Friday, 10 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


பெரும்பாலான மக்களுக்குப் பதவி, புகழ் போன்றவைகள் கிடைக்காததற்குக் காரணம் என்னவென்...

Posted: 10 Oct 2014 08:56 PM PDT

பெரும்பாலான
மக்களுக்குப் பதவி, புகழ்
போன்றவைகள்
கிடைக்காததற்குக்
காரணம் என்னவென்றால்
அவர்களுக்குச்
சிறிது கூட
சம்பந்தமில்லாத
விஷயங்களைத்
தெரிந்து கொள்வதில்
பெரும்பாலான
நேரத்தை வீணடித்து விடுவது தான்.
.
.
-பெர்னார்டு ஷா

பொன்னியின் செல்வன் - புது வெள்ளம்!!

Posted: 10 Oct 2014 10:31 AM PDT

பொன்னியின் செல்வன் -
புது வெள்ளம்!!


காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற வாய்ப்பே கிடையாது. - மோடி # அப்படித்தான் நாங்களு...

Posted: 10 Oct 2014 09:56 AM PDT

காங்கிரஸ் மீண்டும்
எழுச்சி பெற
வாய்ப்பே கிடையாது.
- மோடி

# அப்படித்தான் நாங்களும்
நெனச்சோம். ஆனா, உங்க
ஆட்சிய
பார்த்தப்பிறகு அது நடந்துருமோன்னு பயமா இருக்கு.

அழகி! @ஓவியர் மாருதி

Posted: 10 Oct 2014 09:19 AM PDT

அழகி!

@ஓவியர் மாருதி


சோழர்களின் கடற்போர் ஓவியமாக! @ஓவியர் மாருதி

Posted: 10 Oct 2014 09:14 AM PDT

சோழர்களின்
கடற்போர் ஓவியமாக!

@ஓவியர் மாருதி


இலவசங்கள் யார் எறிந்தாலும் அவை தூண்டில் முள் இரை என்பதையும் வாய்க்குப் போடும் பூ...

Posted: 10 Oct 2014 08:06 AM PDT

இலவசங்கள் யார்
எறிந்தாலும்
அவை தூண்டில் முள்
இரை என்பதையும்
வாய்க்குப் போடும்
பூட்டு என்பதையும்
உணர மறுக்கின்ற நாம்
நிறைந்து கிடக்கும்
வரையில்
ஆட்சியாளர்கள்
எவராயினும்
நாட்டை சுரண்டத் தான்
செய்வார்கள்
என்பது நிதர்சனம்.

@தஞ்சை தேவா

ஓவியர் இளையராஜா நவீன கால ஓவியர் கிராமிய பெண்களை ஓவியம் வரைவதில் மிகவும் வல்லவர்...

Posted: 10 Oct 2014 07:10 AM PDT

ஓவியர் இளையராஜா நவீன
கால ஓவியர் கிராமிய
பெண்களை ஓவியம்
வரைவதில் மிகவும்
வல்லவர் .
ஒளி அளவுகளை மிக
துல்லியமாக
புகைபடத்திற்கு நிகராக
பிரதிபலிக்கும்
படி வரைய கூடிய
திறமைசாலி.
கும்பகோணம் அருகில்
உள்ள செம்பியவரம்பல்
என்னும்
கிராமத்தை சேர்த்தவர் .
இவர் வரைந்த ஓவியங்கள்
பெரும்பாலும்
முகநூல்களில் அதிகம்
உலாவுகின்றன .ஆனால்
அது யாருடைய ஓவியம்
என
தெரியாமலேயே நிறைய
பேர் லைக் செய்கிறார்கள் .
அந்த
பெருமைக்கு சொந்தக்காரர்
இவர் தான்.இவர் வரையும்
ஒவ்வொரு ஓவியத்திலும்
உயிரோட்டம் இருக்கும் .


பஞ்சபூதங்களால் ஆனதுதான் உடல் என்று சொல்வார்கள். இந்தியாவில் இவை நிலம், நீர், காற...

Posted: 10 Oct 2014 07:00 AM PDT

பஞ்சபூதங்களால் ஆனதுதான் உடல் என்று சொல்வார்கள். இந்தியாவில் இவை நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம். அனால் சீனாவில் காற்றையும் ஆகாயத்தையும் எடுத்துவிட்டு உலோகத்தையும் மரத்தையும் சேர்த்து நிலம், நீர், உலோகம், மரம் மற்றும் நெருப்பு என்று சொல்லி இருக்கிறார்கள்! இன்னும் சில நாடுகளில் ஆகாயத்திற்கு பதிலாக ஆவியை சொல்வதும் உண்டு!
உண்மை என்ன?

வீட்டை கட்ட அடிப்படையான தேவை செங்கல், சிமென்ட், மணல், ஜல்லி, கம்பி, ஆகியன. அதே போல உடல் எவற்றால் ஆனது என்று நம் முன்னோர்கள் உட்கார்ந்து யோசித்ததில் அவர்கள் அடைந்த பதில்கள்தான் இந்த ஐந்து அடிப்படை கட்டுமான அம்சங்கள். பஞ்சபூதங்கள் என்று வணங்கத்தக்க பெயர் ஒன்றும் கொடுத்துவிட்டார்கள். அவர்களால் இதற்கு மேல் அடிப்படையாக செல்ல இயலவில்லை. அவ்வளவுதான். கடந்த 400 வருடங்களாக அறிவியல் இதே கேள்விக்கான பதிலை தேடி கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் வெகு ஆழமாக.

நீர் என்பது ஒரு பொருள் அல்ல ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் என்னும் தனிமங்கள் சேர்ந்தது அது (H2O). காற்று என்பது நைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வாயுநிலை தனிமங்களால் ஆன கலவை. நிலம் என்பது பல தனிமங்களின் திடக்கலவை. கல்லும் மண்ணும் பெரும்பாலும் சிலிகன் மற்றும் ஆக்சிஜன் தனிமங்களின் கலவை (SiO2). இப்படி இரும்பு, அலுமினியம், தாமிரம் என பலவகை தனிமங்கள் நிலத்தில் உள்ளன (Fe, Al, Cu, etc). மொத்தம் எத்தனை தனிமங்கள் தெரியுமா? 92. இவை தவிர இன்னும் செயற்கையாகவும் சில தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் அவற்றின் பண்புகளின் அடிப்படையில் அழகாக தொகுத்தும் ஆகிவிட்டது. அதுதான் தனிம வரிசை அட்டவணை (Periodic Table of Elements). நம் உடலுக்கு இந்த எல்லா தனிமங்களும் தேவை இல்லை. அவற்றில் சில மட்டும் இருந்தாலே போதும்.

நெருப்பு ஒரு பொருளே அல்ல. அது ஆற்றல். எந்திர ஆற்றல், ஒளி ஆற்றல், வேதி ஆற்றல், மின் ஆற்றல் என நீளும் ஆற்றலின் பல வடிவங்களில் ஒன்று நெருப்பு. ஆகாயம் என்பது ஏதுமற்ற வெளி.
பஞ்சபூதங்கள் என்ற நமது மரபான ஞானத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளும் காரணம் அது பல நூற்றாண்டுகளாக சொல்லப்பட்டு நம் கலாச்சாரத்தில் கலந்துவிட்டதால்தான். Periodic Table நமது சமீபத்திய அறிவு என்பதால் அதை சாதாரணமாக கடந்து செல்கிறோம். ஆனால் அது ஆழமான உண்மை. அதை வணங்க வேண்டாம். அறிந்து கொள்வதே போதும். அறிவியல் அறிதலும் ஒரு ஆன்மிக பயணமே.

@சகலகலா ஜீன்ஸ்


வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் ! தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றை...

Posted: 10 Oct 2014 05:50 AM PDT

வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் !

தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது.

வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.

அடர் சிவப்பு – cramoisy

அடர் நீலம் - perse / smalt

அடர் மஞ்சள் - gamboge

அயிரை/ அசரை - sandy colour

அரத்த(ம்) (நிறம்) - heliotrope / haematic

அருணம் - bright red, colour of the dawn;

அவுரி(நிறம்) - indigo

அழல் நிறம் – reddish colour of fire

ஆழ் சிவப்பு - cinnabar

ஆழ் செந்நீலம் (ஊதா) - claret

ஆழ் பழுப்பு - brunneous

ஆழ் பைம்மஞ்சள் - citrine

ஆழ்சிவப்பு - cramoisy

ஆழ்நீலச் சிவப்பு – aubergine

இடலை (ஆலிவ்வு) (நிறம்) – olivaceous

இருள் சிவப்பு - puccoon

இருள்சாம்பல் - slate

இள மஞ்சள் - flavescent / primrose

ஈய(ம்) (நிறம்) - plumbeous

ஈரல்நிறம் - Dark red colour, purple colour

உறைபால்(நிறம்) – whey

எண்ணெய்க்கறுப்பு – dark black colour

எலுமிச்சை ம் - citreous

ஒண்சிவப்பு - cardinal

ஒளிர் செஞ்சிவப்பு - phoeniceous

ஒளிர் செம்மை - coccineous

ஒளிர் வெண்கலம் – aeneous

ஒளிர் வெண்கலம் (நிறம்) - aeneous

ஒளிர்சிவப்பு - puniceous

ஒளிர்மஞ்சள் - sulphureous / vitellary

கசகசாச் சிவப்பு - ponceau

கடல்நீல (நிறம்) - ultramarine

கடற்பச்சை - cerulean

கத்தரிநீலம் - periwinkle நித்திய கல்யாணி

கபிலை / புகர்நிறம் - Tawny, brown or swarthy colour;

கரு (நிறம்) - sable

கருஞ்சிவப்பு - porphyrous/purpureal

கரும்பச்சை – corbeau

கருமை - nigricant / nigrine

காயாம்பூ (நிறம்) - purple colour

காளிமம் - black colour

கிளிச்சிறை - Gold resembling the parrot's wing in colour

குங்குமச் சிவப்பு- vermeil

குங்குமப்பூ(நிறம்) - croceate / saffron

குரால் - Dim, tawny colour;

குருதிச்சிவப்பு - erythraean / sanguineous / incarnadine

குருதிச்செம்மை - vermilion

கோமேதக(நிறம்) -topaz

சருகிலை (நிறம்) - filemot

சாம்பல் – cinerious

சாம்பல் பச்சை - caesious / sage

சாம்பல் மஞ்சள - isabelline

சுடர் (நிறம்) – flammeous

சுடுமண்(நிறம்) - terracotta

சுதை வெண்மை - cretaceous

செக்கர் – reddish sky

செங் கருநீல(நிறம்) - violet / violaceous

செங்கருப்பு - piceous

செங்கல்மங்கல் - Dim red colour

செங்கற்சிவப்பு - lateritious / testaceous

செந்தீவண்ணம் - colour of glowing fire

செந்தூரச்சிவப்பு – minium

செப்புநிறம் - Dark-red colour

செம்பட்டை - Brown colour of hair

செம்பவளம் - deep red colour;. Crimson colour; மிகு சிவப்பு

செம்பழுப்பு - sinopia/ sorrel

செம்பு - Copper colour;.

செம்பூச்சி - kermes

செம்பொன் - titian

செம்மஞ்சள் -jacinthe

செவ்வல் (செந்நிறம்) - Redness;

சோணம் - Red colour, crimson colour

தசை (நிறம்) - sarcoline

தவிட்டுநிறம் - Brown, dun colour

திமிரம் – Colour ofDarkness

தும்பை நிறம் - pure white colour

துமிரம் - Deep red colour .

துரு (நிறம்) – ferruginous

துருச் சிவப்பு - rubiginous

துவர் (சிவப்பு) - Scarlet Red colour,

துவரி (காவிநிறம்) - Salmon colour

தூயபழுப்பு - sepia

தெள்ளுப்பூச்சி (நிறம்) - puce

நட்டுச்சினைமண் - A kind of earth of the colour of crab's spawn

நல்சிவப்பு – coquelicot

நறுமஞ்சள் - lutescent

நன்மஞ்சள் - luteolous

நன்னிறம் - White colour

நீல (நிறம்) – azuline

நீல மணி - sapphire

நீலச்சாம்பல் - glaucous / cesious / gridelin / lovat

நீலச்சிவப்பு – amaranthine / solferino

நீலப்பச்சை – turquoise / viridian

பச்சை – chlorochrous

பசுமை - virid

பழுக்காய் - Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut;

பழுப்பு மஞ்சள் - fulvous

பழுப்புச் சிவப்பு - castaneous / rufous / russet / umber

பழுப்புச்சாம்பல் - greige / taupe

பளீர்சிவப்பு - stammel

பனிவெண்மை - niveous

பாணிச்சாய் ( கள்போன்ற முத்துநிறம்.) - Colour of a class of pearls, resembling that of toddy

பால்வண்ணம் – white colour

புகர் நிறம் - tawny / tan

புகைக்கரி – fuliginous

புள்ளிச் சாம்பல் - liard grey

புற்பச்சை - prasinous

புறவு (நிற) - columbine

பூஞ்சல் - Brown- ish colour; மங்கனிறம்

பூஞ்சாயம்(அழுத்தமன சிவப்பு) - Deep, ruddy colour;

பூவல்- Red colour

பைந்நீல(நிறம்) - teal

பைம்பொன் - chrysochlorous

பொன் மஞ்சள் - goldenrod

பொன்மஞ்சள் luteous

பொன்மை – aurulent

மகரம் - Pink colour

மங்கல் பழுப்பு - fuscous

மங்கல் பழுப்பு – khaki

மங்கல்பச்சை - eau-de-nil

மஞ்சள் – xanthic / icterine / icteritious

மஞ்சள் பச்சை – chartreuse / zinnober

மஞ்சள் பழுப்பு - lurid / ochre

மஞ்சள்சிவப்பு - wallflower

மணிச்சிவப்பு - rubious

மணிநிறம் - Dark blue colour, as of sapphire;

மயில்நீலம் - pavonated

மரகதப்பச்சை - smaragdine

மருப்பு (தந்தம்) - eburnean

மல்லிகை மஞ்சள் – jessamy

மாமை- dark-brown colour

முக்கூட்டரத்தம் - Red colour produced by chewing betel, arecanut and lime

முத்துச்சாம்பல் - griseous

வளர்பச்சை - virescent

வாதுமை (நிறம்) - ibis

வான் நீலம் - cyaneous

விண் நீலம் - celeste

விழி வெண்மை – albugineous

வெங்காயப் பச்சை - porraceous

வெண்சாம்பல் - hoary

வெண்மங்கல் - leucochroic

வெண்மஞ்சள் - ochroleucous

வெளிர் நீலம் - azure

வெளிர் பச்சை - celado

வெளிர் மஞ்சள் - nankeen

வெளிர் மஞ்சள் பச்சை - tilleul

வெளிர்நீலம் - watchet

வெளிர்பழுப்பு - suede

வெளுப்பு – albicant

வைக்கோல் (நிறம்) – stramineous

- யாழறிவன்


Mallachandiram (Krishnagiri Dist.) The Archaeology department has taken steps t...

Posted: 10 Oct 2014 05:30 AM PDT

Mallachandiram (Krishnagiri Dist.)

The Archaeology department has taken steps to preserve a 2500-year-old megalithic burial site reckoned to be the largest in the State at Mallachandiram, 19 km from here.

More than 200 dolmens (tombs) of four types, dating back to the megalithic period (3 BC-3 Common Era), are found in the village. These include Cairn circles and tombs of migratory tribes. A majority of the dolmens were built of vertical slabs with portholes on the eastern side. Rectangular slabs, similar to railings, encircle these structures, which have passages made out of small rectangular slabs.

Inside the dolmens are paintings portraying human figures, bows and arrows, animals and symbols.

Department sources say the locals, unaware of their archaeological significance, dismantled a few dolmens. The damaged slabs would be rebuilt. Chemists from the department will be involved in preserving the paintings.

This burial site provides sufficient proof for the vestiges of a megalithic civilisation in a radius of 50 km in and around Mallachandiram.

A similar megalithic burial site was discovered at Irulabanda village in Chittoor district of Andhra Pradesh, which borders on Krishnagiri.

Collector Santhosh Babu said a plan was being worked out to document and preserve the pre-historic paintings and dolmens at Kuruvinayanapalli and Thalapallam, hero stones at Nagundapalayam and the megalithic habitation sites at Mallapadi and Maharajakadai.

Source:

http://www.megalithic.co.uk/article.php?sid=16084

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-
tamilnadu/article3056093.ece

Video: Mallasanthiram Dolmens

http://www.youtube.com/watch?v=HItKy-JXmrc

In Tamil

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/mallacanti.htm

http://mittaikkadai.blogspot.com/2010/10/blog-post_25.html


ஒரு பெண்ணான ஒருவள் தன் கணவனை இழந்துவிட்டால், அவளை ஓர் ஆணானவன் மறுமணம் புரிகிறான்...

Posted: 10 Oct 2014 04:35 AM PDT

ஒரு பெண்ணான ஒருவள் தன் கணவனை இழந்துவிட்டால்,
அவளை ஓர் ஆணானவன் மறுமணம் புரிகிறான்...!
இதை இந்த சமுதாயம் "வாழ்க்கை கொடுக்கின்றான் " என்று அவனைப் பெருமைப்படுத்துகிறது..!!!

இதுவே ஓர் ஆணானவன் தன் மனைவியை இழந்துவிட்டால்..,
அவனை மறுமணம் செய்யும் அந்தப் பெண்ணை இந்த சமுதாயம் எப்படி அழைக்கிறது...???

"இரண்டாம்தாரம்"...!!!???

நல்ல சமுதாயம்..!!!

ஒவ்வொரு தனி மனிதனின் விழிப்புணர்ச்சியே...
சிறந்தச் சமுதாயம் உருவாக்குவதற்கானக்
கிடைக்கபெறும் புத்துணர்ச்சி..!!!

- Nancy Jeyakumar


Posted: 10 Oct 2014 03:39 AM PDT


அமைதிக்கான நொபேல் பரிசை வென்ற இந்தியாவின் கைலாஷ் சத்யர்த்தி என்ற பெயரை பெரும்பால...

Posted: 10 Oct 2014 02:57 AM PDT

அமைதிக்கான நொபேல்
பரிசை வென்ற
இந்தியாவின் கைலாஷ்
சத்யர்த்தி என்ற
பெயரை பெரும்பாலானோர்
இந்த நிமிஷம் தான்
கேள்விப்படுகிறோம்
என்பதிலேயே நம்நாட்டு மீடியாக்களின்
லட்சணம்
பல்லிளிக்கிறது..

@ராஜேஷ் பலவேஷம்

அருவாளில் இருந்துச் சொட்டும் இரத்தத்தில் இருப்பது தான் வீரம் என்கிறவனுக்கு, ஒருப...

Posted: 10 Oct 2014 02:55 AM PDT

அருவாளில் இருந்துச் சொட்டும் இரத்தத்தில் இருப்பது தான் வீரம் என்கிறவனுக்கு, ஒருபோதும் புரிவதில்லை வன்முறைக்கும் வீரத்திற்கும் ஆன வித்தியாசம்.

- கனா காண்கிறேன்

Posted: 10 Oct 2014 02:20 AM PDT


ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கீடு தண்டனை கைதி என்பதால் ஜெ.,க்கு புது பணி - என்கி...

Posted: 10 Oct 2014 01:27 AM PDT

ஊதுபத்தி உருட்டும்
வேலை ஒதுக்கீடு தண்டனை கைதி என்பதால்
ஜெ.,க்கு புது பணி -
என்கிற தலைப்பில்
விஷமத்தனமான
செய்தியை தினமலர்
வெளியிட்டுள்ளது
.செய்தியின்
உள்ளே "அவர்கள்
அப்பணியை செய்கின்றனரா என்பது தெரியவில்லை."
என்கிற ரீதியில்
செய்தி வெளியிட்டுவிட்ட
ு கருத்துப்படம்
ஒன்றையும்
ஊதுபத்தி உருட்டுவதுபோல்
படம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூர்
காவல்துறையினரிடம்
விசாரித்ததில்,
ஒரு துளிகூட
செய்தி உண்மையில்லை என்று தெரிவித்தனர்.
காஞ்சி மடத்தை சேர்ந்த
ஜெயேந்திரரை ஜெயலலிதா ஆட்சியில்
கைது செய்ததற்கு பழிவாங்கும்
செயலாகவே இப்போது இதுபோன்ற
செய்தி வெளியிடுவதற்கு காரணமாக
இருக்கும்
என்றே கருதவேண்டியுள்ள
து.
வாசகர்களை ஏமாற்றும்
விதமாக
செய்தியை திரித்து வெளியிடும்
தினமலருக்கு கண்டனங்கள்.


சதுரங்க வேட்டை in OLX

Posted: 09 Oct 2014 11:45 PM PDT

சதுரங்க வேட்டை in OLX


தமிழ்நாட்ட ஆள நிச்சயம் சிவாஜி ராவ் கெய்க்வாட் @ ரஜினிக்கு தகுதி இருக்கு, காரணம்...

Posted: 09 Oct 2014 11:25 PM PDT

தமிழ்நாட்ட ஆள நிச்சயம்
சிவாஜி ராவ்
கெய்க்வாட் @
ரஜினிக்கு தகுதி இருக்கு,
காரணம்
அவரது தாய்மொழி தமிழ்
இல்லைல...

# அந்த
ஒரு தகுதி போதாதா...!?

@மருதநாயகம்

ஜாமீனில் வெளிவந்தால் ஜெயலலிதாவை வரவேற்க இப்படியெல்லாம் போஸ்டரடித்து ரெடியாக வைத...

Posted: 09 Oct 2014 10:15 PM PDT

ஜாமீனில் வெளிவந்தால் ஜெயலலிதாவை வரவேற்க

இப்படியெல்லாம் போஸ்டரடித்து ரெடியாக வைத்திருந்தார்களாம்....

"குன்ஹாவுக்கு குஸ்கா கொடுத்த காவிரித்தாயே....".

"கர்நாடகாவுக்கே தண்ணி காட்டின காவிரியே.".
.
"குற்றவாளி என்று கோர்ட் சொன்னாலும் குற்றமற்றவரே..".

"ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய உலகத்தின் முதல்வரே..ஆண்டவரே."..

"ஒபிஸ் க்கு வாழ்வு கொடுத்த யுபிஸ் சே"..

"ஹெலிகாப்டர் தேவதையே..."

"கொடநாட்டு பெண் சிங்கமே..".

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


தமிழ் மொழி தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... சிரிக்கும்போது மட்டும் இ..ஈ...

Posted: 10 Oct 2014 09:01 AM PDT

தமிழ் மொழி

தடுக்கி விழுந்தால்
மட்டும் அ...ஆ...

சிரிக்கும்போது
மட்டும் இ..ஈ..

சூடு பட்டால்
மட்டும் உ...ஊ..

அதட்டும்போது
மட்டும் எ..ஏ...

ஐயத்தின்போது
மட்டும் ஐ...

ஆச்சரியத்தின்போது
மட்டும் ஒ...ஓ...

வக்கணையின் போது
மட்டும் ஒள...

விக்கலின்போது
மட்டும் ...?

என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று !!!


அமெரிக்க அருங்காட்சியகத்தில் மதுரை இந்து மண்டபம் பிலடெல்பியா: அமெரிக்காவில் பில...

Posted: 10 Oct 2014 06:30 AM PDT

அமெரிக்க அருங்காட்சியகத்தில் மதுரை இந்து மண்டபம்

பிலடெல்பியா: அமெரிக்காவில் பிலடெல்பியா அருங்காட்சியகத்தில், 1550ம் ஆண்டைச் சேர்ந்த மதுரை இந்து மண்டபம் உள்ளது. மதுரை மதனகோபால சுவாமி திருக்கோவிலில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட கலைப் பொக்கிஷம் தான் இந்த மண்டபம். இந்த மண்டபம் கிரானைட் கற்களால் கட்டப்பட்டது. அருங்காட்சியகத்தின் 2வது தளத்தில் உள்ள இந்த இந்து மண்டபத்தில், ராமாயணம் மற்றும் மகாபாரத காட்சிகளை சித்தரிக்கும் சிலைகளும், கிருஷ்ணர், அனுமர், கருடர் ஆகியோருடைய சிலைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் விஷ்ணு, நடராஜர் வடிவில் சிவன், ராமர், துர்கை, நடன கணேசர், கார்த்திகேயர், காளி, பைவரவர், இந்திரன், காமதேனு, நந்தி, சூர்யன் ஆகிய சிலைகளம் உள்ளன.

கடந்த 1876ல் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், 2 லட்சத்து 27 ஆயிரம் கலைப்பொருட்களுடன், ஓவியம், சிலைகள், காகித வேலைப்பாடுகள், புகைப்படங்கள், அலங்கார கலைகள், துணி ரகங்கள், மற்றும் கட்டட கலை தொடர்பான 200 பகுதிகளைக் கொண்டுள்ளது.

இங்கு இந்து மண்டபம் மற்றும் சிலைகள் பராமரிக்கப்படுவதைப் பாராட்டியுள்ள பிரபஞ்ச இந்து சமதாயத்தின் தலைவர் ராஜன் ஜெட், இது போன்று அமெரிக்காவில் உள்ள இதர அருங்காட்சியகங்களும் இந்து மதத்தின் சிறப்பை விளக்கும் சிற்பங்களையும், கலைப் பொருட்களையும் பார்வைக்கு வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

# அந்நியர்கள் இந்து மதத்தின் சிறப்பை விளக்கும் சிற்பங்களை பாதுகாத்து வருகிறார்கள், ஆனால் நாம் என்ன செய்கிறோம் கோவிலில் உள்ள சிற்பங்கள் மீது குங்குமம், விபூதியை கொட்டி சிற்பத்தின் அழகை கெடுத்துக்கொண்டிருக்கிறோம்.

பா விவேக்


மாமல்லபுரத்தில் உள்ள நாடக மேடை இது. நாடகம், நாட்டியம் என்று அனைத்தும் இந்த அரங்க...

Posted: 10 Oct 2014 05:30 AM PDT

மாமல்லபுரத்தில் உள்ள நாடக மேடை இது. நாடகம், நாட்டியம் என்று அனைத்தும் இந்த அரங்கில் தான் நடக்கும்.

பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக்குப் பிறகே மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்கிறது வரலாற்று ஆய்வுகள்.

பா விவேக்


சிற்பியின் முழு அற்பணிப்பு - ஆயிரம் கால் மண்டபம் மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோ...

Posted: 10 Oct 2014 04:30 AM PDT

சிற்பியின் முழு அற்பணிப்பு - ஆயிரம் கால் மண்டபம் மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம்.இந்த பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனை திறமையா? இல்லை தெருகூத்தடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை, அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்த கூடையை எங்கள் ஊரில் கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள், அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம் சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது வார்த்தைகளே இல்லை, அந்த அளவுக்கு நுணுக்க வேலைப்பாடு நீங்க அதை நேரில் சென்று பார்த்தல் நிஜமானதாகவே தோற்றம் அளிக்கும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்,

அவள் மூன்று குழந்தைகளை தாயானவள் போலும், ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளாள் இந்த வழக்க முறைகளை நான் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில் பார்த்துள்ளேன், இது செதுக்கப்பட்ட ஆண்டு 17 ஆம் நுற்றாண்டில் . ஆனால் இன்று நகரப்புறங்களில், வெளிநாடுகளில் இதை கொஞ்சம் நவீனபடுதில் பெல்ட் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கொண்டுசெல்கின்றனர், அந்த குழந்தை அவளின் மார்பில் பால்குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம் நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல?

மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் , மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கபற்றிகொண்டும், கைவிரலகால் அந்த குழந்தையையும் பாதுகாத்து கூட்டிசெல்கிறாள்.

முன்பெல்லாம் சந்தை போன்ற அமைப்பு உண்டு வாரத்தில் ஒருநாள் அனைத்துவிதமான பொருள்களும் அங்கு விற்பனைக்கு வரும்.கிராமங்களில் மக்கள் எல்லோரும் வீட்டுக்கு தேவையானதை அன்றைக்கு வந்து வாங்கி செல்வர்கள், அப்போது தன் குழந்தைகளை கூட்டிகிட்டு வருவார்கள். குழந்தைக்கு தேவையானதை வாங்கிகொடுத்துவிட்டு அவன் அவன் வெகுதூரம் நடக்கவேண்டு அழாமலும் இருக்கவேணும் என்பதற்காக அவனுக்கு பிடித்தமானதை வாங்கித்தருவார்கள் முட்டாய் அல்லது ரொட்டி எதோ ஒரு தீன் பண்டத்தை கொடுத்து வீடுவரைக்கும் நடந்து வருவார்கள், இதை போன்று கூட அந்த சிற்பம் சித்தரிக்கப்ட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். .

அன்பு மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தானே. சிற்பியின் மனதுக்குள் இருப்பதை கற்பனை கருவை மனசால் சுமந்து அதை ஒரு பாறையில் இருந்து பிரசவிக்கிறான் அது முழுமையடையும் பொது அதை அவன் பார்த்து எப்படி ஒரு பூரித்து போயிருப்பன். கற்பனை பண்ணிபார்தல் கூட நம் கண்களில் ஆனந்த கண்ணீர் தான் வரும்.

தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையை தொடங்குவார்கள். சாரம் கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான். நிலைநிறுத்திய பிறகு சிற்பங்கக் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை அப்புறபடுத்துவது என்பது இயலாத காரியம்.சிற்பியின் முழு அற்பணிப்பும் இதுலையே அடங்கும் இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட அதில் பொறிக்கவில்லை அப்படி பட்ட சிற்பிகள் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் நம் தலைமுறை வந்திருக்கிறது என்ற நினைக்கும் பெருமையாக இருக்கிறது.

இப்படி பட்ட ஒரு வேலைபாட்டை, நாம் பாதுகாக்கவேண்டும்.நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதை எடுத்துசொல்ல நாம் என்றும் மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும்,திறமையும் அற்பனிப்பையும் சொல்லவேண்டும் . சிற்பங்களை நாம் பாதுக்கவேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது ,குங்குமம் கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம் கண்முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டிகேட்கவேண்டும் அவர்களிடம் நம் பெருமையை எடுத்துசொல்லவெண்டும் .

பா விவேக்


தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !! PETER விடும் சில தமிழ் ம...

Posted: 10 Oct 2014 02:30 AM PDT

தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !!
PETER விடும் சில தமிழ் மக்களே..படியுங்கள் ..

*************** *************** ***
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
*************** *************** ***

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள் ள நான் பெருமையடைகிறேன் . ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம்"கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய"அங்கோர் வாட்" கோயில்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங் களிலேயே பெரியது!!
இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கு ம் என்பதை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள்.

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன்பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த"வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல்பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட ்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால்இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்க ியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possibleto describe it with a pen, particularly since it is like no otherbuilding in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.
பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது . அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—mi ght takean honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ள ார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர்கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்ப ட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடியநாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப ் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த2012 வரை கண்டுபிடிக்கப்ப ட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில்1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே! !
இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது...

பா விவேக்


தமிழன் சாதித்த கட்டிடக்கலை!!! தஞ்சை பெரிய கோவில் !!! #ஆச்சரியம் பா விவேக்

Posted: 10 Oct 2014 01:30 AM PDT

தமிழன் சாதித்த கட்டிடக்கலை!!!

தஞ்சை பெரிய கோவில் !!!

#ஆச்சரியம்

பா விவேக்


தண்டட்டி : அந்த காலத்தில் வயதான பாட்டிகளின் காதில் இந்த தண்டட்டியை காணலாம். தற...

Posted: 10 Oct 2014 12:30 AM PDT

தண்டட்டி :

அந்த காலத்தில் வயதான பாட்டிகளின் காதில் இந்த தண்டட்டியை காணலாம். தற்போது தண்டட்டி அணிந்த பெண்களை காண்பது அரிதாகிவிட்டது. தண்டட்டி அணிவதர்க்காகவே காத்துகளை வளர்த்தால் தான் இந்த தண்டட்டியை அணியமுடியும். காத்து வளர்த்து தண்டட்டி அணியவேண்டும் என்றால் இறைவனிடம் வேண்டிக்கொண்டு ஒரு ஆட்டை பலிகொடுத்து காதுளில் துளையிட்டு இந்த தண்டட்டியை அணிவர்.

இந்த தண்டட்டி தங்கள் அல்லது வெங்களத்தில் செய்யப்பட்டிருக்கும். இதை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைக்கின்றனர்.

நவனாகரீகத்தின் மீது அடிமையாகாமல் இருக்கும் மக்கள் வசிக்கும் பகுதியில் தண்டட்டி அணிந்த பெண்களை பார்க்கலாம்.

பா விவேக்


Posted: 09 Oct 2014 11:30 PM PDT


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலை. பாதி ஆண், மீதி பெண்ணா...

Posted: 09 Oct 2014 10:30 PM PDT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலை. பாதி ஆண், மீதி பெண்ணாக இருக்கும் ஒரே கடவுள்.

பா விவேக்


சில தமிழ் பெயர்களைத் தெரிந்துகொள்வோம் பா விவேக்

Posted: 09 Oct 2014 10:00 PM PDT

சில தமிழ் பெயர்களைத் தெரிந்துகொள்வோம்

பா விவேக்


இதை எங்கேயோ பார்த்த மாதிரி தெரிகிறதா? எங்கன்னு சொல்லுங்க பாப்போம்?????? பா விவேக்

Posted: 09 Oct 2014 09:30 PM PDT

இதை எங்கேயோ பார்த்த மாதிரி தெரிகிறதா?

எங்கன்னு சொல்லுங்க பாப்போம்??????

பா விவேக்


இன்று என் அலுவலக நண்பர் ஒருவர் (தமிழர்தான்) இட்ட கையெழுத்தை கவனித்து வியந்து போன...

Posted: 09 Oct 2014 07:32 PM PDT

இன்று என் அலுவலக நண்பர் ஒருவர் (தமிழர்தான்) இட்ட
கையெழுத்தை கவனித்து வியந்து போனேன்.
தமிழில் இட்டிருந்தார்...

அவரோட பேசப்பேச ஆச்சரியங்களும், என் மேல் கோபமும்
வந்துது...

★சீனர்களின் கையெழுத்து பெரும்பாலும் சீன
மொழியில்தான் உள்ளது. பெரும்பாலும் உலகின்
அநேக மக்களின் கையெழுத்தும் அவரவர்
தாய்மொழியிலேயே...

★ கைரேகை வைப்பது கூட கையெழுத்தாக
ஒப்புக்கொள்கிறார்கள் (அதாவது, அதை விட சிறந்த
சாட்சி இல்லை என்ற போதிலும், எழுத்தறிவில்லாத
காரணத்தால்). நம் தாய்மொழிக்கென்ன குறை..?

★அரசாங்கக் கோப்புகளில் தொடங்கி, அவர் படித்த
சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
வரை அனைத்திலும் அவர் கையொப்பம் தமிழில் தான்
இருக்கிறது...

என் கையெழுத்தையும் தமிழில் மாற்றிக்கொள்ளப்
போகிறேன். (ஏகப்பட்ட கோப்புகளை மாற்ற வேண்டும்,
கடவுச்சீட்டு முதல் எத்தனையோ, இருப்பினும்
தமிழுக்காக) தமிழன்
என்று சொல்லிக்கொண்டு ஆங்கிலத்தில்
கையெழுத்திடுவதில் எனக்கே சற்று அவமானமாய்
இருக்கிறது...

தமிழர் என்று சொல்லுவோம். தமிழராய் வாழ்வோம். நம்
அடையாளம் அதுவே...!

பா விவேக்