Tuesday, 23 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 23 Jun 2015 09:02 AM PDT


இந்திய வரலாற்றில் ராஜேந்திர சோழனுக்கு முன்னும் பின்னும் நடக்காத வரலாற்றுச் சம்பவ...

Posted: 23 Jun 2015 06:29 AM PDT

இந்திய வரலாற்றில் ராஜேந்திர சோழனுக்கு முன்னும் பின்னும் நடக்காத வரலாற்றுச் சம்பவங்கள் சில உண்டு.

இந்திய மன்னர்கள் இந்தியாவுக்குள் மட்டும்தான் போரிட்டுக்கொண்டு இருப்பார்கள். ஒரு மன்னன் அவனுக்கு சில நூறு மைல் தூரத்தில் இருக்கும் இன்னொரு மன்னனுடன் போரிடுவான். வெல்வான்.. தோற்பான்.

ராஜேந்திர சோழனின் ஆட்சியில் ஒன்று நடந்தது. அவன் கடாரம் கொண்டான், சுமத்ராவை வென்றான். இலங்கை, மலேயா, வியட்நாம், கம்போடியா தொட்டு, சீனத்தின் தென் கிழக்கு எல்லையைத் தொட்டான். இது இந்திய மன்னன் ஒருவரிடத்திலும் காணமுடியாத ஒப்பற்ற சாதனை.

நாம் செய்தது எல்லாம் என்ன? சோழமண்டலம் என்பதை கோரமண்டல் என்று கோரப்படுத்தியது மட்டும்தான். அசோகர் ஆண்டார், பாபர் ஆண்டார், அக்பர் ஆண்டார், சத்ரபதி சிவாஜி ஆண்டார் என்று வடக்கில் ஆண்ட அத்தனை அரசர்களையும் தெரிந்து வைத்திருக்கிறோம். மேற்படி அரசர்கள் ஆண்டதைப் போல இரண்டு மடங்கு தேசங்களை ஆண்ட ராஜேந்திர சோழனை டெல்லியும் ஒரிஸாவிலும் மராட்டியத்திலும் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு வரலாற்று வினோதம்தான். இந்த இருட்டடிப்பைத் தோலுரித்திருக்கிறார் வெ.நீலகண்டன்.

ராஜேந்திர சோழனிடம் காணப்பட்ட ஆச்சர்யமூட்டும் சிறப்பு, அவன் கலம் கட்டி, தம் படையுடன் கடல் கடந்து சென்று இத்தனை நாடுகளையும் வென்றிருப்பதுதான். நீலகண்டன் குறிப்பிடுவது போல, வங்கக் கடல் ராஜேந்திர சோழன் குதித்து விளையாடும் குளமாக இருந்தது. கடல் அவனுக்கு 'தண்ணிப்பட்ட பாடு'.

நாவல் போல நகர்கின்றன சில இடங்கள். ராஜேந்திர சோழன் ஆலோசனை நடத்தும் இடம், சூழல் போன்றவை அப்படியான நாவல் சித்திரப்புகளுக்கு உதாரணம். ஆனால், கதை அளக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஏராளமான வரலாற்று சான்றுகள் புத்தகம் முழுக்க விவரிக்கப்பட்டுள்ளன.

விஜயாலய சோழன் நடக்க முடியாத நிலையிலும் போரிட்டு வென்று சோழ சாம்ராஜ்ஜியத்தை வென்றதாகட்டும் ராஜேந்திர சோழன், தன் தந்தை ராஜராஜ சோழனிடம் ஆணை பெற்று புறப்படுகிற காட்சி ஆகட்டும் நாவலின் அத்தியாயங்கள்தான். அத்தனை சுவாரஸ்யம். அதைவிட சுவாரஸ்யமாக இருக்கிறது நீலகண்டன் தரும் வரலாற்றுக் குறிப்புகள்.

நிலத்தில் நெடுந்தூரம் பயணப்படாமல் கடல் கடந்து செல்வதில் ராஜேந்திரன் ஏன் அத்தனை ஆர்வம் காட்டினான் என்பதுதான் இந்த நூல் நெடுக்க நமக்கு ஏற்படும் கேள்வி.

மெய்கீர்த்திகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கிய ஆதாரங்கள் என பரபரப்பூட்டும் நடையில் வெ.நீலகண்டன் சொல்லிச் செல்வது சோழர்களை விரும்ப வைக்கும் முயற்சியாகவே தெரிகிறது. சோழர்கள் பற்றி ஆராய்ந்த பலரைப் பற்றியும் இந்த நூலின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அதில் சீதாபதி என்பவர் ராஜேந்திர சோழனின் இறுதிக்காலம் பற்றித்தரும் குறிப்பு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தக் கூடியது.

தெற்கு ஆசியாவையே வளைத்துப் போட்ட அந்த மாவீரனின் கடைசி காலம் செய்யாறுக்கு அருகே உள்ள நாட்டேரி என்ற சிறிய கிராமத்தில் குவிந்ததை அவர் இப்படி விவரிக்கிறார்.

''தனது 82-வது பிறந்த நாளையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெம்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள நாட்டேரி என்ற இடத்தில் ஒரு கோயிலைக் கட்டினான் ராஜேந்திரன். கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து வெளியேறிய பிறகு காஞ்சியில் தங்கியிருந்தபடி அக் கோயில் கட்டுமானப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டான். அக் கோயிலைக் கட்டிய கைவினைக் கலைஞர்கள் அனைவருக்கும் கோயிலையொட்டி ஏராளமான நிலங்களைத் தானமாக அளித்தான். பிறகு அப் பகுதிக்கு பிரம்மதேயம் என்று பெயரிட்டான். அது இப்போது பிரம்மதேசமாக மாறிவிட்டது. அக் கோயிலின் ஈசான மூலையில் ஒரு சிறிய மண்டபத்தைக் கட்டிய ராஜேந்திரன், அதில் வடக்கிருந்து இறந்தான்' என்கிறார் அவர். உலகை ஆண்ட மன்னன் வாழ்வு, ஏனே நம்மை உலுக்குகிறது.

சோழர்கள் என்ற தலைப்பில் நீலகண்ட சாஸ்திரி எழுதிய இரு பெரும் தொகுதிகளை, இராஜராஜேச்சரம் என குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய பெரும் நூலும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வனும் சோழர்களின் பெருமையைச் சொல்லும் ஆகச் சிறந்த நூல்கள். இது, அவற்றை எல்லாம் தேடிச் சென்று வாசிக்க வைக்கும் தூண்டல் நூல் எனச் சொல்வேன்.

-வெ.நீலகண்டன்
விலை ரூ.150/-
சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை- 4.

http://thamizhstudio.com/Koodu/mag_3_bookreview.php

நன்றி- தமிழ்மகன்


சம்பளம் 3 ஆயிரம் வாங்கும்போது வெக்கப்பட்டு சொல்ல மாட்றானுங்க... அப்பறம் 30 ஆயிர...

Posted: 23 Jun 2015 02:58 AM PDT

சம்பளம் 3 ஆயிரம் வாங்கும்போது வெக்கப்பட்டு சொல்ல மாட்றானுங்க...

அப்பறம் 30 ஆயிரம் சம்பாதிக்கும் போது,"நான்லாம் 3 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை பார்த்தவன்டா"ன்னு பெருமையா சொல்லுறானுங்க...

@Boopathy Murugesh

Posted: 23 Jun 2015 02:38 AM PDT


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


மருத்துவமனையில் காணாமல் போன குழந்தையை கடுமையான வாகன சோதனையால் ஒரு மணி நேரத்தில்...

Posted: 23 Jun 2015 04:32 AM PDT

மருத்துவமனையில் காணாமல் போன குழந்தையை கடுமையான வாகன சோதனையால் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த செங்கல்பட்டு #ASP அண்ணன் அவர்கள்...
வாழ்த்துக்கள் அண்ணா !
இவருக்காக ஒரு லைக் !
ஒரு ஷேர் கொடுங்கள் ... விரும்பினால்... !

- நிரோஜன்


மர்ம கதை.... ஒரு பொண்ணு ஒரு பையனும் காதலிக்கிறர்கள். அவர்கள் காதல் பெண் வீட்டுக...

Posted: 22 Jun 2015 11:06 PM PDT

மர்ம கதை....

ஒரு பொண்ணு ஒரு பையனும் காதலிக்கிறர்கள்.
அவர்கள் காதல் பெண் வீட்டுக்கு தெரிந்ததும் பெண்ணுக்கு வேறு திருமணம் ஏற்பாடு நடக்கிறது.

இதை அறிந்த பெண் யாருக்கும் தெரியாமல் இனி உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன் என கடிதம் எழதி வைத்து விட்டு பையனோடு ஊரை விட்டு ஓடி விடுகிறாள்.

மறுநாள் பெண் வீட்டாரும் பெண்ணை எங்கங்கே தேடி அலுத்து போய் இனி அந்த பெண் வந்தாலும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர்.

இப்பதான் கதையில் திருப்பம்.

முன்று நாள் கழித்து அந்த பெண் தானாக பையன் இல்லாமல் வருகிறாள்.

வாசலில் நிறுத்தி அவளை திட்டுகிறார்கள் பெற்றோரும் அண்ணனும்.

அப்பா : இப்ப எதுக்கு வந்த உனக்கு என்ன வேணும்?

அம்மா : ஊரர் முன்னாடி எங்களை கொன்னுட்டே இப்ப எங்கே வந்தே?

அண்ணன் : ஏன் மறுபடியும் வந்து தொல்லை பண்றே உனக்கு என்ன வேணும் சொல்லி தொலை?

முன்று பேரும் அவளுடைய பதிலுக்காக பரபரப்பாக காத்திருக்கின்றனர்.

அவள் சொன்ன பதிலை கேட்டு அந்த முன்று பேர் மட்டும் அல்ல உலகமே அதிர்ந்தது.

அந்த பதில் என்ன?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
என்னுடைய நோக்கியா சின்ன பின் சர்ஜர் மறந்து வைச்சிட்டு போயிட்டேன். அதை எடுத்துட்டு போயிடுறேன்மா.
𾌸𾌰𾰀𾌰𾌸𾌰𾰀

கதை நீதி : நோக்கியா போன் முன்று நாளுக்கு சர்ஜர் நிற்கும்.
𾌩

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


தனது குட்டிகளை சூறையாட நினைத்த பாம்புடன் மரண போர் நடத்திய முயல்

Posted: 23 Jun 2015 09:02 AM PDT

தனது குட்டிகளை சூறையாட நினைத்த பாம்புடன் மரண போர் நடத்திய முயல்


விஜய் TVயில் சண்டை !! என்னமா மக்களை முட்டாள் ஆக்கிறாங்க நீங்களே பாருங்கள்

Posted: 23 Jun 2015 08:38 AM PDT

விஜய் TVயில் சண்டை !! என்னமா மக்களை முட்டாள் ஆக்கிறாங்க நீங்களே பாருங்கள்


விஜய் TVயில் சண்டை !! என்னமா மக்களை முட்டாள் ஆக்கிறாங்க நீங்களே பாருங்கள்
www.indiasian.com
vijay tv Kitchen Super Star Season 3

கடாபியின் மறுபக்கம்...... 1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவச...

Posted: 23 Jun 2015 08:31 AM PDT

கடாபியின் மறுபக்கம்......
1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .
4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.
5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.
6.எந்த ஒரு லிப்யனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.
7. லிப்யர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.
8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.
9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.
10. லிப்யா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது.
11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.
12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.
13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்.
14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.
15. 25% லிப்யர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.
16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு

Posted: 23 Jun 2015 08:24 AM PDT


தேசியக் கொடியை அவமதித்த மோடி! வழக்கு தொடர்ந்த பச்சைத் தமிழன்! வீடியோ

Posted: 23 Jun 2015 06:38 AM PDT

தேசியக் கொடியை அவமதித்த மோடி! வழக்கு தொடர்ந்த பச்சைத் தமிழன்! வீடியோ


தேசியக் கொடியை அவமதித்த மோடி! வழக்கு தொடர்ந்த பச்சைத் தமிழன்! வீடியோ
www.indiasian.com
PM Modi 'In$ulted' National Flag on Yoga Day

Posted: 23 Jun 2015 05:46 AM PDT


Posted: 23 Jun 2015 05:24 AM PDT


நீச்சல் குளத்தில் மூழ்கி சாகக்கிடந்த சிறுவனை காப்பாற்றிய பெண்: 83 லட்சம் பேரைக்...

Posted: 23 Jun 2015 05:00 AM PDT

நீச்சல் குளத்தில் மூழ்கி சாகக்கிடந்த சிறுவனை காப்பாற்றிய பெண்: 83 லட்சம் பேரைக் கடந்து தீயாக பரவும் வீடியோ


நீச்சல் குளத்தில் மூழ்கி சாகக்கிடந்த சிறுவனை காப்பாற்றிய பெண்:தீயாக பரவும் வீடியோ
www.indiasian.com
Wavepool Lifeguard Rescue

தெற்காசியாவையே ஆண்ட சோழ சாம்ராச்சியத்தின் சிறப்பு - ராஜா ராஜா சோழன் BBC பதிப்பு...

Posted: 23 Jun 2015 04:55 AM PDT

தெற்காசியாவையே ஆண்ட சோழ சாம்ராச்சியத்தின் சிறப்பு - ராஜா ராஜா சோழன் BBC பதிப்பு

தயவு செய்து பகிருங்கள்!!
நம் பெருமை நம்மவர் அறியவே !!



இலங்கையின் நீங்கள் அறியாத இன்னொரு பக்கம்! பாருங்கள் வியந்து போவீர்கள் வீடியோ

Posted: 23 Jun 2015 04:41 AM PDT

இலங்கையின் நீங்கள் அறியாத இன்னொரு பக்கம்! பாருங்கள் வியந்து போவீர்கள் வீடியோ


இலங்கையின் நீங்கள் அறியாத இன்னொரு பக்கம்! பாருங்கள் வியந்து போவீர்கள் வீடியோ
www.indiasian.com
Tourism life Or Dream. Sri-Lanka

'எலி' படத்தைப் பற்றி தவறாக விமர்சிப்பவர்கள் மனநலம் பாதித்தவர்கள்தான் நடிகர் வடிவ...

Posted: 23 Jun 2015 04:39 AM PDT

'எலி' படத்தைப் பற்றி தவறாக விமர்சிப்பவர்கள் மனநலம் பாதித்தவர்கள்தான் நடிகர் வடிவேலு ஆவேசமாக கூறியுள்ளார்.



இணையத்தில் புலிக்கு எதிராக கலம்மிறங்கி வெற்றி நடைபோடும் பாபநாசம் பாடல்! வீடியோ

Posted: 23 Jun 2015 03:06 AM PDT

இணையத்தில் புலிக்கு எதிராக கலம்மிறங்கி வெற்றி நடைபோடும் பாபநாசம் பாடல்! வீடியோ


இணையத்தில் புலிக்கு எதிராக கலம்மிறங்கி வெற்றி நடைபோடும் பாபநாசம் பாடல்! வீடியோ
www.indiasian.com
Yeya En Kottikkaaraa Video Song | Papanasam

Posted: 23 Jun 2015 02:58 AM PDT


Posted: 23 Jun 2015 02:57 AM PDT


Posted: 23 Jun 2015 02:24 AM PDT


தெலுங்கு திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சமந்தாவின் காட்சி! வீடியோ இணைப்பு

Posted: 23 Jun 2015 01:10 AM PDT

தெலுங்கு திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சமந்தாவின் காட்சி! வீடியோ இணைப்பு


தெலுங்கு திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சமந்தாவின் காட்சி! வீடியோ இணைப்பு
www.indiasian.com
Samantha's new amazing acting

டிப்ஸ்... டிப்ஸ்...! புளி, உப்பு, வெல்லம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில...

Posted: 23 Jun 2015 12:02 AM PDT

டிப்ஸ்... டிப்ஸ்...!
புளி, உப்பு, வெல்லம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதைத் தவிர்க்கவும். இவை, காற்றுபட்டால் நீர் விடும் தன்மை கொண்டவை. பிளாஸ்டிக்குடன் சேர்ந்து ரசாயன மாற்றம் ஏற்பட்டு, ஆரோக்கியத்துக்கும் கெடுதல் ஏற்படக்கூடும். கண்ணாடி அல்லது பீங்கான் டப்பாக்களில் பாதுகாத்து வையுங்கள்.
--------------------------------------------------------------------------------
பிரெட் துண்டுகளின் மேல் வெண்ணெய் தடவுவதற்கு முன்னால், வெண்ணெயில் சிறிது பால் விட்டு நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். பிறகு வெண்ணெயை சீராகத் தடவ சுலபமாக இருக்கும் என்பதுடன், வெண்ணெயும் குறைவாகவே தேவைப்படும்.
--------------------------------------------------------------------------------------
சட்னி வகைகள் (குறிப்பாக தேங்காய் சட்னி) மிகுந்துவிட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால், சுவையான ராய்த்தா தயார்.
--------------------------------------------------------------------------------------
ரவை, சேமியா உபயோகித்து கிச்சடி தயாரிக்கும்போது, தக்காளிப் பழத்தை முதலிலேயே சேர்த்தால், தக்காளித் துண்டுகள் மிகவும் குழைந்துவிடுவதுடன் கிச்சடியின் நிறமும் மாறிவிடும். தக்காளி போடாமல் கிச்சடி தயாரித்துவிட்டு, அடுப்பை அணைத்துவிடுங்கள். தக்காளித் துண்டுகளை கிச்சடியின் மேல்தூவி, ஒரு ஃபோர்க்கால் ஒரு முறை கிளறிவிட்டு கொஞ்ச நேரம் மூடி வைத்துவிடுங்கள், கிச்சடியின் சூட்டில் தக்காளி பதமாக வெந்துவிடுவதோடு, கிச்சடியின் நிறமும் மாறாமல் இருக்கும்
-----------------------------------------------------------------------------------
கால் கிலோ வெங்காயம், கால் கிலோ தக்காளி இவற்றைத் துண்டுகளாக நறுக்கி, நாலைந்து மிளகாய் வற்றலுடன் வதக்கிக் கொள்ளவும். இதை தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். தேவையானபோது இதை உபயோகித்து... சைட் டிஷ், கிரேவி போன்றவற்றை விரைவில் தயாரித்து விடலாம்... சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

Posted: 22 Jun 2015 11:24 PM PDT


மகள்களைப் பெற்ற ஒவ்வெரு தந்தைகளும் கண்டிப்பாக இந்த வீடியோவைப் பாருங்கள்!

Posted: 22 Jun 2015 10:10 PM PDT

மகள்களைப் பெற்ற ஒவ்வெரு தந்தைகளும் கண்டிப்பாக இந்த வீடியோவைப் பாருங்கள்!


மகள்களைப் பெற்ற ஒவ்வெரு தந்தைகளும் கண்டிப்பாக இந்த வீடியோவைப் பாருங்கள்!
www.indiasian.com
Social Awareness Film - 2nd Saturday

Posted: 22 Jun 2015 09:02 PM PDT


உத்தம வில்லனில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்ட கமல்! வீடியோ இணைப்பு

Posted: 22 Jun 2015 08:10 PM PDT

உத்தம வில்லனில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்ட கமல்! வீடியோ இணைப்பு


உத்தம வில்லனில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்ட கமல்! வீடியோ இணைப்பு
www.indiasian.com
Uttama Villain - Deleted Scene 2

Posted: 22 Jun 2015 06:39 PM PDT


தமிழ் சினிமாவை மெய்சிலிர்க்க வைத்த ஸ்ருதி ஹாசனின் குரல்! வீடியோ இணைப்பு

Posted: 22 Jun 2015 06:10 PM PDT

தமிழ் சினிமாவை மெய்சிலிர்க்க வைத்த ஸ்ருதி ஹாசனின் குரல்! வீடியோ இணைப்பு


தமிழ் சினிமாவை மெய்சிலிர்க்க வைத்த ஸ்ருதி ஹாசனின் குரல்! வீடியோ இணைப்பு
www.indiasian.com
Shruthi Haasan sings Adiye Kolludhe

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்.... பெண்கள் கர்ப்...

Posted: 22 Jun 2015 06:02 PM PDT

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்....
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர்.
இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை கொண்டு உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
வயிற்றில் வித்தியாசம்
உங்கள் வயிறு இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே மேலே ஏறி இருந்தால், அது பெண் குழந்தை.
குழந்தையை நிர்யணிக்கும் கருப்பு கோடு
வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை.
ஆனால் அந்த கோடானது தொப்புளுக்கு கீழே மறைந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.
பெண்டுலம் ட்ரிக்
உங்கள் மோதிரத்தை உங்கள் முடியில் கட்டி, வயிற்றிற்கு மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் வளர்வது ஆண், அதுவே பக்கவாட்டில் ஆடினால் பெண் என்று அர்த்தம்.
எடை ஜாஸ்தியா இருக்கா?
சுமக்கும் குழந்தையின் எடை வயிற்றின் முன்பக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்று அர்த்தம்.
குழந்தையானது வெயிட் இல்லாதது போல் இருந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்று அர்த்தம்.
புளிப்பா? இனிப்பா?
உங்களுக்கு புளிப்பான உணவின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், அது ஆண் குழந்தையை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம்.
அதுவே இனிப்பு அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது.
அதிக வாந்தியா?
கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது சாதாரணம்.
ஆனால் இது அளவுக்கு அதிகமாக இருந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.
குறைவாக இருந்தால் பெண் குழந்தை என அர்த்தம்.


புதிய தகவல்கள் - தெரிந்துகொள்வோம் *ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சா...

Posted: 22 Jun 2015 06:02 PM PDT

புதிய தகவல்கள் - தெரிந்துகொள்வோம்
*ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
* உலகப் புகழ் பெற்ற 'மோனோலிசா' ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
* வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
* எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
* உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 உள்ளன.
* தேசியக் கொடியை முதன் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். 1291ல் உருவாக்கப்பட்டது.
* அமெரிக்காவைவிட சகாரா பாலைவனம் பெரிது.
* எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் உயிர் வாழும்.
* ஒரு பென்சிலைக் கொண்டு, 58 கி.மீ. நீளமான கோடு போடலாம்.
* பாம்புகளுக்கு கேட்கும் சக்தி இடையாது.
* நண்டிற்கு தலை கிடையாது. அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
* வெள்ளை என்பது ஒரு நிறம் கிடையாது. அது 7 வண்ணங்களின் கலவை ஆகும்.
* முற்றிப் பழுத்துக் காய்ந்த தேங்காய், மரத்தில்ருந்து பகலில் விழாது. இரவில்தான் விழும்.
* நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும். நாய்க்கு நாக்கில் மட்டும்தான் வியர்க்கும்.
* சிலந்திப் பூச்சிக்கு 8 கண்கள் உண்டு.
* இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
*ஆஃப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
*இந்தியாவில் தமிழில்தான் பைபிள் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது.

காமராஜரின் அன்னை சிவகாமி அம்மையார் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையில் இருந்த பொ...

Posted: 22 Jun 2015 04:27 PM PDT

காமராஜரின் அன்னை சிவகாமி அம்மையார் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையில் இருந்த பொழுது தன் மகனைக் காண ஆசை பட்டார்.

அவரது விருப்பம் காமராஜருக்கு தெரிவிக்கப் பட்டது. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து கார் மூலம் விருதுநகரை அடைந்தார்.

தன் தாயின் உடல் நிலை அவரை கவலை கொள்ள செய்கிறது. தன் தாயை பார்ப்பது இதுவே கடைசி முறை என்பதை உணர்கிறார். அவர் தாய்க்கும் அவ்வாறே தோன்றுகிறது. தன் சகோதரி மற்றும் உறவினர்களிடம் இரண்டொரு வார்த்தையில் தாயின் உடல் நிலை பற்றி விசாரித்து விட்டு சென்னைக்கு கிளம்ப தயாராகிறார்.

மரண படுக்கையிலும் அவர் தாய் தன் மகனிடம் "ராசா ஒரு வாய் சாப்பிட்டு விட்டுப் போ" என்கிறார். வேண்டாம் என்று மறுத்த பெருந்தலைவர்..... பிறகு தாயின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சிறிது உணவருந்துகிறார். தாயின் முகத்தில் சந்தோசம்!
காமராஜர் தாயிடம் விடை பெறுகிறார். தாயின் முகத்தில் மகன் நீண்ட நாளுக்கு பின் தன் வீட்டில் உணவருந்திய சந்தோசம் தெரிகிறது.

இதைக் கண்ட திரு.பழ நெடுமாறன் அவர்கள், காமராஜரிடம் "அய்யா, வீட்டில் இதற்கு முன் நீங்கள் சாப்பிட்டு எத்தனை காலம் இருக்கும்...?" என்கிறார்.

தலைவரோ "என்ன..... ஒரு 25 அல்லது ஒரு 30 வருஷம் இருக்கும்..... அம்மா கையால் சாப்பிட்டு" என்கிறார்.

இந்த பதில் சுற்றி இருந்த அனைவரின் மனதையும் வருடுகிறது.

மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு தியாக உள்ளம் காமராசர்


Posted: 22 Jun 2015 04:12 PM PDT


நண்பர்களின் திருவிளையாடல்! அசிங்கப்பட்ட மணமக்கள்! அதிர்ச்சி வீடியோ

Posted: 22 Jun 2015 04:10 PM PDT

நண்பர்களின் திருவிளையாடல்! அசிங்கப்பட்ட மணமக்கள்! அதிர்ச்சி வீடியோ


நண்பர்களின் திருவிளையாடல்! அசிங்கப்பட்ட மணமக்கள்! அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
funny Kerala wedding

எங்கள் தமிழ்நாட்டின் கருப்பு அழகி LIKE

Posted: 22 Jun 2015 04:05 PM PDT

எங்கள் தமிழ்நாட்டின் கருப்பு அழகி LIKE


ஜப்பானிய கோட்பாடு : ஒருவர் ஒரு வேலையை செய்ய முடியும் என்றால் நீயும் கூட அதைச் செ...

Posted: 22 Jun 2015 04:01 PM PDT

ஜப்பானிய கோட்பாடு :
ஒருவர் ஒரு வேலையை செய்ய முடியும் என்றால்
நீயும் கூட அதைச் செய்யலாம்.!!
யாருமே செய்ய முடியவில்லை என்றால்
நீ கண்டிப்பாக செய்ய வேண்டும்.!!
இந்தியக் கோட்பாடு:
ஒருவர் ஒரு வேலையை செய்ய முடியும் என்றால்
அவரே அந்த வேலையைச் செய்யட்டும்.!
யாராலும் செய்ய முடியவில்லை என்றால்
நான் மட்டும் எப்படி செய்ய முடியும் ?
# இதனால்தான் ஜப்பான் ஒரு வளர்ந்த நாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.!