##புறநானுற்று வீரன் முத்துகுமாருக்கு வீரவணக்கம்##
முத்துகுமாரின் மரண வாக்குமூலத்தை வாங்கிய காவல்துறை அதிகாரி,
இவ்வளவு அறிவுள்ள நீ ஏன்பா இந்த முடிவை எடுத்தாய் ,தவிர்த்திருக்கலாமே என்க,
முத்துக்குமாரோ இல்லை ஐயா என்னை விட அறிவாளிகள் எல்லாம் அங்கே கொல்லப்படுகிறார்கள்,
அதை தடுக்கனும் என்றுதான் தீக்குளித்தேன் என்று கூறியுள்ளார்,
இதன் மூலம் இவர் உணர்த்தியது என்ன?தன்னிலிருந்து ஒரு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்துங்கள் என்று,
நான் உயிராயுதம் ஏந்தியுள்ளேன் நீங்க நகலாயுதத்தை ஏந்துங்கள் என்று,
ஒரு தாளை கையில் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்,
இது சரியா? மரபா என்று பார்க்கும் போது மதுரை காஞ்சி இலக்கியங்களில்,
தன்னுயிர் அஞ்சான் ஒருவன் தான் பிற இன்னுயிர்க்கு அஞ்சுவான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது,
தன்னுயிர் போவதைப் பற்றி கவலைப் படாமல் பிற உயிர்களுக்காக கவலைப்பட்டு தன்னுயிரை கொடுப்பான் என்பதே பொருள்,
இப்படிப் பட்டவன் வேறு என்னென்னச் செய்வான் என்றுப் பார்த்தால் தொல்காப்பியத்திலும்,புறநானூற்றுச் செய்திகளிலும் நூழிலாட்டு என்ற துறை உள்ளது,
அந்த நூழிலாட்டுத் துறை என்பது ஒரு போர்ப்படையில் தற்கொலை தாக்குதல் நடத்துவது,
நம்முடைய அரசன் வலிமை இழந்துப் போகிறான், படை பின்வாங்குது, எதிரி படையை ஊடுறுவி அடிக்கனும்,
அதற்க்கு ஒரு வழியை உருவாக்கனும், முடிந்த வரை ஊடுறுவி அவனை கலங்கடிக்கனும் என்ற முடிவை,
ஒருவன் தனி நிலையில் எடுப்பான், எவ்வித உதவியும் இல்லாமல் செய்வான்,யாரிடமும் சொல்ல மாட்டான்,
"நுகம்பட கடந்து நூழிலாட்டு "தன்னுடைய தேர் நுகம் எந்தளவுக்கு போகுமோ அந்தளவுக்குதான் பாதையை உருவாக்குவது,
திரும்பி வர பாதையை உருவாக்க மாட்டான், ஒருவேளை வெற்றிப் பெற்று திரும்பி வரலாம்,
அப்படி வரவில்லை என்றாலும் அவனுக்கு வெற்றி தான்,
இது வேறு எங்கெங்கு உள்ளது என்று பார்க்கையில் நச்சினிக்கினியில் நூழை, நுழைவாயில் என்று உள்ளது,
இந்த நூழை, நுழைவாயில் , நுழையாட்டு, ஆட்டு, போர் ஆட்டு என்ற தமிழ் மரபு வழியை,
முத்துகுமார் தேர்ந்தெடுத்தது,
மிகப்பெரிய போரில் தமிழர்கள் பின்வாங்குகின்றனர், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ,
தமிழ் மரபு வழியில் தன்னுயிரைக் கொடுத்துள்ளனர் இந்த புறநானூற்று வீரர்,
இதை நினைக்கையில் இந்த புறநானூற்று வீரரின் தீரச் செயல்களைக் கண்டு மெய்சிலிர்க்கிறது.
##புறநானூற்று வீரன் முத்துகுமாருக்கு வீரவணக்கம் ##

0 comments:
Post a Comment