Wednesday, 1 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மிக்சர் மிக்சர் ன்னு சொன்னீங்க.. அவராச்சும் மிக்சர் சாப்டாலும் நம்ம நாட்ல சாப்ட்...

Posted: 01 Apr 2015 08:49 AM PDT

மிக்சர் மிக்சர் ன்னு
சொன்னீங்க.. அவராச்சும்
மிக்சர் சாப்டாலும் நம்ம
நாட்ல சாப்ட்டுட்டு
செவனேன்னு
இருந்தார்.. இவரு நம்ம
நாட்ல இருக்காரா
இல்லையான்னே
தெரியல.. அப்டி என்ன
போன கவர்ன்மென்ட்ட
விட பெட்டர்ன்னு
பார்த்தீங்க .!!
டோல் பைசாவும்
ஏறிப்போச்சுல்ல .. இனி
எல்லா விலையும்
மறுபடியும் ஏறும்..!!!
.
2020ல் நம்ம நாடு
வளர்ந்தநாடு தான்
விலைவாசி உயர்வில்
மட்டும்..!!

@சர்மிளா

எல்லைக்கல் வாங்க ஒரு கல் வியாபாரியை பார்க்க போனேன்... நல்ல உயரம் கருத்த ஒல்லியான...

Posted: 01 Apr 2015 08:17 AM PDT

எல்லைக்கல் வாங்க ஒரு கல் வியாபாரியை பார்க்க போனேன்... நல்ல உயரம் கருத்த ஒல்லியான தேகம். ரொம்ப எளிமையா இருந்த குடிசையை சுற்றி வெவ்வேறு அடி உயர கல்லை அடுக்கி வைத்திருந்தார்...

ஆட்கள் கல்லை அடுக்கிட்டு இருந்த போது தான் கவனித்தேன். அந்த குடிசை மேல போர்வை போர்த்தியது போல பச்சை இலைகளும், குட்டி குட்டியா வாடாமல்லி நிற பூக்களும் தெரிந்தது. பக்கத்தில போய் க்ரோட்டன்சான்னு பார்த்தா.... இல்லை, அவரை செடி !!

கொஞ்சம் பெரிய கண் இமைகள் போல பச்சை நிற காய்கள் முளைக்க ஆரம்பித்திருந்தது.. அவரிடம் அவரைக்காயான்னு கேட்டேன், கண்கள் விரிய சின்ன பையனின் குதூகலத்துடன் ஆமா என்றார்.

என் கை பிடித்து அழைத்து போய் செடியின் தண்டினை பிடிக்க சொல்லி, 'என்ன வயதிருக்கும் சொல்லுங்கள்' எவ்வளவு நாளா வளர்க்கிறேன் தெரியுமா??, ஒரு காய் போட்டாலும் சாம்பாருக்கு தனி மணம் வருமென்றார். அதோடு நிற்காமல், எப்படி வளர்த்தார் என்றும் என்னென்ன தீவனங்கள் போட்டார் என்றும் கூறி விட்டு முற்றிய காய்களையும் பறித்து வீட்டுக்கு குடுத்தார்.

அவரைக்காயா என்ற ஒற்றை கேள்விக்கு ஒரு கட்டுரையே வாசித்திருந்தார், அவரிடம் தெரிந்த பெருமிதமும் மகிழ்ச்சியும் மகள் பெற்ற பேர குழந்தையை கையில் வாங்கும் போது ஒரு தாத்தாவுக்கு வருவது போன்றது... smile emoticon

படைப்பு என்பது அளப்பறியா ஆனந்தம் தருவது. ஒவ்வொரு முறை பயிரிடும் போதும் படைப்பின் உன்னதத்தை அனுபவிக்கிறான் விவசாயி. பிள்ளை வளர்ப்பை போன்றே பிணைப்பு மிக்கது விவசாயம். அபினை அனுபவித்தவன் போல ஒரு முறை சேற்றில கால் வைத்தவன் சோறு இல்லேனாலும் விவசாயம் செய்யவே ஏங்குகிறான்...

அவரை பார்த்த பின் தீர்மானமாக தோன்றியது... "விவசாயமும் ஒரு போதை தான் அதனால் தான் குடும்பமே அழிந்தாலும் அதற்குள்ளேயே உழல்கிறான் விவசாயி".

பி.கு : அவரைக்காயும் கொடுத்து 100 ரூ தள்ளுபடியும் கொடுத்தார்.

@Sarav Urs

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த ஒரு ஆள் தான் வேலைக்கு பார்க்கும் இடத்திற...

Posted: 01 Apr 2015 01:09 AM PDT

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த ஒரு ஆள் தான் வேலைக்கு பார்க்கும் இடத்திற்கு தினமும் போய் வர மொத்தம் 37கி.மீ ஆகுமாம். முறையான அரசுப் போக்குவரத்து வசதி இல்லாததால் அவர் அந்த 37கி.மீ.ல், 33கி.மீ.ஐ நடந்தே கடக்கிறார் தினமும். கார் வாங்கவும் அவரிடம் காசு இல்லை. சமீபத்தில் இந்தச் செய்தி ஒரு லோக்கல் செய்தித்தாள் மூலம் அமெரிக்கா முழுவதும் பரவியது.. அவ்வளவே தான்..

அடுத்த ஒரு வாரத்தில் அவருக்கு 80000$ நிதியுதவி கிடைத்தன நாடு முழுவதிலும் இருந்து. அவர் ஏரியாவில் இருக்கும் ஒரு ஆட்டோமொபைல் கடைக்காரர் அவருக்கு 'ford taurus' வண்டியை இனாமாகக் கொடுத்திருக்கிறார். அதை விட மிக முக்கியம், லோக்கல் அரசாங்கப் பிரதிநிதி, "இது போல் தினக்கூலி வேலை பார்க்கும், கார் வாங்க வசதி இல்லாமல் இருக்கும் ஆட்கள் தங்கள் வேலைக்குப் போய் வர ஏதுவாக அரசாங்கம் பஸ் விட முயற்சி எடுக்கும்" என்றிருக்கிறார்..

அமெரிக்காவில் அரசுப் போக்குவரத்துத் துறையை, திட்டமிட்டு காலி செய்தவர்கள் தனியார் வாகன உற்பத்தியாளர்கள் என்பது இந்த இடத்தில் தேவைப்படாவிட்டாலும் தெரிந்து கொள்ள வேண்டிய கொசுறு..

இப்போது அப்படியே உங்கள் கற்பனை குளோப் உருண்டையை லேசாகச் சுற்றி, டெட்ராய்டில் இருந்து நம் நாட்டின் மராட்டிய மாநிலத்தில் ஒரு குக்கிராமத்திற்குக் கொண்டு வாருங்கள். இங்கு தினமும் அதிகாலை 3மணிக்குப் பெண்கள் மூன்று குடங்களை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் கோதாவரி ஆற்றுப் படுகைக்குச் சென்று, கைகளால் தோண்டி, ஒரு ஊற்றை உருவாக்கி, கிடைக்கும் கலங்கிய தண்ணீரை எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டிற்கு வரும் போது மணி9 ஆகியிருக்கும்.

ஒரு நாளைக்கு, ஒரு குடும்பத்திற்குக் குடிக்க மட்டும் தான் அந்த மூன்று குடங்கள் ஆகும். குளிப்பது எல்லாம் வாரத்திற்கு ஒரு முறை தான். மாலை பள்ளி விட்டதும் மாணவர்களும் தாங்கள் பள்ளிக்கு எடுத்துச் சென்றிருக்கும் குடத்தில் வழியில் கிடைக்கும் தண்ணீரை அள்ளிக்கொண்டு வர வேண்டும். ஆடு, மாடுகளுக்குக் கொடுக்கக் கூட தண்ணீர் இல்லாத கிராமத்தில் அவற்றை என்ன செய்யலாம்? குடும்பத்தில் ஒருவராக இருக்கும் அவைகளாவது நன்றாக இருக்கும் என்று பாதி விலைக்கு (சிலர் ஓசிக்கே) விற்று விடுகின்றனர். அங்கு ஒரு ஜோடி பசுமாட்டின் விலை 20,000ரூபாய் தான். இது அந்த ஒரு கிராமம் என்றில்லை, வானத்தையும் பூமியையும் மட்டுமே நம்பியிருக்கும் பல இந்தியக் கிராமங்களின் நிலையும் இது தான்..

இப்போது நான் முதலில் சொன்னதையும் இதையும் ஒப்பிட்டுப்பாருங்கள். அங்கு ஒரே ஒரு மனிதனுக்கு ஏற்பட்டக் கஷ்டத்தை ஒரு சமுதாயமே தீர்க்க முனைந்தது. அரசாங்கமும் தன் பொறுப்பை உணர்ந்து உறுதி அளிக்கிறது. இங்கு பாதி கிராமங்கள் இப்படித்தான் இருக்கின்றன.. ஆனால் என்ன செய்ய? ஒரு சமுதாயமாக நம்மாலும் அவர்களுக்கு உதவ முடியாது. உதவ வேண்டிய அரசாங்கமோ, ஆடு மாட்டைக் கூட வேண்டாம் என நினைக்கும் அவர்களின் நிலங்களைப் புடுங்க காத்திருக்கிறது.. வக்கத்தவனாக இருந்தாலும், அமெரிக்காவில் இருந்தால் தான் மதிப்பு போல...


Posted: 01 Apr 2015 12:36 AM PDT


ஊருக்குள்ள படிக்காம, பத்து மாடு வளத்து பால் பண்ண வச்சிருக்குறவனும் முன்னேறிட்டான...

Posted: 31 Mar 2015 09:25 PM PDT

ஊருக்குள்ள படிக்காம,
பத்து மாடு வளத்து
பால் பண்ண
வச்சிருக்குறவனும்
முன்னேறிட்டான்,
படிக்காம பத்து கால்
டாக்ஸி வாங்கி ஓட
விட்டவனும்
முன்னேறிட்டான்.

எஞ்சினியரிங்
முடிச்சவன்தான்
இடையில அல்லாடிட்டு
இருக்கான்... :(

@Jaishna MX

0 comments:

Post a Comment