Friday, 19 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 19 Dec 2014 05:51 PM PST


புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை அரசு கையகப்படுத்தி, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நியமி...

Posted: 19 Dec 2014 09:17 AM PST

புதுச்சேரி அரவிந்தர்
ஆசிரமத்தை அரசு கையகப்படுத்தி,
ஐ.ஏ.எஸ்.
அதிகாரி ஒருவரை நியமித்து நிர்வாகத்தை மேற்கொள்ளவும்,
தற்கொலைக்கு முயன்ற
பெண்
ஒருவரை பாலியல்
பலாத்காரம்
செய்தவர்களைக்
கைது செய்யவும்,
ஆசிரமத்தில் நடக்கும்
பெண்கள் மீதான
பாலியல் கொடுமைகள்,
சட்ட விரோத
நடவடிக்கைகள்
குறித்து உயர்நீதிமன்ற
ஓய்வுப் பெற்ற
நீதிபதி தலைமையில்
நீதி விசாரணைக்கு உத்தரவிடவும்,
தற்கொலைக்கு முயன்ற
பெண்ணை பாலியல்
பலாத்காரம்
செய்தவர்களைக்
கைது செய்யவும்
மத்திய, மாநில
அரசுகளை வலியுறுத்தி 20/12/
2014
சனிக்கிழமையன்று புதுச்சேரியில்
முழு அடைப்புப்
போராட்டம்.

மனைவி ஓங்கிய கையை வேகமாக என் கன்னத்தால் தடுத்து நிறுத்தினேன்.! :( @வெங்கடேஷ்

Posted: 19 Dec 2014 07:52 AM PST

மனைவி ஓங்கிய
கையை வேகமாக என்
கன்னத்தால்
தடுத்து நிறுத்தினேன்.! :(

@வெங்கடேஷ்

ஆண்டின் இறுதியில் என்னைப் பார்த்து காலண்டர் கேட்கிறது.. என்னைத் தவிர வேறென்னத்த...

Posted: 19 Dec 2014 07:35 AM PST

ஆண்டின் இறுதியில்
என்னைப் பார்த்து
காலண்டர் கேட்கிறது..

என்னைத் தவிர
வேறென்னத்தை
கிழித்தாய்?!.

சர்வீஸ் சென்டருக்கு போய்ட்டு வந்த பைக்கும் அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்த wifeம...

Posted: 19 Dec 2014 07:34 AM PST

சர்வீஸ்
சென்டருக்கு போய்ட்டு வந்த
பைக்கும்

அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்த
wifeம்

நாலு நாளைக்கு நம்ம
கன்ட்ரோல்லயே இருக்காது

பாத்து தான் ஹேண்டில்
பண்ணனும்.. :P

@காளிமுத்து

நேதாஜி பற்றிய ரகசியங்களை வெளியிட்டால் வெளிநாடுகளுடன் நாம் கொண்டுள்ள உறவுகளில் பா...

Posted: 19 Dec 2014 06:58 AM PST

நேதாஜி பற்றிய
ரகசியங்களை வெளியிட்டால்
வெளிநாடுகளுடன்
நாம் கொண்டுள்ள
உறவுகளில்
பாதிப்பு ஏற்படும்,
அதனால் வெளியிட
முடியாது - மோடி

இருநூறு ஆண்டுகால தமிழ்நாட்டை பிடித்த கொடும் பஞ்சகாலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள...

Posted: 19 Dec 2014 06:20 AM PST

இருநூறு ஆண்டுகால தமிழ்நாட்டை பிடித்த கொடும் பஞ்சகாலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் செத்துப்போனார்கள்........
தென்மாவட்டங்களில் நிலவிய பஞ்சம் சாவுகளை பார்த்த பின்னரே முல்லை பெரியாறு அணை வெள்ளையர்களால் கட்டப்பட்டது.......

மேலும் இக்காலங்களில் தான் வெள்ளையர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கி மலேசியா மொரிசீயஸ் பர்மா இலங்கை(மலையக தமிழர்கள்) தாய்லாந்து
இந்தோனிசியா தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் கொத்தடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டனர்........

மேலும் இக்காலங்களில் நிலவிய பஞ்சத்தை ஒழிக்க இந்தியா அப்போதைய அமெரிக்காவிடம் கையேந்தியது
அவனும் தந்திரமாக கோதுமைகளோடு சேர்த்து கருவேல மர விதைகளையும் கொடுத்தான் இன்று தமிழ்நாட்டை பீடித்துள்ள கருவேலத்தின் கதை இதுதான்
இன்றுவரை அதை அழிக்க முடியவில்லை.........

நாளை மீத்தேன் செயல்படுத்தப்பட்டால் நமது சந்ததி நம்மை காரி துப்பும் என்பது மட்டும் நிதர்சனம்.....

#StopMethaneExplorationInKaveriDelta

@ரகுநந்தன்


அலுவலகத்தில் கணினியில் பணிபுரியும் போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஏதேனும...

Posted: 19 Dec 2014 06:10 AM PST

அலுவலகத்தில்
கணினியில்
பணிபுரியும்
போது ஒவ்வொரு 20
நிமிடங்களுக்கு ஒருமுறை ஏதேனும்
பச்சை நிறத்தை பார்ப்பது கண்களுக்கு நல்லதாம்...

சரி நாம அந்த
பச்சை சுடிதாரை பார்ப்போம்.
:P

@யாரோ

அமேஸான் காடுகளில் கிடைக்கும் "அரிய"வகை மூலிகைங்கிறிங்க ஆனா உலகம் பூரா லோடு, லோடா...

Posted: 19 Dec 2014 05:49 AM PST

அமேஸான் காடுகளில்
கிடைக்கும்
"அரிய"வகை மூலிகைங்கிறிங்க
ஆனா உலகம்
பூரா லோடு, லோடா இறக்குமதி பண்றிங்களே அதெப்படி...

@பிரபின் ராஜ்

"மச்சி மரண காமடி டா," என நண்பர்களுக்குள் பேசிக்கொள்வோம். அப்படி என்றால் என்ன என...

Posted: 19 Dec 2014 05:38 AM PST

"மச்சி மரண
காமடி டா," என
நண்பர்களுக்குள்
பேசிக்கொள்வோம்.

அப்படி என்றால் என்ன
என்பதற்கு சரியான
உதாரணம் சமீபத்தில்
தான் கிடைத்தது.
பெஷாவர்
துயரத்திற்கு மோடியும்,
ராஜபக்சேவும்
விடுத்த கண்டனங்கள்
தான் 'மரண காமடி'
என்ற
பதத்திற்கு மிகச்சரியான
உதாரணங்கள்.

@டான் அசோக்

ஏழைகளின் பெயரை ரேஷன் அரிசியில் எழுதும் ஆண்டவன், அரிசி மூட்டையின் மேல் ’கேரளா’ என...

Posted: 19 Dec 2014 05:20 AM PST

ஏழைகளின்
பெயரை ரேஷன்
அரிசியில் எழுதும்
ஆண்டவன், அரிசி மூட்டையின்
மேல் 'கேரளா'
என்று எழுதி விடுகிறான்
போலும்...

@இளையராஜா

We are still in shock about the Peshawar School killings.. Many have said it's w...

Posted: 19 Dec 2014 05:16 AM PST

We are still in shock about the
Peshawar School killings.. Many have
said it's worst ever killing, never before
one..
Ofcourse it's worst .Barbaric..Cowa
rdice..Pathetic
But it's not the only one..Not long ago,
few years back Sri Lanka Govt killed all
these tender souls bombing a School in
Senjolai Village of Northern Sri Lanka
as a part of their genocide killings...
Which ofcourse according to SL
government, probably these kids
bought a bomb and probably killed
themselves !!
Worst Irony ever is Rajapakse
condemning the Peshawar killings.


Posted: 19 Dec 2014 03:35 AM PST


அழகு தமிழ்நாடு!

Posted: 19 Dec 2014 03:30 AM PST

அழகு தமிழ்நாடு!


செந்தில் :ண்ணே, மீத்தேன்னா என்னண்ணே? கவுண்டமணி : வாடா அரை டவுசரு. சைக்கிள பஞ்சர்...

Posted: 19 Dec 2014 01:50 AM PST

செந்தில் :ண்ணே, மீத்தேன்னா என்னண்ணே?
கவுண்டமணி : வாடா அரை டவுசரு. சைக்கிள பஞ்சர் ஒட்டாம எங்கடா போன

எனக்கு ஆயிரம் வேலை இருக்கும்ணே, இதெல்லாம் கேட்காதீங்க
ஆமா, இவரு அமெரிக்க தொழிலதிபரு, ஆயிரம் நடிகைங்க கண்ணாலம் கட்ட கியூல நிக்கிறாங்க

உங்களுக்கு பொறாமைண்ணே... சரி, மீத்தேன்னா என்னண்ணே?
மீத்தேன் ஒரு வாயு டா. Methane is a colorless, odorless gas.

தமிழ்ல சொல்லுங்கண்ணே..
அடேய் கோமுட்டி தலையா, மீத்தேன்ன்னா கொள்ளிவாயுன்னு அர்த்தம்டா

அபாயகரமானதாண்ணே?
அடங்கொன்னியா...நிச்சயமா. கோவமா இருக்கிற என் பொண்டாட்டி கோவை சரளாவ விட

மீத்தேன் எங்கண்ணே கிடைக்குது?
கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேனை எடுக்கலாம். நமக்கு ரொம்ப பழக்கமான சாண எரிவாயு கூட ஒரு வகை மீத்தேன் தான். பூமிக்கு அடியில் இருந்தும் மீத்தேன் எடுக்கலாம். உன் வயித்த நல்லா பிதுக்குனா, உன் வாயில இருந்து கூட எடுக்கலாம்.

சரி, இப்போ என்ன கேடு வந்துச்சுண்ணே, எல்லோரும் இதை பற்றி பேசறாங்க?
அடேய்ய் பால்டாயில் டப்பா, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்ட்டா மாவட்டங்களில் உள்ள காவிரிப் படுகையில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் ( http://www.g/ e e c l.com/ ) என்ற தனியார் நிறுவனம் டியுனாகி வந்திருக்குடா

அய்யய்யோ, எப்ப நிலத்தை நோண்ட போறாங்க?
அவங்க கத்துக்கிட்ட வித்தைய நிலத்துல இறக்கி 2 வருஷத்துக்கு மேல ஆச்சுப்பா

என்னண்ணே சொல்றீங்க? நெஞ்சு வலிக்குது..
நெஞ்சு மட்டுமில்ல, ரைமிங்கா சொல்லிடப்போறேன், இங்க பாரு
http://www.geecl.com/mannargudi-block.php

சொல்லவேயில்ல, ண்ணே எத்தனை அடிக்கு பூமில ஓட்டை போடுவாங்கண்ணே?
அடி இல்ல, மீட்டர். மீட்டர் கூட இல்ல, கிலோமீட்டர். கிட்டத்தட்ட 6-7 கிலோ மேட்டர் ஓட்டை போட்டு குழாய இறக்க போறானுங்க

அடிங் கொய்யால என் பூமில குழாய போட எவன்டா அதிகாரம் கொடுத்தது?
எட்டி உதைச்சுபுடுவேன், அப்போதைய மத்திய அரசும் மாநில அரசும் நம்மள 2011லையே பர்மிஷன் தந்துட்டாங்க, இப்ப வந்து வடைய காணாம் கடைய காணாம்ன்னு சொல்ற

சரிண்ணே, இப்ப இந்த அரசு என்ன பண்ணுது?
இந்த திட்டம் சரியா தவறான்னு சொல்ல, நிபுணர் குழு அமைச்சு இருக்கு

ரிசல்ட் வருமா?
வரும்...ஆனா வராது

உங்களுக்கு உடம்பு பூரா மூளைண்ணே... சரிண்ணே, 1000 அடி போர் போடவே நாக்கு தள்ளுதே, ஆறு கிலோமீட்டர் எப்படி ஓட்டய போடுறது?
பல கோடி ஆட்டய போடணும்ன்னா, இப்படி ஓட்டைய போடுறதுலாம் செம ஈசிடா நாராயணா. Hydraulic Fracturingன்னு ஒரு டெக்னிக் இருக்கு, இங்கன பாரு.
http://www.keetru.com/index.php/component/content/article

ஐயோ, அப்ப நிலத்தடி தண்ணி?
நிலத்தடி நீர்மட்டம் குறையும். நிலத்தடி நீர் முழுமையாக மாசுபடும். இந்தத் தண்ணீரை குடிக்கவோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியாது. மொத்தத்துல டெல்டா மாவட்ட தண்ணிய பயிருக்கும் பயன்படுத்த முடியாது, வயிறுக்கும் பயன்படுத்த முடியாது, ஏன் மயிருக்கும், அட தலைக்கு குளிக்கவும் பயன்படுத்த முடியாது

ண்ணே, பயமா இருக்குண்ணே...
காவிரி டெல்டாவில் உள்ள 13 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாகும். மீத்தேன் வாயு எடுக்கும்போது வெளியேற்றப்படும் நீரால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடல்நீர் உள்புகும் வாய்ப்பு உள்ளது. மீத்தேன் திட்டத்தால் டெல்டா பகுதியில் நிலப்பரப்பே 20 அடி கீழே இறங்கும் அபாயமும் உள்ளது.

அது ஏண்ணே, முல்லைபெரியாறு, காவிரி தடுப்பணை, வறட்சி, நீர் பற்றாக்குறை, மழை பொய்க்கிறதுன்னு விதி விவசாயிங்க வாழ்கையிலையே சிரிக்குது?
நாம கண்டுக்காம விட்டா, பூமாதேவியே சிரிக்கபோறா. நிலநடுக்கம் வந்துடும்ய்யா.

எங்கண்ணே இந்த அட்டுழியங்கள் நடக்கப்போகுது?
அப்படி கேளுடா என் பழைய டயரு... கொத்தங்குடி, பெரப்பட்டி, வண்டுவாஞ்சேரி, திருச்சேறை, துக்காச்சேரி, ஆமங்குடி ,விட்டலூர், குமாரமங்கலம், நாச்சியார்கோயில், மஞ்சமல்லி, நரசிங்கம்பேட்டை, குலமங்கலம், சித்தாடி, குடவாசல், மேலைப் பாளையம், மலுவச்சேரி, ஓகை, கீழப்பாளையூர், கமுகக்குடி, பத்தூர், கொரடாச்சேரி, ஆர்பார், மஞ்சக்குடி, வடவேர், செல்லூர், சாரநத்தம், மாணிக்கமங்கலம், கொட்டையூர், அனுமந்தப்புரம், கீலவடமல், ராசேந்திரநல்லூர், நார்த்தாங்குடி, கோயில் வெண்ணி, ஆதனூர், கண்டியூர், பூவனூர், கீழவாந்தச்சேரி (தண்டிலம்), அரிச்சபுரம், அனுமந்தப்புரம், அன்னவாசல், காளாச்சேரி, கர்ணாவூர், வடபாதி, சேரன்குளம், மன்னார்குடி, அரவத்தூர், சவளக்காரன், மூவர்கோட்டை, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு

எவ்வளவு கோடி தம்பி பம் கிடைக்கும்?
விவசாயத்துனால பொது மக்களுக்கு கிடைக்கிற பயன்களை விட ரொம்ப ரொம்ப குறைவு தான்.

அப்புறம் ஏன்ண்ணே மத்திய அரசாங்கம் இதை பண்ணுச்சு?
அரசியல்வாதிகள் பொதுமக்கள் இல்லையேடா

மீத்தேன் மட்டும் தான் எடுப்பாங்களா?
இல்ல. நிலக்கரி தான் லட்சியம், மீத்தேன் நிச்சயம்

என்னது நிலக்கரியா?
ஆமாடா டபேரா தலையா, அதுக்காக தான் அந்த சுல்தான்பேட்டை பொட்டியில கள்ள ஓட்ட போட்டதே. நிறையா விவரம் வேணும்ன்னா, இதை படி.
http://www.vikatan.com/new/article.php

இப்ப நான் என்னண்ணே பண்றது?
இதுவரை இது மாதிரி பிரச்சனைகளுக்கு என்ன பண்ணுனமோ அதான்.. போ, போயி நடு கடல்ல நண்டு வறுத்து தின்னு.

விளையாடாதீங்கண்ணே, சொல்லுங்க
என்னத்த சொல்றது? இந்த மீத்தேன் திட்ட கெடுதலை பற்றி நாம முதல்ல தெளிவா தெரிஞ்சுக்குவோம். அப்புறம் மற்றவர்களுக்கு தெளிவாக்குவோம். நம்மை சுற்றி இருக்கும் எல்லோரும் இதை பற்றி தெரிந்து வைத்திருக்க வழிவகை செய்வோம். டெல்டா விவசாயிகள் போராட்டத்துக்கு, நாளைக்கு நமக்கு சோறு வேணுமே என்கிற சுயநலத்துலயாவது தோள் கொடுப்போம்.

நன்றி : பாரதிதம்பி, விகடன்


அழகு தமிழ்நாடு! குற்றாலம்!

Posted: 18 Dec 2014 10:33 PM PST

அழகு தமிழ்நாடு! குற்றாலம்!


0 comments:

Post a Comment