Thursday, 27 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 27 Nov 2014 06:01 PM PST


Posted: 27 Nov 2014 05:54 PM PST


வெறும் உணர்ச்சிவயப்பட்டோ, தனிமனித ஹீரோயிசத்திற்காகவோ அல்ல-மாறாக நவம்பர் 27-மாவீர...

Posted: 27 Nov 2014 09:29 AM PST

வெறும் உணர்ச்சிவயப்பட்டோ, தனிமனித ஹீரோயிசத்திற்காகவோ அல்ல-மாறாக
நவம்பர் 27-மாவீரர் தினத்தை அனுசரிப்பது மூலம் தான் நாளைய சமுதாயம்-மனிதாபிமான சமுதாயமாக வரும்.வளரும்.

எப்படி?

இங்கிலாந்தின் Tower Bridge அருகில் உள்ள Tower Of London கோட்டையில்,"இரத்தக் கடல்" என்று பொருள்படும் வகையில்,888,246 சிகப்பு நிற பூக்களைக் கொண்டு ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கியிருந்தார்கள்.இதில் கடைசிப் பூ நவம்பர் 11அன்று நடப்படும் என்றும் அறிவித்திருந்தார்கள்.

இதில் கவனித்தக்க விசயம் என்னவென்றால் அந்த 888,246 சிவப்பு நிறப் பூக்களுமே-செயற்கையாக,செராமிக் என்ற பொருளால் செய்யப்பட்டவை.ஒரு பூவின் விலை £25.இந்திய மதிப்பில் 2500 ரூபாய்கள்.அத்துனை பூக்களுமே போட்டி போட்டுக்கொண்டு மக்களால் வாங்கப்பட்டு-மிக முக்கியமாகத் தங்கள் குழந்தைகள் கையில் தந்து நடச்சொன்னார்கள்.

பொதுவாக பணம்-அதிகாரம் இந்த இரண்டைத் தவிர வேறெதற்குமே முக்கியத்துவம் தராத இங்கிலாந்துக்காரர்கள்,இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்தற்கு என்ன காரணம் தெரியுமா?

1914.இன்றிலிருந்து நூறு வருடங்களுக்கு முன் நடந்த முதல் உலகப் போர் தான் காரணம்.அதில் பங்குகொண்டு-தங்கள் இன்னுயிரை ஈந்த,பிரிட்டிஷ் இராணுவ வீரர்களை நினைவுகூறவும்,இனிமேல் இப்படியொரு உயிர்பலிகள் நிகழவேக்கூடாது என்பதையும்,எந்த வகையில் இருந்தாலும் போர் காட்டுமிராண்டித்தனமானது என்பதை தங்கள் குழந்தைகள் உணர வேண்டுமென்பதற்காகவும் தான்-சிகப்பு நிற பூக்களை நட்டு,"இரத்தக் கடல்" என்ற ஒரு கருபொருளை உருவாக்கியிருந்தனர்.இத்துனைக்கும் முதல் உலகப்போர் என்பது உயிர் வாழும் அடிப்படை உரிமையைக் காக்க எழுந்த போர் அல்ல.

இந்தப் போர் இங்கிலாந்தின் மீதோ அதன் மக்களின் மீதோ-"வேறு வழியேயில்லை,உன் சொந்த வீட்டில்,நாட்டில்,மண்ணில் உன் சந்ததிகள் உயிர் வாழவேண்டுமாயின் நாம் ஆயுதம் ஏந்தியேத் தீர வேண்டும் " என்றளவில் திணிக்கப்பட்ட போர் அல்ல.தங்களுக்கிடையே எழுந்த "யார் பெரியவன்" என்ற ஈகோ வைத் தனித்துக் கொள்ள-ஆதிக்க நாடுகள் விரும்பி ஆடிய கோரதாண்டவ விளையாட்டே முதல்உலகப்போர்.அதையே அவர்கள் அன்றைய தங்கள் அரசாங்கம் செய்தது மனிததன்மையற்ற பயங்கரவாதம் என்று தங்களின் வருங்கால சந்ததிகள் புரிந்து கொள்ள இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.

எனில்,ஈழ்த்தில்-தமிழர்களின் மண்ணை அபகரித்ததோடு மட்டுமின்றி,தமிழன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக-தமிழ் மொழி பேசுகிறார்கள் என்ற ஒற்றை அடையாளத்தை அழிக்க,அம்மக்கள் மீது அந்நாட்டின் அரசே முன்னின்று ஏவிய வன்முறையையும்,நடத்திய தீவிரவாதத்தையும் எதிர்க்க-அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள,

உன் சொந்த மண்ணில்-உன் குழந்தைகள்,உன் சந்ததிகள் கண்ணியமாக உயிர் வாழ வேண்டுமாயின்,நீ போராடியேத் தீர வேண்டும்.இரத்தம் சிந்தியேத் தீர வேண்டும்.உயிரைத் தந்தேயாக வேண்டும்,என்ற அடிப்படைக் கட்டாயத்தில் தங்கள் மீது திணிக்கப்பட்ட ஆயுதங்களை ஏந்தி,போராடி,மாண்ட அம்மக்களின் போராட்டத்திலிருந்த நியாயத்தை,அடிப்படை உரிமையை,அம்மக்களை அச்சூழ்நிலைக்குள் தள்ளிய அக்காரணத்தை இனம்,மொழி,மதம் கடந்து நினைவு கூற வேண்டுமா? வேண்டாமா?

மனித நாகரீகம் உச்சத்தில் திளைக்கும் இந்த இருபத்தியிரண்டாம் நூற்றாண்டில் கூட-ஒட்டு மொத்த உலக சமுதாயமும் வாய்மூடி வேடிக்கைப் பார்த்திருக்க-தடை செய்யப்பட்ட இராசாயன ஆயுதங்களைக் கொண்டு-குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி,தமிழன் என்ற ஒற்றை அடையாளத்தை அழித்தொழிக்க-பல லட்சக்கணக்கான-தங்கள் சொந்த நாட்டு மக்களையே-கொத்துக் கொத்தாக கொன்று குவித்த பயங்கரவாதத்தை, காட்டுமிராண்டித்தனத்தை, கொடூரத்தை-மனித தன்மையற்ற இனப்படுகொலையை நாம் நம் குழந்தைகளுக்கு கூற வேண்டுமா? கூடாதா?

இத்தகைய ஒரு பயங்கரவாதம்,உலகின் வேறு எந்த மூலையிலும்-எவருக்கும் இனி எந்த காலக்கட்டத்திலும் நடக்கவே கூடாது என்ற எண்ணத்தை நம் வருங்கால சந்ததிகளுக்கு ஏற்படுத்த வேண்டுமா? வேண்டாமா?

ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஒரு மூலையில் இருந்தாலும் போதும்.நாடுகளின் சட்டங்களோ, கட்டுப்பாடுகளோ, தடைகளோ, நீதிமன்றங்களோ,இன,மொழி,மத,வர்க,கட்சி அடையாளங்களோ..எதுவுமே தேவையில்லை.மனிதம் மட்டும் போதும்.

இன்றைய நவம்பர் 27 தினத்தை, இனப் படுகொலை எதிர்ப்பு நாளாக,சாதாரண பொது மக்களின் அடிப்படை உயிர் வாழும் உரிமையைக் காக்கும் அடையாள நாளாக-உளமாற அனுசரிப்போம்.நம் குழந்தைகளுக்கும் நாகரீகத்தைக் கற்றுத்தருவோம்.

மனிதம் தளைத்து,அமைதி பூக்கட்டும்.

@G Durai Mohanaraju

கழிஞ்சமலை (அரிட்டாபட்டி), மதுரை மாவட்டம்

Posted: 27 Nov 2014 07:36 AM PST

கழிஞ்சமலை (அரிட்டாபட்டி), மதுரை மாவட்டம்


சென்ற திமுக ஆட்சியில் சீமான் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.. நீதிமன்ற விசாரணைக்க...

Posted: 27 Nov 2014 06:17 AM PST

சென்ற திமுக ஆட்சியில் சீமான் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.. நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.. விசாரித்தவர் பெண் நீதிபதி...

நீதிபதி:
இவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன?

அரசு வழக்கறிஞர்:
உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுகிறார்!!

நீதிபதி:
அப்படியானால் தமிழர்களுக்கு உணர்வே வந்துவிடக்கூடாது என்கிறீர்களா??

நீதிமன்றம் சிரிப்பலையில் மூழ்குகிறது... வக்கீலும் அவரின் ஆதரவாளர்களும் இஞ்சி தின்ற குரங்கு போல முழித்துக்கொண்டு இருந்தார்கள்... அரசுக்கு எச்சரிக்கை விடுத்து மனுவை தள்ளுபடி செய்கிறார் நீதிபதி...
---------------------
இந்த சம்பவத்தின் நினைவுதான் இரண்டு நாட்களாக எனக்கு வருகிறது.. நேற்று காலை அலுவலகம் செல்லும் பொழுது நாம் தமிழர் கட்சியினர் ஆங்காங்கே ஒட்டியிருந்த சுவரொட்டியை பார்க்க முடிந்தது.. ஆனால இன்று காலை அலுவலகம் செல்லும் பொழுது இல்லை...

அதை சுற்றி இருந்த திரைப்பட சுவரொட்டிகள், குடிகாரர்கள் நலசங்க சுவரொட்டிகள், வாசனின் சுவரொட்டிகள் என இருந்தனர்.. நாம் தமிழர் கட்சியின் சுவரொட்டியில் தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் படம் கூட இல்லை, பேரரசன் முப்பாட்டன் முருகனின் கற்பனை உருவத்தையும், மாமன்னன் முப்பாட்டன் ராவணனின் கற்பனை உருவத்தையும் போட்டு, "இவர்களின் பேரனுக்கு பிறந்தநாள்" என வாழ்த்து சொல்லி இருந்தார்கள்...

மற்ற சுவரொட்டிகளை தவிர்த்து குறிப்பிட்ட சுவரொட்டி கிழிக்கப்பட்டு இருப்பதன் மூலம் நாம் கேட்ட விரும்புவது அந்த நீதிபதி போலத்தான் "தமிழர்களுக்கு சூடு சொரணை வந்துவிட கூடாது என்கிறீர்களா???"
-------------------------------------
பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவித்து பலர் பிறந்தநாள் கொண்டாட காரணம் "தமிழன் தமிழானாகிறான்" என்பதே... சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவும் அதே காரணம்தான் "தமிழன் தமிழனாகிறான்"...

ஏதேனும் பொதுமக்களுக்கு இடையூறு நடக்கும் பட்சத்தில் காவலரை அழைத்தால் பெரும்பாலும் வரும் பதில்கள்,

"அந்த ஏரியா என் லிமிட்டுகுள்ள வராதே!!!,
என் டியூட்டி நேரம் முடிஞ்சிடுச்சி!!!,
இன்ஸ்பெக்டர் ரௌண்ட்ஸ் போயிருக்கார்!!,
நீங்க ACய பாருங்க , DC ய பாருங்க, JC ய பாருங்க!!!!"

இப்படி தொடர்ந்து கொண்டே போகும்... ஆனால் மக்களுக்கு சொரணை வரும் செயல்களுக்கு காரணம் சொல்லாமல் வருகிறார்கள்.. சுவரொட்டியை கிழித்தாகிவிட்டது சரி... உங்கள் கணிப்பொறியில் முகநூலை திறந்தாலும் புலித்தலைவன் படம் வருமே!!! உங்கள் கணிபொறியின் திரையை கிழித்து எரிய போகிறீர்களா????.. முட்டாபயளுவ முட்டாபயளுவ...

நல்லாத்தானையா தமிழன் ஆட்சி இருந்ததா வரலாறு சொல்கிறது.. இந்த அளவுக்கு கூமுட்டையா போனது எந்த காலத்தில்???.. அந்த காலம் கண்டுபிடிக்கபட்டு வரலாறில் இருந்து அழிக்கப்பட வேண்டும்...

பிரபாகரன் குறித்த தந்தி தொலைகாட்சியின் கருத்துகணிப்பில் 93% (55+38) பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.. 93% வாக்குகளை பெற்று தமிழ் தேசிய கருத்தியல் ஆட்சியில் அமர போகிறது என்பதே அதன் அர்த்தம்.... அதன் பின் அறிவற்றவர்கள் அரசியல்வாதிகளாகவும் அமைச்சர்களாகவும் மட்டுமல்ல அரசு அதிகாரிகளாகவும் இருக்க முடியாது...

@Agazhvaan GGanesh

"மாவீரர்களை போற்றுவோம்" உலகிலேயே மிக அதிகம் சாலைவிபத்துகள் நடக்கும் நாடு இந்திய...

Posted: 27 Nov 2014 06:15 AM PST

"மாவீரர்களை போற்றுவோம்"

உலகிலேயே மிக அதிகம் சாலைவிபத்துகள் நடக்கும் நாடு இந்தியா; இந்தியாவிலேயே மிக அதிக சாலைவிபத்துகள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. சாலைவிபத்துகளுக்கு ஒரு முக்கிய காரணம் சட்டவிதி மீறல். லஞ்சம், ஊழல், நிருவாகச் சீர்க்கேடு எனக்கேவலப்பட்டு நிற்கும் தமிழ்நாட்டில் விதிமீறல்கள் சர்வ சாதாரணம்.

ஆனால், தமிழ்நாட்டுக்கு மிக அருகிலேயே "தமிழீழம்" என்கிற ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் 'லஞ்சம், ஊழல், நிருவாகச் சீர்க்கேடு' என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் ஓர் உன்னதமான அரசு இயங்கியது. இராணுவம், காவல்துறை, மருத்துவமனை, வங்கி, பள்ளிக்கூடம், கல்லூரி என எல்லாமும் மிகச்சிறப்பாக இயங்கிய ஒரு எடுத்துக்காட்டு நல்லாட்சி அரசு அங்கு நடந்தது.

தமிழீழத்தில் சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு 13 விதமான குற்றங்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அதில் முதலாவதும், மிகப்பெரிதுமான தண்டனை 'மதுக்குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்துக்கு' அளிக்கப்பட்டது. தமிழீழத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அளிக்கப்பட தண்டனைப் பட்டியலை படத்தில் காண்க:
-----------------------------------------------------------------------------------
"எது தர்மம்?"

"மாவலி ஒரு மிகச்சிறந்த மன்னன். மக்களை நேசித்தவன். மாவலியின் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலம். அப்போது சண்டை இல்லை, சச்சரவுகள் இல்லை, ஏமாற்று வேலைகள் இல்லை, திருட்டு இல்லை. மக்கள் தங்களின் எல்லா தேவைகளையும் பெற்றனர். மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். மாவலி மன்னன் ஒரு மிகச்சிறந்த நீதிமானாக ஆட்சி செய்தான்.

நல்லாட்சியைப் பார்த்து தேவர்கள் அஞ்சினர். "இந்த அசுரனை அழிக்க ஏதாவது செய்" என்று விஷ்ணுவிடம் வேண்டினர். அவரும் வாமணன் எனும் குள்ள பார்ப்பனனாக அவதாரமெடுத்து வாமனனை அழித்தார். "வாமன அவதாரம் என்பது விஷ்ணு நில உலகில் தோன்றிய ஐந்தாம் அவதாரம். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும்" என்று பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்கள்.

ஆனால், "மாவலி மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழ ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மாவலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக" கேரள மக்கள் நம்புகிறார்கள். அதனை ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------------
"யார் பயங்கரவாதி?"

உலகில் நீதிக்கும் நியாயத்துக்கும் எதிராக அரசு நடத்திவரும் நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, நல்லாட்சி நடந்த "தமிழீழத்தை" அழித்தனர். அதனை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என பொய்யுறைத்தார்கள்.

மாவலி மன்னன் உலகுக்கெல்லாம் அசுரன் என்றாலும், கேரள மக்களுக்கு அவனே கதாநாயகன்.

உலகமே ஒன்று சேர்ந்து குற்றம் சாட்டினாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர்கள். மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழினத்தின் ஒரே தேசியத் தலைவர்.
-----------------------------------------------------------------------------------
"விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு". -

- களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும் - என்கிற திருக்குறள் வழியில் கடைசி நொடிவரை எதிர்த்து நின்று போரிட்டு, தமிழின உரிமைக்காக வீரமரணம் எய்திய மாவீரர்களை நினைவு கூறுவோம்.

@அருள் ரத்தினம்


"கொள்கையாளன் என்றால்-கொண்ட கொள்கையில் வென்றிருக்க வேண்டும்.இதுவரை அதை அடையவில்லை...

Posted: 27 Nov 2014 04:16 AM PST

"கொள்கையாளன் என்றால்-கொண்ட கொள்கையில் வென்றிருக்க வேண்டும்.இதுவரை அதை அடையவில்லை.

மாவீரன் என்றால் சமர்களத்தில் போரிட்டு-வீரமரணம் அடைந்திருக்க வேண்டும்.அதையும் இன்னமும் அடையவில்லை.

இந்த இரண்டையும் அடையாதவரை நான் மாவீரனுமில்லை,கொள்கைவாதியுமில்லை.எனவே என்னை அவ்வாறெல்லாம் புகழ வேண்டாம்"

--மேதகு.வே.பிரபாகரன்

"எமது தேசம் விடுதலை பெற்று,எமது மக்கள் சுதந்திரமாக தன்மானத்துடன் வாழ வேண்டும், எ...

Posted: 27 Nov 2014 03:44 AM PST

"எமது தேசம் விடுதலை பெற்று,எமது மக்கள் சுதந்திரமாக தன்மானத்துடன் வாழ வேண்டும், என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மாவீரர்களை எமது நெஞ்ச பசுமையில் நிறுத்தி கொண்டாடும் தேசிய நாளே மாவீரர் நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கி கிடந்த எமது தேசத்தை,ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடி பணியாத அடங்கா மண்ணாக மாற்றி விட்ட, எமது வீர மறவர்ளின் வழியில் சென்று எமது இலட்சியத்தை அடைவோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்".

-------தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன்.


உலகின் மிகப்பெரிய கல்திட்டை உள்ளே பத்து பேர் படுத்து உறங்கலாம் இடம் :ஆய்க்குடி...

Posted: 27 Nov 2014 02:29 AM PST

உலகின் மிகப்பெரிய கல்திட்டை உள்ளே பத்து பேர் படுத்து உறங்கலாம்

இடம் :ஆய்க்குடி மகாலிங்கமலை


மாவீரர் கற்பித்த மாற்று வழியூடே மாற்றான் மறக்கவொண்ணா வலிதந்து மீண்டும் விடுதலை...

Posted: 27 Nov 2014 02:25 AM PST

மாவீரர் கற்பித்த மாற்று வழியூடே

மாற்றான் மறக்கவொண்ணா வலிதந்து

மீண்டும் விடுதலை பறை கொட்டி

மீட்டெடுப்போம் ஈழ விடியலினை

நினைந்து நெஞ்சம் உருகுது

நின் நிலையில் நானிருந்தால்

நெருப்பென என் உள்ளம்

நீர் ஊற்ற அணையாதென்

உள்ளத்து நெருப்பு ஏனெனில்

பாராண்ட தமிழினம் இன்று

படுக்கவும் இடமின்றி மாக்கூட்டம்

அடைத்த பட்டி நிலைபெரிது

அடைபட்ட மனிதர் நிலைகொடிது

ஏதுமில்லா இனமா நம்மினம்

எல்லாம் இருந்தும் இழிநிலை

பிஞ்சென்றும் பாராமல் மழலை

பூக்களை அழித்தான் பூமியில்

கேட்போர் யாரும் இல்லை

கேடுகெட்ட மானுடம் ஒழிந்தது

உலகறியும் ஈழத்து இனப்படுகொலை

உணராதோர் தமிழரில்லை

சான்று பகிரவும் சடுதியில்

சிந்தை ஒருங்கிணைத்து நாமெலாம்

வாழ வழியுண்டு ஏதிலியாய்

வாழ்ந்த நிலைமாறி அவர்தம்

வீடதில் புரண்டு படுத்து

விளக்கேற்றி களிப்புறவே காலம்

கனிந்திடும் கவலை வேண்டாம்

காட்சியும் மாறும் சீர்மிகு

மாமன்னன் சிரசில் மகுடம்பூண்டு

மாந்தர் நாம் மகிழ்வுகொள்ள

பகை விரட்டி பாங்குடனே

பவனிசெல் நாள் தேடி

மாவீரர் கற்பித்த மாற்று வழியூடே

மாற்றான் மறக்கவொண்ணா வலிதந்து

மீண்டும் விடுதலை பறை கொட்டி

மீட்டெடுப்போம் ஈழ விடியலினை


தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம்...

Posted: 27 Nov 2014 02:06 AM PST

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம்...


உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் உள்ளவர்களே தங்கள் மீது படிந்துள்ள கறையை துடைக்...

Posted: 27 Nov 2014 12:22 AM PST

உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் உள்ளவர்களே தங்கள் மீது படிந்துள்ள கறையை துடைக்க முடியவில்லை,

ஆனால் ஈழத்தில் சில லட்சங்களே உள்ள தமிழர்கள் தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளையும்,

ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து 30,40 வருடங்களாக யாருடைய உதவியும் இல்லாமல்,

தனித்து நின்று அறவழியிலும், ஆயுதவழியும் வீரத்துடன் போராடினார்கள்,

வஞ்சகர்கள் ஒன்றினைந்து அவர்கள் போராட்டத்தை ஒடுக்கப் பயங்கரவாத அமைப்பு, தீவிரவாதிகள் என்று முத்திரைக்குத்தி,

லட்சக்கணக்காண மக்களை கொன்றுக்குவித்தும், புத்தனை வழிபடும் மண் என்றுவிட்டு எம்குலப் பெண்களை புணர்ந்துக் கொன்று வீசினர்,

இழப்புகள் பல அடைந்தாலும் தன் போராட்டக்குணத்தை விடாது மண்டியிடாதுப் போராடி வீரமரணம் அடைந்தனர்,

விழ விழ எழுவோம் என்று மீண்டும் போராடத் ்தொடங்கினர் மிச்சமிருந்தோர் ,உலகத்தின் கவனத்தை ஈர்த்தனர்,

அதன் விளைவு போராளிகளை பயங்கவாத அமைப்பு, தீவிரவாதிகள் என்று எந்த வாய்ச் சொன்னதோ, அதே வாய் விடுதலைப் போராளிகள் என்றது,

தடையையும் நீக்கியது, அப்போராளிகளின் போர்க்குணத்தையும், மண்டியிடா வீரத்தையும் கண்டு வியந்தது,

அப்படிப்பட்ட போராளிகளை சில விசிலடித்தான் குஞ்சுகள் இன்று சீண்டிப் பார்க்கிறது,

ஆதவனை இருகைகளாலும் மறைத்துவிடலாம் என்று பகற்கனவு காணாதீர்கள், கை சுட்டுவிடும்,

போராளிகள் புதைக்கப்பட வில்லை, விதைக்கப்பட்டுள்ளார்கள்,

இது முடிவல்ல தொடக்கமே.


ஆண்டாண்டுகாலமாய் ஆண்ட குலம் எங்கள் தமிழ் குலம் சங்கு அறுத்தாலும் சங்கத்தமிழ் மறவ...

Posted: 26 Nov 2014 11:22 PM PST

ஆண்டாண்டுகாலமாய் ஆண்ட குலம்
எங்கள் தமிழ் குலம்
சங்கு அறுத்தாலும் சங்கத்தமிழ் மறவா குலம்
செதில் செதிலாய் அறுத்தாலும்
செந்தமிழரையும்,செந்தமிழையும்
நெஞ்சில் ஏந்திய குலம்
எங்கள் மறத்தமிழ் மாவீரர் குலம்
எங்கள் மண் காக்க
எங்கள் இனம் காக்க
எங்கள் மொழி காக்க
எங்கள் மானம் காக்க
இன்னுயிர் ஈந்த மாவீரர்கள் அனைவருக்கும்
வீர வணக்கம்!


இந்த குறளை படித்தால் தமிழரின் இன்றைய நிலை விளங்கும்.... குறள் : ஒலித்தக்கால் என...

Posted: 26 Nov 2014 10:16 PM PST

இந்த குறளை படித்தால் தமிழரின் இன்றைய நிலை விளங்கும்....

குறள் :
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.

விளக்கம் :
எலிகள் கூடி கடல்போல் முழங்கிப் பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.

@தன்னிகரில்லா தமிழன்

0 comments:

Post a Comment