Monday, 29 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


இவரு தான் இன்னைக்கு ராஜபக்சேவை பேட்டி எடுத்தவரு... முன்னாடி மக்கள் டிவியில் 'செ...

Posted: 29 Dec 2014 08:31 PM PST

இவரு தான்
இன்னைக்கு ராஜபக்சேவை பேட்டி எடுத்தவரு...

முன்னாடி மக்கள்
டிவியில் 'செல்லப்
பிராணிகள்'ன்னு அந்த
நாயை வச்சு ஒரு நிகழ்ச்சி நடத்துனாரு,
இன்னைக்கு இந்த
நாயை வச்சு நிகழ்ச்சி நடத்துறாரு..

@பூபதி


Posted: 29 Dec 2014 05:51 PM PST


மழை உன்னை நினைவுபடுத்துகிறது.. குளிர் உன்னை நினைத்துப் படுத்துகிறது..! @காளிமு...

Posted: 29 Dec 2014 10:14 AM PST

மழை உன்னை நினைவுபடுத்துகிறது..

குளிர்
உன்னை நினைத்துப்
படுத்துகிறது..!

@காளிமுத்து

வாஜ்பாயை விட வி.பி.சிங் யாருடைய கண்களுக்கும் நல்லவராக தெரியாமல் போனது கொஞ்சம் வி...

Posted: 29 Dec 2014 07:58 AM PST

வாஜ்பாயை விட வி.பி.சிங் யாருடைய கண்களுக்கும் நல்லவராக தெரியாமல் போனது கொஞ்சம் விந்தைதான். பெரிய மன்னர் குடும்பத்தில் பிறந்து தன்னுடைய சொத்துகளை எல்லாம் பூமி தான இயக்கத்திற்கு தானம் செய்துவிட்டு ஏழைகளுக்கு சேவை செய்ய வந்தது அவருக்கு தேவையில்லாத வேலைதான்.

காங்கிரஸ் அல்லாத ஒரு மந்திரி சபை அமைத்து காட்டி சாதனை படைத்தவர் என்று சொன்னால் யாருக்கு தெரிய போகிறது?

மண்டல் கமிஷனை அறிமுகப்படுத்தி பிற்படுத்தப்பட்டோர் என்று திரியும் நடுத்தர வர்க்கத்தை அரசு வேலைகளில் வர வைத்தவர் என்பதயெல்லாம் யாருக்கு தெரியும்?

யாரோ மாளவியாவாம்! ஏதோ பாரத் ரத்னா விருதாம்! தர போறாங்களாம்! தரட்டும்.

@வெங்கடேசன் பாலகிருஷ்ணன்

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காப்பீட்டு துறையில் அன்னிய முதலீடு கூடாது என்று பார்லி...

Posted: 29 Dec 2014 06:58 AM PST

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காப்பீட்டு துறையில் அன்னிய முதலீடு கூடாது என்று பார்லிமெண்டில் கும்பல் சேர்ந்து மசோதாகளை கிழித்தவர்கள் சாட்சாத் இதே பாஜகதான். சுதேசி கொள்கையில் இருந்து நழுவ மாட்டோம் என்று உரக்க பேசுவோரும் இதே பாஜக தான்.

இன்று காப்பீட்டு துறையில் அன்னிய முதலீட்டை அனுமதி அளிப்பதும் இதே பாஜகதான். நாட்டின் மிகப்பெரிய பொது துறை நிறுவனமான எல்ஐசி யை ஒழித்து கட்ட முடிவு செய்துவிட்டார்கள்.

வரப்போகின்ற வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் கவர்ச்சிகளை அள்ளிவீசி மக்கள் பணத்தை சுருட்ட போவது உறுதி.

@வெங்கடேசன் பாலகிருஷ்ணன்

மதத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் அரசு இயங்கினால் அந்த நாட்டில் வாழும் மக்கள் எ...

Posted: 29 Dec 2014 05:26 AM PST

மதத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் அரசு இயங்கினால் அந்த நாட்டில் வாழும் மக்கள் எவ்வளவு சீரழிவிற்கு உள்ளாவார்கள் என்பதற்கு "இலங்கையும்,பாகிஸ்தானும்" நம் கண்முன் சாட்சியாக இருக்கின்றன.

இலங்கையில் பௌத்தம் தான் மத்திய அரசின் மதம். பௌத்தத்தை கடைபிடிக்கும் சிங்கள இனம் தமிழினத்தையே கொன்றழித்தது.

பாகிஸ்தானில் இஸ்லாம் தான் மத்திய அரசின் மதம்.அங்கே பெரும்பான்மை மக்கள் இஸ்லாத்தை கடைபிடிப்பவர்கள். தான்.ஆனாலும் அவர்களுக்குள்ளேயும் பிளவு வந்தது.

"எங்களின் மொழியை அரசு புறக்கணிக்கிறது" என்று சொல்லி "வங்காள மொழி" பேச கூடிய மக்கள் போராடி "வங்காள தேசம்" கண்டார்கள்.

"எப்போது வேண்டுமானாலும் குண்டு வெடிக்கலாம், கொல்லப்படலாம்" நிலையில் தான் பாகிஸ்தானில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

எல்லாம் அறிந்தும் இந்தியாவில் "இந்துத்துவ" கொள்கையை மிக தீவிரமாக செயலபடுத்த இந்திய மோடி அரசு திட்டமிடுகிறது.இந்திய அரசு "இந்து" மத கொள்கைகளை பின்பற்றி நடந்தால்

இந்தியாவிலும் இனப்படுகொலைகள் நடக்கும்,மக்கள் நிம்மதியிழந்து வாழ்வார்கள்.

பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசம் உருவானது போல்
இந்தியாவிலிருந்தும் மொழி அடிப்படையில் பல நாடுகள் உருவாகும்.....!

@நல்ல சிவம்


இந்தியை தவிர வேறு எந்த மொழியையும் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக அறிவிக்க முடியாது...

Posted: 29 Dec 2014 04:59 AM PST

இந்தியை தவிர வேறு எந்த மொழியையும் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக அறிவிக்க முடியாது - பாஜக அரசு .

அப்படி என்றால் இந்தி பேசாத பகுதிகளை இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற பகுதிகளாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும். இப்பகுதிகளின் மீது ஆட்சி அதிகாரம் செலுத்தவோ அல்லது இப்பகுதிகளில் இருந்து எந்தவிதமான வரிகளையோ இந்தி அரசு பெறக் கூடாது.

#make_tamil_official_language_of_india


அமிதாப் பச்சன் ஹிந்தியில் ஆகச்சிறந்த சூப்பர் ஸ்டார். ஆனா, அந்த மாநிலத்து ரசிகர்க...

Posted: 29 Dec 2014 04:54 AM PST

அமிதாப் பச்சன் ஹிந்தியில் ஆகச்சிறந்த சூப்பர் ஸ்டார். ஆனா, அந்த மாநிலத்து ரசிகர்கள் அமிதாபை பார்த்து, 'தலைவா, நாளைய மஹாராஷ்டிராவே உன் கையில் தான் இருக்கு. அரசியலுக்கு வாங்க தலைவா'னு கூச்சல் போடுறாங்களா...?

ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் ஆமிர்கான் போன்ற ஹிந்தி சூப்பர் ஸ்டார்களுக்கு எவ்வளவு மார்க்கெட் வேல்யூ இருக்கு தெரியுமா..? அவர்களுக்கு மஹாராஷ்டிரா மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா...? ஆனா, அந்த ரசிகர்கள் அவர்களை பார்த்து 'அரசியலில் குதியுங்கள்...இந்தியாவை காப்பாற்றுங்கள்...நீங்கள் தான் எங்கள் 'ஷாருக்காந்தி' என அடைமொழி இட்டு சுவரொட்டிகள் ஒட்டி நீங்கள் பார்த்தது உண்டா...?

இல்லை, ஹிந்தி சினிமாக்காரனின் படம் வெளியே வராமல் எந்த ஹிந்தி ரசிகனாவது தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறானா..?? எந்த ஹிந்தி ரசிகனாவது அவர்களின் நடிகர்களுக்கு கோயில் கட்டியிருக்கானா...? இப்படி எல்லா விஷயங்களையும் அவர்களோடு உங்களையும் எண்ணி பார்த்தால், நீங்கள்(தமிழக ரசிகர்கள்) எவ்வளவு மட்டமான நிலையில் (அல்லது அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு) இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியும்!!

ஏன், நம்ம பக்கத்து மாநிலத்து கேரளாவில் இங்க நடக்கிற ரசிகர்களின் மானங்கெட்ட புரட்சிகள் ஏதாவது தினம் தினம் நடந்துக்கிட்டு இருக்கா..? மோகன்லால், மம்முட்டி எல்லாம் ஏன் ஆடாம் அலம்பல் பண்ணாம இருக்காங்க...? ஏன்னா, அவங்களுக்கு பைத்தியக்காரத்தனமான ரசிகர்கள் கூட்டம் இல்ல. இங்கே சென்னைக்கு படிக்க வந்த, இல்ல, பூர்வீகமா இருக்கிற மலையாளிகள் கூட நடிகர்கள் மேல வெறித்தனமா இருக்க மாட்டாங்க. அதுக்கு என்ன காரணம்னு யோசிங்க!

அமிதாப், திலீப்குமார், மோகன்லால், மம்முட்டிக்கு இல்லாத நடிப்பு திறமையா உங்க மூத்த தளபதி, இளைய தளபதி, வளரும் தளபதிக்கெல்லாம் இருக்கு...? சிகரெட் மேல தூக்கிப்போட்டு துப்பாக்கியால் சுட்டு வாயில வெச்சி பிடிச்சா, அப்படியே கை தட்டல் பறக்கும்..சிகரெட்ட சட்டை காலரிலிருந்து வாயால் கடிச்சி இழுத்தா, அதுக்கு பேர் நடிப்பாம்...சிலை வைப்பாங்களாம்..பால் ஊத்துவாங்களாம்...அய்யோ அய்யோ!!

அவ்வளவு ஏன்...ஹாருக்கானுக்கு பட்டம் ஏதாவது இருக்கா...? அமிதாப் பச்சனுக்கு பட்டம் இருக்கா...? மோகன்லால் ?? மம்முட்டி ??? ஒருத்தருக்கும் இல்ல. ஆனா, இங்க ஒரு பட்டத்துக்கு புது அரசியல்வாதி, புரட்சி அரசியல்வாதியான ஒரு நடிகர் படும் பாடு இருக்கே...அப்பப்பாஆஆ!!!

இதுக்கெல்லாம் யாரு காரணம்...? இந்த மானங்கெட்ட ரசிகர்கள் தான். கொஞ்சம் வெளியே வந்து இந்த பரந்த சினிமா உலகத்தை பார்த்து சிந்திக்க ஆரம்பிச்சா போதும்...அவங்க எவ்வளவு பெரிய தவறு, சமுதாய சீர்கேட்டை செஞ்சிக்கிட்டு இருக்காங்கன்னு தெளிவா புரியும்.

இவ்வளவு விளங்கும்படி விளாவரியா பதிவு போட்டாலும் கொஞ்சம் கூட உறைக்காம சில மர மண்டைகள் வந்து இங்க வியாக்கியானம் பேசுவாங்க...திருந்துங்கப்ப்பாஆஆ...புன்னியமா போகும்!

@பிரகாசம் பழனி


அப்புறம் நியு இயர் எல்லாம் வருது.. கலாச்சார காவலர்கள் எல்லாம் என்ன ப்ளான் வச்சிர...

Posted: 29 Dec 2014 04:46 AM PST

அப்புறம் நியு இயர் எல்லாம் வருது..
கலாச்சார காவலர்கள் எல்லாம் என்ன ப்ளான் வச்சிருக்காங்க?

மெரினா, ப்ளாசாக்கள் அங்க இங்கனு கலர் கலர் துண்டு, கலர் கலர் பொட்டுனு கெளம்பனுமே..

வருஷத்துல மத்த எந்த நாளும் red light area பத்தி எல்லாம் எதிர்த்து கேக்க மாட்டானுங்க, ஆனா நியு இயர், காதலர் தினம் அன்னைக்கு இவனுங்களுக்கு வரும் பாரு ஒரு கலாச்சார பாசம்....

- உமா மகேஷ்வரன்

500 ஆண்டுகளாக தொடரும் மூட நம்பிக்கைக்கு அனுமதி . 5000 ஆண்டுகளாக தொடரும் வீர விளை...

Posted: 29 Dec 2014 04:42 AM PST

500 ஆண்டுகளாக தொடரும் மூட நம்பிக்கைக்கு அனுமதி . 5000 ஆண்டுகளாக தொடரும் வீர விளையாட்டுக்கு தடை ! இது தான் இந்திய நீதி !

கர்நாடகாவில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி ஆலயத்தில் பிராமணர்கள் சாப்பிட்ட இலையின் மீது பிராமணர் அல்லாதவர்கள் வெறும் உடம்போடு படுத்து உருள வேண்டுமாம். அப்படி செய்தால் அவர்களை பிடித்துள்ள நோய்கள் எல்லாம் நீங்கி விடுமாம். இது தான் அந்த பகுதியை சேர்ந்த மக்களின் மதமூட நம்பிக்கையாகும். இந்த நடைமுறை காட்டுமிராண்டித்தனம், மூடநம்பிக்கை என்று கர்நாடக அரசே ஒரு காலத்தில் தடை விதித்தது. இருப்பினும் இந்த மூடநம்பிக்கை ஆதரவாளர்கள் இந்த விழா தொடர்ந்து நடைபெற வேண்டும், இது 500 ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது, இது மக்களின் நம்பிக்கை சார்ந்த விடயம் , இதை தடை செய்வது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று நீதி மன்றத்தில் வாதித்தனர். இந்த வாதத்தின் அடிப்படையில் நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்து இந்த விழா தொடர அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டும் சுப்பிரமணியன் கோவிலில் இந்த இலையின் மேல் உருளும் மூடநம்பிக்கை திருவிழா காவல்துறையின் பாதுகாப்புடன் நடைபெற்றது .

ஆனால் தமிழர்கள் 5000 ஆண்டுகளாக பின்பற்றி வரும் தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிகட்டுக்கு 2014 மே மாதத்தில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த விளையாட்டில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. எல்லா விதிமுறைகளையும் கடைபிடித்து நடத்தப்படும் ஏறு தழுவுதல் விளையாட்டின் மேல் உள்ள தடையை நீக்க வேண்டும் என்று தமிழர்கள் அனைவரும் கோரிக்கை வைத்தும் இது வரை அக்கோரிக்கையை அரசோ, நீதிமன்றமோ ஏற்கவில்லை . இன்னும் சல்லிகட்டுக்கு தடை உள்ளது. இந்த தடையை மீறி சல்லிகட்டு நடத்த முடியுமா அல்லது தமிழர்கள் நடத்தப் போகிறார்களா என்பது கேள்விக்குறி. அப்படி நடத்தினால் தமிழகக் காவல்துறை தமிழ் மக்களின் மேல் வன்முறையை ஏவி விடுவார்கள் என்பதும் நாம் அறிந்ததே.

நம்முடைய கேள்வி, ஒரு மேல்சாதி இந்துக்களின் புனிதத்தன்மையை உறுதிப்படுத்தும் மூடநம்பிக்கை சார்ந்த விழாவிற்கு நீதிமன்றமும், அரசும் அனுமதி அளிக்கிறது. ஆனால் தமிழர்களின் அன்பை, பண்பை , வீரத்தை உறுதிப்படுத்தும் தமிழர்களின் பண்பாட்டு விளையாட்ட்டான சல்லிகட்டை ஏன் நீதிமன்றமும் அரசும் தடை விதிக்கிறது? மூடநம்பிக்கைக்கு அனுமதி அளிக்கும் அரசு தமிழர் பண்பாட்டிற்கு அனுமதி வழங்க ஏன் தயங்குகிறது? காரணம் நாம் தமிழர்கள் என்பதாலா ? தமிழர் பண்பாடு நீடிக்கக் கூடாது என்பதலா ?

தமிழர்களின் வீரவிளையாட்டை எப்படியாயினும் தொடர்ந்து நடத்தி விட வேண்டும் என்பதே தமிழர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது . இதை கருத்தில் கொண்டு வரவிருக்கும் பொங்கல் பண்டிகையின் போது சல்லிகட்டு விளையாட்டு வழக்கம் போல நடைபெற அரசு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டுமாறு தமிழ்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


Ancient Tamil Civilization: Eyirpattinam (SOPATINA) Me (aravind) rob (batman)...

Posted: 29 Dec 2014 04:13 AM PST

Ancient Tamil Civilization:

Eyirpattinam (SOPATINA)

Me (aravind) rob (batman) searching for a new dive site around pondy sea ..we dive 15km away from the shore..acidently we found the wall at the depth of 32 m ..rob named for the wall is called "aravind"s wall" wall start from 32 m and end with 42 m depth and sure 2 1/2 km length and wall travel north to south..beautyful life hidding there....

A close encounter with Rome is confirmed by finds of Roman coins, Arretine ware and Greco-Roman jewelry as well as place names in Tamil Nadu: Madras - Sopatina / Masulipatam, Pondichery - Poduka, Karaikal - Camara and Cannanore - Naura.

http://www.youtube.com/watch?v=Ybkau-cNpxE

http://www.youtube.com/watch?v=LuR0awnJ9qM

எயிற்பட்டினம் (சோபட்டினம்)

எயில் = மதில், பட்டினம் = கடற்கரை நகரம். மதில் நகரம் அல்லது கோட்டை நகரம். அதாவது கோட்டைகள் சூழ்ந்த கடற்கரைப் பட்டினம் என்பது பொருள்.

புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்!

http://tnarchsites.blogspot.in/2014/01/eyirpattinam.html

http://www.tamilvu.org/courses/degree/d011/d0113/html/d0113443.htm

http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/IV_Year/matt14/html/mat14007pp4g.htm

http://tamil.thehindu.com/general/environment/ஆழ்கடலில்-புதையுண்ட-சங்கத்-தமிழ்-சரித்திரம்/article5228153.ece


சிங்கார சென்னை!

Posted: 28 Dec 2014 11:20 PM PST

சிங்கார சென்னை!


இன்னும் எத்தனை உயிர் பலி வாங்க போகிறதோ?

Posted: 28 Dec 2014 11:01 PM PST

இன்னும் எத்தனை உயிர் பலி வாங்க போகிறதோ?


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


... @ Indupriya MP ...

Posted: 28 Dec 2014 10:50 PM PST

...
@ Indupriya MP
...


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, “உனக்கு என்ன வேண்டுமோ... அதை கேள்?” என்றது. “எ...

Posted: 29 Dec 2014 09:25 AM PST

ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ... அதை கேள்?" என்றது.
"என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்."
"அப்புறம்..?"
"அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே முக்கியமா இருக்கக்கூடாது."
"அப்புறம்?"
"அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது."
"அப்புறம்..?"
"அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துலதான் முழிக்கணும்."
"அப்புறம்..?"
" அவர் நான் இல்லாம எங்கயும் போகக் கூடாது."
"அப்புறம்..?"
"எம்மேல ஒரு கீறல் பட்டாலும் கூட அவர் வாடி வருத்தத்துல உறைஞ்சு போயிடணும்."
"அப்புறம்..?"
"அவ்வளவுதான்."
உடனே பூதம் அந்தப் பெண்ணை ஒரு
'ஐ
போன்' ஆக மாற்றியது!

:P :P

Relaxplzz

அருமையான படைப்பு

Posted: 29 Dec 2014 09:20 AM PST

அருமையான படைப்பு


நீயும் தீவிரவாதி! சிங்களத்தான் அடித்தான் என திருப்பி நீ அடித்து விட்டால் மீனவனே...

Posted: 29 Dec 2014 09:07 AM PST

நீயும் தீவிரவாதி!

சிங்களத்தான் அடித்தான் என திருப்பி நீ
அடித்து விட்டால் மீனவனே
நீயும் ஒரு தீவிரவாதி!

தமிழ்நாட்டில் ஆட்சி,அலுவல், நீதி. கோயில்
அனைத்திலும தமிழ் வேண்டுமென்றால் நீயும்
ஒரு தீவிரவாதி!

வெளிநாட்டு கொள்ளையருக்காய் எம்
வயல்வெளியை பலி கொடுக்க மாட்டோமென்றால் நீயும்
ஒரு தீவிரவாதி!

கல்விச்சாலை வைத்து பணம் பறிக்கும் கயவர்களை கண்டிக்க
கிளர்ந்தெழுந்தால் நீயும் ஒரு தீவிரவாதி!

கனிம வளக் கொள்ளையை தடுக்க நீ களம் புகுந்தால் நீயும்
ஒரு தீவிரவாதி!

ஊருப்பெண்ணைமனைவியாகச் சேர்த்து வாழும் சேரித்
தம்பி நீயும் ஒரு தீவிரவாதி!

காவிரி, பெரியாறில் உரிமை கேட்டு உரிமை கேட்டுப்
போராடும் உழவனே நீயும் ஒரு தீவிரவாதி!

அணு உலை வேண்டாம்
எங்களை வாழவிடு என்று அரசை எதிர்ப்பவனே நீயும்
ஒரு தீவிரவாதி!

பசியால் சுருண்டு விழும் பிள்ளையின் உயிர் காக்க
ஒரு குவளை நீர் வேண்டி கையை உயர்த்திய நீயும்
ஒரு தீவிரவாதி!

தமிழீழம் வேண்டுமென்று, தமிழீழம்
வெல்லுமென்று பெருமுழக்கம் செய்வோனே நீயும்
ஒரு தீவிரவாதி!

பெண்களின் ஆடைக்குள் கைநுழைத்த காக்கிகளை கண்
சிவந்து பார்த்த இசுலாமியனே நீயும் ஒரு தீவிரவாதி!

நாடு தீவிரவாதிகளால் நிரம்பி வழிகிறது.
கால் வைக்க இடமில்லாமல் சிறைச்சாலைகள்
அழுது புலம்புகின்றன.

சுட்ட இடங்கள் செத்த இடங்களில் எல்லாம் பிணங்கள் நாறிக்
கிடக்கின்றன.
மரண ஓலங்களை மண்ணில் புதைத்து பீறிட்டு எழுகிறது
"தேச"பக்தி!

Relaxplzz

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனா...

Posted: 29 Dec 2014 09:00 AM PST

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும்.மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.

''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம். எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது.

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க'' என்று ஆதாரங்களை எடுத்து வைத்துப்பேசினார்.

- பசுமை விகடன்


இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 29 Dec 2014 08:58 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


# படித்ததில் பிடித்தது # நல்லவேளை.. இன்று டைனோசர்கள் உலகில் இல்லை. இல்லையென்றால...

Posted: 29 Dec 2014 08:50 AM PST

# படித்ததில் பிடித்தது #

நல்லவேளை.. இன்று டைனோசர்கள் உலகில் இல்லை. இல்லையென்றால் மனிதன் அதையும் மூன்றாவது தெருவில் பிச்சையெடுக்க விட்டிருப்பான்

போராளிகளின் மனதிலும் பல கோமாளிகளின் டி-ஷர்ட்களிலும் உயிர் வாழ்கிறார்! # சே குவேரா

காபி மெஷின்ல நெசமாவே காபி தான் வருதா…. இல்ல மெஷின கழுவுன தண்ணி வருதா?

நேரத்தை சேமிக்கவந்ததாக நினைக்கும்
கைப்பேசியும் இணையமும் தான் அதிக நேரத்தை தின்கின்றன !

கேக்கின் மேல் இருக்கும் செர்ரியைக் கடைசியாக சாப்பிடுபவனின் வங்கி கணக்கில் சேமிப்பு அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு

என்றைக்கோ வரப்போகும் மரணத்தைவிட, நாளைக்கு வரப்போகும் திங்கட்கிழமை அச்சுறுத்தலாக இருக்கிறது # ஆபீஸ்

ஃபேஸ்புக் கம்பெனியின் வெற்றிக்கு காரணம், அவர்கள் அலுவலகத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை இருக்கும் என்று நினைக்கிறேன்

மற்றவர்களின் பவ்ய குனிதலில்கூட, மைக்ரோ அளவில் தயக்கத்தை காண முடிகிறது. ஆனால், ஓ.பி.எஸ். ஆழ்ந்து அனுபவித்து யோகாசனம்போலச் செய்கிறார்

பெரும்பாலான காதல் ஆரம்பிப்பது இளையராஜா பாட்டில். ஆனால் முடிவோ மல்லையா 'பாட்டில்'!

மஞ்சள், பட்டை, கிராம்பு போல் இந்திய பெண்களின் வெட்கத்திற்க்கும், நாம் காப்புரிமை பெற்றுக்கொள்வது நல்லது

இரகசியத்தை ஊமைப் பெண்ணிடம் சொல்லுங்கள்; அவளும் பேசத் தொடங்கிவிடுவாள்… -சீனப் பழமொழி

கல்யாணம்னு ஒன்னு ஆச்சுன்னா, ஆம்பளைங்க HULK ஆவறதும், பொண்ணுங்க BULK ஆவறதும் சகஜம்.

இங்கு சாதி என்னும் ஆடை சிலருக்கு பட்டு துணியாகவும் சிலருக்கு கோவண துணியாகவும் இருக்கிறது

குழந்தைகளுக்கு ஹோம் வொர்க் செய்து கொடுப்பதை குழந்தை வளர்ப்பு என தவறாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர் சில பெண்கள்

வசதியான மாநிலங்களின் பெயரை பேங்குகளுக்கும் வசதி இல்லாத மாநிலங்களின் பெயரை லாட்டரிக்கும் வைத்துவிடுகின்றனர்

உலகிலேயே படு பயங்கரமான பொய், "இப்பலாம் யாரு சாதி பாக்குறா?" என்பதுதான்!

மனிதர்களால் கூட தரமுடியாத ஆறுதலை சில சமயங்களில் தனிமை தந்துவிடுகின்றது

எத்தனை வயது ஆனாலும் அப்பா நம்முடன் இருக்கும் வரை ஒரு பாதுகாப்பை மனம் உணரவே செய்கிறது

லிஃப்ட் பட்டன நாலஞ்சு தடவ அமுக்கினா லிஃப்ட் வேகமா வரும்னு நம்புது ஒரு கூட்டம்

அரிச்சந்திரனோட நேர்மையை பரிசோதிக்க, அவரை காங்கிரஸ்-லயோ திமுக-விலேயோ சேர்த்து விட்ருக்கலாம்.

Relaxplzz

தெரிந்து கொள்வோம்

Posted: 29 Dec 2014 08:47 AM PST

தெரிந்து கொள்வோம்


தெரிந்து கொள்வோம் - 1

எங்கள் கையில் எழுதுகோலை பிடிக்கவையுங்கள் இந்நாட்டின் தலை எழுத்தை திருத்தி எழுத...

Posted: 29 Dec 2014 08:45 AM PST

எங்கள் கையில் எழுதுகோலை பிடிக்கவையுங்கள்

இந்நாட்டின் தலை எழுத்தை திருத்தி எழுதிவிடுகிறோம்...


:) Relaxplzz

Posted: 29 Dec 2014 08:43 AM PST

பிற உயிர்களின் துயரம் அறிந்தவனே உழைப்பாளி புகைப்படம் புரிந்திருந்தால் ஒரு லைக்...

Posted: 29 Dec 2014 08:40 AM PST

பிற உயிர்களின் துயரம் அறிந்தவனே உழைப்பாளி

புகைப்படம் புரிந்திருந்தால் ஒரு லைக் போடுங்க... (y)


;-) Relaxplzz

Posted: 29 Dec 2014 08:38 AM PST

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 29 Dec 2014 08:35 AM PST

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


கக்கூஸ்ல இருக்குற கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையே கண்டுபுடிக்க கருவி இருக்கு, ஆ...

Posted: 29 Dec 2014 08:33 AM PST

கக்கூஸ்ல இருக்குற கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையே கண்டுபுடிக்க கருவி இருக்கு,

ஆனா

கடல்ல விழுந்து காணாம போகுற விமானத்த கண்டுபுடிக்க இன்னும் சரியான கருவி இல்ல.. :(

- சிவ சிவா.

:) Relaxplzz

Posted: 29 Dec 2014 08:30 AM PST

ஆசைதான் எனக்கு இன்று காதலியாய் இருக்கும் நாளை என் மனைவியை வாரம் ஒரு முறையாவது அ...

Posted: 29 Dec 2014 08:27 AM PST

ஆசைதான் எனக்கு

இன்று காதலியாய் இருக்கும்
நாளை என் மனைவியை
வாரம் ஒரு முறையாவது
அவளுக்கு முன் எழுந்து
அவள் துங்கும் அழகை ரசிக்க
ஆசை!

தினமும் மலர் சூடி
அவள் நெற்றியில்
என் இதழ் சேர்க்க ஆசை!

அனைவரும் இருக்கும் நேரத்தில்
கள்ளவனாய் அவள் இடைக்கில்ல
ஆசை

யாரும் இல்லா நேரத்தில்
முத்தத்தில்
அவளை நனைக்க ஆசை

குழந்தையாய் அவள் செய்யும்
தவறுகளை ரசிக்க ஆசை

யாரும் இல்லா சாலையில் அவள்
கைபிடித்து நடக்க ஆசை

முதன் முதலில் நான் வாங்கும்
வாகனத்தில்
அவளோடு வெகுதுரம்
செல்ல ஆசை!

மழை நேரத்தில் ஒரு குடைக்குள்
அவளுடன் இருக்க ஆசை!

மழையில் நனைந்த என் தலையை
அவள் புடவை நுனி கொண்டு
துடைக்க ஆசை...!!

என் உயிர் சுமக்கும் அவளை
அன்று என் கண்ணுக்குள்
வைத்து
பார்க்க ஆசை!

என் உயிர் பிறந்த பின்பும்
அவள் முகம் முதல் பார்க்க ஆசை

இப்படியே 60 ஆண்டு காலம்
அவளோடு நான் வாழ
ஆசை

60 ஆன பின்பும் அவள் முகத்தில்
விழுந்த ரேகையையும்
கன்னத்தில் விழுந்த குழியையும்
மூக்கு கண்ணாடி போட்டு ரசிக்க
ஆசை

உயிர் பிரியும் வேலையில்
உன் முகம் பார்த்து
உன் மடியில் உயிர் பிரிய ஆசை....

♥ ♥

"படித்ததில் பிடித்தது"

Relaxplzz


அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா...

தமிழில் கடிகாரம்.... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 29 Dec 2014 08:25 AM PST

தமிழில் கடிகாரம்....

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


அன்று நடக்கும் வரை தூக்கிச் சுமந்தவளை இன்று தூக்கி எறிந்து விட்டான் நடக்க முடிய...

Posted: 29 Dec 2014 08:22 AM PST

அன்று நடக்கும் வரை தூக்கிச் சுமந்தவளை

இன்று தூக்கி எறிந்து விட்டான் நடக்க முடியாதென்று

பெற்றோரை தவிக்க விடாதீர்கள்


#இன்று_சென்னையில்_மழை_மொமன்ட் ;-)

Posted: 29 Dec 2014 08:18 AM PST

#இன்று_சென்னையில்_மழை_மொமன்ட் ;-)


நீ அடிப்பதை கூட ஐந்து விரல்கள் தரும் அதிசய முத்தமாகவே எண்ணுகிறேன்... #யாமிதா...

Posted: 29 Dec 2014 08:16 AM PST

நீ அடிப்பதை கூட
ஐந்து விரல்கள் தரும்
அதிசய முத்தமாகவே
எண்ணுகிறேன்...

#யாமிதாஷா...


"காதல் கவிதைகள்" - 3

ஒரு கணவன் மனைவி குடும்பம். அன்பான குடும்பம்தான். ஆனால் கணவனுக்கொ சூதாடும் பழக்க...

Posted: 29 Dec 2014 08:10 AM PST

ஒரு கணவன் மனைவி குடும்பம். அன்பான குடும்பம்தான்.

ஆனால் கணவனுக்கொ சூதாடும் பழக்கம் தொற்றிக்கொண்டது. அதை விட அவன் தயாரில்லை.

இதனால் இருவருக்கும் சதா சண்டை.மனைவி சொன்னாள் சூதாடுவது கெட்டப்பழக்கம் என்று!

கணவனோ மறுத்தான். சூதாடுவது கெட்டப்பழக்கம் கிடையாது.மகா பாரதத்திலேயே பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியை வைத்து சூதாடி இருக்கிறார்கள் என்றான்.

மனைவி சொன்னாள். பாரதத்தில் பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் அதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!

இனி அவன் சூதாடுவான்? :P :P

Relaxplzz

கிராமத்து சிறுவர்களின் ஷாப்பிங் மால்...

Posted: 29 Dec 2014 08:05 AM PST

கிராமத்து சிறுவர்களின் ஷாப்பிங் மால்...


சும்மா... சும்மா... 1

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்.. 1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் ந...

Posted: 29 Dec 2014 08:00 AM PST

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..

1. நீங்கள் அழகு என்பதை முதலில்
நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும்
அழகிற்கும்
சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள
். யாரும் சொன்னாலும்
ரசித்தாலும் தான், நான்
அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள்.
உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக
பேச முடியவில்லை என்றாலும்
கவலை கொள்ளாதீர்கள்.
உங்களை நக்கல் செய்பவரிடம்
துணிச்சலாய் எதிர்த்துத்
சொல்லுங்கள்
இங்கு பலருக்கு அவரவர் தாய்
மொழியையே சரியாகப் பேசத்
தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது.
உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும்
சொன்னாலும்,
அதை விரைவில் கற்றுக்
கொண்டு முடித்துக் காட்ட
வெறித் தனமாய்
முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம்
நிறைந்தது என்று நினைக்காதீர்கள்.
எல்லாம் நிறைவாய் இருக்கும்
வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும்
தெரியாது. எதிரில்
நிற்பவருக்கு எல்லாமே தெரியும்
என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்.
இந்த எண்ணம் இருந்தால் நீங்கள்
சொல்ல வந்ததை சரியாக
தடுமாற்றம்
இன்றி சொல்லி முடிக்க
முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன்
நிறுத்துவதற்கும்
மொழி புலமை அவசியம்
என்று நினைக்காதீர்கள். உலகில்
சரியாக சிந்திக்க வைத்த
கேள்விகளை கேட்ட நிறையப் பேர்
மொழிப்புலமை இல்லாமல்
தங்களுக்கு தெரிந்த
வார்த்தைகளைக்
கொண்டு தங்கள்
கேள்விகளை சரியாக
புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள்.
நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ
இங்கு யாரும்
வரப்போவதில்லை என்பதை ஏற்றுக்
கொள்ளுங்கள். கண்ணீரில்
துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன்
செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில்
நிராகரிப்பட்டாலும்
இழப்பு உங்களுக்கில்லை,
நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.

# மாற்றத்தை வெளியில்
தேடாமல் உங்களுக்குள் தேடினால்,
தாழ்வு மனப்பான்மையை எளிதில்
போக்கி விடலாம்.

Relaxplzz


உலகத்திலேயே சொல் பேச்சு கேட்காத விலங்கு ஆடு தாங்க. காலாகாலமா ஆடு ஆடு ன்னு சொ...

Posted: 29 Dec 2014 07:56 AM PST

உலகத்திலேயே சொல் பேச்சு கேட்காத விலங்கு ஆடு தாங்க.

காலாகாலமா ஆடு ஆடு ன்னு சொல்றமே ஒன்னாவது ஆடியிருக்குதா ;-)


சும்மா... சும்மா... 2

விவசாயத்துக்கு மழை வரலையே என்று வருந்தாதவர்கள் கிரிக்கெட்டுக்கு மழை வந்துட்டே (...

Posted: 29 Dec 2014 07:50 AM PST

விவசாயத்துக்கு மழை வரலையே என்று
வருந்தாதவர்கள்

கிரிக்கெட்டுக்கு மழை வந்துட்டே (வந்திருமோ) என வருந்துகிறார்கள்


அரிய புகைப்படம்

Posted: 29 Dec 2014 07:49 AM PST

அரிய புகைப்படம்


"அரிய புகைப்படங்கள்"

சுந்தர்.சி யின் மனைவி என்பதில் பெருமைப்படுகிறேன் - குஷ்பு சுந்தர் சி ரியாக்சன்!...

Posted: 29 Dec 2014 07:45 AM PST

சுந்தர்.சி யின் மனைவி என்பதில் பெருமைப்படுகிறேன் - குஷ்பு

சுந்தர் சி ரியாக்சன்! :P :P

- சிவ சிவா


இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களது பதவிக்காலம் வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைக...

Posted: 29 Dec 2014 07:35 AM PST

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களது பதவிக்காலம் வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

இப்பதவிக்கு அடுத்த வர தகுதியானவர் பட்டியலில் உள்ளவர் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் அவர்கள்.

மங்கள்யான் முதல் கடைசியாக செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் வரை இவரது பங்களிப்பே அதிகமானது.
இவருக்கு அடுத்தபடியாக கர்நாடகாவைச் சேர்ந்த கடுவாள் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த பிரசாத் என்ற விஞ்ஞானியும் உள்ளனர்.

ஆனால் தற்போது கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் மற்றும் சோம்நாத் பணிக்கர் என்பவர்களது பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

பிரதமர் மோடி அவர்கள் இவ்விசயத்தில் உடனடியாகத் தலையிட்டு தமிழகத்தைச் சேர்ந்த சிவன் அவர்களையே தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமாய் வலைத்தளப் பதிவர்கள் சார்பாக ஒருமித்த கருத்தை முன் வைப்போமாக !

பகிருங்கள் நண்பர்களே.

- சிவ சிவா @ Relaxplzz

:) Relaxplzz

Posted: 29 Dec 2014 07:30 AM PST

:P :P Relaxplzz

Posted: 29 Dec 2014 07:23 AM PST

:P :P Relaxplzz