ilovemynative: Facebook page wall posts in Tamil |
- மாங்குளம், மதுரை மாவட்டம் படம் : உதய சங்கர்
- அரசு பள்ளிகளுக்கு உதவி செய்வது வீண் வேலை என்றுதான் ஒரு காலத்தில் நினைத்துக் கொண்...
- மருத்துவர்கள் நமக்கு மருந்துகள் எழுதும்போது மருந்தின் மூலக்கூறின் பெயரை (drugs c...
- இன்று எனக்கு நேரிட்ட சம்பவம்.உங்களுக்கும் கூட நடந்திருக்கலாம்.இனிமேல் நடக்கலாம்....
- அணை சூழ் உலகு:- தமிழகத்திற்கு மிக நீளமான கடற்கரைகள் இருந்து என்ன பிரயோசனம்! கொச...
- சத்தியத்தின் பிள்ளை சகாயம்! சகாயத்துக்கு தமிழக அரசு தடைகள் போடப்போட அவருக்கான ஆ...
- தானாக தத்திதத்தி தவழ்ந்து எழுந்து பொத்தென்று கீழே விழுந்தாலும் மீண்டும் எழும் கு...
- இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான தமிழ் கல்வெட்டு. மாங்குளம் கல்வெட்டு.
- 55% of All the Inscriptions found in India are in Tamil Epigraphy The word 'Ep...
- சாவியை வைத்து அந்த சிற்பத்தின் அளவை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அதிகபட்சம் ஒவ்வொரு...
- அழகு தமிழ்நாடு!
Posted: 14 Nov 2014 07:36 AM PST |
Posted: 14 Nov 2014 07:13 AM PST அரசு பள்ளிகளுக்கு உதவி செய்வது வீண் வேலை என்றுதான் ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. பட்டையைக் கிளப்புகிறார்கள். சென்னை மடுமாநகரில் இருக்கும் ஒரு பள்ளிக்கு தலைமையாசிரியர் அவ்வப்போது அழைத்து பேசுவார். சமீபத்தில் பேசிய போது 'எங்க ப்லாக் பார்த்தீங்களா?' என்றார். ஏதாவது மொக்கையாக இருக்கும் என நினைத்துக் கொண்டு பார்த்தேன். பள்ளி மாணவர்களே குறும்படங்களை தயாரித்திருக்கிறார்கள். எட்டாம் வகுப்பு வரைதான் அந்தப் பள்ளியில் இருக்கிறது. நடுநிலைப்பள்ளி. அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தால் போதும். அரசுப் பள்ளி மாணவர்கள் கலக்கிவிடுவார்கள். @Vaa Manikandan |
Posted: 14 Nov 2014 06:49 AM PST மருத்துவர்கள் நமக்கு மருந்துகள் எழுதும்போது மருந்தின் மூலக்கூறின் பெயரை (drugs compound name) எழுதாமல் பிரான்டின் பெயரையே எழுதுகிறாற்கள். இதில் வியாபார நலன் உள்ளது என நாம் அறிவோம். மருத்துவர் எழுதும் குறிப்பிட்ட பிரான்டு மருந்தைவிட விலை குறைவான அதே வீரீயம கொண்ட பல மாற்று பிரான்டுகள் உண்டு. உதாரணமாக இதய நோயாளிகள் உண்ணும் Eris நிறுவனத்தின் atorsave 40 என்ற மாத்திரையின் விலை 11.50 ஆனால் அதே தன்மையுள்ள DR.Reddys Lab நிறுவனத்தின் atocor 40 மருந்தின் விலை வெறும் 0.89 பைஸா. பிராண்டிணை மாற்றுவதால் மருந்தின் செயல்பாட்டில் எந்த வித்தியாசமும் ஏற்படாது. ம்ம்.. சரி விலை அதிகமுள்ள பிரான்டிற்கு மாற்று பிராண்டு கண்டுபிடிப்பது எப்படி? அதற்கு தீர்வு உள்ளது,Health Cart Plus இந்த app http://app.lk/BBH?x=s உங்களுக்கு உதவும். உங்கள் மருந்தின் பெயரைக் கொடுத்தால் மாற்று பிராண்டுகளையும் அதன் விலைகளையும் காட்டும் மேலும் நீங்கள் பயன்படுத்தும் மருந்தின் மூலக்கூறிண் பெயர்,மருந்தின் பின் விளைவுகளையும் !! அறிந்து கொள்ள முடியும். இந்த app மிகவும் சிறியது என்பது இதன் சிறப்பு (3 mb ). எல்லோரும் ஒருவகையில் மருந்து கம்பெனிகளால் ஏய்க்கப்பட்டுள்ளோம்.இனியாவது விழிப்புடண் செயல்படுவோம். @முருகேசன் தனபால் HealthKartPlus by HealthKartPlus app.lk Your online pharmacy and drug database. Through this app you can search for medicines and get a list of their substitutes as well. In addition, you can order medicines. |
Posted: 14 Nov 2014 06:37 AM PST இன்று எனக்கு நேரிட்ட சம்பவம்.உங்களுக்கும் கூட நடந்திருக்கலாம்.இனிமேல் நடக்கலாம்.இவர்களை இப்படியே மட்டும் விட்டுவிடக் கூடாது.(I have written in English for those who can't read Tamil in the end of this post.Spread this awareness via all social networking media like What's App etc) What's App,Email ,Telegram என அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இச்செய்தியைப் பரப்புங்கள். KPN Travels.,இந்த நிறுவனத்தின் வாகனங்களையோ,பார்சல் சர்வீஸ்களையோ--கூடியமட்டிலும் நான் தவிர்த்து விடுவேன்.காரணம் : உயிர் பயம்,மற்றும் பொருள் இழப்பின் பயம். நேற்று மாலை சங்கரன்கோவிலில் இருந்து கோவைக்கு,என்னுடைய இருசக்கர வாகனம் ஒன்றை ஏதேனும் ஒரு பார்சல் சர்வீஸ்ல் போட்டு அனுப்புமாறு நான் கேட்க-என்வீட்டார்களோ,இந்த நிறுவனத்தைப் பற்றி தெரியாத காரணத்தால்,KPN parcel service ல் போட்டு அனுப்பி வைத்துவிட்டார்கள்.இன்று மதியம் 3 மணிக்கு உங்கள் வாகனம் கோவையில் உங்களுக்குத் தரப்படும் என்ற உத்திரவாதத்துடன்,சேவைக் கட்டனமாக ரூபாய் 1200 யும் நோகாமல் பெற்றுக் கொண்டனர்.அப்போதே அடடா இந்த நிறுவனமா என்று எனக்குப் பட்டது.இருந்தாலும் சற்றேனும் திருந்தியிருப்பார்கள் என்ற எண்ணத்தில்,அவர்கள் கூறியது போல இன்று கோவை காந்திபுரத்தில் இருக்கும் அவர்களது அலுவலகத்திற்கு வாகனத்தை எடுத்து வரச்சென்றேன்--அப்போது நடந்த உரையாடலை,அப்படியே தருகிறேன். "சார்,சங்கரன்கோவில்ல இருந்து பைக்கை நேத்து அனுப்பி வச்சாங்க,வந்துருச்சா? எடுத்துக்கலாமா"? "இன்னும் பார்சல் வண்டி வரலை.போயிட்டு நாளைக்கு வாங்க"-அங்கிருந்த மேலாளர் என்று தன்னைக் கூறிக் கொண்டவர் கூறினார். "வரலையா? இன்னைக்கு மதியம் வரும்ன்னு சொன்னாங்களே" "அப்படியா,...அப்ப அப்படி சொன்னவங்கட்ட போய் கேளுங்க.," "என்ன சார் இது?..இப்படி பேசுறீங்க...அதுல என் பைக் வருதுங்க" "உங்க பைக் மட்டுமா வருது? பல லட்சக்கணக்கான பொருளும் அதோட வருது" "வெரிகுட்...அப்ப அந்த எல்லா பொருளுக்கும் சேர்த்து நான் கேக்குறேன்...எப்பங்க பார்சல் வரும்" "அதெல்லாம்...உங்கட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை" "அவசியமில்லையா???...சார் அதுல வர்றது என் பைக்.எனக்கு அது முக்கியம்." "என்ன சார் நீங்க...உங்க பைக் மட்டுமே முக்கியம்ங்றீங்க...பைக்ல்லாம் இன்னைக்கு கிடைக்காது...பார்சல் ஏத்திட்டு வந்த வண்டி பிரேக்டவுன் ஆகிருச்சுன்னு நெனைச்சுக்கோங்க.. போங்க...கிளம்புங்க" "ஏங்க...இது முறையற்ற,பொறுப்பற்ற பதில்.,உங்க பார்சல் சர்வீஸில் போட்ட என் பைக்கைத் தான் நான் கேட்கிறேன்.எப்ப கிடைக்கும் ன்னு கேட்டா,அதுக்கு நீங்க பொறுப்பற்ற பதிலைத் தர்றீங்க.கொஞ்சம் கூட நல்லாயில்லை.அப்புறம் கன்ஸ்யூமர் கோர்..."என்று நான் முடிக்க கூட விடவில்லை. "போங்க சார்...உங்கள மாதிரி லட்சக்கணக்கா பாத்தாச்சு...போயி நீங்க வண்டியை எங்க போட்டு விட்டீங்களோ அங்க போயி கேளுங்க...கோர்ட்..போலீஸ்ன்னு எங்க வேணும்னாலும் போங்க.." என்ற பதிலை மிக மிக அலட்சியமாகத் தந்தார்கள்.இதில் அவருடன் இருந்தவர்களின் தனிக் கூப்பாட்டைச் சேர்க்கவில்லை.இந்த இடத்தில் தான் என் பொறுமை அதன் கொதிநிலையைத் தொட்டது.நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை யிடம் புகார் செய்யலாம் என்றால்-கஸ்டமரைப் பற்றியே கவலைபடாதவர்களுக்கு,கஸ்டமர் கேர் பற்றியெல்லாமா நினைவிருக்கும்? வேறுவழியின்றி,வாக்குவாதம் நடந்து,காவல்துறை புகாரில் வந்து நின்றது.மேற்சொன்ன மொத்த களமாடலின் போதும்-அப்போதும் தங்கள் பார்சல்களை அனுப்ப வரிசையில் நின்றிருந்தவர்கள்-ஒருவர் கூட வாயைத் திறக்கவில்லை.நாளை நமக்கும் இது நடந்தால்? என்ற அறிவும்,எண்ணமும் வரவேயில்லை.நமக்கு நடக்கவில்லையே என்ற எண்ணத்தில் நல்ல டைம்பாஸ் என்று வேடிக்கை பார்த்தனர். ஒரே ஒருவர் மட்டும் நெளிந்தபடி வந்தார்,என் சண்டையை ஆரம்பத்தில் இருந்தே கவனித்தாராம்."சார் சென்னைல இருந்து கோவைக்கு-KPN ல நேத்து பொருட்களைப் போட்டு அனுப்பி வச்சாங்க.அதுல முக்காவாசிப் பொள்ளாச்சிக்கு போயிருச்சாம்.மீதியிருந்த பொருட்கள்ல பாதியைக் காணோம்.இங்க கேட்டா-சென்னைல கேளுங்கறாங்க,அங்க கேட்டா கோவைல கேளுங்கறாங்க.மேனஜர் போன் நம்பர்ன்னு ஒரு நம்பரைத் தந்தாங்க.அவருக்கு போன் செஞ்சேன்.முதல் தடவை மட்டுந்தான் போனை எடுத்தாரு.அடுத்து எடுக்கவேயில்லை.இப்ப என்ன சார் செய்ய? " என்று பரிதாபமாக கேட்டார்.அவரைக் காவல்துறையில் "KPN ல் அனுப்பி வைத்த என் பொருட்களை காணவில்லை என்று உங்கள் ரசீதைக் காட்டி புகார் தந்து,FIR போடச் சொல்லுங்கள்...அதான் ஒரே வழி" என்று வழிமுறையைச் சொன்னேன். KPN நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு,நம் நிறுவனத்தை நம்பித்தானே வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை அனுப்புகின்றனர்,பயணம் செய்கின்றனர் என்ற அக்கறை துளி கூட கிடையாது என்ற என் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் இந்நிறுவனத்தினர். பயணிகளை ஏற்றிக்கொண்டு-அவர்கள் எதிர்பார்த்த அளவில் பேருந்து நிரம்பவில்லையென்றால்,கண்ட கண்ட இடங்களில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது,ஓட்டுனருக்கு இலவசமாக உணவு தருகிறான் என்ற ஒரே காரணத்திற்காக- சாலையோர குப்பை உணவகத்தில் வாகனங்களை நிறுத்துவது,பண்டிகை காலங்களில் அநியாய விலைகளுக்கு டிக்கெட்டுகளை விற்பது,சட்ட விரோதப் பொருட்களை கொண்டு செல்வது என ஏகப்பட்ட முறைகேடுகளைத் துணிந்து செய்கின்றனர்.தனியார் துறை மட்டுமல்ல அரசுத்துறைகளில் கூட இருக்கக்கூடாத-அலட்சியம்,ஏளனம்,பொறுப்பற்றத்தன்மை போன்றவை இந்நிறுவனத்தில் மித மிஞ்சிய அளவில் காணப்படுகின்றது.நம்மை யார் கேட்பார்கள்,அப்படியே கேட்டாலும் லஞ்சம் தந்து அவர்களை சரிகட்டி விடலாம் என்ற அகங்காரம் தரும் தைரியமே அவர்களை இவ்வாறு செயல்பட வைக்கின்றது.பெரும்பாலான ஆம்னி பேருந்துகளின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்குமென்றாலும்-KPN travels போன்ற கார்ப்பரேட் வாகன நிறுவனம் இதில் எல்லாம் ஆராய்ச்சி முனைவர் பட்டமே பெற்றுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர், சென்னையிலிருந்து கோவையை நோக்கி கிளம்பிய,இதே KPN நிறுவனத்தின் தரமற்ற குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து நடுவழியில் தீப்பிடித்து எரிந்து-அதில் பயணம் செய்த அனைவரும் உடல்கருகி இறந்தது நினைவிருக்கலாம்.அதை அப்படியே மூடி மறைத்ததும் கூட நினைவிருக்கலாம். நாம் வாடிக்கையாளர்கள்.பணத்தை செலுத்தி சேவைகளைப் பெறுகிறோம்.குறித்த பணத்திற்கான சேவையை வழங்கா விட்டால்-அவர்களின் பிடறி மயிரைப் பிடித்து உலுப்பி கேள்வி கேட்க நமக்கு முழு உரிமையுள்ளது.துணிந்து கேள்விகளைக் கேளுங்கள்.மரியாதையான பதில் வராவிட்டால்-உங்கள் உறவினர்கள்,நண்பர்களிடம் அந்த நிறுவனத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லுங்கள்.இன்றைக்கு நமக்கிருக்கும்,இந்த சமூக வலைதளங்களைப் போல ஒரு வாய்ப்பு பத்தாண்டுகளுக்கு முன்னர் இருக்கவில்லை.அதைப் பயன்படுத்தி இது போன்ற கார்ப்பரேட் நிறுவனக் கொள்ளைகளுக்கு சாவு மணி அடிப்போம்.மிக நேர்மையான,நியாயமான போக்குவரத்து சேவையைத் தரும் எத்தனையோ சிறிய நிறுவனங்கள் இருக்கின்றன.அவற்றை ஆதரிப்போம்.KPN Travels போன்ற கார்ப்பரேட் ஆதிக்க யானைகளின் காதில் புகுந்த எறும்பாக நம் எதிர்ப்பைக் காட்டுவோம். வாடிக்கையாளர்களுக்காத் தான் நிறுவனங்கள்.நிறுவனங்களுக்காக வாடிக்கையாளர்கள் அல்ல என்பதை உணர்த்துவோம். இதோ நான் சொல்கிறேன்,எவ்வளவு அவசர,அவசிய பணியாக இருந்தாலும்.இந்த KPN Travels நிறுவனத்தின் வாகனங்களையோ,பார்சல் சர்வீஸ்களையோ பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள். Friends,Please Avoid KPN Travel company's services.Whether it may be passenger bus or parcel service better avoid them. I received a horrible experience from them.They don't deserve to be a transport and logistics service provider company anymore.They neither don't know how to handle a Customer nor his values. I rendered this KPN Travel's Parcel service to logistic my Bike from Sankarankovil to Coimbatore by Tuesday.I have been told that I shall receive my bike by very next day afternoon by 3 PM.But I haven't received my bike,what I received were ridiculous,irresponsible replies from them.I was so surprised and wondered how come a private Logistics operator can give a reply like this.But later came to know that it's their unique way of treating the customers.They simply told,"Where ever you want to complaint,do that.We are least bother about that.We have seen lakh of persons like this". So friends if you are ready to buy humiliation,ignorance,arrogant service--by spending your hard earned money--then please proceed with KPN Travels else avoid this corporate looters .There are number of small transport companies who render a honest,clean service to their customers.We can make use of them. @G Durai Mohanaraju |
Posted: 14 Nov 2014 06:22 AM PST அணை சூழ் உலகு:- தமிழகத்திற்கு மிக நீளமான கடற்கரைகள் இருந்து என்ன பிரயோசனம்! கொசு வர்த்தி சுருள் போல உள்பிரதேசத்திலே சுருண்டு ஓடும் நதியில்லையே! அதனால்தான் பக்கத்து மாநிலங்களிடத்தில் பக்கெட் பக்கெட்டாக டிம்சி கணக்கில் கெஞ்சி கொண்டுருக்கிறோம். நம்முடைய நிரந்தர பங்காளி(ஒருமைப்பாடு முக்கியம் தோழர்களே) காவேரியின் குறுக்கே புதியதாக கால்வாய் எடுத்து மைசூர் மகாராஜா மக்களுக்கு குடிநீர் தேவைக்கு பள்ளம் எடுக்க தயார் ஆகிவிட்டான். நாம்தான் இன்னும் தமிழன் விருந்தோம்பலில் சிறந்தவன். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று வெட்டி சித்தாந்தம் பேசி கொண்டுருக்கிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசியம் பேசற ஒரு பயலுவங்களும் இதற்கு எல்லாம் கொதிக்க போவதில்லை. என்றைக்கு அவன் தட்டில் பொன்னி ரக அரிசி மறைந்து மண் விழப் போகிறதோ அன்றைக்குதான் நான் தமிழ்ன்டா என்று வேட்டியை இறுக்கி கட்டிக்கொண்டு வரலாம். அதுவரை பாரத மாதாவிற்கு ஜெ போடலாம். ஏற்கனவே நடுவர்மன்ற தீர்ப்பின்படி ஆயிர கணக்கில் டிஎம்சி தண்ணீர் அளவு திறந்து விட வேண்டிய தண்ணீர் கடனாளி கன்னடகாரன். இந்நிலையில் மேலும் இரண்டு நீர்தேக்கங்களை மடை கட்டி 48 டிஎம்சி அளவு நீரை சேமிக்க ஆயுத்தமாகிவிட்ட நிலையில் இதை சட்டரீதியாக தடுக்கின்ற கடமை நமக்கு உள்ளது. மோடிஜியும் சோனியாஜியும் இதில் நடுநிலை நல்லவர்கள் ஆகிவிடுவார்கள். நம் மாநில கட்சிகள்தான் இந்த சட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் நம் நிலம் அணை சூழ் உலகுதான். @வெங்கடேசன் பாலகிருஷ்ணன் |
Posted: 14 Nov 2014 04:23 AM PST சத்தியத்தின் பிள்ளை சகாயம்! சகாயத்துக்கு தமிழக அரசு தடைகள் போடப்போட அவருக்கான ஆதரவு மாநிலம் முழுவதும் பெருகிவருகிறது.தமிழகத்தின் கிரானைட், தாது மணல் கொள்ளைகளைப் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டு இரண்டு மாதங்கள் நெருங்கிவிட்டன. தமிழக அரசு சகாயத்தை இன்னமும் வேலை செய்யவிடாமல் நீதிமன்ற மேல்முறையீடு, நியமனத்தில் தாமதம் என்று பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டை போட்டு வந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பைத் தாண்டி தண்டனைத் தொகையான 10 ஆயிரம் ரூபாயையும் கட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் அரசு சாதனை(?) புரிந்துள்ளது. இந்த நிலையில் புதிதாக சர்ச்சை ஒன்று எழுந்து உள்ளது. ''சகாயம் தலைமையிலான குழு மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட், தாது மணல் கொள்ளைகளை மட்டும் விசாரித்தால்போதும். மற்ற மாவட்டங்களில் விசாரிக்கத் தேவை இல்லை'' என்ற சூழலை அரசு உண்டாக்கியது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள், விவசாய - தொழிலாளர் சங்கங்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து சகாயத்துக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ளனர். மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் சகாயத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் ஆதரவுக் கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், ''தமிழகத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர், வேலூர் என்று பல்வேறு பகுதிகளில் நாங்கள் ஆய்வுக்குச் சென்றபோது, மதுரையைவிட அதிகமாக பல இடங்களில் கனிமவள கொள்ளைகள் நடந்துள்ளதைக் கண்டுபிடித்தோம். ராதாபுரம் என்ற ஒரு பகுதியில் மட்டுமே 55 குவாரிகள் உள்ளன. இந்தக் கொள்ளைகள் எல்லாம் வெளியே தெரிந்துவிடும் என்பதால் சகாயத்தை மதுரையோடு நிறுத்த நினைக்கிறார்கள். இதை முறியடிப்பது நமது ஒற்றுமையில் இருக்கிறது'' என்று பேசினார். மதுரையைச் சேர்ந்த நீர்வள பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த சோமசுந்தரம், ''மதுரையில் பி.ஆர்.பி நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம் மிகவும் குறைவு. சகாயம், அன்சுரல் மிஸ்ரா ஆகியோர் மாவட்ட ஆட்சியர்களாக இருந்த காலத்தில் கனிமவளத் துறை, வருவாய் துறை, போலீஸ் அதிகாரிகள் என்று பி.ஆர்.பி தரப்புக்கு நெருக்கமான பலர் மாற்றப்பட்டனர். இன்று மறுபடியும் அவர்கள் எல்லாம் இங்கு வந்துவிட்டனர். சகாயம் குழுதான் இதற்கு முடிவுகட்ட வேண்டும். சத்தியத்தின் பிள்ளை சகாயம்... அதனால் நிச்சயம் இதற்கு அவர் முடிவுகட்டுவார்!'' என்றார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் முகிலன், ''இதுவரை நடந்த கனிமவள ஊழலில் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. இந்தத் தொகை நமது நாட்டில் 67 ஆண்டுகளாக பட்ஜெட்டில் போட்ட பணத்தைவிட அதிகம். சகாயம் வந்தால் பல அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், வி.ஏ.ஓ-க்கள் சிக்குவார்கள். அவர்கள் மறைமுகக் கூட்டணி அமைத்து சகாயத்தை முடக்கப் பார்க்கிறார்கள்'' என்று கொந்தளித்தார். தமிழகம் முழுவதும் சகாயம் அலை அடிக்க ஆரம்பித்துள்ளதன் அடையாளம் இது! - விகடன் ![]() ![]() |
Posted: 14 Nov 2014 03:09 AM PST தானாக தத்திதத்தி தவழ்ந்து எழுந்து பொத்தென்று கீழே விழுந்தாலும் மீண்டும் எழும் குழந்தையின் முயற்ச்சியில் கால் பங்குகூட வளர்ந்த நம்மிடம் இல்லை!!! @காளிமுத்து |
Posted: 14 Nov 2014 01:17 AM PST |
55% of All the Inscriptions found in India are in Tamil Epigraphy The word 'Ep... Posted: 14 Nov 2014 12:33 AM PST 55% of All the Inscriptions found in India are in Tamil Epigraphy The word 'EpiGraphy' is derived from two Greek words, viz., "Epi" meaning on or upon and "Graphie" meaning to write. And hence, epigraphy is the study of writings engraved on stone, metal and other materials like wood, shell, etc., known as 'inscriptions' or 'epigraphs'. Though engraving is the chief characteristic of an epigraph, there are some exceptions where old writings in ink on rocks, boulders, etc., are also accepted as epigraphs. A person who is engaged in the decipherment and interpretation of the epigraphs is called an 'epigraphist'. Epigraphy as a source of history India is enormously rich in epigraphical wealth. It is estimated that so far more than one lakh inscriptions have been discovered from the length and breadth of the country through the collective efforts of various agencies like Archaeological Survey of India, State Departments of Archaeology and various research institutions. However, still a large number of inscriptions await to be discovered. Epigraphy forms one of the very important sources for understanding the history and culture of the period starting from the time of Mauryan Emperor Asoka (3rd century B.C.) to the late medieval period. It is only from a patient and painstaking study of a large number of connected inscriptions that a reconstruction of not only the political and dynastic history, but also the social, religious, administrative and economic history of a particular period or reign or region could be undertaken. The Archaeological Survey of India (ASI) will be conducting summer training programmes in epigraphy for students to enable them read and understand inscriptions in Tamil. Of the one-lakh odd inscriptions in India, about 60,000 were in Tamil Nadu. And of the 60,000 inscriptions, only about 5 per cent were in other languages such as Telugu, Kannada, Sanskrit and Marathi the rest were in Tamil, T. Sathyamurthy, Superintending Archaeologist of ASI, Southern India, said. To create an interest among students in inscriptions, their richness, value and messages, the ASI would be conducting summer training programmes from 2006 onwards, Dr. Sathyamurthy said. He was speaking after inaugurating a three-day World Heritage Photo Exhibition organised by the ASI at Shri Natesan Vidyasala Matriculation Higher Secondary School at Mannivakkam, near Tambaram, on Monday. The programme would help students read and understand Tamil inscriptions. It would also inculcate in them an interest in history and archaeology. They had planned to conduct the training programme at the school for 50 students drawn from different institutions. He told the students that there were about 50 valuable monuments in and around Mannivakkam area. After the addition of Gangaikonda Cholapuram and Darasuram temples to the list of UNESCO`s World Heritage Sites, the ASI was taking steps to add Kailasanathar Temple, Kancheepuram, and the Ginjee Fort to the list, he said. Every exhibit had its own identity and had left behind several messages and was more than just a depiction of a puranic story, he told the students. The school`s correspondent N. Ramasubramaniam said about 3,000 students from different places were expected to visit the exhibition. Photographs of temples and Pallava period coins are on display. An inter-school painting competition for students between sixth and eight standards on the theme, `Thamizhaga panpaattu thalangal` and an essay competition on `Mamallapuram kalliley kalaivannam` will be held for students between ninth and twelfth standards on Tuesday. http://www.thehindu.com/2005/11/22/stories/2005112215970400.htm https://www.princeton.edu/~achaney/tmve/wiki100k/docs/Tamil_language.html http://asi.nic.in/asi_epigraphical_sans_about.asp http://asi.nic.in/asi_publ_epigraphical_south.asp இந்திய மொழிகள் அனைத்திலும் தோராயமாக 1 லட்சம் கல்வெட்டுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஏறத்தாழ 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள். http://tamil.oneindia.com/news/2010/06/27/world-tamil-conference-karunanidhi.html தமிழை வாசிக்க வைப்போம்... http://www.dinamani.com/editorial_articles/2013/07/11/தமிழை-வாசிக்க-வைப்போம்/article1677785.ece ![]() |
Posted: 13 Nov 2014 11:42 PM PST சாவியை வைத்து அந்த சிற்பத்தின் அளவை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அதிகபட்சம் ஒவ்வொரு நடன மாதரும் மூன்று அங்குலம் மட்டுமே இருப்பர். அந்த மூன்று அங்குலத்தில் அவர்களின் நடன அசைவுகள், அவர்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகள், அவர்களின் உடை, சிகை அலங்காரம் என அத்தனையும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது!.இதே கல்லில் வலது ஓரத்தில் கொடிக்கருக்கு வேலைப்பாடுகள் அமைந்துள்ளதை கவனிக்கத் தவற வேண்டாம். இந்த மொத்த வேலைப்பாட்டில் எங்கேனும் ஒரு இடத்தில் தவறு நடந்தாலும் அனைத்துமே வீணாகிவிடும் என்பதால் இதை வடிக்கும் போது உலகமே இந்த பாறையில் தான் இருந்திருக்க வேண்டும் தன் பெயரைக் கூட பதிக்காத அந்த சிற்பிக்கு. சரியான பார்வையில் அணுகினால் உங்களை ஆச்சரியப்படுத்த இது போன்ற ஏராளமான அதிசயங்களை நம் கோயில்கள் தனக்குள் புதைத்து வைத்திருக்கின்றன. இடம்: புள்ளமங்கை, பிரம்மபுரீஸ்வர்ர் ஆலயம். 1100 வருடங்கள் பழமையானது @சசிதரன் ![]() |
அழகு தமிழ்நாடு! Posted: 13 Nov 2014 10:25 PM PST |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |