Sunday, 19 October 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


SI காளிதாஸால் சுட்டுக்கொல்லப்பட்ட சையது முஹம்மதுவை பற்றிய ஒரு உண்மை என்னவென்று உ...

Posted: 19 Oct 2014 12:35 AM PDT

SI காளிதாஸால் சுட்டுக்கொல்லப்பட்ட சையது முஹம்மதுவை பற்றிய ஒரு உண்மை என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

கடந்தமாதம் பயணிகளுடன் ஏர்வாடிக்கு சென்று கொண்டிருந்த காரைக்குடி பேருந்து எஸ்பி பட்டினத்தில் திடீரென தீப்பிடித்து நிற்க்க,அந்த தீயை அணைத்து மொத்த பயணிகளின் உயிரையும் காப்பாற்றியவர் இதே சையது முகமதுதான்!-நன்றி இன்றைய நக்கீரன் பக்கம் 47.

பேஸ்புக் : அரசாங்கம் மக்களை உளவு பார்க்க உதவும் நவீன சாதனம்.

Posted: 18 Oct 2014 06:05 PM PDT

பேஸ்புக் : அரசாங்கம் மக்களை உளவு பார்க்க உதவும் நவீன சாதனம்.


மெக்சிகோவில், செப்டம்பர் 26 ம் தேதி, 43 கல்லூரி மாணவர்கள் காணாமல் போயிருந்தனர்....

Posted: 18 Oct 2014 06:01 PM PDT

மெக்சிகோவில், செப்டம்பர் 26 ம் தேதி, 43 கல்லூரி மாணவர்கள் காணாமல் போயிருந்தனர். அவர்களின் இறந்த உடல்கள், தற்போது மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப் பட்டுள்ளன. போதைவஸ்து கடத்தல் கும்பல் ஒன்று அந்த மாணவர்களை கொலை செய்து புதைத்திருந்தது. இந்தத் தகவல் ஏற்கனவே பல ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டிருந்தது. பலர் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்பார்கள்.

ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்காத தகவல் ஒன்றுள்ளது. இந்த மாணவர்கள் மெக்சிகோவில் "தீவிர இடதுசாரிகளின்" கோட்டையாக கருதப்படும் கல்லூரி ஒன்றை சேர்ந்தவர்கள். வறிய மாணவர்களின் கல்வி கற்கும் உரிமைக்காக போராட்டங்கள் நடத்தியவர்கள். அதனால், அவர்கள் காவல்துறையினரால் கடத்தப் பட்டிருந்தனர்.

மெக்சிகோ காவல்துறைக்கும், மாபியாவுக்கும் இடையில் தொடர்பு இருப்பது ஊரறிந்த இரகசியம். அதனால், பொலிஸ்காரர்கள், கிரிமினல் கும்பலுடன் சேர்ந்து அந்த மாணவர்களை கொன்று புதைத்திருக்கலாம் என்று மக்கள் நம்புகிறார்கள்.

நேற்றைய தினம், மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் அகாபுல்கோ நகரில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட, பல்லாயிரக் கணக்கான மக்கள், மாணவர்களின் படுகொலை தொடர்பாக நீதி விசாரணை நடத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

Thanks: Kalaiyugam.


சீனத்து பட்டாசுகளை புறக்கணிப்போம். .... தீபாவளிக்கு சீனப் பட்டாசுகளை வாங்காதீர்க...

Posted: 18 Oct 2014 05:54 PM PDT

சீனத்து பட்டாசுகளை புறக்கணிப்போம்.
....
தீபாவளிக்கு சீனப் பட்டாசுகளை வாங்காதீர்கள்.
சிவகாசிப் பட்டாசுகளை மட்டுமே வாங்கி 5
இலட்சம் தமிழ் குடும்பங்களை வாழ வையுங்கள்....

வெளியுறவுக் கொள்கையின் ஒரே காரணத்தால்
இந்தியா சீனத்துப் பொருட்களை இங்குள்ள
வியாபாரிகள் இறக்குமதி செய்ய அனுமதி கேட்டால் அரசாங்கத்தால் தடை சொல்ல முடியாது.
ஆகவேதான் வடநாட்டு வியாபாரிகள் சீனாவில்
இருந்து மலிவு விலையில் ரூ 2000 கோடிக்கு பட்டாசுகளை இறக்குமதி செய்து தமிழன் தலையில் கொளுத்திப் போடப்
பார்க்கிறார்கள்.

அரசாங்கத்தால் தடை செய்ய முடியாததை தமிழர்களாகிய நாம் செய்வோம். சீனத்துப்
பட்டாசுகளை நீங்கள் வாங்கவில்லை என்றால் அடுத்த
வருடம் அதை இறக்குமதி செய்ய அந்த சுயநல வணிகர்கள் தயங்குவார்கள். வியாபாரம்
குறையும். மெல்ல மெல்ல சீனப்
பொருட்கள் நம்மை விட்டு விலகும்.
தமிழர்களே... விழித்தெழுங்கள்....

சீனா உங்கள் தேசமல்ல, சீனப் பொருட்கள் உங்கள் உள்நாட்டுத் தயாரிப்பல்ல....
சிவகாசி உங்கள் ஊர்... சிவகாசிக்காரர்கள் நம் மக்கள்...
தமிழர்கள்.... அவர்களது பரம்பரைத் தொழிலை நசிக்கப் பார்க்கும் சீனாவை நாம் உள்ளே நுழைய
விடலாமா?

நீங்கள் சிவகாசிப் பட்டாசு வாங்கவில்லை என்றாலும்
பரவாயில்லை !... ஆனால் சீனத்து பட்டாசு வாங்கி வெடித்து அனைத்து தமிழர்களின் தலையிலும் தயவுசெய்து தீ வைக்க வேண்டாம்....
அதுமட்டும் இல்லை.... ஒருவருடம் இந்த தீபாவளிக்காக,
உங்களுக்காகவே உழைத்து, வெடிவிபத்தில் சிக்கி சீரழிந்து, தினம் செததுப் பிழைக்கும் சிவகாசிப் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள 5 இலட்சம் தமிழ்க்
குடும்பமும் உங்களை காலமெல்லாம்
வாழ்த்தும்.....

இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம்
பகிருங்கள்...

0 comments:

Post a Comment