Tuesday, 28 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 28 Oct 2014 12:23 PM PDT


பெண்கள் உதடுகளால் பேசும் வார்த்தைகளை விட, கண்களால் பேசும் வார்த்தைகள் அழகாகவும்...

Posted: 28 Oct 2014 12:14 PM PDT

பெண்கள் உதடுகளால்
பேசும் வார்த்தைகளை
விட,

கண்களால் பேசும்
வார்த்தைகள்
அழகாகவும்
கவித்துவமாகவும்
இருக்கிறது.
:P

@சதீஷ் குமார்
தேவகோட்டை

Ten sages of the world kept in MDIS institute singapore. Louis Pasteur, Albert...

Posted: 28 Oct 2014 11:46 AM PDT

Ten sages of the world kept in MDIS institute singapore.

Louis Pasteur,
Albert Einstein, Ibn Khaldoun, Samuel
Johnson, Aristotle, Thiruvalluvar,
Plato, Confucius, Socrates, Maria
Montessori.

உலகில் தோன்றிய பத்து ஞானிகள் சிலையில் நம் திருவள்ளுவரை வைத்துள்ள சிங்கப்பூர் MDIS கல்வி நிறுவனம்.

#தமிழன்_டா


சிங்கப்பூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற எம்.டி.ஐ.எஸ் (MDIS) கல்வி வளாகத்தில் த...

Posted: 28 Oct 2014 11:22 AM PDT

சிங்கப்பூரில்
அமைந்துள்ள உலகப்
புகழ்பெற்ற எம்.டி.ஐ.எஸ்
(MDIS) கல்வி வளாகத்தில்
திருவள்ளுவர்!

உலகில்
இதுவரை தோன்றிய மிகச்
சிறந்த பத்து அறிவர்களுள்
திருவள்ளுவரும் ஒருவர்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது!

#தமிழன்_டா

படம் : மோகன் ராஜ்


கத்தி படத்தில் விஜய் அவர்கள் பேசும் வசனங்களை பொதுமேடைகளிலும் பேச வேண்டும் - முரு...

Posted: 28 Oct 2014 10:55 AM PDT

கத்தி படத்தில் விஜய்
அவர்கள் பேசும்
வசனங்களை பொதுமேடைகளிலும்
பேச வேண்டும் -
முருகதாஸ்.

சார் எங்களயெல்லாம்
காப்பத்த எதோ ப்ளான்
பண்றிங்க...
புரியுது... பண்ணுங்க
பண்ணுங்க...

@பூபதி


தெரு பைப்பில் வரிசையா நின்னு சண்டை போடாம தண்ணி பிடிக்க மாட்டோம்..... ஏதாவது டிக...

Posted: 28 Oct 2014 07:05 AM PDT

தெரு பைப்பில் வரிசையா நின்னு சண்டை போடாம தண்ணி பிடிக்க மாட்டோம்.....

ஏதாவது டிக்கெட் கவுண்டரில் வரிசைல நின்னு டிக்கெட் எடுக்குறதை கவுரவ குறைச்சலா நினைப்போம்.

ஓட்டுக்கு பணம் வாங்குவோம்....

காசு கொடுத்தா போதும் பொதுக்கூட்டம் பேரணின்னு மொத ஆளா போய் நிற்போம்...

பில் இல்லாம பொருள் வாங்குவோம்....

யாராச்சும் நியாயமா இருங்கன்னு சொன்னா யாருதான் நியாயமா இருக்கான்னு குறை சொல்லுவோம்....

லஞ்சம் குடுத்து காரியம் சாதிச்சிக்குவோம்....

பக்கத்து வீட்டுக்காரனுக்கு பிரச்சனைனா உள்ளுக்குள்ள சந்தோஷப்படுவோம்....

நம்மளை விட ஒருத்தன் முன்னேறிட்டா உள்ளுக்குள் குமைவோம்.....நிறைய அவதூறை அள்ளி அள்ளி வீசுவோம்....

இப்பிடி நிறைய நிறைய நிறைய குறைகள் நம்மக்குள்ள இருக்கு.

எங்கேயாவது அணு உலை வந்தா நமக்கென்ன கவலை....நம்ம வீட்ல உலை கொதிச்சா போதும்....

மீத்தேன் திட்டம் வருவதை யாராவது எதிர்த்தா எனக்கென்ன என் வீட்டில் மீன் குழம்பு வக்கிறாங்களா அது போதும்....

இப்பிடி சுத்தி சுத்தி நிறைய நிறைய தப்பு நம்மக்கிட்டே இருந்துதான் தொடங்குது.....

மேலே சொன்ன விஷயங்களை யோசிங்க...நான் சொன்னது தப்புன்னா விட்டுடுங்க...இல்லேன்னா சுத்தியிருக்கிறவனை மாத்துங்க..

கொஞ்சமாவது தப்புன்னு தெரியிற சமூக நிகழ்வுகளை எதிர்க்க பழகுங்க....

அதுதாங்க நம்மளையும் நம்ம சந்ததியையும் காப்பாத்தும்...

@விஜய் சிவானந்தம்

உண்மை கதைக்காக இரண்டு நிமிடம் படியுங்கள் -------"கத்தி" படமும் "சூரியூர்" கிராம...

Posted: 28 Oct 2014 05:34 AM PDT

உண்மை கதைக்காக இரண்டு நிமிடம் படியுங்கள்

-------"கத்தி" படமும் "சூரியூர்" கிராமமும்-------

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் "சூரியூர்". ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம் தான்.

திருச்சியை சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பி தான் விவசாயமே உள்ளது. காவிரி வறண்டு போனால் பல ஏக்கர் நிலம் பாலைவனம் ஆனதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும் விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள் விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடிநீரை வற்றாமல் பார்த்துக்கொண்டது.

இதை செயற்கைக்கோள் உதவியோடு சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. பெப்சி(Pepsi) நிறுவனத்தின் ஆசையை நிறைவேற்ற அவர்களுடன் கைகோர்த்தது திருச்சியில் உள்ள LA Bottlers Pvt Ltd நிறுவனம். LA Bottlers Pvt Ltd நிறுவனத்தின் உரிமையாளர் அடைக்கலராஜ் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ந்து 3 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சூரியூரில் பாட்டில் (Glass Bottle) தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போவதாக தவறான தகவலை அப்போதைய சூரியூர் ஊராட்சிமன்ற தலைவர் மலர்விழி மூலம் சொல்லி தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று. இதையறிந்த பெப்சி நிர்வாகம் உடனடியாக சூரியூரில் உள்ள சிலருக்கு தினக்கூலியாக வேலை வழங்கப்பட்டது.

இருப்பினும் தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால் 2012, டிசம்பர் மாதம் சூரியூர் விவசாய சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சில நண்பர்களுடன் சூரியூர் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தோம். அப்போது ஆபத்தான, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அங்குள்ள நிலங்களில் நேரிடையாக கலக்கவிட்டனர்.

அன்றுமுதல் சூரியூரை சார்ந்த திரு. ராஜேந்திரன் பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இருந்து தொழிற்சாலையின் உரிமம் சம்மந்தமாக ஆவணங்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. இந்த தொழிற்சாலை அனுமதி பெறாமலே கட்டப்பட்டிருப்பதை நகர் ஊரமைப்பு துறை மூலம் தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிமம் பெறப்பட்டுள்ளது.

இன்னும் பல ஆவணங்களை ஒன்றிணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதனால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு " உலக தண்ணீர் தினம் – 2014 அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் திருச்சிராப்பள்ளி கோட்டாசியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், அரசு நிர்வாகம் பெப்சி தொழிற்சாலைக்கு மட்டுமே ஆதரவாக பேசியதை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெப்சி தொழிற்சாலைக்கு உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

இருப்பினும் இன்றுவரை மாவட்ட நிர்வாகம், சில பத்திரிக்கை, ஊடகம் என்று பல கதவுகளை தட்டிவிட்டோம். ஆனால் அதிகார பலமும், பண பலமும் பாதாளம் வரை சென்று அறவழியில் போராடும் சூரியூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கவிடவில்லை.

தற்போது வெளிவந்துள்ள "கத்தி" திரைப்படத்தின் மூலம் அனைத்துதரப்பட்ட மக்களுக்கும் "தண்ணீரின் அவசியமும், உரிமையும்" தெரியவந்துள்ளது. நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய ஏரிகளும், குளங்களும் நம் தலைமுறைகளின் தாகத்தை தணிக்கவேண்டுமே தவிர, அந்நிய நாட்டவர்களின் பணபசிக்கும், நம் நாட்டு துரோகிகளின் ஆடம்பர பசிக்கும் விட்டுவிடக்கூடாது.

"கத்தி" திரைப்படத்தில் வரும் கற்பனை கதையை பார்த்துவிட்டு கண்ணீர் விடும், ஆதங்கப்படும், கோபப்படும் ரசிகர்களே !
சூரியூரில் பெப்சி கம்பெனிக்கு எதிராக நடைபெறும் போராட்டதுக்கு என்ன செய்யபோகிறீர்கள்.

தன்னால் மட்டும் என்ன செய்யமுடியும் என்று விலகிபோகிறீர்களா? அல்லது "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்று எங்களுடன் இணையபோகிறீர்களா?

மனசாட்சியுள்ளவர்கள், மானமுள்ளவர்கள் இந்த விவசாயிகளின் கண்ணீரை துடைக்க எங்களின் அறப்போராட்டத்தில் இணையவார்கள் என்று நம்புகிறோம்.


சோழநாடு சோறுடைத்து அன்று! இனி சோழநாடு மீத்தேனுடைத்து தான்!!

Posted: 28 Oct 2014 05:17 AM PDT

சோழநாடு சோறுடைத்து அன்று!
இனி சோழநாடு மீத்தேனுடைத்து தான்!!


வர வர சினிமா நடிகர்கள், தங்கள் படங்களை தியேட்டரில் மட்டுமே பாருங்கள் என்று வைக்க...

Posted: 28 Oct 2014 04:05 AM PDT

வர வர சினிமா நடிகர்கள், தங்கள் படங்களை தியேட்டரில் மட்டுமே பாருங்கள் என்று வைக்கும் ஒப்பாரி நாளுக்கு நாள் கூடிக்கொண்டேச் செல்கிறது. எதற்காக தியேட்டருக்குச் சென்று பார்க்க வேண்டும்?

கோடி கோடியாக கறுப்புப் பணத்தைக் கொட்டி, குப்பை சினிமாவை எடுத்து, அதற்கும் வரி விலக்கு கேட்கும், சினிமாக்காரன் எடுக்கும் படங்களை, இனி சி.டி யில் மட்டுமே தான் பார்க்கவேண்டும். கொள்ளையாக லாபம் வருமாம், அதற்கு வரியையும் கட்ட மாட்டானாம். ஆனால் பொது மக்கள் மட்டும் திரைப்படங்களை சினிமா கொட்டகைக்கு சென்று பார்க்கவேண்டுமாம். முடியாது.

திரைத்துறைக்கான வரிவிலக்கை முழுவதும் ரத்து செய்து, அவர்கள் கேளிக்கை வரியை கட்டும் வரையில், சி.டி யில் மட்டுமே நாம் படங்களைப் பார்க்க வேண்டும்.

பத்து ரூபாய் தந்து வாங்கும் சி.டி யால் அதை விற்பவனுக்கு, ஒரு வேளை சோற்றுக்காவது உதவும்.

சம்பாதிக்கும் பணத்திற்கு ஒழுக்கமாக வரி கட்ட முடிந்தால் மட்டும் படங்களை எடுங்கள். இல்லையெனில் கல்குவாரிக்கு வேலைக்குச் சென்று உழைத்துப் பிழையுங்கள்.

@துரை மோகன்

விஜயும் முருகதாசும் கொக்கோகோலா கம்பெனிக்கு எதிராககத்தி திரைப்படத்தில் பேசுவதற்கு...

Posted: 28 Oct 2014 02:32 AM PDT

விஜயும் முருகதாசும்
கொக்கோகோலா கம்பெனிக்கு எதிராககத்தி திரைப்படத்தில்
பேசுவதற்கு ரொம்ப
நாளைக்கு முன்னமே நம்ம
வைகை புயல்
வடிவேலு இம்சை அரசன்
23ஆம் புலிகேசியில்
கொக்கோகோலா கம்பனிக்கு எதிராக
ஒரு மெஸேஜ்
சொல்லியிருக்கிறார்.

@சூர்யா

"சாப்டியா ?" என Message அனுப்பும் காதலியாக வேண்டாம்...! "சாப்பிடு" என ஊட்டிவிடு...

Posted: 28 Oct 2014 12:58 AM PDT

"சாப்டியா ?" என Message அனுப்பும் காதலியாக வேண்டாம்...!

"சாப்பிடு" என ஊட்டிவிடும் மனைவியாக வேண்டும்...!

"Take care" என்று சொல்லும் காதலியாக வேண்டாம்...!

"I will take care for you" என இருக்கும் மனைவியாக வேண்டும்...!

உன் தாய் தந்தையருக்கு தெரியாமல் உரையாடும் காதலியாக
வேண்டாம். உன் தாய் தந்தையரோடு உரையாடும் மனைவியாக வேண்டும்...!

கண்ணில் கனவுகளோடு காத்திருக்கும் காதலியாக வேண்டாம்...!

நெஞ்சில் உன்னை சுமக்கும் மனைவியாக வேண்டும்...!

உன் அழகை ரசிக்கும் காதலியாக வேண்டாம்...!

உன்னை அழகாய் ரசிக்கும் மனைவியாக வேண்டும்...!


பொறக்க இருந்த பொன் கொழந்தைங்கள வயித்துலயே கொன்னுட்டானுங்க அந்த காலத்து கிறுக்கனு...

Posted: 28 Oct 2014 12:12 AM PDT

பொறக்க இருந்த பொன் கொழந்தைங்கள வயித்துலயே கொன்னுட்டானுங்க அந்த காலத்து கிறுக்கனுங்க. பொண்ணு கெடைக்கணும்னா, அத்தி மரம் வன்னி மரம்னு ஏழெட்டு மரத்துக்கு மஞ்சக்கயிறு கட்டணும்னு சோசியக்காரர் பரிகாரம் சொல்றார். மரத்துக்கு எங்க போக ? அதான் இருந்த மரத்தெல்லாம் வெட்டி ஊரு பூரா கான்க்ரீட் தொட்டி கட்டி வெச்சுருக்கீங்களே. பொண்ணு கெடக்காம இத்தன வயசாகியும் கன்னிப் பையனாவே ஒருத்தன் இருக்கானே, அவம் பாவம் ஒங்களயெல்லாம் சும்மா விடாது.

@கார்த்திக் பாலாஜி

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரிலிருந்து சற்று தூரம் பயணித்தால் "வேப்பத்தூர்" என...

Posted: 27 Oct 2014 10:38 PM PDT

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரிலிருந்து சற்று தூரம் பயணித்தால் "வேப்பத்தூர்" என்ற கிராமம் நம்மை வரவேற்கிறது, இங்க செங்கல் கோயில் ஒண்ணு இருக்காமே? என்று கேட்டதும், இன்னும் கொஞ்சம் தூரம் போய் அந்த காட்டுக்குள்ள நடங்க தம்பி என்ற பதில் வருகின்றது, சற்று தூரம் பயணித்து, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு முட்புதருக்கு நடுவே செல்லும் அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்று கொண்டே இருந்தால் 100 மீட்டர் தொலைவில் நம்மை வரவேற்கிறது ஒரு பிரம்மாண்டமான செங்கல் கட்டிடம். அங்கோர் வாட் கோயிலுக்கு வந்துவிட்டோமா? அல்லது இது ஏதேனும் வேற்று கிரகமா? என்ற குழப்பத்தில் பின்னால் திரும்பிப் பார்த்து, என்னுடன் பயணித்த என் நண்பர்களின் பேச்சு சத்தம் கேட்டு சமாதானம் ஆகிறேன்.

OMG!! அந்த கட்டிடத்தை நெருங்க நெருங்க உரக்க கத்த வேண்டும் போல் தோன்றியது, செங்கலில் இத்தனை உயர கட்டிடமா? இதென்னப்பா அநியாயம் எத்தனை லட்சம் செங்கல் இந்த ஒரு கோயிலுக்காக மட்டும் அறுத்திருப்பார்கள்! எப்படி இத்தனை கற்கள் மேலேறி இருக்கும்! அதுவும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவுகளில் வடிவங்களில் செங்கல்கள் உள்ளது! எப்படி இந்த இடத்தில் இது போன்ற வடிவில் செங்கல் வேண்டும் என்று முன்னரே திட்டம் தீட்ட முடிந்தது! அதற்கேற்றாற் போல் தயாரிக்க முடிந்து! அடக் கடவுளே, தஞ்சை பெரிய கோயில் செங்கல்லில் கட்டி இருந்தால் இப்படித் தானே இருந்திருக்கும்? படத்தில் பாருங்கள் என்ன உயரம்! எத்தனை கம்பீரம்! இந்த கோயிலின் வயது தெரியுமா? ஏறக்குறைய 1200 வருடங்கள்! பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்டது. அதாவது தஞ்சை பெரிய கோயிலை விட 200 ஆண்டுகள் பழமையானது!. நேற்று கட்டிய அப்பர்ட்மெண்ட் இன்றைய மழைக்கு விழுந்துவிடும் இதே மண்ணில் ஒரு செங்கல் கட்டுமானம் 1200 வருடங்கள் கடந்து இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டுள்ளது!.

ஆச்சர்யம் கலையாத அதே பார்வையில் கோயிலை நெருங்கி மெல்ல சுற்றி வருகிறோம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களில் இருக்கும் செங்கற்க்களைப் போல் மிக வழவழப்பாக இருந்தது அந்த கற்கள்! இது என்ன வகை தொழில் நுட்பம்! உடன் பயணித்த கட்டிடத் துறையில் பணியாற்றும் நண்பர் தேவநாதன், இன்றைக்கும் இருக்கும் தொழில்நுட்பத்தையும் அதைக் காட்டிலும் 1000 வருடங்களுக்கு முன்பு கட்டிடங்கள் எழுப்ப அவர்கள் பயன்படுத்தி இருக்கும் முறைகளையும் அந்த கோயிலை காட்டி விளக்கிக்கொண்டிருன்ததுஆச்சர்யத்தை மேலும் அதிகரித்தது.

சுற்றி பார்த்துவிட்டு கோயில் கருவறைக்குள் சென்றோம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்ததால் ஒரு கட்டையின் துணை கொண்டு மறுபுறம் சென்று உள்ளிருக்கும் கருவறை சுவரில் சில ஓவியங்கள் அழிந்த நிலையில் காணக்கிடைகின்றது. இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் தமிழ்நாட்டிலேயே பல்லவர்,சோழர்,விஜயநகர பேரரச மன்னர்களின் ஓவியங்கள் அனைத்தும் ஒரே இடத்தில இங்கு மட்டுமே காண முடியும், ஆனால் நம்முடைய அலட்சியத்தால் கவனிப்பாரின்றி போய் இன்றைக்கு அதன் சுவடுகள் மட்டும் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றது.

இருட்டிக்கொண்டே இருந்தது கோயிலை விட்டு பிரிய மனமில்லை, மீண்டும் பல முறை இங்கு வரவேண்டும் என்று உள்மனம் சொன்னது, அந்த பிரம்மாண்டமான கோயிலை திரும்பி பார்த்துக்கொண்டே மீண்டும் அந்த ஒற்றையடிப் பாதையில் நடக்கத் துவங்கினோம். அடுத்து வருபவர்கள் காப்பாற்றுவார்கள் என்று பல்லவன் கோயிலை எழுப்பினான், அதை சோழன் காப்பாற்றி மேம்படுத்தினான், அதை விஜய நகரப் பேரரசும் வலுவூட்டி கஷ்டப்பட்டு காப்பாற்றி நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டது, பாவம் அவர்களுக்கு தெரியாது எல்லாவற்றிற்கும் ஒரு நாள் முடிவு உண்டு என்று, அதை இந்த தலைமுறை செய்யும் என்று!.

—சசி தரன்


கணேசன் புதுவை எடுகெட்ஐயன்(Education) என்று எழுதிவிட்டு அதை எஜுகேஷன் என்று படிக்...

Posted: 27 Oct 2014 10:36 PM PDT

கணேசன் புதுவை

எடுகெட்ஐயன்(Education) என்று எழுதிவிட்டு அதை எஜுகேஷன் என்று படிக்க வேண்டும்.

அப்பிலே(Apple) என்று எழுதிவிட்டு ஆப்பிள் என்று படிக்க வேண்டும்.

ஓராங்கே(Orange) என்று எழுதிவிட்டு ஆரஞ்ச் என்று படிக்க வேண்டும்.

இது போல பல வார்த்தைகளை சொல்லலாம்.

ஆங்கில வார்த்தைகள் ஒவ்வொன்றும் தனி தனியாக உச்சரிப்பை கற்க வேண்டும்.

இதுபோல் எந்த சிக்கலும் இல்லாமல் எழுத்தை உச்சரிக்க கற்றுக்கொண்டால் யார் வேணுமானாலும் சரளமாக எந்த தடையும் இல்லாமல் வாசிக்க முடியும் தமிழ் மொழியின் சிறப்பை நினைத்து பார்க்கிறேன்.

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


புள்ளைய பெத்து தொட்டிலில் போடுவது அந்தக்காலம். 'Facebookல்' போடுவது இந்தக்காலம்...

Posted: 28 Oct 2014 12:14 AM PDT

புள்ளைய பெத்து தொட்டிலில் போடுவது அந்தக்காலம். 'Facebookல்' போடுவது இந்தக்காலம்
#புகைப்படம்.

Posted: 28 Oct 2014 12:08 AM PDT


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


சிவா ஒரு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்.. ஒரு நாள் மாலை வே...

Posted: 28 Oct 2014 06:17 AM PDT

சிவா ஒரு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்.. ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் Freezer அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.
உடனே பெரும் கூச்சலிட்டான் சிவா....உள்ளிருந்து அவன் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தான் சிவா....
அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது....உயிர் வந்தவனாய் வெளியே ஓடி .வந்தான்...தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார்.....சந்தோஷத்தில் அவரை கட்டி தழுவிக்கொண்டான்....
அவரிடம், "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டான்.
"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை...
உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றார்...
ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை (அன்பு) செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம் தானே நண்பர்களே.....

எத்தனை முறை உன்னுடன் சண்டையிட்டு கொண்டு பேசாமல் இருந்தாலும் ... அந்த கோபம் ஒரு ந...

Posted: 28 Oct 2014 04:48 AM PDT

எத்தனை முறை உன்னுடன் சண்டையிட்டு கொண்டு பேசாமல் இருந்தாலும் ...
அந்த கோபம் ஒரு நாள் கூட நிலைத்திருப்பதில்லை. . . !

வேண்டுகோள்: நண்பர்களுக்கு வணக்கம்., என் தோழியின் தாய்க்கு புற்றுநோய் பாதிப்பு...

Posted: 27 Oct 2014 07:36 PM PDT

வேண்டுகோள்:

நண்பர்களுக்கு வணக்கம்.,
என் தோழியின் தாய்க்கு புற்றுநோய் பாதிப்பு ஆரம்ப நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'ஷிமொகா' (shimoga) கேன்சர் கியூர் பற்றி சரியான தகவல் தெரிந்தால் தயவு செய்து விளக்கமாக கூறுங்கள்., உங்களுக்கு தெரிந்த யாராவது புற்று நோயால் பாதிக்கப்பட்டு 'சிமோகா' வில் மருந்து வாங்கி சாப்பிட்டு இருந்தால் அதன் மூலம் சரி ஆனதா? இல்லையா? என்பதையும் கூறுங்கள்.,

நன்றிகள்...

@ Indupriya MP
...


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


:(

Posted: 28 Oct 2014 09:30 AM PDT

:(


Makkal Thalapathy :)

Posted: 28 Oct 2014 07:10 AM PDT

Makkal Thalapathy :)


ஒரு @#பணக்காரன், இருந்தான்.... அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம். ”என் வாழ்க்கையில் இ...

Posted: 28 Oct 2014 06:50 AM PDT

ஒரு @#பணக்காரன், இருந்தான்....
அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம்.
"என் வாழ்க்கையில் இப்படி நடந்துவிட்டதே. ஊரில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். என்னென்னவோ காரியங்களயெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் #கஷ்டம் வரவில்லை.
ஆனால், இறைவன் ஏன் எனக்கு இந்தக்கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?" என்று புலம்பினான்.
"அப்படியா, உன் ஊரில் மொத்தம் எத்தனை
பேர் இருப்பார்கள்?" என்று கேட்டார். ஒருவர்
"ஏன் ? நிறைய பேர் இருப்பார்கள்."
"அவர்களில் எத்தனை பேர் சொந்தமாய் வீடு
வைத்திருக்கிறார்கள்?"
"கொஞ்சம் பேர்தான் வத்திருக்கிறார்கள்."
"சரி, எத்தனை பேர் சொந்தமாய் கார் வத்திருக்கிறார்கள்?"
பணக்காரன் #யோசித்தான்.
"அதுவும் ரொம்பக் கொஞ்சம் பேர்தான்."
"ஊரில் உன்னைப்போல; எத்தனை பேரிடம் பணம் இருக்கிறது?"
"என்ன கேள்வி இது ? ஊரிலேயே பெரிய பணக்காரன் #நான்தான்!"
"உன் ஊரில் அத்தனை பேர் இருந்தும் நீ ஒருவன்தான்
பெரிய பணக்காரனாய் இருக்கிறாய். இவ்வளவு பேர்
இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம்
கொடுத்தாய் என்று இறைவனை கேட்டிருக்கிறாயா?"
இந்தக் கேள்விக்கு பணக்காரனிடம் #பதிலில்லை....!!

கத்தி திரைப்படத்தில் 2ஜி வழக்கு பற்றி சர்ச்சை வசனம்! விஜய், முருகதாஸ், லைகாவுக்க...

Posted: 28 Oct 2014 06:30 AM PDT

கத்தி திரைப்படத்தில் 2ஜி வழக்கு பற்றி சர்ச்சை வசனம்! விஜய், முருகதாஸ், லைகாவுக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்!

நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், அதை 'ஊழல்' என்று குறிப்பிடும் வகையில் கத்தி திரைப்படத்தில் வசனம் வருகிறது.

இந்த வசனத்தை எதிர்த்து மதுரை ஹைகோர்ட் கிளையில் வக்கீல் ஒருவர் தொடர்ந்த வழக்கில், படத்தின் இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் லைகா, வசனத்தை பேசிய நடிகர் விஜய் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


#Kaththi.. Purinjavanga Mattum Like Pannunga..

Posted: 28 Oct 2014 06:10 AM PDT

#Kaththi..

Purinjavanga Mattum Like Pannunga..


கேடு கேட்ட சமுகம் 1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூக...

Posted: 28 Oct 2014 05:55 AM PDT

கேடு கேட்ட சமுகம்

1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா?

2. மெதுவடைல இருக்கிற மொளகாவ தூக்கி எறியுற அதே சமூகம் தான் மொளகால பஜ்ஜி போட்டும் சாப்பிடுது

3.எல்லா பண்டிகையையும் சிறப்புநிகழ்ச்சினு டிவில நாள்புல்லா விளம்பரங்களை பாத்து கொண்டாடுற ஒரு மாதிரியான சமூகம் நம்மளோட சமூகம் தான்

4.சக மனிதன் சீக்குல இருந்தா கூட கவலைப்படாத இந்த சமூகம்தான் சிட்டுக்குருவியின் அழிவைப்பத்தி கவலைப்படுது

5.பணக்காரன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் கடந்துவிடும் இதேசமுகம்தான் ஏழையாக இருந்தால் பேசியே அவனை தற்கொலையீன் விளிம்புவரை தள்ளிவிடும்

6.டவுசர் மட்டும் போட்டு நடிச்ச காரணத்துக்காக சமந்தாவை கொண்டாடுற இந்த சமூகம்தான் பட்டா பட்டியை போட்டு போற கிராமத்தான கிண்டல் செய்யுது

7.வத்தல் காய வைக்கும் போது காக்காவ தொரத்துற இதே சமூகம்தான், சாமிக்கு படைச்சா காக்காவ முதல்ல திங்க சொல்லி கத்துத்து.

8.ஆணும் பெண்ணும் நெருங்கி பழகினா அதை நட்புன்னு நினைக்கும் கேடுகெட்ட சமூகம் தான் இது.

9.வெளிநாட்டில் தமிழ் பேசுவதை கௌரவமாக நினைக்கும் அதே சமூகம்தான் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கிறது

10.பவர்ஸ்டாரின் டோப்பாவை பரிகாசம் செய்யும் இதே சமூகம் தான், ரஜினியின் அனிமேட்டட் சிக்ஸ் பேக்கை புல்லரித்து ரசிக்கிறது...

11.குளிரும் போது ஸ்வெட்டர் போட்டுக்க சொல்லி கொடுத்த இதே சமுகம் தான் வெயிலில் சட்டை பட்டனை திறந்து விட்டு போகும் போது பொறுக்கினும் சொல்லுது...

12.ஒரு ஏழையின் நேர்மையை அவன் இயலாமையாகப்பார்க்கும் அதே சமூகம் தான் ஒரு பணக்காரனின் போலியான பணிவை சிலாகிக்கும்

13.ஒருவனை வசைபாடும் போது சற்றும் சம்மந்தமே இல்லாமல் அவனது அம்மாவை ஒழுக்கத்தை சாடும் கேடுகெட்ட சமூகம் தானே இது..

14.தெருக்கூத்து நடிகர்களை கூத்தாடிகள் என்று கேலி பேசிய சமூகம் தான், சினிமா நடிகர்களை ஸ்டார்களாக்கி உச்சந்தலையில் வைத்து கொண்டாடுகிறது.

15.கத்தி படம் பார்க்கும் போது விவாசாயிகாக உச்சு கொட்டுற சமுகம் தான் படம் முடிஞ்சி வெளிய வந்ததும் கோக்க கோலா வாங்கி குடிக்குது .

#களவாணி பய

சிந்தனை துளிகள்... * மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால், உடலும் நன்றாக இருக்கும்....

Posted: 27 Oct 2014 09:56 PM PDT

சிந்தனை துளிகள்...

* மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால், உடலும் நன்றாக இருக்கும். உடலை சுறுசுறுப்பாக்கினால் மனதில் உற்சாகம் நிலைக்கும்.

* அறிவை அகங்கார மாசு மூடியிருக்கிறது. இதை நீக்கி விட்டால் தெய்வசக்தியும், ஞானமும் மேலோங்கும்.

* உடல் மட்டுமின்றி உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மை உண்டானால் வாக்கிலும் ஒளியுண்டாகும்.

* எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று உண்மையாக வேண்டினால், கடவுளும் மனமிரங்கி அருள்புரிவார்.

* அறியாமை என்னும் விஷப்பூச்சியை மனதிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது. இல்லாவிட்டால் இன்பம் அனைத்தும் காணாமல் போய் விடும்.

* இளம்வயதில் ஏற்படும் அபிப்ராயம் ஆற்றல் வாய்ந்தது. இதை மறப்பதோ, மாற்றுவதோ கடினம்.

* நெஞ்சில் ஈரமில்லாதவர்கள் கடவுளை அறிய முடியாது. இரக்க சிந்தனை இருந்தால் இறையருள் கைகூடும்..

ரசிகர்கள் உருவாக்கிய விஜய் சிலை! - வீடியோ ! "தளபதி கண் அசைச்சா போதும் தமிழ்நாடே...

Posted: 27 Oct 2014 09:30 PM PDT

ரசிகர்கள் உருவாக்கிய விஜய் சிலை! - வீடியோ !

"தளபதி கண் அசைச்சா போதும் தமிழ்நாடே பத்திக்கும்"
ரசிகர்கள் ஆவேசப் பேச்சு!

http://m.youtube.com/watch?list=PLLAYnkdlSffkr74lHG4HjKmhY7O1OMurU&v=WbhLDwbydqU


Actor Vijay Statue In Chennai | Kaththi | AR Murugadsoss

"தளபதி கண் அசைச்சா போதும் தமிழ்நாடே பத்திக்கும்" - கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்!

புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை,பெரியவர்கள் "#பதினாறும்_பெற்று #பெருவாழ்வு_வாழ்க...

Posted: 27 Oct 2014 09:21 PM PDT

புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை,பெரியவர்கள் "#பதினாறும்_பெற்று #பெருவாழ்வு_வாழ்க" என்பார்கள்.

"பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது?

இல்லவே இல்லை. மாறாக, வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று சிறப்பாக வாழ்வதையே குறிக்கிறது.

1.உடலில் நோயின்மை,

2.நல்ல கல்வி,

3.தீதற்ற செல்வம்,

4.நிறைந்த தானியம்,

5.ஒப்பற்ற அழகு,

6.அழியாப் புகழ்
,
7.சிறந்த பெருமை,

8.சீரான இளமை,

9.நுண்ணிய அறிவு,

10.குழந்தைச் செல்வம்,

11.நல்ல வலிமை,

12.மனத்தில் துணிவு,

13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்),

14.எடுத்தக் காரியத்தில் வெற்றி,

15.நல்ல ஊழ்(விதி),

16.இன்ப நுகர்ச்சி.

இதுவே பதினாறு செல்வங்களாகும்.

முதியோர் இல்லத்திற்கு, பணம் கொடு,பொருள் கொடு, உணவு கொடு, உடை கொடு, உன் பெற்றோரை...

Posted: 27 Oct 2014 10:56 AM PDT

முதியோர் இல்லத்திற்கு, பணம் கொடு,பொருள் கொடு, உணவு கொடு, உடை கொடு, உன் பெற்றோரை கொடுத்து விடாதே...!!!

#Kaththi #Vijay #Unnikrishnan உன்னிகிருஷ்ணன் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியுதவி...

Posted: 27 Oct 2014 10:45 AM PDT

#Kaththi #Vijay #Unnikrishnan உன்னிகிருஷ்ணன் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்!

விஜய் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யும்போது தவறி விழுந்த கேரளாவைச் சார்ந்த உன்னி கிருஷ்ணன் குடும்பத்தினர் விஜய்யை கோவையில் சந்தித்தனர்.

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது #தாய் 15 நிமிடத்தில் ஒரு பெண...

Posted: 28 Oct 2014 09:15 AM PDT

5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது #தாய்

15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது #சகோதரி

30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது #தோழி

3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில், அது #காதலி

உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது #மனைவி

Relaxplzz

# படித்ததில் பிடித்தது # நான் நேற்று கடைத் தெருவிற்கு சென்று கொண்டிருந்தேன் அங்...

Posted: 28 Oct 2014 09:02 AM PDT

# படித்ததில் பிடித்தது #

நான் நேற்று கடைத் தெருவிற்கு சென்று கொண்டிருந்தேன் அங்கு ஒரு முதியவரை பார்த்தேன். அவருக்கு சுமார் அறுவது வயது இருக்கும். கையில் ஒரு கொம்புடம் நடந்து வந்தார்.

ஒரு பிச்சைக் காரன் அவரிடம் தர்மம் கேட்டார், உடனடியாக பையில் இருந்து ஒரு பத்து காசை கொடுக்க அந்த பிச்சைக் காரருக்கு ஆத்திரம் வந்தது.. செல்லாத காச தர்மம் பன்னுறியே யா.. நீ எல்லாம் நல்லா இருப்பியா என்று திட்டிய படி சென்றார்.. என்ன கொடுமடா பத்து காச வேணாம்னு சொல்லுறானேனு முதியவர் புலம்பிக்கொண்டே சென்றார்..
பின்னர் ஒரு இட்லி கடையில் ரெண்டு இட்லி எவளோ அம்மா என்று கேட்டார். பத்து ரூபா என்றார் அந்த அம்மா.. என்னது பத்து ரூபாயா என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. ஏம்மா ரெண்டு இட்லி பத்து காசுதானமா பத்து ரூபாங்கற என்றார்... பெரியவரே எந்த லோகத்துல இருகிங்க பத்து காசெல்லாம் எப்போவோ செல்லாதுன்னு சொல்லிட்டாங்க... நாட்டுல என்ன நடக்குதுன் தெரியாம தோளுல துண்ட போட்டுகிட்டு கிளம்பி வந்துறது... போங்க பெரியவரே என்று அனைவரும் அவரை ஏளனம் செய்து சிரித்தனர்.

அவர் முகம் வாடிப் போனார்.. அவரிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன். அய்யா நான் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தேன்.. நீங்கள் எந்த ஊர்..?? என்ன செய்கிறீர்கள்? பிள்ளைகள் இருக்கிறார்களா என்று கேட்டேன். நான் இதே ஊர் தான். பிள்ளைகள் இல்லை நான் ஒன்டிக்கட்டை என்றார். நீங்க செய்திகள் பார்ப்பது இல்லையா?? நட்டு நடுப்புகள் எதையும் அறியாமல் இருக்கிறீர்களே.. ஐந்து பைசா பத்து காசு இதெல்லாம் செல்லாக் காசிகிவிட்டது. இரண்டு இட்லி பத்து முதல் இருபது ரூபாய் வரை விலை ஏறிவிட்டது. மலிவு விலை உணவகத்தில் ஏழைகுக்கு மட்டுமே கம்மி விலையில் உணவு கிடைக்கும். பணக்காரர்கள் ஐந்து நட்சத்திர உணவகத்தில் உண்பார்கள். பிச்சைக் காரனுக்கு தர்மம் செய்ய எண்ணினால் கூட பத்து ரூபாய் போட வேண்டும் இல்லை என்றான் நம்மையும் பிச்சை எடுக்க அழைப்பான். நம் நாடு வளர்ந்துவிட்டது. இந்தியா வளரசாக உயர்ந்து கொண்டிருப்பதால் தான் இந்த மாற்றங்கள் என்றேன்.

முதியவர் என்னைப் பார்த்து சிரித்தார்.. என்ன பெரியவரே சிரிகிறீங்க என்று கேட்டேன். முப்பது நாப்பது வருடத்திற்கு முன் ஒரு விபத்தில் நான் நினைவுகளை இழந்து படுத்த படுக்கையாக கோமாவில் இருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்புதான் நினைவு திரும்பியது, உடல்நலம் தேறியதும் ஊரை சுற்றி பார்க்க வந்தேன்.. எனக்கு நாட்டு நடப்பு தெரியும், இந்த நாற்ப்பது ஆண்டுகளில் இந்தியா இவளவு மாறி இருக்கும் என்று நினைக்கவில்லை. என் காலத்தில் ஏழை பணக்காரன் இருவருக்கும் ஒரே விலையில் தான் இட்லி ஆனால் இப்பொழுது ஏழைக்கு மலிவுவிலை உணவகம், பணக்காரனுக்கு ஐந்து நட்சத்திர உணவகம்... இதற்கு பெயர் முன்னேற்றமா??? அனைத்து மக்களுக்கும் அனைத்து பொருட்களும் ஒரே விலையில் கிடைத்தால் அன்று தான் நம் நாடு முன்னேறியதாக அர்த்தம்...

இந்த ஏற்றத்தாழ்வை முன்னேற்றம் என்று சொல்பவன் மூடன் என்றார்... என் காலத்தில் பத்து ரூபாயை வைத்து ஒரு வாரம் சாப்பிடலாம், இந்த காலத்தில் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது இதற்க்குப் பேர் முனேற்றம்.. சிரிக்கத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றார்...

அவர் பார்பதற்கு கிறுக்கன் போல் இருந்தாலும் அவர் சொன்னது அனைத்துமே மறுக்க முடியாது உண்மை!

- நந்த மீனாள் © ®

Relaxplzz


இளைஞர்கள் எங்கப்பா... யாரும் சிரிக்கக் கூடாது ! :P :P

Posted: 28 Oct 2014 08:42 AM PDT

இளைஞர்கள் எங்கப்பா... யாரும் சிரிக்கக் கூடாது ! :P :P


:)

Posted: 28 Oct 2014 08:30 AM PDT

:)


சுஜாதாவின் பத்து கட்டளைகள்… (கண்டிப்பாகப் படிக்கவும் !!!) 1. ஒன்றின் மேல் நம்பி...

Posted: 28 Oct 2014 08:00 AM PDT

சுஜாதாவின் பத்து கட்டளைகள்…
(கண்டிப்பாகப் படிக்கவும் !!!)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும்..
ஏதாவது ஒன்று.
உதாரணம் கடவுள், இயற்கை,
உழைப்பு, வெற்றி இப்படி எதாவது…
நம்பிக்கை நங்கூரம் போல.
கேள்வி கேட்காத நம்பிக்கை.
கேள்வி கேட்பது சிலவேளை இம்சை.
நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு
இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது
பல சமயங்களில் கடுப்பாக இருக்கும்.
ஒருமாறுதலுக்கு
அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள்.
அவர்கள் கேட்பது உங்களால்
செய்யக் கூடியதாகவே இருக்கும்.
பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர்
(அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.
செய்துதான் பாருங்களேன்..

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள்.
க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும்.
தலைவலி வரும். காசு விரயம்.
வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு
ரொம்ப ஞாபக சக்தி வேண்டும்.
இந்த உபத்திரவத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம்.

இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல்
மிகவும் குறைந்த காலம்..
அதைக் க்யூ வரிசைகளிலும்
குறைபட்ட தலைவர்களுக்காகவும்
விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள்,
மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.
சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல்.
அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும்
ஆக்கிரமிக்கும் தீ அது.
பொய் நிறையச் சொல்ல வேண்டும்.
வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும்.
இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு:
பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும்,உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும்,
காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும்.
ஏதாவது தேகப் பயிற்சி செய்யவும்.
கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ
தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள்..
எதையாவது வீசி எறியுங்கள்..
உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு
ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை.
ராத்திரி சரியாக தூக்கம் வரும்.
கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும்.
ஒழுங்காக சாப்பிடத்தோன்றும்.
பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும்.
மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்).
எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...

Relaxplzz


எங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் வாங்கும் வரை அது பழரசம் வைக்கும் இடம் என்று எண்ணியிருந...

Posted: 28 Oct 2014 07:45 AM PDT

எங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் வாங்கும் வரை
அது பழரசம் வைக்கும் இடம்
என்று எண்ணியிருந்தேன்.
பின்னர்தான் தெரிந்தது
அது பழைய ரசம் வைக்கும் இடம் என்று.

- Victor Raj


டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் அது. அதன் துவக்க விழாவுக்கு அன்றைய பிரத...

Posted: 28 Oct 2014 07:15 AM PDT

டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் அது.

அதன் துவக்க விழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார் .

தற்பொழுது, பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது.

நேரு எந்திரத்தில் ஏறி நின்றுகாசு போட்டு எடை பார்த்தார். மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர்.

காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார்.

நேரு அவரையும் எடை பார்க்கும்படி கட்டாயப் படுத்தியும் காமராஜர் மறுத்தார்.

சுற்றி நின்றிருந்தவர்களுக்கு திகைப்பு. பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று.

அதனைப் பார்த்த நேரு சொன்னார்,

"காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும். இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட, இப்பொழுது இவரிடம் இருக்காது"

இப்படியும் சில நல்ல தலைவர்கள் இருந்தனர் என்பதை உலகுக்கு சொல்வோம்.. :)

Relaxplzz

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே...

Posted: 28 Oct 2014 07:00 AM PDT

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.

நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லி விடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. 'நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்' தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

Relaxplzz


(y)

Posted: 28 Oct 2014 06:30 AM PDT

(y)


ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வள...

Posted: 28 Oct 2014 06:15 AM PDT

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..

"மாமியாரின் அன்புப்பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்,

"போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?"

மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..

"மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

Relaxplzz

வயிறு நெறஞ்சா மனசு நெறயும்! கூகுள் கம்பெனியின் தலைமைச் செயலகம் மௌன்ட்டன் வியூ ந...

Posted: 28 Oct 2014 06:00 AM PDT

வயிறு நெறஞ்சா மனசு நெறயும்!

கூகுள் கம்பெனியின் தலைமைச் செயலகம் மௌன்ட்டன் வியூ நகரத்தில் இருக்கிறது. இங்கே 19 உணவகங்கள் உள்ளன. இந்திய, ஜப்பானிய, மெக்ஸிகன் என்று வகை வகையாக மெனு. ஊழியர்கள் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அவ்வளவும் ஃப்ரீ.

மற்ற கம்பெனிகள் எல்லாம் ஊழியர்களிடம் சாப்பாட்டுக்குப் பணம் வசூலிக்கும்போது, கூகுள் இலவசமாக ஏன் கொடுக்கிறது? கம்பெனி நிறுவனரும், தலைவருமான லாரி பேஜ்-யிடம் இந்த கேள்வியை கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்:

'உணவை ஃப்ரீயாகப் பெறும்போது, தாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் பாச உணர்வு ஊழியர்களுக்கு வருகிறது.'

கூகுளின் மகத்தான வளர்ச்சியின் மந்திரச் சாவி இந்தக் குடும்ப உணர்வுதான்! உங்கள் ஊழியர்களின் மனசை நெறப்புங்க; அவங்க மனசு நெறஞ்சா, உங்க கல்லாவை நெறப்புவாங்க!

Relaxplzz


:)

Posted: 28 Oct 2014 05:30 AM PDT

:)


முல்லா தனது மனைவியிடம் சொன்னார், ''நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பித...

Posted: 28 Oct 2014 05:15 AM PDT

முல்லா தனது மனைவியிடம் சொன்னார்,

''நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பித்திருக்கிறேன். மூலதனம் மட்டும் ஒரு கோடி ரூபாய்"

மனைவி கேட்டார்,

"அப்படியானால் நீங்கள் பாதிப் பணம் போட வேண்டியிருக்குமே, அவ்வளவு பணத்திற்கு எங்கே போவீர்கள்?''

முல்லா சொன்னார்,

''நண்பன் மூலதனம் முழுவதையும் போடுவான். என் அனுபவம் தொழில் நடத்த உதவும்.என் அனுபவம் தான் என் பங்கு மூலதனம்"

முல்லாவின் மனைவிக்கு ஒரே மகிழ்ச்சி.

"லாபத்தில் இருவருக்கும் சம பங்கா?'' என்று ஒரு சந்தேகத்தினைக் கேட்டாள்.

முல்லா சொன்னார்,

''அப்படி ஒப்பந்தம் எதுவும் போடவில்லை. ஆனால் இரண்டு வருடம் கழித்து மூலதனம் என்னிடம் இருக்கும். அனுபவம் நண்பனிடம் இருக்கும்.''

Relaxplzz

:)

Posted: 28 Oct 2014 04:30 AM PDT

:)


திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்....

Posted: 28 Oct 2014 04:15 AM PDT

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.

அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே "என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது" என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.

கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .

நாட்கள் உருண்டோடின. அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.

அவள் கணவர் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார். மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.

அன்று இரவு அவர் மனைவி,

"நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த‌ கணவர் சொன்னார்,

"என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள்"

===பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்!!! ♥ ♥

Relaxplzz

ஒரு பார்வை: நமது பெண் கடவுளும், பண்டைய எகிப்தியர்களின் ஆண் கடவுளும்..! சில ஒற்ற...

Posted: 28 Oct 2014 04:00 AM PDT

ஒரு பார்வை: நமது பெண் கடவுளும், பண்டைய எகிப்தியர்களின் ஆண் கடவுளும்..!

சில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கிறது :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்:
அளவு =180,000 m2

இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட இந்தக் கோவில் கி.மு 500 க்கு முன்னர் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தும் தெளிவாக குறிப்பிடபடவில்லை. எனினும் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரால் புதுபிக்கபட்டது. பலர் அதையே கட்டப்பட்ட வருடமாக தவறாக எண்ணியுள்ளனர். ஆயிரம் கால் மண்டபத்தில் இருக்கும் தூண்கள்களின் எண்ணிக்கை 985.

எகிப்து கார்னக் அம்மான் கோவில்:
அளவு = 5,000 m2

கி.மு 500 ஆம் ஆண்டு ஆண் கடவுள் "அம்மான்"க்காக கட்டப்பட்ட இந்தக் கோவில், சரியாக முடிக்கக்கப்படாமல் விடப்பட்டது. இதில் உள்ள மொத்தத் தூண்கள்களின் எண்ணிக்கை 134.

எகிப்தியர்கள் வணங்கிய அம்மான் என்ற கடவுள். தமிழர்கள் வணங்கிய அம்மன் ஆகக்கூட இருக்கலாம். பெயரிலும், உருவத்திலும் தலையில் கொண்டை அமைப்பு அதில் உள்ள சுங்கு, கையில் பூ, கழுத்தில் சரடு மாலை சற்றே ஒரே போல் இருக்கும் இந்த இரு தெய்வங்களும் ஒரே தெய்வங்களாக இருக்க வாய்ப்புண்டு.

Relaxplzz


பூ, குழந்தை ரெண்டுமே வாடக்கூடாது!!!

Posted: 28 Oct 2014 03:40 AM PDT

பூ, குழந்தை ரெண்டுமே வாடக்கூடாது!!!


:)

Posted: 28 Oct 2014 03:30 AM PDT

:)


:)

Posted: 28 Oct 2014 03:30 AM PDT

:)


டீச்சர் ஒரு மாணவன் கிட்ட கேட்டாங்க.... "நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நில...

Posted: 28 Oct 2014 03:15 AM PDT

டீச்சர் ஒரு மாணவன் கிட்ட கேட்டாங்க....

"நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதற்கு காரணம் என்ன?"

பையன் சொன்னான்,

"மக்கள் தொகை பெருக்கம்"

"அப்படின்னா மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன?" டீச்சர் மீண்டும் கேட்க,

பையன் சொன்னான்,

"வேலை இல்லா திண்டாட்டம்"

:P :P

Relaxplzz

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் இந்தியா, 450 கோடி செலவு செய்து செவ்வாயில் மீத்தேன் வாய்வு உள்...

Posted: 28 Oct 2014 02:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

இந்தியா,
450 கோடி செலவு செய்து செவ்வாயில் மீத்தேன் வாய்வு உள்ளதா என சோதனை செய்கிறது.

இலங்கை,
தினமும் சில படகுகளை அணுப்பி இந்தியாவுக்கு சூடு சொரணை உள்ளதா என சோதனை செய்கிறது.

#அணுவகழ்

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே!! :P :P

Posted: 28 Oct 2014 02:40 AM PDT

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே!! :P :P


:)

Posted: 28 Oct 2014 02:30 AM PDT

:)


ஊனத்தால் சோர்ந்துபோயிருந்தவொரு நண்பனிடம் நான் சொன்னேன். "உயிரெழுத்துகளில் 'ஊ'ம...

Posted: 28 Oct 2014 02:09 AM PDT

ஊனத்தால் சோர்ந்துபோயிருந்தவொரு நண்பனிடம் நான் சொன்னேன்.

"உயிரெழுத்துகளில்

'ஊ'மட்டுமே

'உ'வுடன் 'ள'வை

தூக்கிக்கொண்டுநிற்கிறது.

அவ்வளவு சக்தி அதற்கு.

அதானாலேதான்

அந்தச்சொல்லை

ஊனத்தின்

முதலெழுத்தாகவைத்துள்ளனர்.

சும்மா புகுந்துவிளையாடு"

அவன் உற்சாகமாகிவிட்டான்.

:)

- பாலா ஃபீனிக்ஸ்

@relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 2

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் கல்யாணத்திற்க்கு போகும் போது , அடுத்தவங்க புடவை பார்த்து , இந...

Posted: 28 Oct 2014 01:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

கல்யாணத்திற்க்கு போகும் போது , அடுத்தவங்க புடவை பார்த்து , இந்த மாதிரி கிடைக்க வில்லை என்று ஏங்குபவள்
#மனைவி

அடுத்தவங்க பொண்டாட்டியை பார்த்து , இந்த மாதிரி பொண்டாட்டி நமக்கு கிடைக்க வில்லை என்று ஏங்குபவன்.
#கணவன்

- ஹாஜா பகுருதீன்

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம். # பேஸ்புக் என்றாலே ஒரு தவறான எண்ணத்தை தோற்று...

Posted: 28 Oct 2014 01:40 AM PDT

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம்.

# பேஸ்புக் என்றாலே ஒரு தவறான எண்ணத்தை தோற்றுவித்த சில அசிங்கங்களிடையே .... நம்ம மானத்த காப்பாத்திட்டாஙக் ... வாழ்த்துக்கள்!!


:)

Posted: 28 Oct 2014 01:30 AM PDT

:)


காலையிலே என் மனைவியைப் பார்த்து, "நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேடி ... ஐ லவ் ய...

Posted: 28 Oct 2014 01:15 AM PDT

காலையிலே என் மனைவியைப் பார்த்து,

"நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேடி ... ஐ லவ் யூ செல்லம்"ன்னு கொஞ்சினேன்.

அதுக்கு அவள்,

.
.
.
.
.
.
.
.
.
.
.

..
.

"இதோபாருங்க, கைல பத்துபைசா கெடயாது எங்கிட்ட".!ன்னு சொல்றா.

# எப்படித்தான் எல்லாத்தையும் கண்டுபிடிக்கிறான்னே தெரியலைப்பா!!...ஸ்ஸ்ஸ்

- Jayant Prabakhar

Relaxplzz

கணினி, கைபேசியில் புதிய சாதனை ******************************** இந்தியாவிலேயே மு...

Posted: 28 Oct 2014 01:00 AM PDT

கணினி, கைபேசியில் புதிய சாதனை
********************************

இந்தியாவிலேயே முதன் முறையாக கணினி மற்றும் கைபேசியில் எண்களை மட்டுமே கொண்டு, தமிழில் டைப் செய்யும் முறையை அறிமுகப்படுத்தி சாதனை படைத்திருக்கிறார் தமிழர் ஒருவர். அவரது சாதனை பற்றி...

எண்கள் மூலம் டைப் செய்யும் முறை

புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் தனது உறவினருடன் சேர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு கைபேசியில் எளிதாக தமிழ் எழுத்துகளை டைப் செய்வதற்கான மென்பொருளை உருவாக்கினார். இதையடுத்து, வெறும் எண்களாலேயே கணினி விசைப்பலகை மற்றும் கைபேசியில் தமிழில் தகவல்களை பாரிமாறி கொள்ளும் மென்பொருளுக்கான காப்புரிமையையும் பெற்றார்.

16 மொழிகளில் பயன்படுத்தலாம்

தற்போது இந்த சேவையை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ள வாசுதேவன், www.easytype.in என்ற இணையதளம் மூலம் வரும் ஜனவரி 20-ம் தேதி வரை மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். தமிழ் உட்பட மொத்தம் 16 மொழிகளில் பூஜ்யம் முதல் ஒன்பது வரையிலான நியூமரிக் வடிவில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு உதவி செய்ய கோரிக்கை

அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இந்த மென்பொருளை அதிக செலவில் உருவாக்கியுள்ளதாகவும், இந்த முயற்சிக்கு அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் வாசுதேவன்.

இந்த தமிழரின் சாதனையை உலகறிய செய்ய ஒரு SHARE செய்யுங்கள்.

#ரசிகன் இயற்கை ரசிகன்

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் தன் கொள்கைக்காக தன்னை பலி இடுபவன்- தீவிரவாதி... தன் கொள்கைக்...

Posted: 28 Oct 2014 12:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

தன் கொள்கைக்காக தன்னை பலி இடுபவன்- தீவிரவாதி...
தன் கொள்கைக்காக பிறரை பலி இடுபவன்- அரசியல்வாதி....

- திவ்யா ராஜன்