Relax Please: FB page daily Posts |
- 'பெரியவர்களின் உலகத்துக்கும் குழந்தைகளின் உலகத்துக்கும் என்ன வித்தியாசம்?'' 'சீ...
- ஒரு முக்கிய தகவல் வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !! //பகிருங்கள் நண்பர்களே/...
- :) Relaxplzz
- ஒரு பியூட்டி பார்லரின் வாசலில்.. இருந்த வாசகம்..!!" . . . எங்கள் கடையில் இருந்து...
- பள்ளி மரம் நடுவிழாவில் மரம் நடப்பட்டது, கடந்த ஆண்டு நடப்பட்ட அதே இடத்தில்..!!
- எது different- ஆ இருக்கு சொல்லுங்க..
- அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- பேச்சுலர் டூ குடும்பஸ்தன்.. 1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9...
- இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த அறிவு இருக்கிறதா..??? கனரக கொதிகலன்...
- எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாத நேசத்தை தர குழந்தைகளால் மட்டுமே முடியும்.. கு...
- இரவு நேரத்தில் நம் தாய் நதியான தாமிரபரணி நதி.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :( Relaxplzz
- டேய்! வாடா எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கு, பாத்துட்டு வரலாம். வேணாம்டா, அப்பா கூட...
- தெரியாத உண்மை உறவினர் ஒருவர் குடும்பத்துடன் இன்று எங்களது வீட்டிற்கு வந்திருந்த...
- புற்றுநோயாளிகளுக்கு விக் செய்ய பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி மாணவிகள் 200 பேர் தலைமுட...
- வாழை இலையில் சூடாக வைத்து தரும் அல்வா பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :P Relaxplzz
- பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா? பொண்ணு: உன் இஷ்டம் பையன்: சரவணபவ...
- வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ...
- அய்யய்யோ அடுத்து என்னை கூப்பிடுறாங்களே ! ஹோம் ஒர்க்கே செய்யலியே இன்னிக்கு...
- ஒரு பறவையின் வளர்ச்சி நிலையை விளக்கும் படம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- கல்லறை வரை சில்லறை தேவை
- கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P டாக்டர்: "இது கொஞ்சம் சிக்கலான கேஸ்".. நோயாளி:"எத...
- தந்தை என்பவர் யார்? குழந்தைகளுக்கு! நீ விழுவதற்கு முன்பு உன்னைத் தாங்கிப் பிடிக...
Posted: 02 Feb 2015 09:10 AM PST 'பெரியவர்களின் உலகத்துக்கும் குழந்தைகளின் உலகத்துக்கும் என்ன வித்தியாசம்?'' 'சீனக் கதை இது. ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், 'அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?' அம்மா சொன்னாள், 'எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!' அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை 'நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?' என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன. ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் 'நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்' என்றான். ஆசிரியை கோபமாக, 'உனக்குக் கேள்வி புரியவில்லை' என்றார். சிறுவனோ, 'டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை' என்றான்!'' :) :) #வாழ்தல்_இனிது Relaxplzz |
Posted: 02 Feb 2015 09:00 AM PST ஒரு முக்கிய தகவல் வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !! //பகிருங்கள் நண்பர்களே// வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.... www.facebook.com/mylanchijobs www.careerbuilder.co.in www.clickjobs.com www.placementpoint.com www.careerpointplacement.com www.glassdoor.co.in www.indtherightjob.com www.employmentguide.com www.JOBSTREET.com www.JOBSDB.COM www.AE.TIMESJOBS.COM www.NAUKRIGULF.COM www.NAUKRI.COM www.GULFTALENT.COM www.BAYAT.COM www.MONSTER.COM www.VELAI.NET www.CAREESMA.COM www.SHINE.COM www.fresherslive.com www.jobsahead.com www.BABAJOBS.com www.WISDOM.COM www.indeed.co.in www.sarkarinaukriblog.com www.jobsindubai.com www.jobswitch.in www.jobs.oneindia.com www.freshersworld.com www.freejobalert.com www.recruitmentnews.in www.firstnaukri.com www.freshnaukri.com www.mysarkarinaukri.com www.freshindiajobs.com www.freshersopenings.in www.freshersrecruitment.in www.chennaifreshersjobs.com அரசு வேலைகள் பற்றி அறிந்துகொள்ள:: www.govtjobs.allindiajobs.in www.timesjobs.com www.naukri.com www.tngovernmentjobs.in www.sarkariexam.co.in www.govtjobs.net.in www.indgovtjobs.in இந்த பதிவை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்... Relaxplzz ![]() |
Posted: 02 Feb 2015 08:55 AM PST |
Posted: 02 Feb 2015 08:50 AM PST ஒரு பியூட்டி பார்லரின் வாசலில்.. இருந்த வாசகம்..!!" . . . எங்கள் கடையில் இருந்து செல்லும் அழகிய பெண்ணை பார்த்து.. கண்ணடிக்காதீர்..! . . . . ஒரு வேளை அது உங்கள் பாட்டியாக கூட இருக்கலாம்..!!", :P :P Relaxplzz |
Posted: 02 Feb 2015 08:45 AM PST |
Posted: 02 Feb 2015 08:40 AM PST |
Posted: 02 Feb 2015 08:35 AM PST |
Posted: 02 Feb 2015 08:30 AM PST |
Posted: 02 Feb 2015 08:30 AM PST |
Posted: 02 Feb 2015 08:20 AM PST |
Posted: 02 Feb 2015 08:10 AM PST பேச்சுலர் டூ குடும்பஸ்தன்.. 1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள். 2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப்பட்டிருக்கும். 3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லி இருப்பீர்கள். இப்ப மனைவி கேட்கற ஒரு கேள்விக்கு குறைந்த பட்சம் நான்கு பதிலேனும் சொல்வீர்கள். 4. நண்பர்களுடன் செலவழித்த பல மணி நேரம் இனி சிலமணி நேரங்களாகக் குறையும். 5. எங்க டா போறேன்னு அம்மா கேட்டப்ப, வந்து சொல்லறேன்னு சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது. 6. ஒட்டிக் கொண்டே இருந்த உடன் பிறப்புகள் சற்று தூரம் சென்றதாய் உணர்வீர்கள். 7. அடிக்கடி கைபேசியை வீட்டில் மறந்து விட்டுச் செல்வீர்கள். 8. நான் வருகிறேன் என்று சொல்லாமல், நான் வரட்டுமா? என்று உங்கள் வீட்டுக்கு வர உங்கள் தந்தையே அனுமதி கேட்கும் நிலைமை வந்திருக்கும். 9. எல்லாப் பக்கமும் பிரச்சனை என்ற போதும் அலுவலக வேலைகள் தடையில்லாமல் நடந்திருக்கும். இப்ப காலைல காபி போடறப்ப வந்த சண்டைக்கே வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பீர்கள். 10. திருமணத்திற்கு பின், இழப்புகள் ஆண்களுக்கும் தான் என்றுச் சொன்னால் இங்கு யாரும் நம்பப்போவதில்லை என்பதை உங்கள் மனம் அடிக்கடி உங்களிடம் சொல்லிச் செல்லும். :D :D Relaxplzz |
Posted: 02 Feb 2015 08:00 AM PST இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த அறிவு இருக்கிறதா..??? கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் அப்போதைய முதல்வர் காமராஜர் . மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர். பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர். ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் "காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?", அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள். "ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க" என்றார். என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது. அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் "பெல்" என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது. காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு. அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார், "பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை". (y) (y) Relaxplzz ![]() |
Posted: 02 Feb 2015 07:50 AM PST |
Posted: 02 Feb 2015 07:40 AM PST |
Posted: 02 Feb 2015 07:30 AM PST |
Posted: 02 Feb 2015 07:20 AM PST |
Posted: 02 Feb 2015 07:10 AM PST டேய்! வாடா எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கு, பாத்துட்டு வரலாம். வேணாம்டா, அப்பா கூட இருக்காரு, நீ பாத்துட்டு வந்து சொல்லு.. ஒரு சப்ஜெக்டுல பெயில்னா எனக்கு குட்மார்னிங் சொல்லு, ரெண்டுல பெயில்னா எங்க அப்பாவுக்கும் குட்மானிங் சொல்லு , நான் புரிஞ்சுக்குறேன். சரிடா - - - - - - - - - - அலோ . . . சொல்லுடா. . உன்னோட குடும்பத்துக்கே குட்மானிங்டா !!! :P :P Relaxplzz |
Posted: 02 Feb 2015 07:00 AM PST தெரியாத உண்மை உறவினர் ஒருவர் குடும்பத்துடன் இன்று எங்களது வீட்டிற்கு வந்திருந்தார், அவர் விரைவுப்பேருந்தொன்றில் ஓட்டுனராவார், பரஸ்பர நலம் விசாரிப்பு, மதிய உணவிற்குப் பிறகு எங்கள் பேச்சு பேருந்து பற்றியதாக இருந்தது, ஆம்னிபஸ் சர்வீஸ் பற்றியும்,அதன் நேரம் தவறாமை, உணவகங்கள் குறித்தும் பெருமையாக கூறிக்கொண்டேயிருந்தேன், ஏன் அரசுப்பேருந்தை இவ்வளவு கேவலமாக வைத்துள்ளிர்கள், பயணிகளிடமும் நீங்கள் கனிவாக இருப்பதில்லை, நீங்கள் நிறுத்தும் உணவகங்களில் கையூட்டு வாங்குகிறீர்கள், அவர்கள் தரமில்லா உணவை வழங்கிவிட்டு இரு மடங்காக எங்களிடம் பணம் வசூலிக்கின்றனர், கழிவறைகள் கூட மோசமான நிலையிலுள்ளது, இவ்வாறு கூறிக்கொண்டேயிருக்கையில் எனது உறவினர் எந்தவொரு சலனத்தைக் காட்டாது புன்னகையுடன் தன் ஆதங்கத்தை ஆணித்தரமாக விவரிக்கத் தொடங்கினார்.... பேருந்தில் ஏறியவுடன் எத்தனை மணிக்கு போய்ச்சேருவோம் என்று தான் பயணிகள் கேட்கிறார்கள், பேருந்து தரமாக இல்லையென்றாலும், வேகம் குறைந்தாலும், நாங்கள் தான் காரணம் என்றே நினைக்கின்றனர். வேகத்தை பொறுத்தவரை டீசல் மைலேஜ் என்பது எங்களுக்கு நிர்வாகத்தினரால் கொடுக்கப்பட்ட டார்கெட்டுக்குள் வாகனத்தை ஓட்டியாக வேண்டும், நிறைய புஷ்பேக் இருக்கைகள் வேலை செய்வதுமில்லை, நிர்வாகச்சீர்கேடுகளால் பராமரிப்பு கிடையாது, பயணிகள் யாரும் இதற்கு போராடவோ அல்லது நீதிமன்றத்தை அணுகவோ தயாரில்லை, நிறுத்தம் வந்தவுடன் இறங்கிச்செல்லும் பயணிகள் எங்களை ஏளனம் செய்வதையும் நாங்கள் பொறுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.... சில சமயங்களில் பணிமனை திரும்பியவுடன் வக்கில் நோட்டிசோ, அல்லது மெமோவோ காத்துக்கொண்டிருக்கும், ஏதாவது ஒரு பயணி உங்கள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரால் அசவுகிரியம் ஏற்பட்டது, வேகமில்லை, தூக்கி அடித்து பேருந்தை இயக்குகிறார்கள் என ஓலை அனுப்பியிருப்பார்.... உணவகங்களில் நாங்கள் மாபெரும் தவறு செய்கிறோம் என்பது முற்றிலும் தவறான தகவல், ஒவ்வொரு உணவகத்திற்கும் இத்தனை பேருந்துக்கள் என நிர்வாகத்தால் பிரித்து விடப்பட்டு மாதந்தோறும் ஒரு பேருந்துக்கு இவ்வளவு என லஞ்சம் பெறப்படுகிறது, நாங்கள் அந்த உணவகத்தில் நிறுத்தி உணவகங்களின் ஒப்புகைச்சீட்டை வாங்கி எங்கள் பணிமனையில் சமர்ப்பிக்க வேண்டும், நாங்கள் குறிப்பிட்ட தரமில்லா உணவகத்தில் நிற்கவில்லை என்றால் மூன்று நாட்களுக்கு டூட்டி வழங்கப்படமாட்டாது, இதையெல்லாம் யாரும் தட்டிக் கேட்பதில்லை, தொழிலாளர்களான நாங்கள் இப்பழியையும் சுமக்கிறோம், தொழிலாளர் யூனியன் என்று கட்சிப்பாகுபாடுகள், எங்கள் சம்பளம் உள்ளிட்ட பலனுக்கு உள்ளுக்குள்ளேயே சூழ்ச்சிகள், இத்தனையும் தாண்டி கண் விழித்து வேலை செய்து ஒரு வித நெருக்கடியில் வாழ்ந்து வருகிறோம் அரசியல்வாதிகள் எங்கள் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும், ஒரு நாளைக்காவது மந்திரிகள் பயணம் செய்து பார்க்க வேண்டும், அப்போது புரியும் பேருந்துகளின் தரமும் எங்களின் கஷ்டமும்.... பொது மக்களே எதெற்கெல்லாமோ பொங்கும் நீங்கள் பேருந்து தரம், சாலை, கூடுதல் வழித்தடம் போன்று பிரச்சினைகளுக்கு போராடுங்கள், அதை விட்டுவிட்டு எங்களை குற்றம் சொல்வதில் மட்டும் குறியாக இருக்காதிர்கள்.... நீண்ட பெரு மூச்சுடன் கூறி முடித்தார், என்ன செய்யப்போவதாக ஐடியா பொது மக்களே.... - சுபா ஆனந்தி Relaxplzz ![]() |
Posted: 02 Feb 2015 06:50 AM PST |
Posted: 02 Feb 2015 06:40 AM PST |
Posted: 02 Feb 2015 06:30 AM PST |
Posted: 02 Feb 2015 06:20 AM PST |
Posted: 02 Feb 2015 06:10 AM PST பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா? பொண்ணு: உன் இஷ்டம் பையன்: சரவணபவன்? பொண்ணு: போன மாசம் அங்கதானே சாப்பிட்டோம்...? பையன்: அப்போ செட்டிநாடு...? பொண்ணு: எனக்கு புடிக்கல.. காரமா இருக்கும் பையன்: ம்ம் கேஎஃப்சி....? பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்.. பையன்: அப்போ வேற எங்க போலாம்னு நீயே சொல்லு பொண்ணு: உன் இஷ்டம்... . . பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற எங்கயாவது போலாமா? பொண்ணு: உன் இஷ்டம்... பையன்: படத்துக்கு போலாமா....? பொண்ணு: இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு... பையன்: அப்போ ஏதாச்சும் மாலுக்கு போலாமா? பொண்ணு: வேணாம்... பையன்: காஃபி ஷாப்....? பொண்ணு: நான் டயட்ல இருக்கேன்... பையன்: அப்போ வேற என்னதான் செய்யறது....? பொண்ணு: நீயே சொல்லு... . . பையன்: சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்.... பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல போய் விட்டுட்டு போ.. பையன்: ஓ... நான் இன்னிக்கு பைக் எடுத்துட்டு வரல... பஸ்லதான் போகனும் பொண்ணு: நோ பஸ்ல வேணாம். ட்ரெஸ் அழுக்காகிடும் பையன்: அப்போ ஆட்டோ..? பொண்ணு: வேணாம், பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ? பையன்: அப்போ நடந்து போகலாம்.. பொண்ணு: என்னால முடியாது, எனக்கு பசிக்குது.... பையன்: அப்போ சாப்பிட்டே போவோம்? பொண்ணு: உன் இஷ்டம்... பையன்:...... இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சுபார்க்கவே முடியல.... இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம............. ;-) ;-) Relaxplzz |
Posted: 02 Feb 2015 06:00 AM PST வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? 1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். 2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும். 3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும். 4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும். 5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும் 6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும். 7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். 8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். 9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும். 10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். 11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும். 12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும். 13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும். 14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும். 15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும். 16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். 17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும். 18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும். 19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். 20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. 21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. 22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். 23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். 24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும். 25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். 26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும். 27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். 28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும். 29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும். 30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும். 31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும். 32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம். 33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும். 34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது. 35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும். 36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். 37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும். 38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும். 39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும். 40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும். 41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும். 42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும். 43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும். 44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும் 45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும். 46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும். 47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. 48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும். 49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும். 50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும். Relaxplzz ![]() |
Posted: 02 Feb 2015 05:50 AM PST |
Posted: 02 Feb 2015 05:40 AM PST |
Posted: 02 Feb 2015 05:30 AM PST |
Posted: 02 Feb 2015 05:20 AM PST |
Posted: 02 Feb 2015 05:10 AM PST கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P டாக்டர்: "இது கொஞ்சம் சிக்கலான கேஸ்".. நோயாளி:"எதனால அப்படி சொல்லுரீங்க டாக்டர்" ? டாக்டர் : "நான் பரிட்சையில பெயிலான சப்ஜக்ட்லயிருந்து உங்களுக்கு நோய் வந்திருக்கு"!. #### பல் எப்படி விழுந்துச்சி? அத யார்கிட்டையாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லிருக்கா #### டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய? #### அவன் : எண்டா உன் மனைவி இறந்ததுக்கு நீ அழாம சும்மாவே உக்காந்திருக்கே... இவன் : எனக்கு அழுகை வர மாட்டேங்குதேடா... என்ன பண்ண ? அவன் : நோ ப்ராப்ளம்... ஒரு நிமிசம், அவங்க திரும்பி வந்துட்டதா நெனச்சு பாரு... #### என்னதான் 'மண்டை' வெல்லம்னாலும், அதை உடைச்சு பார்த்தா உள்ளே மூளை இருக்காது!" #### புலியை பிடிக்க மூன்று வழிகள் : நியூட்டன் : முதலில் புலி உன்னை புடிக்கட்டும் அப்புறம் நீ புலியை புடிச்சுக்கோ. ஐன்ஸ்டீன்: புலி சோர்வடையும் வரை துரத்து அப்புறம் புலியை புடிச்சுக்கோ. போலீஸ்: ஒரு பூனைய புடிச்சி அது புலின்னு ஒத்துக்கர வரைக்கும் அடி. #### டாக்டர் - ஏங்க நொண்டி நொண்டி வரீங்க? நோயாளி - கால்ல அடி பட்டுடுங்க டாக்டர் டாக்டர் - கூட உங்க மனைவிய கூப்டிக்கிட்டு வந்தா உதவியா இருக்கும்ல? டாக்டர் - கால் வழியே தங்க முடியல இதுல தல வலி வேறைய? #### மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி தடவி கொடுக்குறீங்க? டாக்டர்தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார். #### மின்னல பார்த்தா கண்ணு போய்டும்..., பார்க்கலானா மின்னல்போய்டும்....! பிகர பார்த்தா லைப் போய்டும்.., பார்க்கலானா பிகரே போய்விடும் …!!! என்ன கொடுமைங்க..? #### மனைவி: என்னங்க இது ஒரு வாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே.. எதுக்கு? கணவன்: நீ தானே "டெய்லி காலண்டர்" வாங்கிட்டு வாங்கனு சொன்னே..! :P :P Relaxplzz |
Posted: 02 Feb 2015 05:00 AM PST தந்தை என்பவர் யார்? குழந்தைகளுக்கு! நீ விழுவதற்கு முன்பு உன்னைத் தாங்கிப் பிடிக்க எண்ணுவார். ஆனால் விழுந்தபின்பு தூக்கி தட்டிகொடுத்து மீண்டும் அதை முயற்சிக்கச் செய்வார்.!! நீ தவறுகள் ஏதும் செய்யக்கூடாது என எண்ணுவார்.ஆனால் அவ்வாறு தவறுகள் செய்யும் போது நீயே அதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க உனக்கு அனுமதி தருவார். உனக்கு காயம் ஏற்பட்டாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மௌனமாய் வருந்துவார்.!! நீ அழும்போது அவர் உன்னைத்தழுவி ஆறுதல் தருவார். விதிகளை மீறும் போது அதைக் கண்டிப்பார்.!! நீ வெற்றி பெறும்போது உளம் பூரிப்பார். நீ தோல்வி அடையும்போதும் உன்மீதான நம்பிக்கை இழக்கமாட்டார்.!! "அன்னை கூறும் அறிவுரை அன்பினாலானது! தந்தையின் கண்டிப்போ பாசத்தாலானது.!! - கணபதி சுப்பிரமணியன்- Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment