Saturday, 3 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எப்புடியெல்லாம் யோசிக்கிறாங்கே. ஷப்பா முடில... . . வெல்கம் 2015

Posted: 03 Jan 2015 05:40 PM PST

எப்புடியெல்லாம்
யோசிக்கிறாங்கே.

ஷப்பா முடில...
.
.
வெல்கம் 2015


Ancient Tamil Civilization: This new paper examines the resemblance between a...

Posted: 03 Jan 2015 04:13 AM PST

Ancient Tamil Civilization:


This new paper examines the resemblance between an inscribed terracotta dish from approximately 100 BCE found in Sulur, near Coimbatore in Tamilnadu, South India and a three-sided tablet found in Harappa from the ancient Indus Civilization.

The Harappan tablet is roughly 2,000 years older.

Since the ancient Indus script is thought to have died out by 1900-1700 BCE, the discovery of a possibly similar inscription deep in south India where Indus culture is not known to have penetrated is a curious anomaly to received opinion.

http://www.harappa.com/arrow/megalithic-inscription.html

http://www.harappa.com/arrow/sulur-megalithic.pdf

http://www.harappa.com/arrow/sulur-figs.pdf

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=570

கோவையில் கிடைத்த சூலூர் மண் தட்டில் காணப்படும் குறியீடுகளும், சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளும் ஒத்ததாய் அமைந்திருப்பது, தமிழ்ப்பண்பாட்டின் நாகரிகம் எவ்வளவு பழமை வாய்ந்தது என்பதை உரக்கத் தெரிவித்துள்ளது. தற்போது அது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சியிலுள்ளது.

http://www.keetru.com/index.php/2010-05-24-14-22-59/06/1283-2011-02-02-02-44-18/10-sp-739/13672-2011-03-20-09-05-58


சிலை :- இயக்குனர் பாலச்சந்தர் அஸ்தியை கரைத்த கையோடு அவருக்கு மயிலாப்பூரில் சிலை...

Posted: 03 Jan 2015 04:13 AM PST

சிலை :-

இயக்குனர் பாலச்சந்தர் அஸ்தியை கரைத்த கையோடு அவருக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வைத்திருக்கிறார்கள். பாலச்சந்தர் நல்ல சினிமா எடுத்தார். ரசித்தோம். கைதட்டினோம் விசில் அடித்தோம். குறிப்பாக அவருக்கு காசு கொடுத்தோம். அவர் வயது முதிர்ச்சியில் மறைந்தார். ஆழந்த இரங்கலை தெரிவித்தோம். அவரை வாழ்த்தி புகழாரம் சூட்டினோம். அத்துடன் முடித்துக் கொண்டோம். அதுவே போதும் கூட.

இன்று கோரிக்கை வைத்து சிலை வைப்பீர்கள். அதன் மீது எவனாவது குடிகாரன் செருப்பை வீசுவான். என் சமுதாயத்து ஆள்மீது செருப்பை வீசியவனை கைது செய் என்று ஆயிரம் போஸ்டர் அவசரமாக அச்சடிக்கப்படும். அதில் வீரவணக்கம் செலுத்துவார்கள். ஆண்டுக்கு ஒரு முறை நினைவேந்தல் என்பீர்கள். சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு குருபூஜையாக மாறும். அதில் கலவரம் வரும்.

போதுமய்யா உங்க சிலை கலாச்சாரம். இன்று பாலச்சந்தர் என்பது பாரதிராஜா வரை நீளும். எங்களுக்கு பாலச்சந்தரை நினைவு படுத்த அவரது படைப்புகள் போதும். உங்களுக்கு சிலை வேண்டுமானால் உங்கள் வீடுகளில் முன் நிறுவிக் கொள்ளுங்கள்.

இப்படிதான் மெரினாவில் சிவாஜி சிலை வாகனங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று இருபது அடி தள்ளிவைக்க நீதிமன்றம் வரை பஞ்சாயத்து போனது.

ஆமாம் சிவாஜியும் தான் என்ன செய்து விட்டார்? எதற்கு அவருக்கும் சிலை? அவரது பேரனை வரை வளர்த்து விடுகிறோம் அதுவே போதும்.

@வெங்கடேசன் பாலகிருஷ்ணன்

Ancient Tamil Civilization: It is very ancient one in Tamilnadu. In Tamil, th...

Posted: 03 Jan 2015 02:53 AM PST

Ancient Tamil Civilization:


It is very ancient one in Tamilnadu. In Tamil, the word "Parai" means to speak or to tell. The parai is an ancient instrument performed in the courts of Sangam. Chola, and Pandiya rulers. The drums were used to announce important messages and orders of the great Tamil Kings. The famous epic silapathigaram talks about the striking rhythm of the Parai (Thappu). The same person beats the Thappu and also dances.

Thappattam (Paraiattam)

In Tamil, the word 'parai' means to 'speak' or to 'tell'.

Thappattam is a musical art form of Tamil Nadu where the folk music and songs are worldwide celebrated and eminent for their unique style and rhythm. The day-to-day life of the people who have a rural base and the various phases of their life are accompanied by folk music. Thappattam is one such art form.

Thappattam is a unique form of folk dance that is performed with the thappu, a drum that is used by the suppressed Dalit class people of Tamil Nadu. Thappattam is supposed to be the most vibrant and attractive form of dance in the state. The rhythm and drumbeats vary and the drums make different sounds during the festivals as well as during burial ceremonies. Thappattam has sincerely gained much attention with the passage of time and it is being used by modern theatre practitioners in social festivals, educational institutions, formative dance, cultural nights, and many other programs.

History of Thappattam

Thappattam was called paraiattam in the ancient Sangam Literature of Tamil Nadu. The word parai refers to the thappu, a drum used in olden days for the declaration and the announcement of the messages of the Chola kings and Pandya kings to the public.

Parai thrived to be one of the percussion instruments which were mainly used for worship through penances. It was declared by both the Saivites (followers of Lord Shiva) and the Vaishnavites (followers of Lord Vishnu) during the Bhakti cult. The famous work of Tamil Literature Silapathigaaram mentions parai and its striking rhythm. Shri Andal, who is considered to be the counterpart of Meera, refers to parai in many stanzas of her literary work Thirupavai.

Thappattam is a form of folk dance which is accompanied by compelling music. Myth has it that among the traditional instruments, the thappu was the first instrument to be developed by the Tamilian. It was used initially by ancient Tamilians for rescuing themselves from animal attacks.

Thappattam has the uniqueness of being a dance form with a person who acts both as the dancer as well as the instrumentalist. These performances are offered during Temple Festivals and other functions. The performances last for many hours when performed in temples. Men wear outfits like dhoti, whereas the women wear sarees, and they have light make-up over their faces. The performers dance in unison in an effortless fashion, changing their movements according to the drumbeats.

A fear of extinction of this art remained because of casteism prevalent amongst the populace. However, thappattam has gained more popularity recently due to Chennai Sangamam cultural festival organized in the Tamil Nadu state capital of Chennai. Artists from numerous parts of the state provide colourful entries that project the traditional dance, culture, and arts of their own region.

Different art forms such as thappattam, poikkal kuthirai aatam, karagattam, puliattam, kalaripayitru, mayilattam, and oilaattam have been performed in beaches, streets, and open parts of the city of Chennai - attracting crowds and spreading the cultural essence. Other events such as martial arts, classical dance, classical music, drama/theatre, and street plays are also performed along with the folk music and dance.

http://www.heritagetown.org/cfolklore.html

தமிழிசைக் கருவி - பறை (தப்பு)

பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். 'பேசு' எனப்பொருள்படும் 'அறை' என்ற சொல்லினின்று 'பறை' தோன்றியது. (நன்னூல் : 458). பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி 'பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம் என வருணிக்கப்படுகிறது."பறை என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி' என முனைவர் வளர்மதி தன்னுடைய "பறை' ஆய்வு நூலில் விளக்குகிறார்.

வரலாறு

தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வந்துள்ளது. பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையர்குடியின் குறயீடாகவும், தொழிலாகவும் அமைந்தது. பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் 'பறை' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என ஐந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. 'பறை' என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது எனத் தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தோற்கருவிகளின் பொதுப் பெயராகப் பறை என்பது வழங்கபட்டுள்ளது. பறை என்ற சொல்லுக்குக் கூறு, சொல் என்ற பொருள்களில் இருக்கின்றன. மலையாளத்தில் பறைதல் என்பது சொல்லுதல் என்ற பொருளில் வழங்கி வருவதை இன்றும காணலாம். தீட்டைப்பறை, தொண்டகச் சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்களில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இவற்றினை மாற்றி மாற்றி அடிப்பதன் மூலம் புதிய மெட்டுக்கள், சொற்கட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனி அடியென வைத்திருக்கின்றார்கள். சப்பரத்தடி, டப்பா அடி, பாடல் அடி, சினிமா அடி, ஜாய்ண்ட் அடி, மருள் அடி, சாமி சாட்டுதல், மாரடித்தல், வாழ்த்து அடி என ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப தாளங்கள் மாறுகின்றன. எனினும் இசைக்கப்படும் இசைக்கருவி ஒன்றுதான்.

அமைப்பு

தப்பு கருவி மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி ஆக்கப்பட்டது. பறையில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு ஆகியன. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும்.

இசைக்கும் முறை

தப்பு கருவியினை இசைக்க இருவிதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றது. இடது கையில் வைத்திருக்கும் குச்சி 'சிம்புக்குச்சி' அல்லது சுண்டுகுச்சி எனப்படும். இது மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும், இக்குச்சியானது ஒன்றே கால் அடி நீளமும் ஒரு செ.மீ. அகலமும் கொண்டது. வலது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சி என்று பெயர். இது பூவரசங்கம்பில் செதுக்கப்பட்டிருக்கும். இந்தக் குச்சி அரை அடி நீளமும், மூன்று செ.மீ சுற்றளவும் கொண்டதாக இருக்கும் இவற்றை அடித்து ஓசை எழுப்பப்படும். சிம்புக்குச்சி நீண்ட தட்டையானதாகவும் அடிகுச்சி குட்டையாக பருத்ததாகவும் அமைந்திருக்கும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டைக்குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்ப்புறத்தில் இருந்து அடிப்பர். இடதுகையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியை பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிப்பர். அடிகுச்சியால் தப்பின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. தப்பினைப் பிடித்துள்ள இடதுகையில் வைத்துள்ள சிம்புகுச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகளாகும்.

குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

சொற்கட்டுகள்

தமிழகத்தின் பண்டைய இசைக்கருவிகள் சொற்கட்டு எனப்படும் மெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தச் சொற்கட்டுகள் பல்வேறு வகைகளில் பெற்ற அனுபவம், முன்மாதிரிகளால் உருவானவை. பறை என்பது 'பேசு' அல்லது 'சொல்' என்ற பொருள் தரும். வாய்மொழி மரபை அடிப்படையாகக் கொண்ட தமிழகப் பண்பாட்டில், பறையடிப்பது தொடர்பான மெட்டுகள் எழுதி வைக்கப்படவில்லை. பறை இசைப்பவர்களின் கூர்ந்த கவனிப்பு, போலச் செய்தல், பயிற்சி, இசையின் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

டன்டனக்கு டனக்குனக்கு
டன் டன் டன் டன்டனக்கு
ரக்கட்ட ரக்கட்ட ரக்கட்ட
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க

என்ற வகையில் பறை இசைப்பதற்கான சொற்கட்டுகள் அமைகின்றன. சொற்கட்டுகள் அடிப்படை அடிகளைத்தான் சுட்டுகின்றனவே தவிர மொத்த மெட்டையும் சுட்டுவதில்லை. அதேநேரம் ஒரு அடிப்படை சொற்கட்டைக் கொண்டு, இசைப்பவர் தனது கற்பனைக்கு ஏற்ப புதிய இசைக்கோலங்களை உருவாக்கலாம்.

விறைப்பேற்றுதல்

பறையானது மாட்டுத்தோலில் செய்யப்படுவதால் இசைக்க ஆரம்பிக்கும் முன் பறையடிப்பவர்கள் பறையைத் தீயில் காட்டுவார்கள். அது தோலில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி, தோலை இறுகச் செய்யும். தோல் உறுதியாகி, அடிக்கும்போது உயர் சுருதியில் நல்ல ஓசையை எழுப்பும்.

பறையாட்டம்

பறையோடு இணைக்கப்பட்ட தோலை இடதுப்பக்க கைக்குள் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும். பிடிக்க எளிதாக இருப்பதால் பறையை கையில் வைத்துக் கொண்டு நிற்கலாம், நடக்கலாம், நடனமும் ஆடலாம். அதிலிருந்துதான் பறையாட்டம் பிறந்தது. பறை இசையில் பல வகை அடிகள் உண்டு. இவ்வாறு அடித்தலால் ஏற்படும் பறை இசைக்கேற்ப நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் என ஆடும் கலை பறையாட்டம் எனப்படுகிறது

பறையின் வகைகள்

பறையின் இசையும், வடிவமும் நுணுக்கமாக வேறுபடுகிறது. அவற்றில் முக்கியமானவை வருமாறு;

அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை.
அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக சிந்தாமணி. 2688).
ஆறெறிப் பறை - வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை.
ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும் (சிலப்பதிகாரம். 12, 40).
உவகைப்பறை - மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவாகர நிகண்டு)
சாப்பறை - சாவில் அடிக்கப்படும் பறை. (திவாகர நிகண்டு)
சாக்காட்டுப் பறை - இறுதிச் சடங்கின் போது இசைக்கும் பறை.
வெட்டியான்பறை - சில விசேடகாலங்களிற் கொட்டும் பறை.
நெய்தற்பறை - நெய்தல் நிலத்துக்குரிய பறை.திருக்குறள்-1115
பம்பை - நெய்தனிலங்கட்குரிய பறை. (திவாகர நிகண்டு).
தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக சிந்தாமணி.40).
மீன்கோட்பறை - நெய்தனிலப் பறை. (இறை. 1, பக். 17.)
மருதநிலப்பறை - மருதநிலத்திற்குரிய பறை.
கல்லவடம் - ஒரு வகைப்பறை
நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங் கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந் தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
கல்லவடமிட்டுத் திசைதொழு தாடியும் (தேவாரம். 576, 6).
குரவைப்பறை - குறிஞ்சிநிலத்துக்குரியது. குறிஞ்சிப்பறை = குறிஞ்சிநிலத்துக்குரிய தொண்டகப் பறை.
தடறு - தொண்டகப் பறை. (அக. நி.)
குறும்பறை - குறும்பறை யசைஇ (புறநானூறு. 67, 9)
கொடுகொட்டி - ஒரு வகைப்பறை
கொடுகொட்டி யாடலும் (சிலப்பதிகாரம். 6, 43), குடமுழவங் கொடு கொட்டி குழலு மோங்க (தேவாரம். 225, 2).
கோட்பறை - செய்திகளை நகரத் தார்க்குத் தெரிவிக்கும் பறை.
தமுக்கு - செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை.
நிசாளம் - ஒருகட் பறை. நிசாளந் துடுமை (சிலப். 3, 27, உரை).
சூசிகம் - ஒருவகைப் பறை. தகுதியெனக் கூறும் நெறி.
தக்கை - அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. (பிங்கல நிகண்டு); (சிலப்பதிகாரம். 3, 26, உரை.)
தடாரி - பம்பையென்னும் பறை. (பிங்கல நிகண்டு)
பறைத்தப்பட்டை, தண்ணம், தம்பட்டம், திடும், திண்டிமம், நாவாய்ப்பறை, திமிலை (சிலப்பதிகாரம். 3, 27, உரை)
தலைப்பறை - யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை.
படலை - வாயகன்ற பறை. (சூடாமணி நிகண்டு)
பண்டாரமேளம் - அரச விளம்பரங் குறிக்கும் பறை.
பன்றிப்பறை - காட்டுப்பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை. (பிங்கல நிகண்டு)
முரசம், வெருப்பறை - போர்ப் பறைகள்.
முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில் (புறநானூறு. 288).
பூசற்றண்ணுமை - பகைவருடன் போர்புரிதற்காக, வீரரை அழைத்தற்குக் கொட்டும் பறை. (நன்னூல்)
முருகியம் - குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல்காப்பியம். பொ. 18, உரை.)
வெறியாட்டுப்பறை - குறிஞ்சிநிலப் பறை.
வீராணம் - ஒருவகைப் பெரிய பறை.
வீராணம் வெற்றிமுரசு (திருப்புகழ். 264).
பஞ்சமாசத்தம் - சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவிதமாகச் சொல்லும் ஐவகைப் பறை.

வாழ்வியல் கூறுகளுடன் பறை

சங்க காலம், சோழ, பாண்டிய அரசர்கள் காலத்தில் பறை இசைக்கப்பட்டது தொடர்பான குறிப்புகள் உள்ளன. அரசர்களது அறிவிப்புகளை மக்களுக்கு முரசு அறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபு.

ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேர வேண்ட,
பெருகிவரும் புனலை அடைக்க,
உழவர் மக்களை அழைக்க,
போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட,
வெற்றி தோல்வியை அறிவிக்க,
வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க,
விதைக்க,
அறுவடை செய்ய,
காடுகளில் விலங்குகளை விரட்ட,
மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க,
இயற்கை வழிபாட்டில்,
கூத்துகளில்,
விழாக்களில்,
இறப்பில்

எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் 'பறை' இணைந்து இயங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்காலத்தில் பறை தலித் மக்களின் இசைக்கருவியாக உள்ளது. பறையர்கள் மற்றும் ஆந்திராவிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் குடியேறிய அருந்ததியர்கள் என்ற இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விசைக்கருவியை இசைக்கிறார்கள். அருந்ததியர்கள் இதை தப்பு என்றழைக்கிறார்கள்.

இசைக்கப்படுமிடங்கள்

கோயில் திருவிழாக்கள், மதச் சடங்குகளின்போது பறை இசைக்கப்படும். இதுதவிர, இறுதி ஊர்வலத்தின் போதும் பறை இசைக்கப்படுகிறது. சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு. இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர், ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவ கோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது.

இன்றைய நிலை

விழாக்கள், நிகழ்ச்சிகளில் பறை முக்கிய இடம்பெற்று வருகிறது. கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல் பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது. ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலையினை பெண்களும் தற்போது ஆடி வருகின்றனர்.


வெங்கடேசன் பாலகிருஷ்ணன் தந்தி என்னும் மந்தி:- தினத்தந்தி நாளிதழ் முகப்பில் வெல...

Posted: 03 Jan 2015 01:04 AM PST

வெங்கடேசன் பாலகிருஷ்ணன்

தந்தி என்னும் மந்தி:-

தினத்தந்தி நாளிதழ் முகப்பில் வெல்க தமிழ் என்றிருக்கும். எனக்கு தமிழை எழுத்து கூட்டி படிக்க டீ கடைகளில் கிடைத்த தினத்தந்தியும் காரணம். அந்த தமிழ் தந்த தந்தி குழுமம்தான் இன்று முகம் நிறைய சேற்றை அப்பிக்கொண்டு நிற்கிறது.

உலக தமிழர்கள் பார்வையில் மிக மோசமான இடத்தை பிடித்திருக்கும் ராஜபக்சேவின் பேட்டி ஒளிப்பரப்பி துரோக நிழலில் இடம் பிடித்துக் கொண்டது தந்தி பரம்பரை. இப்போது எந்த தமிழன் ராஜபக்சேவின் பேட்டி அவசியம் வேண்டும் என்று கடிதம் எழுதி நேயர் விருப்பம் கேட்டான்?

கேவலம் வெற்று விளம்பரத்துக்கும் செய்தி தொலைக்காட்சி சேவையில் டிஆர்பி ஏற்றிக் கொள்வதற்கும் என்னவெல்லாம் செய்ய துணிகிறிர்கள்? இதுதான் தமிழ் சமுதாயத்திற்கு தொண்டாற்றும் வழிகளா? தமிழை வைத்து என்னவெல்லாம் சம்பாதனை செய்தீர்கள். வார இதழ்களும் திருமண மண்டபமும் பொறியியல் கல்லூரிகளும டிவி சேனல்களும் இந்த மொழியை இனத்தையும் வைத்துதானே சேர்த்தீர்கள்?

இதுவெல்லாம் போதவில்லையா? இன்னும் கைக்கூலி பெற எதிரிகளிடமும் கேயேந்துவீர்களா? இன்றைய செய்தி நாளைய வரலாறு. ராஜபக்சே இன்று தந்தியில் பேசியது செய்தி. நாளைய வரலாற்றில் திருப்பி பார்த்தால் துரோகம்.


பல பசங்க குடிக்காம இருக்கிறதுக்கு காரணம் அவங்கில்லை அவங்க அப்பா தான் அவர் ஒழுக்க...

Posted: 03 Jan 2015 12:03 AM PST

பல பசங்க குடிக்காம
இருக்கிறதுக்கு காரணம்
அவங்கில்லை அவங்க
அப்பா தான் அவர்
ஒழுக்கமானவராக இருப்பார்!!

@காளிமுத்து

Posted: 02 Jan 2015 11:24 PM PST


PK என்ற ஹிந்தி திரைப்படம் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றுதான். படம் அப்படி என்ன சொல்...

Posted: 02 Jan 2015 11:01 PM PST

PK என்ற ஹிந்தி திரைப்படம் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றுதான். படம் அப்படி என்ன சொல்கிறது? ஏன் மதவாதிகள் இந்த படத்தை எதிர்கிறார்கள்?
.
நம் உலகை ஆராய்ச்சி செய்ய வரும் ஒரு வேற்றுகிரக வாசிதான் கதாநாயகன். பூமிக்கு வந்தவுடன் தனது கிரகத்துடன் தொடர்பு கொள்ளும் கருவியை களவு கொடுக்கிறான். அதை தேடி அலையும்போது யாரை கேட்டாலும் கடவுளுக்குதான் தெரியும் என்கிறார்கள். அதன் பின் கடவுளையே தேடி அலைய ஆரம்பிக்கிறான். மிதமானது முதல், கொடூரமானது வரை எல்லா பிரார்த்தனைகளும் செய்கிறான். மதங்களை அறிகிறான். மதகுருக்களை அறிகிறான்.
.
பூமியில் கிடைத்த ஒரு நண்பனை ஒரு குண்டுவெடிப்பில் இழக்கிறான். குண்டு வெடிப்பை செய்த அமைப்பு அவர்கள் மதத்துக்காக, அவர்கள் கடவுளை பாதுகாப்பதற்காக இதை செய்ததாக சொல்கிறார்கள்.
.
பிறகு ஒரு மதகுருவிடம் உரையாடும் வாய்ப்பை பெறுகிறான். இறந்து போன தன் நண்பனின் செருப்பை கையில் வைத்துகொண்டே பேசுகிறான். மிகவும் உருக்கமான சிந்திக்கவைக்கும் உரையாடல் இது.
.
அதில் இந்த மதகுருவும் தன் கடவுளை தான்தான் பாதுகாப்பதாக சொல்கிறார். அதற்கு ஹீரோ சொல்லும் பதில்.
.
"இத்தனை பெரிய பிரபஞ்சத்தையும், இத்தனை கோடி நட்சத்திரங்களையும், கிரகங்களையும் படைத்த இறைவனை, ஒரு சின்ன கிரகத்தின், ஒரு ஊரில் உள்ள, ஒரு தெருவில் இருந்துகொண்டு நீ எப்படி காப்பாற்றுவாய்? இப்படித்தான் தன் கடவுளை காப்பாற்றுவதாக சொல்லி ஒருவன் குண்டுவைத்துவிட்டான். அதில் என் நண்பனை இழந்து விட்டேன். இப்போது அவன் செருப்புதான் உள்ளது. இப்படியே போனால் மனிதர்களுக்கு பதில் செருப்புகள் தான் இந்த உலகில் இருக்கும்.
.
கடவுள் மீது நம்பிக்கை வைத்தால் நமக்கு ஆறுதல் கிடைக்கிறது, தைரியம் கிடைக்கிறது. ஆனால் எந்த கடவுளை நம்புவது? எல்லாவற்றையும் படைத்த ஒரே ஒரு சரியான கடவுளை விட்டுவிட்டோம். நீங்கள் தவறான பல கடவுள்களை/மதங்களை உண்டாக்கி விட்டீர்கள். பிறப்பால் நம் உடலில் நாம் எந்த மதம் என்ற முத்திரைகள் கிடையாது. இப்படி தவறான கடவுள்களை/மதங்களை நம்பிக்கொண்டு இருப்பதுதான் மக்களை பிரிக்கிறது. சாகவும் செய்கிறது. இந்த பூமி கிரகத்தின் மிக ஆபத்தான பிரச்சனை நீங்களே உண்டாக்கி வைத்திருக்கும் இந்த பொய்யான கடவுள்கள்தான்" என்கிறான் வேற்றுகிரகவாசி.

கடவுளை அல்ல கடவுளின் மேனேஜர் போல வாழும் மனிதர்களைத்தான் தாக்குகிறது இந்த படம். இப்போது இந்த படத்திற்கு ஏன் எதிர்ப்பு யார் எதிர்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.

@ சகலகலா ஜீன்ஸ்

ஒரு ஊரில் பிறந்து அதே ஊரில் வளர்ந்து அதே ஊரில் வாழ்ந்து இறப்பவர்கள், பின் செல்வத...

Posted: 02 Jan 2015 10:46 PM PST

ஒரு ஊரில் பிறந்து அதே ஊரில் வளர்ந்து அதே ஊரில் வாழ்ந்து இறப்பவர்கள், பின் செல்வது சொர்க்கம் அல்ல, அவர்கள் வாழும்போதே சொர்க்கம்தான்...!!


0 comments:

Post a Comment