Monday, 29 December 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, “உனக்கு என்ன வேண்டுமோ... அதை கேள்?” என்றது. “எ...

Posted: 29 Dec 2014 09:25 AM PST

ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ... அதை கேள்?" என்றது.
"என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்."
"அப்புறம்..?"
"அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே முக்கியமா இருக்கக்கூடாது."
"அப்புறம்?"
"அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது."
"அப்புறம்..?"
"அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துலதான் முழிக்கணும்."
"அப்புறம்..?"
" அவர் நான் இல்லாம எங்கயும் போகக் கூடாது."
"அப்புறம்..?"
"எம்மேல ஒரு கீறல் பட்டாலும் கூட அவர் வாடி வருத்தத்துல உறைஞ்சு போயிடணும்."
"அப்புறம்..?"
"அவ்வளவுதான்."
உடனே பூதம் அந்தப் பெண்ணை ஒரு
'ஐ
போன்' ஆக மாற்றியது!

:P :P

Relaxplzz

அருமையான படைப்பு

Posted: 29 Dec 2014 09:20 AM PST

அருமையான படைப்பு


நீயும் தீவிரவாதி! சிங்களத்தான் அடித்தான் என திருப்பி நீ அடித்து விட்டால் மீனவனே...

Posted: 29 Dec 2014 09:07 AM PST

நீயும் தீவிரவாதி!

சிங்களத்தான் அடித்தான் என திருப்பி நீ
அடித்து விட்டால் மீனவனே
நீயும் ஒரு தீவிரவாதி!

தமிழ்நாட்டில் ஆட்சி,அலுவல், நீதி. கோயில்
அனைத்திலும தமிழ் வேண்டுமென்றால் நீயும்
ஒரு தீவிரவாதி!

வெளிநாட்டு கொள்ளையருக்காய் எம்
வயல்வெளியை பலி கொடுக்க மாட்டோமென்றால் நீயும்
ஒரு தீவிரவாதி!

கல்விச்சாலை வைத்து பணம் பறிக்கும் கயவர்களை கண்டிக்க
கிளர்ந்தெழுந்தால் நீயும் ஒரு தீவிரவாதி!

கனிம வளக் கொள்ளையை தடுக்க நீ களம் புகுந்தால் நீயும்
ஒரு தீவிரவாதி!

ஊருப்பெண்ணைமனைவியாகச் சேர்த்து வாழும் சேரித்
தம்பி நீயும் ஒரு தீவிரவாதி!

காவிரி, பெரியாறில் உரிமை கேட்டு உரிமை கேட்டுப்
போராடும் உழவனே நீயும் ஒரு தீவிரவாதி!

அணு உலை வேண்டாம்
எங்களை வாழவிடு என்று அரசை எதிர்ப்பவனே நீயும்
ஒரு தீவிரவாதி!

பசியால் சுருண்டு விழும் பிள்ளையின் உயிர் காக்க
ஒரு குவளை நீர் வேண்டி கையை உயர்த்திய நீயும்
ஒரு தீவிரவாதி!

தமிழீழம் வேண்டுமென்று, தமிழீழம்
வெல்லுமென்று பெருமுழக்கம் செய்வோனே நீயும்
ஒரு தீவிரவாதி!

பெண்களின் ஆடைக்குள் கைநுழைத்த காக்கிகளை கண்
சிவந்து பார்த்த இசுலாமியனே நீயும் ஒரு தீவிரவாதி!

நாடு தீவிரவாதிகளால் நிரம்பி வழிகிறது.
கால் வைக்க இடமில்லாமல் சிறைச்சாலைகள்
அழுது புலம்புகின்றன.

சுட்ட இடங்கள் செத்த இடங்களில் எல்லாம் பிணங்கள் நாறிக்
கிடக்கின்றன.
மரண ஓலங்களை மண்ணில் புதைத்து பீறிட்டு எழுகிறது
"தேச"பக்தி!

Relaxplzz

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனா...

Posted: 29 Dec 2014 09:00 AM PST

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும்.மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.

''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம். எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது.

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க'' என்று ஆதாரங்களை எடுத்து வைத்துப்பேசினார்.

- பசுமை விகடன்


இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 29 Dec 2014 08:58 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


# படித்ததில் பிடித்தது # நல்லவேளை.. இன்று டைனோசர்கள் உலகில் இல்லை. இல்லையென்றால...

Posted: 29 Dec 2014 08:50 AM PST

# படித்ததில் பிடித்தது #

நல்லவேளை.. இன்று டைனோசர்கள் உலகில் இல்லை. இல்லையென்றால் மனிதன் அதையும் மூன்றாவது தெருவில் பிச்சையெடுக்க விட்டிருப்பான்

போராளிகளின் மனதிலும் பல கோமாளிகளின் டி-ஷர்ட்களிலும் உயிர் வாழ்கிறார்! # சே குவேரா

காபி மெஷின்ல நெசமாவே காபி தான் வருதா…. இல்ல மெஷின கழுவுன தண்ணி வருதா?

நேரத்தை சேமிக்கவந்ததாக நினைக்கும்
கைப்பேசியும் இணையமும் தான் அதிக நேரத்தை தின்கின்றன !

கேக்கின் மேல் இருக்கும் செர்ரியைக் கடைசியாக சாப்பிடுபவனின் வங்கி கணக்கில் சேமிப்பு அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு

என்றைக்கோ வரப்போகும் மரணத்தைவிட, நாளைக்கு வரப்போகும் திங்கட்கிழமை அச்சுறுத்தலாக இருக்கிறது # ஆபீஸ்

ஃபேஸ்புக் கம்பெனியின் வெற்றிக்கு காரணம், அவர்கள் அலுவலகத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை இருக்கும் என்று நினைக்கிறேன்

மற்றவர்களின் பவ்ய குனிதலில்கூட, மைக்ரோ அளவில் தயக்கத்தை காண முடிகிறது. ஆனால், ஓ.பி.எஸ். ஆழ்ந்து அனுபவித்து யோகாசனம்போலச் செய்கிறார்

பெரும்பாலான காதல் ஆரம்பிப்பது இளையராஜா பாட்டில். ஆனால் முடிவோ மல்லையா 'பாட்டில்'!

மஞ்சள், பட்டை, கிராம்பு போல் இந்திய பெண்களின் வெட்கத்திற்க்கும், நாம் காப்புரிமை பெற்றுக்கொள்வது நல்லது

இரகசியத்தை ஊமைப் பெண்ணிடம் சொல்லுங்கள்; அவளும் பேசத் தொடங்கிவிடுவாள்… -சீனப் பழமொழி

கல்யாணம்னு ஒன்னு ஆச்சுன்னா, ஆம்பளைங்க HULK ஆவறதும், பொண்ணுங்க BULK ஆவறதும் சகஜம்.

இங்கு சாதி என்னும் ஆடை சிலருக்கு பட்டு துணியாகவும் சிலருக்கு கோவண துணியாகவும் இருக்கிறது

குழந்தைகளுக்கு ஹோம் வொர்க் செய்து கொடுப்பதை குழந்தை வளர்ப்பு என தவறாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர் சில பெண்கள்

வசதியான மாநிலங்களின் பெயரை பேங்குகளுக்கும் வசதி இல்லாத மாநிலங்களின் பெயரை லாட்டரிக்கும் வைத்துவிடுகின்றனர்

உலகிலேயே படு பயங்கரமான பொய், "இப்பலாம் யாரு சாதி பாக்குறா?" என்பதுதான்!

மனிதர்களால் கூட தரமுடியாத ஆறுதலை சில சமயங்களில் தனிமை தந்துவிடுகின்றது

எத்தனை வயது ஆனாலும் அப்பா நம்முடன் இருக்கும் வரை ஒரு பாதுகாப்பை மனம் உணரவே செய்கிறது

லிஃப்ட் பட்டன நாலஞ்சு தடவ அமுக்கினா லிஃப்ட் வேகமா வரும்னு நம்புது ஒரு கூட்டம்

அரிச்சந்திரனோட நேர்மையை பரிசோதிக்க, அவரை காங்கிரஸ்-லயோ திமுக-விலேயோ சேர்த்து விட்ருக்கலாம்.

Relaxplzz

தெரிந்து கொள்வோம்

Posted: 29 Dec 2014 08:47 AM PST

தெரிந்து கொள்வோம்


தெரிந்து கொள்வோம் - 1

எங்கள் கையில் எழுதுகோலை பிடிக்கவையுங்கள் இந்நாட்டின் தலை எழுத்தை திருத்தி எழுத...

Posted: 29 Dec 2014 08:45 AM PST

எங்கள் கையில் எழுதுகோலை பிடிக்கவையுங்கள்

இந்நாட்டின் தலை எழுத்தை திருத்தி எழுதிவிடுகிறோம்...


:) Relaxplzz

Posted: 29 Dec 2014 08:43 AM PST

பிற உயிர்களின் துயரம் அறிந்தவனே உழைப்பாளி புகைப்படம் புரிந்திருந்தால் ஒரு லைக்...

Posted: 29 Dec 2014 08:40 AM PST

பிற உயிர்களின் துயரம் அறிந்தவனே உழைப்பாளி

புகைப்படம் புரிந்திருந்தால் ஒரு லைக் போடுங்க... (y)


;-) Relaxplzz

Posted: 29 Dec 2014 08:38 AM PST

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 29 Dec 2014 08:35 AM PST

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


கக்கூஸ்ல இருக்குற கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையே கண்டுபுடிக்க கருவி இருக்கு, ஆ...

Posted: 29 Dec 2014 08:33 AM PST

கக்கூஸ்ல இருக்குற கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையே கண்டுபுடிக்க கருவி இருக்கு,

ஆனா

கடல்ல விழுந்து காணாம போகுற விமானத்த கண்டுபுடிக்க இன்னும் சரியான கருவி இல்ல.. :(

- சிவ சிவா.

:) Relaxplzz

Posted: 29 Dec 2014 08:30 AM PST

ஆசைதான் எனக்கு இன்று காதலியாய் இருக்கும் நாளை என் மனைவியை வாரம் ஒரு முறையாவது அ...

Posted: 29 Dec 2014 08:27 AM PST

ஆசைதான் எனக்கு

இன்று காதலியாய் இருக்கும்
நாளை என் மனைவியை
வாரம் ஒரு முறையாவது
அவளுக்கு முன் எழுந்து
அவள் துங்கும் அழகை ரசிக்க
ஆசை!

தினமும் மலர் சூடி
அவள் நெற்றியில்
என் இதழ் சேர்க்க ஆசை!

அனைவரும் இருக்கும் நேரத்தில்
கள்ளவனாய் அவள் இடைக்கில்ல
ஆசை

யாரும் இல்லா நேரத்தில்
முத்தத்தில்
அவளை நனைக்க ஆசை

குழந்தையாய் அவள் செய்யும்
தவறுகளை ரசிக்க ஆசை

யாரும் இல்லா சாலையில் அவள்
கைபிடித்து நடக்க ஆசை

முதன் முதலில் நான் வாங்கும்
வாகனத்தில்
அவளோடு வெகுதுரம்
செல்ல ஆசை!

மழை நேரத்தில் ஒரு குடைக்குள்
அவளுடன் இருக்க ஆசை!

மழையில் நனைந்த என் தலையை
அவள் புடவை நுனி கொண்டு
துடைக்க ஆசை...!!

என் உயிர் சுமக்கும் அவளை
அன்று என் கண்ணுக்குள்
வைத்து
பார்க்க ஆசை!

என் உயிர் பிறந்த பின்பும்
அவள் முகம் முதல் பார்க்க ஆசை

இப்படியே 60 ஆண்டு காலம்
அவளோடு நான் வாழ
ஆசை

60 ஆன பின்பும் அவள் முகத்தில்
விழுந்த ரேகையையும்
கன்னத்தில் விழுந்த குழியையும்
மூக்கு கண்ணாடி போட்டு ரசிக்க
ஆசை

உயிர் பிரியும் வேலையில்
உன் முகம் பார்த்து
உன் மடியில் உயிர் பிரிய ஆசை....

♥ ♥

"படித்ததில் பிடித்தது"

Relaxplzz


அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா...

தமிழில் கடிகாரம்.... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 29 Dec 2014 08:25 AM PST

தமிழில் கடிகாரம்....

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


அன்று நடக்கும் வரை தூக்கிச் சுமந்தவளை இன்று தூக்கி எறிந்து விட்டான் நடக்க முடிய...

Posted: 29 Dec 2014 08:22 AM PST

அன்று நடக்கும் வரை தூக்கிச் சுமந்தவளை

இன்று தூக்கி எறிந்து விட்டான் நடக்க முடியாதென்று

பெற்றோரை தவிக்க விடாதீர்கள்


#இன்று_சென்னையில்_மழை_மொமன்ட் ;-)

Posted: 29 Dec 2014 08:18 AM PST

#இன்று_சென்னையில்_மழை_மொமன்ட் ;-)


நீ அடிப்பதை கூட ஐந்து விரல்கள் தரும் அதிசய முத்தமாகவே எண்ணுகிறேன்... #யாமிதா...

Posted: 29 Dec 2014 08:16 AM PST

நீ அடிப்பதை கூட
ஐந்து விரல்கள் தரும்
அதிசய முத்தமாகவே
எண்ணுகிறேன்...

#யாமிதாஷா...


"காதல் கவிதைகள்" - 3

ஒரு கணவன் மனைவி குடும்பம். அன்பான குடும்பம்தான். ஆனால் கணவனுக்கொ சூதாடும் பழக்க...

Posted: 29 Dec 2014 08:10 AM PST

ஒரு கணவன் மனைவி குடும்பம். அன்பான குடும்பம்தான்.

ஆனால் கணவனுக்கொ சூதாடும் பழக்கம் தொற்றிக்கொண்டது. அதை விட அவன் தயாரில்லை.

இதனால் இருவருக்கும் சதா சண்டை.மனைவி சொன்னாள் சூதாடுவது கெட்டப்பழக்கம் என்று!

கணவனோ மறுத்தான். சூதாடுவது கெட்டப்பழக்கம் கிடையாது.மகா பாரதத்திலேயே பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியை வைத்து சூதாடி இருக்கிறார்கள் என்றான்.

மனைவி சொன்னாள். பாரதத்தில் பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் அதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!

இனி அவன் சூதாடுவான்? :P :P

Relaxplzz

கிராமத்து சிறுவர்களின் ஷாப்பிங் மால்...

Posted: 29 Dec 2014 08:05 AM PST

கிராமத்து சிறுவர்களின் ஷாப்பிங் மால்...


சும்மா... சும்மா... 1

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்.. 1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் ந...

Posted: 29 Dec 2014 08:00 AM PST

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..

1. நீங்கள் அழகு என்பதை முதலில்
நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும்
அழகிற்கும்
சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள
். யாரும் சொன்னாலும்
ரசித்தாலும் தான், நான்
அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள்.
உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக
பேச முடியவில்லை என்றாலும்
கவலை கொள்ளாதீர்கள்.
உங்களை நக்கல் செய்பவரிடம்
துணிச்சலாய் எதிர்த்துத்
சொல்லுங்கள்
இங்கு பலருக்கு அவரவர் தாய்
மொழியையே சரியாகப் பேசத்
தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது.
உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும்
சொன்னாலும்,
அதை விரைவில் கற்றுக்
கொண்டு முடித்துக் காட்ட
வெறித் தனமாய்
முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம்
நிறைந்தது என்று நினைக்காதீர்கள்.
எல்லாம் நிறைவாய் இருக்கும்
வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும்
தெரியாது. எதிரில்
நிற்பவருக்கு எல்லாமே தெரியும்
என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்.
இந்த எண்ணம் இருந்தால் நீங்கள்
சொல்ல வந்ததை சரியாக
தடுமாற்றம்
இன்றி சொல்லி முடிக்க
முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன்
நிறுத்துவதற்கும்
மொழி புலமை அவசியம்
என்று நினைக்காதீர்கள். உலகில்
சரியாக சிந்திக்க வைத்த
கேள்விகளை கேட்ட நிறையப் பேர்
மொழிப்புலமை இல்லாமல்
தங்களுக்கு தெரிந்த
வார்த்தைகளைக்
கொண்டு தங்கள்
கேள்விகளை சரியாக
புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள்.
நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ
இங்கு யாரும்
வரப்போவதில்லை என்பதை ஏற்றுக்
கொள்ளுங்கள். கண்ணீரில்
துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன்
செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில்
நிராகரிப்பட்டாலும்
இழப்பு உங்களுக்கில்லை,
நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.

# மாற்றத்தை வெளியில்
தேடாமல் உங்களுக்குள் தேடினால்,
தாழ்வு மனப்பான்மையை எளிதில்
போக்கி விடலாம்.

Relaxplzz


உலகத்திலேயே சொல் பேச்சு கேட்காத விலங்கு ஆடு தாங்க. காலாகாலமா ஆடு ஆடு ன்னு சொ...

Posted: 29 Dec 2014 07:56 AM PST

உலகத்திலேயே சொல் பேச்சு கேட்காத விலங்கு ஆடு தாங்க.

காலாகாலமா ஆடு ஆடு ன்னு சொல்றமே ஒன்னாவது ஆடியிருக்குதா ;-)


சும்மா... சும்மா... 2

விவசாயத்துக்கு மழை வரலையே என்று வருந்தாதவர்கள் கிரிக்கெட்டுக்கு மழை வந்துட்டே (...

Posted: 29 Dec 2014 07:50 AM PST

விவசாயத்துக்கு மழை வரலையே என்று
வருந்தாதவர்கள்

கிரிக்கெட்டுக்கு மழை வந்துட்டே (வந்திருமோ) என வருந்துகிறார்கள்


அரிய புகைப்படம்

Posted: 29 Dec 2014 07:49 AM PST

அரிய புகைப்படம்


"அரிய புகைப்படங்கள்"

சுந்தர்.சி யின் மனைவி என்பதில் பெருமைப்படுகிறேன் - குஷ்பு சுந்தர் சி ரியாக்சன்!...

Posted: 29 Dec 2014 07:45 AM PST

சுந்தர்.சி யின் மனைவி என்பதில் பெருமைப்படுகிறேன் - குஷ்பு

சுந்தர் சி ரியாக்சன்! :P :P

- சிவ சிவா


இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களது பதவிக்காலம் வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைக...

Posted: 29 Dec 2014 07:35 AM PST

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களது பதவிக்காலம் வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

இப்பதவிக்கு அடுத்த வர தகுதியானவர் பட்டியலில் உள்ளவர் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் அவர்கள்.

மங்கள்யான் முதல் கடைசியாக செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் வரை இவரது பங்களிப்பே அதிகமானது.
இவருக்கு அடுத்தபடியாக கர்நாடகாவைச் சேர்ந்த கடுவாள் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த பிரசாத் என்ற விஞ்ஞானியும் உள்ளனர்.

ஆனால் தற்போது கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் மற்றும் சோம்நாத் பணிக்கர் என்பவர்களது பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

பிரதமர் மோடி அவர்கள் இவ்விசயத்தில் உடனடியாகத் தலையிட்டு தமிழகத்தைச் சேர்ந்த சிவன் அவர்களையே தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமாய் வலைத்தளப் பதிவர்கள் சார்பாக ஒருமித்த கருத்தை முன் வைப்போமாக !

பகிருங்கள் நண்பர்களே.

- சிவ சிவா @ Relaxplzz

:) Relaxplzz

Posted: 29 Dec 2014 07:30 AM PST

:P :P Relaxplzz

Posted: 29 Dec 2014 07:23 AM PST

:P :P Relaxplzz


0 comments:

Post a Comment