Friday, 10 October 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


#ஈரானில் கற்பழிக்க முயன்றவனை கொன்ற பெண்ணுக்கு தூக்கு!! ஈரானை சேர்ந்த பெண் ரெகான...

Posted: 10 Oct 2014 04:26 AM PDT

#ஈரானில் கற்பழிக்க முயன்றவனை கொன்ற பெண்ணுக்கு தூக்கு!!

ஈரானை சேர்ந்த பெண் ரெகானே ஜப்பாரி (26). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கற்பழிக்க முயன்ற ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதனால் கைது செய்யப்பட்ட ஜப்பாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரை மன்னிக்க மறுத்ததால் 08/10/2014 அன்று அவர் தூக்கிலிடப்பட்டார்.. #Admin

-------------------------------------------------------------------------------------
கனகேஸ்வரனின் கவிவரிகளில் >>

எந்த உயிராக இருந்தாலும்
தன்னை பாதுகாத்துக்கொள்ள
அதற்க்கு பூரண உரிமையும்
பொறுப்பும் கடமையும்
ஆசையும் உண்டு.....
அது ஒர் அறிவுள்ள உயிர் முதல்
ஆறு அறிவுள்ள மனிதன் வரை
அனைவருக்கும் பொருந்தும் ....

பெண்கள் உயிர்கள் தான் ...
அவர்களுக்கும் ரத்தம் சதை உணர்வு
வலி எல்லாமே உண்டு ....
வெறும் சதைக்கு இடையில்
சூடு தேடும் பலருக்கு ஏனோ
தெரியவில்லை பெண்கள்
சுகம் தரும் போதை அல்ல என ....

தன் மானம் காத்துக்கொள்ள
தன் உயிரை துச்சமென நினைத்து
ஒரு காமுகனிடம் இருந்து தன்
கற்ப்பை பாதுகாக்க ஒரு போராட்டத்தில்
அவள் போராளி ஆகிறாள்....

அவன் ஆண் உறுப்பை அறுத்து
உயிர் வலி உணர்த்தி இருக்கலாம் ..
ஆனால் நடந்தது ?....
அப்படியென்றால்
தன் கற்ப்பை விலை கொடுத்து தான்
பெண்கள் உயிர் வாழ வேண்டுகிறதா
உங்கள் சட்டம் ?....

சட்டம் மனிதனால்
மனிதனுக்கு தவறுகள் செய்தவர்களால்
தான் உருவாக்கப்பட்டது ......
கற்ப்பை காத்தவளுக்கு தூக்கு தான்
தண்டனை என்றால்
அறுத்து எறியுங்கள் உங்கள்
ஆண்மையின் அடையாளத்தை .....

-KG KG


அம்மா... பாக்கட்மணி 20 ரூபாய் கொடேன்.. போடா.. என்கிட்ட காசே இல்ல.. அப்பாகிட்ட போ...

Posted: 10 Oct 2014 03:07 AM PDT

அம்மா... பாக்கட்மணி 20 ரூபாய்
கொடேன்..
போடா.. என்கிட்ட காசே இல்ல..
அப்பாகிட்ட போய் கேளேன்...
கேட்கத்தான் போனேன்..
அவருதான் எங்க கணக்குமிஸ்
கிட்ட
சிரிச்சு சிரிச்சு பேசிட்டிருந்தார்....
வந்துட்டேன்.
என்னடா பேசி சிரிச்சிட்டிருந
்தார் !!! ?????
அட
போமா.,.உனக்கு உனக்கு வேற
வேலை இல்ல....
டேய் இந்தா..100 ரூபாய் வச்சுக்க
சினிமா போகனும்னுயே போய்ட்டுவா...
ம்ம்ம் சரிம்மா....
இப்ப சொல்லுடா அப்பா என்ன
பேசி சிரிச்சுட்டிருந்தார்....
தங்கச்சிக்கு நீ Maths home work
நேற்று தப்பா செய்து கொடுத்திட்டியாம
்... அதான் மிஸ் கிண்டல்
அடிச்சாங்க...
என்ன சொன்னாங்க ..?
உஙக வீட்ல
எல்லோருமே தப்பு தப்பாத்தான்
கணக்கு போடுவீங்களானு கேட்டாங்கம்மா
அதான் அப்பா சிரிச்சுட்டிருந
்தார்.. ்

காய் கறிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். 1.காய்ச்சல் வந்த காய் - “சுர”க்காய். 2...

Posted: 09 Oct 2014 07:24 PM PDT

காய் கறிகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்.
1.காய்ச்சல் வந்த காய் -
"சுர"க்காய்.
2.பரிதாப்மான காய் - "பாவ்"க்காய்.
3.இரக்கம் மிகுந்தது - "கருணை"
கிழங்கு.
4.மழைக்கு உதவும் காய் -
"குடை"மிள்காய்.
5.போதை தரும் காய் -
"பீர்"க்கங்காய்.
6.போலீஸுக்கு பிடித்தது -
"பீட்"ரூட்.
7.அசைவ காய் -
"முட்டை"க்கோஸ்.
8.எங்கும் நிற்காத காய் - "தேங்"
காய்.
9.முருகனுக்கு பிடித்தது -
சர்க்கர"வள்ளி"
10.குத்தும் காய் - "முள்"ளங்கி.
11.அரசனுக்கு பிடித்தது -
"சேனை"க்கிழங்கு
12.சிடு, சிடு என்று இருக்கும்
காய் - "கோவ்"க்காய்.
13.ஒன்றுமே இல்லாத காய் -
"காலி"ஃப்ளவர்.
14வீட்டை திறக்க உகந்த காய் -
"கீ"ரை. (திருடனுக்கும்
பிடிக்கும்)
15 பெண்களுக்குப்பிடித்தது -
"செள" செள

0 comments:

Post a Comment