Wednesday, 6 May 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...! 1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம...

Posted: 06 May 2015 08:57 AM PDT

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...!

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்.

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11. ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு பெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி விடாதீர்கள்.

13. பிறரைப் பாராட்டுங்கள், பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள், மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள், அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல, அறத்தின் காவலன்.

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18. எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

Relaxplzz


"சிந்தனைகள்"

"ஏமாற்றியவர்களுக்கு நன்றி" அவர்கள் ஏமாற்றத்தை சொல்லிதரவில்லை,,, இனி ஏமாறாமல் இரு...

Posted: 06 May 2015 08:49 AM PDT

"ஏமாற்றியவர்களுக்கு நன்றி"
அவர்கள் ஏமாற்றத்தை சொல்லிதரவில்லை,,,
இனி ஏமாறாமல் இருக்க அனுபவத்தை தந்து இருக்கிறார்கள்.

- ♥மீரா♥


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 5

தமிழக மக்களுக்காக விஸ்பரூபம் எடுப்பேன் -ஸ்டாலின் . . . . . அத கமல் சார் எடுத்துட...

Posted: 06 May 2015 08:45 AM PDT

தமிழக மக்களுக்காக விஸ்பரூபம் எடுப்பேன் -ஸ்டாலின்
.
.
.
.
.
அத கமல் சார் எடுத்துட்டார் நீங்க மருதநாயகம் ட்ரை பண்ணுங்க ;-)

- ரிட்டன் ரவுடி @ Relaxplzz

தன் உடன்பிறப்புகளை முதன் முதலில் சந்திக்கும் குழந்தைகளின் உணர்ச்சி <3 பிடித்தவர...

Posted: 06 May 2015 08:40 AM PDT

தன் உடன்பிறப்புகளை முதன் முதலில் சந்திக்கும் குழந்தைகளின் உணர்ச்சி ♥

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 06 May 2015 08:30 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 06 May 2015 08:20 AM PDT

இரண்டு நண்பர்கள் வெகு நாள் கழித்து சந்தித்தனர்.. எனக்கு 4 பசங்க என்ன செய்றாங்க?...

Posted: 06 May 2015 08:10 AM PDT

இரண்டு நண்பர்கள் வெகு நாள் கழித்து
சந்தித்தனர்..

எனக்கு 4 பசங்க
என்ன செய்றாங்க?

1 வது பையன் BE

2 வது பையன் MBA

3 வது பையன் Ph.D

4 வது பையன் திருடன்

திருடனா?...ஏன் அவனை
வீட்டிலே வச்சுரிக்க?

என்ன பண்றது அவன் ஒருத்தன்
தான் சம்பாதிக்கிறான்..

:P :P

Relaxplzz

கட்டிகளை காணாமல் போக செய்யும் சப்பாத்திக்கள்ளி.! .நாம் தோலை சுத்தமாக வைக்காததால...

Posted: 06 May 2015 08:00 AM PDT

கட்டிகளை காணாமல் போக செய்யும் சப்பாத்திக்கள்ளி.!

.நாம் தோலை சுத்தமாக வைக்காததால் தோலுக்கடியில் பலவிதமான மலினங்களும் சேருவதால் தோல் தடித்து அதிலுள்ள செல்கள் சேதமடைகின்றன. இவ்வாறு சேதமடைந்த செல்களிலுள்ள நுண்கிருமிகள் வெளியேற முடியாமல் தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில் பலவிதமான கட்டிகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு உண்டாகும் கட்டிகள் பெரும்பாலும் தொடை, முதுகு, இடுப்பு, கால், கைகள் மற்றும் புட்டப் பகுதிகளில் உண்டாகுகின்றன.

சர்க்கரை நோயாளிகள், சுகாதாரமற்ற இடத்தில் வசிப்பவர்கள், உணவு கட்டுப்பாடில்லாதவர்கள், உடல் உழைப்பில்லாதவர்கள், அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகுபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அடிக்கடி கட்டிகள் உண்டாகின்றன. லேசான வீக்கமாக ஆரம்பித்து அதில் தடிப்பு, வலி, எரிச்சல் ஆகியன தோன்றி பின் கட்டியாக மாறும். இது போன்ற தோல் மற்றும் சதை கட்டிகள் வளர்ந்து உடைவதற்கு பல நாட்களாவதுடன் அந்த நாட்கள் வரை வலி, சுரம், நெறிகட்டுதல் போன்ற பல தொல்லைகளையும் ஏற்படுத்துவதால் கட்டிகளை உடனே உடைத்து அவற்றை ஆற்றும் நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்டியில் தோன்றும் சீழ் பிற இடங்களில் பரவுவதற்கு வாய்ப்புண்டு.

இவ்வாறு தோலில் தோன்றும் கட்டிகள் நாளுக்குநாள் பெரிதாகி கடும் வேதனையை உண்டாக்குவதுடன் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், சீழ் கோர்த்து உடைகின்றன. கட்டிகள் முற்ற ஆரம்பித்ததும் அவற்றை மருத்துவரின் மேற்பார்வையில் கீறி, புண்களை ஆற்ற வேண்டும். இல்லாவிட்டால் உறுப்புகள் அழுகிப் போக ஆரம்பித்துவிடும். சாதாரண கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே பழுக்கச் செய்து உடைத்து விடவேண்டும். கட்டியை எளிதாக பழுக்கச் செய்து உடைக்கும் அற்புத ஆற்றலுடையது மட்டுமின்றி வறண்ட பகுதிகளில் கூட செழித்து, வளர்ந்து காணப்படும் எளிய மூலிகைதான் சப்பாத்திக்கள்ளி.

ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன. இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை.

முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.

Relaxplzz


இயற்கை வைத்தியம் - 2

(y) (y) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 06 May 2015 07:51 AM PDT

உண்மையாவே தமிழ் வளர்க்குறது பசங்க மட்டும் தான் ஏன்னா எங்களுக்கு சுட்டு போட்டாலும...

Posted: 06 May 2015 07:45 AM PDT

உண்மையாவே தமிழ் வளர்க்குறது பசங்க மட்டும் தான் ஏன்னா எங்களுக்கு சுட்டு போட்டாலும் இங்க்லீஷ் வராது

#தமிழ்வாழ்க

- Mokianew @ Relaxplzz

வெளிநாட்டு ஓவியங்களை பார்த்து சலித்த நம் கண்களுக்கு நம் தமிழன் ஓவியர் திரு. ஹரி...

Posted: 06 May 2015 07:39 AM PDT

வெளிநாட்டு ஓவியங்களை பார்த்து சலித்த நம் கண்களுக்கு நம் தமிழன் ஓவியர் திரு. ஹரி அவர்கள் வரைந்த அற்புதமான ஓவியம்.

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஓவியங்கள் - 1

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 06 May 2015 07:31 AM PDT

இருபது ரூபாய்க்கு BALANCE குறையும் போதே, "உங்கள் BALANCE மிகக்குறைவாக உள்ளது" என...

Posted: 06 May 2015 07:21 AM PDT

இருபது ரூபாய்க்கு BALANCE குறையும் போதே, "உங்கள் BALANCE மிகக்குறைவாக உள்ளது" என்று அறிவிக்கும் செல்போன் ஆப்பரேட்டர்கள்,

தேவையில்லாமல் மணிக்கணக்கில் பேசும்
அழைப்புகளின் போது,

"நீங்கள் தேவையில்லாமல் பேசி காசை
காலாவதி ஆக்கி கொண்டிருக்கிறீர்கள்" என்றும் ஒரு அறிவிப்பு
கொடுக்கலாம்.

புண்ணியமா போகும் டா சாமி !!!

;-) ;-)

- Sridhar Jayaraman @ Relaxplzz

டக் அடிச்சு டக் அடிச்சு சைக்கிள் ஓட்டிய காலம் ......... குரங்கு பெடல் அடித்த நிய...

Posted: 06 May 2015 07:09 AM PDT

டக் அடிச்சு டக் அடிச்சு சைக்கிள் ஓட்டிய காலம் ......... குரங்கு பெடல் அடித்த நியாபகம் :)


அந்தக் காலத்தில

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 06 May 2015 07:01 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 06 May 2015 06:53 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 06 May 2015 06:40 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 06 May 2015 06:31 AM PDT

ஒரு யானை இருந்தது .அதுக்கு எதிரே 12 வாழைபழம் இருந்தது,அனால் அந்த யானை 11 வாழைபழம...

Posted: 06 May 2015 06:20 AM PDT

ஒரு யானை இருந்தது .அதுக்கு எதிரே 12 வாழைபழம் இருந்தது,அனால் அந்த யானை 11 வாழைபழம் சாப்பிட்டுவிட்டுஒரு பழம் சாப்பிடவில்லை...ஏன் சொல்லுங்க ?#
#
#
#
#
#
#
#
#
#
ஏன்னா ஒரு வாழைபழம் பிளாஸ்டிக் பழம் !!!!!
ஓகே .. இந்த வாட்டி ஒரு யானை ,அது முன்னால நிஜ வாழைபழம் 12 இருந்தது,ஆனாலும் யானை சாப்பிடலை ..ஏன் ?#
#
#
#
#
#
#ஏன்னா இந்தவாட்டி யானை பிளாஸ்டிக் ....!!
நோ வன்முறை ப்ளீஸ்!!!
ஓகே ..இந்த முறை உண்மையா சொல்லறேன்..நிஜம் யானை & நிஜம் 12 வாழைபழம் டிவியில் வந்தது...நானும் பார்த்தேன் ..ஆனாலும் யானை ,வாழைபழம் சாப்பிடலை .. ஏன்?
#
#
#
#
#
#
ஏன்னா.யானையும்,வாழைபழமும் வேற வேற சேனல்ல வந்துது.
நோ டென்ஷன் ப்ளீஸ்..
இந்த முறை பார்த்ததை நிஜம்மா சொல்லறேன் !!!
ஒரு யானை,12 வாழைபழம்..ஆனா யானை பழம் சாப்பிடலை .ஏன்?
#
#
#
#ஏன்னா...நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க...யானை பழம் சாப்பிட்டா உங்களுக்கு என்ன..சாப்ப்பிடலன்னா என்ன..
நீங்க பழம் சாப்பிடலைன்னு யானை டென்ஷன் ஆகுதா ?போய்வேலைய பாருங்க !!

:P :P

Relaxplzz

அழகிய சூரிய அஸ்தமனங்கள்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 06 May 2015 06:10 AM PDT

அழகிய சூரிய அஸ்தமனங்கள்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


ரிசர்வ்வங்கி ஏன் ஒரு ரூபாய் நாணயத்துக்கு பதிலாக நேரடியாக சாக்லேட்டாகவே தயாரித்து...

Posted: 06 May 2015 06:00 AM PDT

ரிசர்வ்வங்கி ஏன் ஒரு ரூபாய் நாணயத்துக்கு பதிலாக நேரடியாக சாக்லேட்டாகவே தயாரித்து வினியோகித்து விடக்கூடாது..!!

#இது_ஒரு_சில்லறை_பிரச்சினை..!!


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 06 May 2015 05:51 AM PDT

ஒரு ரசிகனின் வேண்டுகோள் சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் இனியாவது டூயட் பாடுவதை நி...

Posted: 06 May 2015 05:45 AM PDT

ஒரு ரசிகனின் வேண்டுகோள்

சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் இனியாவது டூயட் பாடுவதை நிறுத்திவிட்டு character role பண்ணுவது சினிமாவுக்கு மட்டும் அல்ல சினிமா ரசிகனுக்கும் நல்லது.

# லிங்கா
# உத்தம வில்லன்

- Ravi Swaminthan @ Relaxplzz

M.R.ராதா குடும்ப புகைப்படம் M.R.ராதா கையில் குழந்தையாக நடிகை ராதிகா ........

Posted: 06 May 2015 05:37 AM PDT

M.R.ராதா குடும்ப புகைப்படம் M.R.ராதா கையில் குழந்தையாக நடிகை ராதிகா ........


"அரிய புகைப்படங்கள்"

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 06 May 2015 05:29 AM PDT

<3 https://twitter.com/RelaxplzzTamil

Posted: 06 May 2015 05:23 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 06 May 2015 05:11 AM PDT

உறவுகள் மேம்பட……!!! * எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசூக்காக கையாளுங்கள். (D...

Posted: 06 May 2015 05:01 AM PDT

உறவுகள் மேம்பட……!!!

* எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசூக்காக கையாளுங்கள். (Diplomacy) விட்டுக் கொடுங்கள்.(Compromise)

* சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள். (Tolerance)

* நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். (Adamant Argument)

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.(Narrow Mindedness)

* உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.(Carrying Tales)

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். (Superiority Complex)

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
(Over Expectation)

* எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.

* அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

* உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். (Flexibility)

* மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.(Misunderstanding)

* மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.(Courtesy)

* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்துஅடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

* அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.

>உண்மையிலயே நல்ல விடயம் என்றால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அறிய சொல்லுங்கள்...

Relaxplzz


வாழ்வியல்

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 06 May 2015 04:53 AM PDT

5000 கோடி கடன் வாங்குன விஜயமல்லையா தைரியமா ஊருக்குள்ள சுத்துறான் ! 1000 ரூ கடன்...

Posted: 06 May 2015 04:45 AM PDT

5000 கோடி கடன் வாங்குன விஜயமல்லையா தைரியமா ஊருக்குள்ள சுத்துறான் ! 1000 ரூ கடன் வாங்கிட்டு நாம தான் ஓடி ஓடி ஒளியிறோம்

- iRaVuSu: @ Relaxplzz

0 comments:

Post a Comment