Thursday, 4 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


யுவர் ஆனர், மேகியை தடை பண்ணிடுவீங்களா? குமாரசாமி = ச்சேச்சே நம்ம ஃபார்முலா தெரி...

Posted: 04 Jun 2015 11:23 AM PDT

யுவர் ஆனர், மேகியை
தடை
பண்ணிடுவீங்களா?

குமாரசாமி = ச்சேச்சே
நம்ம ஃபார்முலா
தெரியுமில்ல?
உணவில் 10.33% விஷம்
கலக்கலாம், தப்பில்லை!

- @senthilcp

திமிரா இருக்காதீங்க, யாரும் கூட இருக்க மாட்டாங்க... கொஞ்சமாவது திமிரா இருங்க, இ...

Posted: 04 Jun 2015 06:07 AM PDT

திமிரா இருக்காதீங்க,
யாரும் கூட இருக்க
மாட்டாங்க...

கொஞ்சமாவது திமிரா
இருங்க, இல்லனா,
யாரும் மதிக்க
மாட்டாங்க...

@ஜெயந்த்

மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு 'ஓட்ஸ்' சாப்பிட ஆரம்பித்துவிடாதீர்கள்....

Posted: 04 Jun 2015 05:57 AM PDT

மேகி நூடுல்ஸ்
சாப்பிடுவதை
நிறுத்திவிட்டு 'ஓட்ஸ்'
சாப்பிட
ஆரம்பித்துவிடாதீர்கள்.
'ஓட்ஸ்' என்பதே ஒரு
டுபாக்கூர்
சமாச்சாராம்தான்.
# இன்றைய நவீன உணவு
முறையில் ஓட்ஸ் என்பது
அத்தியாவசிய
உணவாகிவிட்டது.
அதுவும் நீரிழிவு
நோயாளிகளின் , உடல்
எடை குறைப்பு
முயற்சியில் உள்ளவர்கள்
ஓட்ஸ் சாப்பிடுவதை
பெருமையாக
நினைக்கிறார்கள் .
10 ஆண்டுகளுக்கு
முன்வரை நம் நாட்டில்
ஓட்ஸ் இல்லை.. ஆனால்
இன்று ஆண்டுக்கு சில
ஆயிரம் கோடிகளுக்கு
விற்பனையாகிறது.
இதற்குப் பின்னால்
பண்ணாட்டு வணிக
மோசடி உள்ளது....
ஓட்ஸ் ஆஸ்த்ரேலியாவில்
பெரும்பான்மையாகவும்,
ஐரோப்பிய நாடுகள்
சிலவற்றிலும்
விளையும் ஒரு பயிர்.
அதை அப்படியே உணவாக
சாபிடமுடியது சில
வழிமுறைகளை
பயன்படுத்தி தட்டையாக
மாற்றப்படுகிறது..
அதையும் கூட நம்ம ஊர்
உணவு போல அதிக
அளவில் எடுத்துக்கொள்ள
முடியாது...
சில கிராம் மட்டுமே
(ஸ்பூன் அளவு ) எடுத்து
தண்ணீர் சேர்த்து கொதிக்க
வைத்து
சாப்பிடுகிறோம்.
அதிலும் சத்து எதுவும்
கிடையாது. பசியை
கட்டுபடுத்தும் குணம்
மட்டுமே இதற்கு உண்டு.
அதிக விலை கொடுத்து
வாங்கும் ஓட்ஸை விட
நம்ம ஊர் கேழ்வரகில் (Ragi )
பல மடங்கு சத்து உள்ளது.
சுமார் 1 கிலோ ராகி
சாப்பிடுவது 4 கிலோ
ஓட்ஸ் சாப்பிடுவதற்கு
சமம். 1 கிலோ ராகி மாவு
வெறும் 35 ரூபாய் தான். 4
கிலோ ஓட்ஸ் 140 x 4= 560
ரூபாய். எவ்வளவு மடங்கு
விலையில் வித்தியாசம்
பாருங்கள்....
எங்கோ
ஆஸ்த்ரேலியாவில்
விளையும் (அவர்கள்
அதிகம் சாப்பிடுவது
கிடையாது) ஓட்ஸை
நாம் சாப்பிடுவதில் MNC
தொழிற்சாலைகளின்
கொள்ளை அதிக அளவில்
உள்ளது... சில
ஆண்டுகளாக போலி
விளம்பரங்கள் மூலமும்,
மருத்துவர்கள் மூலம்
கட்டாயப்படுத்தியும்
நம்மை ஓட்ஸ் வாங்க
வைத்துவிட்டனர்.
அந்தந்த நாடுகளிருந்து
இங்கு நம் நாட்டிற்கு
கொண்டுவர ஆகும்
எரிபொருள் செலவு, MNC
நிறுவனங்களின்
கொள்ளை லாபம்
அனைத்தையும் சேர்த்து
பயனற்ற பொருளை
அநியாய விலைக்கு நம்
தலையில் கட்டுகின்றன...
அதைவிட ராகி, கம்பு ,
சோளம் , திணை , வரகு ,
சாமை போன்ற நம் நாட்டு
தானியங்கள் எல்லாம் பல
மடங்கு சத்துள்ளவை., '
விலையும் குறைவு ' !!!!
சத்து நிறைந்த நம்
பாரம்பரிய உணவு இருக்க
சக்கையை உண்டு நம்
பணத்திற்கும் உடல்
நலத்திற்கும் வேட்டு
வைக்கலாமா?!

ஆயிரம் பிரச்சனைகளுக்குமத்தியில் காதல் வாய்க்கப்பெற்றவன்... ஆசீர்வதிக்கப்பட்டவன்!...

Posted: 04 Jun 2015 04:14 AM PDT

ஆயிரம்
பிரச்சனைகளுக்குமத்தியில் காதல்
வாய்க்கப்பெற்றவன்...
ஆசீர்வதிக்கப்பட்டவன்!

@தேடல்

Posted: 04 Jun 2015 03:54 AM PDT


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


தமிழகத்திலும் மேகி நூடுல்ஸுக்கு தடை : விற்பனையில் இருந்து உடனடியாக திரும்ப பெற ஆ...

Posted: 04 Jun 2015 10:17 AM PDT

தமிழகத்திலும் மேகி நூடுல்ஸுக்கு தடை : விற்பனையில் இருந்து உடனடியாக திரும்ப பெற ஆணை

சென்னை: தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. காரீயம் மற்றும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளதால் மேகி விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் மேகி நூடுல்ஸை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. விற்பனையில் இருந்து மேகி நூடுல்ஸை உடனடியாக திரும்ப பெறவும் ஆணையிடப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட், டெல்லி, கேரளா, குஜராத், காஷ்மீர் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் மேகி நூடுல்ஸ் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேகியை போன்றே வைவை எக்ஸ்பிரஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலாவுக்கும் தமிழக அரசு தடை.


Posted: 03 Jun 2015 12:55 PM PDT


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு...

Posted: 04 Jun 2015 08:15 AM PDT

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு
சுழன்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.
மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர்.

நன்றி : தர்மராஜன்

பா விவேக்

பெண்களுக்கான விளையாட்டுக்களில் முக்கிய விளையாட்டான பல்லாங்குழி இன்று இருந்த இடம்...

Posted: 04 Jun 2015 08:12 AM PDT

பெண்களுக்கான விளையாட்டுக்களில் முக்கிய விளையாட்டான பல்லாங்குழி இன்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனதோ???

பா விவேக்


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Posted: 04 Jun 2015 09:46 AM PDT


Posted: 04 Jun 2015 09:46 AM PDT


Posted: 04 Jun 2015 09:18 AM PDT


ஆத்தா தாயே.. தமிழ கொல்லாத.. அப்டியே கடல்ல குதிச்சுடு...

Posted: 04 Jun 2015 09:04 AM PDT

ஆத்தா தாயே.. தமிழ கொல்லாத.. அப்டியே கடல்ல குதிச்சுடு...



[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 04 Jun 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


சாம்ஸ் கப்பல் காலேஜ் ...செம கலாய் கலக்கல் வீடியோ ..Sams Marine Trolled

Posted: 04 Jun 2015 08:51 AM PDT

சாம்ஸ் கப்பல் காலேஜ் ...செம கலாய் கலக்கல் வீடியோ ..Sams Marine Trolled



Posted: 04 Jun 2015 08:45 AM PDT


ஏப்பா உன்ன பாத்தா வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஆளு மாதிரி இருக்கற எதுக்காக ஒரு...

Posted: 04 Jun 2015 08:08 AM PDT

ஏப்பா உன்ன பாத்தா வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஆளு மாதிரி இருக்கற எதுக்காக ஒரு கொழந்த கால்லெ இருக்கற கொலுசத் திருடின.
நீங்க சொல்லறது உண்மைதான் அய்யா. வீட்லயும் அரிசிச் சொறு. ஓட்லலெயும் அரிசிச் சோறு. சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனாலும் அரிசிச் சோறு. அய்யா உங்க்ளுக்கே தெரியும். அந்தக் காலத்லெ எல்லாம் கம்பு, ராகி, சோளம், வரகுனு விதவிதமான சோறா சமச்சி சாப்பிட்டு ஆரோக்கியமா இருந்தாங்க. இப்ப பாருங்க நாட்ல பாதிப் பேருக்கு சக்கரை வியாதி.
சக்கரை வியாதிக்கும் உன் திருட்டுக்கும் என்னப்பா தொடர்பு.
இருக்குங்கய்யா. நான் களியா தின்னம்னா ஜெயிலுக்குப் போறத தவிர எனக்கு வேறவழி தெரில. என் திருட்டு சின்னதா இருந்தாலும் பரவா இல்லீங்க. எனக்கு ஆயுள் தண்டனை குடுங்க.... ஹ ஹ ஹ ஹ ஹ..!!

நடிகைகைகள் உடை மாற்றும் அறையில் என்ன செய்வார்கள் என்று அறிய ஆவலா ? வீடியோ

Posted: 04 Jun 2015 08:07 AM PDT

நடிகைகைகள் உடை மாற்றும் அறையில் என்ன செய்வார்கள் என்று அறிய ஆவலா ? வீடியோ


நடிகைகைகள் உடை மாற்றும் அறையில் என்ன செய்வார்கள் என்று அறிய ஆவலா ? வீடியோ
www.indiasian.com
how heroines behave in dressing room! funny video

அம்மாவிற்காக ஒரு 5 நிமிடம் #ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகு...

Posted: 04 Jun 2015 07:44 AM PDT

அம்மாவிற்காக ஒரு 5 நிமிடம்

#ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகுபடுத்தி மகிழ்ந்தாள். நீ பதிலுக்கு இரவு முழுதும் அழுதாய்.

#இரண்டு வயதாகையில் உன் விரல் பிடித்து உன்னை நடக்கப் பழக்கினாள். நீயோ அவள் அழைக்கையில் வராமல் முரண்டு பிடித்தாய்.

#மூன்று வயதாகையில் பாசத்தைக் குழைத்து உனக்காய் உணவு தயாரித்தாள். நீயோ அதை விசிறியடித்து உன் நன்றியைக் காட்டினாய்.

#நான்கு வயதானபோது வண்ணப் பென்சில்கள் வாங்கி உன்னை மகிழ்வித்தாள். நீ பதிலுக்கு அதைக்கொண்டு சுவரில் கிறுக்கினாய்.

#ஐந்து வயதானபோது அழகழகாய் ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தாள். நீயோ பதிலுக்கு சகதியில் புரண்டு அதை அழுக்காக்கி சிரித்தாய்.

#ஆறு வயதில் அலைந்து அலைந்து நல்ல இடமாய் பார்த்து உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். நீயோ போகமாட்டேன் என்று அழுதாய்.

#ஏழு வயதில் உனக்கு கிரிக்கெட் பந்து வாங்கித் தந்தாள். நீயோ அதைக் கொண்டு அடுத்த வீட்டு சன்னலை உடைத்தாய்.

#பத்து வயதில் உன்னை ஆசையுடன் இசைப் பயிற்சிக்கு அனுப்பினாள். நீயோ பயிற்சியெடுக்காமல் நன்றி செலுத்தினாய்.

#பதினொன்று வயதில் உன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு உற்சாகமாய் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றாள். நீயோ அவளை வேறு இருக்கையில் அமரச் சொன்னாய்.

#பன்னிரண்டு வயதில் பார்க்காதே என்று சொன்ன தொலைக்காட்சி சானல்களை அவள் இல்லாதபோது பார்த்தாய்.

#பதிமூன்று வயதாகையில் தலை முடியை கத்தரிக்கச் சொன்னாள். நீயோ உனக்கு ரசனையே இல்லை என்று பதில் சொன்னாய்.

#பதினான்கு வயதாகையில் பள்ளியில் ஒருவார சுற்றுலா அனுப்பினாள். நீயோ ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்யாமல் அவளை நிராகரித்தாய்.

#பதினைந்து வயதாகையில் அலுவலகத்திலிருந்து ஆர்வமுடன் ஓடி வந்து உன்னை அழைக்கையில் அறையைத் தாழிட்டுக் கொண்டு பேசாமல் இருந்தாய்.

#பதினாறு வயதாகையில் உனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தாள். நீ அவளுடைய வாகனத்தை சொல்லாமலேயே எடுத்துக் கொண்டு சுற்றினாய்.

#பதினேழு வயதாகையில் அவள் ஒரு தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருப்பதாய் சொன்னாள். நீயோ தொலைபேசியை கீழே வைக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்தாய்.

#பதினெட்டு வயதாகையில் உன்னுடைய பள்ளி இறுதித் தேர்வு வெற்றிக்காக ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். நீயோ அவளை தனியே இருக்க விட்டு நண்பர்களுடன் இரவு முழுதும் கொண்டாட்டம் நடத்தினாய்.

#பத்தொன்பது வயதாகையில் கல்லூரியில் பணம் கட்ட வந்தாள். நீயோ அவளை ரகசியமாய் சந்தித்துப் பேசி அனுப்பினாய், நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைக்க அவமானப் பட்டாய்.

#இருபது வயதாகையில் ' நீ யாரையாவது விரும்புகிறாயா ' என்னும் அவளுடைய கேள்விக்கு, 'இதிலெல்லாம் தலையிடாதே' என்று பதில் சொன்னாய்.

#இருபத்து ஒன்று வயதாகையில் உன்னுடைய எதிர்காலம் பற்றி அறிவுரை சொன்னாள். நீயோ எனக்கு உன்னைப் போலாக வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாய்.

#இருபத்து இரண்டு வயதாகையில் உன் கல்லூரி வெற்றிக்காய் பெருமிதப்பட்டாள். நீயோ நண்பர்களுக்கு விருந்து வைக்க பணம் வேண்டும் என்றாய்.

#இருபத்து மூன்று வயதாகையில் பாசத்தோடு உனக்களித்த பரிசைக் குறித்து 'நல்லாவே இல்லை' என்று நண்பர்களிடம் சொன்னாய்.

#இருபத்து நான்கு வயதாகையில் உன்னுடைய தொழில் திட்டம் பற்றிப் பேசினாள். அம்மா சும்மா இருப்பாயா என்று அதட்டி உன் நன்றியைக் காட்டினாய்.

#இருபத்து ஐந்து வயதாகையில் கையிலிருந்த பணமெல்லாம் செலவழித்து திருமணம் செய்து வைத்து கண்ணீர் விட்டாள். நீயோ அவளை விட்டு தூரமாய் வந்து தனிக்குடித்தனம் செய்தாய்.

#முப்பது வயதாகையில் உன் குழந்தை வளர்ப்பு குறித்து சில ஆலோசனைகள் சொன்னாள். நீயோ ' அதெல்லாம் அந்தக் காலம்…' என்று பதில் சொன்னாய்.

#நாற்பது வயதாகையில் உன்னை அழைத்து தன்னுடைய பிறந்த நாள் விழாவுக்கு வர முடியுமா என்றாள். நான் ரொம்ப வேலையாய் இருக்கிறேன் என்று பதில் சொன்னாய்.

#நாற்பத்தைந்து வயதாகையில் உன்னைக் காணவேண்டும் என்று விரும்பினாள் நீயோ குழந்தைக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்று பதில் சொன்னாய்.

#ஐம்பது வயதாகையில் அவள் நோய்வாய்ப் பட்டாள். உன் கரத்தைப் பிடித்துக் கொண்டே அருகில் இருக்க ஆசைப்பட்டாள். நீயோ முதியோர் இல்லத்தில் சேர்க்க ஆலோசனை செய்தாய்.

ஒருநாள் விடியலில் உனக்கு அழைப்பு வந்தது. உன்னைக் காணவேண்டும் என்னும் ஆசையை முனகலாய் உச்சரித்துக் கொண்டே இறந்து போன உன் தாயைப் பற்றி. நீ காலம் கடந்து கண்ணீர் விட்டாய் !

அன்பு பெரிய பெரிய செயல்களில் வெளிப்படுவதில்லை.
சின்னச் சின்ன நிகழ்வுகளில் தான் வெளிப்படுகின்றன.
காட்டாத அன்பு மலையாய் கனக்கும்.

வாய்ப்பு இருக்கும் போதே நேசத்தை வெளிப்படுத்துங்கள்...!!!


<3 அவள் எங்கே விட்டு போனாளோ அங்கே தொடங்கி உனை நான் காதல் செய்வேனே <3

Posted: 04 Jun 2015 07:37 AM PDT

♥ அவள் எங்கே விட்டு போனாளோ அங்கே தொடங்கி உனை நான் காதல் செய்வேனே ♥



10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை: * பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோங்களை S...

Posted: 04 Jun 2015 07:18 AM PDT

10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை:
* பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோங்களை
SMS மூலமாக
அனுப்பி அடிக்கடி போட்டுக் கேட்டோம்.
* பிக்சர் மெசேஜ் என்னும் கருப்பு வெள்ளை
படங்களை
மாற்றி மாற்றி அனுப்பி சிரித்துக் கொண்டோம்.
* GPRSல் டவுன்லோடு செய்பவர்களை
ஆச்சரியத்துடன்
பார்த்து மலைத்தோம்.
* கேமரா செல்போன் வைத்திருந்தவர்கள்
பெரும்பணக்காரர்களாக இருந்தார்கள்.
* பலரது மொபைலில் ஏர்டெல் டோன்களை
ரிங்டோன்களாக வைத்திருந்தார்கள்.
* மாதாமாதம் 200ரூ ரீசார்ஜ் செய்து
வேலிடிட்டியை
தக்க வைத்துக் கொண்டோம்.
* ரீசார்ஜ் செய்ய நாலைந்து தெரு தள்ளிப் போக
வேண்டியிருந்தது.
* உன் காலர் ட்யூனை கேட்கப் போகிறேன், போனை
அட்டன்
செய்யாதே என்று மெசேஜ் அனுப்பினோம்.
* அப்போதெல்லாம் மெசேஜ் பூஸ்டர் கிடையாது,
ரேட்
கட்டர் கிடையாது, நெட் பேக் கிடையாது,
டாப்-அப்
கிடையாது.
* தத்துவங்கள் & ஜோக்குகளை டைப் செய்து
மொத்தமாக 20, 30 பேருக்கு மெசேஜாக
அனுப்பினோம்.
* அடிக்கடி பேட்டரியை கழட்டியது
கிடையாது, சிம் கார்டை
கழட்டியது கிடையாது.
* 512-MB மெமரி கார்டின் விலை 500க்கும்
குறைவில்லாமல் இருந்தது.
கார்டின் சைஸும் பெரிதாக இருந்தது.
* 90சதவீத மக்களின் செல்போன்களின் கீபேட்
பட்டன்கள்
தேயாமல் புதிதாகவே இருந்தது.
* 90சதவீத மக்களின் செல்போன்களில் ஜிப் கவர்
போடப்பட்டிருந்தது.
* Tag(ரோப்) போட்டு கழுத்தில் தொங்கியவாறு
சட்டைப்
பையில் செல்போனை வைத்திருந்தார்கள்.
* பல செல்போனுக்கு பின்னால் போன் வந்தால்
மின்னும்
லைட் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள்.
* 30வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக
செல்போன்
வைத்திருந்தார்கள்.
* வீட்டிலுள்ள சிறுவர்கள் அப்பாவின்
செல்போனை
தொடவே பயந்தார்கள்.
* மிஸ்டு கால் என்றால் என்னவென்றே
தெரியாமல் இருந்தோம்.
* மழையில் நனைந்த செல்போனை மொட்டை
மாடியில் காய வைத்து நமக்கு நாமே
சரிசெய்து
கொண்டோம்.
* செல்போனிலிருந்து லேன்ட்-லைனுக்கு
எப்படி போன்
செய்வதென்று தெரியாமல்
படித்தவர்களிடம்கேட்டோம்.
* Snake Xania மற்றும் Carrom Board
கேம்களுக்கு
மிகப்பெரிய ரசிகர்களாக இருந்தோம்.
* அடிக்கடி செல்போனை மாற்றாமல் ஒரே
செல்போனை 10வருடங்களுக்கும் குறையாமல்
வைத்திருந்தோம்.
வாழ்க்கை நிம்மதியாக இருந்தது.
ஆனால் இன்று?

தில் இருக்கிற ஆம்புளைங்க மட்டும் லைக் பண்ணுங்கடா

Posted: 04 Jun 2015 06:50 AM PDT

தில் இருக்கிற ஆம்புளைங்க மட்டும் லைக் பண்ணுங்கடா



Posted: 04 Jun 2015 06:43 AM PDT


பல ஆயிரங்கள் கொடுத்தாலும் இது போன்ற வாழ்க்கை கிடைக்காது

Posted: 04 Jun 2015 05:42 AM PDT

பல ஆயிரங்கள் கொடுத்தாலும் இது போன்ற வாழ்க்கை கிடைக்காது


''நடிகர் சங்கம் செத்துப்போச்சு! என் ஆதரவு விஷாலுக்கு தான்!'' - மன்சூர் அலி கான்

Posted: 04 Jun 2015 05:19 AM PDT

''நடிகர் சங்கம் செத்துப்போச்சு! என் ஆதரவு விஷாலுக்கு தான்!'' - மன்சூர் அலி கான்


''நடிகர் சங்கம் செத்துப்போச்சு! என் ஆதரவு விஷாலுக்கு தான்!'' - மன்சூர் அலி கான்
www.indiasian.com
'I Support Vishal' - Mansoor Ali Khan Press Meet

#FRIEND-1 : டேய் மச்சான் சீக்கிரமா போடா.வண்டியே வேகமா ஓட்டு.தியேட்டர்ல படத்த போட...

Posted: 04 Jun 2015 05:18 AM PDT

#FRIEND-1 : டேய் மச்சான் சீக்கிரமா போடா.வண்டியே வேகமா ஓட்டு.தியேட்டர்ல படத்த போட்ருவாங்ய.
#FRIEND-2 : வேகமா போனா நம்ம படத்தை(PHOTO) நாளைக்கி பேப்பர்ல போட்ருவாங்ய டா.
[[வாகனத்தை மெதுவாக செலுத்தி
வாழ் நாட்களை அதிகபடுத்துவீர்•]]

Posted: 04 Jun 2015 04:41 AM PDT


Posted: 04 Jun 2015 03:41 AM PDT


ஒரே கல்லில் தமிழனின் கை வண்ணம் அனைவரும் பார்த்து இருபிர்கள், பல கற்களை கொண்டு ஒர...

Posted: 04 Jun 2015 03:37 AM PDT

ஒரே கல்லில் தமிழனின் கை வண்ணம் அனைவரும் பார்த்து இருபிர்கள், பல கற்களை கொண்டு ஒரு சிற்பம் உருவாக்க முடியுமா???
நம் முன்னோர்களால் அதுவும் சாத்தியம் ஆகிற்று....
இங்கு இருக்கும் யானை பல கற்களால் உருவம் ஆக்கப்பட்டது....
- சித்தாமூர்,செஞ்சிக்கோட்டை


ஐ பட நாயகி அமி ஜாக்செனின் புதிய மேர்சல்லாக வைக்கும் வீடியோ

Posted: 04 Jun 2015 03:36 AM PDT

ஐ பட நாயகி அமி ஜாக்செனின் புதிய மேர்சல்லாக வைக்கும் வீடியோ


ஐ பட நாயகி அமி ஜாக்செனின் புதிய மேர்சல்லாக வைக்கும் வீடியோ
www.indiasian.com
Amy Jackson Lingerie Model photo shoot

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 04 Jun 2015 03:18 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


நம்ம i Love You சொன்னா நம்மள மதிச்சி அதே சந்தோசத்தோட திரும்ப நமக்கு i Love You ச...

Posted: 04 Jun 2015 03:18 AM PDT

நம்ம i Love You சொன்னா நம்மள மதிச்சி அதே சந்தோசத்தோட திரும்ப நமக்கு i Love You சொல்ற ஒரே ஜீவன்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
Talking Tom cat மட்டும் தான்.

அன்பை உணர்த்தும் புகைப்படம் புரிந்தவர்கள் லைக் போடுங்க

Posted: 04 Jun 2015 02:40 AM PDT

அன்பை உணர்த்தும் புகைப்படம் புரிந்தவர்கள் லைக் போடுங்க


வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை...

Posted: 04 Jun 2015 02:38 AM PDT

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?

நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே....!


காதல் வலி புகைப்படம் புரிந்திருந்தால் ஒரு லைக் போடுங்க...

Posted: 04 Jun 2015 01:39 AM PDT

காதல் வலி
புகைப்படம் புரிந்திருந்தால் ஒரு லைக் போடுங்க...


ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி!

Posted: 04 Jun 2015 01:30 AM PDT

ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி!


ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி!
www.indiasian.com
Every Parents Must Watch this

இப்படிதான் பெப்சி, கோக்கில் பூச்சி மருந்து இருக்கிறது என 14 இந்திய ஆராய்ச்சி அமை...

Posted: 04 Jun 2015 01:18 AM PDT

இப்படிதான் பெப்சி, கோக்கில் பூச்சி மருந்து இருக்கிறது என 14 இந்திய ஆராய்ச்சி அமைப்புகள் ஒன்று கூடி அறிக்கை எல்லாம் வெளியிட்டது ...அவன் அசால்ட்டா ..உங்க நாட்டு நிலத்தடி நீரில் இருக்கும் பூச்சி மருந்துதான் இதற்கு காரணம் ..அதனை சரி செய்யுங்கள் என மறுப்பறிக்கை வெளியிட்டுவிட்டு இன்று வரை குளிர்பான வியாபாரம் அமோகமாக நடந்துதான் வருகிறது ....
இன்று மேகிக்கு எதிராக பொங்கும் மக்களுக்கு Nestle நிறுவனம் எப்படிபட்ட பகாசூர நிறுவனம் என தெரியுமா என தெரியவில்லை ....நமது நாட்டின் குழந்தைகள் குடிக்கும் பால் பவுடர், சாக்லேட், காலை உணவு என பலவற்றிலும் nestle வின் முத்திரையை பார்க்கலாம் .....சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் "Nestle"
சில வாரங்களுக்கு முன்பு ..ஸ்விட்சர்லாந்தின் Cantonal Bank என்னும் வங்கி 2013 ல் வெளியிட்ட விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த சக்கரங்களுடன் கூடிய சிங்கத்தின் படத்தை காப்பி அடித்தே மோடியின் "Make In India" லோகோ உருவாக்கபட்டுள்ளதாக வெளியான சர்ச்சையை தொடர்ந்து ....இன்று இந்திய அரசு .எங்களின் சிங்கம் அசோக சக்கரத்தின் சின்னம் என்கிற விளக்கத்தை வெளியிட்டு உள்ளது.....
மேகி நூடூல்ஸ்க்கும் ..மேக் இன் இந்தியா லோகோ சர்ச்சைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றே நம்புவோமாக
இதையெல்லாம் தாண்டி ...நான் பெப்சி, கோக் குடித்து 13 ஆண்டுகள் ஆகிறது ..மேகி நூடூல்ஸ் மட்டுமல்ல எந்த நூடூல்சையும் வாங்குவதை நிறுத்தி 4 ஆண்டுகள் ஆகிறது ...இடியாப்பம் மட்டுமே நாங்கள் சாப்பிடும் நூடூல்ஸ்
மேலிருந்து போடுவதுதான் தடை....கீழிருந்து நாமே செய்வது கட்டுப்பாடு ...கட்டுப்பாட்டின் மூலமே ..இத்தகைய தேவையற்ற உணவை நாம் ஒதுக்கி தள்ள முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து ..

கடல் அலையை பார்த்து நடனம் ஆடியவரின் கதியை பாருங்கள்

Posted: 04 Jun 2015 01:18 AM PDT

கடல் அலையை பார்த்து நடனம் ஆடியவரின் கதியை பாருங்கள்


கடல் அலையை பார்த்து நடனம் ஆடியவரின் கதியை பாருங்கள்
www.indiasian.com
china beach site girl and boy dance

எத்தனை பெற்றும் ஏது கண்டாள்..?

Posted: 04 Jun 2015 12:49 AM PDT

எத்தனை பெற்றும் ஏது கண்டாள்..?