Thursday, 26 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மூன்றாவது முறையாக இன்று உலக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய பெண்கள் கபடி அணி. இத...

Posted: 26 Mar 2015 12:36 PM PDT

மூன்றாவது முறையாக
இன்று உலக சாம்பியன்
பட்டம் வென்றது இந்திய
பெண்கள் கபடி அணி.
இதை கட்டாயம் வாழ்த்த
வேண்டும்.

எந்த ஒரு ஊடகமும் ஏன் இதற்கு முக்கியதுவம் கொடுக்கவில்லை??


இன்று மார்ச் 26 , தமிழீழ விடுதலைப் புலிகள் முதன் முதலாக , கொழும்பு கட்டுநாயக்கா...

Posted: 26 Mar 2015 10:32 AM PDT

இன்று மார்ச் 26 ,

தமிழீழ விடுதலைப்
புலிகள் முதன்
முதலாக , கொழும்பு
கட்டுநாயக்கா
விமானப்படைத் தளம்
மீது வான்படைத்
தாக்குதல் நடத்திய நாள்.......!

இந்த தாக்குதல் சிங்கள
அரசுக்கு எதிராக
நடத்தப்பட்ட தாக்குதல்.

சிங்கள மக்கள் ஒருவர்
கூட பாதிக்கப்பட்டு
விடக் கூடாது என்று
நடத்தப்பட்ட தாக்குதல்.

இது தான் தமிழர்களின்
அறம்......!

வெற்றியும், தோல்வியும் வாழ்வில் ஒரு பகுதி- கிரிக்கெட் தோல்வியில் தவிக்கும் ரசிகர...

Posted: 26 Mar 2015 09:48 AM PDT

வெற்றியும்,
தோல்வியும் வாழ்வில்
ஒரு பகுதி- கிரிக்கெட்
தோல்வியில் தவிக்கும்
ரசிகர்களுக்கு பிரதமர்
மோடி டுவிட்டரில்
ஆறுதல்

# ஐயா
பிரதமரே! சாதாரண
விளையாட்டு
தோல்விக்கு வந்து
ஆறுதல் சொல்ல
உங்களால்
முடியுது. ஆனால்
எல்லை தாண்டி வரும்
இந்திய மீனவர்களை
சுட்டுக்கொல்லுவேன்
என சொன்ன இலங்கை
பிரதமரை கண்டிக்க
உங்களால் முடியலை.

@நம்பிக்கை ராஜ்

கருங்கூந்தல் உள்ளுக்குள் - நான் காணாமல் போகவேண்டும் கண்ணேவுன் கண்மையே - எனக்கு க...

Posted: 26 Mar 2015 08:17 AM PDT

கருங்கூந்தல் உள்ளுக்குள் - நான்
காணாமல் போகவேண்டும்
கண்ணேவுன் கண்மையே - எனக்கு
கரும்புள்ளிசெம்புள்ளி ஆகவேண்டும்

ஆயுதத்தைவிடக் கோரமாய் - உன்
அசட்டுச்சிரிப்பு கொல்லுது
தனிஊசல் விழியிரண்டும் - என்னை
தண்ணீபோட்டவனாய்த் தள்ளுது

- கவிஞர்.செந்தமிழ் தாசன்


தென் ஆப்ரிக்கா நாட்டில் தொடரும் இந்திய அரசின் மொழித் தீண்டாமைக் கொள்கை !! தமிழர...

Posted: 26 Mar 2015 08:13 AM PDT

தென் ஆப்ரிக்கா நாட்டில் தொடரும் இந்திய அரசின் மொழித் தீண்டாமைக் கொள்கை !!

தமிழர்கள் அதிகம் வாழும் தென் ஆப்பிரிக்கா நாட்டில் 2008 ஆம் ஆண்டில் இந்திய தூதரகம் தமிழ் மொழி இலவசமாக கற்றுத் தரப்படும் என அறிவித்தது. பல தமிழர்களும் இதனால் பயனடைந்து வந்துள்ளதாக தெரிகிறது.

இப்போது இந்திய தூதரகம் இதற்கு நேர்மாறாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இந்தி மொழி இலவசமாக கற்றுத் தரப்படும் என்றும், தமிழ் மொழியை கற்க வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது இந்திய தூதரகம். இந்த அறிவிப்பை எதிர்த்து தென் ஆப்ரிக்கா தமிழ்ச் சங்கம் இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்திய அரசு என்பது இந்தி மொழிக்கு மட்டுமே ஆன அரசு அல்ல . இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் இனங்களுக்கும் இந்திய அரசு சமமான உரிமையை கொடுக்க வேண்டும் என்று தென் ஆப்ரிக்கா தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . இந்தியை போலவே தமிழையும் இலவசமாக கற்றுத் தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அனைத்தும் இந்தியை மட்டுமே ஊக்குவிக்கின்றன. அண்மையில் ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகம் தனது முகநூல் பக்கத்தில் இந்தியில் கட்டுரை போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தி அல்லாத மக்கள் இப்பக்கத்தில் சென்று இந்தி அல்லாத மொழிகளுக்கும் அறிவிப்புகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் . ஆனால் அக்கோரிக்கை எதற்கும் தூதரகம் பதில் அளிக்கவில்லை.

இப்படியாக இந்திய அரசின் தூதரகங்கள் அனைத்தும் இந்தி மக்களுக்கான, இந்தி மொழிக்கான தூதரகமாக மட்டுமே செயல்படுகிறது. பிற இந்திய மொழிகளை பயன்படுத்துவதை இந்திய அரசு விரும்பவில்லை. இக்காலத்திலும் மொழித் தீண்டாமை கொள்கையை இந்திய அரசு கடைபிடிப்பது மிகவும் அவமானகரமான செயலாகும் .

தமிழக அரசு உடனே இவ்விடயத்தில் தலையிட்டு தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அனைத்து நாட்டு இந்திய தூதரகத்திலும் தமிழை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கெல்லாம் தமிழர்கள் செறிந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களையே தூதரக அதிகாரியாக இந்திய அரசு நியமிக்க கோரிக்கை வைக்க வேண்டும். முடிந்தால் தமிழக அரசே, தமிழக அரசின் சார்பில் தமிழர்களுக்கான அயல்நாட்டு துறையை உருவாக்க முன்வர வேண்டும்.


பிசிசிஐ அணி வெற்றி பெற வேலூர் அருகே நாக்கை அறுத்து காணிக்கை செய்த வாலிபர்... நீ...

Posted: 26 Mar 2015 05:42 AM PDT

பிசிசிஐ அணி வெற்றி பெற
வேலூர் அருகே நாக்கை
அறுத்து காணிக்கை செய்த வாலிபர்...

நீயெல்லாம் கழுத்தை
அறுத்துக்கிட்டு
செத்துரு நாயே...


0 comments:

Post a Comment