Tuesday, 31 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


வேறென்ன கேட்டு விடப் போகிறேன் இந்த வாழ்க்கையிடம் சாகும்போதும் நினைத்து புன்முறுவ...

Posted: 31 Mar 2015 12:28 PM PDT

வேறென்ன கேட்டு
விடப் போகிறேன் இந்த
வாழ்க்கையிடம்
சாகும்போதும்
நினைத்து
புன்முறுவல் பூக்க
ஒரு காதல் இருந்தால்
போதும்..
:)

@காளிமுத்து

போதையில் வாகனம் ஓட்டுபவன் மனித வெடிகுண்டுக்கு சமம்: கோர்ட் கண்டனம் அப்ப அந்த போ...

Posted: 31 Mar 2015 12:26 PM PDT

போதையில் வாகனம்
ஓட்டுபவன் மனித
வெடிகுண்டுக்கு சமம்:
கோர்ட் கண்டனம்

அப்ப அந்த போதைய
விக்கிர டாஸ்மாக்
தான்
வெப்பன் சப்லேயரோ.

@செந்தில் ஜி

ஆரம்பத்தில் யாரு நமக்கு துணையா இருப்பாங்கன்னு நினைக்கிறமோ முடிவில் அவன்தான் பெரி...

Posted: 31 Mar 2015 12:23 PM PDT

ஆரம்பத்தில் யாரு நமக்கு
துணையா
இருப்பாங்கன்னு
நினைக்கிறமோ
முடிவில் அவன்தான்
பெரிய தொல்லையா
இருப்பாங்க...

#டிசைன்_அப்டி

@விவிகா சுரேஷ்

தமிழக சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்கிறது . # ஏற்கனவே, எண்ணெய் நிறுவ...

Posted: 31 Mar 2015 12:19 PM PDT

தமிழக
சுங்கச்சாவடிகளில்
இன்று முதல் கட்டணம்
உயர்கிறது .
# ஏற்கனவே, எண்ணெய்
நிறுவனங்கள்
இஷ்டத்துக்கு
பெட்ரோல், டீசல்
விலையை ஏற்றுவதால்
காய்கறி
விலையேறுகிறது.
இப்போது சுங்கச்சாவடி
உயர்வால் லாரி வாடகை
அதிகரித்து, காய்கறி
உள்ளிட்ட அத்திவாசியப்
பொருட்களின் விலை
இன்னும் அதிகரிக்கும்!

ஒபாமா தனது அடையாள அட்டையைக் காட்டுகிறார். அமர்ந்திருந்த ஊழியர்கள் எழுந்து கூட நி...

Posted: 31 Mar 2015 09:06 AM PDT

ஒபாமா தனது அடையாள
அட்டையைக்
காட்டுகிறார்.
அமர்ந்திருந்த ஊழியர்கள்
எழுந்து கூட
நிற்கவில்லை..

ஆனால் இங்கே?


துரோகங்களை எப்போதும் புன்னகையுடனே எதிர்கொள்ளுங்கள், வேறு எப்படியும் அதை வெல்ல மு...

Posted: 31 Mar 2015 08:50 AM PDT

துரோகங்களை
எப்போதும்
புன்னகையுடனே
எதிர்கொள்ளுங்கள்,
வேறு எப்படியும் அதை
வெல்ல முடியாது...

@காளிமுத்து

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள். செம்மொழிக்குரிய அனைத்து 11 த...

Posted: 31 Mar 2015 08:21 AM PDT

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.

செம்மொழிக்குரிய அனைத்து 11 தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட மொழி தமிழ் மொழி
ஒன்றே.தொன்மை,முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை,
தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை *என
பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது நம் தமிழ்மொழி ஒன்றே!
1)தொன்மை (Antiquity)
2)தனித்தன்மை (Individuality)
3)பொதுமைப் பண்பு (Common Characters)
4)நடுவு நிலைமை (Neutrality)
5)தாய்மைத் தன்மை (Parental Kinship)
6)பண்பாடு,கலை,பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture,art and life experience of the civilized society)
7)பிறமொழிக் கலப்பில்லாத தனித்தன்மை.(Ability to function independently without any impact or influence of any other language and literature)
8)இலக்கிய வளம் (Literary Powers)
9)உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)
10)கலை,இலக்கியத் தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11)மொழிக் கோட்பாடு (Linguistic Principles)

# இதில் பல தகுதிகள் இல்லாத கன்னடமும், தெலுங்கும், மலையாளமும், ஒரியாவும் கூட செம்மொழியாக அறிவிக்கப்பட்டது தான் கொடுமை!


சிறுவயதில் பாக்குற கிணறு எல்லாம் தண்ணியிருக்கா என எட்டிப் பார்த்த சந்தோசம் இப்போ...

Posted: 31 Mar 2015 07:59 AM PDT

சிறுவயதில் பாக்குற
கிணறு எல்லாம்
தண்ணியிருக்கா என
எட்டிப் பார்த்த சந்தோசம்
இப்போது இல்ல..
வெறும் மண்ணுதான்
தெரியுது!

@சூர்யா

அழகியல்! இடம்: முள்ளிக்கொளத்தூர், காஞ்சி மாவட்டம்

Posted: 31 Mar 2015 03:11 AM PDT

அழகியல்!

இடம்: முள்ளிக்கொளத்தூர், காஞ்சி மாவட்டம்


தமிழகத்திடம் மின்சாரம் கேட்கும் ஆந்திரா... ஏன்டா கலாய்க்கிறதுக்கு ஒரு அளவே இல்...

Posted: 31 Mar 2015 03:00 AM PDT

தமிழகத்திடம் மின்சாரம்
கேட்கும் ஆந்திரா...

ஏன்டா
கலாய்க்கிறதுக்கு ஒரு அளவே இல்லையாடா???

ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளத...

Posted: 31 Mar 2015 01:45 AM PDT

ரயில்வே பிளாட்பாரம்
டிக்கெட் கட்டணம் ரூ.5-ல்
இருந்து ரூ.10 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது. இது
நாளை ஏப்ரல் 1-ம் தேதி
அமலுக்கு வருகிறது.
அதே நேரம், புறநகர்
மின்சார ரயில்கள் மற்றும்
பாசஞ்சர் ரயில்களில்
குறைந்தபட்ச கட்டணம் 5
ரூபாய்தான். அது
மட்டுமின்றி, பிளாட்பார
டிக்கெட் எடுக்கப்பட்ட
நேரத்தில் இருந்து 2 மணி
நேரம் வரை மட்டுமே
செல்லுபடியாகும்.
ஆனால், பாசஞ்சர் ரயில்
டிக்கெட் அந்த நாள்
முழுக்க
செல்லுபடியாகும்.
புறநகர் ரயில்
டிக்கெட்கூட 1 மணி நேரம்
வரை செல்லுபடியாகும்.
எனவே, 5 ரூபாய்க்கான
பயணச் சீட்டை எடுத்து
வைத்துக்கொண்டு,
பிளாட்பார டிக்கெட்
எடுக்காமல்
சமாளித்துவிடலாம் என்ற
மனநிலையில் சில
பயணிகள் உள்ளனர்.
ரயில்வே பிளாட்பார
டிக்கெட் கட்டண உயர்வு
வரும் 1-ம் தேதி
அமலுக்கு வருகிறது.
ரூ.5-க்கான பயண
டிக்கெட்டை
எடுத்துவிட்டு
சம்பந்தமில்லாத
பிளாட்பாரத்தில்
நடமாடுபவர்களுக்கு
கட்டாயம் அபராதம்
விதிக்கப்படும் என்று
ரயில்வே அதிகாரிகள்
கூறியுள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 20% 2G ஸ்பெக்ட்ரத்தை விற்பனை செய்து ரு.62,00...

Posted: 31 Mar 2015 01:42 AM PDT

ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசாங்கம்
20% 2G ஸ்பெக்ட்ரத்தை
விற்பனை செய்து
ரு.62,000 கோடியை
வருவாயாக பெற்றது,
கடந்த சில மாதங்களில்
மோடி
தலைமையிலான
அரசு மீதி 80% 2G
ஸ்பெக்ட்ரத்தை
விற்பனை செய்து
ரு.1.1 லட்சம்
கோடிகளை
வருவாயாக
பெற்றுள்ளது, இதில்
எங்கிருந்து 2Gயில்
ரு.1.76 லட்சம் கோடி
வருவாய் இழப்பு
ஏற்பட்டது, 20%
விற்பனையில் ரு.1.76
லட்சம் கோடி இழப்பு
என்றால், மீதி 80% த்தில்
எவ்வளவு கமிஷன்
வாங்கினார்கள்
அல்லது எவ்வளவு
இழப்பு ஏற்பட்டது,
ஒன்னுமே புரியலை,
பொருளாதார
நிபுணர்கள் யாராவது
கொஞ்சம்
விளக்குங்களப்பா....

பெங்களூருவில் தமிழ் சிறுமியை அடக்கம் செய்ய எதிர்ப்பு: தமிழகம் கொண்டுவரப்பட்டது...

Posted: 31 Mar 2015 01:34 AM PDT

பெங்களூருவில்
தமிழ் சிறுமியை
அடக்கம் செய்ய
எதிர்ப்பு: தமிழகம்
கொண்டுவரப்பட்டது உடல்

அப்போ நாம எல்லாம் ஒரே திராவிட இனம் இல்லையா?? பயபுள்ள பொய் சொல்லிடானுங்க...

புதையலை பூதம் காத்த கதைகள், ஒவ்வொரு இந்தியனின் மனநிலையையே உணர்த்துவதாகத் தோன்றும...

Posted: 31 Mar 2015 01:07 AM PDT

புதையலை பூதம் காத்த கதைகள், ஒவ்வொரு இந்தியனின் மனநிலையையே உணர்த்துவதாகத் தோன்றும்.

தானும் அனுபவிக்காது மற்றவர்களுக்கும் கொடுக்காது, குழந்தைகளுக்காகவே சொத்து, பணம் சேர்த்து, கடைசி வரை உலக இன்பங்கள் எதையும் அனுபவிக்காது, கடைசியில் அதே சொத்துக்காகவே பிள்ளைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி போய் சேர்ந்தும் விடுவார்கள்.

ஆனால் கதை இப்படியே தொடர்ந்தால் எந்த சுவாரசியமும் இல்லையே.எப்போது கார்ப்போரேட்டுகள் இங்கு உள் நுழைந்ததோ, அப்போ வந்தது ட்விஸ்டு.

MNC ல் வேலை செய்பவனா, அவன் லைஃப் ஸ்டைல் இப்படித்தான் இருக்க வேண்டும் என கம்பெனியால் தீர்மானிக்கப் பட்டது.அவனுக்கு அளவுக்கு அதிகமான சம்பளம் வழங்கப் பட்டது.அதிக சம்பளம் வாங்குவதால் சிட்டிக்குள் அவனுக்கென சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற ஆசை ஊட்டப்பட்டது. அவனுக்கென லட்சம் கோடிகளில் வீடுகள் கட்டப் பட்டன.

மொத்தமாய் பணம் தரத் தேவையில்லை தவணை முறையில் தந்தால் போதும் என்று மூளைச்சலவை செய்யப் பட்டு, வீட்டுக்கடன் கார்க்கடன், ஏன் மொபைலுக்கு கூட கடன் என கடன் திட்டங்களை கடை விரித்து அவன் நிரந்தர கடனாளி ஆக்கப் பட்டான்.

டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் மளிகைப் பொருட்களை வாங்காமல், பக்கத்திலிருக்கும் அண்ணாச்சிக் கடையில் பொருள் வாங்குபவன், தரமான பொருட்களை வாங்கத் தெரியாதவனாக சித்தரிக்கப் பட்டான்.

ஊரில் திருவிழா, கல்யாணம் என கூட்டமாக சேர்ந்து வாழ்க்கையை கொண்டாடி மகிழ்ந்தவன், டிப்பார்ட்மென்டல் ஸ்டோரிலும், துணிக்கடைகளிலும், ஷாப்பிங் மால்களிலும், பப்களிலும்,ஹோட்டல், காஃபி டேக்களின் கூட்டத்திலும் மகிழ ஆரம்பித்தான்.அது அவனது மனஅழுத்தத்தை குறைப்பதாக நம்பினான்.

பீட்ஸாவும், பர்கருமே தன் அந்தஸ்தை காட்டுவன என எண்ணினான்.இன்டர்நெட் கனக்ஷன் இல்லாதவன், ஏதோ கண்களே இல்லாதவனாக நினைத்துக் கொண்டான்.

ஒருமுறை துணிக்கடைக்குள் நுழைந்தால் ஐந்து ஆறு செட் துணிகள் எடுக்காமல் வெளியில் வர மாட்டான், மேற்சொன்ன எந்த இடத்திற்குள் நுழைந்தாலும், இரண்டாயிரத்துக்கு குறையாமல் தயங்காமல் செலவு செய்வான்.

அவன் செலவு வரவைத் தாண்டிச் சென்ற போது, கிரெடிட் கார்டுகள் அவன் முன் நீட்டப் பட்டன. அவனை நிரந்தர கடனாளியாக்கியதோடு, மனநோயாளியாக்கியும் அழகு பார்த்தது கார்ப்போரேட் உலகம்.

வலையின் அடியில் அரிசி போட்டு புறாக்களை பிடித்துக் கொண்ட வேடன் போல, வசதிகளை அளவுக்கதிகமாய் அறிமுகம் செய்து, நுகர்வுக் கலாச்சாரத்தை போதையாய் ஊட்டி, கார்ப்போரேட்டுகள் நம்மை நன்றாகவே சிக்க வைத்து விட்டன.

வேகச் சிந்தனை அதிகரிக்கும் அளவுக்கு, விவேக சிந்தனையையும் பெருக்கிக் கொண்டால் ஒருவேளை இந்த மாயவலையை அறுத்து தப்பிக்கும் வாய்ப்பு உண்டு.

@Jaishna MX

Posted: 30 Mar 2015 10:36 PM PDT


0 comments:

Post a Comment