Friday, 9 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகிய ஈழம்! நல்லூர் கந்தசுவாமி கோயில்!

Posted: 09 Jan 2015 07:38 AM PST

அழகிய ஈழம்!

நல்லூர் கந்தசுவாமி கோயில்!


'தெரிந்த பிசாசு' ராஜபக்சேவை ஓட ஓட "வாக்குகளால்" விரட்டியடித்த ஈழத் தமிழர்கள்!!

Posted: 09 Jan 2015 07:35 AM PST

'தெரிந்த பிசாசு'
ராஜபக்சேவை ஓட ஓட
"வாக்குகளால்"
விரட்டியடித்த ஈழத்
தமிழர்கள்!!


காலை வேளைகளிலும், மாலை வேளைகளிலும் வாக்கிங் செல்லும் நிறைய நண்பர்கள் காலில் ஷூ அ...

Posted: 09 Jan 2015 05:54 AM PST

காலை வேளைகளிலும், மாலை வேளைகளிலும்
வாக்கிங் செல்லும்
நிறைய நண்பர்கள்
காலில் ஷூ அணியாமல்
செருப்புடனே வாக்கிங்
செல்கின்றனர். வாக்கிங்
அல்லது ஜாகிங் இதில்
எதுவாக இருந்தாலும்
ஷூ அணிந்து செல்வதே நல்லது.அவ்வாறு அணியவில்லை என்றால்
கால் மூட்டுகளில்
தேய்மானம் ஏற்படும்
வாய்ப்பு அதிகமாகிறது....
அதனால் உங்கள்
கால்களுக்கு நன்றாகப்
பொருந்தும்
ஷூக்களை அணிந்து வாக்கிங்
செல்வதே சரியான
முறையாம்....!

ஏன் மீத்தேன் வரக்கூடாதுனே சொல்லுறியே நீ தஞ்சாவூரானு நண்பர் ஒருவர் கேட்டார்!! #இ...

Posted: 09 Jan 2015 05:42 AM PST

ஏன் மீத்தேன்
வரக்கூடாதுனே சொல்லுறியே நீ
தஞ்சாவூரானு நண்பர்
ஒருவர் கேட்டார்!!

#இல்ல சார்
பசிச்சா டெய்லி சோறு தான்
சாப்பிடுறேனு சொன்னேன்.

@காளிமுத்து

பெரும் காட்டை அழித்து பயண தூரத்தை குறைத்து விட்டோமென திரும்பி பார்த்தால், நீண்ட...

Posted: 09 Jan 2015 05:39 AM PST

பெரும்
காட்டை அழித்து பயண
தூரத்தை குறைத்து விட்டோமென
திரும்பி பார்த்தால், நீண்ட
தூரத்திற்கு அறுந்து கிடக்கிறது உணவுச்சங்கிலி!!

@காளிமுத்து


அந்த காலத்தில பொழுது போகவில்லை என்றால் பாட்டிகள் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மே...

Posted: 09 Jan 2015 05:36 AM PST

அந்த காலத்தில
பொழுது போகவில்லை என்றால்
பாட்டிகள்
வெற்றிலையில்
சுண்ணாம்பு தடவி மேலும் கீழும்
தடவுவாங்க, நாம
ஸ்மார்ட் போன் டச்
ஸ்கிரீனில்
மேலும் கீழும்
தடவுகிறோம்...

@காளிமுத்து

'Prepared by bramins'. அந்த அப்பளம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும...

Posted: 09 Jan 2015 05:30 AM PST

'Prepared by bramins'. அந்த அப்பளம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும் பிராமணர்கள் தான் உற்பத்தி செய்தனரா??


Ancient Tamil Civilization: During the chola period, Perumukkal was known as...

Posted: 09 Jan 2015 05:04 AM PST

Ancient Tamil Civilization:


During the chola period, Perumukkal was known as "Perumukkilaana Gangai Konda Nalloor"

Perumukkal is located 12 kilometres east of Tindivanam.

Perumukkal village has 6000 years old heritage. The historical importance of the village is the presence of 4000 B.C.E. Petroglyph, 7th century Mukthialeeswarar Temple, ruined Kamatchiamman temple and a Dargah.

Petroglyph

On the top of the hill, petroglyphs are found in a cave namely, Sita Cave. Local people believe Sita lived in this cave. This is the only petroglyph found in Tamil Nadu and also it is one among the four in India. These petroglyphs are similar to the Egyptian Hieroglyphics letters and hence it is dated to 4000 B.C. But some researchers dated to megalithic.

Mukthialeeswarar Temple

This temple is located atop of the perumukkal hillock. which had originally been built in brick, was converted into a stone temple during the period of Vikrama Chola (1118-35 CE). The deity of the temple is known as Tiruvanmikai Eswaramudayar as well as Perumukkal Udayar in Tamil (பெருமுக்கல் உடையார்) and Mukthiyaleeswarar in Sanskrit.The donations made by the Chola, Pandya, Sambuvaraya, Vijayanagara rulers have been recorded in more than 60 inscriptions found on the temple walls and vatteluthu inscription dating back to 7th century C.E.

Video:- Perumukkal Petroglyph

https://www.youtube.com/watch?v=gUxVwZXf6rQ&list=UUppaK1uqALtjRqhta8L0EKw&index=5&feature=plcp

http://www.mashpedia.com/Perumukkal

https://www.facebook.com/perumukkal/photos_stream

பெருமுக்கல் (பெருமுக்கிலான கங்கை கொண்ட நல்லூர்)

வரலாற்று காலத்திற்கு முந்தைய பாறைக் கீறல்கள் (கற்பாறைச் செதுக்குவேலை)

பெருமுக்கல் என்பது தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூர் ஆகும். திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்குள்ள குன்று வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இயற்கை வளமும் அழகியல் சூழலும் நிறைந்த இவ்வூரின் முக்கிய தொழில் விவசாயம்.

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் பேருந்துச் சாலையில் இக்குன்று அமைந்துள்ளது. புதுவையிலிருந்து கிளியனூர் வழியாகவும் இவ்விடத்திற்குச் செல்லலாம்.

பாறைக் கீறல் எழுத்துகள்

இங்குள்ள பாறைக்குகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான பாறைக் கீறல் எழுத்துகள் காணப்பெறுகின்றன. அவை உருவங்களாக இல்லாமல் குறியீடுகளாக அமைந்துள்ளன. இவற்றை ஆசிவக சமயத்தின் குறியீடுகள் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். பறவையின் நகத்தினைக் கொண்டு ஒரு இளக்கமான பொருளில் கீறல் ஏற்படுத்தினால் எவ்வாறு அந்த வடு அமையுமோ அதனை ஒத்த வடிவம் கொண்ட குறியீடு இது. ஏர்க்கலப்பை கொண்டு நிலத்தில் உழும் போது ஏற்படும் சால் உழவின் வடிவையும் ஒத்தது. இருபுறப் பட்டைகளிலும் வழவழப்பும் ஆழ்ந்த கூர்முனைப் பள்ளம் கீறல் தெளிவாகவும் அமைந்திருக்கும். ஆசீவகத் துறவு நிலைப் புகும் மாணவர்கள் உயிர்நூல் அறியும் முகத்தான் குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூவகை நிலங்களிலும் பயணிக்கும்போது அவர்தம் ஆய்வுக்காக எவ்விடம் செம்மையான நடுவமாக அமையுமோ, அங்குள்ள கற்பாறைகளில் இவ்வடிவம் செதுக்கப்பட்டது. சிற்சில இடங்களில் புள்நகக் கீற்று இரண்டு அல்லது மூன்றாகவும், முக்கோணம் சேர்த்தும் வரையப்படுவதுண்டு. இத்தகைய கற்பாறைகளிலிருந்து சேய்மைத்தான உயிரியக்கங்களையும் ஆயும் ஏந்து இருந்ததாலே இவ்விடங்கள் இக்குறியீட்டால் அடையாளப்படுத்தப்பட்டன.

சோழர் காலக் கோயில்கள்

பெருமுக்கலில் குன்றின்மீது ஒரு கோயிலும் அடிவாரத்தில் மற்றொரு கோயிலும் உள்ளது. குன்றின்மீது உள்ள கோயில் "முதலில் செங்கல்கோயிலாக இருந்து, விக்கிரம சோழன் காலத்தில் (கி.பி. 1118-35) கற்கோயிலாக மாற்றப்பட்டது. இக்கோயிலின் இறைவன் பெயர் தமிழில் திருவான்மிகை ஈஸ்வரமுடையார் என்றும், பெருமுக்கல் உடையார் என்றும், வடமொழியில் "முக்கயாசலேஸ்வரர்' என்றும் வழங்கப்படுகிறது. பாறைகளில் 60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, சம்புவரைய, விசயநகரமன்னர்கள், கோயிலுக்கு வழங்கிய நன்கொடைகளைக் குறிக்கின்றன என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

சோழர் காலத்தில் மிக சிறப்பான ஊர். இந்த ஊர் 6000 வருடம் பழமையானது, இந்த ஓவியம் வரையப்பட்டு 6000 ஆம் ஆண்டுகள் ஆகிறது.

அங்கு இருக்கும் கோவில் முதிலேஸ்வரர் கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.


தமிழரின் மறைந்த இசைக்கருவி! தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி! இசை இனிமை பயப்பது...

Posted: 09 Jan 2015 05:04 AM PST

தமிழரின் மறைந்த இசைக்கருவி!

தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி!

இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று. எனவே, யாழின் தோற்றம், வடிவம் - வகை அதன் பரிணாமம் அது அழிந்ததற்கான சமூகப் பின்புலம் முதலியவற்றை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.யாழின் தோற்றம்:வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.

இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில்தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.வடிவம் வகை:யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை. பெரும்பாணாற்றுப்படை (3-16 அடிகள்) 'பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம், நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவுப்பட்ட பகுதி, வளைசோர்ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீலமணி போலும் நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ்' என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.

யாழின் வகைகள் என்று பார்க்கும் பொழுது வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும், மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன. கல்லாடர் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) தமது நூலில் நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் (தேவயாழ்) முதலியவற்றைக் குறித்துள்ளார். சாத்தான் குளம் அ.இராகவன் தமது 'இசையும் யாழும்' என்னும் நூலின் யாழின் 24 வகைகளைக் குறித்துள்ளார்.யாழின் பரிணாமம்:வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு..... என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிரத்தை இல்லையென்றாலும் சில காலங்களின் மகரம், செங்கோடு எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக பரிணாமம் கொண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.
யாழ் மறைந்ததற்கான சமூக பின்புலம்:யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது.

அந்நூல்கள், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்தள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் பரிணாமமான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை 'ஏழிசை யாழ், வீனை முரலக்கண்டேன்' 'பண்ணோடி யா' வீணை பயின்றாய் போற்றி' என்ற மாணிக்க வாசகரின் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் 'வீணை என்ற யாழையும் பாட்டையும் (730அடி)' என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது. மேலும், 'வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் (730 அடி)' என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் காந்தர்வ தத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார்.எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. மேலும், யாழ் என்ற இசைக்கருவி மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் அதிலிருந்த வேறொரு இசைக் கருவியான வீணை தோன்றியதற்கான காரணம் ஆய்விற்கு உரியது. சங்க காலத்திலேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது.

ஆரியர்கள் தங்களுக்கான மொழியை, நூல்களை, தெய்வங்களை, பழக்கவழக்கங்களை, கலைகளை உருவாக்கிக் கொண்டனர். தமிழரின் பண்பாட்டினை உள்வாங்கி, அவற்றை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரதநாட்டியம், கணிகையர் வீட்டில் வளர்ந்த பரதநாட்டியம், ஒரு காலகட்டத்தில் ஆரியர்களின் கலை ஆசிரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப்பட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப்பெற்றதே. தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவதும் பரப்பினர்.வீணையின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய்வங்களுக்கு உரியதாக அமைத்தனர். வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர். ஆரியர்களின் ஆதிக்கமும் விணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன. இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல்லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று.

நன்றி : Ancient Tamil Civilisation


Ancient Tamil Civilization : Megalithic burials found at Thandikudi Excavati...

Posted: 09 Jan 2015 02:53 AM PST

Ancient Tamil Civilization :


Megalithic burials found at Thandikudi

Excavations conducted by Tamil University research scholars at Thandikudi in Dindigul district indicate the importance of lower Palani hills during the Sangam age, according to E. Sundaramurthy, Vice-Chancellor, Tamil University.

Sharing with presspersons here on Thursday the findings of the excavations carried out by the department of Epigraphy and Archaeology in May, he said the region was associated with two Sangam age chieftains, Thondrikon and Kodaiporunan. In `Purananooru' (399), Sangam poet Aiyyur Mudavanar spoke about one chieftain, who ruled over the Thondri region, which might be identified with Thandikudi.

Another poet, Perundalaisattanar, recorded (`Purananooru' 205 and `Ahananooru' 13) that Kodaiporunan performed a `velvi'. `Kodai' was identified with present Kodaikanal area.

Thandikudi is situated about 47 km mortheast of Batlagundu in Lower Palani hills in Kodaikanal taluk. It is on the left bank of Marudanadi, about 4,400 feet above mean sea level. The serene location of Thandikudi had remained an important archaeological site since megalithic times.

The first cist, on the coffee board campus at Thandikudi in the northern part of the burial complex, yielded the earliest form of burial. The simple cist with a passage in the east had a trapeze-shaped porthole. It is covered with a capstone weighing more than three tonnes. The important ritual for the departed soul was performed on the floor slab. Nearly 50 pots such as ring stands, plates, bowls, four-legged jars and carinated pots were placed either below or on the sides of the four urns kept facing one another in the four corners of the cist.

http://www.thehindu.com/2004/06/28/stories/2004062803680600.htm

Thandikudi inscription of Kulasekhara Pandya

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=727

Archaeological Investigations at Thandikudi

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=727

கொடைக்கானல் அருகில் உள்ள ஊர் தாண்டிக்குடி ஆகும். இது தான்றிக்குடி என முன்பு அழைக்கப்பட்டது. தான்றி என்பது மரமாகும். தான்றி மரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவக்குணம் கொண்டவை.

தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினர் கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள தாண்டிக்குடி எனும் சிற்றூரில் நடத்திய அகழாய்வில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்னங்கள், பானைகள், பவளமணிகளையும் கண்டெடுத்துள்ளனர். தாண்டிக்குடி மலைப்பகுதியில் மிகப் பெரும் மக்கள் வாழிடம் இருந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

தாண்டிக்குடி பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுகு முற்பட்ட ஈமச்சின்னங்கள் இருப்பதை 1928ல் முதன்முதலாக கண்டறிந்தவர் ஆங்கிலேடு என்று ஆங்கிலேயர் ஆவார். இவர் அக்காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர். அதற்குப் பின்னர் தமிழப் பல்கலைக்கழத்தினரே இதில் முழுமையாக ஆய்வு செய்தனர். இப்பகுதி மக்கள் இந்த சின்னங்களை வாலியர்வீடு, பேத்து, குகை என்று அழைக்கின்றனர்.

கற்பதுக்கைகளில் செய்யப்பட்ட ஆகழாய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பளிங்கு, சூதுபவளம், அஸ்டியடைட் போன்ற அரிய கல்மணிகள் அகழந்தெடுக்கபட்டன. இவற்றில் எண்ணூறுக்கும் மேற்பட்டவை ஸ்டியடைட் மணிகளாகும். இவை 5 மி,மி அளவுடையன, தமிழகத்தில் முதன்முதலில் உவை தாண்டிக்குடி கற்பதுக்கைகளிலே கண்டறியப்பட்டுள்ளன. ஸ்டியடைட் சிந்துவெளி மக்கள் அதிக அளவில் பயண்படுத்தியுள்ளனர் என்பது இங்கு குறுப்பிடதக்கது. தாண்டிக்குடி பகுதியில் கற்பதுக்கைகளில் கிண்ணங்கள், பிரிமணைகள், பானைகள் போன்ற மட்கலன்களும் கண்டெடுக்கபட்டன.

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20607077&edition_id=20060707&format=html


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும் கணிணியில் வேலை செய்வதை கௌரவமாகவும் நினைப்ப...

Posted: 09 Jan 2015 08:01 AM PST

காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும்

கணிணியில் வேலை செய்வதை கௌரவமாகவும்

நினைப்பவர்களுக்கு தெரிவதில்லை

அரிசியை இன்டர்நெட்டில் download செய்ய முடியாதென்று...

இனிய இரவாகட்டும்

@ Indupriya MP
...


@ Indupriya MP ...

Posted: 09 Jan 2015 06:35 AM PST

1850யில் குற்றாலம் ஓவியமாக.... பா விவேக்

Posted: 09 Jan 2015 05:30 AM PST

1850யில் குற்றாலம் ஓவியமாக....

பா விவேக்


தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்...

Posted: 09 Jan 2015 03:46 AM PST

தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர்என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன.மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.

தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது..தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

வீரம்:
பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.

காதல்:-
தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும்.இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள்.அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.

நட்பு
சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.
முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.

விருந்தோம்பல்
'விருந்து' என்ற சொல்லுக்குப் 'புதுமை' என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை 'விருந்து' என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு'
" என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
" என்று கூறுவதிலிருந்துவிருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.

இவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்.


திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ரகுநாத சேதுபதி...

Posted: 09 Jan 2015 12:46 AM PST

திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் (கிபி 1671-1710) காலத்தில் கட்டப்பட்டது.
வரலாறு
திருமயம் என்ற இந்த சிறு நகரம் பழமையும் நெடிய வரலாற்றையும் கொண்டு திகழ்கிறது. முத்தரையர்கள் கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை அரசாண்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள்,பல்லவர் , விஜயநகர அரசர்கள், பராக்கிரம பாண்டிய விஜயாலயத் தேவர், சுந்தரபாண்டிய விஜயாலயத் தேவர் போன்ற பாண்டிய குறுநில மன்னர்கள் என்று பலராலும் ஆளப்பட்டுள்ளது.

இந்த ஊர். இராமநாதபுரம் சேதுபதிகள் 16 - 17 நூற்றாண்டுகளில்திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அடுத்து புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களாலும் ஆளப்பட்டுள்ளது இவ்வூர். கிழவன் சேதுபதியின் காலத்தில் இவ்வூர் சேதுபதி நாட்டின் வட எல்லையாகத் திகழ்ந்ததாம்.
மலைக்கோட்டை அமைப்பு
திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது. எனினும் இந்த அகழிகள் பல இடங்களில் தூர்ந்து போய்க் காணப்படுகின்றன.பாதுகாப்பு அரணாக அமைந்த வெளிச்சுற்று மதிகள் சிதைந்த நிலையில் உள்ளன. உள்சுற்று மதிகள் இன்றும் கட்டுக்கோப்பாக உள்ளன. ஏழு சுற்று மதில்கள் இருந்ததாக இங்கே காணப்படும் தொல்லியல் வரலாற்று அறிவிப்பு பலகைகள் சொல்கின்றன. திருமயம் மலைக்கோட்டைக்கு மூன்று நுழைவாயிகள் முறையே தெற்கு, தென் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் உள்ளன.
மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி
ஒரு உயர்ந்த குன்றின் உச்சியில் இயற்கை அரண்களுடனும் கலை நேர்த்தியுடனும்அமைந்துள்ள திருமயம் மலைக்கோட்டையின் உள்கோட்டையைச் சுற்றி உயரமான மதிற்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் இந்தச் சுற்று மதில்கள் கட்டுக் கோப்பகத் திகழ்கின்றன. உள்கோட்டைக்கு ஊரின் மேற்குப் பகுதியிலிருந்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்ற நுழைவாயில்கள் உள்ளன. மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி நிறுவப்பட்டுள்ளது. இது போல கோட்டையின் தெற்கு நுழைவாயில் அருகே இரண்டு பீரங்கிகள் உள்ளன. இவற்றைத் தவிர மலைக் கோட்டையில் வேறு பாதுகாக்கப்பட்ட கட்டடங்கள் ஏதுமில்லை. எனினும் இக்கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், சங்கிலிப் போர் உடைகள் போன்ற அரிய பல பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

-குழந்தைவேலு


பாண்டியர்களுக்கு தலை வணங்குவோம் !! பாண்டிய மன்னர்கள் இல்லையென்றால் இன்று நாம் ப...

Posted: 08 Jan 2015 09:46 PM PST

பாண்டியர்களுக்கு தலை வணங்குவோம் !!

பாண்டிய மன்னர்கள் இல்லையென்றால் இன்று நாம் பேசுவதற்கு தாய் மொழி தமிழ் மொழி இருந்திருக்காது.
தமிழுக்கு அழிவு வரும் போதெல்லாம் தங்கள் பலத்தால் தடுத்து நிறுத்தினர். எப்பொழுதும் ஆட்சியை விட தமிழ் மொழியே பெரியது என வாழ்ந்தனர். பாண்டிய மன்னர்கள் பலரும் தமிழில் புலமையும் உடையவர்கள்.

கடைசங்க காலத்தில் ஆரியர்கள் தமிழையும் தமிழ் நாட்டையும் அழிக்க படையெடுத்து வந்த போது அவர்களை சினம் கொண்டு அடக்கி வடக்கிலும் ஆட்சியை நிறுவியவன் ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன். நெடுஞ்செழியன் இல்லயென்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் அழிந்திருக்கும்.

தமிழகத்தின் இருண்ட காலமாக இருந்த களப்பிரர்கள் காலத்தில் (கிபி 3-7ம் நூற்றாண்டு) கடுங்கோன் பாண்டியன் களப்பிரர்களை விரட்டி கிபி575ல் மதுரையில் முடி சூடினான். கடுங்கோன் இல்லையென்றால் 6ம் நூற்றாண்டிலயே தமிழ் அழிந்திருக்கும்.

2 முதல் 9ம் நூற்றாண்டு வரை சோழர்களை சிற்றரசர்களாக மாற்றி வைத்திருந்த பல்லவர்களையும் பண்டிய நாட்டுக்குள் விட வில்லை.
பல்லவர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்ட 850ல் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் நடந்த போரில் சிற்றரசர்களான சோழர்கள் பல்லவனுடன் இணைந்ததால் வெற்றி விளிம்பில் இருந்த பாண்டியர்கள் தோற்றனர். தமிழில் வடமொழி கலப்பு ஆரம்பித்தது. இல்லையென்றால் செந்தமிழ் இன்றும் இருந்திருக்கும்.

1216ல் சுந்தரபாண்டியன் மதுரையை மீட்டு மீண்டும் தமிழை நிலை பெறச் செய்தான். சுந்தரபாண்டியன்வரவில்லையென்றால் முழுக்க வடமொழி கலப்புதான்.

இன்றளவும் தமிழ் மொழி இருக்க காரணம் பாண்டியர்கள். தங்கள் பெயரை நிலைபெறச் செய்ய போரிட்டதை விட தமிழுக்காகவே போரிட்டனர். ஆட்சியை தக்க வைக்க சிற்றரசர்களாக இருந்ததும் இல்லை. பல்லவர் களப்பிரர்களுடன்கூட்டு சேர்ந்ததும் இல்லை. குப்தர்கள், மௌரியர்கள், சாளுக்கியர்கள் யாரையும் தமிழ்நாட்டுக்குள் விட்டதில்லை.

வி. ராஜமருதவேல்
source -Veeram Velanja Madurai


நான் தமிழனாக பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நீங்கள்??? பா விவேக்

Posted: 08 Jan 2015 05:30 PM PST

நான் தமிழனாக பிறந்ததில் பெருமைப்படுகிறேன்.

நீங்கள்???

பா விவேக்


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


செம்ம அழகு

Posted: 09 Jan 2015 09:38 AM PST

செம்ம அழகு


:) Relaxplzz

Posted: 09 Jan 2015 09:30 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 09 Jan 2015 09:20 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை...!! 1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்த...

Posted: 09 Jan 2015 09:10 AM PST

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை...!!

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்

Relaxplzz

பகல் கொள்ளையா? தயவு செய்து முடிந்தவரை ஷேர் செய்யவும் அரசியல்வாதிகள், மக்கள் நலம...

Posted: 09 Jan 2015 09:00 AM PST

பகல் கொள்ளையா?

தயவு செய்து முடிந்தவரை ஷேர் செய்யவும் அரசியல்வாதிகள், மக்கள் நலம் கருதுபவர்கள், சமூகசீர்த்திருத்தவாதிகள் மற்றும் அனைவரது கண்ணில் படும்வரை....

LPG GAS மானியத்தொகை பெற நமது அரசங்கம் பயனாளிகள் அனைவரையும் அவர்களது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி கூறியது. இதனால் அனைத்து மக்களும் தங்களுடைய வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்... நான் எனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க (STATE BANK OF INDIA திருப்பனந்தாள் கிளை) சென்றேன். அங்கு வங்கி ஊழியர் மற்றும் மேனேஜர் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க ரூ.113(நபர் 1 க்கு) வசூல் செய்தனர். ஆனால் இதற்கான receipt யாருக்கும் வழங்கப்படவில்லை இதனால் சந்தேகம் அடைந்த நான் எதற்காக இந்த பணம் வசூல் செய்கீறிர்கள் என்று கேட்டேன் அதற்கு மேனேஜர் அவர்கள் வங்கிகணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சர்வீஸ் ஜார்ஜ் என்று கூறினார். அப்பெடியென்றால்க அதற்கான receipt தாருங்கள் என்று கேட்டேன். உடனே மேனேஜர் தன் கையால் எழுதி (பணம் பெற்றுக்கொண்டு) கீழே காணப்படும் ரசீதை கொடுத்தார. நானும் பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்..

அதிர்ச்சி தகவல்கள்....

1. ஆதார்கணக்கை வங்கிக்கணக்குடன் இணைக்க ரூ.113 (நபர் 1 க்கு) பணம் செலுத்திய யாருக்கும் பணம் பெற்றதற்கான ரசீது வழங்கப்படவில்லை...

2. இந்தியன் வங்கி மற்றும் CUB வங்கிகளில் இது போன்று பணம் வசூலிக்கப்படவில்லை..

3. STATE BANK OF INDIA Toll Free No 1800 425 3800 ஐ தொடர்பு கொண்டு கேட்டபோது. ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க பணம் ஏதும் செலுத்தப்படவேண்டியது இல்லை என்று கூறினர்.

4. மறுபடியும் மேனேஜர் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது வேண்டும் என்றால் வந்து உங்கள் பணத்தை திரும்ப வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினார்.

என்னுடைய கேள்வி...

1. அப்படியென்றால் மக்களிடம் வாங்கிய பணம் யாருக்கு போய் சேருகின்றது?

2.ஒருவேளை அதற்கான ஜார்ஜ் இந்திய அரசாங்கத்தால் வசூலிக்கப்படுவது உண்மையெனில் (ரூ.113) இவ்வளவு தொகை எதற்கு?

3. என்னிடம் போனில் தொடர்பு கொண்டு திரும்ப பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிய மேனேஜர் பணத்தை வசூல் செய்த அனைத்து மக்களிடம் போன்பண்ணி பெற்றுக்கொள்ள சொல்வாரா? அப்படி சொல்லி அனைத்து மக்களுக்கும் பணத்தை திரும்ப கொடுப்பாரா?

4. ஒரு நபருக்கு ரூ.113 வீதம் வசூலித்தால் மொத்த வசூல் பணம் இந்த கிளையில் மட்டும் எவ்வளவு?

5.வங்கி கணக்கு எண் நிரப்பாமல் தேதி, ரூபாய் மற்றும் எனது பெயர் எழுதி கையெழுத்து போட்டு சீல் வைத்து கொடுத்த அவசரம் என்ன?

தயவு செய்து ஷேர் செய்யவும்

நன்றி:- ராஜா

Relaxplzz


:) Relaxplzz

Posted: 09 Jan 2015 08:55 AM PST

பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள், பிறகு பேசுகிறாள். இந்த மூன்றை...

Posted: 09 Jan 2015 08:50 AM PST

பெண் முதலில் பார்க்கிறாள்,
பிறகு சிரிக்கிறாள்,
பிறகு பேசுகிறாள்.

இந்த மூன்றையும் தாண்டி, அவளது இதயம் நாலாவது வேலையொன்றை செய்து கொண்டிருக்கிறது.

அது என்னவென்று தெரிந்தவர் இரண்டு பேர்.. அவளும் ஆண்டவனும். :)

-கவிஞர் கண்ணதாசன்

Relaxplzz

ராஜபக்சே தோல்வி :P :P

Posted: 09 Jan 2015 08:45 AM PST

ராஜபக்சே தோல்வி :P :P


மூளைக்கொரு வேலை..???

Posted: 09 Jan 2015 08:40 AM PST

மூளைக்கொரு வேலை..???


:) Relaxplzz

Posted: 09 Jan 2015 08:30 AM PST

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 09 Jan 2015 08:20 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


2100யில் உலகம் எப்படி ஒரு சிரிய கற்பனை.. 1.ஈரோடு அருகில் மிக பழமையான 80 வருடங்க...

Posted: 09 Jan 2015 08:10 AM PST

2100யில் உலகம் எப்படி ஒரு சிரிய கற்பனை..

1.ஈரோடு அருகில் மிக பழமையான 80
வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய
இரண்டு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்ப
ட்டது அதற்கு சைக்கிள் என்று கண்டுபிடிக்கப்ப
ட்டுள்ளன.

2.தன் வீட்டு மொட்டை. மாடியில்
பழங்கால பயிர்களை. பயிரிட்டு இளைஞர்
சாதனை .(அரிசி. கம்பு. சோளம். )

3.செவ்வாய் கிரகத்தில் மாரியம்மன்
கோவில் திருவிழாவில் பக்தர்கள்
குண்டம்இறங்கி அழகு திருவிழாவை கொண்டாடினர்.

4.இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த
பாக்கித்தான் ரோபோக்களை இந்திய ரோபோக்கள்.
சுட்டதில் ஐந்து ரோபோக்கள் பழதடைந்தன.

5.உலகத்தில் 50வருடம் உயிர்வாழ்ந்த
பழமையான மனிதர் கின்னஸ் சாதனை .

6.நேற்று இரவு திடிரென்று விண்ணில்
இருந்து பொழிந்த நீர் துளிகளாள்
மக்கள் அஞ்சி நடிங்கினர் பிறகு விஞ்ஞானிகள்
அதற்கு மழை என்றும்

10ஆண்டுகளுக்கு ஒரு முறை பொழியும்
என்று கூறினர் .

8.புளூட்டோவில் இருந்து பூமிக்கு பனி நீர் எடுக்கும்
திட்டத்தை மத்திய அரசு முடிவு செய்தனர் .

9.80வருடங்களுக்கு முன் வாழ்ந்த பறவையின்
எழம்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது ..
(கிளி.காகம்.மயில்.கழகு).

10. செவ்வாய் கிரகத்துக்கும் பூமிக்கும்
இடையே ரயில் பாலங்கள் கட்ட உலக நாடுகள்
முடிவு செய்தனர்...

Relaxplzz

கல்வி இனி என்ன செய்ய வேண்டும் நாம்? தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒரு...

Posted: 09 Jan 2015 08:00 AM PST

கல்வி இனி என்ன செய்ய வேண்டும் நாம்?

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப மாணவர்கள் (Engineers) தொழில்நுட்ப்பக்கல்லூரிகள்ல இருந்து வெளிய வர்றாங்க. அப்படி வருபவர்களில் பாதிக்கும் மேல் வேலை கிடைக்காமல் ஒரு வருடமோ இரண்டு வருடமோ தேடல்லயே தொலைக்க வேண்டி இருக்கு. இதுக்கு என்ன காரணம்ணு என்னைக்காவது யோசித்துப்பார்த்தோமா?

அப்படியே வேலை கிடைச்சாலும் சம்பளமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்குறது இல்லை. அதில் பாதிபேர் படிச்ச பாதையை விட்டுட்டு வேற பாதைல போயிடுறாங்க. இதெல்லாம் ஏன் நடக்குது?

இதை எப்படி மாற்றலாம்னு என்னைக்காவது யோசிச்சு பாத்துருக்கோமா?

இதை மாணவர்களிடம் கேட்டா சொல்ற பதில் 'Education System' சரி இல்லை..நான் படிச்ச காலேஜ் சரி இல்லை அப்படி இப்படீனு சில காரணங்கள் சொல்லுவாங்க...

கல்லூரிகளிடம் கேட்டால்...சரிவிடுங்க அவங்க கேக்குறதே தேவையில்லாத்துதான் ஏன்னா பெரும்பாலும் அவங்க செயல்படும் விதமே கல்லூரிகளெல்லாம் வியாபாரமாகி விட்ட விஷயம்தான் அப்படீன்னு சொல்லாமல் சொல்லுது...

அதுவே சமூக ஆர்வலரிடம் கேட்டால்..இந்த அரசு சரி இல்லை...கல்லூரிகளை சரிய கட்டுப்படுத்துவது இல்லை என்று பதில் வரும்...

சரிங்க இவங்க சொல்றது எல்லாமே சரிதான் ஆனா அதுக்காக நாம இதெல்லாம் சரியாகும் வரை காத்துக்கொண்டே இருக்க முடியுமா?

கட்டாயம் முடியாதுதானே. சரி என்ன பண்ணலாம்?

உலகம் உங்கள் வீட்டு வரவேற்பறைக்கு வரும் காலம் இது. அந்த வளர்ச்சியை சரியாக உபயோகப்படுத்தினால் சரியாக முன்னேறமுடியும். ஆனால் அந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் தடையாக நிறைய விஷயங்கள் நமக்கு முன்னே முன்னிருத்தப்பட்டிருக்கின்றன.

சரி முதலில் மாணவர்களிடமிருந்தே தொடங்குவோம்.. எந்த கல்லூரியில் படித்தாலும் உலக அறிவை வளர்த்துக்கொண்டால் போதும்...உலக அறிவை வளர்ப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை பன்னிடன்டாம் வகுப்பு கணித பாடத்தைவிட இது எளிதுதான்...

அதற்காக கல்லூரி வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்காமல் சதா சர்வகாலமும் படித்துக்கொண்டே இப்படிஅறிவை வளர்த்துக்கொண்டே இருங்கள் என்று கூறவில்லை அப்படி நான் கூறினால் அதைவிட முட்டள்தனமான விஷயம் வேறு இருக்கவே முடியாது..
கல்லூரியில் நல்லா Enjoy பண்ணுங்க. ஆனா ஒரு நாளைக்கு ஒரே ஒரு மணி நேரம் மட்டும் உங்கள் அறிவை வளர்க்க செலவழித்துப்பாடுங்கள் அப்போ தெரியும் அதொட வலிமை என்ன என்று. அதேபோல் இந்த அறிவுத்தேடலையும் உங்கள் பொழுதுபோக்கிலேயே வைத்துப்பாருங்கள்...அதுதான் முக்கியம் நீங்கள் செய்வதை ரசித்து செய்யுங்கள்...

வாருங்கள் ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்...

நீங்கள் கணினி பயிலும் மாணவர் என வைத்துக்கொள்வோம் உங்களுக்கு 'சி' நிரலாக்கம் (C Programming) இருக்கிறது என்றால் முதலில் 'சி' நிரலை எங்கு உபயோகப்படுத்துவார்கள் என்பதைப்படியுங்கள்...பின் உங்களின் எதாவது ஒரு நிஜ உலகத்துடன் தொடர்பு படுத்திப்பாருங்கள்....உங்கள் அம்மாவின் மாதாந்திர பட்ஜெட்டை 'சி' இல் ஒரு நிரலில் எழுதிக் கொடுங்கள்...'LOVE METER' நிரல் எழுதி நண்பர்களுடன் ஜாலியாய் அரட்டை அடியுங்கள்... இது போல் செய்தால் நீங்கள் படித்தது மிக அதிகமாய் இருக்கும் ஆனால் படிக்கிறோம் என்ற சோம்பல் இல்லாமலே படித்து முடித்திருப்போம்...

இதேபோல் ஒவ்வொரு துறைக்கும் REAL WORLD உடன் தொடர்புபடுத்தி படியுங்கள்..உங்களால் எளிதாக படிக்க முடியும்...மேலும் இணையத்தில் முகப்புத்தகம் தவிரவும் நிறைய நல்ல இணையதளங்கள் உள்ளது. அவற்றிற்கு வாருங்கள். நிறைய உங்களை வலைப்பூ எழுத உதவுகின்றது.. அவற்றை தேடுங்கள்...

நிறைய நிறையயயயய வாய்ப்புகள் உள்ளன நண்பர்களே...வாருங்கள் சேர்ந்தே கலக்குவோம் இணையத்தை...

உங்களுக்குள் தேடல் என்ற ஒன்று மட்டும் இருந்தால் உங்களால் இந்த உலகை வெல்ல முடியும்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நானும் இப்படிப்பட்ட சூழலில் தான் படித்து வந்தேன்...நம் கல்வி தொடர்பான பல கேள்விகள் கோபங்கள் என்னுள் இருந்தது யாராவது கல்விமுறையை மாற்ற மாட்டர்களா? என என்னினேன் ஆனால் நாம் முதலில் மாறுவோம் என்ற முடிவுக்கு வந்து பின் மாறினேன்..

உங்களுக்கும் அதே மாதிரியான கேள்விகள் நியாயமான கோபங்கள் இருப்பது சரிதான்... ஆனால் வெறும் கோபம் எதற்கும் உதவாது....கோபத்தை நாம் நேர்மறையான விசயங்களாக மாற்றவேண்டும்..அதுதான் நம் வெற்றியின் வழி..

வாருங்கள் எல்லாவற்றையும் கற்கலாம்...
அடுத்தபதிவில் மேலும் தெரிந்து கொள்ளலாம் காத்திருங்கள்...
பசித்திருங்கள் அப்போதுதான் உணவு சுவைத்திருக்கும்...

--"ரெளத்ரம் பழகுவோம்"

இப்பதிவை பகிருங்கள் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவுங்கள்.

Relaxplzz


பொறுப்புக்கள் எதுவும் இல்லாத வயதில் வாழ்க்கையில் சந்தோசம் இருந்தது... பொறுப்புக...

Posted: 09 Jan 2015 07:50 AM PST

பொறுப்புக்கள் எதுவும் இல்லாத வயதில்
வாழ்க்கையில் சந்தோசம் இருந்தது...

பொறுப்புக்கள் அதிகம் வந்ததும்
அன்றிருந்த சந்தோசம் தொலைந்தது..!


இந்திய வளா்ச்சி இல்லாமைக்கு உங்கள் கருத்து என்ன ? 1. ஊழல் காரணமமா? 2. அரசியல்...

Posted: 09 Jan 2015 07:45 AM PST

இந்திய வளா்ச்சி இல்லாமைக்கு உங்கள் கருத்து என்ன ?

1. ஊழல் காரணமமா?

2. அரசியல் காரணம்மா?

3. அரசங்கம் காரணம்மா?

4. இவை அனைத்தும்மா?

Relaxplzz

கொய்யாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 09 Jan 2015 07:40 AM PST

கொய்யாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y) Relaxplzz

Posted: 09 Jan 2015 07:30 AM PST

:P Relaxplzz

Posted: 09 Jan 2015 07:20 AM PST

அந்த காலம் தான் நன்றாக இருந்தது....! பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பா...

Posted: 09 Jan 2015 07:10 AM PST

அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!

பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் .,
.
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
பேருந்தில் உட்கார இடம் கிடைக்கும் ..,
.
மிதி வண்டி வைத்திருந்தோம்.,
.
எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.,
.
வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்.,
.
எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்.,
.
சாலையில் எப்போதாவது வண்டி வரும்.,
.
மழை நின்று நிதானமாக பொழியும் ,
.
சாராய கடைகள் இருந்தன.,ஆனால்
இன்றைய கூட்டம் அன்று என்றுமே இருந்ததில்லை.,
.
தமிழ் ஆசிரியர்கள் தந்நிகரற்று விளங்கினர்.,
.
வேலைக்கு போகாதவன்
எந்த குடும்பத்திற்க்கும் பாரமாயில்லை.,
.
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
.
வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது.,
.
சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்.,
.
முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்.,
.
பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்.,
சிலின்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணிய வில்லை.,
.
சுவாசிக்க காற்று இருந்தது.,
.
குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை.,
.
தெருவில் சிருமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.
அவர்களை கலாய்த்து கொண்டே
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
.
மயில் இறகுகள் குட்டி போட்டன,புத்தகத்தில்.,
.
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு
அப்பாவிடம் அடி வாங்கினேன் ..,
.
மூன்றாம் வகுப்பிலிருந்துமட்டுமே,ஆங்கிலம்.,
.
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.,
.
கடந்து தொலைந்து போனவை
நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,
நம்பிக்கைகளும்தான்......

- கவிஞர் மகுடேஸ்வரன்

Relaxplzz

ப்பா.. என்ன யாழி? நீ இன்னும் தூங்கலையா? ஒரு கதைசொல்லுப்பா.. அப்பாவுக்கு தூக்க...

Posted: 09 Jan 2015 07:00 AM PST

ப்பா..

என்ன யாழி?
நீ இன்னும் தூங்கலையா?

ஒரு கதைசொல்லுப்பா..

அப்பாவுக்கு தூக்கம்வருது யாழி..

எனக்குவரலேயேப்பா...

அம்மாசொல்லுவாங்க. அம்மாகிட்டகேளு பாப்பா.

அம்மா தூங்கிட்டாங்கப்பா.
நீ சொல்லு. ஆனா காக்காகத வேணாம்.

சரி... ஒரு ஊர்ல..

எந்தவூர்லப்பா...?

என்னையமாதிரியேயிருக்கியே நீயும்.
சரி. ஒரு காட்டுல..

எந்தக்காட்டுலப்பா?

ம்ம்ம்ம்.. முன்னாடி ஒரு ஊர்சொன்னேனே..

ஆமா.

அந்தவூரோடக்காட்டுல..

ம்ம்ம். சரிப்பா.

தூங்குமா பாப்பா?

கதைய சொல்லுப்பா..

அந்தக்காட்டுல ஒரு வீடு இருந்துச்சாம்.

ஏம்ப்பா காட்டுலபோயி வீடுகட்டுனாங்க?

கதைகேக்குறியா இல்ல கேள்விகேக்குறியா பாப்பா?

கத..

கேளு.
அந்தவீட்டுல ஒரு தாத்தாவும் பேரனும் இருந்தாங்களாம்.

பாட்டிலாம் எங்கப்பா?

இப்பதான சொன்னேன்..

சரிப்பா. நீ சொல்லு.

எங்கவிட்டேன்?

வீட்டுல.

யார்வீட்டுல?

இல்லப்பா.
அந்தக்காட்டுலவுள்ள வீட்டுல.

ஆங்..

அந்த தாத்தா ஒரு வெறகுவெட்டியாம். அவருக்கு ரொம்பவயசாகிட்டாம்.

வயசானதானப்பா தாத்தா?

"....."

சரி. நீ கதசொல்லுப்பா இனுமே எதுங்கேக்கல.

ம்ம்ம்ம். அந்த தாத்தாவுக்கு வயசாயிட்டதால அவரால வேலசெய்யமுடியலையாம் பாப்பா.

பாவம்ப்பா..

யாரு நாந்தானே?

இல்லப்பா அந்த தாத்தா.

சரி.
கதைய கேளு.
தாத்தாவுக்கு வயசாயிட்டதால வெறகுவெட்டமுடியாம கஷ்டப்பட்டாராம்.

ம்ம்ம்ம்..

சரினு ஒருநாள் அந்த பேரன் தாத்தாகிட்டசொன்னானாம்.

என்னா சொன்னானாம்ப்பா?

இரு யோசிக்கிறேன்.
ஆங்..
தாத்தா..தாத்தா.. உன்னாலதான் வெறகுவெட்டமுடியலயே..
நா பட்டணம்போயி வேலபார்த்து பணங்கொண்டுவர்றேன் தாத்தா..னு சொன்னானாம்.

பட்டணம்னா என்னப்பா?
சோறுகட்டித்தருவாங்களே அதாப்பா?

இல்ல பாப்பா.
அது பொட்டலம்.
பட்டணம்னா பெரியவூரு.

ம்ம்ம்.

உடனே தாத்தா சொன்னாராம்.
பட்டணம்போறதுக்கு நெறையா செலவாகும்டா ராஜா..னு.

ராஜா..னா?

அதாம்பாப்பா அந்த பேரனோடபேரு.

அன்னிக்கு ஒரு மாமா நம்மவீட்டுக்குவந்தாங்களே! அவங்கபேரும் ராஜாமாமா தானப்பா..?

ஆமா பாப்பா.
சரி. தூங்கூமா?

வேணாம்ப்பா.
கதைய சொல்லுப்பா.

ம்ம்ம்ம்..
அதுக்கு பேரன்சொன்னானாம்....
இல்ல தாத்தா நீ யார்கிட்டயாச்சும் காசுவாங்கிக்கொடு.
நா சம்பாரிச்சிட்டு வந்து அந்தக்கடனையெல்லாம் அடச்சிடலாம்..னு சொன்னானாம்.

சரினு அந்த தாத்தா,
அந்த காட்டுல இருந்த இன்னொருத்தருகிட்ட கடனா பணம்வாங்குனாராம்.

அவருயாருப்பா?

அவருதான் பெரியமனுஷன் அந்தக்காட்டுல.

காட்டுல யாம்ப்பா இவ்வளோ மனுஷங்க?
சிங்கம் புலியெல்லாம் எங்கப்பா?

அதுங்கள்லாம் பின்னாடிவருது.

யார்பின்னாடிப்பா?

ஐயோ பாப்பா..
கதையிலபின்னாடி வரும் பாப்பா.

ஐய்..சூப்பருப்பா.

ஏ பாப்பா சத்தம்போடாத. அம்மா முழிச்சிப்பாங்க.

"...."

சரி. கதைய கேளு.
பேரன் பணத்தைவாங்கிகிட்டு பட்டணம்போயிட்டானாம்.

ம்ம்ம்..

போயி ரொம்பநாளாகிட்டாம்.
ஆளும் வரல.. பணமும் வரலையாம் பாப்பா.

பாவம்ப்பா தாத்தா.

ம்ம்ம்.. பணங்கொடுத்தவரு அடிக்கடி அந்த தாத்தாவீட்டுக்குவந்து
எப்போடா பணந்தருவேனு கேட்டுட்டுப்போவாறாம்.

ப்பா.. தாத்தாவ டாபோட்டுக்கூப்பிட்டாரா அவரு?

ஆமா பாப்பா. பணக்காரங்க அப்படித்தாங்கூப்புடுவாங்க.

ம்ம்ம்ம்..

ஒருநாளு,
அந்த தாத்தாவப்போட்டு செம்மையா அடிச்சிட்டாராம் அவரு.

அவர நீயி போயி அடிச்சிடுப்பா..

பாப்பா.. இது கததானே.. கதையிலலாம் நாம போயி அடிக்கமுடியாது பாப்பா.

"..."

சரி அடிச்சிடுவோம்.

ஐய்...சூப்பரப்பா..

இதுபோல நெதமும் அவருவந்து தாத்தாகிட்ட பணங்கேப்பாறாம்..
பேரன்வந்ததும் வட்டியோடத்தந்துடுறேன்னு தாத்தா சொல்வாராம்.
ஆனா அதெல்லாந்தெரியாதுனு அடிப்பாராம்.

பாவம்ப்பா..

ம்ம்ம். ஒருநாளு அவரு அடிச்சிட்டுப்போனதும் தாத்தாவூட்ல இருந்த பூனைக்குட்டிக்கு கோவம் வந்துட்டாம்..

ஐய்... பூனக்குட்டி பூனக்குட்டி...
ஜாலி..ஜாலி..

சூ... அம்மா தூங்குறாங்கள்ல..

"..."

பூனக்குட்டி, தாத்தாகிட்ட சொன்னுச்சாம்.
தாத்தா தாத்தா.. நீ அழாத. நா போயி அந்தாள ரெண்டுலவொன்னுபார்த்துட்டுவர்றேன்னு..
தாத்தா அழுதுகிட்டே தரையில கெடந்தாராம்.

போப்பா... நீ போயி மொதல்ல அவர அடிச்சிட்டுவந்து கதசொல்லு போப்பா..

அதான் பூனக்குட்டிய அனுப்பிட்டோம்ல பாப்பா.
இனிமே பாரு.

அவன் பூனக்குட்டியயும் அடிச்சிடுவாம்ப்பா.

பெரியவங்கள அவன் இவன்னு சொல்லக்கூடாது பாப்பா. பாவம்.

போப்பா...

சரி. பூனக்குட்டி வேகவேகமா அந்தாளு வீட்டுக்குப்போனுச்சாம்.
போறவழியில யானவொன்னு வந்துச்சாம்.

ஐய்..யான..யான.. அன்னிக்கி கோயில்லபார்த்தோமே அதாப்பா?

இது அதில்ல. வேறயான.

ம்ம்ம்ம்..

யான கேட்டுச்சாம்..
பூனக்குட்டி பூனக்குட்டி.. எங்க இவ்வளோ வேகமாப்போறேனு..

யான பேசுமாப்பா?

முன்னாடி பூனக்குட்டி தாத்தாகிட்ட பேசுச்சுல..

ஆமா..

அதுமாதிரி எல்லாமிருகமும் பேசும் பாப்பா.

ம்ம்ம்ம்..

பூனக்குட்டி எல்லாத்தையுஞ்சொன்னுச்சாம்.
ஒடனே யான,
அப்படியா சரிசரி.. நானும் வர்றேன்னு சொன்னுச்சாம்..

சரிண்ணேனு சொல்லிட்டு பூனக்குட்டி முன்னாடி போச்சாம். பின்னாடி யான.

ஐய்...

கொஞ்சதூரம்போனதும் சிங்கம் வந்துச்சாம்.
அது கேட்டுச்சாம் ரெண்டுபேரும் எங்கபோறீங்கனு.

யான சொன்னுச்சாம்.
ராஜா..ராஜா.. இந்தப்பூனக்குட்டியோட தாத்தாவ அந்தாளு அடிச்சிட்டானாம். அவன ஒருவழிபண்ணப்போறேன்னு சொன்னுச்சாம்.

ராஜா வந்துட்டானாப்பா?

எந்தராஜா?

பொட்டணம்போன ராஜா.

ஐயோ... அது பட்டணம் பாப்பா.
அவந்தான் பட்டணத்துல இருக்கானே.
சிங்கந்தான் ராஜா.
காட்டுக்கு ராஜா சிங்கம் பாப்பா..

சரிப்பா..

சரினு சிங்கமும் அதுங்களோட சேர்ந்துச்சாம்.

கொஞ்சநேரத்துல புலி, நரி, கரடி.. மூனும் இதுங்களோட சேர்ந்துக்குச்சுங்களாம்.

ம்ம்ம்ம்..

யார்யார்போறாங்கனு சொல்லு பாப்பும்.

பூனக்குட்டி

ம்ம்ம்..

யான..

ம்ம்ம்..

சிங்கம்..

ம்ம்ம்..

நரி..

ம்ம்ம்..

புலி....

ம்ம்ம்.. அப்புறம்?

அப்புறம்... மறந்துட்டம்ப்பா.

கரடி..

ஆங்.. கரடி கரடி..

ம்ம்ம். எல்லாம் வரிசையா போச்சாம். இதுங்களோட
பாம்பு, தேளு, பூரான்லாம் சேர்ந்துக்குச்சுங்களாம்.

எல்லாம் அந்தாளோடவீட்டுக்குப்போச்சுங்களாம்.

ம்ம்ம்ம்..

யான வாசல்ல நின்னுகிட்டாம்.

யாம்ப்பா?

யான பெருசுல.. அதால உள்ள போகமுடியலியாம். அதாம்பாப்பா.

ம்ம்ம்ம்..

புலி வீட்டுக்குப்பின்னாடி ஒளிஞ்சிக்கிச்சாம்.

அன்னிக்கி நீ போயி ஒளிஞ்சிக்கிட்டியே.. அதுமாதிரியாப்பா?

ம்ம்ம்..
நரியும் கரடியும் கதவை தொறந்துகிட்டு உள்ளபோனுச்சுங்களாம்.

ம்ம்ம்ம்..

உடனே பாம்பு, தேளு, பூரான்லாம் உள்ளபோயிட்டுங்களாம்.

போயி?

போயி, பூரான் அடுப்புல புகுந்துகிட்டாம்.

ம்ம்ம்ம்..

தேளு சட்டையில புகுந்துகிட்டாம்.

ம்ம்ம்ம்..

பாம்பு கதவுமேல உக்காந்துகிச்சாம்.

ம்ம்ம்ம்..

பூனக்குட்டி, அந்தாளு படுத்துதூங்குன கட்டில்மேல ஏறுனுச்சாம்.

ப்பா...

என்ன பாப்பா...?

சிங்கம் எங்கப்பா..?

அதவிட்டுட்டேனா? அது கட்டிலுக்கு அடியில படுத்துகிச்சாம்.

ம்ம்ம்ம்..

பூனக்குட்டி, அந்தாள எழுப்புச்சாம்.

ஏம்ப்பா..?

ஏம்ப்பாவா? எல்லாம் எதுக்கு வந்திருக்கு இங்க?

அடிக்க.

அதுக்குதான்.
பூனக்குட்டி அந்தாள பிறாண்டிச்சாம்.

ம்ம்ம்ம்..

அவரு கடுப்பாயிட்டாராம்.
ஒன்ன என்ன பண்றேம்பாருனு அடுப்புகிட்ட இருக்குற வெறகையெடுக்க எந்திரிச்சாராம்.

பாவம்ப்பா பூனக்குட்டி.

சரி. அடுப்புல இப்போ என்னா இருக்கும்?

நெருப்பு.

அது இப்போ இருக்காது பாப்பா. அங்க என்னா ஒளிஞ்சிகிட்டுருக்கு?

பூக்கான்.

பூக்கானில்ல பாப்பா. பூரான்.

ம்ம்ம்ம்..

அடுப்புக்கு போறதுக்காக கீழயெறங்குனாராம்.
கட்டில்கீழ என்னாருக்கு?

சிங்கம்.

ம்ம்ம்..சூப்பரு பாப்பா. அது அவருகாலை கடிச்சுதாம்.

ஐய்..ஜாலி..ஜாலி..

அவரு உடனே பயந்துபோயி சட்டையயெடுத்துப்போட்டுகிட்டு வெளிய ஓடலாம்னு பார்த்தாராம்.
சட்டையில என்னாருக்கு?

பட்டன்.

இல்லபாப்பா. சட்டையில என்னாவொளிஞ்சிருக்கு?

பாம்பு..

இல்லபாப்பா. பாம்பு, கதவுல....

ஆங்.. தேளு..தேளு..

ம்ம்ம். சட்டையிலருந்த தேளு கொட்டுச்சாம்.

ஐய்...

சட்டைய தூக்கிப்போட்டுட்டு வாசலுக்கு ஓடுனாராம்.
ஒடனே, கரடியும் நரியும் வெரட்டுச்சுங்களாம்.

ம்ம்ம்ம்..

கதவைத்தொறக்க கைவச்சாராம்.

பாம்பு முழுங்கிட்டாப்பா?

ஐயோ இல்ல பாப்பா..
படமெடுத்துச்சாம்.

ம்ம்ம்ம்..

கதவ தொறந்தா என்னா நிக்கும்...?

யான..

ம்ம்ம். அதுக்கு பயந்துகிட்டு கொல்லப்பக்கம் ஓடுனாராம்..

கொல்லையில என்னாருக்கு?

புலியாப்பா?

ம்ம்ம்.. புலிதான்.
எல்லாம் ஒன்னுகூடிட்டாம்.

ஜாலி..ஜாலி..

ம்ம்ம்.. எல்லாம் ஒன்னுகூடவும் அவரு பயந்துபோயி அதுங்ககிட்ட மன்னிப்புகேட்டாராம்.
இனிமே தாத்தாவ அடிக்கமாட்டேன்னு சத்தியம்பண்ணிக்கொடுத்தாராம்.

ம்ம்ம்ம்..

ஒடனே சிங்கம் சொன்னுச்சாம்..
எங்ககிட்ட மன்னிப்புகேட்டா பத்தாது.
தாத்தாகிட்டவந்துகேளுனு
தறதறன்னு இழுத்துட்டுப்போச்சாம்.

ப்பா.. வேணாம் பா..
அவருதான் மன்னிப்புகேட்டாருல..
இனிமே கடிக்கவேணாம்னு அதுங்ககிட்ட சொல்லுப்பா.

சரி. அவர யானமேல உட்காரவச்சி தாத்தாவீட்டுக்கு எல்லாம் அழச்சிட்டுவந்துச்சுங்களாம்.

அவரு, தாத்தாகிட்ட மன்னிப்புகேட்டாராம்.
பேரன்வந்ததும் காசு வாங்கிக்கிறேன்னு சொன்னாராம்.

ஐய்.. சூப்பருப்பா..

அப்புறம், கொஞ்சநாள்ல ராஜா வந்தானாம். நெறையா பணம்சம்பாரிச்சிட்டுவந்தானாம். கடனையெல்லாங்கொடுத்துட்டு தாத்தாவும் பேரனும் சந்தோஷமாவாழ்ந்தாங்களாம்.

அப்புறம்..?

அப்புறமா?
அவ்வளோதாம்பாப்பா. கத முடிஞ்சிட்டு.

முடிஞ்சிட்டா? அந்த யான சிங்கமெல்லாம் எங்கப்பா?

அதெல்லாம் காட்டுக்குப்போயிட்டு பாப்பா.

போயி..?

ஐயோ பாப்பா.. கதமுடிஞ்சிட்டு பாப்பா.
நீ தூங்கு.

வேறகதசொல்லுப்பா..

சொன்னா கேக்கமாட்டே நீ?
தூங்கு பாப்பா.
ரோ..ரோ...ரோ...

போப்பா.. வேற கத சொல்லு.

"..."

சொல்லுப்பா.

ஒரு ஊர்ல ஒரு அப்பாஅம்மாவாம்..

ம்ம்ம்ம்..

அவங்களுக்கு யாழினு ஒரு பாப்பாவாம்.

ஐய்..நானு..

ம்க்கும்.. அந்த பாப்பா ஒருநாள் அவங்கப்பாகிட்ட,
கதசொல்லுப்பா.. கதசொல்லுப்பா..னு சொல்லுச்சாம்.

ம்ம்ம்ம்..

அவங்கப்பாவும் கதசொன்னாங்களாம்.

ம்ம்ம்ம்.. என்னகதப்பா?

ஐயோ.. நீ முதல்ல இந்தக்கதய கேளு.

சரிப்பா. சொல்லுப்பா.

கதய சொல்லிமுடிச்சதும்,
இன்னோரு கதசொல்லுப்பானு அடம்புடிச்சுதாம்.

அவங்கப்பா கடுப்பாயி
ரெண்டு சாத்துசாத்தி படுக்கவச்சாங்களாம்.

அப்புறம்..?

ஐயோ பாப்பா.. உனக்கு புரியலயா?

புரியுதுப்பா..
நீ வேறகதசொல்லுப்பா..

"..."

ப்பா..

"..."

ஏய் பாப்பா.. அப்பா தூங்கிட்டாங்கடி..

ஐய்..அம்மா..
நீ தூங்கலையாம்மா?

இல்ல பாப்பா.. நானும் உங்கூடசேர்ந்து அப்பாசொன்னகதையக்கேட்டேன்டி.

ம்ம்ம்ம்..
சரி பாப்பா.. தூங்கலாமா?

ம்மா..

ஏம்மா..?

நீயொரு கதசொல்லுமா..

அம்மாவுக்கு தூக்கம்வருதுடா செல்லம்.

எனக்கு வரலியேம்மா..

சரி.
ஒரு ஊர்ல...

எந்தவூர்லம்மா?
.
.
.
.
.
பொழுது இனிதாய்ப்புலர்ந்தது.

சமர்ப்பணம்: எல்லாப்பெற்றோர்களுக்கும்.

#பாலா ஃபீனிக்ஸ்.

Relaxplzz


எதை இழந்தோம் என்பது அல்ல விஷயம் ? எது மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் ! வாழ்க்...

Posted: 09 Jan 2015 06:50 AM PST

எதை இழந்தோம் என்பது அல்ல விஷயம் ? எது மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் ! வாழ்க்கை சுகமானது !"


அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 09 Jan 2015 06:40 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y) Relaxplzz

Posted: 09 Jan 2015 06:30 AM PST

;-) Relaxplzz

Posted: 09 Jan 2015 06:20 AM PST

(சாப்ட்டு முடிச்சிட்டு இலையை மடிக்க போகிறார்) சர்வர் - சார் இலையை மடிக்கதீங்க...

Posted: 09 Jan 2015 06:10 AM PST

(சாப்ட்டு முடிச்சிட்டு இலையை மடிக்க போகிறார்)
சர்வர் - சார் இலையை மடிக்கதீங்க

ஆள் - எதுக்குயா மடிக்க வேணாம்னு சொல்ற நா(சாப்ட்டு முடிச்சிட்டு இலையை மடிக்க போகிறார்)
சர்வர் - சார் இலையை மடிக்கதீங்க

ஆள் - எதுக்குயா மடிக்க வேணாம்னு சொல்ற நான் சாப்ட்டு முடிச்சிட்டேன்

சர்வர் - இதே இலையை தான் அடுத்த ஆளுக்கு போடணும் அதான் சொல்றேன் அப்படியே வைங்க

ஆள் - என்னது இதே இலையை போடுவியா?. அவரு சங்கட பட மாட்டாரா?

சர்வர் - நீங்க என்ன என்ன இப்ப சங்கட பட்டீங்களா?

####
ஆள் 1 - என்னைய இது டீல ஈ இருக்கு?

ஆள் 2 - அது வைட்டமின் ஈ அதனால சாப்புடுங்க உடம்புக்கு நல்லது

####
ஆள் 1 - சர்கரை போடாம ஒரு காபி

சர்வர் - ஓகே சார்

ஆள் 2 - எனக்கு பில் போடாம ஒரு "டீ"

சர்வர் - என்ன சார் இப்படி கேக்குறீங்க?

ஆள் 2 - அவருக்கு மட்டும் சர்க்கரை போடாம தரீங்க அப்ப எனக்கு தர மாட்டீங்களா?

சர்வர் - ???
####
ஆள் - சர்வர் சாப்பாடுல கரப்பான்பூச்சி கடக்குங்க.

சர்வர் - பரவால சாப்புடுங்க நாங்க அதுக்கெல்லாம் பில் போட மாட்டோம்

:P :P

Relaxplzz

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க நமது கணிணியில் பல கோப்புகள...

Posted: 09 Jan 2015 06:00 AM PST

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க

நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல

கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து

கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட image "1" தோன்றும்.

இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய

வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என

ஏதாவது தேர்வு செய்து கொள்க.

தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட image 2 தோன்றும்.

இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ

முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும்

முடக்கப்பட்டிருக்கும்.image "3" உள்ள படத்தை பார்க்க.

உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால்

போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய

நிலைக்கு வந்து விடும்.

தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.

இந்த மென்பொருளை தரவிறக்க

https://www.dropbox.com/s/8mjxj7pzt2oshzw/Prevent.rar?dl=0

இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Relaxplzz


இன்றைய மனிதர்களிடம் தேடித் தேடி கலைத்து தான் போகின்றோம்.... இது போன்ற ஒப்பனை...

Posted: 09 Jan 2015 05:50 AM PST

இன்றைய மனிதர்களிடம்
தேடித் தேடி கலைத்து தான்
போகின்றோம்....

இது போன்ற ஒப்பனை
இல்லாத புன்கையை ....


இந்த தாத்தாவ தெரிந்தவங்க லைக் பண்ணுங்க... ;-) (y)

Posted: 09 Jan 2015 05:40 AM PST

இந்த தாத்தாவ தெரிந்தவங்க லைக் பண்ணுங்க... ;-) (y)


:) Relaxplzz

Posted: 09 Jan 2015 05:30 AM PST

குண்டு போட உலக நாடுகள் வந்தாலும் ஓட்டு போட உள்ளூர் மக்கள்தான் வேணும்னு தெரியாம...

Posted: 09 Jan 2015 05:20 AM PST

குண்டு போட உலக நாடுகள் வந்தாலும்
ஓட்டு போட உள்ளூர் மக்கள்தான் வேணும்னு தெரியாம போச்சு ராஜ பக்சேக்கு..

#ராஜபக்சே_தோல்வி