உலகில் உள்ள அனைவருக்கும்
தெரியும், கோக் மற்றும் பெப்சியில்
வேதி மருந்து கலக்கப்படுகிறது
என்று,
ஆனால் உலகில் ஜனாதிபதி,
ஆளுநர், முதலமைச்சர், நலம் காக்கும்
அமைப்பின் தலைவர்கள், கலெக்டர்கள் என
யாரும் தட்டி கேட்டதில்லை. காரணம்
அவர்களின் உலக செல்வாக்கு..
ஆனால், இதை எல்லாம் தட்டி கேட்டான்
ஒரு தமிழன், அதுவும் கீழ்மட்ட
பதவியில் இருந்த ஒருவர்..
அது வேறு யாருமில்லை, "மக்கள்
சேவகர் சகாயம்" தான்..
ஆம், " லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம்
நிமிர்த்து"..... அவரிடம் கேட்ட
பொழுது,
"காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-
வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான்
வாங்கிய பெப்ஸியில் அழுக்குப்
படலம் இருந்ததாகப் புகார்
கொடுத்தார். சாம்பிளை லேப்
டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல,
'மனிதர்கள் குடிக்க ஏற்ற
பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது.
சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன
நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன்.
ரொம்ப யோசனைக்குப்
பிறகு தாசில்தார்கிட்ட
எட்டு பூட்டு மட்டும்
வாங்கிட்டு வரச் சொன்னேன்.
எதுக்குன்னு புரியாம
வாங்கிட்டு வந்தவரைக்
கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல
இருக்குற பெப்ஸி கம்பெனிக்குப்
போனேன். நான் தயாரித்த
அறிக்கையின்
ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட
கொடுத்துட்டு, 'கம்பெனியைப்
பூட்டி சீல்வைக்கப் போறோம்.
எல்லாரையும் வெளியே வரச்
சொல்லுங்க'ன்னு சொன்னோம்.
அந்த மேனேஜரைவிட என்கூட வந்த
தாசில்தார் ஆடிப் போயிட்டாரு.
'சார்… பெரிய பிரச்னை ஆயிடும்.
எதுக்கும்
கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'ன
ு பதறுனாரு. 'சட்டப்படி இந்தக்
கம்பெனியை மூட நமக்கே அதிகாரம்
இருக்கு. நீங்க தைரியமா உங்க
கடமையைச்
செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன்.
ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும்
பதற்றத்தோடு வெளியே வந்தவரு,
'சார்… அவங்க அமெரிக்கா வரைக்கும்
பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட
பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன
பண்ணலாம்?'னு கேட்டாரு.
'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட்
பண்ணிட்டு சீல்வைக்க
வேண்டியதுதான்'னு நான்
சொல்லவும்தான் எல்லாரும்
பயந்து வெளியே வந்தாங்க.
கம்பெனியை இழுத்து மூடி,
எட்டு பூட்டுகளையும்
போட்டு சீல்வெச்சுட்டோம்.
நான் உடனே அலுவலகத்துக்குப்
போகாம ஒரு குக்கிராமத்துக்குப்
போயி ரேஷன் கடை,
பள்ளிக்கூடத்தை எல்லாம்
ஆய்வு பண்ணி முடிச்சுட்டு,
ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன்.
என்
மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க.
கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச்
செயலாளர்னு பலரும் என்னைக்
கேட்டு வீட்டுக்கு போன்
பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப
எல்லோருக்கும் போன் பண்ணா,
'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன
காரியம் பண்ணியிருக்கீங்க
தெரியுமா?'ன்னு எல்லாரும்
கேள்வி கேட்டாங்க. 'நான் என்
கடமை யைத் தான் சார் செஞ்சேன்.
மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக
சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப்
பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன்.
மறு நாள் எந்தப் பத்திரிகைலயும்
பெட்டிச் செய்தியாக்கூட
பெப்ஸிக்கு சீல்வெச்ச சம்பவம்
ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர்
விகடன்ல மட்டும் அந்தச்
செய்தி விரிவா வந்திருந்தது.
அதுக்குப் பிறகுதான்
பெப்ஸிக்கு நான் சீல் வெச்ச
விஷயமே வெளி உலகத்துக்குத்
தெரிஞ்சது" – பெப்ஸி சம்பவம்
குறித்து கேட்டதும் சொல்கிறார்.
"அஞ்சா நெஞ்சன், ஒரே பூட்டில்
உலகை ஆட்டிய தமிழன்"
அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
Relaxplzz