Tuesday, 10 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


கட்சி அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் கூட்டங்கள் நடத்துவது கட்சிக்கு விரோதமானது...

Posted: 10 Feb 2015 09:47 AM PST

கட்சி அனுமதியின்றி தனிப்பட்ட
முறையில் கூட்டங்கள்
நடத்துவது கட்சிக்கு விரோதமானது -
ஈவிகேஎஸ்
இளங்கோவன்

#ரெண்டு
பேரு நின்னு டீ
குடிச்சது ஒரு குத்தமாயா??

அழகு தமிழ்நாடு! உதகை! படம் : Mutharasan Photography

Posted: 10 Feb 2015 03:54 AM PST

அழகு தமிழ்நாடு! உதகை!

படம் : Mutharasan Photography


Ancient Tamil Civilization: Vasavasamudram is a coastal village in Kanchipura...

Posted: 10 Feb 2015 02:44 AM PST

Ancient Tamil Civilization:


Vasavasamudram is a coastal village in Kanchipuram district and lies eleven miles south of Mamallapuram, and north of Vayalur, another historic site. The exploration revealed conical jars and neck of an amphorae and proves the fact that this site had trade contacts with Rome during 1st and 2nd century CE.

In the excavation two ring wells were exposed. Both the ring wells were found close to each other. These two ring wells were also very close to a brick lined tank, which was probably used for dyeing or washing. The important potteries found at Vasavasamudram were rouletted ware, amphorae, red ware, red slipped ware, black slipped ware and brown ware etc.

http://www.tnarch.gov.in/excavation/vas.htm

பல்லவர்கள் ஆண்ட முக்கியப் பகுதியான தொண்டை மண்டலத்தில் தொல்லியல் சிறப்புக்குரிய இடங்களில் வசவசமுத்திரம் முக்கியமானதாகும். சங்க இலக்கியங்களில் இவ்வூர் தொடர்பான நேரடியான குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை என்றாலும் கூட தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் யவனர் தொடர்புள்ளவைகளில் இவ்விடமும் ஒன்றாகச் சான்றுகளின் வாயிலாக அறியப்படுகிறது.

அமைவிடம்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டு வட்டத்திலுள்ள வசவசமுத்திரம் சென்னைக்கு அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்திலிருந்து தெற்கே 16 கி.மீ தொலைவிலும், வாயலூருக்கு வடக்கே 4 கி.மீ தொலைவிலும். பாலாறு வங்கக்கடலில் கலக்கும் இடத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஊராகும்.

ஊர்ச் சிறப்பு

இக்கடற்கரைப் பகுதியில் சங்ககாலத்தில் கீழை மற்றும் மேலை நாடுகளுடன் சிறப்பான கடல் வாணிபத் தொடர்பினைக் கொண்டிருந்த 'நீர்ப்பெயற்று' எனும் துறைமுக வணிக நகரம் இருந்ததாகச் சங்க இலக்கியமான பெரும்பாணாற்றுப்படை (319-323) குறிப்பிடுகிறது. இவ்விலக்கியக் குறிப்புகளிலிருந்து இத்துறைமுகத்திற்கு ஏராளமான கப்பல்கள் வந்து சென்றதாகவும், இக்கப்பல்களில் மேற்கிலிருந்து வெண்மை நிறமுள்ள தரமான உயர் வகையைச் சேர்ந்த குதிரைகளும், வடக்கிலிருந்து மக்களுக்குத் தேவையான பல்வேறு உணவுப்பொருட்களும் ஏற்றிக்கொண்டு வந்ததாகவும், இங்கிருந்த மாளிகைகளில் வணிகர்கள் வாழ்ந்ததையும், தெருக்கள் மற்றும் பொருள் பாதுகாக்குமிடங்களான பண்டகச்சாலைகளைக் காவலர்கள் காத்துவந்ததையும், இங்கு உயர்ந்த கலங்கரை விளக்கம் இருந்ததையும் குறிப்பிடுவதிலிருந்து சங்ககாலத்தில் இவ்விடம் ஓர் சிறந்த பன்னாட்டு வணிகத் தலமாக இருந்ததை உணரமுடிகிறது.நீர்ப்பெயற்றுத் துறைமுகத்தை ஆய்வாளர்கள் மாமல்லபுரமாகவும், சதுரங்கப்பட்டினமாகவும் (வசவசமுத்திரம் கடற்கரைப் பகுதியிலேயே வடக்கில் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது) அடையாளப்படுத்துகின்றனர். எனினும், மாமல்லபுரம் பல்லவர் காலத்திலும் (கி.பி 6-7 ஆம் நூற்றாண்டு), சதுரங்கப்பட்டினம் இடைக்காலத்தில் (கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு) சம்புவராயர்களின் ஆட்சிக் காலத்திலும் சிறந்த துறைமுகங்களாக இருந்தவை என்பதால் காலத்தின் பழமையைக் கருத்தில் கொண்டால் நீர்ப்பெயற்று என்பது மாமல்லபுரமாகவோ அல்லது சதுரங்கப்பட்டினமாகவோ இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதமுடியும். இருப்பினும் வசவசமுத்திரம், மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம் ஆகிய மூன்றும் அவை சிறப்புப் பெற்றிருந்த காலங்களில் பாலாற்றின் வழியாகக் காஞ்சிபுரத்தை இணைத்த பெருமைக்குரியன. தமிழகத்தில் விஜயநகர் ஆட்சிக் காலத்தில்தான் 'சமுத்திரம்' என்ற பெயர் தமிழகத்தில் தோன்றியது என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் வசவசமுத்திரம் என்னும் பெயரும் விஜயநகர ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் ஜனனாத நல்லூர் (ஜனனாதன் என்பது இம்மன்னனின் பட்டங்களுள் ஒன்றாகும்) என அழைக்கப்பட்டுள்ளது.

அகழாய்வுச் சிறப்பு

வசவசமுத்திரம் பகுதியில் மேற்பரப்பாய்வில் ரோமானிய மதுக்குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இங்கு 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. அகழாய்வில் யவனர் தொடர்புக்குரிய அம்பொரா மற்றும் ரூலெட்டட் மண்பானைகள் கிடைத்துள்ளமை பெரும்பாணாற்றுப்படை இலக்கியக் குறிப்புகளுக்கு வலுசேர்ப்பவையாக அமைகிறது. அரிக்கமேடு அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது போன்று அருகருகே இரண்டு உறைகிணறுகள் மற்றும் துணிகளுக்குச் சாயம் தோய்க்கப் பயன்படுத்தப்பட்ட தொட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டமை சிறப்புக்குரியனவாகும். இது, இத்துறைமுகத்திலிருந்து யவன தேசத்துக்குத் துணி வகைகள் ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/camuttiram.htm


காதலர்தினத்தன்று சுற்றித்திரியும் காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் - இ...

Posted: 10 Feb 2015 12:14 AM PST

காதலர்தினத்தன்று சுற்றித்திரியும் காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் - இந்து மக்கள் கட்சி...

மொதல்ல அம்மணக்குண்டியா திரியுற இந்த பசங்களுக்கு ஜட்டி வாங்கி கொடுங்க...


இப்ப பொழுதுவிடிந்துவுடன் பேஸ்புக் யூஸ் பண்ற மாதிரி, சின்னவயசுல படிச்சு இருந்தா,...

Posted: 09 Feb 2015 10:34 PM PST

இப்ப
பொழுதுவிடிந்துவுடன் பேஸ்புக் யூஸ்
பண்ற மாதிரி,
சின்னவயசுல
படிச்சு இருந்தா, இன்னும்
கொஞ்சம்
உருப்பட்டு இருக்காலம்..
:(

@காளிமுத்து

அழகு தமிழ்நாடு! வேளாங்கண்ணி தேவாலயம்!

Posted: 09 Feb 2015 10:12 PM PST

அழகு தமிழ்நாடு!
வேளாங்கண்ணி தேவாலயம்!


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


உடம்பை காட்டுவது தான் நாகரிகம் என்றால், மனிதர்களை விட விலங்குகள் தான் அதிக நாகரி...

Posted: 10 Feb 2015 04:18 AM PST

உடம்பை காட்டுவது தான் நாகரிகம் என்றால்,
மனிதர்களை விட விலங்குகள் தான் அதிக நாகரிகமானது.

Posted: 10 Feb 2015 12:51 AM PST


டெல்லியில் ஆம் ஆத்மி பெரு வெற்றி வாழ்த்துக்கள்.... ஒபாமா வருகையில் மோடி செய்த்த...

Posted: 10 Feb 2015 12:26 AM PST

டெல்லியில் ஆம் ஆத்மி பெரு வெற்றி வாழ்த்துக்கள்....

ஒபாமா வருகையில் மோடி செய்த்த அசட்டுத்தனங்கள், டெல்லி மாதாகோவில்கள் இடிப்பு, கர்வாபசி முதலான குரங்கு சேட்டைகள், கோட்சே கூத்து, திட்ட ஆணையம் உ:ள்ளிட்ட ஜனநாயக, சோஷலிச நிறுவனங்களை எந்த விவாதங்களும் இன்றி ஊத்தி மூடுதல், மோடியின் திமிர்த்தனமான மவுனம்... எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான் ஆம் ஆத்மியின் வெற்றி சொல்லும் சேதி..

அவசர அவசரமாக ஆமாத்மியில் தஞ்சமடைந்து, டில்லியில் அது அம்பேல் ஆனவுடன் நைசாகக் கழன்று கொண்டவர்களுக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும்.


அப்படியே ஓடி போய்டுங்க... :p

Posted: 10 Feb 2015 12:21 AM PST

அப்படியே ஓடி போய்டுங்க... :p


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


1பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும் 1கட்டை 10நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும்...

Posted: 10 Feb 2015 08:50 AM PST

1பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும்
1கட்டை 10நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும்
1மரம் 2மணிநேரம் எரிஞ்சா சாம்பலாயிடும்
ஆனா எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாதது எது தெரியுமா????
.
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பல்புதான்

:P :P

ஒரு மீன் கூட கிடைக்கலப்பா... யாரச்சு help பண்ணுங்க ப்ளீஸ்ஸ்ஸ்.. (y)

Posted: 10 Feb 2015 08:40 AM PST

ஒரு மீன் கூட கிடைக்கலப்பா...

யாரச்சு help பண்ணுங்க ப்ளீஸ்ஸ்ஸ்.. (y)


:) Relaxplzz

Posted: 10 Feb 2015 08:30 AM PST

கண்ணை நம்பாதே.. !! இது முகத்தின் எந்த பாகம்..??? Zoom பண்ணி பாருங்க..தெரியும்..!...

Posted: 10 Feb 2015 08:20 AM PST

கண்ணை நம்பாதே.. !! இது முகத்தின் எந்த பாகம்..??? Zoom பண்ணி பாருங்க..தெரியும்..!!! —


பேஸ்புக் பிரபலம் ஆவது எப்படி? 1. பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல அதிக பேர சேர்த்துக்கனும்! (...

Posted: 10 Feb 2015 08:10 AM PST

பேஸ்புக் பிரபலம் ஆவது எப்படி?

1. பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல அதிக பேர சேர்த்துக்கனும்!
(5000 பிரென்ஸ் இருத்தா 100ல ஒருத்தர் லைக் பன்னாலும் 50 லைக் கிடைக்குமே)

2. ஸ்டேட்டஸ் சிரிக்கற மாதிரியும் சிந்திக்கிற மாதிரியும் இருக்கனும்!
(தத்துவம் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு தடவதான் போடனும். அடிக்கடி இம்ச படுத்தபடாது)

3. பிரபலமா இருக்கனும்னா அடிக்கடி யார்கூடயாவது வம்பிழுக்கனும்! அப்பதான் பேமஸ் ஆகமுடியும்!
(பல்லு ஒடஞ்சி ரத்தம் வந்தா நிர்வாகம் பொறுப்பல்ல)

4. மத்தவங்க எவ்வளவு கலாய்சாலும் வலிக்காத மாதிரியே இருக்கனும்!
(சிலசமயம் செத்துபோன பாட்டியகூட கின்டல் பன்னுவானுக)

5. உங்க ஸ்டேட்ஸ்கு பொண்ணுங்க லைக்போட்டா, கைய வெச்சிகிட்டு சும்மா இருக்கனும்!
(இன்பாக்ஸ்கு போயி ஊத்த கூடாது)

6. பதிலுக்கு நீங்களும் அப்பப்ப லைக் போடனும்!
(ஏங்க.. இத எனக்காக சொல்லலங்க)

ஆனா பொன்னுங்களா இருந்தா கஸ்டமே இல்ல..
சும்மா hi friends.. அப்டினு போட்டா போதும்.. ஈஸியா 100 லைக் 50 காமென்ட் விழும்!

Relaxplzz

#பல்லாங்குழி: கொஞ்சம் நிதானமா படிங்க. எம்புட்டு பெரிய சொத்த எழந்துருக்கோம்னு...

Posted: 10 Feb 2015 08:04 AM PST

#பல்லாங்குழி:

கொஞ்சம் நிதானமா படிங்க. எம்புட்டு பெரிய சொத்த எழந்துருக்கோம்னு புரியும்..

பல்லாங்குழிங்குறது வெளையாட்டா சொல்லிக் குடுத்த குடும்ப நிர்வாகம்.

மொதல்ல எப்படி வெளையாடணும்னு பாப்போம்.

ஒரு பக்கத்துக்கு ஏழு குழி. குழிக்கு அஞ்சு முத்து (பண்ணெண்டு முத்து போட்டும் வெளையாடுவாக)ஒரு குழில இருந்து எடுத்து அடுத்து வார குழிக்கு ஒன்னொன்னா போடுவாக. முத்து முடிஞ்சதும் அடுத்த குழில இருந்து முத்துகள எடுத்து அதே மாதிரி போடணும். ஒரு வேள, அடுத்த குழி காலியா. இருந்தா, அதுக்கு அடுத்த குழில எம்புட்டு முத்து இருக்கோ அம்புட்டும் முத்தும் போட்டு வந்தவுகளுக்குச் சொந்தம். (செல சமயம் அது நெறையாவும் இருக்கும் செல சமயம் ஒன்னுமில்லாமையும் கூட போகலாம்.)

காலியான குழியில, அடுத்து சேந்து வார முத்துகள் மொத்தமா நாலு சேந்துருச்சுனா, அதுக்குப் பேரு "பசு" அது ஆரு பக்கம் இருக்கோ அவுகளுக்குச் சொந்தம்.
வெளையாட்டுல ஒரு பக்கம் செயிக்கச் செயிக்க இன்னொரு பக்கம் தெக்கம்(தொக்கம், தக்கம், பற்று) விழும். கடைசில தோத்தவுகட்ட அஞ்சு முத்துக்கும் கொறவா இருந்தா, அஞ்சு முத்துக்குப் பதிலா, ஒரு ஒரு முத்தா போட்டு கஞ்சி காச்சி வெளயாடுவாக.

சரி இத எதுக்கு வெளையாண்டாக?

தன்கிட்ட இருக்குற பொருள எப்படி பெருக்கணுங்குறதுதேன் இந்த வெளையாட்டோட சூச்சுமம்.
எந்தக் குழில ஆரம்பிச்சா எந்தக் குழில எம்புட்டு சேருங்குறது, வெளையாட வெளையாட நெனவுல சேத்துக்கிட்டே போகணும்.

"பசு" சேர்க்கணும் (அதுக்கேத்தாப்ல வெளையாடணும்) பசுங்குறது நாலு முத்துதேன்னு சாதாரணமா நெனைக்கக் கூடாது. "பசு"னா செல்வம்னு அர்த்தம். அதச் சிறுகச் சிறுக சேர்த்துப் பழக்குறதுதேன் நோக்கம்.
கடைசில கஞ்சி காச்சுறதுனு ஒரு வாய்ப்பிருக்கு. தான் செயிச்சா எதிராளிக்கு கஞ்சி காச்சுற வாய்ப்பு குடுக்கணும். எல்லாம் தோத்துப்புட்டானு மிதப்பா வெளையாண்டா, அடி மட்டத்துல இருந்து கூட எதிராளி செயிச்சு வந்துரலாம். ஒரு வேள நம்ம கஞ்சி காச்சுற நெலைக்கு வந்துட்டாலும் சோர்ந்து போயிறக் கூடாது. அங்கன இருந்து கூட (வறுமையில இருந்து கூட) மேடேறிடலாம். மேடேறிடணும். அதேன் ஒரு குடும்பத்தக் காக்கப் போறவளுக்கு அழகு.

இது வாழ்க்கைக்கான வெளையாட்டு. அதுனாலதேன். சடங்குக்குச் சீரா, தன் வீட்டுக்கு வரப் போற பொண்ணுக்கு பல்லாங்குழி வாங்கிக் குடுக்குறது தாய்மாமன் வழமையா வச்சிருந்தாக. கல்யாணம் பண்ணி அடுத்த வீட்டுக்குப் போறப்ப கட்டாயம் பல்லாங்குழிய சீர் வரிசைல சேத்துக் குடுத்தாக.
ஒன்னொன்னா தொலைச்சுக்கிட்டு வாரோம்.

- மந்தை


வாழ்வியல்

<3 காதல் <3 என்னவன் பெயரை யார் சொன்னாலும்.. என்னை அறியாமல் வெட்கமும்.. புன்னகையு...

Posted: 10 Feb 2015 07:50 AM PST

♥ காதல் ♥
என்னவன் பெயரை யார் சொன்னாலும்..
என்னை அறியாமல் வெட்கமும்..
புன்னகையும் வருகிறது..!


தில்லி தேர்தலில் AAP சாதித்ததை, அடுத்த ஆண்டு தமிழக தேர்தலில் பாமக சாதிக்கும். -ர...

Posted: 10 Feb 2015 07:45 AM PST

தில்லி தேர்தலில் AAP சாதித்ததை, அடுத்த ஆண்டு தமிழக தேர்தலில் பாமக சாதிக்கும்.
-ராமாதாஸ்

# இதுல எப்டிண்ணே லைட் எரியும்? :P

Tamil keechu

அழகு குட்டி செல்லம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 10 Feb 2015 07:40 AM PST

அழகு குட்டி செல்லம்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 10 Feb 2015 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 10 Feb 2015 07:28 AM PST

கையகலக் கண்ணாடியில்... அவ்வ்ளோ பெரிய கோவிலைப் புடிச்சுட்டேன்... இடம்.. மருதமலை.....

Posted: 10 Feb 2015 07:20 AM PST

கையகலக் கண்ணாடியில்... அவ்வ்ளோ பெரிய கோவிலைப் புடிச்சுட்டேன்...
இடம்.. மருதமலை..

- Shanmuga Vadivu


மூலிகை நீர் சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள்...

Posted: 10 Feb 2015 07:12 AM PST

மூலிகை நீர்

சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.

ஆவாரம்பூ நீர்

"ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ" என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்

"தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்" என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து, தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

வல்லாரை நீர்

யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். "காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை" என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.

Relaxplzz


"நலமுடன் வாழ" - 2

:) Relaxplzz

Posted: 10 Feb 2015 06:49 AM PST

:) Relaxplzz

Posted: 10 Feb 2015 05:30 AM PST

மனைவியை தாயாக நினைத்து பார்த்து கொள்ளும் ஆண்களும்....! கணவனை பிள்ளையாக நினைத்த...

Posted: 10 Feb 2015 05:15 AM PST

மனைவியை
தாயாக
நினைத்து பார்த்து கொள்ளும்
ஆண்களும்....!

கணவனை
பிள்ளையாக
நினைத்து பார்த்து கொள்ளும்
பெண்களும்...!

இருக்கும் வரை
உண்மை
காதலுக்கு என்றும்.
மரணமில்லை ..!

Relaxplzz

"கடந்த சில நாட்களாக எனக்கு மிரட்டல் வருகிறது சார்..." "மொட்டை கடிதமா...?" "இல்ல...

Posted: 10 Feb 2015 05:00 AM PST

"கடந்த சில நாட்களாக எனக்கு மிரட்டல் வருகிறது சார்..."
"மொட்டை கடிதமா...?"
"இல்ல சார்...டெலிபோனில்.!.."
"கொலை மிரட்டலா...?
"இல்ல சார்.."
"வேறன்ன...?"
"டெலிபோன் கட்டணத்தை செலுத்தாவிட்டால்
'இணைப்பை' துண்டித்து விடுவதாக
மிரட்டுகிறார்கள் சார்...!"


மீண்டும் கிராமத்திற்கு போகலாம்

Posted: 10 Feb 2015 04:45 AM PST

மீண்டும் கிராமத்திற்கு போகலாம்


:) Relaxplzz

Posted: 10 Feb 2015 04:30 AM PST

இரு மனம் Vs திருமணம்: 20 சீக்ரெட்ஸ்! ‘‘வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் திர...

Posted: 10 Feb 2015 04:15 AM PST

இரு மனம் Vs திருமணம்: 20 சீக்ரெட்ஸ்!

''வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் திருமணம் குறித்து ஒவ்வொருவருக்கும் பல கனவுகள் உண்டு. அந்தக் கனவுகள் நிறைவேறுவதற்கான தருணம் திருமணத்தில்தான் தொடங்குகிறது.

"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வழக்கமிருக்கும். ஆனால் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய 'ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்' எடுத்துக் கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியான அனுபவங்களாக மாறும். வாழும் காலம் வரை சிறந்த ஆதர்ச தம்பதிகளாக வலம் வரமுடியும்" என்கிற மனநல ஆலோசகரான வாசுகி சிதம்பரம் சொல்லும், மேரேஜ் சீக்ரெட்ஸ் இங்கே...

1. காதலை விட மரியாதைக்கு அதிகம் முக்கியத்துவம் தருவதே வாழ்க்கை பயணத்துக்கான சிறந்த பாதையாக மாறும்.

2. ஒரு பெண் திருமணத்துக்கு எப்படி அறிவுரைகளால் தயாராகுகிறாளோ அதுபோல் ஆணையும் தயார் செய்ய வேண்டும்.

3. இருபாலினருக்கும் ஆசை, கனவு, உரிமை, தேர்வு, எண்ணம் அனைத்துக்கும் சமத்துவ உரிமை அளிக்க வேண்டும்.

4. வீட்டு வேலையைப் பகிர்ந்துக் கொள்வதில் கூட அந்யோன்யம் அதிகரிக்கும். இது இழிவான செயலல்ல.

5. உன் சம்பளம் 'உனக்கு, எனக்கு' எனப் பிரித்துக் கொள்ளாமல் 'நான் இவற்றுக்கெல்லாம் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். நீ இதற்கெல்லாம் பொறுப்பெடுத்துக்கொள்கிறாயா?' என அன்போடு பொறுப்புகளைப் பட்டியலிடலாம்.

6. வன்முறையால் எவற்றையுமே கட்டுப்படுத்த முடியாது. அன்பு ஒன்றே அனைத்துக்குமான அடிப்படை புரிதல்.

7. தன் துணைக்கும், பெற்றோருக்கும் எப்போதும் சம உரிமை தருவதென உறுதிமொழி எடுங்கள்.

8. குடும்ப அமைதி, நிம்மதியான சூழல், குறையாத அன்பு போன்றவற்றை நிலைநாட்ட தகுந்த பொறுப்பாளராக இருபாலினரும் மாற வேண்டும்.

9. உயர் படிப்புப் படித்திருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும் 'குடும்பக் கல்வி' என்பது இருவருக்குமே பொதுவானது.

10. பாசிடிவ்ஸ் பகிர்ந்து கொள்வதோடு, நெகடிவ் குணங்களையும் தெரியப்படுத்துங்கள். இதனால் திடீரென்று நெகடிவ் குணங்கள் வெளிப்படும்போது அதிர்ச்சியாகாமலும், பிரச்னை பெரிதாகாமலும் தடுக்க முடியும்.

11. திருமணத்துக்கு முன்பு இருபாலினரும் தொலைபேசியில் அதிகம் பேசுவது தவறில்லை என்றாலும், அதற்கான வரைமுறைகளை மீறி பேசுவது பின்னாளில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

12. சமூக வளைத்தளங்களில் உள்ள நட்பு, அதில் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை விமர்சிப்பதோ லைக், ஷேர் போன்ற எதிர்பார்ப்புகள் உறவில் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

13. கடந்து வந்த காதல், அதன் பிண்ணனி போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல்கூடச் சில நேரங்களில் தவறான மதிப்பை தரும். கவனம்!

14. தீய / நெகடிவ்வான குணங்களை ஒரு தாளில் எழுதி அதை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.

15. திருமணத்துக்குப் பிறகு வேலைக்குச் செல்லுதல், உயர்படிப்பு படிக்கும் வாய்ப்புகள், வேலையில் ஏற்படும் டிரான்ஸ்பர்கள் போன்றவற்றைத் திருமணத்துக்கு முன் தெளிவாகப் பேசி முடிவுகள் எடுப்பது இருதரப்பினருக்கும் இடையே பிரச்னைகளையும், மனகசப்பையும் ஏற்படுத்தாது.

16. திருமணத்துக்கு முன் பழகும் போதே இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருந்தால் உதாரணத்துக்கு அதீத சந்தேகம், வன்முறை குணம், ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை போன்ற மாற்றங்கள் தெரிந்தால், பெற்றோருக்கு புரிய வைத்துச் சிக்கல் இல்லாமல் திருமணத்துக்கு முன்பே பிரிந்துவிடுவது நல்லது. இந்த முடிவு இருவருடைய வாழ்க்கைக்கும் நல்லதாக அமையும்.

17. வாழ்க்கை முறை, மன பக்குவம், பிரச்னைகளைக் கையாளுதல், பாலுணர்வு சந்தேகங்கள் போன்றவற்றுக்கு ஆலோசகர் மூலம் தெளிவடையலாம்.

18. இருபாலினரும் தங்களின் நிஜத்தை ஏற்றுக் கொள்வதே நல்லது. அதாவது இயல்பை ஏற்க பழக வேண்டும்.

19. ஆரோக்கியமான இடைவெளியை அமைத்துக் கொள்ளுங்கள். பேச்சில் மரியாதையை தெரியப்படுத்துங்கள். பிரச்னைகளில் வளைந்து கொடுங்கள்.

20. எந்தத் தருணத்திலும் துணையின்றிச் செயல்படக் கூடாது என உறுதிமொழி எடுத்துக் கொள்வதே இனிய வாழ்வுக்கான அச்சாரம்.

நன்றி விகடன்/சாம் மகேந்திரன்

Relaxplzz

அன்னாசி தாழை இலை போன்ற நீண்ட அடுக்கான மடல்களை உடைய செடி. கொல்லிமலை போன்ற இடங்கள...

Posted: 10 Feb 2015 04:00 AM PST

அன்னாசி

தாழை இலை போன்ற நீண்ட அடுக்கான மடல்களை உடைய செடி. கொல்லிமலை போன்ற இடங்களில் பேரளவில் பயிரிடப் பெற்றுப் பழமாக விலைக்குக் கிடைக்கும். இப்பழம் பூந்தாழம் பழம் எனவும் வழங்கப்பெறும். இலை பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

நுண்புழுக் கொல்லுதல், வியர்வை சிறுநீர் பெருக்குதல், மலமிளக்குதல், குருதிப்பெருக்கைத் தணித்தல், மாதவிலக்கைத் தூண்டுதல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

இப்பழம் மாதவிலக்கைத் தூண்டும் ஆகையால் கருவுற்றவர் உண்ணாதிருத்தல் நலம். அதிக அளவில் உண்டால் தொண்டைக் கட்டும்.

1. இலைச்சாறு 10 மி.லி. யில் சிறிது சர்க்கரைக் கலந்து கொடுக்க விக்கல் நிற்கும்.

2. பழச்சாற்றைச் சற்று சூடுசெய்து குடித்து வர வாந்தி, வயிற்றுக் கடுப்பு காமாலை ஆகியவை தீரும்.

3. பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி நாள்தோறும் இருவேளை 10&15 மி.லி. உண்டு வரத் தாகம், வாந்தி, வெள்ளை, வெட்டை, சுவையின்மை ஆகியவை தீரும்.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 10 Feb 2015 03:30 AM PST

ஒரு ஆணின் புலம்பல்... "நான் பெண்ணாக பிறந்து இருந்தால்" 1.தோசை , இட்லி, சப்பாத்...

Posted: 10 Feb 2015 03:15 AM PST

ஒரு ஆணின் புலம்பல்...

"நான் பெண்ணாக பிறந்து இருந்தால்"

1.தோசை , இட்லி, சப்பாத்திய
ஸ்பூனால
குத்தி குத்தி சாப்பிட்டிருப்பேன்

2.முப்பது நாளும் ப்யூட்டி பார்லர்
போவேன்.
யாராச்சும் கேட்டா பயத்த மாவும்,
கடல
மாவும் மட்டுந்தான் யூஸ்
பண்றேன்னு பீலா விடுவேன்..

3.இன்டிகேட்டர்னா
என்னன்னு கேட்டிருப்பேன்

4.பசங்கள
அண்ணானு கூப்பிடுற
பொண்ணுகள
ஆன்ட்டி கூப்டு கடுப்பேத்தியிருப்பேன்..!

5.எல்லா நேரமும் பெண்ணியம்
பேசுவேன்..
பெண்களுக்காக
வீட்லஇருந்தபடியே டிவி பாத்துட்டே போராடுவேன்

6.ரீ சார்ஜே பண்ன மாட்டேன்

7.எரும மாடு ரோட்டுல
நின்னாலும் , excuse
me ன்னு இங்லீஸ்ல தான்
வழிவிடச்
சொல்லுவேன்

8.அமெரிக்கா மாப்பிளையா பாத்து செட்டில்
ஆயிருப்பேன்..!

9.யார்னா தமிழ்ல பேசுனா....
இங்க்லீஷ்ல பதில்
சொல்லி கடுப்பேத்தி இருப்பேன்..

10.வீட்ல பழயசோரு துன்ட்டு '
பீட்சா வித்
ஃப்ரென்ட்ஸ்'னு ஸ்டேடஸ்
போட்டுருப்பேன்

11.மேக்கப் போடாம Selfi
எடுத்து என்
கண்றாவி மூஞ்ச காட்டி உங்கள
எல்லாம்
பயமுறுத்தி இருப்பேன்

12.செவுத்துக்கு
சுண்ணாம்பு அடிக்குற
மாதிரி மேக்கப்
போட்டு இருப்பேன்

13.லெக்கின்ஸ கைல
மாட்டிக்கிட்டு ஸ்கூட்டி ஓட்டிட்டு போக
மாட்டேன்

14.சத்தியமா எந்த பையனையும்
அண்ணா'னு கூப்டிருக்க
மாட்டேன் !

15.நான் இதுவரை யாரையும் love
பன்னல
என்று சொல்லிருப்பேன்..

16.லவ் பண்ணவனயே கல்யாணம்
பண்ணிருப்பேன்..

* நீங்கள் பெண்ணாக பிறந்திருந்தால்... என்ன செய்வீர்கள்...? கமண்டில் பதியுங்கள் பார்க்கலாம்....

Relaxplzz

தஞ்சை பெரியகோயில்...

Posted: 10 Feb 2015 02:45 AM PST

தஞ்சை பெரியகோயில்...


பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத...

Posted: 10 Feb 2015 02:29 AM PST

பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். கடுகு எண்ணை, பல் வலியைக் குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணெயுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.

எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம். வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும். சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.

பல் வலியை சற்று குறைக்க வெளிபுறமாக சாதாரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம். திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும் நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Relaxplzz


இயற்கை வைத்தியம்

அ - அயல் நாட்டுக்கு போகாதே ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க இ - இந்தியாவில் வேலை செய்...

Posted: 10 Feb 2015 02:20 AM PST

அ - அயல் நாட்டுக்கு போகாதே

ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க

இ - இந்தியாவில் வேலை செய்

ஈ - ஈசியா இருக்கும்

உ - உண்மையை சொல்றேன்

ஊ - ஊரை விட்டுப் போகாதே

எ - எப்படா ஊருக்கு வருவோம்னு நினைப்பே.

ஏ -ஏ ன்டா வந்தோம்னு நினைப்பே

ஐ - ஐயோ விடுங்கடானு சொல்லுவ

ஒ - ஒப்பாரி வச்சு அழ தோனும்

ஓ - ஓலமிட்டு கத்த தோனும்

ஔ - ஔவளவுதான் சொல்லிப்புட்டேன்

ஃ - அஃகடானு இந்தியாவில் கெட!!

# படித்ததில் பிடித்தது #

Relaxplzz

பாப்கான் பற்றி அறிந்து கொள்வோமா? தியேட்டர்ல இன்டர்வெல் விட்டா நம்மாளுங்க நேரா...

Posted: 10 Feb 2015 02:04 AM PST

பாப்கான் பற்றி அறிந்து கொள்வோமா?

தியேட்டர்ல இன்டர்வெல் விட்டா நம்மாளுங்க நேரா பாப்கான் ஸ்டாலுக் குத்தான் போறாங்க.. இந்த பாப்கார்ன் எவ்வளவு ஆபத்தானது என்று யாருக்கும் தெரியறது இல்ல.

பாப் கார்ன் கொறிப்பது ஒரு நல்ல யோசனை தான் என்றால் கூட இந்த பாப்கார்னுக்கு மறுபக்கமும் உள்ளது. இந்த பாப்கார்ன் எனும் சோளப் பொரி மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளத்தில் இருந்து தயார் செய்யப் பட்டவை. அதுமட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உப்பு, பதப்பொருட்கள் போன்றவை சோளப்பொரியின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கப்படுகின்றன. மேலும் அதிக அளவில் சோடியம் மற்றும் பிற வேதிப் பொருட்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை. வெண்ணெய் சேர்த்த சுவையூட்டப்பட்ட சோளப்பொரி மேலும் மோசமான விளைவுகளைத் தருபவை.

சின்னப் பசங்க தியேட்டர்ல கேக்கிற முதல் ஐயிட்டமே இந்த பாப்கார்ன் தான்.. அதுவும் சில பேரு அடம்பிடிச்சு பட்டர் பாப்கார்ன் தான் வேனும்னு சொல்வாங்க. ஆனா இதுல சேர்க்கற வெண்ணைய் எங்கிருந்து வருதுன்னு கொஞ்சம் பார்த்தோமுன்னா பாப்கார்ன் வாங்கிக் கொடுக்கறதையே விட்டுடத்தோணும்.

பெரும்பாலான தனியார் வெண்ணைய் தயாரிப்பு நிறுவனங்கள் அசல் பாலில் தான் வெண்ணையை பிரித்தெடுத்து நமக்கு வழங்குகின்றார்கள் என நாம் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தால் நாம் உண்மையிலேயே ஏமாளிகள் தான். நமக்கு வருகின்ற பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் வெண்ணைய் பாக்கெட்டுகள் Margarine எனப்படும் செயற்கை வெண்ணெய் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஒரு சின்ன பரிசோதனையைக் கொண்டு நாம் வாங்கியது ஒரிஜினல் பட்டரா அல்லது Margarine பட்டரா என்பதை தெரிந்து கொள்ளமுடியும் . ஒரிஜினல் பட்டர் என்றால் அது கீழே சிந்தினால் உடனே எரும்புகள் வந்து மொய்க்கும். இந்த செயற்கை பட்டரில் எரும்புகள் மொய்க்காது.. எரும்புக்கு தெரிந்தது கூட நமக்குக் தெரியவில்லையே..
பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்க்கு பதிலாக மார்க்ரைன் எனப்படும் செயற்கை வெண்ணெய் ஹைட்ரஜனேற்றப்பட்ட டிரான்ஸ் கொழுப்பு நிறைந்தது ஆகும். இது உடலில் கொழுப்பு அளவுகளை கணிசமாக அதிகப்படுத்தி, நோய் எதிர்ப்பு திறனை மட்டுப்படுத்துகிறது.

பிரபல நிறுவனங்கள் கூட பட்டர் பிஸ்கெட் தயாரிக்கும்போது இந்த Margarine கொழுப்பைத்தான் பயன்படுத்துகின்றன என்பது கூடுதல் அதிர்ச்சித் தகவல். குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது நாளடைவில் இந்த கொழுப்பானது உடலில் படர்ந்து கேன்சர் செல்களை உற்பத்தி செய்யவும் வாய்ப்புண்டு சில மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இந்த Margraine கொழுப்பினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு எல்.டி.எல். கொழுப்பானது உடலில் அதிகமாகச் சேர்ந்து இரத்த நாளங்களில் படிந்து அளவுக்கு அதிகமான எடை மற்றும் இதயம் சம்மந்தமான நோய்களை இந்த செயற்கை வெண்ணைய் நமக்கு பரிசாகத் தருகின்றது.. இதய நாளங்களில் இது படிவதால் இரத்தம் சீராக செல்வது கொஞ்சம் கொஞ்சமாக தடை படுகிறது..

இப்போது இந்தியச் சந்தையில் பெரும்பாலும் மரபணுமாற்றம் செய்யப் பட்ட உணவுப் பொருட்கள், செயற்கையாக இரசாயணம் கலந்து தயாரிக்கும் உணவுப்பொருட்கள் எவ்வித கட்டுபாடுமின்றி தாராளமாக புழக்த்தில் விடப்பட்டுவிட்டன. இவற்றை நாம் நம்மையறியாமலேயே வாங்கி உண்கின்றோம். கூடுமானவரை இந்த டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளையும் இப்படி இயற்கைக்கு மாறாக செயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கும் உணவுப்பொருட்களை வாங்கி உண்பதை தவிர்த்தாலே பல இனம் புரியாத நோய்கள் நம்மை தாக்குவதிலிருந்து தடுத்துக்கொள்ள முடியும்..

Relaxplzz


"விழிப்புணர்வு"

பலருக்கு பெரிய விஷயமாகாக தோணுவது... சிலருக்கு சின்ன விஷயமாக தோன்றுகின்றது...!!!...

Posted: 10 Feb 2015 01:50 AM PST

பலருக்கு பெரிய விஷயமாகாக தோணுவது...

சிலருக்கு சின்ன விஷயமாக தோன்றுகின்றது...!!!"

இந்த தைரியம் உங்களிடம் உள்ளதா...?


டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மு...

Posted: 10 Feb 2015 01:44 AM PST

டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி:

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு: மோடியை அதிர வைத்த முதல்வராகிறார் கெஜ்ரிவால்!

எந்த ஒரு அரசியல் மாற்றத்தையும் மக்கள் தாமதித்து சோதித்து ஏற்று கொள்கிறார்கள்

முன்னணி நிலவரம்:(70)
ஆம் ஆத்மி - 67
பா.ஜ.க. - 3
காங்கிரஸ் - 0
மற்றவை - 0


உங்கள் மேல் அன்பாக இருக்கிறவர்களை தூக்கி எறியும் போது நினையுங்கள் அதே உறவு பழ...

Posted: 10 Feb 2015 01:31 AM PST

உங்கள் மேல் அன்பாக
இருக்கிறவர்களை தூக்கி
எறியும் போது நினையுங்கள்
அதே உறவு பழைய அன்புடன்
திரும்பவும் உங்களிடம்
வராது என்று ...


"சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 3