Friday, 20 February 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


தமிழ் மொழிக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரத்தை நமது வெற்றியாகுவோம் !! நேற்று முதன்...

Posted: 19 Feb 2015 07:50 PM PST

தமிழ் மொழிக்கு கிடைத்த
மாபெரும்
அங்கீகாரத்தை நமது வெற்றியாகுவோம் !!
நேற்று முதன் முறையாக இந்திய
ட்விட்டர் வலைத்தளத்தில்
#தமிழ்வாழ்க என்ற
குறியீடு இந்திய அளவில் முதல்
நிலை பெற்றது. ட்விட்டர்
வலைத்தளம் ஆங்கிலம் அல்லாத
பிற மொழிக்களுக்கும்
இடமளிக்க தொடங்கிய
நிலையில் தமிழ் ஆர்வலர்களின்
அயராத முயற்சியால் தமிழ்
மொழி முதல்
இடத்தை வெகு விரைவாக
பெற்றுள்ளது. 'ஜெய்கிந்த்',
உலகக் கோப்பை கிரிக்கெட்
போன்ற
சொற்களை பின்னுக்கு தள்ளியது 'தமிழ்வாழ்க'
என்ற முழக்கம். இந்தக்
குறியீட்டை பார்த்த பிற
இந்தியர்கள் தமிழ் மொழியின்
பெருமையை உணரத்
தொடங்கியுள்ளனர். தமிழ்
மொழி இந்தியாவின்
தொன்மை மொழி என்ற
செய்தியும்
அவர்களை சென்று சேர்ந்துள்ளது.
இதுவே இந்திய அரசின்
கவனத்தையும் நாம் ஈர்க்க
வேண்டிய சரியான தருணமாகும்.
இந்தியாவில்
இந்திக்கு மட்டுமே ஆட்சி மொழி அதிகாரம்
கொடுத்து தமிழ்
மொழியை இந்திய
அரசு புறக்கணித்து வருகிறது.
இந்த நிலையை மாற்ற நாம்
அனைவரும் சமூக
வலைத்தளங்களில் இன்னும்
அதிகமாக குரல் எழுப்ப
வேண்டும். தமிழ் மொழியை 2015
ஆம் ஆண்டில்
ஆட்சி மொழியாக்குவோம்
என்று உறுதியேற்று நாம்
பணிசெய்ய வேண்டும்.
அதற்கு நாம் இந்திய
அரசுக்கு அழுத்தம் கொடுக்க
வேண்டும்.
நாம் அனைவரும்
நமது பதிவுகளில் #தமிழ்வாழ்க
என்ற
குறியீட்டை தொடர்ந்து பயன்படுத்தி தமிழ்
மொழியை ஆட்சி மொழியாக்கும்
கோரிக்கையை வலுப்படுத்துவோம
். ஒவ்வொரு முறையும்
இக்குறியீட்டை நாம்
பயன்படுத்தும்
போது #தமிழ்வாழ்க என்ற
குறியீடு இந்திய அளவில்
முன்னுக்கு நிற்கும்.
அத்தோடு நாம்
தமிழை ஆட்சி மொழியாக்குக
என்ற முழக்கத்தையும்
முன்வைக்க வேண்டும்.
இது விவாதப் பொருளாக மாறும்
நிலையில் தான் இந்திய அரசின்
கவனத்தை அது ஈர்க்கும்.
நமது இனம் வாழ வேண்டும்
என்றால் நமது மொழி வாழ
வேண்டும். நமது மொழி வாழ
வேண்டும் என்றால் தமிழ்
ஆட்சி மொழியாக வேண்டும்.
இதை கருத்தில்
கொண்டு வரும்காலத்தில்
விழிப்புடன் செயல்படுவோம்.
வென்றெடுப்போம் தமிழ்
மொழியுரிமையை. #தமிழ்வாழ்க
- இராச்குமார் பழனிசாமி & கிரிஷ்
சாம


வாழ்க்கையின் பயனுள்ள 10 குறிப்புகள். 1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசிய...

Posted: 19 Feb 2015 05:22 PM PST

வாழ்க்கையின் பயனுள்ள 10 குறிப்புகள்.
1. பேசும்முன் கேளுங்கள்,
எழுதும்
முன் யோசியுங்கள்,
செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான்
பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவ
ரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும்
மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும்
தலையசைக்கும் நண்பன்
எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம்
கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக்
கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம்.
அதுதான் என்னை
மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள்
இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய
தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான
தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான
முடிவுக்கு வரும்
ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில்
ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில்
ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில்
வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள்
இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர்
இறந்துவிட்டார்.

0 comments:

Post a Comment