Friday, 5 December 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


தோல்வி நிலையெனில் இந்தத் தொல்லுலகம் வாழ வழி எங்கே ? தோல்வியே வெற்றிக்கு அடிப்ப...

Posted: 04 Dec 2014 10:52 PM PST

தோல்வி நிலையெனில் இந்தத் தொல்லுலகம் வாழ வழி எங்கே ?

தோல்வியே வெற்றிக்கு அடிப்படையென்பது வெறும் தோற்றம் அல்லவே !!

தோல்வி கண்டு கண்டு துவண்டு போன மாந்தர் சிலர் !!!

தோல்வி கண்டதனால் துணிச்சல் பெற்ற மாந்தர் பலரே !!

தோல்வி இந்த மாந்தரை என்செய்யும் தோற்றப் பின்பும் துணிச்சலுடனிருந்தால் !!

தோல்வி தொலைதூரத்தில் நின்று பார்த்துவிட்டு துணிச்சல் கொண்டோரிடம் நமக்கென்ன வேலை !!!

தோன்றமலே போனால் நலமென எண்ணித் துன்பத்திலிருந்தோரைப் பார்த்து தூரத்திலிருந்த படியே " நீ " வெற்றிவாகை சூழப் பல்லாண்டு வாழ்க என வாழ்த்திச்
செல்லுமே !!!

இவண்
- கமல்
தோல்வியை கண்டு அஞ்சாதவன் ....


20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது .. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் .. கண்...

Posted: 04 Dec 2014 07:46 PM PST

20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது ..

உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ..

கண்டிப்பாக படிக்கவும்..
share பன்னவும் ....

அன்பு நண்பர்களே.!
தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரை எனும்
ஊரில்.,
தீமைக்கும் நன்மை செய்
அன்பு இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு
குழந்தைகளும்
முதியவர்களும்
தத்து எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு
உங்கள் வீட்டில்
இருக்கும் பயன்படுத்தாத
பழைய துணிகள்
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாட புத்தகங்கள்
மீதமாகும் விழாக்கால உணவுகள்
வயிராற உணவருந்திடவும்
சில அடிப்படை வசதியின்றி
சிரமப்படும் ஆசிரமத்திற்கு
உதவுங்கள்.

நம் கண்முன்னே
பசியாலும் வறுமையிலும்
உயிர்கள் துடிக்கிறது
நாம் ஏதேனும் உதவலாமே.

ரூ.1000 இருந்தால் போதும்
ஒரு வேளை வயிராற உணவு உண்பார்கள்..!

நம் முன்
ஆதவரற்று அனாதையாய்
நிற்கின்றனர்.
மனித நேயம் அழியவில்லை என்று
உணர்த்துவோம் உலகிற்கு,

அன்புக் கரம் நீட்டி
அரவணைப்போம் நம்
சொந்தங்களை.

உங்களால் முடிந்த பண உதவியோ அல்லது பொருளாகவோ,
நேரிலோ ,வங்கி முலமாகவோ உதவுங்கள் .

சக உயிர்கள் உணவின்றி தவிக்கிறது இதை படித்து பகிருங்கள் உலகம் அறியட்டும் உதவும் எண்ணம் கொண்டோருக்கு போய் சேர வேண்டுகிறோம்..

நண்பர்களே இணையுங்கள் இந்த ஆசரமத்தை காப்போம் ...

இவர்களுக்கு ஏதேனும் உதவ விரும்பினால் ..
1) ரேஷன் அரிசி
2) காய்கறிகள்
3 ) மளிகை பொருட்கள்
4) பழைய துணிகள்..
உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..

இவர்களை நம் அரசும் கண்டுக்கொள்ள வில்லை
வேளி நாட்டு நண்பர்களின் உதவியும் இல்லை ..

உதவிகள் இன்றி தவித்து வருகிறது ..

## முகவரி ...##
TNS social service .
அரசு பதிவு எண் ;
16/BK4/2014
C.sivakumar 26/35 bharathipuram uthangarai krishnagiri Dt
635207.

# bank account ; #

C.sivakumar
Ac no ; 708380125.
IFSC CODE ; IDIB000U005.
MICR CODE ; 635019094 UTHANGARAI BRANCH INDIAN BANK

TNS social service
நிர்வாக இயக்குனர்கள் ;
1 ) C . சிவக்குமார்
்cell ; 9894229155..

2 ) கமல்
7639532370..

3) ராம்
9629429139

வாழ்க. !!! வளமுடன் !!!


மனதைத் தொட்ட வரிகள் 1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்....

Posted: 04 Dec 2014 02:59 PM PST

மனதைத் தொட்ட வரிகள்
1. பணத்திற்காக ஒரு பெண்ணைத்
திருமணம் செய்து கொள்ள
வேண்டாம். உழைத்தால் பணம்
நிறைய சம்பாதிக்கலாம்.
2. துன்பம் துன்பம்
என்று சலித்துக்
கொண்டு என்ன பயன்?
உடம்பிலிருக்கும்
ஒன்பது ஓட்டைகளோடு அதுவும்
பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு :
வாழ்வுக்கு நியாமும்,
நெஞ்சிற்கு நிம்மதியும்
கிடைக்கும்.
3. உழைப்பு வறுமையை மட்டும்
விரட்ட வில்லை; தீமையையும்
விரட்டுகிறது.
4. ஒரு தாய் தன்
மகனை மனிதனாக்க
இருபது வருடங்களாகிறது.
அவனை மற்றொரு பெண்
இருபதே நிமிடங்களில்
முட்டாளாக்கி விடுகிறாள்.
5. பெண்களில் இரண்டே பிரிவினர்
தாம் இருக்கிறார்கள்.
ஒன்று அழகானவர்கள்.
மற்றொன்று அழகானவர்கள்
என்று நம்பிக்
கொண்டிருப்பவர்கள்.
6. அழகான பெண்களுக்குப்
பிறக்கும்போதே நிச்சய தார்த்தம்
நடந்து விடுகிறது. (யாருங்க
அது
7. பெண் இல்லாத வீடும்,
வீடு இல்லாத பெண்ணும்
மதிப்பு இல்லாதவை!!!!!
8. ஒரு தகப்பனார் பத்துக்
குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள்
ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும்
என்று உறுதியாகச் சொல்ல
முடியாது.
9. நீங்கள் போருக்குச்
செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
கடல் பயணத்திற்குச்
செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்
ஒரு பெண்ணை மனைவியாக
ஏற்கும்
போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
10. தெரிந்து மிதித்தாலும்
தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட
எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

0 comments:

Post a Comment