Tuesday, 17 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


#திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #இல்லறவியல். அதிகாரம்: #ஒப்ப...

Posted: 17 Mar 2015 07:02 PM PDT

#திருக்குறள்
குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #இல்லறவியல். அதிகாரம்: #ஒப்புரவறிதல்.

#உரை:
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

#Translation:
The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours.

#Explanation:
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.

#TRADUIT DU #TAMOUL
Créée par le travail, la richesse de celui qui en est digne, lui est donnée pour faire la charité.

@ Puducherry * புதுச்சேரி * Pondichéry


#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #பகைத்திற...

Posted: 17 Mar 2015 06:44 PM PDT

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #பகைத்திறந்தெரிதல் .

#உரை:
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.

#Translation:
For Hate, that ill-conditioned thing not e'en in jest.
Let any evil longing rule your breast.

#Explanation:
The evil of hatred is not of a nature to be desired by one even in sport.

#TRADUIT DU #TAMOUL
Ne jamais rechercher, même en plaisantant le mal funeste appelé inimitié.

- Puducherry * புதுச்சேரி * Pondichéry


விபச்சார விடுதிக்குள்ள போயி பாலியல் பலாத்காரம் செய்திருக்காங்க நம்ம கலாச்சார காவ...

Posted: 17 Mar 2015 09:26 AM PDT

விபச்சார விடுதிக்குள்ள
போயி பாலியல்
பலாத்காரம்
செய்திருக்காங்க நம்ம
கலாச்சார காவலர் குரூப்.

மாட்டுக்கு இருக்கும்
மதிப்புகூட
நம் நாட்டு
பெண்களுக்கு இல்லை
போல?


தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் போரில் இறக்கவில்லை..... சேனல் 4 ஊடகவியலாளர் கெலம்...

Posted: 17 Mar 2015 09:02 AM PDT

தமிழீழ தேசிய தலைவர்
பிரபாகரன் போரில்
இறக்கவில்லை.....
சேனல் 4 ஊடகவியலாளர்
கெலம் மேக்ரே அதிர்ச்சி
தகவல்.

இருந்தால் எங்கள்
தலைவன்
இல்லையேல் எங்கள்
இறைவன்.

அழகு தமிழ்நாடு! கங்கைகொண்டசோழபுரம்!

Posted: 17 Mar 2015 04:02 AM PDT

அழகு தமிழ்நாடு! கங்கைகொண்டசோழபுரம்!


சாதிக்க ஆசையா? முதலில் அவமானப் பட பழகிக்கொள்!! @காளிமுத்து

Posted: 17 Mar 2015 02:06 AM PDT

சாதிக்க ஆசையா?
முதலில் அவமானப் பட
பழகிக்கொள்!!

@காளிமுத்து

சந்தோசமாக இருக்கிறோம் என்று பிறரை நம்ப வைப்பதிலேயே கழிந்துவிடுகிறது வாழ்க்கை!!...

Posted: 17 Mar 2015 02:04 AM PDT

சந்தோசமாக
இருக்கிறோம் என்று
பிறரை நம்ப
வைப்பதிலேயே
கழிந்துவிடுகிறது வாழ்க்கை!!

@விவிகா சுரேஷ்

அப்பாவை வாங்க போங்க என்று அழைக்கும் மகள்/மகன் அம்மாவை "வா போ" என்று அழைப்பதில் ஒ...

Posted: 17 Mar 2015 01:43 AM PDT

அப்பாவை வாங்க போங்க
என்று
அழைக்கும் மகள்/மகன்
அம்மாவை "வா போ"
என்று
அழைப்பதில் ஒரு
நெருக்கம்
ஒளிந்துள்ளது.

@செந்தில் ஜி

தாறுமாறான காதல் கடிதங்கள் :- ம் என்ன செய்கிறாய் என்றாய். உன்னைதான் நினைத்துக் க...

Posted: 17 Mar 2015 12:44 AM PDT

தாறுமாறான காதல் கடிதங்கள் :-

ம் என்ன செய்கிறாய் என்றாய். உன்னைதான் நினைத்துக் கொண்டு இருந்தேன் என்றேன். அவ்வளவும் பொய் என்றாய். ஒரு விக்கல் கூட எனக்கு வரவில்லையே! நினைக்கும் போது விக்கல் வரும் என்று யார் சொன்னது? அப்படியென்றால் முழு நாளும் நீ விக்கியே செத்து இருப்பாய் என்றேன். உன்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் சாக மாட்டேன். நீ வழிசல் கேசு என்று தெரியும். நான் செத்தாலும் எவளையாவது சைட் அடிப்பேடா என்று 32 பல் வரிசை தெரிய சொன்னாய். அப்படியெல்லாம் இல்லை என்று அழகாய் வழிந்தேன்.

என் அப்பாவிற்கு பிறகு என்னை கவர்ந்த ஆண் மகன் நீதான் என்றாய். எதுனா ஏமாத்தினால் அவ்வளவுதான் என்று மிரட்டினாய். ஏமாத்தினால் என்ன பண்ணுவே என்றேன். நேரா கொலைதான் என்றாய். அடிப்பாவி! இந்த காதை திருகறது! தலையில் கொட்டு வைப்பது! செல்லமாய் வலிக்காமல் கழுத்தை நெறிப்பது இப்படியெல்லாம் சின்ன தண்டனைகள் இல்லையா என்றேன். அதுல எல்லாம் நீ பொழைச்சிபே! எனக்கு இல்லைனா எவளுக்கு இல்லை அப்படி பண்ணிடுவேன் என்றாய். இந்த கொலைக்கார காதல் தேவையா என்று சில வாரம் தூக்கமே வரவில்லை.

அப்புறம் ஒருநாள் கொஞ்சம் தைரியம் வரவைத்து சிரித்த வாக்கில் கேட்டேன். ஹேய் அன்னிக்கு நீ சும்மாதானே சொன்னே! இல்லையே நிஜமா தாண்டா என்றாய். உன்னையெல்லாம் பிசாசு என்று கூப்பிடுவது தப்பே இல்லை என்று பயந்த மாதிரி சொன்னேன். இப்போதும் கூட லேசாக கண்ணடித்து மர்டர் கண்ணா என்கிறாய். உன்னை தவிர எவளும் சைட் அடிக்கறது இல்லை நம்பு ப்ளிஸ் என்கிறேன்.

அதெல்லாம் நம்ப முடியாது என்றாய். என்ன செய்தால் நம்பிக்கை வரும் என்று கேட்டேன். வா ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கலாம் என்றாய். ஏய் எங்கம்மா திட்டும் என்றேன். இந்த ஆம்பளை பசங்க ஏன்டா இப்படி அம்மாவுக்கு நடுங்கறிங்க என்றாய்.

ஏய் நீ காதலியா! இல்லை ரவுடியா! லைட்டா டவுட்டாகீது என்றேன்.

@பா. வெங்கடேசன்


எல்லை தாண்டி வந்தால் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லுவோம் - ரணில் விக்ரம சிங்கே ம...

Posted: 17 Mar 2015 12:42 AM PDT

எல்லை தாண்டி வந்தால்
தமிழக மீனவர்களை
சுட்டுக் கொல்லுவோம்
- ரணில் விக்ரம சிங்கே
மீண்டும் பேட்டி

# ரணில் தன்னிடம்
வருத்தம் தெரிவித்தார்
என பாராளுமன்றத்தில்
சொன்ன புளுகு
மூட்டை சுஷ்மா
சுவராஜ் இதற்கு என்ன
சொல்வார்?

@நம்பிக்கை ராஜ்

சிறுவயதில் தாயிடம் நான் உணர்ந்த பாதுகாப்பை, முதுமையில் அவளுக்கு உணர்த்திவிட்டால்...

Posted: 16 Mar 2015 11:14 PM PDT

சிறுவயதில் தாயிடம்
நான் உணர்ந்த
பாதுகாப்பை,
முதுமையில்
அவளுக்கு
உணர்த்திவிட்டால்
போதும், என் மரணம்
மகிழ்ச்சியானதாய் இருக்கும்!

0 comments:

Post a Comment