Saturday, 25 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சுருளி அருவி!

Posted: 25 Apr 2015 09:49 PM PDT

சுருளி அருவி!


நேபாளத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டுமாறு சிலர் பதிவிடுகின...

Posted: 25 Apr 2015 11:25 AM PDT

நேபாளத்தில்
இறந்தவர்களின் ஆத்மா
சாந்தியடைய
கடவுளிடம்
வேண்டுமாறு சிலர்
பதிவிடுகின்றனர்.

அவ்வுளவு
இரக்கமுடைய இறைவன்
அவர்களை ஏன் இப்படி
கொடுரமாக கொல்ல
வேண்டும் ??

இறந்த ஆயிரக்கணக்கான
பேருமா பூர்வ
ஜென்மத்துல பாவம்
பண்ணிட்டாங்க??

@விக்ராந்த்

பள்ளிக்கூடம் நடத்துறது தமிழ்நாட்டுல! ஆனால் தமிழ் பிறமொழி! இது தான் நம் நிலைமை! :(

Posted: 25 Apr 2015 10:53 AM PDT

பள்ளிக்கூடம் நடத்துறது
தமிழ்நாட்டுல!

ஆனால் தமிழ் பிறமொழி!

இது தான் நம் நிலைமை! :(


கணவன்மார்களின் கடைக்கண் பார்வை பட்டால் காஜல் அகர்வால் கூட விழுந்துடுவா நினைக்கிற...

Posted: 25 Apr 2015 07:59 AM PDT

கணவன்மார்களின்
கடைக்கண் பார்வை
பட்டால் காஜல் அகர்வால்
கூட விழுந்துடுவா
நினைக்கிறது இந்த
மனைவிமார்களின் உச்ச
பட்ச மூட நம்பிக்கை...

@Abdul vahab

சென்னைல நிலநடுக்கம் வந்தாலாவது மக்கள் முதல்வர் வீட்டை விட்டு வெளிய வருவாங்களா ??...

Posted: 25 Apr 2015 05:13 AM PDT

சென்னைல நிலநடுக்கம்
வந்தாலாவது மக்கள்
முதல்வர் வீட்டை விட்டு
வெளிய
வருவாங்களா ????

#நீலாம்பரி

@கவின்

லீவு விட்டதும் தாத்தா பாட்டி வீட்டுக்கு போறதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும்... போய...

Posted: 25 Apr 2015 05:00 AM PDT

லீவு விட்டதும் தாத்தா பாட்டி வீட்டுக்கு போறதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும்... போய் இறங்கினதும் அது வரைக்கும் வீட்டை சுத்தி ஓடிக்கிட்டிருந்த கோழில ஒன்னு மண்டைய போட்டிரும்..

அப்படியே நாட்டு கோழி சாறெடுத்து நல்லெண்ணை ஊத்தி தாளிச்சு குடல் தனியா, இரத்தம் தனியான்னு ஒரு பொரியல போடுவாய்ங்க... சப்பு கொட்டி சாப்ப்டுகிட்டே விவரம் இல்லாம 'சூப்பி எங்க அம்மத்தா'ன்னு கேட்டுருவோம்... ஐயையோ புள்ள ஆசை பட்டுருச்சுன்னு அடுத்த நாள் ஆட்டை கொன்னுருவாய்ங்க...

காலையில எந்திரிச்சதும் பல்லு விளக்காம 'பருத்தி பால்' கிடைக்கும்... அதை எதுல செஞ்சிருப்பாய்ங்கன்னே தெரியாது. நாக்குல தேங்காய் துருவலும் மண்ட வெல்லமும் தட்டுபடும், கொஞ்சமா ஏலக்காய் வாடையோட நுனி நாக்கும் தொண்டையும் சுட சுட பால் உள்ள இறங்கும்.

அப்படியே எந்திருச்சு காலாற நடந்து போய் வேப்பங்குச்சில பல்ல தேய்ச்சுட்டு.. கிணத்துல முங்கினா உள்ள இருக்கிற நண்டு, தவளை எல்லாம் விட்றுங்க விட்றுங்கன்னு கதறனும்... கண்ணெல்லாம் செவந்து, உடம்புல இருக்கிற மொத்த பலமும் போய் வெளியே வர படிக்கட்டுல ஏறுனா காலெல்லாம் நடுங்கும்..

தவந்துகிட்டே வீடு வந்து சேர்ந்தா உச்சி வெயில்ல குச்சி ஐஸ்.. ஜவ்வரிசி, சேமியா, பால் ஐஸ்ன்னு வெரைட்டியா உள்ள தள்ளிட்டு மறுபடி ஆடோ கோழியோ... ஒரு பிடி பிடிச்சிட்டு பாட்டி வச்சிருக்கிற வெத்தலைய வாங்கி ரோஜா பாக்கை போட்டம்ன்னா எப்போ தூங்குனோம், எங்க தூங்குனோம்ன்னு தெரியாது... இத்தனைக்கும் ஃபேன் இருக்காது, துளி காத்து இருக்காது...

டீவின்னா என்னன்னே தெரியாது... சாயந்தரமா எந்திருச்சு, சாவடி பக்கம் போனா பெரிசுங்க கிட்ட கதை கேக்கலாம்... ராமாயணம் சொல்றதா சொல்லிட்டு, கெட்ட வார்த்தை கதையா சொல்வாரு ஒரு தாத்தா... பாதி புரியும் பாதி புரியாது.. "என்ன மாப்ள முழிக்கிற.. நீயெல்லாம் நாளைக்கு என்ன தான் பண்ண போறியோன்னு".. கிண்டலும் தூக்கும்...

ஓரமா சில பெருசுங்க ஆடு புலி ஆட்டம் ஆட நமக்கு இருக்கவே இருக்கு... திருடன் போலீஸ், ஐஸ் பால், கபடி, பம்பரம்... எவ்ளோ நேரம் ஆடுனோம்ன்னு யோசிக்கிறதுக்குள்ள இருட்டிரும்.. வீட்டுக்கு போனா, கருப்பட்டி பனியாரமும் பால் கொலக்கட்டையும் அப்படியே சூடா ஒரு வர காப்பி... சொர்க்கம் யா...

இருக்கிற ஒரு விளக்கையும் அணைச்சுட்டு நிலா வெளிச்சத்துல தாத்தா சொல்ற விக்ரமாதித்யன் கதை... அவர் சொல்ற விதத்துல அவதார் எல்லாம் தோத்து போகும். எப்படா கதையை முடிப்பார்ன்னு அரண்டு மிரண்டு படுத்திருப்போம்.

இப்படி ஒவ்வொரு நாளும் திருவிழா தான், இதுல நடுவில மாரியம்மன் கோயில் திருவிழா வேற வரும்.. சேத்தாண்டி வேஷம், தாரை தப்பட்டை, தீச்சட்டி, ராட்டினம்... அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்யா அது... 30 நாள் லீவு முடிஞ்சு தாத்தா வீட்ல இருந்து வீட்டுக்கு வந்தா கன்னம் புஷ்டியா இருக்கும்.

இப்போ பசங்க சொந்தகாரங்க வீட்டுக்கு போறது எல்லாம் குறைத்துவிட்டது.

@Sarav Urs


சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இந்துகளே இல்ல - சு.சாமி முதல் முறையாக உண்மைய பேசியிரு...

Posted: 25 Apr 2015 04:37 AM PDT

சமஸ்கிருதம்
தெரியாதவர்கள்
இந்துகளே இல்ல -
சு.சாமி

முதல் முறையாக உண்மைய பேசியிருக்கான் இவன்...

தெரியாமல் அவள் மேல் கைபட்டு விட்டது மன்னிக்கவும் என்றேன் இன்னொரு முறை மன்னிக்கட்...

Posted: 25 Apr 2015 03:51 AM PDT

தெரியாமல்
அவள் மேல்
கைபட்டு விட்டது
மன்னிக்கவும் என்றேன்
இன்னொரு முறை
மன்னிக்கட்டுமா
என்கிறாள்.

@காளிமுத்து


5 ஏக்கர் வைத்திருக்கும் ஒரு ஆள் மாதத்திற்கு ரூ.20,000 தமிழ்நாட்டின் எந்த மூலையில...

Posted: 25 Apr 2015 03:34 AM PDT

5 ஏக்கர் வைத்திருக்கும்
ஒரு ஆள் மாதத்திற்கு
ரூ.20,000 தமிழ்நாட்டின்
எந்த மூலையில்
இருந்தாலும் சம்பாதிக்க
வாய்ப்பு இருப்பின்,
விவசாயத்தை விட்டு
வெளியேறுவானா ?

லாபமே இல்லாத தொழிலை செய்து அவன் ஏன் கஷ்டப்பட வேண்டும்??

பிராமணர் அல்லாதவர்கள் ஆண்மையிருந்தால் கோவில் கருவரைக்குள் நுழைந்துபாருங்கள்.- சு...

Posted: 25 Apr 2015 03:11 AM PDT

பிராமணர் அல்லாதவர்கள் ஆண்மையிருந்தால்
கோவில் கருவரைக்குள்
நுழைந்துபாருங்கள்.-
சுப்ரமணிய சாமி

கருவறைக்குள்
முதன்முதலில்
நுழைந்தவன்
கொத்தனார்.
இரண்டாவது சாமி
சிலையை நேர்த்தியா
வைத்தானே அந்த
வேலையாட்கள்.
மூணாவதான் நீ
சு.சாமி!

@ஆர்.தியாகு

வெளிப்படையாக இருக்காதே , வேட்டி உறுவப்பட்டு ரோட்டுல் அலையவிடப்படுவாய்... @காளிம...

Posted: 24 Apr 2015 11:08 PM PDT

வெளிப்படையாக
இருக்காதே ,
வேட்டி உறுவப்பட்டு
ரோட்டுல்
அலையவிடப்படுவாய்...

@காளிமுத்து


சண்டை முடிந்த உடனே சமாதானம் ஆவதை குழந்தைகளிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும்.! @க...

Posted: 24 Apr 2015 11:02 PM PDT

சண்டை முடிந்த உடனே
சமாதானம் ஆவதை
குழந்தைகளிடமிருந்தே
கற்றுக்கொள்ள
வேண்டும்.!

@காளிமுத்து


0 comments:

Post a Comment