Saturday, 20 December 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி… உண்மை விளக்கம்: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி… என்...

Posted: 20 Dec 2014 09:10 AM PST

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…

உண்மை விளக்கம்:
ஐந்து பெற்றால்
அரசனும் ஆண்டி…
என்பது
ஐந்து பெண் மக்களைப்
பெறுவதைக்
குறிக்கவில்லையாம்..!
-

கீழ்கண்ட
விபரப்படிக்கான
ஐந்து பேரைக்
கொண்டிருப்பவன்,
அரசனே ஆனாலும்
கூட
அவனது வாழ்க்கை வே
அழிவை நோக்கி போகு
என்பதுதான்
உண்மையான
அர்த்தம்…
-

1) ஆடம்பரமாய்
வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல்
வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற
மனைவி,

4) ஏமாற்றுவதும்
துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத
பிடிவாதமுடைய
பிள்ளைகள்
என்பதாகும்..

Relaxplzz

உன் பொண்டாட்டிகா வப்பாட்டிகா ? திருச்சி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளின் அருவரு...

Posted: 20 Dec 2014 09:00 AM PST

உன் பொண்டாட்டிகா வப்பாட்டிகா ? திருச்சி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளின் அருவருக்கத்தக்க பேச்சு - மாற்றத்தை ஏற்படுத்துமா மத்திய அரசு....!!

திருச்சி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் விமான பயணிகளிடம் நடந்து வருகிறார்கள்.

1. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தென்பகுதி ஏழை ஆண், பெண் இருபாலரிடம் இவர்கள் நடத்தை விதிமுறைகளை மீறி அதிகபிரசிங்கிதனமான கேள்விகளை கேட்டு மனக்கஸடத்தை ஏற்படுத்தி அசிங்கபடுத்துகின்றனர்.

2. விமான பயணிகள் ஏதேனும் புரியாமல் விளக்கம் கேட்டால் இங்கேயே இப்படி ? அங்கே போய் என்ன புடுங்கபோற என்கிறார் ஒரு அதிகாரி

3. வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று அவர்கள் ஈட்டும் சிறுசேமிப்பில் வாங்கும் 4 அல்லது 5 பவுனை சோதனை செய்த பின் இது பொண்டாட்டிக்கா இல்லை வப்பாட்டிக்கா என கேட்கும் கஸ்டம்ஸ் அதிகாரிகள்.

4. அதுவும் இவர்கள் மலேசிய குடியுரிமை தமிழர்களிடம் பழகும் பாங்கு இருக்கிறதே ? நல்ல வேலை நம்ம தாத்தா காலத்திலேயே நாம இங்கிருந்து போய்விட்டோம் என்று அவர்கள் வாயலயே சொல்லுற அளவுக்கு இருக்கு...

5. இது எல்லாம் முடிந்த பிறகு ஏதாவது குடுத்துட்டு போயான்னு கேட்கும் கடைநிலை காவலர்கள், பணம் கையில் இல்லை என்றால் குழந்தைகளுக்கு சாக்லெட் வாங்க மறந்தயா ? சரக்கு வாங்க மறந்தயா ? என அநாகரிகமான கேள்விகள்...

6. உள்ளயே வரும் கரண்சி புரோக்கர்கள்...

7. தரம் குறைந்த தண்ணீரே வராத கழிப்பறைகள்...

8. மரியாதை இல்லாத காவலர்கள்...

இப்படி மிகவும் கீழ்த்தரமாக திருச்சி விமான நிலைய நிர்வாகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

(அதிகப்படியாக Share செய்யவும்....)

Relaxplzz


:) Relaxplzz

Posted: 20 Dec 2014 08:55 AM PST

உலகில் அன்பு தான் வாழ்வின் அடையாளம்... அன்பு காட்டாதவர்கள் வாழ்ந்து என்ன பயன்...?

Posted: 20 Dec 2014 08:50 AM PST

உலகில் அன்பு தான் வாழ்வின் அடையாளம்...

அன்பு காட்டாதவர்கள் வாழ்ந்து என்ன பயன்...?


இந்த படத்தை பார்க்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது... பணத்துக்காக நடிக்கும் நடிகர்...

Posted: 20 Dec 2014 08:40 AM PST

இந்த படத்தை பார்க்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது...

பணத்துக்காக நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு லைக் போட்டு அவர்களை கொண்டாடுவதை விட இவர்களுக்கு லைக் போட்டு மரியாதை செய்வோம்...

கையில் குழந்தை, நெஞ்சில் குடும்ப சுமை இருக்கும் வயதில் 126 கோடி மக்களை காக்கும் கருவிகளாக வாழும் இளங்குருவிகள்...

வீரப் பெண்மணிகளே... உங்களுக்கு பெரிய சல்யூட்...

வாழ்க பாரதம் வளர்க பாரத பெண் புகழ்...! (y)


:) Relaxplzz

Posted: 20 Dec 2014 08:30 AM PST

:) Relaxplzz

Posted: 20 Dec 2014 08:20 AM PST

சின்ன வயசுல இந்த மாதிரி இருந்தேன், நீங்க எப்படி...? கல்வி கூடங்களை எல்லாம் திறந...

Posted: 20 Dec 2014 08:10 AM PST

சின்ன வயசுல இந்த மாதிரி இருந்தேன், நீங்க எப்படி...?

கல்வி கூடங்களை எல்லாம் திறந்தவர் காமராஜர்தான் என்று கேள்விப்பட்டதும் நீண்ட காலம் அவர் மேல் கடுப்பில் இருந்தேன்

திங்கட்கிழமையானா வயித்து வலி வரும்

எம்.ஜி.ஆர் தான் தினமும் சத்துணவு சமைக்குறார்னு நெனச்சேன்

ஹெட் மாஸ்டரும் ...மிஸ்சும்.. புருஷன் பொண்டாட்டின்னு நெனச்சேன்

வகுப்பில் பசங்க யாரவது பேசினால் இரண்டு பெண்களுக்கு நடுவே உட்கார வைத்து விடுவார்கள், நான் அடிக்கடி பேசுவேன்

ஞாயிறு காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வந்ததும் முகமெல்லாம் இருண்டு போகும்
காலையில் பள்ளிக்கூடம் போக வேண்டுமே

அரசியல்வாதிகளுக்கு வெள்ளை சட்டை யுனிபார்ம்னு நினைச்சேன்

பென்சில் சீவுன துணுக்க சுடு தண்ணியில போட்டா ரப்பர் வரும்னு நினைச்சேன்

ரோடு ஓரத்துல இருக்கற எல்லா மரமும் அசோகர் நட்டதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்

பலமுறை வானத்தையே பார்த்துட்டு இருந்தேன் 'சக்திமான்' வருவார்னு!

ராதாரவி, கிட்டி, சரண்ராஜ், இவுங்க மூணு பேரையும்
பெரிய ஆளாகி எப்டியாச்சும் கொன்னுடனும் பாவிப்பயலுக..

# படித்ததில் பிடித்தது #

Relaxplzz

உளவியல் சொல்லும் உண்மைகள்..! 1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்க...

Posted: 20 Dec 2014 08:00 AM PST

உளவியல் சொல்லும் உண்மைகள்..!

1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்...

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்...

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்...

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்...

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்...

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்...

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்...!

Relaxplzz


உங்களுக்கு ஒரு பெண் தெரிகிறாரா...? உற்று பார்த்தால் உண்மை புரியும். இது பறவை மட...

Posted: 20 Dec 2014 07:50 AM PST

உங்களுக்கு ஒரு பெண் தெரிகிறாரா...?

உற்று பார்த்தால் உண்மை புரியும். இது பறவை மட்டும் கிடையாது. பறவை போல பெயிண்ட் செய்து உட்கார்ந்திருப்பவர் ஒரு பெண்.
வியக்க வைக்கும் செயல்


அழகை பார்த்து அன்பு வைக்காதே அது மலரைப் போல வாடி விடும். பணத்தை பார்த்து அன்ப...

Posted: 20 Dec 2014 07:50 AM PST

அழகை பார்த்து அன்பு வைக்காதே
அது மலரைப் போல வாடி விடும்.

பணத்தை பார்த்து அன்பு வைக்காதே
அது கண்ணாடி போல உடைந்து விடும்.

என்றும் அன்புக்காக அன்பு வைத்திடு
அதுவே என்றும் நிலைத்து நிற்கும்.


இந்த சிறுவனின் நல்ல உள்ளத்துக்கு ஒரு பாராட்டு நீங்க சொல்லியே ஆகணும்...! (y)

Posted: 20 Dec 2014 07:40 AM PST

இந்த சிறுவனின் நல்ல உள்ளத்துக்கு ஒரு பாராட்டு நீங்க சொல்லியே ஆகணும்...! (y)


:) Relaxplzz

Posted: 20 Dec 2014 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 20 Dec 2014 07:20 AM PST

ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : "மனிதா! இன்று உன்னுடைய வாழ்க...

Posted: 20 Dec 2014 07:10 AM PST

ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :
"மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் "
மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!
எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....."

மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் "

எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !

அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!

மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ....

எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் "நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்...என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் "!!!

கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட ..

இது போன்ற முட்டாள்தனமான கதைகளை நம்பாமல் உன்னை நம்பு.. உன் வாழ்க்கை சிறக்கும்... (y) (y)

Relaxplzz

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்... 1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட...

Posted: 20 Dec 2014 07:00 AM PST

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்...

1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட கண்ட இடத்தில் சிறுநீர் கழித்தல்.

{இதில் கண்டிப்பாக பெரும்பாலானோருக்கு பங்கு உண்டு.}

2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

{இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.}

3. குப்பைகளை கொட்டுவது :

{நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும், நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.}

4. வரிசையை முந்தியடித்தல் :

{இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம். பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.}

5. விட்டு கொடுக்காத பழக்கம் :

{அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எப்படி...? அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.}

6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :

நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல், Etc... Etc.... Etc.....

இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான்.

இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:

{முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது. நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும்.}

8. ஜாதி வெறி - மத வெறி – இன வெறி:

நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்......!!

குறிப்பு:- இதை பதிவதன் நோக்கம், நம்முடைய அவலங்களை நாமே பதிந்து, நமது மேல் நாமே அசிங்கத்தை பூசிக்கொள்வதர்க்காக அல்ல....

தனி மனிதன் திருந்தினால் தான், நாடு திருந்தும். இதை படித்த பிறகு ஓரிருவர் திருந்தினால் கூட போதும்... இந்த பதிவின் நோக்கம் முழுமை பெரும்.

Relaxplzz


பொறுப்புக்கள் எதுவும் இல்லாத வயதில் வாழ்க்கையில் சந்தோசம் இருந்தது... பொறுப்புக...

Posted: 20 Dec 2014 06:50 AM PST

பொறுப்புக்கள் எதுவும் இல்லாத வயதில் வாழ்க்கையில் சந்தோசம் இருந்தது...

பொறுப்புக்கள் அதிகம் வந்ததும் அன்றிருந்த சந்தோசம் தொலைந்தது....


தாய்மையின் மகத்துவம் பேசும் அருமையான படம்.. புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 20 Dec 2014 06:40 AM PST

தாய்மையின் மகத்துவம் பேசும் அருமையான படம்..

புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 20 Dec 2014 06:30 AM PST

:P Relaxplzz

Posted: 20 Dec 2014 06:20 AM PST

ஒரு நாள் நம்ம பட்டிக்காட்டான், சின்னதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ர...

Posted: 20 Dec 2014 06:10 AM PST

ஒரு நாள் நம்ம பட்டிக்காட்டான், சின்னதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை காண்பிச்சு கேட்டார்.

"இந்த டிவி என்ன விலை?"
கடைகாரன் பட்டிக்காட்டானை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்

"இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

எப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப்பை மாதிக்கிட்டு வந்து ‌கடைகாரனைப் பார்த்து கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..." ம‌றுப‌டியும் அதையே க‌டைகார‌ன் சொல்ல‌, டென்ஷனான பட்டிக்காட்டானுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. ந‌ம்ம திருட்டு முழி தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

பட்டிக்காட்டானால‌் பொறுக்க‌ முடிய‌லை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,

"டிவி குடுக்க‌லைன்னா ப‌ர‌வாயில்லை, அட்லீஸ்ட், நான் பட்டிக்காட்டான் தான்னு எப்ப‌டி க‌ண்டுபிடிச்சே சொல்லு?"

கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், "இது டிவி இல்லை, மைக்ரோஓவ‌ன் அதான்"

:P :P

Relaxplzz

பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின் ஒரு மானை வேட்டையாடி இறை...

Posted: 20 Dec 2014 06:00 AM PST

பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின் ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது.

இறுதியில் நீண்ட நேர முயற்ச்சி பலனளிக்காது குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது.

சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக் கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது... :((

மனிதர்களிடம் தொலைந்து போன கருணை..

Relaxplzz


ஒரு மனிதனின் மிகப் பெரிய இரண்டு ஆயுதங்கள்: 1. மௌனம்: நமக்கு பிரச்சனைகள் வராம...

Posted: 20 Dec 2014 05:50 AM PST

ஒரு மனிதனின் மிகப் பெரிய இரண்டு ஆயுதங்கள்:

1. மௌனம்:

நமக்கு பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

2. புன்னகை:

அதையும் மீறி பிரச்சனைகள் வந்து விட்டால் புன்னகையால் வென்று விடலாம் ...

Kali Muthu


அடப்பாவி :O

Posted: 20 Dec 2014 05:40 AM PST

அடப்பாவி :O


:) Relaxplzz

Posted: 20 Dec 2014 05:30 AM PST

யோவ் டிரைவர்... வண்டிய சாய்க்காம ஓட்டுயா, சட்னி சிந்துது...! :P

Posted: 20 Dec 2014 05:20 AM PST

யோவ் டிரைவர்...
வண்டிய சாய்க்காம ஓட்டுயா, சட்னி சிந்துது...! :P


நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெ...

Posted: 20 Dec 2014 05:10 AM PST

நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ?

1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்...
தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..

2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...
ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..

3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...
கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..

4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ,கோடோ கிடையாதா ?
உங்கள் வாழ்க்கை உங்கள்கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் ..

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...
கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,கபில்தேவ்..

6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,கோழி கிண்டிய மாதிரி புரியாதகையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் .
இதில்இந்திரா காந்தி,டாக்டர் ஜாகிர் ஹுசேன் ..

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்...
நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாகஇருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..

8.)வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் .இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..

9) கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம் போடுவீர்களா ?
ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?

இதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள் (y) (y)

Relaxplzz

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு..! பெண் நோயாளிகளுக...

Posted: 20 Dec 2014 05:00 AM PST

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு..!

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப்பிடிக்க வேண் டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக் கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.

பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரி சோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனை களை டாக்டர் செய்ய வேண்டும். வயிறு வலி, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சினைகளுடன் பெண் கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச் சினையைக் கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத் தவோ, தட்டிப்பார்க்கவோ வேண் டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித் தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்;

புகார் கொடுக்கலாம்:

சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின்படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Relaxplzz


சாகும்பொது நமக்கு வேண்டாதவரையும் பார்க்க விரும்புகிறோம் ! வாழும் போது நமக்கு வ...

Posted: 20 Dec 2014 04:50 AM PST

சாகும்பொது நமக்கு வேண்டாதவரையும் பார்க்க விரும்புகிறோம் !

வாழும் போது நமக்கு வேண்டியவரையும் பார்க்க மறுக்கிறோம் ! !


அயர்லாந்தில் ஆடுகள் ஏறும் வழித்தடம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 20 Dec 2014 04:40 AM PST

அயர்லாந்தில் ஆடுகள் ஏறும் வழித்தடம்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


0 comments:

Post a Comment