உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில்
உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177
வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில்
கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான
அடிப்படை விசயங்களைக்கூட கடைப்பிடிக்காமல் கட்டிட, அடித்தளத்தை மிகவும்
மோசமாக கட்டினர்.
இதனால்தான் இந்தக் கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால்
இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள
மண் இதற்கு ஒத்துழைத்தது !
இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க
முடிந்தது ! ஒரு கேவலமான
கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான
ஒரு கட்டிடம் உலக
அதிசயப்படியலில் இன்றும்
உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)
தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர்போன
ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி, உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது, இதன் கோபுரத்தில் உள்ள
ஒரே ஒரு பாறை 80 டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த அதிசயம் 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம். எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட
கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம்
பெறவில்லை !
சில நேரங்களில் வெளியில் உள்ளதைப் பற்றி வியப்படையும் நாம், அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றி மறந்துவிடுகிறோம் !
இதையெல்லாம் மற்றவர்களை குறை கூறுவதற்காகக் கூறவில்லை, நம்மை மேம்படுத்திக்கொள்ளத்தான் கூறுகிறோம்...
பா விவேக்

0 comments:
Post a Comment