Tuesday, 14 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம்! கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்...

Posted: 14 Oct 2014 09:38 PM PDT

ஐராவதீஸ்வரர் கோயில்,
தாராசுரம்!

கங்கைகொண்ட
சோழபுரம் மற்றும்
பிரகதீஸ்வரர்
கோவில்களில்
இருப்பதை விட சிறியதாக
இருந்தாலும், மிகவும்
நுணுக்கமான
வேலைப்பாடுகள்
கொண்டதாக
திகழ்கிறது ஐராவதம்
கோவில் சிற்பங்கள்.


Posted: 14 Oct 2014 06:50 PM PDT


முன் ஒரு காலத்தில்... @ஓவியர் மாருதி

Posted: 14 Oct 2014 10:31 AM PDT

முன் ஒரு காலத்தில்...

@ஓவியர் மாருதி


பிச்சை எடுக்காமல்,கோணி ப்பையில் குப்பையை சேகரித்து சுயதொழில் செய்து பிழைப்பவனை த...

Posted: 14 Oct 2014 08:58 AM PDT

பிச்சை எடுக்காமல்,கோணி
ப்பையில்
குப்பையை சேகரித்து சுயதொழில்
செய்து பிழைப்பவனை தான்

#பூச்சாண்டி
என்று சொல்லி குழந்தைகளுக்கு சோறூட்டுகிறோம்.
:(

@இளையராஜா

அக்கிரமம்,தெள்ளத் தெளிவாக நடக்கும் அநியாயம். ஆண்டாண்டு காலமாக தீட்சிதர்களின் கை...

Posted: 14 Oct 2014 08:30 AM PDT

அக்கிரமம்,தெள்ளத் தெளிவாக நடக்கும் அநியாயம்.

ஆண்டாண்டு காலமாக தீட்சிதர்களின் கையில் இருந்த போதெல்லாம் பற்றாக்குறை கணக்கைக் காட்டி வந்த சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகம் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வந்த சில காலத்திலேயே கோடிக்கணக்கான வருமானத்தைக் காட்டிய போதிலும் அந்தக் கோயில் நிர்வாகம் மீண்டும் தீட்சிதர்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது என்றால் அது அக்கிரமம் அல்லாத வேறு என்ன?

தீட்சிதர்கள் கையில் கோயில் என்ற சேதி நமக்கு உணர்த்துவது என்ன?

@யுவான் சுவாங்

ஜெ விடுதலையாக அசைவம் கூடாது - அதிமுகவினருக்கு ஜோதிடர்கள் ஆலோசனை. அதெல்லாம் கஷ்ட...

Posted: 14 Oct 2014 08:28 AM PDT

ஜெ விடுதலையாக
அசைவம் கூடாது -
அதிமுகவினருக்கு
ஜோதிடர்கள்
ஆலோசனை.

அதெல்லாம்
கஷ்டம்,ஒரு வாரம்
பார்த்துட்டு "அம்மாவ
வச்சுக்கோ, அயிரை
மீனை கொடு"ன்னு போஸ்டர்
அடிச்சுருவாங்க...

@பூபதி

டீ கடையிலும், தீப்பெட்டி ஆலையிலும், வெல்டிங் பட்டறையிலும் பார்க்கும் வரை தொழிலாள...

Posted: 14 Oct 2014 07:40 AM PDT

டீ கடையிலும், தீப்பெட்டி ஆலையிலும், வெல்டிங் பட்டறையிலும் பார்க்கும் வரை தொழிலாளர்களாகத் தெரியும் குழந்தைகள்,

விளம்பரங்களிலும், சீரியல்களிலும், சினிமாக்களிலும் பார்க்கும் போது நட்சத்திரங்கள் ஆகிவிடுகின்றனர்.

# சிறு தொழிலில் இருந்து, பணம் கொழிக்கும் பெருதொழிலுக்கு குழந்தைகளை மாற்றிவிட்டு குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டோம் என்கிறோம்.

- கனா காண்கிறேன்

அறிவியலில் ஜெர்மானிய மொழி எப்படி ஓரங்கட்டப்பட்டு, ஆங்கிலம் உள்ளே புகுந்த்து என்க...

Posted: 14 Oct 2014 07:00 AM PDT

அறிவியலில் ஜெர்மானிய மொழி எப்படி ஓரங்கட்டப்பட்டு, ஆங்கிலம் உள்ளே புகுந்த்து என்கிற சிறிய கட்டுரையை சமீபத்தில் படித்தேன்.. சுவாரசியமான பல விசயங்கள் அதில் சொல்லப்பட்டிருந்தன..

ஆரம்பத்தில் லத்தினில் தான் பல அறிவியல் கட்டுரைகள் வந்ததாம்.. ஐரோப்பிய யூனியனில் அறிவியல் ஹீரோ ஒரு காலத்தில் லத்தின் தானாம்.. பின் 1900களில் லத்தின் outdated ஆகி, உலகின் அறிவியல் கட்டுரைகளில் மூன்றில் ஒரு பங்கை ப்ரெஞ்சும், இன்னொரு பங்கை ஜெர்மனியும், இன்னொரு பங்கை ஆங்கிலமும் சரி சமமாகப் பெற்றிருந்தனவாம்.. அதாவது சென்ற நூற்றாண்டு ஆரம்பிக்கும் போது மூன்று மொழிகளும் அறிவியல் கட்டுரைகளைப் படைப்பதில் சரி சமமானப் போட்டியுடன் இருந்திருக்கின்றன.. இப்போது பார்த்தா முதல் உலகப்போர் வந்துத் தொலைக்க வேண்டும்?

முதல் உலகப்போரினால் பல நாடுகளுக்கும் ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் எதிரிகள் ஆயின.. இதனால் ப்ரெஞ்சு மற்றும் ஆங்கிலேயே விஞ்ஞானிகள், ஜெர்மானிய விஞ்ஞானிகளை எந்த விதமான விஞ்ஞான மாநாட்டிலும் கலந்து கொள்ள விடாமல் தடுத்தனர்.. இந்த நேரத்தில் தான் வேதியியலுக்கென்று புதிதாக உலக அளவில் பல சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.. அவை அனைத்தும் ஆங்கிலத்திலேயே நடத்தப்பட்டன.. அதுவரை வேதியியலில் கொடி நாட்டிய ஜெர்மனின் ஆதிக்கம் இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிய ஆரம்பித்த்து.. ஐரோப்பிய யூனியனில் இப்படி என்றால், அமெரிக்காவில் இன்னும் மோசமாக செய்தார்கள் ஜெர்மனியை ஒழிக்க..

அமெரிக்காவில் வேதியியலுக்காகவே ஜெர்மன் படித்தனர் பல மாணவர்கள்.. இதைத் தடுக்க அமெரிக்காவில் சில ஆண்டு காலம் பொது இடங்களில் ஜெர்மனியில் பேச, ஜெர்மானிய ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்க, 10வயதிற்குட்ட குழந்தைகளுக்கு ஜெர்மன் கற்றுக்கொடுக்க தடை விதிக்கப்பட்டன என்பது புதிதான, அதிர்ச்சியான தகவல்.. இதனால் பல அமெரிக்கர்களும் தங்கள் மொழியிலேயே அறிவியலைக் கற்க ஆரம்பித்தனர், ஆங்கிலத்திலேயே கண்டுபிடிப்புகளைப் பதிந்தனர்.. சில ஆண்டுகளில் அமெரிக்காவின் அறிவியலில் ஜெர்மனி இருந்த சுவடே இல்லாமல் போனது..

இப்போது ஜெர்மன் தனது கண்டுபிடிப்புகளை வீம்புக்காகவே ஜெர்மனியில் வெளியிட்டது… பிற அறிவியல் கோட்பாடுகளையும் தனது மொழியில் மெனக்கெட்டு மொழி மாற்றம் செய்தது… இது நிலைமையை இன்னமும் தான் மோசமாக்கியது… அதாவது ஜெர்மானியர்களுக்கென்று தனி அறிவியல் மொழி வந்துவிட்டதால், அவர்களால் பழையபடி உலகோடு போட்டி போட்டு வளர முடியவில்லை அறிவியல் மொழியில்.. ஏனென்றால் அமெரிக்கா இப்போது ஆங்கிலம் தான் அறிவியலுக்கான மொழி என்கிற பிம்பத்தை உருவாக்கி விட்டிருந்தது.. பின் அமெரிக்கா ஒரு உலக ஜாம்பவனாக வளர்ந்த போது மொத்த அறிவியலும் ஆங்கிலத்தைக் கொண்டு தம்மை படைத்துக்கொண்டன..


Petroglyphs in Tamil Nadu:- அப்படினா என்னனு தெரியுமா? எனக்கும் முதலில் தெரியவி...

Posted: 14 Oct 2014 03:45 AM PDT

Petroglyphs in Tamil Nadu:-

அப்படினா என்னனு தெரியுமா?

எனக்கும் முதலில் தெரியவில்லை, அப்புறமா தான் 10000 B.C , ஆயிரத்தில் ஒருவன் படம் பாத்து நியாபகம் வந்துச்சி. ஆயிரத்தில் ஒருவன் உங்களில் எத்தனை பேர் பார்த்து இருகிறிர்கள்? அதில் பாறையில் இருக்கும் ஓவியத்தின் மூலமாகவே சில விஷயங்களை பார்த்திபன் கூறுவார் அது போல உலகில் பல இடங்களில் இந்த மாதிரி ஓவியங்கள் கண்டு பிடிக்க பட்டது, ஒவ்வொரு ஓவியங்களும் ஒவ்வொரு கதையையோ, வழிதடங்களையோ, மிருகங்களையோ குறிக்கும்.

தமிழ் நாட்டுல இப்படி பட்ட கண்டுபிடிக்கப்பட்டது, பெருமுக்கல், திண்டிவனம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம், என்ற இடத்தில் உள்ள மலை குகையில் கண்டுபிடிக்க பட்டது.

அந்த ஊரு தமிழ் வரலாற்றை குறிக்கும் என்று யாருக்கும் தெரியாத ஊர்.

சோழர் காலத்தில் மிக சிறப்பான ஊர். இந்த ஊரு 6000 வருடம் பழமையானது, இந்த ஓவியம் வரையப்பட்டு 4000 ஆம் ஆண்டுகள் ஆகிறது.
அங்கு இருக்கும் கோவில் முதிலேஸ்வரர் கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இப்படி பட்ட ஊர் நம் தமிழர்கள் எத்தனை பேருக்கு தெரியும்???
- கிஷன்


வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சா சந்தோசமா இருக்கலாம்னு சின்ன வயசுல நினைச்சது...

Posted: 14 Oct 2014 01:32 AM PDT

வேலைக்கு போய்
சம்பாதிக்க ஆரம்பிச்சா
சந்தோசமா இருக்கலாம்னு சின்ன
வயசுல
நினைச்சது தான்..

#சின்னபுள்ளைத்_தனம்!!

@சாமுவேல் ராஜா

உங்கள் வாழ்க்கையில் இப்படிபட்ட கெட்ட செயல்கள் நடக்க போகிறது, அதை தவிர்க்க இன்னின...

Posted: 14 Oct 2014 01:23 AM PDT

உங்கள் வாழ்க்கையில்
இப்படிபட்ட கெட்ட
செயல்கள் நடக்க
போகிறது,
அதை தவிர்க்க இன்னின்ன
பரிகார பூசைகள் செய்ய
வேண்டும் என
பரிந்துரை செய்யும்
சோதிட சிகாமணிகள்,
புயல் போன்ற பெரும்
ஆபத்துகளை முன்னமே கூறாமல்
தவிர்ப்பது ஏன் ?...சரி கணிப்பதில்
ஏதேனும் டெக்னிகல்
பால்ட் இருக்கலாம் என
அதை தவிர்த்தாலும்,
வரப்போகும் புயலை,
தடுக்கவும்
அல்லது வேறு பக்கம்
திருப்பவுமாவது சிறிது பரிகாரங்கள்
கூறினால் மக்கள்
ஆபத்தின்றி வாழலாம்
அல்லவா ...சோதிடர்கள்
எதிர்காலத்தில் இந்த
வாய்ப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க
வேண்டுமாறு தாழ்மையுடன்
கேட்டு கொள்கிறேன் ....

Posted: 14 Oct 2014 01:16 AM PDT


லாஸ்ட் பெஞ்ச் Vs பர்ஸ்ட் பெஞ்ச் 1. முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து நீங்க நோட்ஸ் எடுப்...

Posted: 14 Oct 2014 12:45 AM PDT

லாஸ்ட் பெஞ்ச் Vs பர்ஸ்ட் பெஞ்ச்

1. முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து நீங்க நோட்ஸ் எடுப்பதற்காகவே பாடத்தை கவனிச்சிங்க, நாங்க நல்லா தூக்கம் வருமேன்னு பாடத்த கவனிச்சோம்.

2. அப்சர்வேஷன் நோட்டையும், ரெக்கார்ட் நோட்டையும், அசைன்மென்டையும், எழுதின உடனே முன்னாடி கொண்டு போய் வாத்தியார்ட்ட நீட்டுவிங்க. நாங்க நண்பன் காப்பி அடிச்சிட்டு கொடுக்கற வரை காத்திருப்போம்.

3. பரீட்சைக்கு என்ன கேள்வி வரும்ன்னு நீங்க யோசிச்சிட்டு இருக்கப்ப, பரிட்சையே வராமா இருக்க என்ன செய்யலாம்ன்னு நாங்க யோசிச்சிட்டு இருந்தோம்.

4. ஜூனியர் பசங்களுக்கு நீங்க நோட்ஸ் கொடுத்து உதவி செஞ்சிங்க. நாங்க எந்த வாத்தியார எப்படி சாமாளிக்கனும்னு டிப்ஸ் கொடுத்து உதவி செஞ்சோம்.

5. லைப்ரேரில நெறைய புக்ஸ் எடுத்து நீங்க சாதனை செஞ்சிங்க. நாங்க நாலு வருசமா லைப்ரேரி பக்கமே போகலன்ற சாதனையை செஞ்சோம்.

6. கேண்டின் ல சாப்பாட்டுக்கு லேட் ஆனா, ஐயையோ லேப் ஸ்டார்ட் ஆக போவுதுன்னு சாப்புடாம ஓடுவிங்க. எங்களுக்கு எப்பவுமே சோறு தான் பர்ஸ்ட், லேப்லாம் நெக்ஸ்ட்.

7. நீங்க பாடம் புரியலைன்னா கேள்வி கேப்பிங்க; நாங்க எங்களுக்கு போர் அடிச்சா கேள்வி கேட்டு நேரத்தை ஓட்டுவோம்.

8. நீங்க காலேஜ் டே, ஹாஸ்டல்டே லாம் டைம் வேஸ்ட் ன்னு சொன்னிங்க. நாங்க அதுக்காகவே வருசம்பூரா வெயிட் பண்ணோம்.

9. பர்ஸ்ட் மார்க் வேணும் ன்னு பரிட்சை டைம் டேபிள் வந்த உடனே படிக்க ஆரம்பிசிருவிங்க. நாங்க பாஸ் ஆனா போதும்ன்னு பரீட்சைக்கு முதநாள் தான் புக்கையே எடுப்போம்.

10. வாத்தியார் பனிஸ்மென்ட் கொடுத்து வெளிய அனுப்பிட்டா, அவமானமா நினைச்சி மூஞ்ச தொங்க போட்டுபிங்க. நாங்க வாத்தியாரே ரெஸ்ட் எடுக்க சொன்னதா நினைச்சி ஆனந்தப் படுவோம்.

11. எக்ஸாம் க்கு முக்கியமா சிலபஸ் தெரிஞ்சி இருக்கணும்னு நீங்க நினைச்சிங்க. சீட்டிங் அரெஞ்ச்மென்ட் தெரிஞ்சா போதும்ன்னு நாங்க நினைச்சோம்

# மொத்தத்துல நீங்க வாழ்க்கைய தேடிட்டு இருந்தப்பவே, நாங்க வாழ ஆரம்பிச்சிட்டோம்.

- ஆதிரா


ஜெயலலிதாவுக்கு விரைவில் ஜாமின் கிடைக்க...மஞ்சள் நிறத்தில் வஸ்திர தானம் செய்யலாம்...

Posted: 13 Oct 2014 11:15 PM PDT

ஜெயலலிதாவுக்கு விரைவில்
ஜாமின்
கிடைக்க...மஞ்சள்
நிறத்தில் வஸ்திர தானம்
செய்யலாம். மஞ்சள் நிற
உணவை, அன்னதானமாக
வழங்க வேண்டும். மஞ்சள்
நிற சுண்டல்,
புளி சாதம்
போன்றவற்றை,
அன்னதானமாக வழங்க
வேண்டும் - ஜோதிடர்
ஷெல்வி. :P

உயிர் காக்கும் மருந்துப் பொருட்களின் விலைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ச் சாதகமா...

Posted: 13 Oct 2014 11:01 PM PDT

உயிர் காக்கும் மருந்துப்
பொருட்களின்
விலைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு
ச் சாதகமாக,
பதினான்கு மடங்கு விலை உயர்த்திய
மக்கள் விரோத
மோடி அரசை எதிர்த்து தொடரப்பட்ட
வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


உண்மையான சாதனையைப் நாமும் பின்பற்றுவோம் கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அடுத...

Posted: 14 Oct 2014 08:30 AM PDT

உண்மையான சாதனையைப் நாமும் பின்பற்றுவோம்
கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அடுத்த மாடத்தட்டுவிளை கிராமம் வீட்டுக்கு ஒருவர் கண் தானம் 'விழி' உயர்த்தும் விழிப்புணர்வு கிராமம்: 137 பேர் கண் தானம் செய்து சாதனை.

பா விவேக்


நரசிம்மவர்மன் காலத்தில் பாறையைக் குடைந்து கட்டப்பட்ட பஞ்சபாண்டவர் இரதங்கள், #மா...

Posted: 14 Oct 2014 01:30 AM PDT

நரசிம்மவர்மன் காலத்தில் பாறையைக் குடைந்து கட்டப்பட்ட பஞ்சபாண்டவர் இரதங்கள்,

#மாமல்லபுரம்.

பா விவேக்


ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் மாமல்லபுரம் அதிரணசண்டன் கோயிலில்...

Posted: 13 Oct 2014 10:30 PM PDT

ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் மாமல்லபுரம் அதிரணசண்டன் கோயிலில் காணப்படும் ஒரு கிரந்தக் கல்வெட்டு

பா விவேக்


இது இந்தியாவின் ஒரு இடம் தான் .... விமான ஓடுதளமாக உள்ள இந்த இடத்தின் பெயரை உங்க...

Posted: 13 Oct 2014 07:33 PM PDT

இது இந்தியாவின் ஒரு இடம் தான் ....

விமான ஓடுதளமாக உள்ள இந்த இடத்தின் பெயரை உங்களால் கூற முடியுமா????

பா விவேக்


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


படித்ததில் பிடித்தது... ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற? மாணவன்: கல்...

Posted: 14 Oct 2014 09:05 AM PDT

படித்ததில் பிடித்தது...

ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?

மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..

ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?

மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..

ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?

மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..

ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..

மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..

ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?

மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..

ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்..

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


சிறப்பான உணவு வகைகள் - தமிழ்நாடு 1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை 2. நடுக்க...

Posted: 13 Oct 2014 09:53 PM PDT

சிறப்பான உணவு வகைகள் - தமிழ்நாடு

1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை
2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா
3. சிதம்பரம் கொத்சு
4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்
5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை
6. கும்பகோணம் பூரி-பாஸந்தி
7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்
8. மன்னார்குடி அல்வா
9. கூத்தாநல்லூர் தம்ரூட்
10. நீடாமங்கலம் பால்திரட்டு
11. திருவையாறு அசோகா
12. கும்பகோணம் டிகிரி காபி
13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா
14. கோவில்பட்டி கடலை மிட்டாய்
15. ஆம்பூர் தம் பிரியாணி
16. நாகர்கோவில் அடை அவியல்
17. சாத்தூர் சீவல்
18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா
19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்
21. மணப்பாறை அரிசி முறுக்கு
22. கீழக்கரை ரொதல்அல்வா
23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி
24. பண்ருட்டி முந்திரி சாம்பார்
25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்
26. சாயல்குடி கருப்பட்டி காபி
27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா
28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்
29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி
30. புதுக்கோட்டை முட்டை மாஸ்
31. தூத்துக்குடி மக்ரூன்
32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி
33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு
34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்
35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்
36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம 'செட்டி நாட்டுலே' மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும்.

அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..

1. குழிப்பணியாரம்
2. வாழைப்பழ தோசை
3. எண்ணெய் கத்தரிக்காய்
4. பால் பணியாரம்
5. பூண்டு வெங்காய குழம்பு
6. ரவா பணியாரம்
7. பால் கொழுக்கட்டை
8. சேமியா கேசரி
9. மோர் குழம்பு
10. நாட்டுகோழி மிளகு வறுவல்
11. இறால் தொக்கு
12. நட்டுக் கோழி ரசம்
13. நண்டு மசாலா
14. வெண்டைக்காய் புளிக்கறி
15. பருப்பு சூப்
16. ரிப்பன் பக்கோடா
17. பருப்பு உருண்டை குழம்பு
18. குருமா குழம்பு
19. தேன்குழல்
20. கருப்பட்டி பணியாரம்
21. சீயம்
22. மாவுருண்டை

உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.

"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம். நண்பர்களுக்கும் பகிரவும்!"

via Abdul Khadar


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


விடாத மச்சி!!

Posted: 14 Oct 2014 08:22 AM PDT

விடாத மச்சி!!


The Man who Proved even Acting is Unimportant for an Actor and Survived in the I...

Posted: 14 Oct 2014 07:09 AM PDT

The Man who Proved even Acting is Unimportant for an Actor and Survived in the Industry Like a Boss ..


#Kaththi Tomorrow's (15/10/2014) Paper Ad!!

Posted: 14 Oct 2014 06:14 AM PDT

#Kaththi Tomorrow's (15/10/2014) Paper Ad!!


Intha kalathu kadhal ippadi than sir iruku..

Posted: 14 Oct 2014 05:07 AM PDT

Intha kalathu kadhal ippadi than sir iruku..


#A_R_Murugadoss intha Record ah Break pannuvara? illa intha record la join panni...

Posted: 14 Oct 2014 02:33 AM PDT

#A_R_Murugadoss intha Record ah Break pannuvara?
illa intha record la join pannipara ?..

I am Waiting..


Good morning frnds.

Posted: 13 Oct 2014 07:59 PM PDT

Good morning frnds.


Kaththi Trailer innaikum varathu pola :'(

Posted: 13 Oct 2014 12:05 PM PDT

Kaththi Trailer innaikum varathu pola :'(


#Dhanush #Simbu

Posted: 13 Oct 2014 11:08 AM PDT

#Dhanush #Simbu


:p

Posted: 13 Oct 2014 10:34 AM PDT

:p


லாஸ்ட் பெஞ்ச் Vs பர்ஸ்ட் பெஞ்ச் 1. முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து நீங்க நோட்ஸ் எடுப்ப...

Posted: 13 Oct 2014 09:44 AM PDT

லாஸ்ட் பெஞ்ச் Vs பர்ஸ்ட் பெஞ்ச்
1. முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து நீங்க நோட்ஸ்
எடுப்பதற்காகவே பாடத்தை கவனிச்சிங்க,
நாங்க நல்லா தூக்கம் வருமேன்னு பாடத்த
கவனிச்சோம்.
2. அப்சர்வேஷன் நோட்டையும், ரெக்கார்ட்
நோட்டையும், அசைன்மென்டையும், எழுதின
உடனே முன்னாடி கொண்டு போய்
வாத்தியார்ட்ட நீட்டுவிங்க. நாங்க நண்பன்
காப்பி அடிச்சிட்டு கொடுக்கற
வரை காத்திருப்போம்.
3. பரீட்சைக்கு என்ன கேள்வி வரும்ன்னு நீங்க
யோசிச்சிட்டு இருக்கப்ப,
பரிட்சையே வராமா இருக்க என்ன
செய்யலாம்ன்னு நாங்க
யோசிச்சிட்டு இருந்தோம்.
4. ஜூனியர் பசங்களுக்கு நீங்க நோட்ஸ்
கொடுத்து உதவி செஞ்சிங்க. நாங்க எந்த
வாத்தியார எப்படி சாமாளிக்கனும்னுடிப்ஸ்
கொடுத்து உதவி செஞ்சோம்.
5. லைப்ரேரில நெறைய புக்ஸ் எடுத்து நீங்க
சாதனை செஞ்சிங்க. நாங்க
நாலு வருசமா லைப்ரேரி பக்கமே போகலன்ற
சாதனையை செஞ்சோம்.
6. கேண்டின் ல சாப்பாட்டுக்கு லேட் ஆனா,
ஐயையோ லேப் ஸ்டார்ட் ஆக
போவுதுன்னு சாப்புடாம ஓடுவிங்க.
எங்களுக்கு எப்பவுமே சோறு தான் பர்ஸ்ட்,
லேப்லாம் நெக்ஸ்ட்.
7. நீங்க பாடம்
புரியலைன்னா கேள்வி கேப்பிங்க; நாங்க
எங்களுக்கு போர்
அடிச்சா கேள்வி கேட்டு நேரத்தை ஓட்டுவோம்.
8. நீங்க காலேஜ் டே, ஹாஸ்டல்டே லாம் டைம்
வேஸ்ட் ன்னு சொன்னிங்க. நாங்க
அதுக்காகவே வருசம்பூரா வெயிட்
பண்ணோம்.
9. பர்ஸ்ட் மார்க் வேணும் ன்னு பரிட்சை டைம்
டேபிள் வந்த உடனே படிக்க
ஆரம்பிசிருவிங்க. நாங்க பாஸ்
ஆனா போதும்ன்னு பரீட்சைக்கு முதநாள் தான்
புக்கையே எடுப்போம்.
10. வாத்தியார் பனிஸ்மென்ட்
கொடுத்து வெளிய அனுப்பிட்டா,
அவமானமா நினைச்சி மூஞ்ச தொங்க
போட்டுபிங்க. நாங்க வாத்தியாரே ரெஸ்ட்
எடுக்க சொன்னதா நினைச்சி ஆனந்தப்
படுவோம்.
11. எக்ஸாம் க்கு முக்கியமா சிலபஸ்
தெரிஞ்சி இருக்கணும்னு நீங்க நினைச்சிங்க.
சீட்டிங் அரெஞ்ச்மென்ட்
தெரிஞ்சா போதும்ன்னு நாங்க நினைச்சோம்....
# மொத்தத்துல நீங்க வாழ்க்கைய
தேடிட்டு இருந்தப்பவே, நாங்க வாழ
ஆரம்பிச்சிட்டோம்....

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:)

Posted: 14 Oct 2014 09:30 AM PDT

:)


மலர் போன்ற நல்ல சிந்தனைகள்.. 1.வேகமாக ஓங்கி வளரும் பனைமரம் ஒருவனுக்கு நிழலைத் த...

Posted: 14 Oct 2014 09:15 AM PDT

மலர் போன்ற நல்ல சிந்தனைகள்..

1.வேகமாக ஓங்கி வளரும் பனைமரம் ஒருவனுக்கு நிழலைத் தரமுடியாது. நிதானமாக செழித்துவளரும் ஆலமரமோ அரசனது படை பரிவாரங்களுக்கும் இடம் தரும். வேகமிருந்தால் போதாது. விவேகமும் தேவை.நிதானமான வளர்ச்சி நிலையான புகழைத் தரும்.

2.உடலை சுத்தமாக வைத்திருப்பவனிடம் நோய் அண்டாது. உள்ளம் சுத்தமாக இருப்பவனிடம் தீமை அண்டாது.

3.மீனுக்கு பலம் நீரினிலே குளவிக்கு பலம் அதன் கொடுக்கினிலே மனிதனுக்கு பலம் அவன் மூளையிலே மனிதனின் பலவீனம் அவன் நாக்கினிலே!

4.தோண்டதோண்ட நீர் சுரக்கும். முயல முயலவே வெற்றி கிடைக்கும்.வெட்டுப்பட்ட மரமும் துளிர்க்கும் குட்டுப்பட்ட நீயும் நிமிர்வாய் நம்பு.

5.மையில்லா எழுதுகோலால் எழுத முடியாது. தூய்மையில்லா மனிதனிடத்தில் நம்பி பழகுதல் கூடாது.

6.மேகமானது வானில் ஒளிவீசும் சூரியனைக் கூட சில நிமிடங்கள் தன் முயற்சியால் மறைத்துவிடுகிறது.அதுபோல விடாமுயற்சி இருப்பின் அடைய முடியாதது எதுவும் இல்லை.

7.தண்ணீர் ஊற்றியவனின் தாகம் தீர்க்கும் தென்னை போல உனக்கு உதவியவனுக்கு சமயத்தில் உதவுவது உன் கடமை.

8.ஒர் அறையின் மையத்தில் ஏற்றிவைக்கப்படும் ஊதுபத்தி அறையைமட்டுமின்றி அதனையும் தாண்டி தன் வாசனையை பரப்புவது போல நாம் கற்கும் கல்வி நமக்கு மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிப்பதாய் இருக்கவேண்டும்.

9.கற்றறியா மரம் கூட மற்றவர்களுக்கு பயனைத்தறுகிறது நிழலாக உணவாக உறைவிடமாக கற்றறிந்த மூடர் நாம் அதை வெட்டலாமோ? சிந்திப்போம் சந்திகள் தோறும் சாலைகள் ஒரம் மரம் வளர்ப்போம்

10.கொழுத்த மீனுக்கு காத்திருக்கும் கொக்கைப்போல உன் இலக்கிற்கு கவனம் சிதறாமல் காத்திரு. காலம் கட்டாயம் கனியும்.

Relaxplzz

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்... 1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட...

Posted: 14 Oct 2014 09:00 AM PDT

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்...

1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட கண்ட இடத்தில் சிறுநீர் கழித்தல்.

{இதில் கண்டிப்பாக பெரும்பாலானோருக்கு பங்கு உண்டு.}

2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

{இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.}

3. குப்பைகளை கொட்டுவது :

{நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும், நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.}

4. வரிசையை முந்தியடித்தல் :

{இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம். பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.}

5. விட்டு கொடுக்காத பழக்கம் :

{அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எப்படி...? அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.}

6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :

நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல், Etc... Etc.... Etc.....

இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான்.

இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:

{முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது. நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும்.}

8. ஜாதி வெறி - மத வெறி – இன வெறி:

நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்......!!

குறிப்பு:- இதை பதிவதன் நோக்கம், நம்முடைய அவலங்களை நாமே பதிந்து, நமது மேல் நாமே அசிங்கத்தை பூசிக்கொள்வதர்க்காக அல்ல....

தனி மனிதன் திருந்தினால் தான், நாடு திருந்தும். இதை படித்த பிறகு ஓரிருவர் திருந்தினால் கூட போதும்... இந்த பதிவின் நோக்கம் முழுமை பெரும்..

-மு.மன்சூர் அலி

Relaxplzz


மலேசியாவில் பணப்பட்டுவாடா இயந்திரத்தில் தமிழ். எமது தமிழுக்கு அங்கிகாரம் கொடுத்த...

Posted: 14 Oct 2014 08:50 AM PDT

மலேசியாவில் பணப்பட்டுவாடா இயந்திரத்தில் தமிழ். எமது தமிழுக்கு அங்கிகாரம் கொடுத்த மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி..!!!


அழகு <3

Posted: 14 Oct 2014 08:40 AM PDT

அழகு ♥


:)

Posted: 14 Oct 2014 08:30 AM PDT

:)


மரணப் படுக்கையில் இருந்த ஒரு முதியவர்,தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார். "லத...

Posted: 14 Oct 2014 08:15 AM PDT

மரணப் படுக்கையில் இருந்த ஒரு முதியவர்,தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

"லதா,நம்முடைய கடையை மூத்த மகன் ராமுக்குக் கொடுத்துவிடு"

"அதை அடுத்த மகன் ராஜாவுக்குக் கொடுத்து விடுவோம்.அவன் ஒரு புத்திசாலி"

"சரி,நமது லாரியை மூன்றாவது மகன் முருகனுக்குக் கொடுத்துவிடு"

"ஆனால், என் தம்பி தான் அதை ஓட்டிக் கொண்டிருக்கிறான் அவன் குடும்பத்துக்கு அது வேண்டுமே?"

"சரி,சரி,கிராமத்திலிருக்கும் வீட்டை நம் மகள் சாந்திக்குக் கொடுத்து விடு"

"உங்களுக்குத் தெரியுமா?சாந்திக்கு அந்த வீடு பிடிக்காது.எனவே அதை இளைய மகள் மீனாவுக்குக் கொடுத்து விடுவோம்"

முதியவர் கோபத்துடன் சொன்னார்,

"இப்போது செத்துக் கொண்டிருப்பது யார்? நீயா, நானா?"

:O :O

Relaxplzz

உலக கோப்பை கிக்பாக்சிங் போட்டிக்கு நெல்லை சட்டக் கல்லூரி மாணவர் தகுதி.. வாழ்த்து...

Posted: 14 Oct 2014 08:00 AM PDT

உலக கோப்பை கிக்பாக்சிங் போட்டிக்கு நெல்லை சட்டக் கல்லூரி மாணவர் தகுதி.. வாழ்த்துக்கள்..! (y) (y)

நெல்லை அரசு சட்டக் கல்லூரி மாணவர் இசக்கி ராஜா. கிக்பாக்சிங் வீரரான இவர் மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற உலக கோப்பை கிக்பாக்சிங் தகுதி சுற்று போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.

இதன்மூலம் அவர் இத்தாலியில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிக்பாக்சிங் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் உலக கோப்பை போட்டியில் 81 கிலோ எடை பிரிவில் விளையாட உள்ளார்.

ஏற்கனவே இசக்கிராஜா ரஷ்யாவில் நடந்த உலக கோப்பை கிக்பாக்சிங் மற்றும் ஆசிய சாம்பியன்சிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Relaxplzz


சகாயம் மட்டுமல்ல..நாமும் கைத்தறி நெசவாளர்களுக்கு உதவலாம் கோ ஆப்டெக்ஸ்ல் மாத தவண...

Posted: 14 Oct 2014 07:50 AM PDT

சகாயம் மட்டுமல்ல..நாமும் கைத்தறி நெசவாளர்களுக்கு உதவலாம்

கோ ஆப்டெக்ஸ்ல் மாத தவணையாக 100 முதல் 1000 வரை செலுத்தி, பின்னர் ஆடை வாங்கும் திட்டம் அறிமுகபடுத்தபட்டுள்ளது..உதாரணமாக 9 மாதங்கள் 100 ரூபாய் செலுத்தினால், 1430 ருபாய் வரை ஆடைகள் வாங்கி கொள்ளலாம்..

உங்களின் சிறிய சேமிப்பு, உங்களுக்கு ஆடைகள் வாங்கவும், நெசவாளர்களின் பொருளாதரத்தை மேம்படுத்தவும் சேர்ந்து பயன்படும்..விருப்பம் உள்ளவர்கள் முயற்சித்து பாருங்கள் ..கோ ஆப்டெக்ஸ் ஆடைகள் அனைத்தும் தற்போது அருமையாக இருக்கிறது

http://www.cooptex.com/kanavu.html

Relaxplzz


கேக்-யில் செய்யப்பட்ட அழகிய ஸ்டேடியம்

Posted: 14 Oct 2014 07:40 AM PDT

கேக்-யில் செய்யப்பட்ட அழகிய ஸ்டேடியம்


:)

Posted: 14 Oct 2014 07:30 AM PDT

:)


90 வயசான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 50 கோடி பரிசு கிடைத்தது. அவரோட குடு...

Posted: 14 Oct 2014 07:15 AM PDT

90 வயசான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 50 கோடி பரிசு கிடைத்தது. அவரோட குடும்பத்தினர்
இந்த விசயத்தை அவரிடம் எப்படி சொல்வது.....
திடீர்னு... சொன்னா ஒருவேளை ...அதிக சந்தோஷத்துல ..." பொசுக்குன்னு போய்ட்டார்னா " யோசனை செஞ்சு பாத்துட்டு...ஒரு டாக்டர் கிட்ட போனாங்க..

விசயத்தை கேட்ட டாக்டர் " ஒ...அவ்வளவுதானே.. ...நீங்க ஒண்ணும்... கவலைப் படாதீங்க நா.... பாத்துக்கிறேன் " எப்புடி...அவர பக்குவமா...பேசி...நான் சரி பண்றேன்னு மட்டும் பாருங்க....பேசி மடக்குரதுலே...நான் ..பெரிய எக்ஸ்பர்ட் ஆச்சே...

ஊர்க்கதை எல்லாம்..பேசிட்டு மெல்லமா "ஐயா ஒரு பேச்சுக்கு கேட்கறேன்....உங்களுக்கு லாட்டரியில 50 கோடி விழுந்தா என்ன ...பண்ணுவீங்க.... "

அதுக்கு அந்த வயசானவர், என்ன...டாக்டர் சார் இப்புடி கேட்குறீங்க...
நீங்க ஆஸ்பிடல் கட்டுரீங்க இல்லையா ...உங்களுக்கு ஒரு அம்பது லட்சத்தை...தூக்கி குடுப்பேன்..."

படார்னு ஒரு...சத்தம்...இத கேட்ட டாக்டர் மயக்கம் போட்டு விழுந்திட்டாரு.. பின்னாடி எழுந்திருக்கவே இல்ல.

:P :P

Relaxplzz

ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா? இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு...

Posted: 14 Oct 2014 07:00 AM PDT

ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா?

இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.டி.எம். (Automatic Teller Machine) உருவான கதை கூட சுவாரஷ்யமானது.

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.

ஜோன் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த சொற்ப சில்லறையை வைத்து, கொஞ்சம் சொக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து சொக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.

அப்போதைக்கு அவர் மனைவியை சமாதானப்படுத்தினா லும், பூட்டிய வங்கிக் கவுண்டரும், காசு போட்டால் உதிர்ந்த சொக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. அதன் விளைவுதான் முதல் ஏ.ரி.எம். உருவாக வித்திட்டது.

1969இல் இவர் உருவாக்கிய முதல் ஏ.ரி.எம். வடக்கு லண்டனின் பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல். ஜோனின் மனைவியால் அப்போதைய ஏ.ரி.எம். அட்டைக்கான ஆறு இலக்க குறியீட்டை(Pin Number) ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.

உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கங்களாகக் குறைத்தார். ஏ.ரி.எம்.(ATM) தற்போது ஏராளமான மாற்றங்களைக் கண்டு விட்டாலும், அதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதல்தான்!

Relaxplzz


கொஞ்ச நாளா திருப்பதியில இருக்கற மாதிரியே தெரியறது,எனக்கு மட்டும் தானா...எந்த பக்...

Posted: 14 Oct 2014 06:50 AM PDT

கொஞ்ச நாளா திருப்பதியில இருக்கற மாதிரியே தெரியறது,எனக்கு மட்டும் தானா...எந்த பக்கம் திரும்பினாலும் மொட்டை தலைகளா இருக்கு... :P

தமிழகத்துக்கு இது முடியுதிர் காலமா... :P

- Ilayaraja Dentist

கர்ம வீரர் காமராஜர்... வெவ்வேறு வயதில்...

Posted: 14 Oct 2014 06:40 AM PDT

கர்ம வீரர் காமராஜர்... வெவ்வேறு வயதில்...


:)

Posted: 14 Oct 2014 06:30 AM PDT

:)


விஜயகாந்த் : ரஜினி... நான் ஒரு கேள்வி கேட்டா, உங்களால பதில் சொல்ல முடியுமா...???...

Posted: 14 Oct 2014 06:15 AM PDT

விஜயகாந்த் : ரஜினி... நான் ஒரு கேள்வி கேட்டா,
உங்களால பதில் சொல்ல முடியுமா...???

ரஜினி : கேளுங்க... தெரிஞ்சா சொல்றேன்...!!!

விஜயகாந்த் : மகாத்மா காந்தியோட பையன் பேரு
என்னன்னு தெரியுமா...???

ரஜினி : தெரியலையே...!!!

விஜயகாந்த் : தினேசன்...!!!

ரஜினி : தினேசனா...???

விஜயகாந்த் : ச்சே... என்ன ரஜினி...??
இதுகூட தெரியாதா...!!! சின்ன வயசுல
டீச்சர் சொல்லிக்கொடுத்ததில்லையா...???

"மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன்" ன்னு...???

ரஜினி : ...!?!?!?! :O :O

:P :P

Relaxplzz

பணம் இல்லாத போது ஹோட்டல்ல வேலை செஞ்சாலும் வீட்ல வந்து சாப்பிடுகிறான் பணம் இருக்...

Posted: 14 Oct 2014 06:00 AM PDT

பணம் இல்லாத போது
ஹோட்டல்ல வேலை செஞ்சாலும்
வீட்ல வந்து சாப்பிடுகிறான்

பணம் இருக்கும் போது
வீட்டுல சமச்சாலும்
ஹோட்டல்ல போய் சாப்பிடுகிறான்

பணம் இல்லாத போது
வயத்தை நிரப்ப சைக்கிள்ல போறான்

பணம் இருக்கும் போது
வயத்தைக் குறைக்க சைக்கிள்ல
போறான்

பணம் இல்லாத போது
சோத்துக்காக அலைகிறான்

பணம் இருக்கும் போது
சொத்துக்காக அலைகிறான்

பணம் இல்லாதபோது
பணக்காரனாக நடந்து கொள்கிறான்;

பணம் இருக்கும் போது
ஏழையாக காட்டிக் கொள்கிறான்.

நிம்மதியாக இருக்கும் போது
பணத்தைத் தேடுகிறான்

பணம் இருக்கும் போது
நிம்மதியை தேடுகிறான்

# பணம் மட்டுமல்ல
பணத்தை வைத்திருக்கும் மனிதனும்
ஒரு குரங்கு

Relaxplzz


ஒரு தாய், தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை........

Posted: 14 Oct 2014 05:45 AM PDT

ஒரு தாய்,
தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை
மனிதன் கடைசிவரை உணர்வதில்லை.....

அவன் அதை உணரும் போது,
அவள் உயிரோடு இருப்பதில்லை...
பலரது வாழ்வில் இது தான் உண்மையுங்கூட..

Relaxplzz


(y)

Posted: 14 Oct 2014 05:30 AM PDT

(y)


சிறிய தூண்டில் --------------------- நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடி...

Posted: 14 Oct 2014 05:15 AM PDT

சிறிய தூண்டில்
---------------------
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"

"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் "எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள "டெண்ட்" –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"

மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"

--இணையத்திலிருந்து

Relaxplzz

மனிதன் கோவில் தத்துவம் நம் உடல் தான் கோவில்...........மனிதன் தான் கடவுள்..... உ...

Posted: 14 Oct 2014 05:00 AM PDT

மனிதன் கோவில் தத்துவம்

நம் உடல் தான் கோவில்...........மனிதன் தான் கடவுள்.....
உடல் கோயில் + ஆன்ம = கடவுள்

உள் + கட = கடவுள். நம் மனதை கடந்தால் நாம் கடவுள் ஆகலாம்

Relaxplzz


ஆண்களைப் பார்த்து பெண்கள் வியக்கும் விசயங்களில் இதுவும் ஒன்று - 'எந்தச் சூழ்நிலை...

Posted: 14 Oct 2014 04:45 AM PDT

ஆண்களைப் பார்த்து பெண்கள் வியக்கும் விசயங்களில் இதுவும் ஒன்று - 'எந்தச் சூழ்நிலையிலும் நண்பனை விட்டுக் கொடுக்காமல் இருப்பது'..

#உண்மை_தான


:)

Posted: 14 Oct 2014 04:30 AM PDT

:)


மிஸ்டர் எக்ஸ் 50 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்கு வந...

Posted: 14 Oct 2014 04:15 AM PDT

மிஸ்டர் எக்ஸ் 50 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்கு வந்தது

நீதிபதி : எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சு?

எக்ஸ்: ஒரே இருட்டு, நான் 80 கி.மீட்டர் வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது, என் காரில் பிரேக் பிடிக்கவில்லை நான் எவ்வளவோ முயற்சி செய்தும், வண்டிய என்னால நிறுத்த முடியல.

நீதிபதி : அப்புறம்?

எக்ஸ்: எனக்கு எதிர்த்தாப்புல ரோட்டுல ஒரு பக்கம், 2 பேர் நடந்து போனதையும், மற்றொருபுறம் ஒரு கல்யாண ஊர்வலத்தையும் பார்த்தேன். நீங்களே சொல்லுங்க நீதிபதி ஐயா, நான் என்ன செய்திருக்கனும்?

நீதிபதி : கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கனும்.

எக்ஸ்: அப்படித்தான் சாமி நானு நெனச்சு செஞ்சேன்.

நீதிபதி : !?!?!?!?!?!?!?!?! அப்படினா, வெரும் 2 பேருதான செத்திருக்கனும், எப்படி 50 பேரு செத்தானுங்க?

எக்ஸ் : அப்படி கேளுங்க எசமான், நான் அந்த 2 பேருமேல மோதினபோது, ங்கொய்யால.... ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள ஓடிட்டான். அதுல தான் எசமான் இப்பிடி ஆயிடுச்சு
.
நீதிபதி : ????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :O

Relaxplzz

எங்கிருந்துபுறப்படுகிறோமென்பது முக்கியமல்ல! எங்கேபுறப்படுகிறோமென்பதுதான் முக்கி...

Posted: 14 Oct 2014 04:00 AM PDT

எங்கிருந்துபுறப்படுகிறோமென்பது
முக்கியமல்ல!

எங்கேபுறப்படுகிறோமென்பதுதான்
முக்கியம்!

ஹிந்துவிலிருந்து...
கிறிஸ்தவத்திலிருந்து...
இஸ்லாத்திலிருந்து...

இப்படி
எங்கிருந்துவேண்டுமானாலும்
புறப்படுங்கள்!

ஆனால்
உங்களதுபயணம்
உங்களைநோக்கியதாயிருக்கட்டும்!

வெளியேபுறப்படுவதைத்தான்
பயணமெனநினைக்கிறீர்கள்!

இல்லையில்லை!
வெளியிலிருந்து
புறப்படுங்கள்
அதுதான் பயணம்!

ஏனெனில்
இறைவன் உங்களது
சுயத்திலல்லவா இருக்கிறான்!

ஒன்றைமட்டும்
நினைவிற்கொள்ளுங்கள்!

பயணமென்பது
இடத்தின்மீது
கால்களால்நடப்பதல்ல!

உங்களுக்குள்
உள்ளத்தால் பயணியுங்கள்!

இசையின் பயணம்
காற்றில் தடயமின்றி பயணிப்பதைப்போல

உங்கள் பயணம்
பாதையை கசடாக்காமல்
சுயத்தையடையட்டும்!

- பாலா ஃபீனிக்ஸ்

Relaxplzz


அருமையான படைப்பு

Posted: 14 Oct 2014 03:50 AM PDT

அருமையான படைப்பு


குடித்து குடும்பத்தையே அழிக்கும் பல ஆண்கள் மத்தியில் போற்றப்பட வேண்டிய மனிதர் இவர்.

Posted: 14 Oct 2014 03:40 AM PDT

குடித்து குடும்பத்தையே அழிக்கும் பல ஆண்கள் மத்தியில் போற்றப்பட வேண்டிய மனிதர் இவர்.


:)

Posted: 14 Oct 2014 03:30 AM PDT

:)


#சின்னகுழந்தைகள் வெச்சிருக்கீங்களா....அவசியம் படிங்க ...... முடிந்த வரை Share செ...

Posted: 14 Oct 2014 03:15 AM PDT

#சின்னகுழந்தைகள் வெச்சிருக்கீங்களா....அவசியம் படிங்க ......
முடிந்த வரை Share செய்க...
.
பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும்.
குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National vaccine remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை.

இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?
Immunize<space><குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி>
என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.

உடனே 'உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது' என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும்.
ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.

Relaxplzz