்
நட்டக் குறிகளையும்
சமக்குறிகளையுமே
சந்தித்துக்கொண்டிருக்கும்
மாடுமேய்க்கும் விவசாயிக்கு
கூட்டல்குறியை அறிமுகப்படுத்தியிருக்கிறது
இந்தச் சிறிய பால் விலையேற்றம்..

போராடுபவர்களே
அறிந்து போராடுங்கள்..

வேர்களின் மீது
வெந்நீர் ஊற்றிக்கொண்டு
இலைகள்
செழித்திருக்க முடியாது...

@காளி முத்து

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


பழிக்குப் பழி! நன்றாக காய்த்து குலுங்கிக் கொண்டிருந்த அந்த மாந்தோப்பில் திருடன்...

Posted: 05 Nov 2014 07:01 PM PST

பழிக்குப் பழி!

நன்றாக காய்த்து குலுங்கிக் கொண்டிருந்த அந்த மாந்தோப்பில் திருடன் ஒருவன் நுழைந்து பழங்களை பறிக்க ஆரம்பித்தான்.

அந்த நேரம் பார்த்து தோட்டக்காரரும் அங்கு வந்து சேர்ந்தார்.

"ஏய்..! யாரப்பா..அந்த மரத்துலே..? என்னப்பா செய்து கொண்டிருக்கிறாய்?" – என்று அதட்டிக் கேட்டார்.

தோட்டக்காரரின் தோற்றம் பழுத்த பக்திமானாக காட்ட, அவரை ஏமாற்ற முடிவு செய்தான் அந்த கில்லாடி திருடன்.

இப்படி சொன்னான்: "கடவுளின் அடியானாகிய நான், கடவுளின் அருளான மரத்தில், கடவுள் தந்த கையால், கடவுளின் அருளால் காய்த்துத் தொங்கும் பழங்களை பறித்துக் கொண்டிருக்கின்றான்!" – என்றான்.

"அப்படியா…? சரி.. சரி.. கடவுளின் அடியானே இறங்கிவா…!" – என்று சொன்ன தோட்டக்காரர் திருடன் இறங்கி வந்ததும் அவனை பக்கத்தில் இருந்த மரத்தில் கட்டிப் போட்டார்.

தயாராக வைத்திருந்த பிரம்பால் நையப் புடைத்தார்.

அடி தாள முடியாமல் திருடன், "கடவுள் பக்தனான என்னை ஏன் இப்படி சாவடி அடிக்கிறீர்கள்?" – என்று கூப்பாடு போட்டான்.

தோட்டக்காரர், இன்னும்இரண்டு விளாசி விளாசுவிட்டு சொன்னார்:

"கடவுளின் அடியானின் தோட்டத்தில் திருடியதற்கு, கடவுளின் அருளான பிரம்பால்.. கடவுள் கொடுத்த கையால், கடவுளின் அடியான் உன்னை அடிப்பதில் என்ன தப்பு?
-Mr.Pamaran.


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்: சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு ச...

Posted: 05 Nov 2014 07:39 PM PST

சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்:

சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13-ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது. பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.

பா விவேக்


என்னை யாரும் தொலைக்கவில்லை. . . ஆனால் இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறார்கள் . #ந...

Posted: 05 Nov 2014 05:39 PM PST

என்னை யாரும்
தொலைக்கவில்லை. . .

ஆனால்

இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறார்கள் .

#நிம்மதி. .

@ Indupriya MP
...

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


படித்ததில் பிடித்தது..! பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்...

Posted: 06 Nov 2014 07:30 AM PST

படித்ததில் பிடித்தது..!

பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்.
எமன் சொன்னான்,
"நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்.அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்."

"நல்லது கடவுளே!ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?"
" ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!"
"அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்"
நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பில்கேட்ஸ்.
இதுவா நரகம்? ... தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி...
"ஆஹா ! அருமை !" இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை.." என்று பில்கேட்ஸ் சொன்னபோதும்
"வா சொர்கத்தை பார்க்கலாம்.." என சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார் எமன்.
அங்கே,
நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க .. அருமை. ஆனால் பில்கேட்ஸ்க்கு, நரகத்தை போல சொர்க்கம் அவரைக் கவரவில்லை..

நீண்ட யோசனைக்குப்பின்,
"தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" என்றார் பில்கேட்ஸ்.
"உன் விருப்பம்", எமன்.
இரண்டு வாரங்களுக்குப்பின்,
பில்கேட்ஸின் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார்.
அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் பில்கேட்ஸை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்.
"எப்படி இருக்கே பில்கேட்ஸ்?" என்றான் எமன்.
பில்கேட்ஸ் கடுமையான வேதனையோடு, ஈனமான குரலில்,
"முடியல... நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?"
எமன் சொன்னான்,
"அட லூசு பய புள்ள, அது SCREEN SAVER டா !"

ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...? தாடி வைத்திருக்கும் ஒ...

Posted: 06 Nov 2014 06:00 AM PST

ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...?

தாடி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை வைத்திருப்பார்கள். நம் ஊர்களில் பெரும்பாலானவர்கள் காதலில் தோல்வியுற்றால் தாடி வளர்ப்பார்கள். இருந்தாலும் இப்போதெல்லாம் நிறையப் பேர் ஸ்டைலுக்காகவே தாடி வளர்த்து வைத்திருக்கிறார்கள். தாடிகளில் மயங்கும் பெண்களும் உண்டு என்பது கூட உண்மை தான்!

இப்படி தாடி வளர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. இப்போது தாடி வளர்ப்பதால் கிடைக்கும் 7 உடல் நல நன்மைகள் குறித்துப் பார்ப்போமா...!

சரும புற்றுநோயைத் தடுக்கும்
சமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாம்.

ஆஸ்துமா, அலர்ஜிக்கு...
தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதனால் ஆஸ்துமாவையும் தவிர்க்க முடிகிறதாம்!

இளமையாக இருக்க...
தாடி வளர்த்திருப்பதால், சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், தாடி இல்லாதவர்களை விட நீண்ட ஆண்டுகளுக்கு இளமையான தோற்றத்துடனே இருக்கலாமாம். தாடி ஒரு வயோதிகத் தோற்றத்தை வேண்டுமானால் கொடுக்கலாம்; ஆனால், உண்மையில் தாடி வைத்திருப்பவர்கள் இளந்தாரிகள் தான்!

குளிரைத் தாங்க...
தாடி வைத்திருப்பதால் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியுமாம். எவ்வளவுக்கு எவ்வளவு தாடி அடர்த்தியாக உள்ளதோ, அந்த அளவுக்கு அது குளிருக்கு இதமானதாக இருக்குமாம்.

நோய்த் தொற்றுக்கள் குறைய...
பாக்டீரியா உள்ளிட்ட நோய்த் தொற்றுக்களைக் குறைப்பதற்கு தாடி மிகவும் உபயோகமாக இருக்கிறது. சுத்தமாக ஷேவ் செய்திருப்பவர்களை இந்த நோய்த் தொற்றுக்கள் எளிதாகத் தொற்றிக் கொள்ளுமாம்.

குறைகளில்லா சருமத்திற்கு...
ஷேவிங்கின் போது ஏற்படும் வெட்டுக் காயங்கள், பருக்கள் உள்ளிட்ட சருமக் குறைபாடுகள் தாடி வைத்திருப்பவர்களுக்குக் கிடையாது. அவை இருந்தாலும் தாடிக்குள் ஒளிந்து தான் கிடக்கும்!

இயற்கையான ஈரப்பதத்திற்கு...
தாடி வைத்திருப்பதால் உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால், தாடி இருந்தாலும் எப்போது முகம் ஜிலுஜிலுவென்றுதான் இருக்கும்.

நீங்களும் தாடி வளக்குறீங்களா பாஸ்??? என்ன ரீசன் ???


கைக்குழந்தைகளுக்கு கலப்படமில்லாத இலவச பால்! மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத...

Posted: 06 Nov 2014 04:30 AM PST

கைக்குழந்தைகளுக்கு கலப்படமில்லாத இலவச பால்!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு, ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனர். இதைப்பார்த்த நாம், என்னவென்று அருகில் சென்று பார்த்தோம்.
அங்கு ஒரு போர்டில் 'மற்ற ஊரில் இருந்து கைகுழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு தரமான பால் இலவசமாக வழங்கபடும், இப்படிக்கு R.குணா சுரேஷ்' என எழுதபட்டிருந்தது.

பாலில் கலப்படம், பால் விலை ஏற்றம் என இன்று தமிழ்நாடே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போது, இதை பார்த்ததும் ' அட பரவாயில்லையே, இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா..?' என்ற வியப்பு மேலிட, குணாசுரேஷை சந்தித்து பேசினோம்.

''எனக்கு சொந்த ஊர் அருப்புகோட்டை பக்கத்துல ஒரு சின்ன கிராமம். இப்ப பொன்மனியில குடும்பத்தோட வசிக்கிறேன். எனது தம்பியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு தன் கைக்குழந்தையுடன் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவு சென்றிருக்கிறார். அப்போது குழந்தை பசியால் அழுதிருக்கிறது. அந்த நள்ளிரவில் பேருந்து நிலையம் முழுவதும் அலைந்து ஒரு டீக்கடையில் பால் வாங்கி கொடுத்திருக்கிறார். அதை குடித்த கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தைக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

இங்கும் சில டீக்கடைகளில் பாலில் பலவிதமான கலப்படம் செய்றாங்க. மேலும், பால் கெட்டியா இருப்பதற்காக கிழங்கு மாவு சேர்க்கிறாங்க. அது பெரியவங்களுக்கே ஒத்துக்காது. குழந்தைகளுக்கு எப்படி இருக்கும். எனவே, தான் கைக்குழந்தைகளோடு வருபவர்களுக்கு கலப்படம் இல்லாத தரமான பாலை இலவசமாக வழங்கி வருகிறேன். இதனால் எனக்கு நஷ்டம் ஏற்படவில்லை. இதற்கு எனது தம்பியும் உதவியா இருந்து வருகிறார்'' என்றவர்,

''என்னுடைய இந்த சேவையை கேள்விபட்ட மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட மேயர், தமிழ்நாடு நுகர்வோர் மக்கள் இயக்க மகளிரணி என பலரும் பாராட்டினாங்க. இதுபோன்று எல்லா பேருந்து நிலையங்களிலும் தன்னார்வம் கொண்டவர்கள் செய்ய வேண்டும் என சொல்றாங்க. நான் இதை விளம்பரத்திற்காக செய்யல, இதுல எனக்கு பெரிய மன நிம்மதி கிடைக்குது. நாம போனாலும், நம்ம பேரு நிக்கனும்" என்கிறார்.

இவருக்கு இருக்கும் ஒரே ஆசை முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்பதுதானாம்.
வாழ்த்துக்கள்!

-ப.சூரியராஜ்


மாதவிடாய் நின்று போன பெண்களிடம் உறவு வைத்தால் அதை கற்பழிப்பு என கருத முடியாது -...

Posted: 06 Nov 2014 03:36 AM PST

மாதவிடாய் நின்று போன பெண்களிடம் உறவு வைத்தால் அதை கற்பழிப்பு என கருத முடியாது - டெல்லி உயர்நீதி மன்றம்!
.
.
3 , 4 வயது உள்ள குழந்தைகளை கூட விட்டு வைக்காத பன்னாடைகள் உலவும் நாட்டில், இந்த தீர்ப்பு அவர்களுக்கு சவுகரியமாக இருப்பது போல உள்ளது !!
.
பைத்தியகாரத்தனமான நியாயம்

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


இங்குள்ள பல பேருக்கு இவர் யார் என்று தெரிய வாய்ப்பில்லை! உண்மையில் விளையட்டு து...

Posted: 06 Nov 2014 09:01 AM PST

இங்குள்ள பல பேருக்கு இவர் யார் என்று தெரிய வாய்ப்பில்லை!

உண்மையில் விளையட்டு துறைக்கு என்று ஒருவருக்கு விருது வழங்க வேண்டுமானால்! அதற்கு இவரை தான் முதல் ஆளாக பரிசீலிக்க வேண்டும்!

*ஹாலந்து நாட்டில் இவரது ஹாக்கி மட்டையை உடைத்து அதில் காந்தம் ஏதும் வைத்து இருக்கிறாரா என சோதித்து இருக்கிறார்கள்!

*1932 இல் 37 போட்டிகளில் 133 கோல் , 1934 -35 இல் 43 போட்டிகளில் 201 கோல் என இவர் அசுரத்தனமாக அடிப்பதை பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் 'நீங்கள் ஹாக்கி வீரர் என்று சொல்லி ஒரு கிரிக்கெட் வீரரை அணியில் சேர்த்து விட்டீர்கள்! இவர் ரன்களை போல அல்லவா கோல்கள் அடிக்கிறார்!' என்று சொல்லி இருக்கிறார்!

*சில வெளிநாட்டு பத்திரிக்கைகள் 'இவர் மட்டையில் பசையை தடவி வைத்திருப்பார் போலும்! பந்து அவர் மட்டையுடனே செல்கிறதே!' என எழுதின!

*ஆஸ்திரிய நாட்டில் இவர் நான்கு கைகளுடன் இருப்பது போல சிலை வைக்கப்பட்டு உள்ளது! அந்த நான்கு கைகளும் தலா ஒரு ஹாக்கி மட்டையை கையில் பிடித்த வண்ணம் இருக்கும்!

*1905 இல் பிறந்து 1979 இல் மறைந்த தியான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 தான் இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது!

*ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என அந்தக் காலத்து பத்திரிக்கைகள் இவரை வர்ணித்தன! 'ஹாக்கியின் கடவுள் " என்றும் வர்ணிக்கப்படுகிறார்! இவரைப்போல அசுரத்தனமாக எந்த வீரரும் இன்று வரை ஹாக்கி ஆடியதில்லை!

*ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தியான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை; பலமுறை தவறியபின்னர் தியான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

*தியான் சந்தின் திறமையை பார்த்த ஹிட்லர் ஜெர்மன் குடியுரிமையுடன், ராணுவத்தில் கலோனல் பதவியும் தருவதாக சொல்லி இருக்கிறார்! அந்த சலுகையை தயான் சந்த் மறுத்து விட்டார்!

*சர்வதேச ஹாக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை இவர் அடித்துள்ளார்.

இவர் பெயர் "தியான் சந்த்".

Relaxplzz


காதலிக்க... அறிவு முக்கியமா...??? அழகு முக்கியாமன்னு கேக்குறாங்க.. !! கண்டிப்பா...

Posted: 06 Nov 2014 08:50 AM PST

காதலிக்க...
அறிவு முக்கியமா...???
அழகு முக்கியாமன்னு கேக்குறாங்க.. !!

கண்டிப்பா அழகு தான்
முக்கியம்..!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
# அறிவு இருக்குறவன்
எதுக்கு காதலிக்க
போறான்...?

:P :P

Relaxplzz

இந்த கட்டத்தில் விடப்பட்டிருக்கும் எண் எது..?

Posted: 06 Nov 2014 08:40 AM PST

இந்த கட்டத்தில் விடப்பட்டிருக்கும் எண் எது..?


(y)

Posted: 06 Nov 2014 08:30 AM PST

(y)


கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக...

Posted: 06 Nov 2014 08:15 AM PST

கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது.

''அண்ணே! நாலு டீ போடுங்கண்ணே? அதுல ஒண்ணு சீனி கம்மியா ஸ்டாங்கா இருக்கட்டும்.''
''ஒரு ரெண்டு டீ போடு.''
குரல் நாலாபுறம் இருந்தும் வந்தது.

டீக்கடைக்காரர் கூட்டம் அதிகமாக இருந்தும் பதட்டப்படாமல் டீ போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, ''ஐயா! சாமி ஒரு சாயா தாங்கய்யா.'' _எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

அழுக்கு உடையில் காவிப் பற்களுடன் துண்டை இடுப்பில் கட்டியவாறு அந்த நபர் தெரிந்தார்.

டீக்கடைக்காரர் எல்லோருக்கும் கண்ணாடி டம்ளரில் டீ கொடுத்து விட்டு, அந்த அழுக்கு நபருக்கு, அலுமினிய டம்ளரில் டீ போட்டு தன் விரல் அந்த நபர் கையில் பட்டு விடாதபடி டம்ளரை நீட்டினார்.

எல்லோரும் காசு கொடுக்க _ அந்த நபரும் காசு கொடுக்க கல்லாவில் போட்டார் கடைக்காரர். டீ கொடுத்து, அதைக் குடித்து விட்டு கடைக்காரரை ஏறிட்டு மெதுவாகச் சொன்னார் அந்த அழுக்கு ஆசாமி.

''ஐயா, நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன்னு எனக்குத் தனியா வேற ஒரு டம்ளரில் டீ தாரீங்க.

ஆனா நான் கொடுத்த காசையும் அவங்க கொடுத்த காசையும் ஒரே கல்லாவில் போடுறீங்களே!''

பதில் சொல்லத் தெரியவில்லை டீக்கடைக்காரருக்கு.

சாதிக்குப் பிறந்த எவனும் தமிழனே அல்ல
சாதிக்க பிறந்தவனே உண்மைத்தமிழன்!!!!

(y) (y)

Relaxplzz

மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க ! * நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் ச...

Posted: 06 Nov 2014 07:59 AM PST

மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க !

* நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.

* முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில்மனைவிஇருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.

* எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரி யாமல்கடலை' போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூடபலமணிநேரம் பேசு வார்கள். அதே போன்று நீங்களும்பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள்என்று அர்த்தம் இல்லை. உங்கள்குடும்பத்துக்குதேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்தவிவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.

* பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள்அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.

* சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்தஸ்வீட்டையும்வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களதுமனைவி அடை யும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.

* உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாகநடந்துகொள்வானோ, அதே போன்றுநடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.

* உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்' என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள்இப்படிகேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.

* மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள்மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலேபொழியும். மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம்அன்பாகஇருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காத லனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்!

அதனால் காதலியுங்கள், மனைவியை :)

Relaxplzz


குடும்பஸ்தன்_பாடசாலை

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் நாலு பேரு போற கார்ல சீட் பெல்ட் போடாம போனா தப்புன்னு சொல்றாங்...

Posted: 06 Nov 2014 07:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

நாலு பேரு போற கார்ல சீட் பெல்ட் போடாம போனா தப்புன்னு சொல்றாங்க .. அப்பிடின்னா 50 பேரு போற பஸ்ல சீட் பெல்ட் ஏன் இல்லை...

- களவாணி பய

கல்லணை - கழுகுப்பார்வையில்!

Posted: 06 Nov 2014 07:40 AM PST

கல்லணை - கழுகுப்பார்வையில்!


:)

Posted: 06 Nov 2014 07:30 AM PST

:)


அப்பா சொன்ன கதை ரெண்டு விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள் என்றார். (1) எப்பவு...

Posted: 06 Nov 2014 07:15 AM PST

அப்பா சொன்ன கதை

ரெண்டு விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள் என்றார்.

(1) எப்பவுமே வெளியில் செல்லும்போது உன்னோடு ஒரு துணையை அழைத்துச் செல்.

(2) முகம் தெரியும் வரை மாமியார் வீட்டில் இருக்காதே!

(1) ஒரு நாள் அவசரமாய் வெளியூர் செல்லும் வேலை ஒன்று இருந்தது. சுற்றியுள்ள பங்காளிகள் யாரும் அந்த நேரத்தில் இல்லை. நண்பர்களும் அவரவர்கள் வேலை விஷயமாய் எங்கெங்கோ சென்று விட்டனர். வீட்டிலிருந்த நாய் குட்டியை துணைக்கு அழைத்துச் சென்றேன். வழியில் பயணக் களைப்பில் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கி விட்டேன். விழித்துப் பார்க்கையில் ஒரு பாம்பு இறந்து கிடந்தது. நாய் அதனை கடித்துக் குதறி இருந்தது. அப்பா சொன்னதில் ஒரு உண்மை கற்றுக் கொண்டேன்.

(2) கல்யாணம் முடிந்து மாமனார் வீட்டுக்கு அழைக்கப் பட்டிருந்தேன். முதல் நாள் ஏக தட புடல். இலை நிறைய பட்சணங்களும், சாப்பாடும் வயிறு நிறைந்து போனது. இரண்டாம் நாள் முதல் நாளில் பாதி உணவு தான் கவனிப்பும் சுமார் தான். மூன்றாம் நாள் மீதி இருந்ததில் தண்ணீர் ஊற்றி, நீரும் சோறும் தட்டில் காட்சியளித்தது. குனிந்து கையால்அள்ளப் போன போது, ப்ளேட்டில் முகம் தெரிந்தது. அப்பா சொன்ன உண்மைகள் ப்ளேட்டில் உணர்த்தியது.

Relaxplzz

வெள்ளைக் கதருக்குள் கறுப்பாய் ஒரு பச்சைத் தமிழன் . நீ கல்விச்சாலையில் கற்றது கை...

Posted: 06 Nov 2014 06:59 AM PST

வெள்ளைக் கதருக்குள்
கறுப்பாய்
ஒரு
பச்சைத் தமிழன் .

நீ
கல்விச்சாலையில்
கற்றது கைமண் அளவு
ஆனால்
கல்வி சாதனையில்
கடந்தது கடல் அளவு.

விருது நகரின் விழுது
வெள்ளந்தி மனது.

நீ
சம்சாரக் கடலில்
மூழ்காத
கட்டைப் பிரம்மச்சாரி.
உன்னிடம்
பந்தமும் இல்லை
பந்தாவும் இல்லை.

நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்
ஆனால்
ஏட்டுச் சுரைக்காய்களுக்கு
வேட்டானவன்.

பலமான அணைகளைப்
பரிசாகத் தந்தவன் - பல
பாலங்கள் கட்டத்
தானே
பாலமாய் இருந்தவன்.

அறம் பேசிய
உன் வாய்
புறம் பேசியதில்லை
அடுக்கு மொழி தெரியா
உன் நாக்கு என்றும்
தடம் புரண்டதில்லை.

வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும்தான்
வாழ்க்கையில் இல்லை.

நீ செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்ந்தே ஈய்ந்தவன்
சமுக நீதிக்கே
சருகாய்த் தேய்ந்தவன்.

உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது
உனக்கு
வாரி சுருட்டவும் தெரியாது.

நீ
விடியலுக்கு வித்து
கல்விக் கதிரவன்
என்பதைக்
காலத்தே கண்ட
தொலை நோக்கி.

நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத
கையேடு.

நீ
நான்கு வேட்டி மட்டுமே
சொத்தாய்க் கொண்ட
நல்லவன்
நாடாளும் வித்தையில்
கரை கண்ட
வல்லவன்.

நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை
அதனால்தானோ என்னவோ
உம்மைத் தோற்கடித்த நாங்கள்
இன்னமும்
தலை நிமிரவே இல்லை !!

- ஈ ரா

Relaxplzz


"காமராஜர் ஒரு சகாப்தம்"

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் இந்தியாவிற்கு ராசயன உரம் விற்கும் எந்த நாட்டிற்கும் நம்மால் ர...

Posted: 06 Nov 2014 06:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

இந்தியாவிற்கு ராசயன உரம் விற்கும் எந்த நாட்டிற்கும் நம்மால் ராசயன உரத்தில் விளைந்த‌ காய்கறிகளை ஏற்றுமதி செய்திட முடியாது - நம்மாழ்வார்.

கர்நாடகாவில் உள்ள மருதீஸ்வரர் கோவில்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 06 Nov 2014 06:40 AM PST

கர்நாடகாவில் உள்ள மருதீஸ்வரர் கோவில்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


(y)

Posted: 06 Nov 2014 06:30 AM PST

(y)


நீதிமன்றம் ...விவாகரத்து வழக்கு.. ஜட்ஜ் : ஏப்பா நீ உன் மனைவியே அடிச்சி துன்புறு...

Posted: 06 Nov 2014 06:15 AM PST

நீதிமன்றம் ...விவாகரத்து வழக்கு..

ஜட்ஜ் : ஏப்பா நீ உன் மனைவியே அடிச்சி துன்புறுத்துவதா உன் மனைவி விவாகரத்து கேட்டு வழக்கு வந்துருக்காங்க....

கணவன்: என் மனைவி என் உரிமை
( கல்யாண் ஜீவல்லர்ஸ்)

நீதிபதி: உன் மனைவி பேச்சி கேட்டு நடந்தா ஆஹா இல்லன சுவாஹா
( லலிதா ஜீவல்லர்ஸ்)

மனைவி: ஐயா அடிச்சி நொறுக்கி என்ன சேதாரம் பண்றாருங்க ஜட்ஜ் ஐயா
(அடித்து நொறுக்கப்பட்ட சேதாரம்
கல்யாண் ஜீவல்லர்ஸ்)

ஜட்ஜ்: ஏப்பா மனைவி தங்கமான உறவு இல்லயா..
(ஜோஸ் ஆலுக்காஸ் இது தங்கமான உறவு)

மனைவி : ஐயா அவரோடு இனி என்னால குடும்பம் நடத்த முடியாது
பிரிச்சி விட்டுடுங்க ஐயா

நீதிபதி : நாங்க இருக்கோம்
(வாசன் ஐ கேர்)..

மனைவி : இனி இவர் தான் என் புது வாழ்கை துணை
( சன் லேண்டு ரீபைண்டு சன் பிளவர் ஆயில்)

;-) ;-)

Relaxplzz

தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி! நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க /...

Posted: 06 Nov 2014 06:00 AM PST

தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி!

நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம்.

தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும்.

ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும்.

மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்.

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் தமிழ் நாட்டில் கர்நாடகா பேங்க் இருக்கு, ஆந்திரா பேங்க் இருக...

Posted: 06 Nov 2014 05:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

தமிழ் நாட்டில்
கர்நாடகா பேங்க் இருக்கு,
ஆந்திரா பேங்க் இருக்கு,
பேங்க் ஆப் பரோடா இருக்கு
அலகபாத் பேங்க் இருக்கு
"பேங்க் ஆப் தமி்ழ்நாடு" ஏன் இல்லை ...?

- களவாணி பய

என்ன ஒரு புத்திசாலித்தனம்" :P

Posted: 06 Nov 2014 05:40 AM PST

என்ன ஒரு புத்திசாலித்தனம்" :P


:)

Posted: 06 Nov 2014 05:30 AM PST

:)


மாப்ளே இங்கிலீஷ் படம்னா இங்கிலீஷ் படம் தான்டா ;-) என்னடா சொல்ற ? . . . .. . .....

Posted: 06 Nov 2014 05:15 AM PST

மாப்ளே
இங்கிலீஷ் படம்னா
இங்கிலீஷ் படம் தான்டா ;-)

என்னடா சொல்ற ?
.
.
.
..
.

..
.

..

.
..
.
.
.
.
.
.
.
.
அதுல பாருடா
சமையல்காரன் கூட

பேசுறான்டா

இங்கிலீஷ்லயே. :P :P

Relaxplzz

வீட்டுல அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை..... தெரு குழாய்ல தண்ணிர் வருது.... நான்...

Posted: 06 Nov 2014 05:00 AM PST

வீட்டுல அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை.....

தெரு குழாய்ல தண்ணிர் வருது....

நான் போய் தண்ணிர் புடிக்கிறேன்...

ஒரு நண்பன் அந்தவழியை கடந்து செல்கிறான்...

போகும் பொழுது... " என்னல மக்கா பொம்பளையலு போல தண்ணி எடுக்குற ".....

//////////

அவனுக்கு என்ன பதில் சொல்லன்னு எனக்கு தெரியல...

ஏன்னா அவனுக்கு நல்லாவே தெரியும் எங்க அம்மாவுக்கு உடம்புக்கு சரி இல்லை என்று....

இப்போ தண்ணி புடிக்கனும்னா ஒன்னு எங்க அப்பா புடிக்கணும் இல்ல நான் புடிக்கணும் இல்ல தண்ணி வேண்டாம்னு சும்மா இருக்கணும்....

இவை அனைத்தும் அவனுக்கும் தெரியும்...

இருந்தும் இவ்வாறு வினவும் நண்பனிடம் என்ன பதில் கூற....

இருந்தும் கூறினேன்...

தண்ணி பிடிக்கறதால ஒருத்தன் பொம்பளையா உலகிற்கு தெரிந்தால்....

அந்த உலகில் நான் பெண்ணாகவே வாழ்துவிட்டு போகிறேன்....

படுத்த படுக்கையாய் தாயோ தாரமோ இருக்கும் பொழுதும் வீராப்போடு உதவாமல் இருப்பதுதான் ஆண்கள் என்றால் அப்படி பட்ட ஆணாக இருக்கவும் விரும்பவில்லை....

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் பெண்ணே ! நீயெல்லாம் மேக்கப் போட்டாதான் அழகு. நானெல்லாம் பொறந்...

Posted: 06 Nov 2014 04:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

பெண்ணே ! நீயெல்லாம் மேக்கப் போட்டாதான் அழகு.
நானெல்லாம் பொறந்ததுலருந்தே அழகு.. ;-)

- #களவாணி பய

சிறு வயதில் இது போன்று கல் வீடு கட்டி விளையாடி அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க....

Posted: 06 Nov 2014 04:40 AM PST

சிறு வயதில் இது போன்று கல் வீடு கட்டி விளையாடி அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:)

Posted: 06 Nov 2014 04:30 AM PST

:)


வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக...

Posted: 06 Nov 2014 04:15 AM PST

வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன்
வந்தது.
ஒரு மூதாட்டி,
சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.

வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி,
"திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத்
தெரியும் தானே?"

மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன,
பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத்
தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை!
நீ பொய் சொல்கிறாய்,
மனைவியை ஏமாற்றுகிறாய்,
பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின்
அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய
மேதாவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்!
ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத்
தெரியும்!" என்றார்.

மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய்
விட்டார்! எப்படி வழக்கைத்
தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர்
எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி,
"திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத்
தெரியுமா?" என்று வினவினார்!

அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல
வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன்
ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க
மாட்டான், நிறைய குடிப்பான்.
அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது.
சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமல்,
வக்கீலாகி விட்டவன்!
அவனுக்கு மூன்று பெண்களிடம்
தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன்
மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற
அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும்
நிலைக்கு போய் விட்டார்!

அவசர அவசரமாக,
இரண்டு வழக்கறிஞர்களையும்
தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய
குரலில், "உங்கள் இருவரில் எந்த
ராஸ்கலாவது அந்த கிழவியிடம் என்னை கை காட்டி 'என்னைத்
தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த
ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!"
என்றார்.

:P :P

Relaxplzz

108 பற்றி தெரியும் 104 பற்றி தெரியுமா..? +++++++++++++++++++++++++++++++++ 104‘...

Posted: 06 Nov 2014 04:00 AM PST

108 பற்றி தெரியும் 104 பற்றி தெரியுமா..?
+++++++++++++++++++++++++++++++++

104''நாங்க இருக்கோம்''இலவச அழைப்பு உதவி மையம்
104 மருத்துவ உதவி மையத்துக்கு ஓர் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், 'நான் ஒரு விவசாயி... எனக்கு கடன் தொல்லை தாங்கலை, நான் ரயில் தண்டவாளத்தில் தலைவைச்சு சாகப்போகிறேன்...' என்றார்.

அந்த அழைப்பை எதிர்கொண்ட தகவல் மைய அலுவலர் பதற்றம் அடையாமல், அவரிடம் ஆறுதலாகப் பேச்சுக் கொடுத்தபடியே அவரது வயது, குடும்பத்தைப் பற்றி நிறையக் கேட்டார். பின்னர், 'கண்ணை மூடி ரெண்டு நிமிஷம் அமைதியா இருங்க... நீங்க, இப்போ இறந்துட்டதா நினைச்சுக்குங்க... உங்க குடும்பம் என்ன செய்யும்? உங்க பசங்க நிலைமை என்ன ஆகும்?' என்றார். எதிர்த்தரப்பில் அமைதி. சிறிது நேரத்தில் அந்த விவசாயி அழ ஆரம்பிக்க, அவரை ஆறுதல்படுத்தி, தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டது 104 சேவை.

இரண்டு நாட்கள் கழித்து, 'நான் மிகப் பெரிய தவறு செய்ய இருந்தேன். நல்ல வேளையாக என் மனதை மாற்றி உண்மை நிலையைப் புரியவைத்தீர்கள்' என்று நன்றி தெரிவித்தார் அந்த விவசாயி.
100, 101, 108 என பல்வேறு சேவைகளைப் பற்றி நமக்குத் தெரியும். போலீஸ், தீ விபத்து, மருத்துவ உதவி போன்றவைகளுக்கு இந்த எண்களைத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெறலாம். அதில் புதிதாக இணைந்திருப்பதுதான் 104 சேவை. பலரது பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்டு, அதற்கான தீர்வைச் சொல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த அற்புத சேவை மையம். அரசு உதவியோடு, எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஜி.வி.கே (Emergency Management and Research Institute & GVK) என்ற நிறுவனம் இந்தச் சேவையை இயக்குகிறது. தமிழ்நாட்டு மக்கள் எந்த பகுதியிலிருந்தும், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் (24/7) இந்தச் சேவையை இலவசமாகப் பெறலாம்.

இந்த மையத்தின் மேலாளர் பிரபுதாஸிடம் பேசினோம். '104க்கு அழைப்பு வந்ததும், உடனடியாக தகவல் சேகரிக்கப்பட்டு, அது மனநல ஆலோசனைக்கா, மருத்துவ ஆலோசனைக்கா, அரசு மருத்துவ சேவைகளுக்கா என்று அழைப்புகளைத் தனித்தனியே பிரித்து, அதற்கான வல்லுநர்களிடம் அழைப்பை மாற்றி விடுவோம். பிறகு, தொடர்பு கொண்டவரின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவருக்கான முதலுதவியும், ஆலோசனைகளும் வழங்கப்படும். உடல்நலப் பிரச்னைக்கான முதலுதவி மற்றும் ஆலோசனை காய்ச்சல், சளி, இருமல், வயிற்று வலி, வலிப்பு, வயிற்றுப் போக்கு, மாதவிலக்கு பிரச்னை, பிரசவ வலி, நாய்க்கடி, பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துகளின் கடிக்கான முதலுதவி, இரவில் திடீரெனத் தோன்றும் உடல் உபாதைகள், குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், விபத்துகள் போன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் முதலுதவிகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் பெறலாம்.

* மனநல ஆலோசனை
சோர்வு, பயம், கோபம், தேர்வு பயம், மன அழுத்தம், மனச் சோர்வு, தற்கொலை எண்ணம், குடி மற்றும் புகைப் பழக்கத்துக்கு அடிமையானோருக்கான ஆலோசனை, தீய பழக்கத்தில் இருந்து தன் துணையைச் சரிசெய்வதற்கான ஆலோசனை, தாம்பத்ய உறவில் சிக்கல், துணையின் தவறான போக்கு, டென்ஷன், தம்பதியர்களின் உறவில் பிரச்னை, தூக்கமின்மை, குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் போன்ற அனைத்து மனப் பிரச்னைகளுக்கும் மனநல ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்குவர்.

* தகவல் மற்றும் விளக்கங்கள்
முதலுதவி பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம், ப்ளூ கிராஸ் குறித்த உதவிகள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், சந்தேகங்கள், லேப் ரிப்போர்ட் விளக்கங்கள், மருந்்தகச் சீட்டிலுள்ள மருந்துகளின் தகவல்கள், மருத்துவமனைகள் அதைச் சார்ந்த சிறப்பு வல்லுநர்கள் போன்ற அனைத்துக்குமே 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

அரசு தொடர்பான புகார்
அரசு மருத்துவமனைகளில் ஏதேனும் சேவையில் பிரச்னையோ, குறையோ என்றால்கூட, 104க்கு அழைக் கலாம். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை, மருத்துவ வசதிகள் இல்லை, மருந்துகள் இல்லை போன்ற அனைத்துப் புகார்களுக்கும் இந்த 104ஐ தொடர்பு கொள்ளலாம். பிரச்னைகளைப் பதிவு செய்ததும், உடனடியாக அந்தப் பிரச்னைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இங்கு வரும் அழைப்புகளில் 90 சதவிகிதம் குடிப்பழக்கம் மற்றும் தாம்பத்ய உறவு சார்ந்த பிரச்னைகளே. மாணவர்கள் சிலர் பரீட்சை குறித்த பயத்துக்கும் அழைப்பது உண்டு.
இந்த இலவச அழைப்பு உதவித் திட்டத்தினால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. மருத்துவத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதால், மக்களுக்கு உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளிலிருந்து தீர்வுகள் கிடைக்கின்றன.

சேவை அலுவலகம்
104 அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் டாக்டர் கோட், தலையில் ஹெட்போனுடனேயே தொலை பேசியில் அழைத்தோருக்கு ஆலோசனைகளை வழங்கி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவம் தொடர்பான அனுபவத்தைப் பெற்றவர்கள். இந்த மையத்தில் 50 முதல் 60 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். மூன்று ஷிஃப்டாகப் பிரித்து, 24 மணி நேரமும் (24/7) மக்களுக்கு முதலுதவிகளையும், ஆலோசனை களையும் வழங்கி வருகின்றனர் என்பது சிறப்பு.

104க்கு ஒரு சல்யூட்!

கட்டாயம் பகிருங்கள் விழிப்புணர்வு தருவோம்...

பொறுப்பும்! பொதுநலமும்!

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் காதல் தோல்விதான் மிகப்பெரிய துன்பமென்று நினைத்துக்கொள்கிறார்க...

Posted: 06 Nov 2014 03:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

காதல் தோல்விதான் மிகப்பெரிய துன்பமென்று
நினைத்துக்கொள்கிறார்கள்,
கல்யாணம் ஆகும்வரை..! :P

- Sheila Chowdry

நீங்களும் ஷேர் செய்யுங்கள் உங்களால் ஒரு உயிர் காப்பாற்றப்படலாம். கட்டாயம் பகிர...

Posted: 06 Nov 2014 03:40 AM PST

நீங்களும் ஷேர் செய்யுங்கள் உங்களால் ஒரு உயிர் காப்பாற்றப்படலாம்.

கட்டாயம் பகிருங்கள் விழிப்புணர்வு தருவோம்...


(y)

Posted: 06 Nov 2014 03:30 AM PST

(y)


பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?--உணவே மருந்து. திரைப்படங்களில் கிராமத்து சீன். கத...

Posted: 06 Nov 2014 03:15 AM PST

பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?--உணவே மருந்து.

திரைப்படங்களில் கிராமத்து சீன். கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.

ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில....

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்.

Relaxplzz