Friday, 12 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 12 Dec 2014 05:35 PM PST


ஜல்லிக்கும் குப்பைக்கும் வித்தியாசம் தெரியாம அப்ரானியா வளந்துட்டாங்களே திரிஷா......

Posted: 12 Dec 2014 10:35 AM PST

ஜல்லிக்கும் குப்பைக்கும்
வித்தியாசம் தெரியாம
அப்ரானியா வளந்துட்டாங்களே திரிஷா...

#கிளீன்_இந்தியா


இந்தியாவில் மருத்துவ கல்வி பயில தடை விதிக்கப்பட்ட ஈழ அகதி மாணவி நந்தினிக்கு சீனா...

Posted: 12 Dec 2014 09:14 AM PST

இந்தியாவில் மருத்துவ கல்வி பயில தடை விதிக்கப்பட்ட ஈழ அகதி மாணவி நந்தினிக்கு சீனாவில் மருத்துவம் பயில அனுமதி

## ஈழத் தமிழ்ப் பெண்
இந்தியாவில் படிக்க
சட்டத்தில்
இடமில்லையாம்;
சீனாவில்
உண்டாம். தமிழன்,
இந்தியனாக இருக்கும்
வரை இந்த
இழிநிலைதான்!

அழகு தமிழ்நாடு! சுருளி!

Posted: 12 Dec 2014 08:32 AM PST

அழகு தமிழ்நாடு!
சுருளி!


யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில்

Posted: 12 Dec 2014 07:58 AM PST

யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில்


தமிழன் எந்த அளவுக்கு முட்டாளா இருக்கான்னு பாருங்க இவன் இரண்டாம் பென்னிகுக்குன்னா...

Posted: 12 Dec 2014 06:03 AM PST

தமிழன் எந்த அளவுக்கு முட்டாளா இருக்கான்னு பாருங்க
இவன் இரண்டாம் பென்னிகுக்குன்னா அப்புடி என்னடா தமிழ்நாட்டுக்கு கிழிச்சான்.......

அந்த பென்னிகுக் இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை வித்து தன்னால் கட்டப்பட்ட அணை இடையில் விட்டுவிடக்கூடாது என்று இங்கயே கிடந்தது கட்டி முடிச்சு அஞ்சு மாவட்ட மக்கள் இன்னைக்கு மான மரியாதையோட சோறு தின்ன காரணமா ஆனாரு..

இந்த கன்னட நாயி தமிழ்நாட்டில் கூத்தாடி உழைச்சி கர்நாடகாவில் சொத்துக்கள் கம்பெனிகள் அலுவலகங்கள் என்று வாங்கி போட்டு கன்னடனுக்கு தானே வேலை கொடுத்தான்...

அவன் பொறந்தநாளைக்கு இங்க நாலு பேருக்கு வேட்டி, சேலை கொடுத்துட்டா அவன் பென்னிகுக்கா???

அடேய் நாசமா போவனனுகளா
அவன் மேல தப்பு இல்லடா
நடிகனை கண்டா ஏன்டா சாமிய கண்டமாரி துடிக்கிரிங்க..

அட சோத்துல உப்புபோட்டுதான் தின்னுரின்களா???
அவன் நடிப்பா பாரு பாராட்டு வேணாம்னு சொல்லல!!

கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் கூத்தாடிகளுக்கு கோயில் கட்டும் மண்சோறு தின்னும் மனித இழி ஜென்மங்கள் நிறைந்திருப்பது தமிழகத்தில் மட்டும்தான்.

நானும் இவனுக்கு ரசிகனா இருந்தேன். இவன் படம் வந்தா தவமா கிடந்து பாத்துட்டுதான் வீட்டுக்கே போவேன். இவன் சுயரூபம் தெரிஞ்சபின்னாடி இவனில்ல எவனுக்கும் ரசிகனில்ல நான்...

@ரகுநந்தன்


இந்தியாவில் ரஷ்யா உதவியுடன் மேலும் பத்து அணுஉலைகள் அமைக்கப்படும் - பிரதமர்... ப...

Posted: 12 Dec 2014 05:03 AM PST

இந்தியாவில் ரஷ்யா உதவியுடன் மேலும் பத்து அணுஉலைகள் அமைக்கப்படும் - பிரதமர்...

போபல் விஷவாயு விபத்தை ஏற்படுத்தியவனை தனி விமானத்தில் தப்ப வைத்த தேசம்...
அந்தக் கொடூர விபத்தில் அப்பாவி மக்களைக் கொலைக்கு கொடுத்த தேசம்...
அந்த மக்களுக்கான இழப்பீடை இந்த நிமிடம் வரை வழங்காத இந்த தேசம்...

அதை விட ஆயிரம் மடங்கு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் அணுஉலைகளை மக்கள் தலையில் திணிப்பதேன்...

நீங்கள் கோடிகளை கமிசனாகவும்., ஊழல்களாகவும் பெற்று விட...
அதன் எதிர்வினைக்கு சோதனை எலிகளாகி இறப்பதென்னவோ அப்பாவி மக்களல்லவா...?

மண்ணுக்கான., மக்களுக்கான அரசியலைச் செய்யாது...
பணம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசியல்வியாதிகளே...

நீங்கள் செத்தால் அழுவதற்காகவாவது எங்களை மிச்சம் வையுங்கள்...

உங்களுக்காக ஒப்பாரி கூட வைக்காது அந்தப் பணம்...

@அரு கரு ஆனந்தன்


விளம்பரத்தில வராத பொருள நீங்க சாப்பிடுறீங்களா?? #அப்ப நீங்க சாப்பிடுவது பெரும்ப...

Posted: 12 Dec 2014 03:50 AM PST

விளம்பரத்தில வராத
பொருள நீங்க
சாப்பிடுறீங்களா??

#அப்ப நீங்க
சாப்பிடுவது பெரும்பாலும்
ஆரோக்கியமானது தான்!!

@காளிமுத்து


கனடா வரையில் தமிழில் சேவை கிடைக்கிறது, இந்தியாவில் தான் சரியாக அங்கீகரிக்கப்படவி...

Posted: 12 Dec 2014 03:50 AM PST

கனடா வரையில் தமிழில் சேவை கிடைக்கிறது, இந்தியாவில் தான் சரியாக அங்கீகரிக்கப்படவில்லை! கேட்டால் தமிழ் வட்டார மொழியாம்!

இனி தமிழை வட்டார மொழி(REGIONALLANGUAGE) என்று சொல்பவர்களிடம் சொல்லுங்கள் தமிழ் உலக மொழி(WORLD LANGUAGE) ஆக அங்கீகரிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றது என்று..


மடியில தூங்கிட்ருக்ற குழந்தையை தூக்கம் கலையாம தொட்டிலுக்கு ஷிப்ட் பண்றதுலாம் பெண...

Posted: 12 Dec 2014 03:38 AM PST

மடியில தூங்கிட்ருக்ற
குழந்தையை தூக்கம்
கலையாம
தொட்டிலுக்கு ஷிப்ட்
பண்றதுலாம்
பெண்களுக்கே கைவரப்பெற்ற
ஒரு கலை...!!!

@காளிமுத்து


கொடுமையின் உச்சம்...

Posted: 12 Dec 2014 02:29 AM PST

கொடுமையின் உச்சம்...


என்னை பாதித்த ரஜினி:- காவேரி நதிநீர் பிரச்சனை உச்சகட்டமாய் இருந்த நேரம். இரு மா...

Posted: 12 Dec 2014 02:28 AM PST

என்னை பாதித்த ரஜினி:-

காவேரி நதிநீர் பிரச்சனை உச்சகட்டமாய் இருந்த நேரம். இரு மாநிலங்களிலும் ஏகப்பட்ட போராட்டங்கள். கன்னட திரையுலகம் பெங்களுரில் திரண்டு தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்று தர்ணா செய்தனர். அதற்கு பதிலடி தர பாரதிராஜா தலைமையில் நெய்வேலியில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் தரக்கூடாதுனு போராட்டம் முடிவு செய்யப்பட்டது.

அதற்கு ரஜினிக்கும் அழைப்பு தரப்பட்டது. அதை ரஜினி நிராகரித்து விட்டார். பின்னர் பல தரப்பில் கண்டனம் குவியவே விஜயகுமாரை கையில் வைத்துக் கொண்டு மெரினாவில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார். எப்படியும் நதிகளை தேசிய மயம் செய்ய மாட்டார்கள் என்று தெரிந்தே நதிகள் இணைப்புக்கு திட்டம் தீட்டினால் ஒரு கோடி தருகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டார். அவரை இருதரப்பிற்கும் பொதுவான ஆளாக காட்டிக்கொண்டு தான் திறமை வாய்ந்த நடிகர் என உணர்த்தினர்.

நிஜ வாழ்க்கையிலும் அவர் சிறந்த நடிகர் தான்..

@வெங்கடேசன் பாலகிருஷ்ணன்

உலகில் பிரபலமானவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம் வழங்கி டைம்ஸ் பத்தி...

Posted: 12 Dec 2014 02:12 AM PST

உலகில் பிரபலமானவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம் வழங்கி டைம்ஸ் பத்திரிகை கடந்த டிசம்பர் -5 தேதி தகவல் வெளியிட்டது.

இந்த செய்தியை அனைத்து ஊடகங்களும் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வெளியானது.ஆனால் டிசம்பர் -9 டைம்ஸ் டைம்ஸ் நடத்திய கணக்கெடுப்பில் ஃபேக் ஐடிக்களை வைத்து மோடி ஆதரவாளர்கள் கள்ள ஓட்டு பதிந்துள்ளதாகவும் ஒவ்வொரு போலி வாக்காளர்களும் 7500 கள்ள ஓட்டு போட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டதால் மோடியை டைம்ஸ் பர்சன் பட்டியலில் இருந்து நீக்கியது டைம்ஸ்.

##தட்_அசிங்கப்பட்டான்_ஆட்டோகாரன்_மொமெண்ட்.

@தனபால் ஆறுமுகம்

Rajapakshe and my visit to Thirupathi on 9 Dec 2014 - a bliss or bane? I went t...

Posted: 12 Dec 2014 02:07 AM PST

Rajapakshe and my visit to Thirupathi on 9 Dec 2014 - a bliss or bane?

I went to Thirupathi to attend a betrothal on 9 Dec 2014 by 6-7 PM and wedding on 10 Dec 2014 at Thiruamalai.

When I reached the Thirumalai entrance by 4.50 pm, there was a big queue of vehicles in 6 rows, we were made to wait without any reason known. I got down and inquired and came to know that Srilankan President is about to cross the Thirumalai entrance. people are waiting and waiting, he came and crossed the entrance by around 6.15 pm, after that also the queue is made to wait for another 45 minutes, citing the reason that he should reach Thirumalai due to security reasons. By the time we reached the Thirumalai, it was around 7.30 pm, after that betrothal started and finished by 8.30 PM.

All those who came to attend wedding had registered for 8 PM dharsan with Rs. 50 ticket. By the time we reached the Rs. 50 dharsan gate, it was 8.50 PM. The information counter and security closed the gate saying 8 PM ticket was closed by 8.30 PM.

We were made to delay because of Rajapakshe visit for more than 1.30 hrs, but the TTD authorities doesn't know that the same delay had to be admitted in the gate entry for the tickets obtained? Are they people friendly, or they are friendly to the powerful people and murderers? Do TTD really respect the people who faithfully obtain tickets two months in advance or they are only doing business?

They told me that they will follow strict rules and will not allow even a minute beyond. I asked them today there is no crowd and why not relaxation of rules for the common man who sincerely went and obtained tickets at the TTD ticket counter established all over the country two months in advance by registering their finger tips with the desire to have a dharsan of Lord Venkatachalapathi.

The security said, no we will only follow rules, no relaxation to any body. I asked one question, if you relax rules for VIP like Srilankan President, who were reported to be committed a crime of killing 1.5 lakh innocent srilankan tamil citizens, who is today standing in the UN Human Rights commission's accusation internationally. to have a dharsan on his arrival, even though he was delayed as per the scheduled arrival.

Why don't you relax rules for 30 minutes for the ordinary devotees who are not having any criminal background or murder charges and having valid tickets. Security said, for that you have ask Mr. Chandrababu Naidu. They asked us to go to have a free dharsan waiting for more than 7 hours, after having a ticket for the dharsan. I decided not to have a Dharsan, of a God, who is managed by the ruthless administration having no regard for the ordinary common man and allow big people, who is in power irrespective of what kind of person he or she is infront of God. I felt, administration opens the gate to have a Dharsan of Lord Thirupathi Venkatachalam for those who have a power and this God is not for common man - but only give the respect of "Jarugandi, Jarugandi and Jarugandi".

My friend, used to say, whenever he went to Thirupathi, he got promotion and I used to hear many stories like this and it may be true also for many. People goes to God with a belief to get their wish fulfilled.

Rajapakshe came to Thirupathi to pray to Lord twice recently to save himself from the UN Human rights commission, and get reelected to continue the unitary form of government setting aside the aspirations of its own citizen for establishing the federal form of govt. insisted by many nations including India at least. He also prayed twice night and early morning standing in front of God.

I also prayed to Lord Venkatachalapathy standing outside looking at the direction of deity - not to accept the request of Rajapakshe and prayed to give a solution to the Srilankan Tamils and fulfill their genuine aspirations at the earliest.

I don't know which request Lord Venkatachalapathi will accept? It is left to him. Let us see?

I went to Thirupathi twice earlier officially, we were directly taken to the dharsan with the tight security. Hence, I didn't know the flight of the ordinary common man. Now, when I went personally to attend a wedding, what I experienced has made lot of revelations.

I think every day, a ordinary common devotee is facing such issues regularly whenever VVIP. Govt may change, but no change in the plight of the TTD Administration. The machinery is a machinery, who deals millions of ordinary devotees everyday for the benefit of common man, doesn't bother about the faith of the ordinary common man and keeps the God away from the poor and common man.

@V. Ponraj Vellaichamy


தமிழன் எந்த அளவுக்கு முட்டாளா இருக்கான்னு பாருங்க இவன் இரண்டாம் பென்னிகுக்குன்னா...

Posted: 12 Dec 2014 02:03 AM PST

தமிழன் எந்த அளவுக்கு முட்டாளா இருக்கான்னு பாருங்க
இவன் இரண்டாம் பென்னிகுக்குன்னா அப்புடி என்னடா தமிழ்நாட்டுக்கு கிழிச்சான்.......

அந்த பென்னிகுக் இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை வித்து தன்னால் கட்டப்பட்ட அணை இடையில் விட்டுவிடக்கூடாது என்று இங்கயே கிடந்தது கட்டி முடிச்சு அஞ்சு மாவட்ட மக்கள் இன்னைக்கு மான மரியாதையோட சோறு தின்ன காரணமா ஆனாரு...

இந்த கன்னட நாயி தமிழ்நாட்டில் கூத்தாடி உழைச்சி
கர்நாடகாவில் சொத்துக்கள் கம்பெனிகள் அலுவலகங்கள் என்று வாங்கி போட்டு கன்னடனுக்கு தானே வேலை கொடுத்தான்
அவன் பொறந்தநாளைக்கு இங்க நாலு பேருக்கு வெட்டி சேலை கொடுத்துட்டா அவன் பென்னிகுக்கா???

அடேய் நாசமா போவனனுகளா!!
அவன் மேல தப்பு இல்லடா!
நடிகனை கண்டா ஏன்டா சாமிய கண்டமாரி துடிக்கிரிங்க...

அட சோத்துல உப்புபோட்டுதான் தின்னுரின்களா
அவன் நடிப்பா பாரு பாராட்டு வேணாம்னு சொல்லல...

நானும் இவனுக்கு ரசிகனா இருந்தேன். இவன் படம் வந்தா தவமா கிடந்து பாத்துட்டுதான் வீட்டுக்கே போவேன். இவன் சுயரூபம் தெரிஞ்சபின்னாடி இவனில்ல எவனுக்கும் ரசிகனில்ல.

கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் கூத்தாடிகளுக்கு கோயில் கட்டும் மண்சோறு தின்னும் மனித இழி ஜென்மங்கள் நிறைந்திருப்பது தமிழகத்தில் மட்டும்தான்

@ரகுநந்தன்


கண்கள் இழந்த தமிழன்! #ஆசிரியர்: தங்கர் பச்சான் திரைப்படக்கலை உருவானப்பின் உலக வ...

Posted: 12 Dec 2014 01:57 AM PST

கண்கள் இழந்த தமிழன்!
#ஆசிரியர்: தங்கர் பச்சான்

திரைப்படக்கலை உருவானப்பின் உலக வரலாற்றிலேயே சினிமாவுக்குள்ளேயே வாழ்க்கையை குழிதோண்டி புதைத்துக் கொண்டவன் தமிழன் மட்டுமே. நூறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் சினிமாவின் போதை மயக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. சினிமாக்காரர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கத் தயங்குபவர்கள் மகிழ்ச்சியோடு நாட்டைக் கொடுப்பார்கள். ஐந்து முதலமைச்சர்களை நாற்காலியில் அமர்த்தி அழகு பார்த்தவர்கள் ஆறாவதாக ஒரு ஆளைத் தேடி விடுவார்களோ என்பதில் குழப்பத்திற்கும், அச்சத்திற்கும் இடமிருப்பதாகவேத் தோன்றுகிறது.

சென்ற ஆண்டு தேசிய திரைப்பட விருதுக்குழுவில் இருந்தபோது மற்ற மாநிலத்து உறுப்பினர்களால் ஒரு நாள் அளவுக்கதிமாக இதற்காகவே நையாண்டி செய்யப்பட்டேன். உங்கள் அறிவியல் அறிவு, இலக்கிய அறிவு, அரசியல் அறிவு, கலை அறிவு அத்தனையையும் சொல்ல உங்களுக்குத் தகுதியில்லை என்றார்கள். பழம் பெருமைகளைப் பேசி காலந்தள்ளுவதை விட்டுவிட்டு நிகழ்கால வாழ்க்கைக்கு வாருங்கள் எனச் சொன்னார்கள். அன்றைக்கு நான் வேட்டியில்தான் படம் பார்க்க அரங்குக்கு சென்றிருந்தேன்.

சொல்லி வைத்த மாதிரி எல்லோரிடமிருந்தும் ஒரே முகபாவம். அந்த சிரிப்பில் ஏளனம் ஒட்டிக்கொண்டிருந்தது. விவரம் புரியாமல் நான் விழித்தபோது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அந்த படைப்பாளி எனக்கு அதற்கான காரணத்தைச் சொல்லி, மென்மையாக இதனை எடுத்து கொள்ளுங்கள் எனச்சொன்னபோது வெட்கித் தலை குனிந்துபோனேன். அதன்பின் திரையில் என் மனது ஒன்றுவதற்கு நெடுநேரம் எடுத்துக்கொண்டது.

அன்றைய இரவும் அதே நண்பர்களிடம் வெளிப்படையாகவே இதுபற்றி உரையாடினேன். வேட்டியைப் பார்த்தாலே எங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான் நினைவுக்கு வருகிறது. ஊழலை இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கற்றுக்கொடுத்தது அவர்கள்தான். ஆனால் அதைப்பற்றி எந்த குற்றவுணர்வும் இல்லாமல் பெருமையோடு அலைவதுதான் வேதனையாக இருக்கிறது எனச் சொன்னார்கள். நாங்கள் வேட்டியை மடித்துக்கட்டாமல் கட்டுகிறோம். நீங்கள் வளைத்து முறுக்கி விதம் விதமாகக்கட்டி அதே ஊழலைச் செய்யவில்லையா என நானும் பதிலுக்குக் கேட்டேன். அதன் பிறகும் பல நாட்கள் வேட்டியுடன்தான் படங்களைப் பார்த்தேன்.

நான் அவர்களுடன் இருந்த ஆறு வாரங்களில் நம்மைப்பற்றிய மதிப்பீடு அவர்களின் மனதில் என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன். 'மொழி வெறியர்கள்' என ஒற்றை வரியில் எல்லாரும் சொல்கிறார்கள். அவ்வாறு உண்மையிலேயே நாம் இருந்தால் என்னைவிட மகிழ்ச்சி அடைய யார் இருக்கிறார்கள்? அப்படித்தானடா ஒரு காலத்தில் இருந்தோம்! இப்போது நாம் இருக்கிற நிலையை நெருங்கி வந்து பார்த்தால் பொறாமைப்பட்டு வயிறு எரிந்தவர்கள் மகிழ்ச்சியில் மூழ்கிப் போவார்கள். இந்தியை எதிர்த்த ஒரே காரணத்துக்காக மட்டுமே நம்மை எதிரியாக பார்க்கிறார்கள்.

தமிழர்களில் 99 விழுக்காடு மக்களுக்கு தமிழில் பெயர்கள் கூட இல்லை என்பதும், தமிழில் தங்கள் குழந்தைகள் பேசுவதையோ, தமிழைப் படிப்பதையோ அவர்கள் விரும்புவதில்லை என்பதும், தமிழில் பேசிவிட்டால் குழந்தைகள் பள்ளிகளில் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதும், ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் தமிழில் பேசுவதை இழிவாக நினைக்கிறான் என்பதும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்குமான அழைப்பிதழில் கூட தமிழை ஒதுக்கிவிட்டான் என்பதும், கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யச்சொல்லி வற்புறுத்தாமல் சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் மந்திரத்தையே விரும்புகிறான் என்பதும் தன் வாழ்வில் தமிழுக்காக எந்த இடத்தையும் தராமல் மகிழ்ச்சியோடு தமிழன் என நினைத்து வாழ்கிறான் எனவும், நீதிமன்றங்களில் தமிழில் வாதாடுவதற்காக மனுபோட்டு கெஞ்சிக் கொண்டிருக்கிறான், அதுமட்டுமா ஒரே ஒரு நிமிடம் ஆங்கிலத்தையோ, சமஸ்கிருதத்தையோ கலக்காமல் தமிழில் பேசச்சொன்னால் எல்லா தமிழனும் தோற்றுப் போகிறான் என்பதும் அவர்களுக்குத் தெரியவாய்ப்பில்லை.

ஆனால் எங்களுக்காக ஒரு மாநிலம் வேண்டும் எனச்சொல்லி 72 நாட்கள் உண்ணாநிலையிலிருந்து போராடி சங்கரலீங்கனார் உயிர் நீத்தார். நாங்களும் எங்கள் மாநிலம் தமிழ்நாடு எனவும், எங்கள் அரசு தமிழ்நாடு அரசு எனவும் அழைத்துக்கொண்டு வருகிறோம்.

நாங்கள் தமிழர்கள்தான் என்பதை காட்டிக்கொள்ள ஒரு தமிழர் அவமானப்படுத்தப்பட்டதற்காக கொதித்து எழுந்து உடனடியாக சட்டமன்றத்தில் வேட்டிகட்ட உரிமை வாங்கித்தந்து சட்டம் இயற்றினோம். இந்தப் பெருமை எந்த மாநிலத்துக்காவது இருக்கிறதா?

உடனடியாக ஊடங்கள் முழுக்க அதற்கு பாராட்டு தெரிவித்து கொண்டாடினார்கள். இதைவைத்து வியாபாரம் செய்யும் ஆடை நிறுவனமும் மலையாள நடிகர் வேட்டி கட்டி வணக்கம் செலுத்தும் படத்தைப்போட்டு பத்திரிக்கைகளில் முதல் பக்கத்திலேயே தமிழர்களின் மானத்தை மீட்டுத்தந்தததற்காகப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் விதமாக 'தமிழக அரசுக்கு' சல்யூட் என்றார்கள்.

உலகம் முழுக்க முக்கால்வாசி நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். தமிழன் தன் தாய்மொழியைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட அவல நிலை உலகத்தில் எங்குமே இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்கணத்தை வகுத்த செம்மொழி இன்று தமிழனின் நாக்கில் ஒரு நிமிடம் பேச முடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. எல்லாருமே சூப்பர் தமிழராகிவிட்டோம்.

தன் தாய்மொழி, தன் இசை, தன்கலை, தன் இலக்கியம், தன் மருத்துவம், தன் அறிவியல் என எல்லாவற்றையும் வெளிநாட்டவர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் தொடக்கத்திலேயே கற்றுக்கொடுக்கிறார்கள். பின் உலகத்திலுள்ள அவர்கள் விரும்பிய மொழியை எல்லாம் கற்கிறார்கள். இதனால் அவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவனது இனத்தையும் மொழியையும் நாட்டையும் கண்களாக கருதுகிறார்கள்.

அறிவுக்காக உருவாக்கப்பட்ட கல்வி இன்னும் வயிற்றுப்பிழைப்புக்காக என மாறிப்போயிருக்கிறது. நான் அரசமரத்தடியில் தரையில் அமர்ந்து படித்த சிறிய கிராமத்துப் பள்ளிகளில் கூட இன்று தமிழ் வழியில் படிக்க ஆள் இல்லை. என் கிராமத்தில் அரசுப்பள்ளித்தவிர மூன்று ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதுபோக பக்கத்து சிறு நகரங்களிலிருந்தும் பேருந்துகள் வந்து அதிகாலை ஆறரை மணிக்கே குழந்தைகளை அள்ளிக்கொண்டு போய்விடுகின்றன. எல்லாருமே இன்று டாக்டர், எஜ்ஜினியர் ஆக வேண்டும் என பெற்றோர்கள் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலையில்லை. அவர்களுக்கு வேலைத்தர அனைவருமே மறுக்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இதுபற்றிய எந்தக் கவலையும் நம்மை ஆண்டவர்களுக்கும்,ஆள்பவர்களுக்கும் இல்லை. தமிழில் படிப்பவர்களுக்கு வேலைத்திட்டங்களை உருவாக்கித் தரவும் முயலவில்லை.

பெயரளவிற்கே தொலைக்காட்சிகளும், வானொலிகளும் தமிழை இணைப்பு மொழியாக ஆங்கிலத்தோடும், சமஸ்கிருதத்தோடும் பயன்படுத்தி தமிழ்மொழியை சிதைத்து கொலை செய்துகொண்டிருக்கின்றன. சட்டமன்றத்திலிருந்து கீரை விற்கும் பாட்டி வரைக்கும் சூப்பர் எனச்சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

தமிழ்த்திரைப்படத்துறையில் பலபேருக்கு வெளியில் காட்டிக்கொள்ள முடியாத கோபமிருக்கிறது. எதற்காக நாம் தமிழில் படத்தின் பெயரை சூட்டவேண்டும் என நினைக்கிறார்கள். பிறமொழிகளில் பெயர் சூட்டக்கடாது தமிழிலேயேதான் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட விதியின்படி வெளியாகியிருக்கிற படங்களில் எழுபது விழுக்காடுப் படங்கள் சமஸ்கிருதத்தைத் தலைப்பாகக் கொண்டவைகள்தான். தமிழை நன்கறிந்தவர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் மட்டுமே இதுத் தெரியும். மக்களுக்கும், மற்றவர்களுக்கும் இந்த சூழ்ச்சி புரிவதில்லை. அரசாங்கமும் இதனைக்கண்டு கொள்லாமல் வரிச்சலுகை வழங்கிவிடுகிறது. சமஸ்கிருதத்தில் தலைப்பு வைக்கும் போது ஆங்கிலத்திலேயே சூட்டி விடலாமே! பிறகு ஏன் இதற்கு ஒரு விதி, வரிச்சலுகை அதற்கு சான்றிதழ் வழங்க ஒரு அமைச்சரகம்?

நம் இளம் படைப்பாளிகளும், தயாரிப்பாளர்களும் பத்திரிகைகளில் வெளியிகின்ற சில விளம்பரங்களில் படத்தின் தலைப்பு மட்டுமே தமிழில் இருக்கின்றன. மற்ற விவரங்கள் குறிப்பாக தொழில் நுட்பக்கலைஞர்கள் பற்றிய விவரங்கள் ஆங்கிலத்தில் இருப்பதையே பெருமையாகக் கருதுகிறார்கள். போராட்டம், எதிர்ப்பு என்றால் அது ஈழத்தமிழர் அரசியல்தால் என்றாகிவிட்டப் பிறகு இதனையெல்லாம் கேட்க யார் இருக்கிறார்கள்?

தமிழர்கள், தமிழில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதிலோ, தமிழைப் பேசுவதிலோ, வேலைவாய்ப்பை பெருவதிலோ, வாழ்வியலில் தமிழர்களின் அடையாளத்தை மீட்டெப்பதிலோ தமிழில் பெயர் சூட்டுவதிலோ காட்டுவதில்லை. வேட்டிக்கு நேர்ந்த அவமானத்தை தமிழனுக்கு நேர்ந்த அவமானமாக கருதிய அரசு தமிழ்படிக்காதப் பிள்ளைகளை தமிழில் படிக்க வைக்கவும், அவர்களுக்கு வேலை தரவும் ஏன் சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்க மறுக்கிறது?

தமிழ்நாடு எனும் பெயரில் தமிழர்களாக தமிழ் இனமாக வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு தமிழில் கல்வி கொடுங்கள், தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே உயர்நிலை பதவி கொடுங்கள், எங்களுக்கு 80 விழுக்காடு வேலை கொடுத்ததுபோக மீதியை மற்றவர்களுக்குக் கொடுங்கள். அப்பொழுதுதான் தமிழர் வேட்டிக்கட்டுவது பொருத்தமாகவும், பெருமையாகவும் இருக்கும். அதுவரை வேட்டி கட்டும் மலையாளியைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். ஏனென்றால் வேட்டியிருந்தும் மொழியிழந்த கண்களிழந்த குருடர்கள்தான் இந்தத் தமிழர்கள்.

- இன்னும் சொல்ல தோணுது…


படத்தில் நியாங்களுக்காக குரல் கொடுக்கும் கூத்தாடிகள் நிஜ வாழ்கையில் அதை பற்றி பே...

Posted: 12 Dec 2014 01:52 AM PST

படத்தில் நியாங்களுக்காக குரல் கொடுக்கும் கூத்தாடிகள் நிஜ வாழ்கையில் அதை பற்றி பேசுவது இல்லை .ஆனால் அவனை கொண்டாடும் கூமுட்டை ரசிகர்களை நினைத்தால் பரிதாபம்தான் வருகிறது.

@களவாணி பய

Posted: 12 Dec 2014 01:52 AM PST


இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர மறுத்த நந்தினிக்கு சீனா பல்கலையில் அனுமதி 11.1...

Posted: 12 Dec 2014 01:08 AM PST

இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர மறுத்த நந்தினிக்கு சீனா பல்கலையில் அனுமதி
11.12.2014

இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர தடை விதிக்கப்பட்ட ஈழ அகதி நந்தினிக்கு சீனா பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது.
1990ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் சென்ற இவர் அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பாடசாலையில் சென்ற வருடம் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவ கல்விக்கு தெரிவானார்.

இருப்பினும் இந்திய மருத்துவ சபையின் சட்டத்திட்டபடி அகதியாக வருபவர்கள் மருத்துவ கல்வி கற்க முடியாது. என்பதனால் பொறியியல் கல்வியை கற்க முடியுமென கூறப்பட்டது. ஆனால் அதற்கு நந்தினி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நந்தினியின் நிலைமையை இணைய தளம் மூலம் அறிந்து கொண்டு. அவர்களை குடும்பத்துடன் இலங்கைக்கு திருப்பி அழைத்தனர்.

அதனை தொடர்ந்து சீனா நாட்டில் சென்னியாங் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் குறித்த நிறுவனத்தின் உதவியுடன் மருத்துவ கல்வியை கற்று வருகின்றார்.


இன்று பெரும்பாலான பத்திரிக்கைகள் இந்த நடிகரின் வீர வரலாற்றை பாராட்டித் தள்ளியிரு...

Posted: 12 Dec 2014 12:56 AM PST

இன்று பெரும்பாலான பத்திரிக்கைகள் இந்த நடிகரின் வீர வரலாற்றை பாராட்டித் தள்ளியிருக்கின்றன.

காரணம் ?

இவர் சுதந்திர போராட்ட வீரர்!
வவுசியுடன் சேர்ந்து சிறையில் செக்கிழுத்தார்!
விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தினார்!
இவரது சேவையை பாராட்டி ,"இவருக்கு பாரத் ரத்னா விருது கொடுக்க வேண்டும்"னு ரசிகர்கள் போராட்டம் செய்தால் கூட நாம் ஆச்சர்யப்படக்கூடாது. ஏன்னா பெரியாரை விட இவர் நாட்டுக்கு அதிகமாக சேவை செய்துவிட்டார்.

விடுதலைக்காக பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ன ஆனார் என்றே இன்று வரை தெரியாத இந்த நாட்டில், இந்த நடிகரின் பிறந்த நாளையும் பிறந்த நேரத்தையும் நட்சத்திரத்தையும் துள்ளியமாக வெளியிடுகின்றன நம் பத்திரிக்கைகள்,.

இவருக்கு பிடித்த உடை என்ன, பிடித்த உணவு என்ன, என்ன கார் உபயோகிக்கிறார்னு பத்திரிக்கைகளில் விபரம் கொடுக்குறாங்க. இவர் எத்தனை படத்துல நடித்திருக்கிறார், அதில் தமிழ் எத்தனை கன்னடம் எத்தனை, எத்தனை ஹிட்டு எத்தனை ஃப்ளாப்னு புள்ளிவிவரம் கொடுக்குறாங்க. சரி. இதுவரை எத்தனை மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றுள்ளதுனு கேட்டா, அது... அது வந்து… ஒரு நானூறோ ஐநூறோ இருக்கும்னு தோராயமா சொல்றாங்க.

கடந்த ஒரு மாசமா, இந்த படத்தோட ட்ரெய்லரை டீசரை பல நூறு தடவை தொலைக்காட்சிகள்ல வெளியிட்டாங்க. சரி. நம்ம பக்கத்து நாட்டுல, ஆயிரக்கணக்கானவங்கள கொன்னு குவிச்சாங்களே. அந்த சமயம், போர்க்காட்சிகள ஒரு முறை கூட இவர்கள் தொலைக்காட்சிகள்ல வெளியிடவில்லையே, ஏன் ?

இன்று ஒரு பத்திரிக்கையின் நடுபக்க செய்தி: "லிங்கா படத்தின் டிக்கெட் விலை 500 ரூபாய். ரசிகர்கள் பெருமிதம்".

500 ரூபா கொடுத்து ஒரு படத்த பாக்கணுமா ?
ஏன்னு கேட்டா, தலைவராம் அடுத்த முதல்வராம்.

ஒரு படத்துல முதல்வரா நடிக்கவே பயந்து ஒதுங்கிய ஒருவர் எப்படி தமிழ்நாட்டை ஆள முடியும் ?

@கார்த்திக் பாலாஜி


சல்யூட் சந்திரபாபு நாயுடு:- நாட்டின் மிகப்பெரிய நதிகள் கோதாவரியும் கிருஷ்ணாவும்...

Posted: 12 Dec 2014 12:45 AM PST

சல்யூட் சந்திரபாபு நாயுடு:-

நாட்டின் மிகப்பெரிய நதிகள் கோதாவரியும் கிருஷ்ணாவும் மிக விரைவில் இணைய போகிறது. இதுவொரு நேரிடையான நதிநீர் இணைப்பு திட்டமாகும். ஆந்திர அரசு அதற்கான திட்டத்தை தீட்டி நிதியும் ஒதுக்கி விட்டது. அடுத்தாண்டு தொடக்க காலத்தில் பணிகள் துரிதமாக நடக்க போகிறது.

கோதாவரி நாட்டின் மூன்றாவது பெரிய நதியாகும். தக்காண பீடபூமியை வளமாக்கியத்தில் கோதாவரியின் பங்கு மிகப்பெரியது. கங்கைக்கு பிறகு நீர்வழித்தடம் கொண்ட நதியும் இதுதான். அதாவது கோதவரியின் வெள்ள பெருக்கு காலத்தில் ஒருநாளின் ஓடும் நீரின் அளவு லண்டன் தேம்ஸ் நதியில் ஆண்டுதோறும் ஓடும் நீரின் அளவை விட அதிகமாகும்.

இத்தனை ஆண்டு காலம் வங்களா விரிகுடாதான் கோதாவரியின் உபரிநீரை விழுங்கி கொண்டுருக்கிறது. இப்போது அதை கிருஷ்ணாவில் கலக்க கால்வாய் எடுக்க போகிறார்கள். இதனால் தமிழகமும் மறைமுகமாக பயன் பெறபோகிறது என்பது குறிப்பிடதக்கது.

கிருஷ்ணா நதிநீர் தமிழகத்தின் நீர்தேக்கத்துடன் இணைப்பு பெற்றுள்ள நிலையில் கோதவரியும் இதில் இணையும் பட்சத்தில் உபரிநீர் நமக்கும் கிடைக்க வரபிரசாத வாய்ப்பிருக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய நதிகளை இணைக்கும் வழிகளை ஆராய சொல்லி உச்சநீதி மன்றம் பலமுறை மத்திய அரசு காதுகளில் சங்கு ஊதியும் அதை ஆமை வேகத்தில் நகர்த்தும்போது ஒரு மாநில முதல்வர் இதை முன்னெடுப்பது சவால் தான். அதற்குதான் அவருக்கு சல்யூட்

@வெங்கடேசன் பாலகிருஷ்ணன்


தாடி இல்லாமல் மழித்த தலையுடன் வித்தியாசமான திருவள்ளுவர் சிலை தஞ்சை கரந்தையில் உள...

Posted: 11 Dec 2014 11:38 PM PST

தாடி இல்லாமல் மழித்த
தலையுடன்
வித்தியாசமான
திருவள்ளுவர்
சிலை தஞ்சை கரந்தையில்
உள்ள சமணர் (ஜெயின்)
கோவிலில் உள்ளது.


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


தாய் மண்ணையும்,பெண்ணையும் நேசிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்த அரசாங்கம் தான்.....

Posted: 12 Dec 2014 09:35 AM PST

தாய் மண்ணையும்,பெண்ணையும் நேசிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்த அரசாங்கம் தான்...டில்லியில் பெண்ணை கற்பழிக்கும் போதும்,தமிழ் நாட்டில் மண்ணை கற்பழிக்கும் போதும் கை கட்டி வேடிக்கைப் பார்க்கிறது.

#மீத்தேன்
Ilayaraja

நாதுராம் கோட்சே அவர்களை தேச பக்தர் என்று பார்க்க வேண்டும்....பாஜக எம்.பி...! பா...

Posted: 12 Dec 2014 05:00 AM PST

நாதுராம் கோட்சே அவர்களை தேச பக்தர் என்று பார்க்க வேண்டும்....பாஜக எம்.பி...!

பாருங்க மக்களே மகாத்மா காந்தியை கொன்றவன் எப்படி தேச பக்தன் ஆவான்

வெள்ளைக்காரன் இருக்கும் போது கூட காந்திய கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்…! 1. இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயண...

Posted: 11 Dec 2014 10:43 PM PST

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்…!

1. இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள்……!

2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும் போதே தொலைபேசியில் உங்கள் வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப் பேசத் தொடங்குங்கள்.எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும் இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல் பேசிக் கொண்டே செல்லுங்கள்……! ( அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில் தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்)

3.பேருந்து நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும் ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும் பக்கமோ நில்லுங்கள். தனியே நிற்காதீர்கள்……!

4.இரவில் வீதியில் தனியாக நடக்க வேண்டி வந்தால், அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள். நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட படி நடங்கள்.அதற்காகதிரு திருவென முழிக்க கூடாது.பயம் வந்தால் மீண்டும் தொலைபேசியில் துணைத் தேடிக் கொள்ளுங்கள்.தொலைபேசியை பையில் வைத்து விட்டு ஹெட் போனில் பேசுங்கள்……!

5.கேலி கிண்டல் செய்யும் ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள். முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில் நடப்பது போலவும் உங்கள் காதில் எதுவுமே விழாதது போலவும் நினைத்துக் கொண்டு நடையைக்கட்டுங்கள்……!

6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ் செய்யாதீர்கள். எவரையும் எளிதில் நம்பி மொபைல் நம்பர் கொடுக்காதீர்கள்.காதலனே அழைத்தாலும் தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள் ……!

7.மற்ற பெண்கள் அப்படி இருக்கிறார்களே என்று எவரை பார்த்தும் எதையும் செய்யாதீர்கள்……!

8.உங்கள் சுதந்திரத்திற்கான எல்லையை யாரும் சொல்லிதரக் கூடாது.நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக் கொள்ளுங்கள்……!

#தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் தான் வளர்ந்த ஊரை விட்டு ஏதோ ஒரு நகரத்தில், பெண்கள் விடுதியில் தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்காக சொல்கிறேன்……!

உங்களுக்கு உங்களை விட பெரிய பாதுகாப்பு யாருமில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள் /.....

மீத்தேன் அரக்கன்! பாகம் 1 காவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம் பிரதமர் மன்மோகன...

Posted: 11 Dec 2014 10:28 PM PST

மீத்தேன் அரக்கன்! பாகம் 1

காவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்

பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்' என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.
கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.
மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன?
மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்... ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல... அடுத்த 100ஆண்டுகளுக்கு!

பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம். இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.
காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.
''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.
இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை' (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.
நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!
உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம். ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிறார் இரணியன்.


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அருமையான குடும்பம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 12 Dec 2014 09:38 AM PST

அருமையான குடும்பம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y) Relaxplzz

Posted: 12 Dec 2014 09:30 AM PST

எதிர்கொள்ளும் எல்லாத்தையும் மாற்ற முடியாது... ஆனால் எதிர்கொள்ளாமல் எதையுமே மாற்...

Posted: 12 Dec 2014 09:20 AM PST

எதிர்கொள்ளும் எல்லாத்தையும் மாற்ற முடியாது...
ஆனால் எதிர்கொள்ளாமல் எதையுமே மாற்றிவிட இயலாது !!


"யதார்த்தங்கள் - தத்துவங்கள்"

ஹா ஹா.. மிடியல :P :P

Posted: 12 Dec 2014 09:15 AM PST

ஹா ஹா.. மிடியல :P :P


SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...! 1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வ...

Posted: 12 Dec 2014 09:10 AM PST

SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...!

1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.

2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.

3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.

4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.

5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).

6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.

7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.

8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.

9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.

10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.

11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.

12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.

13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.

14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.

15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.

16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.

ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.

Relaxplzz

மறந்து போன மருத்துவ உணவுகளும் அதன் மருத்துவ குணங்களும் :- ”’உணவே மருந்து’ என்பத...

Posted: 12 Dec 2014 09:00 AM PST

மறந்து போன மருத்துவ உணவுகளும் அதன் மருத்துவ குணங்களும் :-

"'உணவே மருந்து' என்பதுதான் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த வாழ்க்கை முறை. நோய் வராமல் காத்துக் கொள்ளவும், வந்த நோயை வழி அனுப்பி வைக்கவும், உணவையே மருந்தாக உண்டு வந்த காலம் போய், இன்று மாத்திரை, மருந்துகளையே உணவாகச் சாப்பிடும் அளவுக்கு ஒரு சிலரின் நிலை மாறிவிட்டது. மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளை மறுபடியும் பழக்கத்துக்குக் கொண்டு வரலாமே…"

பிரண்டைச் சத்துமாவு

தேவையானவை: நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, புளித்த மோர் – ஒரு லிட்டர், கோதுமை – ஒரு கிலோ, கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.

செய்முறை: பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும். இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.

மருத்துவப் பயன்: உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.

அஷ்ட வர்க்க உணவுப்பொடி

தேவையானவை: சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், சோம்பு, இந்துப்பு, பெருங்காயம் – தலா 50 கிராம்.

செய்முறை: இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் மிதமாக வறுத்துப் பொடிக்கவும். இந்துப்பு, பெருங்காயத்தைத் தனியாகப் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கினால், அஷ்ட வர்க்க உணவுப் பொடி ரெடி!

மருத்துவப் பயன்: இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட, நன்றாகப் பசியைத் தூண்டும். குடல் புண், வாய்வுக் கோளாறுகள், பசியின்மை, செரியாமை இவற்றிற்கு எல்லாம் இந்தப் பொடி சிறந்த மருந்து.

இஞ்சிப் பச்சடி

தேவையானவை: இஞ்சி – 100 கிராம், புளி – சிறிதளவு, எலுமிச்சை – 4, பெரிய வெங்காயம் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.

மருத்துவப்பயன்: பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.

எள்ளு சாதம்

தேவையானவை: புழுங்கல் அரிசி – 450 கிராம், எள், நெய் – தலா 115 கிராம், காய்ந்த மிளகாய் – 5, உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு – தலா 15 கிராம், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழம் – அரை மூடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை சாதமாக வடித்துக்கொள்ளவும். நெய்யை சூடாக்கி, முந்திரி, கறிவேப்பிலையை வறுத்துத் தனியே எடுத்துவைக்கவும். அதே நெய்யில் எள், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பு போட்டு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். நெய், எள்ளுப் பொடி, முந்திரி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சாதத்துடன் நன்றாகக் கலக்கினால், எள்ளு சாதம் தயார்!

மருத்துவப்பயன்: ஹார்மோன் குறைபாடால் ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகளை சரிசெய்து, மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும். சதைபோட விரும்புபவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். எலும்பு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். சளியைப் போக்கும்.

வேப்பங்கொழுந்து துவையல்

தேவையானவை: வேப்பங்கொழுந்து – 30 இணுக்கு, வெல்லம் – 10 கிராம், உளுத்தம்பருப்பு – 20 கிராம், பச்சை மிளகாய் – 2, பூண்டு – 5 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு எண்ணெயில் வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டை வறுத்து, வெல்லம், பச்சை மிளகாய், புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் துவையலாக அரைக்கவும்.

மருத்துவப்பயன்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற துவையல் இது. பித்தம் தணியும். வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 12 Dec 2014 08:55 AM PST

மனைவி : என்னங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? கணவன் : இந்த 'ஈ' தொல்லை தாங்க மு...

Posted: 12 Dec 2014 08:50 AM PST

மனைவி : என்னங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

கணவன் : இந்த 'ஈ' தொல்லை தாங்க முடியல...அதான் அடிச்சுகிட்டு இருக்கேன்....

மனைவி : அடிச்சீங்களா இல்லீயா...

கணவன் : அடிச்சேன்....3 ஆம்பிளை ஈ யும், 2 பொம்பளை 'ஈ' யும்...

மனைவி : என்னது ஆம்பிளை ஈ, பொம்பிளை 'ஈ'யா அதெப்படி உங்களுக்கு தெரியும்?

கணவன் : ஏன்னா...3 ஈ தண்ணி கேன் மேலே நின்னுகிட்டு இருந்துச்சு...2 ஈ போன் மேலேயே நின்னுகிட்டு இருந்துச்சு...

மனைவி .- அவ்வ்வ்வவ் :P :P

Relaxplzz

மனித உடல் 45 டெல் யூனிட் வரை உள்ள வலியை பொறுக்க முடியும். ஆனாலும், பிரசவத்தின்...

Posted: 12 Dec 2014 08:45 AM PST

மனித உடல் 45 டெல் யூனிட் வரை உள்ள வலியை
பொறுக்க முடியும்.

ஆனாலும், பிரசவத்தின்
போது நம் தாய் 57 டெல்
யூனிட் வலியை நமக்காக தாங்கிகொள்கிறார், இது,
ஒரே நேரத்தில், 20 எலும்புகள் உடையும் போது உணரப்படும் வலிக்கு சமம்.

என்னை ஈன்றெடுத்த என்
தாய் தான் எனக்கு
முதற்கடவுள்

"தாய்மைக்கு ஈடு இணை
உலகில் ஏதுமில்லை"...

"தாய்மையை உணர்வோம்"...
"பெண்மையை போற்றுவோம்"

Relaxplzz


:P :P

Posted: 12 Dec 2014 08:40 AM PST

:P :P


ஒரே வரியில்..... "மனிதன்" (y) (y)

Posted: 12 Dec 2014 08:35 AM PST

ஒரே வரியில்.....

"மனிதன்" (y) (y)


:) Relaxplzz

Posted: 12 Dec 2014 08:29 AM PST

நம்பலையா அண்ணாச்சி? பாருங்க இந்த பொண்ணத் தான் லவ் பண்றேன்... அண்ணாச்சி: யோவ் அத...

Posted: 12 Dec 2014 08:25 AM PST

நம்பலையா அண்ணாச்சி? பாருங்க இந்த பொண்ணத் தான் லவ் பண்றேன்...

அண்ணாச்சி: யோவ் அது என் fake ஐடி யா..!! :D :D

- சுபா ஆனந்தி


கண்டுபிடிப்போம்ல... #லிங்கா ... :P :P

Posted: 12 Dec 2014 08:20 AM PST

கண்டுபிடிப்போம்ல... #லிங்கா ... :P :P


நேற்றிரவு, தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள். "ஏன் அப்பா கொசு ராத்திரிலம...

Posted: 12 Dec 2014 08:10 AM PST

நேற்றிரவு,
தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்.

"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?"

"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."

"எப்ப தூக்கம் வரும்பா?"

"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."

"கொசுக்கு வீடு எங்கப்பா?"

"அதுக்கு வீடே இல்லை..."

"ஏம்பா வீடே இல்லை?"

"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."

"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."

"இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."

"அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."

"அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..."

"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"

"கடவுள்..."

"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"

"கடிக்காது..."

"ஏம்பா கடிக்காது?"

"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."

"அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"

"வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."

"கடவுள் நல்லவராப்பா?"

"ரொம்ப நல்லவர்...."

"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"

"அது அப்படித்தான் நீ தூங்கு..."

"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"

"அதுக்கு பசிக்குது..."

"கொசு இட்லி சாப்பிடுமா?"

"அதெல்லாம் பிடிக்காது..."

"கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"

"வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..."

"ஒரே ஒரு கேள்வி அப்பா ?"

"கேட்டுத் தொலை"

"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"

"அதுக்கு பல்லே இல்லை..."

"பிறகு எப்படி கடிக்கும்?"

"அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..."

"பேயைக் கொசு கடிக்குமா அப்பா?"

"இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??"

"நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?"

முடியல... ஆனாலும் இது இன்பமே...

# பெண்குழந்தைகள் வாழும் வீடு, தேவதைகள் வாழும் வீடு... ♥ ♥

Relaxplzz

"முல்லா ஒருமுறை தன் வீட்டில் மாட்டுவதற்காக கடிகாரம் ஒன்றை வாங்கி வந்தார். சுவரில...

Posted: 12 Dec 2014 07:57 AM PST

"முல்லா ஒருமுறை தன் வீட்டில் மாட்டுவதற்காக கடிகாரம் ஒன்றை வாங்கி வந்தார். சுவரில் கடிகாரத்தை மாட்ட ஆணி அடிக்கலாமென சுத்தியல் தேடினார். கிடைக்கவில்லை.. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் கேட்டு வாங்கலாமென நினைத்தார். ஆனால், இந்த இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு கதவைத் தட்டி சுத்தியல் கேட்டால் அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என நினைத்து மறுநாள் காலையில் கேட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்.

ஆனால், மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்கு முல்லா கிளம்பும் போதே ஒரு யோசனை... "சுத்தியலை இரவல் கேட்க காலங்காத்தால வந்துட்டான் பாரு"- னு அவர் நினைச்சிட்டா என்ன பண்றது? சரி.. பிறகு போய் வாங்கிக்கலாம் என்று விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார் முல்லா.

இப்படி ஒவ்வொரு முறை முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியலை இரவல் வாங்க கிளம்பும் போதும்.. "விளக்கு வைக்கற நேரத்தில சுத்தியல இரவல் கேட்டு வந்திருக்கான் பாரு".... "வெள்ளிக்கிழமை அதுவுமா சுத்தியலை யாரவது கடன் கொடுப்பாங்களா .." பக்கத்து வீட்டுக்காரர் இப்படி எதாவது சொல்லிவிட்டால் அவமானமாக போய்விடுமே என்று தயங்கி தயங்கியே சுத்தியலை இரவல் கேட்காமல் பல நாட்களை கழித்துவிட்டார் முல்லா.

மாட்டப்படாத கடிகாரம் அடிக்கடி முல்லாவின் கண்களில் பட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் முல்லா விருட்டென்று பக்கத்து வீட்டுக்குச் சென்றார். "யோவ்.. உன் சுத்தியும் வேணாம்.. ஒண்ணும் வேணாம்.. அத நீயே வெச்சுக்கோ" என்று சத்தம் போட ஆரம்பித்தார். பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒன்றுமே புரியவில்லை"..

நகைச்சுவை கதையாகத் தெரிந்தாலும் இது தெரிவிக்கும் ஆழமான கருத்தையும் நாம் உணர வேண்டும். இதில் வரும் முல்லாவைப் போலத் தான் கணவன் மனைவி தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் பகிர்வதைத் தவிர்த்து மனசுக்குள்ளேயே போட்டுப் புழுங்குகின்றனர். இறுதியில் உறவை அறுத்து எறியும் அளவுக்கு பெரிய சண்டை அவர்களுக்குள் ஏற்படுகிறது.

இந்த நோய்க்கான வைத்தியமும் முக்கியம், நோயே வராதவாறு தடுப்பு முறைகளை கையாளுவதும் மிக முக்கியம்..

Relaxplzz


"நீதி கதை"

" தூய்மை இந்தியா" திட்டத்தில் குப்பைகளை கவனிக்கும் நடிகர்களே.. வாழவேண்டிய வைரங்க...

Posted: 12 Dec 2014 07:50 AM PST

" தூய்மை இந்தியா"
திட்டத்தில் குப்பைகளை கவனிக்கும் நடிகர்களே..
வாழவேண்டிய வைரங்கள்
குப்பையில் கிடக்கிறதே..
கவனிப்பீர்களா ?


ஹா ஹா.. மிடியல :P :P

Posted: 12 Dec 2014 07:46 AM PST

ஹா ஹா.. மிடியல :P :P


இது போன்ற பசுமை சூழ் இடத்தில் வசிக்க பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 12 Dec 2014 07:40 AM PST

இது போன்ற பசுமை சூழ் இடத்தில் வசிக்க பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


Posted: 12 Dec 2014 07:29 AM PST

விலைமகள் நூறு ரூபாய்க்குக்கூட கிடைத்துவிடுகிறாள் ஆனால் விலைமகன்களோ ஐம்பது சவரன...

Posted: 12 Dec 2014 07:20 AM PST

விலைமகள் நூறு ரூபாய்க்குக்கூட
கிடைத்துவிடுகிறாள் ஆனால்
விலைமகன்களோ ஐம்பது சவரனுக்குக்கீழ் கிடைப்பதில்லை...!!!

#வரதட்சணை வாங்கும் ஆண்களுக்கான பதிவு.


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4

முதல் சம்பளத்தை அப்பாவிடம் கொடுத்துவிட்டு சாஷ்டாங்கமாகக் காலில் விழுகிறான் மகன்....

Posted: 12 Dec 2014 07:11 AM PST

முதல் சம்பளத்தை அப்பாவிடம் கொடுத்துவிட்டு சாஷ்டாங்கமாகக் காலில் விழுகிறான் மகன்.

பன்னிரண்டு மணிக்கு கதவு திறந்தால், முகத்தில் கேக் பூசிக் கத்துகிறார்கள் நண்பர்கள்.

அம்மா அப்பாவுக்கு எண்பதாம் கல்யாணம் நடக்கிறது.

பெண்ணுக்கும் பையனைப் பிடித்திருக்கிறது.

'தாயும் சேயும் நலம்' என்று டாக்டர் சொல்கிறார்.

பலவருஷமாக தேடிக் கொண்டிருந்த பள்ளிக்கூட நண்பன் பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் அனுப்புகிறான்.

உச்சம் எய்திய பின் நெற்றியில் முத்தமிடுகிறான் காதலன்.

முகம் பார்க்கிறக் கண்ணாடியில் ரோஜாப் பூவை ஒட்டி வைத்து விட்டுச் சென்றிருக்கிறான், மனைவி தூங்கிக் கொண்டிருக்கும் போது வெளியூர் புறப்பட்டுப் போன கணவன்.

அடர்ச்சிவப்பு நிறக் காட்டுப்பூ ஒன்று மலர்கிறது.

ஒரு விலைமகளை முதன்முதலாக ஒருவன் காதலோடுப் புணர்கிறான்.

கிரீட்டிங் கார்டைத் திறந்தால் பாட்டுக் கேட்கிறது.

நண்பர்கள் மட்டும் அழைத்து, ஒரு மலைக்கோயிலில் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள்.

பிரமாதமான ஒருக் கவிதையைப் படித்தவுடன் ஒருக் கண்ணீர்த்துளி எட்டிப் பார்க்கிறது.

வெட்கத்துக்கு அவசியம் இல்லாமல் இன்பம் தாளாமல் வாய் விட்டு முனகுகிறாள் அவள்.

ஒரு மயில் தோகை விரிக்கிறது.

கையில் மருதாணி வைத்திருக்கிற விடிந்தால் மணம் ஆகப் போகிறப் பெண்ணுக்கு ஊட்டி விடுகிறார் அப்பா.

முதல் போட்டு சொந்தமாகப் புதுத் தொழில் தொடங்குகிறான் ஒருத்தன்.

ஒருக் குழந்தைத் தூக்கத்தில் சிரிக்கிறது.

வானம் சட்டென்று மூடுகிறது.

இதை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்; நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

எல்லா தேவதைகளும் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வுலகில் இருக்கும் சந்தோஷமான தருணங்களை அனைத்தும் கண் முன்னே வந்து செல்கிறது :) :)

- Sundar Srinivas.

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

நாம் ஏன் இப்படி..??? 1. அயல் நாட்டவர், எங்கு சென்ற போதிலும் குப்பைகளை குப்பைத்...

Posted: 12 Dec 2014 07:00 AM PST

நாம் ஏன் இப்படி..???

1. அயல் நாட்டவர், எங்கு சென்ற போதிலும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுகின்றனர்.

2. அயல்நாட்டில், ஒரு அதிகாரியிடம் இரண்டு நாள் பழகிவிட்டு மூன்றாவது நாள் ஒரு பரிசுப் பொருளைக் கொடுத்து நமக்கு தேவையான காரியத்தை சுலபமாய் சாதித்துக் கொள்ள முடியாது.

3. அலுவலகத்தில் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் அருகில் ஒரு பொருள் இருக்கிறது. அதை எனக்கு எடுக்க வேண்டும் என்றால் நானே எழுந்துச் சென்று தான் எடுக்க வேண்டும். " அதை கொஞ்சம் எடுக்கறியா" என்றெல்லாம் யாரும் சொல்வதில்லை. நமது சுய தேவைக்கு ஒருவரை தொந்தரவு செய்வது அநாகரீகம். உதவி என்பது வேறு. இது வேறு. மேலாளர் தான் என்றாலும் இதைக் கொண்டு வா. அதை அங்கு வை. என கட்டளையிடும் உரிமை எவருக்கும் இல்லை.

4. எந்த சூழ்நிலையிலும் தேவையான இடங்கள் தவிர வேறு எந்த இடத்திலும் தன் தாய்மொழியை விட்டுத் தர மாட்டார்கள்.

5. எனக்குப் பிடித்த மாணவன் என மதிப்பெண்ணை அள்ளி வழங்க மாட்டார்கள். பிடிக்காதவன் என கிள்ளியும் வழங்க மாட்டார்கள்.

6. எந்த நாட்டுச் கலாச்சாரத்தில் எது பிடித்திருந்தாலும் அதை இரசிப்பார்கள், இரண்டாம் பட்சமாக மட்டுமே. இது பிடித்தது என்று மறுநாளே அதற்கு மாறிவிட மாட்டார்கள்.

7. செக்யூரிட்டி வேலை செய்பவர் என்பதால், அவர் கதவை திறந்து விட்டு ஒவ்வொருவரையும் வணங்க வேண்டும் என்பதில்லை. கழிப்பறை சுத்தம் செய்பவர் எனினும், செக்யூரிட்டி எனினும் ப்ராஜெக்ட் மேனேஜர் எனினும் அனைவரும் சமமே.

இன்னும் நாம் கற்றுக்கொள்ள எத்தனையோ இருக்கிறது. நம்மிடம் அவர்கள் கற்றுக்கொள்ளவும் ஆயிரம் இருக்கிறது. நம் கலாச்சாரத்தில் அவர்கள் இரசிப்பதை அவர்களுக்கு பிடித்ததை அவர்களுக்கு உகந்ததை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள்.

நாம் என்ன செய்கிறோம் என்பதை சிந்திக்கவே இந்த பதிவே தவிர அயல்நாட்டவரின் அனைத்து கலாச்சாரத்தையும் ஆதரிப்பதற்கு அல்ல. மேற்சொன்ன எதையேனும் கற்றோமா? நாகரீகம், மேலை நாட்டு கலாச்சாரம் என்ற பெயரில் கண்ட படி உடுத்தவும், கண்ட நேரத்தில் ஊர் சுற்றவும், கண்ட இடத்தில் பிசா பர்கர் என கண்டதை உண்ணவும் கற்றுக் கொண்டோமே தவிர நல்லதைக் கற்க மறந்தோம்.

நம் நாட்டில் அரசியல் வாதிகள் மட்டுமே ஊழல் செய்கிறார்கள் என்றல்ல. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது ஊழல். அவற்றை முதலில் களையெடுப்போம்.

அயல் நாட்டைப் பார்த்து கற்கும் ஆசை வந்தால் நல்லதை மட்டும் கற்போம். அதுவும் ஆசைக்கே. நம் திருவள்ளுவர் எழுதி வைத்ததை கற்கவே இந்த ஒரு ஆயுள் போதாது. சிந்தனையில் மாற்றம் கொள்வோம். அதுவே உண்மையான நாகரீக வளர்ச்சி.

பி.கு : அயல்நாடு என்று நான் பார்த்த சில ஐரோப்பிய நாடுகளை மனதில் வைத்தே எழுதினேன்.

-ஆதிரா

Relaxplzz


:) Relaxplzz

Posted: 12 Dec 2014 06:55 AM PST

உட்கார்ந்த இடத்தில் சம்பாரிக்க, ஒன்று பிச்சைகாரனாக வேண்டும்... இல்லை, கடவுளாக...

Posted: 12 Dec 2014 06:50 AM PST

உட்கார்ந்த இடத்தில் சம்பாரிக்க,
ஒன்று பிச்சைகாரனாக வேண்டும்...
இல்லை, கடவுளாக வேண்டும்...!!!

- Kalimuthu


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2

ஆண்களும் அழகாதான் இருக்கிறார்கள்.. . . . . . . . . . . . . . . . . . . . அவர்களை...

Posted: 12 Dec 2014 06:45 AM PST

ஆண்களும் அழகாதான்
இருக்கிறார்கள்..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவர்களை வர்ணிக்க,
பெண்களுக்கு தான்
மனசு வருவதில்லை..

:P :P

உண்மைதான..?? ;-)

Relaxplzz

பனங்கிழங்கு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 12 Dec 2014 06:40 AM PST

பனங்கிழங்கு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 12 Dec 2014 06:30 AM PST

:) Relaxplzz

Posted: 12 Dec 2014 06:23 AM PST