Sunday, 19 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அரசியல்வாதிக்காக தீ குளித்தவன், அதிகாரியின் தற்காப்புக்காய் சுடப்பட்டவன், என ஒவ்...

Posted: 19 Oct 2014 10:28 AM PDT

அரசியல்வாதிக்காக தீ
குளித்தவன், அதிகாரியின்
தற்காப்புக்காய்
சுடப்பட்டவன், என
ஒவ்வொரு உயிருக்கும்
ஓர் விலை நிர்ணயம்
செய்யப்படுவது நமது நாட்டில்
மட்டும் தான்.

@கனா காண்கிறேன்

"இந்தியாவை தூய்மைப் படுத்துவோம்!!" - பிரதமர். மோடி # முதல்ல உங்க ஹிந்திக்காரனுங...

Posted: 19 Oct 2014 10:21 AM PDT

"இந்தியாவை தூய்மைப்
படுத்துவோம்!!" -
பிரதமர். மோடி

# முதல்ல உங்க
ஹிந்திக்காரனுங்க
பான்பராக்
போடுறதை நிறுத்தச்
சொல்லுங்க.
பத்தடிக்கு ஒரு எடத்தில்ல
துப்பி வைக்குறானுங்க.

@சிவ கணேஷ்

இந்திய அரசியலில் காங்கிரஸ், திமுக நிலைமை நாளுக்கு நாள் மோசமகிட்டு வருது, உதயநிதி...

Posted: 19 Oct 2014 10:19 AM PDT

இந்திய அரசியலில்
காங்கிரஸ், திமுக
நிலைமை நாளுக்கு நாள்
மோசமகிட்டு வருது, உதயநிதி ஸ்டாலினுக்காவது
கொஞ்சம் நடிக்க வருது,
பொழச்சுகுவாரு.

பாவம் ராகுல்காந்தி!

@பூபதி

பக்கத்தில் ஒரு சேர் கூட இல்லை பாருங்க.. இதே போல தான் தொடக்கூடாது என்பதற்காக இளை...

Posted: 19 Oct 2014 10:00 AM PDT

பக்கத்தில் ஒரு சேர் கூட
இல்லை பாருங்க..

இதே போல தான் தொடக்கூடாது என்பதற்காக
இளையராஜாக்கும் விருதை தனது உதவியாளர்
மூலம் கொடுத்தார் இவர்.


கோவத்தில் சமைத்தாலும் அம்மாவின் சாப்பாட்டில் ருசி குறைவதில்லை. ஆனால் மனைவிக்கு க...

Posted: 19 Oct 2014 08:38 AM PDT

கோவத்தில் சமைத்தாலும்
அம்மாவின் சாப்பாட்டில்
ருசி குறைவதில்லை.
ஆனால்
மனைவிக்கு கோவமென்றால்
சாப்பாட்டில்
அது தெரிகிறது..

இது என்ன மாயமோ :(

@அசோக்குமார்

நீதிபதி : தினமும் காலையும்,மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும்...

Posted: 19 Oct 2014 08:33 AM PDT

நீதிபதி : தினமும்
காலையும்,மாலையும்
வந்து ஸ்டேசன்ல
கையெழுத்து போட்டுட்டு போகணும்
தெரியுதா?

திருடன் : சரிங்கய்யா,
வெளிய
விட்டுடீங்க.. அப்புறம்
வழக்கம் போலத் திருடப்
போகலாமில்லே ஐயா?

#இது
அரசியல்பதிவு அல்ல....

- காளிமுத்து

சு.சாமி புரோக்கரா இருந்தாலும் எதிரில் சரிக்கு சமமாக அமர சேர் போடுவாய்ங்க..... ஆ...

Posted: 19 Oct 2014 07:53 AM PDT

சு.சாமி புரோக்கரா இருந்தாலும்
எதிரில் சரிக்கு சமமாக
அமர சேர்
போடுவாய்ங்க.....

ஆனா பொன்னார் மத்திய
அமைச்சரா இருந்தாலும்
தர டிக்கெட் தான்....


வீதிக்கு வீதி KFC கடைகளை அனுமதித்துவிட்டு வலுப்பூர் அம்மனுக்கு கோழி அறுக்கக் கூட...

Posted: 19 Oct 2014 07:40 AM PDT

வீதிக்கு வீதி KFC
கடைகளை அனுமதித்துவிட்டு வலுப்பூர்
அம்மனுக்கு கோழி அறுக்கக்
கூடாது என்று சொல்வதில்
எந்த நியாமும்
இருப்பதாகத்
தெரியவில்லை. KFCயில்
மட்டும்
அனஸ்தீசியா கொடுத்துவிட்டு கோழியை அறுக்கிறார்களா என்ன?
நாமக்கல்லில்
வளர்க்கப்படும் பண்ணைக்
கோழிகள்
பெங்களூருக்கும்
சென்னைக்கும்
வந்து சேர்ந்து உயிரை இழப்பது வரையிலும்
அனுபவிக்கும்
வதையில்
முப்பது சதவீதத்தைக்
கூட கோவில்களில்
வெட்டப்படும்
விலங்குகள்
அனுபவிப்பதில்லை
என்றுதான்
நினைக்கிறேன்.

@வா.மணிகண்டன்

தண்டட்டி : அந்த காலத்தில் வயதான பாட்டிகளின் காதில் இந்த தண்டட்டியை காணலாம். தற்...

Posted: 19 Oct 2014 06:05 AM PDT

தண்டட்டி :

அந்த காலத்தில் வயதான பாட்டிகளின் காதில் இந்த தண்டட்டியை காணலாம். தற்போது தண்டட்டி அணிந்த பெண்களை காண்பது அரிதாகிவிட்டது. தண்டட்டி அணிவதர்க்காகவே காதுகளை வளர்த்தால் தான் இந்த தண்டட்டியை அணியமுடியும். காது வளர்த்து தண்டட்டி அணியவேண்டும் என்றால் இறைவனிடம் வேண்டிக்கொண்டு ஒரு ஆட்டை பலிகொடுத்து காதுளில் துளையிட்டு இந்த தண்டட்டியை அணிவர்.

இந்த தண்டட்டி தங்கம் அல்லது வெங்களத்தில் செய்யப்பட்டிருக்கும். இதை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைக்கின்றனர்.

நவநாகரீகத்தின் மீது அடிமையாகாமல் இருக்கும் மக்கள் வசிக்கும் பகுதியில் தண்டட்டி அணிந்த பெண்களை பார்க்கலாம்.

- பா விவேக்


சென்னை மழை!

Posted: 19 Oct 2014 04:44 AM PDT

சென்னை மழை!


இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தித்தாளில் ”காவிரி ஆற்றில் மணல் திருட்டு” என்று...

Posted: 19 Oct 2014 03:45 AM PDT

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தித்தாளில் "காவிரி ஆற்றில் மணல் திருட்டு" என்று படத்துடன் பெரிதாகப் போட்டிருந்தார்கள்..

அதில் ஒரு ஆள் காவிரி ஆற்றின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் நெஞ்சு உயரத் தண்ணீரில், செவ்வக வடிவில் மூங்கில்களை இணத்துக்கட்டி, அதன் மேல் பெரிய தகரத் தட்டை விரித்து வைத்திருக்கிறார்.. எடையைத் தாங்கும் அளவிற்கு அதில் டியூப்பும் கட்டப்பட்டிருக்கிறது.. தண்ணீருக்குள் மூழ்கி ஒரு தட்டில் மணலை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி, அதை அந்த தகரத்தட்டில் போடுகிறார்.. அதாவது கடலுக்குள் முத்துக்குளிப்பது போல்.. பின் ஓரளவு மணல் சேர்ந்ததும், அதை இழுத்துக்கொண்டு வந்து, கரையில் இருக்கும் ஒரு மாட்டு வண்டியில் கொட்டுகிறார்..

இதை அழகாகப் படம் பிடித்து, வரிசையாக இந்தக் காட்சிகளின் ஃபோட்டோவைப் போட்டு இதைத் தான் மணல் திருட்டு என்று சுட்டிக்காட்டுகிறது அந்த செய்தித்தாள்.. அவனின் அன்றாடப்பிழைப்பை கெடுக்கும் செய்தி இது.. அதற்காக அவன் செய்வது ஒன்றும் சரி என்று நான் கூறவரவில்லை.. ஆனால் அவன் இப்படி மணலைத் திருடி அந்த ஆற்று வளத்தையேவா அழித்துவிடப்போகிறான்? உண்மையிலேயே மணல் திருட்டின் மேல், இயற்கை வளத்தின் மேல் அக்கறை இருக்கும் அந்த செய்தித்தாள், பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு நீர் சொட்டச்சொட்ட மணலை அள்ளி, அதை எண்ணிலடங்கா டிப்பர் லாரிகளில் மரண வேகத்தில் கொண்டு செல்வதைப் பற்றி இவ்வளவு பகிரங்கமாக படத்துடன் செய்தி போடலாமே?

ஆற்றில் மணல் அள்ளும் போது பொக்லைன் போன்ற இயந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பது சட்டம்.. இதை ஒருவரும் பின்பற்றுவது கிடையாது.. இது அந்த செய்தித்தாளுக்குத் தெரியாதா? அட, ஆத்துக்குள்ள தார் ரோடு போட்டு மணல் அள்ளுறான் சார்.. அதையெல்லாம் படத்தோட நியூஸா போடுங்களேன் பாப்போம்.. மாட்டீர்கள், ஏனென்றால் உயிர் பயம். அந்தச்செய்தி வந்த மறுநாள், எழுதிய அந்த நிருபரின் உயிர் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ என்ட்ரன்ஸ் டிக்கெட் எடுத்துக்கொண்டிருக்கோம்.. அன்றாடங்காய்ச்சி ஒருவன், ஒரு ஓரமாக இப்படி உடலையும், உயிரையும் வருத்தி தன் பிழைப்பைப் பார்க்கும் போது தான் உங்கள் சமூக அக்கறை பொத்துக்கொண்டு வருமோ? நான்காம் தூணின் நெற்றிக்கண் எல்லாம் திறக்குமா? போங்கய்யா நீங்களும் உங்க பத்திரிகை தர்மமும்.

@ராம் குமார்


தமிழ் படித்தால் சென்னையை தாண்டிக் கூட போக முடியாது, உலகில் எங்கேயும் போக முடியாத...

Posted: 19 Oct 2014 01:40 AM PDT

தமிழ் படித்தால் சென்னையை தாண்டிக் கூட போக முடியாது, உலகில் எங்கேயும் போக முடியாது என்று சொல்பவர்கள்,ஏனோ அன்றே தமிழ் சீனா வரை சென்றுள்ளது என்பதை மறந்து விடுகிறார்கள்

சீனாவில் உள்ள ஓர் தமிழ் கல்வெட்டு. சீன எழுத்துருக்களும் இதில் காணலாம்.
------------------------------------
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.


எப்பொழுது கைப்பிள்ளை ராகுல்ஜி பிரச்சாரத்துக்கு கிளம்பினாரோ அப்பொழுதே பா.ஜ.க வெற்...

Posted: 19 Oct 2014 01:30 AM PDT

எப்பொழுது கைப்பிள்ளை ராகுல்ஜி பிரச்சாரத்துக்கு கிளம்பினாரோ அப்பொழுதே பா.ஜ.க
வெற்றி உறுதி செய்யப்பட்டது.

@பாஸ்கர்

நாங்களே கேஃஎப்சி போஸ்டர பாத்துக்கிட்டே பழைய சோத்த தின்னுக்கிட்டு கிடக்கோம்... எ...

Posted: 19 Oct 2014 12:55 AM PDT

நாங்களே கேஃஎப்சி போஸ்டர
பாத்துக்கிட்டே பழைய
சோத்த
தின்னுக்கிட்டு கிடக்கோம்...

எங்க கிட்ட
வந்து கேலக்சி போன்
வேணும்னு கேட்டா என்னாங்கடா நியாயம்??

எல்லா வெளிநாட்டு வேலைக்காரர்களுக்கும் சமர்ப்பணம்.

-Jaleel Sulaikha


'தலைவா', "TIME TO LEAD" நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என எதிரியே முடிவு ச...

Posted: 18 Oct 2014 11:17 PM PDT

'தலைவா', "TIME TO LEAD"

நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என எதிரியே முடிவு செய்கிறான்.

//கத்தி டா, துப்பாக்கி டா, தலைவன் டா.

முடிந்தால் மோதிபார்!


காலைல செம மழை,ரோடெல்லாம் தண்ணி...பைக்ல வேகமா போய் ஸ்கூட்டில போற பொண்ணு மேல தண்ணி...

Posted: 18 Oct 2014 10:59 PM PDT

காலைல செம
மழை,ரோடெல்லாம்
தண்ணி...பைக்ல
வேகமா போய்
ஸ்கூட்டில போற
பொண்ணு மேல
தண்ணி அடிச்சேன்... அவ
திரும்ப
வேகமா வந்து என் மேல
தண்ணி அடிச்சா...
கிராமங்களில் முறைப்
பொண்ணு மேல மஞ்சள்
தண்ணி ஊத்துறத விட
இந்த விளையாட்டு நல்லாருக்கு...

@பூபதி

தமிழர்களுக்கு என இருந்த அடையாளங்களில் ஒன்றான அலங்கு இன நாய்கள் !!!! சோழர்களின் ப...

Posted: 18 Oct 2014 10:55 PM PDT

தமிழர்களுக்கு என இருந்த அடையாளங்களில் ஒன்றான அலங்கு இன நாய்கள் !!!! சோழர்களின் படைகளில் இவைகள் காவல்,மற்றும் வேட்டைக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது....
தற்பொழுது இந்த இன நாய்கள் அழிந்துவிட்டது...
நமக்கென இருக்கும் இதுபோன்ற அடையாளங்கள் காக்கப்படவேண்டும்....!!!!!

தற்பொழுது உள்ள கோம்பை, சிப்பிப்பாறை போன்ற நாய்களை தமிழ் மக்கள் வளர்க்க வேண்டும்...
நாம் தான் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டும்.


பறக்கும் ரயில் மாதிரி சென்னையில் புதுசா விடப்பட்ட மிதக்கும் பஸ் போல... எவன்டா அ...

Posted: 18 Oct 2014 10:52 PM PDT

பறக்கும் ரயில்
மாதிரி சென்னையில்
புதுசா விடப்பட்ட
மிதக்கும் பஸ் போல...

எவன்டா அங்க
சென்னையை சிங்கப்பூரா மாத்துவேன்னு இன்னும்
கூவுறது...

@Austin


திருமணத்திற்கு முன் அவளைக் காதலிக்கிறேன் என ஊர் முழுக்க பறைசாற்றிய ஆணின் மனது த...

Posted: 18 Oct 2014 09:53 PM PDT

திருமணத்திற்கு முன்
அவளைக்
காதலிக்கிறேன் என ஊர்
முழுக்க பறைசாற்றிய
ஆணின் மனது

திருமணத்திற்குப் பின்
அதே காதலை காதலியிடம்
கூட கூற
மறுப்பது புரியாத
புதிர்...

@சதீஷ் குமார்
தேவகோட்டை

ஆங்கிலேய கல்விமுறை தான் இந்திய கலாச்சாரத்தை கெடுத்து விட்டது- ராஜ்நாத்தம் சிங்.....

Posted: 18 Oct 2014 09:42 PM PDT

ஆங்கிலேய
கல்விமுறை தான்
இந்திய
கலாச்சாரத்தை கெடுத்து விட்டது-
ராஜ்நாத்தம் சிங்...

>< இவுரோட
இளையமகன் பிரிட்டன்ல
படிக்கிறான்....

@வீரமணி

&#xb9a;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbae;&#xbbe;&#xba9; &#xb9a;&#xbc0;&#xbb0;&#xbc1;&#xb9f;&#xbc8; &#xb85;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xbb5;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbb0;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbaa;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbbf;&#xbaa;&#xbcd; &#xbaa;&#xbc7;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xb95; &#xbb5;&#xbb0;&#xbbf;&#xb9a;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xba8;&#xbbf;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;...

Posted: 18 Oct 2014 09:33 PM PDT

சுத்தமான
சீருடை அப்பாவின் விரல்
பிடித்து பள்ளிப்
பேருந்துக்காக
வரிசையில் நிற்கும்
தனியார் பள்ளிக்
குழந்தைகளின்
உலகத்தை விட...

கசங்கிய சீருடையுடன்
தோளில்
கைபோட்டு துள்ளலாய்
சிரித்தபடி செல்லும்
அரசுப்
பள்ளி குழந்தைகளின்
உலகத்தில்
மகிழ்ச்சி அதிகம் தான்.

@நிவந்திகா தேவி

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


&#xba8;&#xbae;&#xbcd; &#xb87;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xbb5;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb89;&#xba3;&#xbcd;&#xbae;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xba9; &#xbb9;&#xbc0;&#xbb0;&#xbcb;&#xbaf;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb87;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc7;... &#xb87;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf; &#xb8e;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb87;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1;... &#xb87;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;...

Posted: 19 Oct 2014 05:05 AM PDT

நம் இந்தியாவின் உண்மையான ஹீரோயின் இவர்களே...

இந்திய எல்லையில் இருந்து...

இவர்களுக்கு அடியுங்கள் ஒரு #Salute


&#xb9e;&#xbbe;&#xbaa;&#xb95;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbb0;&#xbc1;&#xba4;&#xbc7;! &#xba8;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbbf; : &#xbb2;&#xbcb;&#xb95;&#xba8;&#xbbe;&#xba4;&#xba9;&#xbcd; &#xb86;&#xbb1;&#xbc1;&#xbae;&#xbc1;&#xb95;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbbe; &#xbb5;&#xbbf;&#xbb5;&#xbc7;&#xb95;&#xbcd;

Posted: 18 Oct 2014 10:22 PM PDT

ஞாபகம் வருதே!

நன்றி : லோகநாதன் ஆறுமுகம்

பா விவேக்


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


SI &#xb95;&#xbbe;&#xbb3;&#xbbf;&#xba4;&#xbbe;&#xbb8;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb9a;&#xbc1;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbca;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f; &#xb9a;&#xbc8;&#xbaf;&#xba4;&#xbc1; &#xbae;&#xbc1;&#xbb9;&#xbae;&#xbcd;&#xbae;&#xba4;&#xbc1;&#xbb5;&#xbc8; &#xbaa;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbf;&#xbaf; &#xb92;&#xbb0;&#xbc1; &#xb89;&#xba3;&#xbcd;&#xbae;&#xbc8; &#xb8e;&#xba9;&#xbcd;&#xba9;&#xbb5;&#xbc6;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xb89;...

Posted: 19 Oct 2014 12:35 AM PDT

SI காளிதாஸால் சுட்டுக்கொல்லப்பட்ட சையது முஹம்மதுவை பற்றிய ஒரு உண்மை என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

கடந்தமாதம் பயணிகளுடன் ஏர்வாடிக்கு சென்று கொண்டிருந்த காரைக்குடி பேருந்து எஸ்பி பட்டினத்தில் திடீரென தீப்பிடித்து நிற்க்க,அந்த தீயை அணைத்து மொத்த பயணிகளின் உயிரையும் காப்பாற்றியவர் இதே சையது முகமதுதான்!-நன்றி இன்றைய நக்கீரன் பக்கம் 47.

&#xbaa;&#xbc7;&#xbb8;&#xbcd;&#xbaa;&#xbc1;&#xb95;&#xbcd; : &#xb85;&#xbb0;&#xb9a;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95;&#xbae;&#xbcd; &#xbae;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc8; &#xb89;&#xbb3;&#xbb5;&#xbc1; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95; &#xb89;&#xba4;&#xbb5;&#xbc1;&#xbae;&#xbcd; &#xba8;&#xbb5;&#xbc0;&#xba9; &#xb9a;&#xbbe;&#xba4;&#xba9;&#xbae;&#xbcd;.

Posted: 18 Oct 2014 06:05 PM PDT

பேஸ்புக் : அரசாங்கம் மக்களை உளவு பார்க்க உதவும் நவீன சாதனம்.


&#xbae;&#xbc6;&#xb95;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xb95;&#xbcb;&#xbb5;&#xbbf;&#xbb2;&#xbcd;, &#xb9a;&#xbc6;&#xbaa;&#xbcd;&#xb9f;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbb0;&#xbcd; 26 &#xbae;&#xbcd; &#xba4;&#xbc7;&#xba4;&#xbbf;, 43 &#xb95;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc2;&#xbb0;&#xbbf; &#xbae;&#xbbe;&#xba3;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb95;&#xbbe;&#xba3;&#xbbe;&#xbae;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xbaf;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xba9;&#xbb0;&#xbcd;....

Posted: 18 Oct 2014 06:01 PM PDT

மெக்சிகோவில், செப்டம்பர் 26 ம் தேதி, 43 கல்லூரி மாணவர்கள் காணாமல் போயிருந்தனர். அவர்களின் இறந்த உடல்கள், தற்போது மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப் பட்டுள்ளன. போதைவஸ்து கடத்தல் கும்பல் ஒன்று அந்த மாணவர்களை கொலை செய்து புதைத்திருந்தது. இந்தத் தகவல் ஏற்கனவே பல ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டிருந்தது. பலர் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்பார்கள்.

ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்காத தகவல் ஒன்றுள்ளது. இந்த மாணவர்கள் மெக்சிகோவில் "தீவிர இடதுசாரிகளின்" கோட்டையாக கருதப்படும் கல்லூரி ஒன்றை சேர்ந்தவர்கள். வறிய மாணவர்களின் கல்வி கற்கும் உரிமைக்காக போராட்டங்கள் நடத்தியவர்கள். அதனால், அவர்கள் காவல்துறையினரால் கடத்தப் பட்டிருந்தனர்.

மெக்சிகோ காவல்துறைக்கும், மாபியாவுக்கும் இடையில் தொடர்பு இருப்பது ஊரறிந்த இரகசியம். அதனால், பொலிஸ்காரர்கள், கிரிமினல் கும்பலுடன் சேர்ந்து அந்த மாணவர்களை கொன்று புதைத்திருக்கலாம் என்று மக்கள் நம்புகிறார்கள்.

நேற்றைய தினம், மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் அகாபுல்கோ நகரில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட, பல்லாயிரக் கணக்கான மக்கள், மாணவர்களின் படுகொலை தொடர்பாக நீதி விசாரணை நடத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

Thanks: Kalaiyugam.


&#xb9a;&#xbc0;&#xba9;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xb9a;&#xbc1;&#xb95;&#xbb3;&#xbc8; &#xbaa;&#xbc1;&#xbb1;&#xb95;&#xbcd;&#xb95;&#xba3;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbcb;&#xbae;&#xbcd;. .... &#xba4;&#xbc0;&#xbaa;&#xbbe;&#xbb5;&#xbb3;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb9a;&#xbc0;&#xba9;&#xbaa;&#xbcd; &#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xb9a;&#xbc1;&#xb95;&#xbb3;&#xbc8; &#xbb5;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbe;&#xba4;&#xbc0;&#xbb0;&#xbcd;&#xb95;...

Posted: 18 Oct 2014 05:54 PM PDT

சீனத்து பட்டாசுகளை புறக்கணிப்போம்.
....
தீபாவளிக்கு சீனப் பட்டாசுகளை வாங்காதீர்கள்.
சிவகாசிப் பட்டாசுகளை மட்டுமே வாங்கி 5
இலட்சம் தமிழ் குடும்பங்களை வாழ வையுங்கள்....

வெளியுறவுக் கொள்கையின் ஒரே காரணத்தால்
இந்தியா சீனத்துப் பொருட்களை இங்குள்ள
வியாபாரிகள் இறக்குமதி செய்ய அனுமதி கேட்டால் அரசாங்கத்தால் தடை சொல்ல முடியாது.
ஆகவேதான் வடநாட்டு வியாபாரிகள் சீனாவில்
இருந்து மலிவு விலையில் ரூ 2000 கோடிக்கு பட்டாசுகளை இறக்குமதி செய்து தமிழன் தலையில் கொளுத்திப் போடப்
பார்க்கிறார்கள்.

அரசாங்கத்தால் தடை செய்ய முடியாததை தமிழர்களாகிய நாம் செய்வோம். சீனத்துப்
பட்டாசுகளை நீங்கள் வாங்கவில்லை என்றால் அடுத்த
வருடம் அதை இறக்குமதி செய்ய அந்த சுயநல வணிகர்கள் தயங்குவார்கள். வியாபாரம்
குறையும். மெல்ல மெல்ல சீனப்
பொருட்கள் நம்மை விட்டு விலகும்.
தமிழர்களே... விழித்தெழுங்கள்....

சீனா உங்கள் தேசமல்ல, சீனப் பொருட்கள் உங்கள் உள்நாட்டுத் தயாரிப்பல்ல....
சிவகாசி உங்கள் ஊர்... சிவகாசிக்காரர்கள் நம் மக்கள்...
தமிழர்கள்.... அவர்களது பரம்பரைத் தொழிலை நசிக்கப் பார்க்கும் சீனாவை நாம் உள்ளே நுழைய
விடலாமா?

நீங்கள் சிவகாசிப் பட்டாசு வாங்கவில்லை என்றாலும்
பரவாயில்லை !... ஆனால் சீனத்து பட்டாசு வாங்கி வெடித்து அனைத்து தமிழர்களின் தலையிலும் தயவுசெய்து தீ வைக்க வேண்டாம்....
அதுமட்டும் இல்லை.... ஒருவருடம் இந்த தீபாவளிக்காக,
உங்களுக்காகவே உழைத்து, வெடிவிபத்தில் சிக்கி சீரழிந்து, தினம் செததுப் பிழைக்கும் சிவகாசிப் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள 5 இலட்சம் தமிழ்க்
குடும்பமும் உங்களை காலமெல்லாம்
வாழ்த்தும்.....

இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம்
பகிருங்கள்...

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


&#xb9a;&#xbc6;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc8; &#xbb5;&#xbbf;&#xbae;&#xbbe;&#xba9; &#xba8;&#xbbf;&#xbb2;&#xbc8;&#xbaf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xba4;&#xbae;&#xbbf;&#xbb4;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb87;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8;, &#xbaa;&#xba3;&#xbbf;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xba4;&#xbae;&#xbbf;&#xbb4;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb87;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8; ! &#xb85;&#xba3;&#xbcd;&#xbae;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb9a;&#xbc6;&#xba9;&#xbcd;...

Posted: 19 Oct 2014 09:30 AM PDT

சென்னை விமான நிலையத்தில் தமிழும் இல்லை, பணியில் தமிழரும் இல்லை !

அண்மையில் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு சென்றிருந்தேன். நுழைவாயிலில் இரு பாதுகாவலர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் பயணிகளின் ஆவணங்களை பரிசோதித்து பயணிகளை உள்ளே அனுப்பிய வண்ணம் இருந்தனர். அவர்களிடம் நான் சென்று தமிழில் பேசினேன். அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியாமல் 'நை நை ' என்றனர் . பின்பு அவர்களிடம் தமிழ் தெரியுமா என்று கேட்க அந்த பாதுகாவலர் இல்லை என்று தலை ஆட்டி 'டெல்லி போலீஸ்' என்றார் .

பின்பு அவரிடம் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து விமான நிலைய உதவி மையத்தை அணுகினேன். அங்குள்ள உதவி மையத்தில் தமிழில் பெயர் பலகை இல்லை, தமிழில் பேசக்கூடிய அதிகாரியும் இல்லை. இருப்பினும் அந்த அதிகாரியிடம் தமிழில் பேசத் தொடங்கினேன். அவருக்கு சரியாக புரியவில்லை. சற்று நேரத்தில் வேறு ஒரு தமிழ் தெரிந்த ஊழியர் அங்கு வந்து நம்மிடம் விசாரித்தார். அவரிடம் தமிழ் தெரியாத பாதுகாவலரை நியமித்து உள்ளீர் , 90 % பயணிகள் தமிழ்நாட்டு பயணிகள் உள்நாட்டு முனையத்தை பயன்படுத்துகின்றனர் . ஆனால் இந்த பாதுகாவர்களுக்கு தமிழ் பெயரளவுக்கு கூட தெரியவில்லை என்று புகார் அளித்தேன். இதை புரிந்து கொண்ட தமிழ் பேசாத அதிகாரி, இப்போது தமிழ்நாட்டு பயணிகள் யாரும் தமிழ் பேசுவதில்லை அதனால் தான் நாங்கள் தமிழ் தெரியாத பாதுகாவலர்களை நியமித்துள்ளோம் என்று திமிராக ஆங்கிலத்தில் கூறினார் .

பின்பு நானும் ஆங்கிலத்தில் , இப்படித் தான் டெல்லியில் இந்தி தெரியாத ஒரு பாதுகாவலரை நியமிப்பீர்களா என்று கேட்டதற்கு மௌனம் சாதித்தார். இங்குள்ள பல ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் பயணிக்கிறார்கள், அவர்களுக்கு புரியும் மொழியில் தான் நீங்கள் பேச வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அதை பற்றி அந்த அதிகாரி சட்டை செய்யவில்லை . நானும் புகார் கொடுக்க வேண்டிய இடத்தில் புகார் அளிக்க்றேன் என்று புறப்பட்டு வந்து விட்டேன் .

வெளியே வந்ததும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கு வந்தார் . அவரிடம் இது பற்றி கூறினேன் . அவரும், இதெல்லாம் நம் கட்டுப்பாட்டிற்குள் இல்லையே , நடுவண் அரசின் கட்டுக்குள் தானே வருகிறது நாம் என்ன செய்ய முடியும் என்றார் . நான் கூறினேன் , இருப்பினும் தமிழ்நாட்டில் தானே விமான நிலையம் உள்ளது , அதனால் பணியாளர்கள் அனைவர்க்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்றேன் . அவரும் சரிங்க , நீங்கள் விமான நிலைய இயக்குனருக்கு ஒரு புகார் கொடுங்கள் பார்ப்போம் என்று நகர்ந்தார்.

இன்று விமான நிலைய மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளேன் . அவர்களும் இந்த குறை இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும் இயக்குனரை நேரில் சந்தித்து புகார் அளிக்க வேண்டும் என்றதால், அவரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து நம்மை அழைப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் விமான நிலையத்தின் வெளியே உள்ள எந்த உணவகங்கள், கடைகளுக்கும் தமிழில் பெயர்பலகை இல்லை. அதையும் அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி உள்ளேன் . அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர் . விரைவில் இதை மாற்றி விடலாம் . ஆனால் பணியாளர்கள் தமிழ் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் நாம் இன்னும் கவனம் செலுத்த வேண்டி உள்ளது .

இரண்டு கோரிக்கைகள் 1 . விமான நிலைய பாதுகாவலர்கள் தமிழ் தெரிந்தவராக இருத்தல் வேண்டும் . 2 விமான நிலையத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இருத்தல் வேண்டும். நீங்களும் புகார் அளிக்கலாம். விமான நிலையத்தை தமிழ் படுத்தலாம். தொடர்பு எண் . 044 22560551

- இராச்குமார் பழனிசாமி


&#xba8;&#xbc0;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb89;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb95;&#xbc1;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8; &#xbae;&#xbbf;&#xb95;&#xbb5;&#xbc1;&#xbae;&#xbcd; &#xba8;&#xbc7;&#xb9a;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbb5;&#xbb0;&#xbbe;, &#xb85;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xba9;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb87;&#xba4;&#xbc8; &#xb85;&#xbb5;&#xb9a;&#xbbf;&#xbaf;&#xbae;&#xbcd; &#xbaa;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;...

Posted: 19 Oct 2014 07:52 AM PDT

நீங்கள் உங்கள் குடும்பத்தை மிகவும் நேசிப்பவரா, அப்படியானால் இதை அவசியம் படியுங்கள்...

ஒரு பெரிய வணிக அங்காடியில்
ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக்
கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,
உன்னிடம் இந்த
பொம்மை வாங்குவதற்கு தேவையான
பணம் இல்லை என்று சொன்னார். அந்த
சிறுவன் இந்த பணம்
போதாதா என்று வினவினான்.

அவர் மீண்டும்
பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம்
குறைவாக உள்ளது என்றார். அந்த
சிறுவன் அந்த
பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.

நான் அந்த சிறுவனிடம் அந்த
பொம்மை யாருக்கு தர போகிறாய்
என்று கேட்டேன். அதற்க்கு அந்த
சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப
பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள்
அன்று அவளுக்கு பரிசளிக்க
போவதாகவும் கூறினான் மேலும் அவன்
பேச தொடர்ந்தபோது என் இதயம்
நின்று விட்டது போல் உணர்தேன். அவன்
கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என்
தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என்
தங்கை கடவுளிடம் சென்று விட்டால்,
என் அம்மாவும் கடவுளிடம் செல்ல
இருக்கிறார்.

நான் என் தந்தையிடம் இந்த
பொம்மை வாங்கி வரும் வரை அம்மா
கடவுளிடம் செல்ல வேண்டாம்
என்று கூறி விட்டு வந்தேன்.

எனக்கு என் தங்கையும் அம்மாவும்
ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம்
செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம்
கேட்டேன், அனால் அம்மா கடவுளிடம்
செல்லும் நேரம் வந்துவிட்டதாக
கூறினார்.

மேலும் அவன் கையில் அவனுடைய
புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான்
அதை தன் அம்மாவிடம் கொடுத்தால்
அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள்
தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும்
கூறினான்.

நான் என்னிடம் இருந்த
பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன்
வைத்திருந்த பணத்துடன் சேர்த்து,
மீண்டும் எண்ணி பார்க்கலாம்
என்று சொன்னேன். அவனும் இசைந்தான்,
நாங்கள் எண்ணிய போது போதிய
பணத்திற்கு மேல் இருந்தது அவன்
கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன்
அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில்
படித்தது என் நினைவிற்கு வந்தது,
மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த
அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த
சரக்கு வண்டி(truck)
மோதி விபத்துக்குள்ளா னது என்றும்
அதன் ஓட்டுனர்
குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும்
வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவ
இடத்திலேயே இறந்ததாகவும் தாய்
உயிருக்கு போராடும் நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்க
பட்டார் என்றும் அவர் சயித்திய (coma)
நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த
செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள்
கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த
செய்தி விபதுக்குள்ளான பெண்
இறந்து விட்டால் என்று.

நான்
அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்
அச் சிறுவனின் அம்மா சடலமாக
கிடந்தாள் கையில் சிறுவனின்
புகைப்படமும் அந்த பொம்மையும்
இருந்தது. அங்கிருத்து கனத்த
இதயத்துடன் திரும்பினேன் அந்த
சிறுவனின் தன் அம்மாவிடமும்
தங்கையிடம் வைத்திருந்த அன்பும்
பாசமும் அப்படியே உள்ளது. அனால்
ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம்
ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த
குடும்பம் சிதைந்து விட்டது

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள் ...


---------&#xb9a;&#xbbf;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;-------- &#xba4;&#xbbe;&#xbaf;&#xbcd; &#xbaa;&#xbc1;&#xbb1;&#xbbe;&#xbb5;&#xbbf;&#xb9f;&#xbae;&#xbcd; &#xb95;&#xbc1;&#xb9e;&#xbcd;&#xb9a;&#xbc1; &#xbaa;&#xbc1;&#xbb1;&#xbbe; &#xb95;&#xbc7;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xba4;&#xbc1;,,,, &#xb95;&#xbcb;&#xbb5;&#xbbf;&#xbb2;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb87;&#xbb0;&#xbc1;...

Posted: 19 Oct 2014 03:00 AM PDT

---------சிந்திக்க--------

தாய் புறாவிடம் குஞ்சு புறா கேட்டது,,,,

கோவிலில் இருந்தோம்,
திருவிழா என்று நம்மை விரட்டி விட்டனர்.!!!

நாகூரில் இருந்தோம்,
அங்கேயும் வெள்ளை அடிப்பதாக சொல்லி விரட்டி விட்டனர்.!!!

வேளாங்கண்ணியிலும்
திருவிழா பெயரை சொல்லி துரத்தி விட்டனர்.!!!

ஆனால் ஒரு சந்தேகம் அம்மா...

நாகூருக்கு வருபவர்களை முஸ்லிம்கள் என்றும்,
கோவிலுக்கு வருபவர்களை ஹிந்துக்கள் என்றும், வேளாங்கண்ணிக்கு வருபவர்களை கிறஸ்தவர்கள் என்றும் அழைக்கிறார்கள்.

ஆனால் நாம் எங்கு சென்றாலும் நம்மை
மட்டும் ஏனம்மா
''புறா'' என்றே அழைக்கின்றனர் ???

#தாய்_புறா
அதனால் தான் அவர்கள் கீழேயே வசிக்கிறார்கள்,
நாம் மேலேயே வசிக்கிறோம்....


&#xba8;&#xbae;&#xbcd;&#xbae;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbb2;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;, &#xb87;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbbe;&#xba4; &#xb89;&#xba3;&#xbb0;&#xbcd;&#xbb5;&#xbc1;!

Posted: 19 Oct 2014 01:30 AM PDT

நம்மில் பலருக்கு, இல்லாத உணர்வு!


&#xbb0;&#xbcb;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xba3;&#xbbf; &#xbaa;&#xbc2;&#xbb0;&#xbbf; &#xb9a;&#xbbe;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xb9f; &#xbaa;&#xbcb;&#xbb1;&#xbc0;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbe;??? &#xb85;&#xbaa;&#xbcd;&#xbaa; &#xb87;&#xba4; &#xbaa;&#xbbe;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xb99;&#xbcd;&#xb95;.......

Posted: 18 Oct 2014 11:55 PM PDT

ரோட்டில் விற்கும் பாணி பூரி சாப்பிட போறீங்களா???
அப்ப இத பாத்துட்டு போங்க....

பாத்துட்டு சும்மா போகாதிங்க...எல்லோருக்கும் share பண்ணுங்க.. நாலு பேரு (வயிறு) நல்லா இருக்கணும்னா இந்த posta-ah share பண்ணறது தப்பே இல்லைங்க..


&#xbaa;&#xbc6;&#xba3;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xba4;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbbe;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc1; &#xb95;&#xbb2;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xba9; &#xb95;&#xbb0;&#xbbe;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc7;&#xbb5;&#xbc8; &#xb95;&#xbb1;&#xbcd;&#xb95; &#xba4;&#xbc7;&#xbb5;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8; &#xb85;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc7; &#xb95;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbcd;...

Posted: 18 Oct 2014 09:53 PM PDT

பெண்கள் தற்காப்பு கலையான
கராத்தேவை
கற்க தேவையில்லை
அவர்களுக்கு என்றே கண்டுபிடிக்கப்ப
ட்ட
தற்காப்பு ஆயுதம்
ஒன்று உள்ளது தமிழில்....
அதுதான்....
*
*
*
*
*
*
*
*
*
*
"அண்ணா...???"