Interesting Tamil Facebook posts |
- 2 நிமிடத்தில் உங்கள் நெஞ்சசை தட்டிபார்க்கும் காணொளி அவசியம் பார்க்க
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- இந்த ஓவியம் எப்படியிருக்கு
- பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பாலுடன் தேன் கலந்து குடித்த...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- கிராமத்து தேவதை...
- ஓடிப்போன காதலர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை - வீடியோ இணைப்பு
- மறக்க முடியுமா ?
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- வாவ்...
- நெல்லூர் பெண்கள் ஆட்டைய போடுற அழகை நீங்களும் பாருங்கள்
- தர்பூசணி எச்சரிக்கையுடன் ஓர் விழிப்புணர்வு பதிவு! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- கலை.
- இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..? 01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி....
- அருமையான கோலம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க
- மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன? அழகான முகமா!!! அன்பான மனமா!!! பணிவான...
- (1) தாழ்வாக பறந்து சாலையை கடக்கும் போது, வேகமாக சென்ற காரில் சிக்கி தன் துணை காய...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற போது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜ...
- எனக்கு ஒரு லைக்கு போட்டா..... உங்களுக்கு ஒரு ஆரஞ்சு மிட்டாய்...."" டீல் "" ஓகே வா?
- ஜப்பானிய சுனாமியின் அகோரத்தில் தெரியும் இந்த அதிசய உருவம் எது? - மர்ம காணொளி
- பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தில் சிக்காமல் தனது குழந்தையை காப்பாற்ற போராடும் தாய...
- உங்கள் பேஸ்புக் மிகவும் மெதுவாக உள்ளதா..? அதனை வேகமாக, வேக தடைகளின்றி பார்க்க வ...
- உழைப்புக்கு ஓய்வேது? நாற்பது வயதில் சாய்வு நாற்காலி தேடும் இந்த காலத்தில் 95 வயத...
- அனைவரும் பார்க்கத் தவறாதீர்கள்.நீங்கள் உண்மையான தமிழர் என்றால்
- ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர...
Posted: 27 Apr 2015 09:30 AM PDT |
Posted: 27 Apr 2015 09:10 AM PDT 2 நிமிடத்தில் உங்கள் நெஞ்சசை தட்டிபார்க்கும் காணொளி அவசியம் பார்க்க ![]() 2 நிமிடத்தில் உங்கள் நெஞ்சசை தட்டிபார்க்கும் காணொளி அவசியம் பார்க்க www.indiasian.com dont waste food |
Posted: 27 Apr 2015 09:00 AM PDT |
Posted: 27 Apr 2015 08:03 AM PDT |
Posted: 27 Apr 2015 07:57 AM PDT |
Posted: 27 Apr 2015 07:30 AM PDT |
Posted: 27 Apr 2015 07:02 AM PDT பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பாலுடன் தேன் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனைகள் குணமாவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கியங்களை வழங்குகிறது. இதில் உள்ள புரோபயோடிக் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தால் உடலின் ஆற்றல் குறையும், இதனால் பாலுடன் தேன் கலந்து குடித்தால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணி காக்க உதவும், பாலுடன் தேன் கலந்து குடித்ததால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். இரவு தூங்கும் போது குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும். மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள், வெதுவெதுப்பான பாலில் தேனை கலந்து, அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமடையும். சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதனை குடித்தால், அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல், உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் இவற்றில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இனப்பெருக்க மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடல் உள்ள கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்க உதவுகிறது. நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் உணவு உட்கொண்ட பின்னர், பாலுடன் தேன் கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும். ![]() |
Posted: 27 Apr 2015 07:00 AM PDT |
Posted: 27 Apr 2015 06:30 AM PDT |
Posted: 27 Apr 2015 06:10 AM PDT ஓடிப்போன காதலர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை - வீடியோ இணைப்பு ![]() ஓடிப்போன காதலர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை - வீடியோ இணைப்பு www.indiasian.com |
மறக்க முடியுமா ? Posted: 27 Apr 2015 05:30 AM PDT |
Posted: 27 Apr 2015 05:01 AM PDT |
வாவ்... Posted: 27 Apr 2015 04:30 AM PDT |
Posted: 27 Apr 2015 03:10 AM PDT நெல்லூர் பெண்கள் ஆட்டைய போடுற அழகை நீங்களும் பாருங்கள் ![]() நெல்லூர் பெண்கள் ஆட்டைய போடுற அழகை நீங்களும் பாருங்கள் www.indiasian.com girls Theft at a textile showroom in nelloore |
Posted: 27 Apr 2015 03:03 AM PDT தர்பூசணி எச்சரிக்கையுடன் ஓர் விழிப்புணர்வு பதிவு! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சித்தகவல் விழிப்புணர்வு தர உதவுங்கள். அதிகம் பகிருங்கள்... கோடை வந்தாலே கூடவே அனல் தணிக்க வந்துவிடும் தர்ப்பூசணி. இனிக்கும் இந்தப் பழத்தைக் கடித்துச் சாப்பிட்டால், எவ்வளவு வெயிலையும் சமாளிக்கும் உத்வேகம் வந்துவிடும். அவ்வளவு நீர்ச்சத்து இந்தப் பழத்தில். வீதிக்கு வீதி இளநீர்க் கடைகளைவிட தர்ப்பூசணி கடைகள் கோடையில் முளைப்பது இதனால்தான்.ஆனால் வாட்ஸ் அப்பில் வைரஸாகப் பரவிய அந்த வீடியோ காட்சி நிச்சயம் அதிர்ச்சி ரகம்.வியாபாரி ஒருவர் தர்ப்பூசணி பழத்தில் 'எரித்ரோசின் பி' எனும் ஒரு சிவப்பு நிறமியை இன்ஜெக்ஷன் வழியே உட்செலுத்துகிறார். பிறகு, அந்த தர்ப்பூசணியை வெட்டி விற்பனைக்கு வைக்கிறார். இப்போது தர்ப்பூசணியின் உள்ளே இருக்கும் பகுதி நல்ல சிவப்பாக பழுத்த பழம் போல் காட்சியளிக்கிறது! வட இந்திய நியூஸ் சேனல் ஒன்றில் வெளியான அந்தக் காட்சி, மொழி புரியாதவர்களையும் பதைபதைக்க வைக்கிறது.அப்படியானால் இப்படித்தான் தர்ப்பூசணிகளை சிவக்கச் செய்கிறார்களா? மாம்பழத்தில் கல் வைத்துப் பழுக்க வைப்பது மாதிரி விற்பனையைக் கூட்டும் வியாபார தகிடுதத்தங்கள் நமக்குப் புதிதல்ல.ஆனால் இந்த வாட்டர் மெலன் மேட்டர் ரொம்பவே சீரியஸ். பழத்தின் சாப்பிடும் பகுதியில் இது சேர்க்கப்படுவதுதான் ஆபத்தே! இதில் சேர்க்கப்படும் அந்த நிறமி புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை உடையது என்கிறார்கள் நுகர்வோர் உரிமை ஆர்வலர்கள். எனவேதான், இந்தக் காட்சி பரவிய சில நிமிடங்களிலேயே தர்ப்பூசணி வியாபாரிகளை பரிசோதனை செய்தார்கள் தமிழக சுகாதார அதிகாரிகள். ''ஒரு சில வியாபாரிகள் இப்படிச் செய்றாங்க சார்... அது இப்போ வெளிச்சத்திற்கு வந்திருக்கு!'' - ஆதங்கம் பொங்கினார் பெயர் குறிப்பிட விரும்பாத நுகர்வோர் ஆர்வலர் ஒருவர். அவர் நேரில் பார்த்த காட்சி ஒன்றையும் பகிர்ந்தார். ''வட இந்தியா மாதிரி நம்மூர்ல இப்படி இன்ஜெக்ஷன் வழியா ஏத்துறதில்ல. அதுக்குப் பதில், பழத்தை வெட்டிட்டு இதுக்குன்னே இருக்கிற சில கலர்களை அதுல சேர்க்குறாங்க. தர்ப்பூசணி சைஸ் பெரிசாக பெரிசாக விலை அதிகமாகும். சின்ன சைஸா இருக்கறது சரியா பழுத்திருக்காது. ஆனால் விலை குறைவா இருக்கும். இதைத்தான் இப்படி சிவப்பாக்கி விக்க முயற்சி பண்றாங்க. முதல்ல, கலரை ஒரு துணியில நனைச்சு வச்சுக்கறாங்க. அப்புறம், வண்டிக்கு அடியில உட்கார்ந்து பழத்தை வெட்டி அதுல இந்தக் கலரை யாருக்கும் தெரியாம கொஞ்ச கொஞ்சமா தெளிக்கிறாங்க. இதனால, பழங்கள் நல்லா பழுத்த மாதிரி, பார்க்க கவர்ச்சியா இருக்கும். இந்தப் பழங்களை சாப்பிடுறப்போ சாறு சட்டையில வடிஞ்சா சாயம் போல ஒட்டிக்கும். அதை வச்சே இந்தக் கலப்படத்தை கண்டுபிடிச்சிடலாம்'' என்றவர், ''வெட்டாத முழுப் பழமா பார்த்து வாங்குறதுதான் நம்மூர் மக்களுக்கு நல்லது'' என்றார் எச்சரிக்கை தொனியில். சென்னை தரமணியில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆய்வகத்தின் தலைமை அறிவியலாளர் சாய்பாபாவிடம் இதுபற்றிப் பேசினோம். ''தர்ப்பூசணியில கலர் சேர்க்கிறாங்கன்னு சொல்ற செய்தியை இப்பதான் கேள்விப்படுறேன். பொதுவா, கலர்ஸ் எந்த உணவுப் பொருளுக்கு தேவைப்படுதோ, அதுல சேர்த்துக்கலாம்னு அரசே உணவுப் பாதுகாப்புச் சட்டத்துல சொல்லியிருக்கு. இதற்கு அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள்னு பேரு. இதுல எட்டு கலர் இருக்குது. இந்த 'எரித்ரோசின்'னும் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள்ல ஒண்ணுதான். இதை எந்தெந்த உணவுப் பண்டங்கள்ல எவ்வளவு பயன்படுத்தணும்ங்கிற விஷயமும் சொல்லப்பட்டு இருக்கு. அந்த அளவுக்குள்ள பயன்படுத்தினா உடலுக்கு ஆபத்தில்ல. அதுக்கும் மேலன்னா... அவ்வளவுதான். இந்த வண்ணங்களை மிட்டாய், லட்டு, ஜாங்கிரி, கேக், ஜெல் போன்ற இனிப்பு வகைகள்ல பயன்படுத்திக்கலாம். ஆனா, மிக்சர், சேவு போன்ற கார வகைகளிலும், வெட்டப்பட்ட பழ வகைகளிலும் பயன்படுத்தக் கூடாது. தர்ப்பூசணியில கலர் சேர்த்தா, அது நிச்சயம் சட்டப்படி குற்றம். அது உடலுக்கு கேடு விளைவிச்சு, கேன்சருக்கும் வழிவகுக்கும்!'' என்றவர், கலர் சேர்க்காத தர்ப்பூசணியைக் கண்டுபிடிப்பது எப்படி என்பதையும் விளக்கினார். ''கோடையில தர்ப்பூசணி தவிர்க்க முடியாதது. எனவே, இப்படி வர்ற செய்திகளைப் பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம். கவனமா பார்த்து வாங்கணும், அவ்வளவுதான். இயல்பா பழுத்த பழத்துக்கும், வண்ணம் போடப்பட்ட பழத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. செயற்கை கலர் பளிச்னு ரொம்பவும் ரத்தச் சிவப்பா இருக்கும். பார்த்தாலே வித்தியாசம் தெரியும். அதே மாதிரி, பழத் தோல் மேலிருக்கும் முதல் வெள்ளை அடுக்கிலும் சிவப்பு நிறம் இருந்தா, தர்ப்பூசணியில கலர் கலந்திருக்கிறாங்கனு தெரிஞ்சுக்கலாம். ஏன்னா, ஸ்பிரே அடிச்சாலோ, ஊசி வழியா செலுத்தினாலோ அதிலும் அந்த நிறம் சேர்ந்திடும். பொதுவா, பழங்களை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் சாப்பிடறதுதான் நல்லது..... ![]() |
Posted: 27 Apr 2015 03:00 AM PDT |
Posted: 27 Apr 2015 02:30 AM PDT |
Posted: 27 Apr 2015 02:06 AM PDT இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..? 01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி. 02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி. 03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி. 04. 1835 ல் அவரது காதலி மரணம். 05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது. 06. 1838 ல் தேர்தலில் தோல்வி. 07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி. 08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி. 09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி. 10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி. 11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி. 12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார். இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை... உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்...! ![]() |
Posted: 27 Apr 2015 02:02 AM PDT |
Posted: 27 Apr 2015 01:56 AM PDT மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன? அழகான முகமா!!! அன்பான மனமா!!! பணிவான குணமா!! கணவன்: உன்னோட இந்த காமெடி தான் " மனைவி: ??? கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே மனைவி: கட்டிக்க போறது நான்தானே கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும் மனைவி:??? மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?" கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.." மனைவி:???? கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க? மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே. கணவன்:???? ஒருவன்: "என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்…" மேனேஜர் :"யோவ்… பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே…?" ஒருவன் : "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!" ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க .. கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே? ஜோதிடர்: ???? |
Posted: 27 Apr 2015 01:02 AM PDT (1) தாழ்வாக பறந்து சாலையை கடக்கும் போது, வேகமாக சென்ற காரில் சிக்கி தன் துணை காயமுறுகிறாள். (2) தன் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும் விதமாக ,உடனே அங்கும் இங்கும் அலைந்து பறந்து திரிந்து தன் துணைக்கு உணவை கொண்டு வந்து ஊட்டுகிறது ஆண் பறவை. (3) மீண்டும் உணவு கொண்டு வர சென்று திரும்பியதும் தன் துணை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறது ஆண் பறவை. (4) கதறியபடி அதை எழுப்ப போராடுகிறது, இது போன்ற நிகழ்வை காணவே முடியாது. (5) தன்னுடைய அன்புத் துணை இறந்துவிட்டதை தாங்க முடியாமல் கதறியபடி அருகிலேயே நிற்கிறது. (6) கடைசியாக இனி தன் துணை திரும்ப கிடைக்காது என்பதை உணர்ந்து அதை பிரிய மனமில்லாமல் சோகத்துடன் என்னசெய்வதென்றே தெரியாமல் பரிதாபமாக நிற்கிறது. இதை பார்த்து நம் கண்கள் கலங்காமல் இருந்தால், நாம் மனிதர்களாகவே இருக்க முடியாது. ஒவ்வொரு முறை சாலையில் செல்லும் போது நம் வாகனங்களில் சிக்கி இறக்கும் உயிர்களுக்கு பின்னால் இது போன்ற சோகக் கதை தானே இருக்கும்.உணர்வோம் மனிதர்களே. ![]() |
Posted: 27 Apr 2015 01:00 AM PDT |
Posted: 27 Apr 2015 12:41 AM PDT நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற போது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உட்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் . ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்.. கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் "ஹிட்லர்" என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு… ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது " என்று கேட்டார். நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது" என்றார்…! (எத்தனைமுறை படித்தாலும் மறுபடியும் படிக்கத்தூண்டுகிற ஒரு சரித்திர நிகழ்வு) |
Posted: 27 Apr 2015 12:30 AM PDT |
Posted: 27 Apr 2015 12:10 AM PDT ஜப்பானிய சுனாமியின் அகோரத்தில் தெரியும் இந்த அதிசய உருவம் எது? - மர்ம காணொளி ![]() ஜப்பானிய சுனாமியின் அகோரத்தில் தெரியும் இந்த அதிசய உருவம் எது? - மர்ம காணொளி www.indiasian.com During Japan Tsunami |
Posted: 27 Apr 2015 12:04 AM PDT |
Posted: 27 Apr 2015 12:04 AM PDT |
Posted: 27 Apr 2015 12:03 AM PDT |
Posted: 26 Apr 2015 11:56 PM PDT |
Posted: 26 Apr 2015 11:54 PM PDT ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர் சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார் உடனே பணக்காரர் " ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? " இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?" என்று சிற்பியிடம் கேட்டார் சிற்பி சிரித்துக்கொண்டே "இல்ல ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது" என்றார் பணக்காரர் ஆச்சரியத்துடன் " என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே " எனக்கேட்டார் "அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்" என்றார் சிற்பி "ஆமாம் ….அது சரி ..இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள் ? " என்று கேட்டார் பணக்காரர் "இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை " உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி பணக்காரர் வியப்புடன் " நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய் முட்டாள் " என்றார் "அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே ..எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே ..அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் " என்றார் சிற்பி நீதி : அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே உன் மனத்திருப்திகாக வேலை செய் ![]() |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment