Monday, 16 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லி...

Posted: 16 Mar 2015 08:44 AM PDT

ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை "தீவிரவாதம்" "தீவிரவாதம்" என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே…!

■ கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?

■ ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.

■ பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்…. உங்கள் ஜனநாயகமா?

■ மட்டக்களப்பில் வயதிற்கு வந்து ஒரு வாரமே ஆன பதின்மூன்று வயதுச் சிறுமி புனிதவதியை ஏழு சிங்கள இராணுவ காட்டுமிராண்டிப் படைகள் தாயின் முன்னே கதறக் கதற கற்பழித்து அந்தச் சிறுமியை சித்தப் பிரமையாக்கியதுதான்…. உங்கள் ஜனநாயகமா?

■ இதேபோல் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருசாந்தியை கற்பழித்துக் கொன்று புதைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?

■ சமாதான காலத்திலே மன்னார் வங்காலையில் அதிகாலை ஒரு வீட்டிற்குள் புகுந்த சிங்களக் காட்டுமிராண்டிப் படைகள் அங்கே குடும்பத்தோடு தூங்கிக் கொண்டிருந்த இளம் தாயை கற்பழித்துக் கொன்று விட்டு, தந்தையையும் கொலை செய்து விட்டு, அவர்களின் இரண்டு பிஞ்சுப் பாலகர்களையும் உயிரோடு தூக்குக் கயிற்றிலே தொங்க விட்டு கொலை செய்வதுதான்….. உங்கள் ஜனநாயகமா?

■ வள்ளிபுனத்திலே 53 செஞ்சோலை பாடசாலைப் பிஞ்சுகளை வானத்தில் இருந்து விமான மூலம் குறி தவறாமல் வேண்டுமென்றே குண்டு வீசி சதைப் பிண்டங்களாக… துண்டு துண்டுகளாக சிதைத்துக் கொன்று குவித்து இரத்தத்தில் குளிக்க வைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?

■ சுற்றிவளைப்பு என்ற பெயரில் சிங்களப் படைகள் கிராமங்களுக்குள் புகுந்து பல பெண்களின் கற்பை சூறையாடி அவர்களின் உயிர்ப்பையினை நிரப்பி… அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளைக் கொடுத்தும், பருவமாகத பள்ளிச் சிட்டுக்கள் முதல் பால் மடி வற்றிப்போன வயதான பெண்கள் வரை காமக்குருடர்கள் போல் அவர்களைப் பிடித்து கூட்டத்தோடு தெரு நாய்களைப்போல் மாறிமாறி கற்பழித்து கொன்று விட்டு மலசல கழிவுத் தொட்டிகளுக்குள்ளும், பாழாங் கிணறுகளுக்குள்ளும் மூழ்கடித்து முகவரி தெரியாமல் அழித்துத் தொலைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?

■ வல்வைப் படுகொலைகள் , சாவகச்சேரிப் படுகொலைகள், அளவெட்டிப் படுகொலைகள், அல்லைப்பிட்டிப் படுகொலைகள், மண்டைதீவுப் படுகொலைகள், குமுதினிப்படகுப் படுகொலைகள், சத்துருக்கொண்டான் டிப்போ படுகொலைகள், நவாலிப் படுகொலைகள், நாகர்கோவில் பாடசாலை படுகொலைகள், பொத்துவில் படுகொலைகள், கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், சம்பூர் படுகொலைகள், வீரமுனைப் படுகொலைகள் மற்றும் கிழக்கு மாகாணப் படுகொலைகள் என்று எண்ணற்ற படுகொலைகளை ஊர் ஊராக… கிராமம் கிராமமாக… தெருத் தெருவாக தமிழர்களைப் பிடித்து துடிக்கத் துடிக்க கொன்று குவித்து மண்ணுக்குள் உரமாக்கியதுதான்… உங்கள் ஜனநாயகமா?

■ உயிரற்ற உடலைக்கூட விட்டு வைக்காமல் கற்பழித்து விட்டு, பின் அந்த உயிரற்ற உடலின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டியும், சிதைத்தும் அலங்கோலமாக்குவதுதான்….. உங்கள் ஜனநாயகமா?

■ இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து எரிகுண்டுகளையும், நச்சுக் குண்டுகளையும் போட்டு கூண்டோடு துடிக்கத் துடிக்க கொன்று குவிப்பதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.

■ உயிரைப் பாதுகாக்க பதுங்கு குழிக்குள் ஒழிந்தவர்களையும், இந்த உலகை பார்க்கும் முன்னே தாயின் கருவறைக்குள் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று புதைப்பதுதான்….. உங்கள் ஜனநாயகமா?

■ இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து மூடி மறைத்தும்… பெண்களை கூட்டத்தோடு கற்பழித்து, சிலரை கொலை செய்தும், வேறு பலரை கட்டாய விபச்சாரியாக்கி விலை பேசி விற்றுத் தீர்த்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?

■ கைது செய்து கொலை செய்த ஆண்களின் மனைவிமாரிடம், அவர்கள் கணவர்மார்கள் உயிரோடு இருப்பதாக அவர்களின் பெயரைச் சொல்லி இன்றும் கூட காமவித்தைகளை அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?

■ ஈழத்தமிழன் ஒழிந்துகொள்ள இடமேதுமில்லாமல் அலைந்து அலைந்து இறுதியில் நிராயுதபாணிகளாக அரச படைகளிடம் அடைக்கலமாக அவர்களை வயது வித்தியாசமின்றி கொன்று குவித்து களைத்துப் போய் முடியாமல் காயப்பட்டவர்களையும், கையில் அகப்பட்டவர்களையும் செத்த பாம்பினைப் போல் கைகளைக் கட்டி வரிசையாக தெருக்களில் விறகுபோல் அடுக்கி வைத்து கவச வாகனங்களால் மிதித்து துடிக்கத் துடிக்க சாகடித்தீர்களே…. இதுதான் உங்கள் ஜனநாயகமா?

இப்படியாக…..........

மேலும் படிக்க: http://eelavidiyal.com/…/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE…/


ஈரோடு மஞ்சள்!! மஞ்சள் விலையை இந்திய அளவில் தீர்மானிக்கும் ஊர் எது தெரியுமா? நம்...

Posted: 16 Mar 2015 05:47 AM PDT

ஈரோடு மஞ்சள்!!

மஞ்சள் விலையை இந்திய அளவில் தீர்மானிக்கும் ஊர் எது தெரியுமா? நம்ம ஈரோடுதான். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிக அளவில் விளைவதால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்றே பெயர். இந்தியாவில் உற்பத்தியாகின்ற மஞ்சளில் 23 சதவிகித மஞ்சள் இங்குதான் உற்பத்தியாகிறதாம். எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் மொத்த வியாபாரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈரோடு மார்க்கெட்டைத்தான் நம்பி இருக்கின்றனர். தமிழகத்தைவிட ஆந்திராவில் மஞ்சள் உற்பத்தி அதிக அளவில் இருந்தாலும், ஈரோட்டில்தான் மஞ்சளுக்கான விலை நிர்ணயம் நடக்கிறது. அதற்குக் காரணம் வெளி மாநிலங்களிலிருந்தும் இங்குள்ள மஞ்சள் சந்தைக்கு மஞ்சள் வரத்து இருப்பதுதான். ஈரோட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் சார்ந்த பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு நிறம் அடர்த்தியாக இருப்பதால் எப்போதுமே ஈரோட்டு மஞ்சளுக்கு மவுசு அதிகம். ஈரோட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மஞ்சள் மார்கெட் நடைபெற்று வருகிறது. இந்த மார்க்கெட் மூலமே விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் மற்றும் இதர விவசாய பொருட்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது.

ஈரோடு நுழையும் முன்னரே மஞ்சள் செடி வயல்கள் உங்களை வரவேற்க ஆரம்பித்து விடும். ஈரோட்டில் கீழ்பவானி பாசனம் பாயக்கூடிய கோபிசெட்டிபாளையம், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் இருந்து தான் அதிகளவில் மஞ்சள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பெரும் மஞ்சள் பயிர்களுக்கு இடையில் சென்று நிற்கும்போதே அங்கு மஞ்சள் வாடை அடிக்கிறது. சிறிது தூரத்தில் மஞ்சள் செடிகளுக்கு பாத்தி கட்டி கொண்டு இருந்ததை பார்த்து அவரின் அருகினில் சென்று பேசும்போதுதான் குளிக்கும் மஞ்சள் என்பது சம்பா மஞ்சள் என்றும், பெரும்பாலான மஞ்சள் மருந்து தயாரிக்கும் கம்பெனிக்கும், பெயிண்ட் தயாரிக்கும் கம்பெனிக்கும் செல்வது. முகத்தில் தேய்த்து குளிக்கும் மஞ்சள் செடி என்பது இரண்டு அல்லது மூன்றடி உயரம் மட்டுமே இருக்குமாம்.

பொதுவாக மஞ்சளில் மூன்று வகை உண்டு முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் அல்லது சம்பா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும். ஆனா‌ல் இதனை சரும‌த்‌தி‌ல் பூ‌சினா‌ல் ‌நிற‌த்தை‌த் தராது. ஆனா‌ல் ந‌ல்ல மரு‌த்துவ குண‌ம் கொ‌ண்டது. மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான். இதை‌த்தா‌ன் நா‌ம் சமையலு‌க்கு‌ப் பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம்.


'புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்' என்று மக்களுக்கு அறிவுரை கூறி, அவர்களை,...

Posted: 16 Mar 2015 04:45 AM PDT

'புகைப்பிடித்தல்
புற்றுநோயை உண்டாக்கும்'
என்று மக்களுக்கு அறிவுரை கூறி,
அவர்களை,
எப்பாடு பட்டாவது காப்பாற்ற
வேண்டுமென்று நினைக்கும்
'அதே' அரசாங்கம்,
மூடிட்டு அதை தடை செய்யலாமே??

அழகு ஓவியம்!

Posted: 16 Mar 2015 04:12 AM PDT

அழகு ஓவியம்!


என்றாவது என் செல்போன் விலையோ, சட்டை விலையோ அப்பாவிற்கு தெரிந்தால் ஒருரூவாய் மிச்...

Posted: 16 Mar 2015 03:41 AM PDT

என்றாவது என்
செல்போன்
விலையோ, சட்டை விலையோ அப்பாவிற்கு தெரிந்தால்
ஒருரூவாய் மிச்சம்
செய்து அவர் வாழ்ந்த
வாழ்க்கை கண்முன்
வந்துப்போகும்!

@Settusays

திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்கு...

Posted: 16 Mar 2015 12:44 AM PDT

திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத் தான் இப்போ பாக்கப் போறோம்.

1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி.

2. கல்யான வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும். அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா.

3. ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இருப்பான். அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டுருப்பாரு.

4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது உடியாருறது வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது இறங்குறதுன்னுரொம்ப ஆக்டிவா ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான். அவந்தான் மாப்ளையோட தம்பி. ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான்.

5. மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான். அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். மொதநாள் நைட்டு பேச்சிலர் பார்ட்டில மூச்சுத் தெணறத் தெணறக் குடிச்சவனும் அவனாத்தான் இருக்கும்

6. கல்யாணம்5 முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, "இய்ய்ய்யாய்…எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது.." ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பான். அவனை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவன உள்ள கூப்டாங்கன்னா அவன் தான் மாப்ளையோட தாய் மாமன். பத்து மணி கல்யானத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு. ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம் தான் நடக்கனும்னு வேற எதிர்பாப்பாறு. அப்போ அவனப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும்.

7. கூட்டத்துல உக்காந்துருக்க எல்லாரும் "எப்பப்பா… கல்யாணம் முடியும்.. எப்பப்பா சோறு போடுவாய்ங்க" ன்னு ஒரே ஆவலோட உக்கார்ந்திருக்கும்போது, ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும். அப்டி இருந்தா. அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும், அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம்.

8. மேமாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உக்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், "வாங்க வாங்க.. சாப்டு போங்க" ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா.

9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காய்ங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா, திருட்டுப்பய நகைய கவ்வ போறப்போ பாக்குற மாதிரி ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும். அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாகிதிகமா நகையப் போட்டுவிட்டு நம்மள டம்மி ஆக்கிறப்போறாய்ங்களோங்குற பீதியிலயே இருக்கும்.

10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும். அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரய்ங்க.

11.கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போண மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க. அவிங்க வேற யாரும் இல்லை.மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வர்றாய்ங்கன்னு அர்த்தம்.

12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young, Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிகிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க. அவனும் வேற யாரும் இல்லை. மாப்பிளையோட மச்சான்..


The Department of Archaeology has recovered artefacts of Megalithic (iron-age) b...

Posted: 15 Mar 2015 10:11 PM PDT

The Department of Archaeology has recovered artefacts of Megalithic (iron-age) burial site, datable to circa 1000 BC, at Sengamadai village near RS Mangalam in Ramanathapuram district.

Curator of Ramalinga Vilasam Palace K. Sakthivel, and convenor of Tiruppullani Heritage Club V. Rajaguru recovered the artefacts from the deposit site of the temple tank at the village while undertaking a field survey.

Displaying the artefacts – red ware, black ware, red and black ware, parts of burial urns, decorated red ware, potsherds, remnants of ring stand and iron ore – to reporters here recently, Mr. Sakthivel said the recovery revealed that a King of Ramanathapuram had built a fort at the burial site about 300 years ago.

He said the villagers had desilted the tank about three years ago and the artefacts were found scattered on the bank of the tank. "Burial urns are also found inside the tank and this is the first time that parts of burial urns are recovered in the district," he said.

During the iron-age also, there were separate residential and burial sites and the residential site could be located if the Archaeological Survey of India (ASI) conducted an excavation, he said.

An excavation at Sengamadai was worth it as it appeared to belong to the Megalithic or Iron-age period, he added.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/burial-urns-found-in-village-near-ramanathapuram/article6980360.ece

மாவட்டத்தில் முதல்முறையாக 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு பெருங்கற்காலத்தை சேர்ந்தவை: தொல்லியல் வல்லுநர்கள் கணிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை பெருங்கற்காலத்தை சேர்ந்தவை என தொல்லியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை கி.பி 1711-25களில் ஆண்ட விஜய ரகுநாத சேதுபதி, பிரஞ்சு தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு 2 கோட்டைகளை கட்டினார். இதில் கமுதிக் கோட்டை தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. மற்றொரு கோட்டை ராமநாதபுரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கிராமத்தில் உள்ளது. இக்கோட்டையின் நடுவில் முனீஸ்வரர், கருப்பசாமி கோயிலும் ஒரு குளமும் உள்ளன. இந்த குளத்தில் ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனை காப்பாட்சியர் சக்திவேல், திருப்புல்லாணி எஸ்.எஸ்.ஏ.எம். அரசு மேல்நிலைப் பள்ளி தொன் மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர் ராஜகுரு ஆகி யோர், ஆய்வு செய்தனர்.

அப்போது கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள், மண் குவளைகள், குவளைத் தாங்கிகள், இரும்பின் மூலப்பொருள் ஆகியவற்றை கண்டுபிடித்தனர். மேலும் குளத்தின் உள் பகுதியில் முழுமையாகவும், சிதைந்த நிலையிலும் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.

இவை சங்க காலத்திற்கு முந்தைய 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தை சார்ந்தவை என தொல்லியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள தடயங்கள் மூலம் செங்கமடை கோட்டை பகுதியானது சுடுகாடாக இருந்தது தெரியவருகிறது. ராமலிங்க விலாசம் அரண்மனை காப்பாட்சியர் சக்திவேல், தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் ராஜகுரு கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுமக்கள் தாழி கிடைப்பது இதுவே முதல்முறை. இவை பெருங்கற்காலத்தை சேர்ந்தவை. தொல்லியல் துறையினர் முழு அகழாய்வு மேற்கொண்டால் இதன் முழு வரலாறும் தெரியவரும் என்றனர்.

http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=434281

http://www.dinamalar.com/news_detail.asp?id=1200037&Print=1


தமிழீழ மக்களுக்கு நலத்திட்டங்களை இந்திய அரசு செய்வதாக பெருமிதம் கொள்கிறார்கள் ,...

Posted: 15 Mar 2015 09:36 PM PDT

தமிழீழ மக்களுக்கு நலத்திட்டங்களை இந்திய அரசு செய்வதாக பெருமிதம் கொள்கிறார்கள் , தமிழீழ மக்களுக்கு குடியிருக்க தரமான வீடுகள் கட்டித் தருவது அவசியமானதுதான் ஆனால் இவர்கள் வீடு கட்டித் தருவதற்கு முன்பு தமிழீழ மக்கள் காடுகளிலா வாழ்ந்தார்கள் , நாகரீகமான தன்னிறைவு அடைந்த தமிழீழ மக்களின் நாட்டை, அவர்களின் வாழ்வாதாரத்தை குடியிருப்புகளை அழித்த அயோக்கியர்கள் யார், அழிக்க ஆயுதங்களை கொடுத்த குற்றவாளிகள் யார் யார் என்று விசாரணை நடத்தி அயோக்கியர்களை குற்றவாளிகளை தண்டிப்பதை நோக்கமாக கொண்டவர்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதுதான் நேர்மையானது...

வீட்டை இடிச்சவனும் ஆயுதம் கொடுத்தவனும் தங்கள் குற்றத்தை மறைத்து நல்லவன் வேடம் போடுறதும் அதையும் சிலர் நம்புவதும் தமிழர் விடயத்தில் மட்டும்தான் நடக்கும்...

@பிரபு போசு

:P

Posted: 15 Mar 2015 09:33 PM PDT

:P


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


பரிணாமம் - பரிமாணம் ஒரேயொரு எழுத்துதான் வித்தியாசம்... ஆனால் பொருள் வேறுபடுகிற...

Posted: 16 Mar 2015 08:28 AM PDT

பரிணாமம் - பரிமாணம்

ஒரேயொரு எழுத்துதான் வித்தியாசம்... ஆனால் பொருள் வேறுபடுகிறது ... இது போன்று அமைந்த சொற்கள் உங்களுக்குத் தெரியுமா???

பகிருங்கள் உங்கள் அறிவை பிறரும் பின்பற்றட்டும்...

பா விவேக்

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்: இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பற்றி உங்களுக்குத் தெரிந...

Posted: 16 Mar 2015 06:20 AM PDT

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்:

இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த பெருமைகளையும், தகவல்களையும் பகிர்ந்துகொள்ளவும். உங்களின் கருத்துக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு முழுப்பதிவாக இணையதளத்தில் வெளியிடப்படும்.

பா விவேக்


இறந்தும் உயிர்வாழும் அன்பும் உலகில் உண்டு... பா விவேக்

Posted: 15 Mar 2015 09:57 PM PDT

இறந்தும் உயிர்வாழும் அன்பும் உலகில் உண்டு...

பா விவேக்


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 16 Mar 2015 05:28 AM PDT


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Thala :'(

Posted: 16 Mar 2015 06:08 AM PDT

Thala :'(


Nice Klick my Friend Arun

Posted: 16 Mar 2015 12:52 AM PDT

Nice Klick my Friend Arun


நான் ஆசைப்படுவது ஏதும் கிடைப்பதில்லை என்பதால் வாழ ஆசைப்படுகிறேன்...

Posted: 16 Mar 2015 12:51 AM PDT

நான் ஆசைப்படுவது ஏதும் கிடைப்பதில்லை என்பதால் வாழ ஆசைப்படுகிறேன்...

Hear & Enjoy it

Posted: 16 Mar 2015 12:49 AM PDT

Hear & Enjoy it


:)

Posted: 16 Mar 2015 12:11 AM PDT

:)


Posted: 15 Mar 2015 11:15 PM PDT


:)

Posted: 15 Mar 2015 09:49 PM PDT

:)


Good morning frnds

Posted: 15 Mar 2015 08:05 PM PDT

Good morning frnds


That's the real hard work .. Hats off siva

Posted: 15 Mar 2015 11:05 AM PDT

That's the real hard work .. Hats off siva


Posted: 15 Mar 2015 10:48 AM PDT


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


மன்னித்ததை பகிரங்கப்படுத்துவதை விட தண்டித்தே தொலையுங்கள்... வலி குறைவுதான் Via...

Posted: 16 Mar 2015 09:13 AM PDT

மன்னித்ததை பகிரங்கப்படுத்துவதை விட தண்டித்தே தொலையுங்கள்... வலி குறைவுதான்

Via #Sowmya

இப்போதெல்லாம் மனிதனிடம் மனித்தன்மையாக நடந்து கொள்வதையே அதிசயமாய் பார்க்கும் மனநி...

Posted: 16 Mar 2015 09:11 AM PDT

இப்போதெல்லாம் மனிதனிடம் மனித்தன்மையாக நடந்து கொள்வதையே அதிசயமாய் பார்க்கும் மனநிலைக்கு அனைவரும் வந்து விட்டோம் !! 𾰟𾰟𾰟

Via Mahe

நாய் மாதிரி அலைஞ்சா அவன் ஏழை..! நாயோட அலைஞ்சா அவன் பணக்காரன்...! Via #KeethaJ

Posted: 15 Mar 2015 05:52 PM PDT

நாய் மாதிரி அலைஞ்சா அவன் ஏழை..!
நாயோட அலைஞ்சா அவன் பணக்காரன்...!

Via #KeethaJ

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அண்ணே! இந்த "நிலம் கையகப்படுத்தல்"ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னண்ணே ? அடேய்...

Posted: 16 Mar 2015 09:00 AM PDT

அண்ணே! இந்த "நிலம் கையகப்படுத்தல்"ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னண்ணே ?

அடேய்! உன் நிலத்தை உனக்கிட்ட கேக்காமலே எடுத்துக்கிறதுடா.

அண்ணே! அதுக்கு பேரு திருட்டுண்ணே.

அட பேரிக்காய் மண்டையா! நீயோ நானோ எடுத்தாத்தேன் அது திருட்டு. அதையே பதவியில இருந்து எடுத்தா, அதுக்குப் பேரு வளர்ச்சி திட்டம்டா..

நம்ம விவசாயம் பண்ணி பொழச்ச பூமிய விட்டுட்டு நாம என்னண்ணே பன்றது?

நிலத்தை எடுத்துக்கிற கம்பனில வேலைக்கி சேர வேண்டியதுதான்.

இது என்னண்ணே அநியாயமா இருக்கு. வெள்ளக்காரன் கூட நிலத்துக்கு வரிதான் கேட்டான். ஆனால், இவிங்க நிலத்தையே எடுக்குறாங்க.

உனக்கு தெரியுது. மக்களுக்கு தெரிய மாட்டேங்குதே..

- குரா தாஸ்

Relaxplzz


அப்பாக்களை இழந்த மகள்களுக்கு மட்டுமே தெரியும், உலகம் பாதுகாப்பற்றது என்று.. #பபி

Posted: 16 Mar 2015 08:50 AM PDT

அப்பாக்களை இழந்த மகள்களுக்கு மட்டுமே தெரியும், உலகம் பாதுகாப்பற்றது என்று..

#பபி


மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்! ஆசிரியர் :...

Posted: 16 Mar 2015 08:45 AM PDT

மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட
மறதிதான் சார் காரணம்!

ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!

மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

ஆசிரியர் : ???? :O :O

வெற்றியடைய இவர் தேவையில்லை. தோல்வியடையாமல் இருக்க இவர் கண்டிப்பாக தேவை. - Ambuj...

Posted: 16 Mar 2015 08:40 AM PDT

வெற்றியடைய இவர் தேவையில்லை. தோல்வியடையாமல் இருக்க இவர் கண்டிப்பாக தேவை.

- Ambuja Simi


:) Relaxplzz

Posted: 16 Mar 2015 08:33 AM PDT

:D Relaxplzz

Posted: 16 Mar 2015 08:24 AM PDT

:) Relaxplzz

Posted: 16 Mar 2015 08:17 AM PDT

புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே! அப்பா சில புத்தமதிகளைச் சொல்லுறேன் கேளு முன...

Posted: 16 Mar 2015 08:10 AM PDT

புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே! அப்பா சில புத்தமதிகளைச் சொல்லுறேன் கேளு முன்னே!

1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா...என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் க்ரீடமும் , என் அப்பாதான் 'பெஸ்ட்' என்ற எண்ணமும் உன் மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள். வார்த்தைகளில் வெளிப்படுத்தி 'உன்னவரின்' மனதில் எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை.உன் கணவரிடம், "என் அப்பா நேரம் தவற மாட்டார்"," என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்" என்று அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா. உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி வரை தூங்கிய சோம்பேரி தான்.

2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல், உன் கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே. என் வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன் மீதான கண்மூடித்தனமான பாசமும் என் கோபங்களை கண் மறைத்திருக்கலாம்.அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம் கொடு. முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி, அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.

3.சிறு சிறு வாக்குவாதங்கள்,கருத்து வேறுபாடு உங்கள் இருவருக்குள்ளும் வர தான் செய்யும்.அச்சமயங்களில் எல்லாம், "நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன் "," எனக்கு என் அப்பா இருக்கிறார் " என்ற வசனங்களை பேசி உன் மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே.உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை அவருக்கு புரிய வை.நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும்,மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம் போட்டு உட்கார வைக்கும்.
சுருக்கமாக கூற வேண்டுமானால்.... *அப்பா புராணம் பாடாதே. *அப்பாவோடு ஒப்பிடாதே . *'அப்பா செல்லம் ' என்ற பட்டம் பயன் தராது . *அப்பாக்கு கொடுத்த க்ரீடத்தை அவருக்கும் கொடு.

22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனிமேல் உன் கணவரின் கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.
நீடுடி வாழ வாழ்த்துகள்....!

-அன்புடன் அப்பா.

(y) (y)

Relaxplzz

தலைகீழ் பரிணாமங்கள்... ஓடித் திரிவதை விட்டுவிட்டு வாக்கிங் வரப் பழகிவிட்ட நாய்க...

Posted: 16 Mar 2015 07:59 AM PDT

தலைகீழ் பரிணாமங்கள்...

ஓடித் திரிவதை விட்டுவிட்டு
வாக்கிங் வரப் பழகிவிட்ட நாய்கள்...

பெருமரம் முறிக்கும் யானைகள்
பிச்சையெடுக்கப் பழகி விட்டன...

அடுத்தவரின் நல்லநேரத்திற்காக
சீட்டெடுக்கும் கூண்டுக் கிளிகள்...

சீவிச் சிங்காரித்தபின்
மணமக்களைச் சுமக்கும் குதிரைகள்...

பால் மட்டும் அருந்தி
சைவத்திற்கு மாறிவிட்ட பூனைகள்...

பிராணி வதைக்கெதிராய்
குரல் கொடுக்கப் பழகிய மனிதர்கள்...

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்


"மனம் தொட்ட வரிகள்" - 2

எவ்ளோ பெருமையா இருக்கி...... எல்லாம் போக்குவரத்து துறை அமைச்சருக்கு சமர்ப்பனம்

Posted: 16 Mar 2015 07:50 AM PDT

எவ்ளோ பெருமையா இருக்கி......

எல்லாம் போக்குவரத்து துறை அமைச்சருக்கு சமர்ப்பனம்


வெளிநாடுகளில் ஓடிட்டு இருக்குற ரெண்டு பஸ்க்கு நடுவுல கூட நுழையலாம் ..... நம்ம இ...

Posted: 16 Mar 2015 07:45 AM PDT

வெளிநாடுகளில் ஓடிட்டு இருக்குற ரெண்டு பஸ்க்கு நடுவுல கூட நுழையலாம் .....

நம்ம இந்தியாவுல நின்னுட்டு இருக்குற ரெண்டு பஸ்க்கு நடுவுல நுழையறதுதான் ரிஸ்க் அதிகம் ...
சரமாரியாக எச்சி துப்புவாங்க ...

- Ashok kumar

இட்லி மட்டன் குழம்பு காம்பினேஷன் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 16 Mar 2015 07:41 AM PDT

இட்லி மட்டன் குழம்பு காம்பினேஷன் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 16 Mar 2015 07:30 AM PDT

:p Relaxplzz

Posted: 16 Mar 2015 07:21 AM PDT

அண்ணன் பிரபாகரன் அவர்கள் இளம் வயதில்... அரிய புகைப்படம்

Posted: 16 Mar 2015 07:16 AM PDT

அண்ணன் பிரபாகரன் அவர்கள் இளம் வயதில்... அரிய புகைப்படம்


"அரிய புகைப்படங்கள்"

;-) Relaxplzz

Posted: 16 Mar 2015 07:06 AM PDT

மனைவி அமைவதெல்லாம் (திருமண நாள் பதிவு ) திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண...

Posted: 16 Mar 2015 06:50 AM PDT

மனைவி அமைவதெல்லாம் (திருமண நாள் பதிவு )

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .

ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.

கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.

புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?

இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!

எந்த புக்கும் படிச்சது இல்லையா ?

ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!

இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?

நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!

எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!

எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .

ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!

இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?

எதுக்கு வாங்குனீங்க..?

இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?

எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!

(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )

யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!

இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?

ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!

உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!

அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?

சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?

யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?

எஸ் .ஜானகியை கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!

என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .

ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்

இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .

கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.

மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா

நானும் அவளிடம் கேட்கிறேன்

உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு

அதெல்லாம் ஒன்னும் வேணாம்

இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்

பிடிக்குமென சிலதை சொல்ல

முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.

இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?

ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.

அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.

நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .

நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.

இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.

குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .

தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .

வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!

சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!

சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .

இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!

ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்

ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!

தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..! ;-)

- தமிழ் அமுதன்

Relaxplzz


நெகிழ வைத்த நிஜங்கள் - 2

காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன்?" "ஏன்? * * *...

Posted: 16 Mar 2015 06:45 AM PDT

காக்காவுக்குப் பயங்கரக் கடன்.
உடனே தன்னோட
குஞ்சை அடகு வச்சுது.
ஏன்?" "ஏன்?
*
*
*
*
*
*
*
*
"காக்கைக்குத் தன் குஞ்சு பொன்
குஞ்சாச்சே

:) Relaxplzz

Posted: 16 Mar 2015 06:41 AM PDT

:) Relaxplzz

Posted: 16 Mar 2015 06:32 AM PDT

:) Relaxplzz

Posted: 16 Mar 2015 06:23 AM PDT

டெல்லி மக்கள் அன்னா ஹஸாரேவுக்கு அவ்வளவு சப்போர்ட் பண்ணும்போது, நாம் ஏன் டிராபிக்...

Posted: 16 Mar 2015 06:17 AM PDT

டெல்லி மக்கள் அன்னா ஹஸாரேவுக்கு அவ்வளவு சப்போர்ட் பண்ணும்போது, நாம் ஏன் டிராபிக் ராமசாமிக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணக்கூடாது..

#WeStandWithTrafficRamasamy

(y) (y)

தமிழன்டா (y) 36ரூபாய் செலவு செய்தால் bike-இல் 400KM பயணம் செய்யலாம் சிவகங்கை மா...

Posted: 16 Mar 2015 06:09 AM PDT

தமிழன்டா (y)
36ரூபாய் செலவு செய்தால் bike-இல் 400KM பயணம் செய்யலாம் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவனின் புதிய கண்டுபிடிப்பு



:) Relaxplzz

Posted: 16 Mar 2015 06:06 AM PDT

கண்களை மூடி கடவுளைக் கும்பிடும் குழந்தையின் முகத்தில் சில சமயத்தில் தோன்றுது பார...

Posted: 16 Mar 2015 06:01 AM PDT

கண்களை மூடி கடவுளைக் கும்பிடும் குழந்தையின் முகத்தில் சில சமயத்தில் தோன்றுது பாருங்கள் ஒரு புன்னகை. அது கடவுளுக்கு கிடைத்த வரம்.!

- minimeens


"ரசனை துளிகள்" - 2

:) Relaxplzz

Posted: 16 Mar 2015 05:53 AM PDT

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம்கூட சுகமாகும் இப்பாடல் கவிஞரை பிட...

Posted: 16 Mar 2015 05:45 AM PDT

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம்கூட சுகமாகும்

இப்பாடல் கவிஞரை பிடித்துகொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும்,சோகம் சுகமாகுமாம்ல! :O

- gurussiva

தூக்கி எறியும் பாட்டில் மூடிகளில் உருவான அருமையான ஓவியம்... பிடித்தவர்கள் லைக்...

Posted: 16 Mar 2015 05:40 AM PDT

தூக்கி எறியும் பாட்டில் மூடிகளில் உருவான அருமையான ஓவியம்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 16 Mar 2015 05:29 AM PDT

:P Relaxplzz

Posted: 16 Mar 2015 05:20 AM PDT