Friday, 13 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகிய ஈழம்! வட்டுக்கோட்டை!

Posted: 13 Feb 2015 07:59 AM PST

அழகிய ஈழம்! வட்டுக்கோட்டை!


விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் உள்ள சிற்றூர் கீழ்வாலை. இங்குள்ள பாறைகளில்,...

Posted: 13 Feb 2015 06:43 AM PST

விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் உள்ள சிற்றூர் கீழ்வாலை. இங்குள்ள பாறைகளில், மலைக்குகைகளில், சிறுகுன்றுகளில் ஆதி மனிதர்களின் வரலாற்றைச் சொல்லும் பாறை ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன, இந்த ஓவியங்கள் ஏறக்குறைய மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த மக்களால் வரையப்பட்டவை. இத்தகு பாறை ஓவியங்கள் பெருங்கற்கால ஓவியங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இப்பாறையில் இடம்பெற்றுள்ள சில குறியீடுகள் சிந்து சமவெளிக் குறியீடுகளை ஒத்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள பாறைகளில் இடம்பெற்றிருந்த நூற்றுக்கணக்கான ஓவியங்கள், குறியீடுகள் காலவெள்ளத்தில் அழிந்த சுவடுகளை ஆங்காங்கே காண முடிகின்றது.

இங்குள்ள ஒரு ஓவியத்தில் குதிரையின் மீது ஒருவன் அமர்ந்திருக்க அவ்விலங்கைப் பிணித்துள்ள கயிற்றினைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் முன்னே செல்வது போன்றும் எதிரில் ஒரு மனிதன் எதிர்ப்படுவது போன்றும் அமைந்துள்ளது. குதிரையின் மீது அமர்ந்திருக்கும் மனிதன் ஆண் என்பதை அவனின் பரந்த தோள்களை வைத்து ஊகிக்கமுடின்றது. கயிற்றினை பிடித்துக் கொண்டு போவது பெண் என்பதை குறுகிய இடுப்பை வைத்தும், சிறிய தோள்களை வைத்தும் ஊகிக்க முடின்றது. இங்கு மனிதர்களின் முகங்கள் பறவைகளின் அலகுகளோடு தீட்டப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ள குன்றுக்கு அருகே அவ்வோவியங்களைத் தீட்டிய ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்றும் உள்ளது. அந்தக் குகையில் கிட்டத்தட்ட முப்பது அல்லது நாற்பதுபேர் வசித்திருக்கக்கூடும் என்று ஊகிக்க முடிகிறது. ஆதி மனிதர்களின் இந்தக் குகையை ஒட்டி நீர்ச்சுனை ஒன்று உள்ளது. எத்தகைய வறட்சியிலும் வற்றாத இந்தச் சுனைநீரை அந்த ஆதிமனிதர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் சமீபத்திய காலத்தில் இந்த பாறைகள் ஜல்லிக்காக வெடிவைத்து தகர்க்கப்பட்டு வருவது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.

@சசிதரன்


அழகு தமிழ்நாடு! திருப்பரங்குன்றம்!

Posted: 13 Feb 2015 05:38 AM PST

அழகு தமிழ்நாடு! திருப்பரங்குன்றம்!


Ancient Tamil Civilization: Copper swords found Eight double-edged copper sw...

Posted: 13 Feb 2015 02:44 AM PST

Ancient Tamil Civilization:


Copper swords found

Eight double-edged copper swords belonging to 400 B.C. were unearthed in the Appukkal hillock near Anaicut in Vellore taluk recently.

Appukkal has already been the site of excavation by the Archaeological Department of the Madras University in 1977 and 1979.

According to Mr. M. Gandhi, Curator of the Government Museum, Vellore, the study of the swords revealed evidence of the prevalence of chalcolithic culture in Tamil Nadu. The swords varied in length 24 and 33 inches.

These swords known as `treasure trove' swords were handed over to the Government Museum, Vellore on the orders of Mr. R. Sivakumar, Collector of Vellore district.

http://www.thehindu.com/2000/09/09/stories/0409223p.htm

"The excavations at Appukkallu further confirm the migration of iron producing Black and red ware people into NorthArcot region around c. 500 BC. The village Appakkallu lies 1 km froth Anaicut n Vellore taluk. The University of Madras excavated the habitation site in the years 1977 and 80 (Raman: IAR: 1976-77: 47). The trenches laid on six locations yielded three cultural periods and in this the period 1 yielded megalithic culture with lingering Neolithic elements in the lowest stratum. Though the Black and red ware pottery made its beginning in layer 15 (APKLI), the succeeding, two layers (14,13) formed the peak of its cultural activity at Appakkalu. This was revealed by the profuse occurrence of very fine variety of thin Black and red ware with lustrous polish and all black ware along with a large quantity of iron slag in these layers.
"

The charcoal collected from a pit sealed by layer 12 in APKL-1, which overlies layer 13,14. and 15 with a cultural deposit of 0.97 metres, has given a C" determinationm of 300 BC (B.S. 2300±140). The layer 15 yielded along with Black and red ware pottery a few grounds stones of indeterminate shapes devoid of Neolithic pottery (IAR: 1976-77: 47). The lingering of pre-megalithic elements at the beginning of period I is further established at other sites like viz., Mallappadi, Kallerimalai and Malaiyamputtu in North Arcot district. The occurrence of iron slag in large quantities in layer 14 of APKL I indicate that the Black and red ware people at Appakkallu smelted iron and produced artefacts in large numbers locally at a time which is coeval to Paiyampalli c. 500 BC.

http://matheritage.nmlindia.org/23/1/92-103.PDF

http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201987-88%20A%20Review.pdf

அப்புக்கல்லு

செப்பு வாள்கள்

அப்புக்கல்லு வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டுப் பகுதிக்கு அருகில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் அணைக்கட்டில் இருந்து 7 அயிர் மாத்திரி (kilo meter) தொலைவில் கிடக்கின்றது. இது சிறு குன்றுகளாலும், நெல்வயல்களாலும் அதோடு ஒரு கால்வாயாலும் சூழப்பட்டு உள்ளது. இது குன்றின் அடிவாரத்தே அமைந்த ஒரு செழிப்பான சிற்றூர். புதியகற்காலக் குடியேற்றங்கள் மலையைச் சுற்றிலும் இருந்தன. புதிய கற்கால மக்கள் வழக்கமாக குன்றின் அடிவாரத்திலோ அல்லது குன்றுகளின் உச்சி மீதோ வாழ்ந்தனர். அவர்கள் தம் குடியிருப்பிடத்தை ஊன்றுவதற்காக குன்றின் உச்சியில் ஒரு இடத்தைத் தெரிவு செய்வர். இக்குன்றுகள் சரிவாகவும் கால்களால் ஏறத்தக்கனவாகவும் இருக்கும்.

இங்கு 1977 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறையினால், முனைவர் கே.வி. இராமன் தலைமையில் முனைவர் சா. குருமூர்த்தி மற்றும் ஏ. சுவாமி ஆகியோர் இணைந்த ஒரு குழுவால் குன்றின் உச்சியில் உள்ள பாறைத்துண்டங்களில் (debris) அகழிகளைத் தோண்டி தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வுகள் அரை மணிக்கல் மணிகள் போன்ற தொல்பொருள்களையும், ஒரு சில புதியகற்கால கோடாரித் துண்டுகளையும் ஈட்டித் தந்தன. இத்தளத்தின் மட்கலத்தொழில் புதியகற்கால நாகரிகத்திற்கே தனிக்கூறாய் உரிய மட்கலங்களான மங்கிய சிவப்புநிற மட்கலங்களையும் சாம்பல்நிற மட்கலங்களையும் அதிகளவில் கொண்டிருந்தது. இந்த அகழாய்வுகள் சிறு அளவான மட்கலங்களையும், தொல்பொருள்களையுமே ஈட்டித் தந்தன; இது வேலூர் மாவட்டத்தில் புதிய கற்காலக் குடியேற்றங்கள் நிலைப்பட்டிருந்ததை சுட்டுகின்றது.

அப்புக்கல்லு தமிழ்நாட்டின் இரண்டாவது புதியகற்காலத் தளம் ஆகும், பிறிதொரு தளம் நீண்ட காலத்திற்கு முன்னீடு இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையால் (ASI) அகழாய்வு நடத்தப்பட்ட பய்யம்பள்ளி ஆகும்.

மட்கலங்களின் வடிவங்கள், வகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தளம் சற்றொப்ப கி.மு 2,000 காலத்தது என நாள்குறிக்கலாம். பொதுவாக, தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகம் கி.மு. 4,000 க்கு முன்பில் இருந்தே நாள் குறிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும், இந்த தளத்திற்கு கிட்டும் கரிமம் 14 (C 14) காலக் கணக்கீடு கி.மு.380 க்கு வருகின்றது என்பதால் இது புதியகற்கால நாகரிக்த்தைத் தொடர்ந்து வரும் இரும்புக் காலத்தைச் சார்ந்ததாகலாம்.


வாய்க்காலில் குளியல்...

Posted: 13 Feb 2015 01:53 AM PST

வாய்க்காலில் குளியல்...


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


ஊர் பெருமைகள் என்ற தலைப்பில் நமது முகப்புத்தக பக்கத்தின் வாயிலாக கேட்கப்பட்ட கரு...

Posted: 13 Feb 2015 09:34 AM PST

ஊர் பெருமைகள் என்ற தலைப்பில் நமது முகப்புத்தக பக்கத்தின் வாயிலாக கேட்கப்பட்ட கருத்துக்களுக்கு, கிடைத்த தகவல்களை முடிந்தவரை ஒருங்கிணைத்து ஒரு முழுப்பதிவாக நமது இணையதளத்தில் பதிவிட்டுள்ளோம். படித்துப் பார்த்து அதில் ஏதேனும் மாற்றம் வேண்டுமா என்பதை தெரிவிக்கவும்....

இதில் கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், மணப்பாறை பற்றிய சிறந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நண்பர்களுக்கு நன்றி... இதேபோல் மற்ற ஊர்களின் பெருமைகளை இந்தப் பதிவில் கருத்துக்களில் பகிரவும்....

பா விவேக்


தமிழ் அவமானம் அல்ல தமிழா நம் அடையாளம் !!!!!!!!! நன்றி : முருகேசன் பா விவேக்

Posted: 13 Feb 2015 02:51 AM PST

தமிழ் அவமானம் அல்ல தமிழா நம் அடையாளம் !!!!!!!!!

நன்றி : முருகேசன்

பா விவேக்



@ Indupriya MP ...

Posted: 12 Feb 2015 07:59 PM PST

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


குட்நைட் செல்லம்ஸ் <3

Posted: 13 Feb 2015 10:00 AM PST

குட்நைட் செல்லம்ஸ் ♥


வாய்ப்புக்களுக்காக காத்திருக்காதீர்கள்,, வாய்ப்புக்களை உருவாக்கி கொள்ளுங்கள்,,

Posted: 13 Feb 2015 09:53 AM PST

வாய்ப்புக்களுக்காக காத்திருக்காதீர்கள்,,
வாய்ப்புக்களை உருவாக்கி கொள்ளுங்கள்,,


:) Relaxplzz

Posted: 13 Feb 2015 09:45 AM PST

:) Relaxplzz

Posted: 13 Feb 2015 09:38 AM PST

:) Relaxplzz

Posted: 13 Feb 2015 09:30 AM PST

பள்ளியில் வரும் முதல் காதல் மறக்கமுடியாதது... ஆமா விஷயம் தெரிஞ்சு பி.டி சார் போ...

Posted: 13 Feb 2015 09:25 AM PST

பள்ளியில் வரும் முதல் காதல் மறக்கமுடியாதது...

ஆமா விஷயம் தெரிஞ்சு பி.டி சார் போட்டு வெளுத்தார்ல எப்படி மறக்க முடியும்? :O

- Boopathy Murugesh

மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள...

Posted: 13 Feb 2015 09:10 AM PST

மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை

அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப் பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.

விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.

ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில்
ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது. அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.

ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.

அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.

"இப்போ வலி போயிடிச்சா" அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.

பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கினார்கள். பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.

அதை பார்த்த விழா குழுவினரும், பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டினார்கள்.

ஆமாம். இது உண்மை.

இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், ஹைதராபாத்தில் .

அந்த விழாவை நடத்தியது மனநலம்
குன்றியவர்களுகான தேசிய நிறுவனம். அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.

ஆனால்... குணத்தால்?

இதிலிருந்து அவர்கள் உலகத்திற்கு சொல்வது என்ன?

மனித ஒற்றுமை மனித நேயம் மனித சமத்துவம்
(படித்து நெகிழ்ந்த சம்பவம் உங்களோடு)
வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள். அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும்.

# தூய்மை, பொறுமை,விடா முயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்...

Relaxplzz

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 13 Feb 2015 09:10 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


;-) Relaxplzz

Posted: 13 Feb 2015 09:05 AM PST

நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அத...

Posted: 13 Feb 2015 08:56 AM PST

நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு

நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதற்கு அந்த நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம்.
இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது என்று பல நன்மைகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரித்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும் நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும். ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும்.

ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.அழகைக் கெடுக்கும் வகையில் உடல் எடை அதிகமாக உள்ளதா? அப்படியானால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினையும் பருகி வர வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும் நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது. அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.

நெல்லிக்காயின் மற்றொரு அழகு நன்மைகளில் ஒன்று தான் நரை முடி பிரச்சனை. அதற்கு தினமும் நெல்லிக்காய் சாற்றினை பருகி வர வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நரைமுடியை தடுத்து நிறுத்தும். உலகில் இருக்கும் தொல்லையில் பெரிய தொல்லை என்றால் அது பொடுகு தொல்லை என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய பொடுகு தொல்லையை நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதால் தடுத்து நிறுத்தலாம்.நெல்லிக்காய் சாற்றின் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றி, பிரச்சனை இல்லாத பொலிவான சருமத்தை தரும்.

மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான். ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது.


"உணவே மருந்து"

;-) @relaxplz

Posted: 13 Feb 2015 08:53 AM PST

சத்தியம் பண்ணு இனிமேல் எங்க வீட்டு பூச்செடிய சாப்ட மாட்டேன்னு :)

Posted: 13 Feb 2015 08:47 AM PST

சத்தியம் பண்ணு இனிமேல் எங்க வீட்டு பூச்செடிய சாப்ட மாட்டேன்னு :)


"குட்டிப் பட்டாளம்" - 2

நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!! //ஊழலில் முழ்கி வாழும் அரசியல் வாதிகள், ஊ...

Posted: 13 Feb 2015 08:40 AM PST

நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!

//ஊழலில் முழ்கி வாழும் அரசியல் வாதிகள், ஊர் சொத்தை அடித்து தன் வீட்டு உலையில் போடும் அபகரிப்பாளர்கள், கள்ள நோட்டு கும்பல்கள், வரி ஏய்ப்பு செய்யும் வசதியானவர்கள் இவர்களிடம் பிடுங்க வேண்டியதுதானே?//

வெளிநாட்டில் இருந்து டிவி கொண்டு சென்றால் 38% கஸ்டம் வரி கட்டவேண்டும் !!!!

30,000/-க்கு 10,815/- வரி :O

Flight : EK522, Date : 17/01/2015

-----------------------------------------------------------------------------
ஒரு நாட்டின் பொருளாதரத்தை சீர்படுத்தும் அன்னியச் செலவாணியை அதிகப்படுத்துவதில் இன்று முன்னிற்ப்பது, வளைகுடா வாழ் உழைப்பாளர்களே! அவர்களுக்கு இதுவரை அரசு எந்த சலுகையிம் அழைத்ததில்லை ஆனால் அடி மடியில் கைவைக்காமல் இருந்ததில்லை... அது பிளைட் டிக்கட் ஆனாலும் சரி கஷ்டம்ஸ் கஷ்டங்கங்களானலும் சரி.கொள்ளையடிச்சு, வரி ஏய்ப்பு செய்து இந்திய பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் சிலர் உலக வங்கியில் பதுக்கியிருக்கும் பணத்தை கொண்டுவர வக்கில்லை...

ஊழலில் முழ்கி வாழும் அரசியல் வாதிகள், ஊர் சொத்தை அடித்து தன் வீட்டு உலையில் போடும் அபகரிப்பாளர்கள், கள்ள நோட்டு கும்பல்கள், வரி ஏய்ப்பு செய்யும் வசதியானவர்கள் இவர்களிடம் பிடுங்க வேண்டியதுதானே?தப்புத் தப்ப சுயநலத்தோட யோசிக்கிறீங்க! ஆக மொத்தம் நீங்க அரசியல் நடத்த...ஊரில் சிலர் உண்டு கொளூத்து வாழ.. வாழ்வாதாரம் இழந்து வாடும் வளைகுடா தொழிலாளர்கள்தான் கிடைத்தார்களா..?பாவம்! குடும்பம் இழந்து, குட்டிகள் இழந்து வியர்வை சிந்தி, கடும் குளிரிலும், கொல்லும் வெப்பத்திலும் உழைத்து, கிடைத்த இடை வேளைகளில் கிடைக்கும் நிழலில் கீழே கிடந்து உறங்கி, தினமும் 12 மணி நேரம் உழைத்து கஷ்டப்படும் (lcd LED கொண்டுவரும் வெளிநாட்டினர் வளைகுடா காரர்களே) வெளிநாட்டினர்தான் கிடைத்தார்கள? படுபாவீங்களா?

வாழ்நாளில் பெரும் பகுதியை தன் தாய்நாட்டில் வாழமுடியாமல், வெளிநாட்டில் தொலைத்து இறுதியில் நோய்வாய்பட்டு ஊர் திரும்பும் வளைகுடா தியாகிகளின் கண்ணீரை கண்டு கொள்ளாமல் தன் மகளுக்கு, மகனுக்கும், மனைவிக்கு என்று வாங்கிக் கொண்டு போகும் பொருள்களுக்கு அநியாய வரி விதித்து, அவன் ஆசையில் மண் அள்ளிப் போடும் செயல். இது கண்டிக்கத்தக்கது என்பதை உண்ர்ந்து இதனை உங்கள் சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!

Relaxplzz


:) Relaxplzz

Posted: 13 Feb 2015 08:31 AM PST

புரிந்தவர்கள் 'லைக்' செய்துவிட்டு சரியான தலைப்பு வைக்கவும் !!! (y)

Posted: 13 Feb 2015 08:24 AM PST

புரிந்தவர்கள் 'லைக்' செய்துவிட்டு
சரியான தலைப்பு வைக்கவும் !!! (y)


பாஸ் இந்த லவர்ஸ்டேக்கு என்ன பண்ண போறீங்க? இதுக்கு முந்தைய லவர்ஸ்டேக்கு என்ன பண்ண...

Posted: 13 Feb 2015 08:17 AM PST

பாஸ் இந்த லவர்ஸ்டேக்கு என்ன பண்ண போறீங்க?
இதுக்கு முந்தைய லவர்ஸ்டேக்கு என்ன பண்ணுனோம்?
ஒன்னும் பண்ணல
அதேதான் இப்பவும் :P :P

- Kali muthu


This will surely surprise you.. a must watch..

Posted: 13 Feb 2015 08:14 AM PST

ஒரு சின்னப் பொண்ணு சிவன் கோயிலுக்கு போச்சு,, "சாமி எனக்கு ஒரு சைக்கிள் வேணும்னு...

Posted: 13 Feb 2015 08:12 AM PST

ஒரு சின்னப் பொண்ணு சிவன் கோயிலுக்கு போச்சு,, "சாமி எனக்கு ஒரு சைக்கிள் வேணும்னு வேண்டிகிச்சு"
ஆனா 10 நாள் ஆகியும் அந்தப் பொண்ணுக்கு சைக்கிள் கிடைக்கல, 11வது நாள் அதே கோயிலுக்கு அந்தப் பொண்ணு வந்துச்சு,, வாசல்ல

இருந்த சின்னப் பிள்ளையார் சிலைய யாருக்கும் தெரியாம எடுத்துட்டு உண்டியல்ல ஒரு லெட்டர் ஒன்ன போட்டு போயிடுச்சு.....

அந்த லெட்டர்ல என்ன எழுதிருந்ததுன்னா?
இன்னைக்கு நைட்டுக்குள்ள சைக்கிளோட என் வீட்டுக்கு வந்தீன்னா உன் பையன நான் உன்கிட்ட ஒப்படைக்கிறேன்..... இல்லேன்னா மேட்டர் பினிஷ்....

:D :D

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

>>நம் கலாச்சாரப்படி, ‘வணக்கம்’ என்று இரு கைகளையும் இணைத்து நெஞ்சத்துக்கு நேராக வ...

Posted: 13 Feb 2015 08:00 AM PST

>>நம் கலாச்சாரப்படி, 'வணக்கம்' என்று இரு கைகளையும் இணைத்து நெஞ்சத்துக்கு நேராக வைத்து அனைவரையும் வரவேற்போம்.

>>அதை மரியாதை செலுத்தும் ஒரு குறியாக காலம் காலமாக நாம் பின்பற்றி வருகிறோம். இறைவனை தொழும் பொழுது கைகளை இணைத்து நெற்றிவரை வைத்து வணங்குவோம். இவற்றின் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

>>இரு கைகளை இணைக்கும் பொழுது, எல்லா விரல்களின் நுனியும் இணைக்கப்படுகிறது; இது நம் கண்கள், காதுகள் மற்றும் மூளையின் நினைவு நரம்புகளைத் தூண்டுகின்றன.

>>விரல் நுனிகளை அழுத்தி நெஞ்சத்துக்கு நேராக வைப்பதன் மூலம், நாம் சந்திக்கும் நபரின் முகமும், குரலும் நம் நினைவில் பதியும்.

>>அதுபோல, கைகளை இணைத்து நெற்றிக்கு நேராக வைத்து வணங்குவது நம் எண்ணங்களை ஒருநிலைப் படுத்தி, முழுமையாக கவனம் செலுத்த உதவும்.

>>மேலும், பிறரைச் சந்தித்தால் கை குலுக்குவது பெரும்பாலும் தீய உயிரிகளைப் (germs) பரப்பும்.

>>ஆனால், நம் கலாச்சாரப்படி கை கும்பிட்டு வணங்குவது தீய உயிரிகளைப் பரப்பாது.

Relaxplzz


"சில அதிசயங்கள் - தகவல்கள்" - 2

சென்னை புறா, பருந்து நிலையம் :P :P

Posted: 13 Feb 2015 07:55 AM PST

சென்னை புறா, பருந்து நிலையம் :P :P


நீங்கள் இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது ...இது ஒரு தனியார் பள்ளி...

Posted: 13 Feb 2015 07:50 AM PST

நீங்கள் இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது ...இது ஒரு தனியார் பள்ளி என்றா இல்லை ....

நண்பர்களே இது ஒரு அரசு பள்ளி நம்ப முடிகறதா உங்களால் ....

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
இராமம்பாளையம்,காரமடை ஒன்றியம்
மேட்டுப்பாளையம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்.


தில்லு முல்லு ரஜினியின் நடிப்பு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 13 Feb 2015 07:40 AM PST

தில்லு முல்லு ரஜினியின் நடிப்பு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 13 Feb 2015 07:30 AM PST

நீ அழைத்து வந்தவர்தான் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் ! நீ அழைத்து வந்...

Posted: 13 Feb 2015 07:24 AM PST

நீ அழைத்து வந்தவர்தான் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் !

நீ அழைத்து வந்தவர்தான் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன்.இது கேட்ட பின்னர்தான், எனக்கு அச்ச உணர்வே வந்தது
இன்று வரை தலைவனை தொட்டு அழைத்த ஒரு காவல் அதிகாரி என்னும் சிறப்பு திரு.நந்தகுமார் அவர்களுக்கு கிடைத்துள்ளது,

வேலுபிள்ளை பிரபாகரனை கைது செய்த அன்றை நாளில் துணை ஆய்வாளராக இருந்தவர் திரு. நந்தகுமார்.அந்த நாளில் நடந்தவற்றை விளக்கினார். "யாரோ இரண்டு தரப்பு துப்பாக்கியால் சண்டையிட்டுக் கொண்டார்கள் என தகவல் வர, சில காவலர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துக் கொண்டு போனேன். சம்பவம் நடந்த அந்த ஹோட்டல் அருகில் இருந்தவர்கள், சண்டையிட்டவர்கள் அருகில் உள்ள அன்றைய நாகேஷ் தியேட்டருக்கு பக்கத்தில் உள்ள சிறிய சந்தில் இருப்பதாக சொன்னார்கள். நாங்கள் அங்கு சென்ற போது சிலர் இருந்தனர். அவர்களை அழைத்து, என்ன சண்டையிட்டுக் கொண்டீர்களா, வாருங்கள் காவல் நிலையத்திற்கு என சொன்ன உடன் எவ்வித எதிர்ப்புமின்றி வந்து விட்டனர்.

அழைத்து வந்தவர்களை காவல் நிலையித்தில் அமர வைத்த சிறிது நேரத்தில் தமிழக காவல்துறை தலைவரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. என்னடா இது, எதற்கு தமிழக காவல்துறை தலைவரே அழைக்கிறாறே என நினைத்து, சொல்லுங்க அய்யா என்றேன். அவர், நீ இப்போது கைது செய்து அழைத்து வந்த நபர்கள் யாரென்று தெரியுமா? என வினவினார். நான், ஏதோ இலங்கை தமிழர்கள்-ன்னு சொன்னார்கள் சார், என்றதும், நீ அழைத்து வந்தவர்தான் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் - இது கேட்ட பின்னர்தான், எனக்கு அச்ச உணர்வே வந்தது. அதன் பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் உங்களிடம் ஏதேனும் ஆயுதம் இருக்கிறதா என கேட்க, அவர்கள் வைத்திருந்த பிஸ்டலை எடுத்து அமைதியாக கொடுத்தனர். அதனை வாங்கி வைத்து கொண்டோம்.

பின்னர் நினைத்தோம், கைது செய்யப்பட்டவர்கள் தங்களது பிஸ்டலால், ஒரு முறை சுட்டிருந்தாலும், நாங்கள் கைது செய்யாமல் ஓடியிருப்போம். ஆனால், மிக அமைதியாக பெருந்தன்மையோடு அவர்கள் நடந்து கொண்டதை இன்று நினைத்தாலும், பெருமையாகவும், அவர்கள் மீது ஒரு உயர்ந்த மதிப்பும் வருகிறது. அதுபோல், நான் கைது செய்தேன் என நினைக்கும் போது வருத்தமாய் உள்ளது."

- அருண் குமார்


"வரலாற்றுப் பதிவுகள்"

:) Relaxplzz

Posted: 13 Feb 2015 07:16 AM PST

நமக்கெல்லாம் சாப்பாடு போடுற விவசாயி, இலவச அரிசி வாங்க ரேசன் கடைல வரிசையில் நிற்க...

Posted: 13 Feb 2015 07:10 AM PST

நமக்கெல்லாம் சாப்பாடு போடுற விவசாயி, இலவச அரிசி வாங்க ரேசன் கடைல வரிசையில் நிற்கிறான்..

- புரட்சி


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4

:) Relaxplzz

Posted: 13 Feb 2015 06:30 AM PST

:P Relaxplzz

Posted: 13 Feb 2015 06:20 AM PST

பெண்: காதலர் தின வாழ்த்து அட்டை இருக்கா சார் ..? கடைக்காரர்: ம்ம் இருக்கு மேடம்...

Posted: 13 Feb 2015 06:10 AM PST

பெண்: காதலர் தின வாழ்த்து அட்டை இருக்கா சார் ..?

கடைக்காரர்: ம்ம் இருக்கு மேடம் ..!

பெண்: நான் உன்னை மட்டும் காதலிக்கிறேன் ன்னு எழதுன அட்டை இருக்கா..?

கடைக்காரர்: ம்ம் இருக்கு மேடம்..!

பெண்: அப்டின்னா அதுல ஒரு 12 அட்டை குடுங்க..!

கடைக்காரர் :????????????? :O :O

Relaxplzz