Relax Please: FB page daily Posts |
- பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்? காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெற...
- தந்தையின் பாசம் வளரும் வரை... தாயின் பாசம் திருமணம் வரை... நண்பர்கள், சகோதரர்க...
- குமிழ் வடிவில் வளரும் டொபோரோச்சி மரம் (Toborochi Tree)
- எதில்..?
- :)
- நம் நாட்டில் கறுப்பு பணம் பல இடங்களில் புழங்கி வருகிறது. இவற்றில் நான்கு இடங்களி...
- ஆதிகுடி பட்டணம் பக்கோடா! திருச்சியின் முக்கியமான ஹாட் ஸ்பாட்களில் ஒன்றான சிங்க...
- இலையின் நுனியில் பனி துளி உடையும் முன் உன் முகம் காட்டுகிறது. உனக்குள் என்ன? உணர...
- :)
- புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்...
- தந்தை பாசம் <3 நிலவில் கடைசியாக இறங்கி நடந்த மனிதர் ஜெனி செர்னன் . இவர் விண்வெள...
- பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே ..
- (y)
- ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்...
- “பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் க...
- சீரகமிட்டாய்.. சிறு வயதில் இதை உண்டு மகிழ்ந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :)
- பூஜ்யம் ஒரு ராஜ்ஜியம் ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரைய...
- உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்........
- அருமையான ஓவியம்
- (y)
- செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!! *#06# – அ...
- காலைல எழுந்ததும் டெய்லி டிரஸ் அயர்ன் போட்டுட்டு போறவரா நீங்க...!?? பவர் கட்'ல அ...
- குழந்தைகள் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றன... தன் வாழ்க்கையை...
- :)
- டாக்டர் : கர்ப்பமா இருக்கும்போது மெகா சீரியல் பாக்காதீங்கன்னு சொன்னேனே. . . கேட்...
- தகவல் துணுக்குகள் * கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் எலிகளே கிடையாது. * எல்லா வ...
- "தமிழன் சாதித்த கட்டிடக்கலை" இடம் - திருப்புவனம் (கும்பகோணம்) - ரமேஷ் முத்தையன்
- :)
- :: என் மகளின் முதல் நடை :: அன்று சாலையோரம் மரத்தில் இருந்த பூக்கள் எல்லாம் வ...
Posted: 05 Aug 2014 09:15 AM PDT பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்? காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும். சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும். பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு. பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும். |
Posted: 05 Aug 2014 09:01 AM PDT தந்தையின் பாசம் வளரும் வரை... தாயின் பாசம் திருமணம் வரை... நண்பர்கள், சகோதரர்களின் பாசம் அவர்களுக்கென்று தனியான வாழ்க்கை வரும் வரை... பிள்ளைகளின் பாசம் அவர்கள் உலகை அறியும் வரை...! ஆனால் கணவன் மனைவியின் பாசமோ... ''நீங்க இறப்பதற்கு ஒரு நொடிக்கு முன் நான் கண் மூடிட வேண்டும்'' என கூறும் மனைவியின் பாசமும், ''நான் இறந்த அடுத்த நொடி நீயும் என்னுடன் வந்துவிடு'' என கூறும் கணவனின் பாசமும் வேறு எந்த பாசத்திற்கும் ஈடாகாது. வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... ♥ ♥ ![]() # படித்ததில் பிடித்தது # - 1 |
Posted: 05 Aug 2014 08:53 AM PDT |
எதில்..? Posted: 05 Aug 2014 08:40 AM PDT |
Posted: 05 Aug 2014 08:30 AM PDT |
Posted: 05 Aug 2014 08:15 AM PDT நம் நாட்டில் கறுப்பு பணம் பல இடங்களில் புழங்கி வருகிறது. இவற்றில் நான்கு இடங்களில் புழங்கும் தொகை வருடத்திற்கு எவ்வளவு தெரியுமா ? ( இவை தோராயமான கணக்குத்தான்) ரியல் எஸ்டேட் வர்த்தகங்களில் = ரூ.5,68,879 கோடிகள் டீசலில் பிடிஎஸ் மண்ணெண்ணை கலப்பதில் = ரூ.11,910 கோடிகள் தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டா மூலம் வாங்கப்படும் தொகை = ரூ.5,953 கோடிகள் கனிமங்களை சுரண்டுவதில் = நமது GDPயில் 10% ( 2012 யில் இந்தியாவின் GDP = 1.842 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ) ஒரு டிரில்லியன் = ஒரு லட்சம் கோடிகள் கண்ணை கட்டுதே ......... ( thanks to Hindu magazine) VIA சாத்தப்பன் நா |
Posted: 05 Aug 2014 07:56 AM PDT ஆதிகுடி பட்டணம் பக்கோடா! திருச்சியின் முக்கியமான ஹாட் ஸ்பாட்களில் ஒன்றான சிங்காரத்தோப்பின் அருகில் உள்ளது ஆதிகுடி காபி கிளப்! 1916-ம் ஆண்டு ஆதிகுடி வெங்கட்ராம ஐயரால் தொடங்கப்பட்ட இந்தக் கடையை, நான்காவது தலைமுறையான கணேசன் இப்போது கவனித்துவருகிறார். நூற்றாண்டை நெருங்கிவிட்டாலும் அதே பழைய கட்டடத்திலேயே இயங்கிவருகிறது. நாடக நடிகராக இருந்த காலத்தில் சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, தியாகராஜ பாகவதர், நவாப் ராஜமாணிக்கம், ஜெமினி கணேசன் எனப் பல பிரபலங்கள் தேவர் ஹாலில் கலைநிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, இந்த காபி கிளப்பில்தான் கூடுவார்களாம். இன்றும் திருச்சியில் உள்ள பெரும்பாலான ஆங்கிலோ இந்தியர்கள் இந்தக் கடைக்கு வாடிக்கையாளராக உள்ளனர். இந்தக் கடையின் ஸ்பெஷல்... காபியோடு பறிமாறப்படும் 'பட்டணம் பக்கோடா.' தேவையான பொருட்கள்: கடலை மாவு - 100 கிராம் அரிசி மாவு - 200 கிராம் வெண்ணெய் / நெய் / டால்டா - தலா 50 மி.லி பெரிய வெங்காயம் - 3 கிலோ முந்திரி - 50 கிராம். இஞ்சி - பெரிய துண்டு 1 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய்- 1/4 லிட்டர் செய்முறை: கடலை மாவு ஒரு பங்கும் அரிசி மாவு இரண்டு பங்கும் எடுத்துக்கொண்டு வெண்ணெய் (அ) நெய் (அ) டால்டாவுடன் உப்பு கலந்து நன்கு பிசையவும். பின்னர் இஞ்சி, பச்சை மிளகாய், கறி வேப்பிலை, முந்திரி, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து உருண்டை பிடிக்கவும். பின்னர் அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பிடித்துவைத்த உருண்டையை பொன்னிறமாக வரும்வரை பொரிக்கவும். தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட ருசி பிரமாதமாக இருக்கும்! - பி. விவேக் ஆனந்த் படங்கள்: தே.தீட்சித் via Vikatan.com ![]() "ஸ்பெஷல்ஸ்" |
Posted: 05 Aug 2014 07:43 AM PDT இலையின் நுனியில் பனி துளி உடையும் முன் உன் முகம் காட்டுகிறது. உனக்குள் என்ன? உணர்ந்து பார் உயிர் பிரியும்முன். (y) (y) ![]() "தன்னம்பிக்கை வரிகள்" |
Posted: 05 Aug 2014 07:30 AM PDT |
Posted: 05 Aug 2014 07:14 AM PDT புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார். தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார். உடனே அமைச்சர்,''இது ஊழலுக்கு வழி வகுக்கும். நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.'' என்றார். தொழில் அதிபர் உடனே ''சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம். இந்தக் காரின் விலை ஒரு ரூபாய். ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக் காரை வாங்கிக் கொள்ளுங்கள்.'' என்றார். உடனே அமைச்சர்,''ரொம்ப சந்தோசம்,'' என்று சொல்லிக் கொண்டே பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து, ''அப்படியானால் எனக்கு பத்து கார் கொடுங்கள்.'' என்றாரே பார்க்கலாம்!. :P :P # அமைச்சர்கள் என்றும் அமைச்சர்களே # :P :P ![]() குசும்பு... 2 |
Posted: 05 Aug 2014 06:57 AM PDT தந்தை பாசம் ♥ நிலவில் கடைசியாக இறங்கி நடந்த மனிதர் ஜெனி செர்னன் . இவர் விண்வெளி பயணத்துக்கு முன் தன் மகளிடம் " நான் நிலவில் கால் பதித்தால் அங்கு உன் இனிஷியலான "TDC " யை ( TDC = Tracy Dawn Cernan ) பதிவு செய்வேன் " என்று வாக்களித்தார். நிலவில் இறங்கியதும் மகளின் இனிஷியலை பதிவு செய்து வாக்கை நிறைவேற்றினார். இந்த எழுத்துக்கள் எவ்வளவு காலம் அழியாமல் இருக்கும் தெரியுமா ? லட்சம் ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்கும். ஏனென்றால் நிலவில் வெளி (Atmosphere) கிடையாது. http://www.space.com/20790-eugene-cernan-astronaut-biography.html via சாத்தப்பன் நா. ![]() அரிய தகவல்கள் |
Posted: 05 Aug 2014 06:44 AM PDT |
Posted: 05 Aug 2014 06:30 AM PDT |
Posted: 05 Aug 2014 06:15 AM PDT ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். ஒரு நாள் காலை சூரியோதத்துக்கு பதில் பிச்சைகாரர் முகத்தில விழித்து கோபத்தோடு திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது... கடுப்பாகி பிச்சைகாரரை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்.. பிச்சைகாரன் கலங்கவில்லை கல கல வென சிரிக்க தொடங்கினான் அரசருக்கு மேலும் கோபம் மற்றவர்களுக்கு திகைப்பு.. பிச்சைக்காரன் சொன்னான் என் முகத்தில் நீங்கள் விழித்தால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே உங்கள் முகத்தில் நான் முழித்ததால் என் உயிரே போக போகிறதே அதை எண்ணி சிரித்தேன்.. அரசன் தன தவறு உணர்ந்து தலை குனிந்தான் தண்டனை ரத்து செய்யப்பட்டது... தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும். :) Relaxplzz |
Posted: 05 Aug 2014 06:02 AM PDT "பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை". - காமராஜ். கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் அப்போதைய முதல்வர் காமராஜர் . மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர். பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர். ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் "காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?", அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள். "ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க" என்றார். என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது. அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் "பெல்" என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது. காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு. அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார், "பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை". - சந்திரன் ![]() "காமராஜர் ஒரு சகாப்தம்" |
Posted: 05 Aug 2014 05:45 AM PDT |
Posted: 05 Aug 2014 05:30 AM PDT |
Posted: 05 Aug 2014 05:15 AM PDT பூஜ்யம் ஒரு ராஜ்ஜியம் ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.ஆசிரியர், ""ஏன் ஒளிந்து கொண்டாய்?'' என்று கேட்டார்.""நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றியார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே,'' என்று வருத்தமாக கூறியது. புன்னகைத்த ஆசிரியர், "ஒன்று' என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார். குழுவினரைப் பார்த்து, ""இதன் மதிப்பு என்ன?'' என்றார்.""ஒன்று!'' என்றன மற்ற எண்கள்.அடுத்து பூஜ்யத்தை அதன் அருகில் நிற்கச் சொன்னார்.""இப்போது?''""பத்து!'' என்று மற்ற எண்கள் உரக்கக் கத்தின.அடுத்து பூஜ்யத்தைப் பார்த்து,""இப்போது தெரிந்து கொண்டாயா உன் மதிப்பு? "ஒன்று' என்ற சாதாரண எண் உன் சேர்க்கையால் பன்மடங்கு அதிக மதிப்பு அடைந்ததைப் பார்த்தாயா?'' என்றார்.எல்லா எண்களும் மகிழ்ச்சியுடன் கை தட்டின."" ஆமாம்... நான் சரியான இடத்தில் இருந்தால், நானும் பயனுடையவன்தான். நான் மற்றவருடன் சேர்ந்தால் நாங்கள் அனைவருமே அதிக மதிப்பு வாய்ந்தவர் ஆகிறோம்,'' என்று பூஜ்யம் மகிழ்ந்தது. இது போலதான் நாம் எப்படி ஆகவேண்டும் எங்கு இருக்கவேண்டும் என சரியாக தீர்மானித்தால் எதிலும் ஜெயமே |
Posted: 05 Aug 2014 05:00 AM PDT உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்..... நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான, ~~~PASSPORT ~~~DRIVING LICENCE, ~~~PAN CARD, ~~~VOTER ID, ~~~RATION CARD, ~~~BANK PASSBOOK, ~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும். ![]() |
அருமையான ஓவியம் Posted: 05 Aug 2014 04:45 AM PDT |
Posted: 05 Aug 2014 04:30 AM PDT |
Posted: 05 Aug 2014 04:15 AM PDT செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!! *#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க *#0000# – தயாரிப்பு தேதி பார்க்க #*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய *#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர *8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய *#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய *#0001# – *#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய #*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய *#67705646# – clears the LCD display(operator logo). *#147# – This lets you know who called you last (Only vodofone). *#1471# – Last call (Only vodofone). #pw+1234567890+1# – Provider Lock Status. #pw+1234567890+2# – Network Lock Status. #pw+1234567890+3# – Country Lock Status. #pw+1234567890+4# – SIM Card Lock Status. *#21# – This phone code allows you to check the number that "All Calls" are diverted to. *#2640# – Displays phone security code in use. *#30# – Lets you see the private number. *#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க 2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர 2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட 1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட #*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய *#62209526# – Display the WLAN adapter's MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80. *#746025625# – Sim clock allowed status. #pw+1234567890+1# – Displays any restrictions that your sim has. *#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below: 1. Shows the Serial Number. 2. Shows the Month and Year of your mobile Manufacture. 3. Shows the date at which the mobile was purchased (MMYY). 4. Shows the life time of your mobile (time passed since last restart). 5. Shows the date at which your mobile was last repaired – if found (0000) To exit from this mode, simply switch off and then switch on your mobile phone. *#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation. - This enables your mobile to work with increased signal strength, use better signal reception. - This also helps you increase your GPRS speed to some extent. - It has drawback that your phone battery will be consumed *#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated. *#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time. *#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically. If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538# Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345 *#3925538# – used to delete the contents and code of wallet. |
Posted: 05 Aug 2014 04:00 AM PDT காலைல எழுந்ததும் டெய்லி டிரஸ் அயர்ன் போட்டுட்டு போறவரா நீங்க...!?? பவர் கட்'ல அயர்ன் பண்ணாம கசங்கின டிரஸ்ஸ போட்டுட்டு போய் அவமானபடுறவரா நீங்க...!!??! இனி வேண்டாம் அந்த கவலை உங்களுக்கு...!!! இதோ கைவசம் ஒரு சின்ன டிப்ஸ்....!!! 1. அயர்ன் பண்ண வேண்டிய உங்க டிரஸ்ஸ ஒரு ஹேஙகர்'ல மாட்டிவிடுங்க... 2. வாட்டர் ஸ்ப்ரே (Spray Bottle) பாட்டில்'ல கொஞ்சம் தண்ணி நிரப்பிகோங்க... 3. ஹேங்கர்'ல இருக்க உங்க டிரஸ் மேல எல்லா இடத்துலயும் கொஞ்சமா ஸ்ப்ரே பண்ணிவிடுங்க... 4. அவ்ளோதான்... போய் குளிச்சுட்டு வந்து பாருங்க... டிரஸ் அயர்ன் பண்ணின மாதிரி நீட்டா இருக்கும்.... அத நீங்க போட்டுட்டு ஆபீஸ்/காலேஜ்/ஸ்கூல் போறதுக்குள்ள முழுசா அயர்ன் ஆகிடும்.... குறிப்பு: ரொம்ப ஸ்ப்ரே பண்ணிடாதீங்க... ஜலதோஷம் பிடிச்சிடும்.... நாளைக்கே ட்ரை பண்ணுங்க...! - ராஜன் P.T * எம் அப்துல் காதர் ![]() |
Posted: 05 Aug 2014 03:45 AM PDT |
Posted: 05 Aug 2014 03:30 AM PDT |
Posted: 05 Aug 2014 03:15 AM PDT டாக்டர் : கர்ப்பமா இருக்கும்போது மெகா சீரியல் பாக்காதீங்கன்னு சொன்னேனே. . . கேட்டீங்களா? பெண் : ஏன் டாக்டர் என்ன ஆச்சு! . . . . . . . . . . . . . . .. டாக்டர் : பொறந்த உடனேயே உங்க குழந்தை, என் அம்மா வயித்த கிழிச்ச உன்னை பழிக்குப் பழி வாங்காம விடமாட்டேன்னு சொல்லுது.. :O :O |
Posted: 05 Aug 2014 03:00 AM PDT தகவல் துணுக்குகள் * கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் எலிகளே கிடையாது. * எல்லா வகை உயிரினங்களிலும் ஆணை விட பெண்ணே சராசரியாக அதிக காலம் வாழ்கிறது. * சராசரி மனிதன் வாழ்நாளில் 3 ஆண்டுகளை டாய்லெட்டில் கழிக்கிறான். * இதுவரை அறியப்பட்டதில் ஒரே முட்டையில் 9 மஞ்சள் கருக்கள் வரை இருந்துள்ளன. * பெரும்பாலான மனிதர்களால் ஒரே நேரத்தில் 4 விஷயங்களுக்கு மேல் நினைவு வைத்திருக்க முடியாது. * பூமியின் எடை ஒவ்வொரு நாளும் 100 டன் அதிகரிக்கிறது... காரணம் விண்வெளியிலிருந்து விழும் குப்பைகள்! * மூழ்கவே முடியாத சாக்கடலில்கூட, சில உபகரணங்களின் உதவியால் மூழ்க முடியும்! * சகாரா பாலைவனத்தின் சூரிய ஆற்றலில் 0.3 % மட்டுமே ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது. * அமெரிக்காவின் கெண்டகியில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது குளிக்க வேண்டும் என சட்டமே உள்ளது. * சிப்ஸ் போன்ற பாக்கெட் உணவுப்பொருட்களில் ஏறக்குறைய 68% காற்றே நிரப்பப்பட்டுள்ளது. * பூனைகளைவிட மனிதர்களுக்கு 20 மடங்கு சுவை உணர்வு அதிகம். * குளிர்நீரைவிட சூடான நீர் விரைவாக உறையும். ![]() தகவல் துணுக்குகள் |
Posted: 05 Aug 2014 02:45 AM PDT "தமிழன் சாதித்த கட்டிடக்கலை" இடம் - திருப்புவனம் (கும்பகோணம்) - ரமேஷ் முத்தையன் ![]() "தமிழன் சாதித்த கட்டிடக்கலை" |
Posted: 05 Aug 2014 02:30 AM PDT |
Posted: 05 Aug 2014 02:15 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment