Relax Please: FB page daily Posts |
- பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது.. குடும்பச்செலவுக்கு ஐம்பதாயிரம் லோன் வேண...
- இந்திய ரயில்வேயின் புதிய சேவை smile emoticon ரயில்வே துறையின் சார்பில் இயங்கும்...
- :P Relaxplzz
- இந்த தமிழனையும் தெரிந்துகொள்ளுங்கள்... கல்யாணசுந்தரம் - 45 வருடங்களாக சமூக சேவை...
- நாம் பின்பற்ற வேண்டிய 11 வழிமுறைகள்: 1. உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காத...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- "மேடம்... என் புருஷனை என்னோடு மீண்டும் சேர்த்து வைக்க முடியுமா..?" "என்ன கேட்கி...
- தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....? மொபைல் போன்கள் நமக்கு ம...
- உலக அழகிகள்கூட எம் தமிழச்சி அழகுக்கு ஈடாகுமா ???
- கரும்பு ஜூஸ் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- (y) Relaxplzz
- மணைவிகள் கணவனை எவ்வாறு சாப்பிட அழைத்தார்கள் அன்று.இப்ப எவ்வாறு அழைக்கிறார்கள்....
- மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்! ! ! ! • மோட்டாரிலிருந்து தண்ணீர் தொட்டிக்க...
- இப்படத்தில் காண்பது அலாஸ்க சமுத்திரம்,, இங்கு இரு சமுத்திரம் சந்திக்கும்.. அனால...
- :) Relaxplzz
- கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்.. 1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்த...
- உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...? *குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற...
- கலர் கோழிகுஞ்சுகள் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- (y) Relaxplzz
- உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி? மனிதர்களுக்கு பெரும்பாலும் சந்தோச...
- திருமணத்திற்கு முன்பே தாயை இழந்தவன், தன் மகளை கைகளில் ஏந்தும்போது, "என் அம்மாவா...
- ஒரு பையன் தன்னோட காதலிக்கு Call பண்ணுறான்.அப்போ அந்த பொண்னோட அப்பா போனை எடுக்கிற...
- ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்...
- விமானத்தில் விமானியின் அறை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டுமா அப்போ இந்த லி...
- ;-) Relaxplzz
- தகவல் துணுக்குகள் 01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ 02. வேர் இல்லாத தாவரம் -...
- :) Relaxplzz
Posted: 04 Feb 2015 08:15 AM PST பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது.. குடும்பச்செலவுக்கு ஐம்பதாயிரம் லோன் வேண்டுமென்றும் அதை மாதம் தோறும் மூவாயிரம் வீதம் பிடித்தம் செய்து கொள்ளும்படியும் கேட்டு கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள் ஒரு பெண்.. கம்பெனியுல லோன் கேட்குற அளவுக்கு அப்படி என்ன உனக்கு கஷ்டம்!'' அவளுடன் வேலை பார்க்கும் தோழி கேட்டாள். கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோன் வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல தான் போடப்போறேன்.!'' யதார்த்தமாய் சொன்னாள் அந்த பெண். என்னடி சொல்ற? தோழி புரியாமல் கேட்டாள். "இந்த வருஷம் எனக்கு இன்கிரிமெண்ட் வந்தப்போ நான் வாங்கற சம்பளம் என் வீட்டுக்காரர் வாங்கற சம்பளத்த விட ஆயிரம் ரூபா அதிகம், அவர விட நான் அதிக சம்பளம் வாங்குறது தெரிஞ்சா அவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடும்.. என் சம்பளத்துலயிருந்து மூவாயிரம் பிடித்தம் போக மீதி சம்பளம் என் பேங்குல கிரிடிட் ஆச்சுன்னா அது அவர் வாங்கற சம்பளத்த விட குறைவு அதான் லோணுக்கு அப்ளை பண்றேன்"!. தனது கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக்கூடாது என விரும்பும் அந்த பெண்ணின் நல்ல மனத்தை அதிசயமாகப் பார்த்தாள் அவள் தோழி.!!! #பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது தான், ஆனால் அந்த சுயநலத்திற்குள் ஒரு குடும்பமே நிம்மதியாய் இருக்கும்... Relaxplzz |
Posted: 04 Feb 2015 07:15 AM PST இந்திய ரயில்வேயின் புதிய சேவை smile emoticon ரயில்வே துறையின் சார்பில் இயங்கும் டிக்கெட் கவுன்டர்கள் தவிர, ஆன் - லைன் முறையிலும் பயணிகள் தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் வழங்கி வருகிறது.இந்த முறையில், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி மட்டுமே இதுவரை டிக்கெட் புக்கிங் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த வசதிகள் இல்லாத நபர்களும் ஆன் - லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, பயண தேதிக்கு, ஐந்து நாட்கள் முன்பாக, பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை ஆன் - லைனில் புக் செய்யலாம். அப்போதே அதற்கான பணம் செலுத்த வேண்டியதில்லை. அதன்பின், பயணியின் முகவரிக்கு, புக் செய்த டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். அதை 'டெலிவரி' செய்யும் நபரிடம், டிக்கெட்டுக்கான தொகையுடன், கூடுதலாக சேவைக் கட்டணத்தை செலுத்தி பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுக்கு, பயண டிக்கெட்டை விட கூடுதலாக, 40 ரூபாயும், ஏசி வகுப்பு டிக்கெட்டுக்கு கூடுதலாக, 60 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும். 'புக்மைட்ரைன் டாட் காம்' என்ற வெப்சைட்டில் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் என ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் மூலம், கிரெட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பாங்கிங் இல்லாதவர்களும் ஆன் - லைன் முறையில் ரயில் பயண டிக்கெட்டை முன் பதிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சேவையை தற்போதைக்கு, 200 முக்கிய நகரங்களில் வழங்க ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Relaxplzz |
Posted: 04 Feb 2015 06:30 AM PST |
Posted: 04 Feb 2015 06:00 AM PST இந்த தமிழனையும் தெரிந்துகொள்ளுங்கள்... கல்யாணசுந்தரம் - 45 வருடங்களாக சமூக சேவை செய்து வருபவர், 30 வருடங்களாக நூலக பொறுப்பாளராக இருந்து, உலகத்திலே தனது வாழ்நாளில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு ஒதுக்கும் ஒரே நபர் இவர் மட்டும் தான். தன் தேவைக்காக உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்.. இதை பாராட்டும் வகையில் ஒரு அமெரிக்க அமைப்பு, இவர்க்கு "மேன் ஆப் மில்லினியம்" பட்டம் குடுத்தனர். மற்றும் 30 கோடி அன்பளிப்பு அளித்தனர் அதையும் வழக்கம் போல் அனாதை இல்லத்திற்கு கொடுத்துவிட்டார். * நூலக அறிவியல் பாடப் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றவர். * மத்திய அரசின் சிறந்த நூலகப் பொறுப்பாளர் விருது பெற்றவர். * உலகத்தின் தலை சிறந்த பத்து நூலக பொறுப்பாளர்களில் இவரும் ஒருவர். இப்படிப்பட்ட தமிழனை நம்மில் எத்தனைபேருக்கு தெரியும், அதுவும் சிலருக்கு ரஜினிகாந்த் அவர்கள் இவரை தன் தத்து தந்தாய் அறிவித்த பிறகே தெரியும்... தன் வாழ்வில் கல்யாணம் கூட செய்துகொள்ளாமல், இயலாதவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் இவருக்கு விக்கிபீடியாவில் ஒரு கட்டுரை கூட இல்லாதது வருத்தமளிக்குறது.. பகிருங்கள், ஒவ்வொரு தமிழனுக்கு எட்டும் வரை.. - தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு Relaxplzz ![]() |
Posted: 04 Feb 2015 04:53 AM PST நாம் பின்பற்ற வேண்டிய 11 வழிமுறைகள்: 1. உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காதே !! மற்றும் உனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்றும் நினைக்காதே !! 2.ஆபத்தில் பொய் சொல்ல தயங்காதே !! பொய் சொல்லி ஒருவரிடமும் பழகாதே !! 3. உன்னை நம்பு, கடவுளை நம்பாதே !! 4. உன் மனசாட்சி மட்டும் தான் இந்த உலகில் உண்மையான நீதிபதி என்பதை மறவாதே !! 5. நீ செல்லும் பாதை சரியாக இருந்தால் , உன் மனசாட்சியும் சரியென கூறினால் இந்த உலகமெ இடையூறாக வந்தாலும் மதியாதே !! 6. முடியும் என்று நினைத்தால் நிச்சயம் உன்னால் முடியும் !! 7. பணத்தை மட்டுமே தியாகம் செய் , உன் கொள்கையை தியாகம் செய்து விடாதே !! 8. நம்பிக்கையும் , மானத்தையும் இழந்து உயிர் வாழ்வதே வீண் !! 9. தவறுகளை கண்டும் காணாமல் செல்வது நீ மனித இனமாய் பிறந்ததற்கே அவமானம் !! 10. நிமிர்ந்து நில் - உன் கோவம் நியாயமாய் இருந்தால் !! துணிந்து பேசு - உன் கருத்து உண்மையாக இருந்தால் மட்டுமே!!!! 11. நீ செய்வது சரியாக இருந்தால் உலகமே ஏதிர்தாலும் செய்து முடி... முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்... Relaxplzz ![]() வாழ்வின் மொழி... |
Posted: 04 Feb 2015 04:30 AM PST |
Posted: 04 Feb 2015 03:30 AM PST |
Posted: 04 Feb 2015 02:30 AM PST |
Posted: 04 Feb 2015 02:15 AM PST "மேடம்... என் புருஷனை என்னோடு மீண்டும் சேர்த்து வைக்க முடியுமா..?" "என்ன கேட்கிறீங்க...? டைவர்ஸ் வாங்கி ஒரு மாசமாகல.. அதுக்குள்ள மீண்டும் சேர்த்துவைக்க சொல்றீங்க..ஏன்..? + + + + + + + " அந்த மனுஷன் டைவர்ஸ் வாங்கினதுக்கப்புறம் ரொம்ப சந்தோசமா இருக்கார். அது என்னால சகிக்க முடியல..! |
Posted: 04 Feb 2015 02:00 AM PST தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....? மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வதுஎன்று பார்ப்போம். சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது. உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும். உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல்வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும். Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந் த பட்சம் இரண்டு மணி நேரம் ). அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம். Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம். போன் நன்றாக காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலும் ஆன் ஆகிவிடும், இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும். அப்போதும் ஆன் ஆனால் போன் ஓகே, பேட்டரி பிரச்சினை. அப்போதும் இல்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும் Relaxplzz ![]() |
Posted: 04 Feb 2015 01:50 AM PST |
Posted: 04 Feb 2015 01:40 AM PST |
Posted: 04 Feb 2015 01:30 AM PST |
Posted: 04 Feb 2015 01:15 AM PST மணைவிகள் கணவனை எவ்வாறு சாப்பிட அழைத்தார்கள் அன்று.இப்ப எவ்வாறு அழைக்கிறார்கள். #1940ல் மணைவி: அத்தான் சாப்பிட வாருங்கள். #1980ல் மணைவி: சாப்பிட வாங்க மச்சான். #2000தில் மணைவி: என்னங்க சாப்பிட வாங்க. #2010ல் மணைவி: நான் சாப்டேன்.உனக்கும் சாப்பாடு எடுத்து வச்சுட்டேன் கோபால். #2014ல் மணைவி: இஷ்டமிருந்தா தின்னு,இல்லனா ஆபிசுக்கு கிளம்பி போடா. :P :P Relaxplzz |
Posted: 04 Feb 2015 01:00 AM PST மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்! ! ! ! • மோட்டாரிலிருந்து தண்ணீர் தொட்டிக்கு செல்லும் குழாய்களை அதிக வளைவில்லாமல் பொருத்தினால்தண்ணீர் விரைவாக மேலேறும்; மின்சாரமும் மிச்சமாகும். • காய்ந்த துணியில் தண்ணீர் தெளித்து அதன்மீது இஸ்திரி போட்டால் மின்சாரம் அதிகமாக செலவாகும். • தானாக "டீஃப்ராஸ்ட்' ஆகாத ஃபிரிட்ஜாக இருந்தால் ஐஸ்கட்டி அதிகமாக பிடித்துப் போகாமல் அடிக்கடி "டீஃப்ராஸ்ட்' செய்யுங்கள். இல்லாவிட்டால் அதிக மின்சாரம் செலவாகும். • கோடை காலங்களில் வாஷிங் மெஷினில் துவைக்கும் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.டிரையரை குளிர், மழை காலங்களில் மட்டும் பயன்படுத்தினால்மின்சாரம் மிச்சமாகும். • கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்ய, ஷட்டௌவ்ன் செய்ய சோம்பற்பட்டு ஸ்க்ரீன் சேவரில் போட்டு வைப்பதால் மின்சாரம் பெரிய அளவில் விரயமாகும். • ஏசி-யை வருடத்திற்கு இருமுறை சுத்தம் செய்யுங்கள். ஏசி ஃபில்டரை மாதாமாதம் சுத்தம் செய்யுங்கள். இதனால் மின்சாரம் விரயமாவதைத் தவிர்க்கலாம். • ஃப்ரிட்ஜின் கதவு சரியாக மூடாமலிருந்தாலும், அடிக்கடி ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்து மூடினாலும் மின்சாரம் பாழாகும். • நீண்ட நாள்களுக்கு வெளியூருக்குச் சென்றால் ஃபிரிட்ஜை அணைத்துவிடுவதன்மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம். • பல்புகளின் மீதுள்ள தூசியை துடைத்து வைத்தால் அதிக வெளிச்சம் கிடைப்பதோடு, மின்சாரமும் மிச்சமாகும். • பயன்படுத்திய விளக்குகள், மின்விசிறி, டிவி, கம்ப்யூட்டர் என அனைத்தையும் அணைத்தபிறகே அறையைவிட்டு வெளியேறுங்கள். • கூடியவரை வீட்டில் பலர் ஒரே அறையில் இருந்து படிப்பது, டிவி பார்ப்பது என திட்டமிட்டால் மின்சார செலவு குறையும். Relaxplzz ![]() |
Posted: 04 Feb 2015 12:45 AM PST |
Posted: 04 Feb 2015 12:30 AM PST |
Posted: 04 Feb 2015 12:15 AM PST கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்.. 1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும். 2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது. 3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது. 4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான். 5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது. 6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு. 7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்) 8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித் தான் நடத்துகின்றனர். 9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும். 10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது. நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. -ஆதிரா Relaxplzz |
Posted: 04 Feb 2015 12:00 AM PST உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...? *குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது... *அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது... *கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது... *அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது... *ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க... *புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது... *நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது... *பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது... *நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது... 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...! Relaxplzz ![]() |
Posted: 03 Feb 2015 11:45 PM PST |
Posted: 03 Feb 2015 11:30 PM PST |
Posted: 03 Feb 2015 11:15 PM PST உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி? மனிதர்களுக்கு பெரும்பாலும் சந்தோசத்தை கொடுப்பது அவர்கள் மனது சந்தோசமாக இருக்கும் போதுதான். அந்த சந்தோசம் என்பது அவர்கள் நினைக்கும் நினைப்பை பொறுத்துதான். ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அந்த காரியத்தில் வெற்றி கிட்டுவது போல் நினைக்க வேண்டும். வெற்றி அடைவது போல் உங்கள் மனத்திரையில் காண வேண்டும். வெற்றி அடைவதை போன்று மனதில் உருவாக படுத்தி பார்க்கும்போது தோல்வி அடைந்துவிடுவோம் என்ற எண்ணங்கள் உருவாகுவதற்கு அங்கு வாய்ப்பு இல்லை. வெற்றியடைந்து விடுவோம் என்று உங்கள் மனத்தால் நினைக்கும் போது அந்த காரியம் வெற்றி அடைந்து விடுவதர்க்குண்டான அணைத்து வழிகளையும் உங்கள் மனது ஏற்படுத்தி கொடுத்து விடும். உங்கள் மனதை சந்தோசமாக வைத்திருப்பதற்கு இன்னும் நிறைய வழிகள் உள்ளன. ஒரு நாளை துவக்கும் போது உங்கள் மனதில் சந்தோசமான நிகழ்சிகளை மட்டும் நிரப்பி வையுங்கள். அப்படி செய்யும் போது அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். அந்த உற்சாகம் அன்று முழுவதும் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றியடைய உதவுகிறது. மற்றவர்களிடம் பேசும்போது சந்தோசமான ஆக்க பூர்வமான (positive speech) விசயங்களை மட்டும் பேசுங்கள். அந்த இடத்தில ஒரு மகிழ்சிகரமான சூழ்நிலை உருவாகுவதற்கு காரணமாக இருங்கள். அப்போது மற்றவர்களால் நீங்கள் வெகு சுலபமாக கவரப்பட்டுவிடுவீர்கள். உங்கள் மனத்திரையில் உங்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்சிகரமான நிகழ்சிகளை படங்களாக மாட்டி வையுங்கள். அவை தந்த மகிழ்சிகரமான நினைவுகளை அடிக்கடி நினைவு கூர்ந்து உங்கள் காரியங்களில் செயல் படுங்கள். வெற்றியும் கிட்டும். மன அமைதியும் கிட்டும். உங்களுடைய அன்றாட வேலைகளை போல மனதில் அடிக்கடி சந்தோசமான நிகழ்சிகளை நினைப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அடிக்கடி உங்கள் மனதில் சந்தோசமான நிகழ்சிகளை செலுத்தி கொண்டே இருந்தால் உங்களுக்கு மன அமைதியும் கிட்டும் அதன் விளைவாக உங்களுடைய காரியத்தில் வெற்றியும் கிட்டும். ஒரு காரியம் நடக்காது அல்லது தோல்விதான் என்ற நினைவு வரும்போது உடனடியாக அதற்க்கு மாற்று மருந்தாக நாம் வெற்றியடைய போகிறோம் நமக்கு சாதகமாக அந்த காரியம் நடக்கும் என்று எண்ணுங்கள். உடனே அந்த தோல்வி எண்ணங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். உங்கள் காரியமும் நிச்சயமாக வெற்றி அடையும். எந்த சக்தியாலும் உங்களை தோல்வி அடைய செய்ய முடியாது என்று அடிக்கடி எண்ணி கொண்டே இருங்கள். உங்களையும் அறியாது உங்கள் மனது எப்போதும் சந்தோசமாகவே இருக்கும். என்னதான் நம்முடைய மனதை சந்தோசமாக வைத்துகொள்ள நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய மனித அங்கமாகும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று கூறினார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காது. தியானம் என்னும் அற்புத கலையினால் நம்முடைய மனதை நிலையான ஒரு இடத்தில நிறுத்தி மனதை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கலாம் ... Relaxplzz |
Posted: 03 Feb 2015 11:07 PM PST |
Posted: 03 Feb 2015 11:04 PM PST திருமணத்திற்கு முன்பே தாயை இழந்தவன், தன் மகளை கைகளில் ஏந்தும்போது, "என் அம்மாவா நீங்க!" என்றவாறே கொஞ்சுவது அழகோ அழகு!!! # மகளெனும் தேவதை # ![]() # மகளெனும் தேவதை # |
Posted: 03 Feb 2015 11:01 PM PST ஒரு பையன் தன்னோட காதலிக்கு Call பண்ணுறான்.அப்போ அந்த பொண்னோட அப்பா போனை எடுக்கிறார்.பிறகு அந்த பையன் எப்படி அவர்கிட்ட சமாளிக்கிறான்னு பாருங்க. UNCLE : hellooo....யாருங்க பேசுறது? BOY : சார்,நான் CITY BANK'ல இருந்து branch manager அழகேசன் பேசுறேன். UNCLE : சொல்லுங்க சார்.என்ன விசயம்? BOY : சார்,உங்க பொண்ணு காயத்ரி ஏதோ லோன் வேணும்னு கேட்டிருந்தாங்க.நாங்க லோன் தரலாம்னு இருக்கோம்.So,உங்க பொண்ணுகிட்ட சில Details கேக்கணும்.அவங்கள கொஞ்சம் கூப்பிடுங்க சார். UNCLE : ஓ....அப்படியா சார்.ஒரு நிமிசம் லைன்ல இருங்க சார்.இப்ப என் பொண்ணு வருவா. GIRL : Hello,நான் காயத்ரி பேசுறேன்.இப்ப சொல்லுங்க. BOY : ஏய்.... அம்முகுட்டி,நான் தான் விஷ்வா பேசுறேன்.உங்க அப்பன் சொட்ட தலையன் போனை எடுத்துட்டான்.அதான் பேங்க் மேனேஜர்னு சொன்னேன்.லிங்கா படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டேன்.நீ உடனே கிளம்பி ஆல்பட் தியேட்டர்க்கு வாடா செல்லம். GIRL : ஓகே சார்.நான் இப்பவே உங்க ஆபிசுக்கு வாறேன் சார்.நீங்க அங்கயே வெயிட் பண்ணுங்க.அஞ்சு நிமிசத்துல நான் வந்திடுவேன். UNCLE : சீக்கிறம் கிளம்பி போமா.அவர ரெம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிடாதே. GIRL : ஓகே டாடி.இதோ கிளம்பிட்டேன். #நீதி லவ் பன்றதுக்கு இவ்ளோ பித்தலாட்டம் பன்னவேண்டி இருக்கு. ![]() குசும்பு... 2 |
Posted: 03 Feb 2015 10:48 PM PST ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் ? ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஐந்து நற்குணங்கள், இந்த குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்ககளை ஏற்றுவதன் மூலம் உறுதி அளிப்பதாக அர்த்தம்! என்ன இது, குத்துவிளக்குக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள். இதற்கு விளக்கம் உண்டு முதலில் இந்த குத்துவிளக்கின் பாகங்களைப்பற்றி பார்ப்போம். குத்துவிளக்கின் தாமரைப்போன்ற பீடம் – பிரம்மாவையும் குத்துவிளக்கின் நடுத்தண்டு – விஷ்ணுவையும் நெய் எறியும் அகல் – சிவனையும் திரி – தியாகம் தீபம் – திருமகளையும் சுடர் – கலைமகளையும் குறிக்கிறது குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும், பெண்ணுக்கு வேண் டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிப்பதாகும். அதனால்தான் ஒரு பெண் திருமணமாகி முதல் முறையாக தனது கணவன் வீட்டிற்கு அதாவது புகுந்த வீட்டிற்கு வரும்போது முதல் வேலையாக அப்பெண்ணைக் குத்துவிளக்கை ஏற்றச் சொல்லி, அந்த குத்து விளக்கில் ஏற்றப்பட்ட தீபம் மூலமாக வீடுமுழுக்க ஒளிபரவச் செய்கின்றனர். Relaxplzz ![]() "தெரிந்து கொள்வோம்" - 2 |
Posted: 03 Feb 2015 10:38 PM PST விமானத்தில் விமானியின் அறை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டுமா அப்போ இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..! http://www.gillesvidal.com/blogpano/cockpit1.htm ![]() சும்மா... சும்மா... 2 |
Posted: 03 Feb 2015 10:32 PM PST |
Posted: 03 Feb 2015 10:10 PM PST தகவல் துணுக்குகள் 01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ 02. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை 03. உலகில் வறுமையான நாடு - ருவாண்டா 04. விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து 05. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4 06. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ 07. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204 08. உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு – பனாமா 09. உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத் 10. மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம் 11. 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - வாழசவா 12. உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே (தென்அமெரிக்கா ) 13. பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா 14. சத்தில்லாத உணவு - நீர் 15. கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை 16. பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ 17. அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன் 18. உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு 19. சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட் 20. கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி Relaxplzz ![]() தகவல் துணுக்குகள் |
Posted: 03 Feb 2015 10:02 PM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment