Tuesday, 12 August 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஓவியப் போட்டி ஒண்ணு நடந்தது. சின்னப் பசங்க நிறையப்பேரு படம் வரைஞ்சு கொடுத்தாங்க....

Posted: 12 Aug 2014 09:15 AM PDT

ஓவியப் போட்டி ஒண்ணு நடந்தது. சின்னப் பசங்க நிறையப்பேரு படம் வரைஞ்சு கொடுத்தாங்க. ஒரு பையன் கொடுத்த பேப்பர் மட்டும் வெள்ளையா இருந்தது.

மாஸ்டருக்குப் பயங்கர கோபம்.

என்னடா இது ?னு கேட்டார்.

ஒரு ஆடு புல் திங்கற ஓவியம் சார். னான் பையன்.

மாஸ்டருக்குக் குழப்பமாயிடுச்சு, ஆடு, புல் எல்லாம் எங்கேடா ? னார்.

புல் எப்படி இருக்கும் சார் ? அதுதான் ஆடு தின்னுடுச்சேன்னான் பையன்

அப்படின்னா ஆடாவது இருக்கணுமே.. .? னார் மாஸ்டர்.

புல் இல்லாத இடத்தில் ஆட்டுக்கு என்ன சார் வேலை ? அதனால் ஓடிப் போயிடுச்சுன்னான் பையன்.

#எம்புட்டு குசும்பு பாருங்க...

:P :P

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்தில் Relaxplzz

இங்கும்... அங்கும்... 1. அயல் நாட்டவர், எங்கு சென்ற போதிலும் குப்பைகளை குப்பைத்...

Posted: 12 Aug 2014 09:00 AM PDT

இங்கும்... அங்கும்...

1. அயல் நாட்டவர், எங்கு சென்ற போதிலும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுகின்றனர்.

2. அயல்நாட்டில், ஒரு அதிகாரியிடம் இரண்டு நாள் பழகிவிட்டு மூன்றாவது நாள் ஒரு பரிசுப் பொருளைக் கொடுத்து நமக்கு தேவையான காரியத்தை சுலபமாய் சாதித்துக் கொள்ள முடியாது.

3. அலுவலகத்தில் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் அருகில் ஒரு பொருள் இருக்கிறது. அதை எனக்கு எடுக்க வேண்டும் என்றால் நானே எழுந்துச் சென்று தான் எடுக்க வேண்டும். " அதை கொஞ்சம் எடுக்கறியா" என்றெல்லாம் யாரும் சொல்வதில்லை. நமது சுய தேவைக்கு ஒருவரை தொந்தரவு செய்வது அநாகரீகம். உதவி என்பது வேறு. இது வேறு. மேலாளர் தான் என்றாலும் இதைக் கொண்டு வா. அதை அங்கு வை. என கட்டளையிடும் உரிமை எவருக்கும் இல்லை.

4. எந்த சூழ்நிலையிலும் தேவையான இடங்கள் தவிர வேறு எந்த இடத்திலும் தன் தாய்மொழியை விட்டுத் தர மாட்டார்கள்.

5. எனக்குப் பிடித்த மாணவன் என மதிப்பெண்ணை அள்ளி வழங்க மாட்டார்கள். பிடிக்காதவன் என கிள்ளியும் வழங்க மாட்டார்கள்.

6. எந்த நாட்டுச் கலாச்சாரத்தில் எது பிடித்திருந்தாலும் அதை இரசிப்பார்கள், இரண்டாம் பட்சமாக மட்டுமே. இது பிடித்தது என்று மறுநாளே அதற்கு மாறிவிட மாட்டார்கள்.

7. செக்யூரிட்டி வேலை செய்பவர் என்பதால், அவர் கதவை திறந்து விட்டு ஒவ்வொருவரையும் வணங்க வேண்டும் என்பதில்லை. கழிப்பறை சுத்தம் செய்பவர் எனினும், செக்யூரிட்டி எனினும் ப்ராஜெக்ட் மேனேஜர் எனினும் அனைவரும் சமமே.

இன்னும் நாம் கற்றுக்கொள்ள எத்தனையோ இருக்கிறது. நம்மிடம் அவர்கள் கற்றுக்கொள்ளவும் ஆயிரம் இருக்கிறது. நம் கலாச்சாரத்தில் அவர்கள் இரசிப்பதை அவர்களுக்கு பிடித்ததை அவர்களுக்கு உகந்ததை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள்.

நாம் என்ன செய்கிறோம் என்பதை சிந்திக்கவே இந்த பதிவே தவிர அயல்நாட்டவரின் அனைத்து கலாச்சாரத்தையும் ஆதரிப்பதற்கு அல்ல. மேற்சொன்ன எதையேனும் கற்றோமா? நாகரீகம், மேலை நாட்டு கலாச்சாரம் என்ற பெயரில் கண்ட படி உடுத்தவும், கண்ட நேரத்தில் ஊர் சுற்றவும், கண்ட இடத்தில் பிசா பர்கர் என கண்டதை உண்ணவும் கற்றுக் கொண்டோமே தவிர நல்லதைக் கற்க மறந்தோம்.

நம் நாட்டில் அரசியல் வாதிகள் மட்டுமே ஊழல் செய்கிறார்கள் என்றல்ல. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது ஊழல். அவற்றை முதலில் களையெடுப்போம்.

அயல் நாட்டைப் பார்த்து கற்கும் ஆசை வந்தால் நல்லதை மட்டும் கற்போம். அதுவும் ஆசைக்கே. நம் திருவள்ளுவர் எழுதி வைத்ததை கற்கவே இந்த ஒரு ஆயுள் போதாது. சிந்தனையில் மாற்றம் கொள்வோம். அதுவே உண்மையான நாகரீக வளர்ச்சி.

பி.கு : அயல்நாடு என்று நான் பார்த்த சில ஐரோப்பிய நாடுகளை மனதில் வைத்தே எழுதினேன்.

-ஆதிரா


# படித்ததில் பிடித்தது # - 1

எது...?

Posted: 12 Aug 2014 08:50 AM PDT

எது...?


ஜப்பானில் உள்ள அழகிய குட்டி போன்சாய் மரங்கள்

Posted: 12 Aug 2014 08:40 AM PDT

ஜப்பானில் உள்ள அழகிய குட்டி போன்சாய் மரங்கள்


:)

Posted: 12 Aug 2014 08:30 AM PDT

:)


ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி… உண்மை விளக்கம்: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி… என்...

Posted: 12 Aug 2014 08:15 AM PDT

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…

உண்மை விளக்கம்:
ஐந்து பெற்றால்
அரசனும் ஆண்டி…
என்பது
ஐந்து பெண் மக்களைப்
பெறுவதைக்
குறிக்கவில்லையாம்..!
-

கீழ்கண்ட
விபரப்படிக்கான
ஐந்து பேரைக்
கொண்டிருப்பவன்,
அரசனே ஆனாலும்
கூட
அவனது வாழ்க்கை வே
அழிவை நோக்கி போகு
என்பதுதான்
உண்மையான
அர்த்தம்…
-

1) ஆடம்பரமாய்
வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல்
வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற
மனைவி,

4) ஏமாற்றுவதும்
துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத
பிடிவாதமுடைய
பிள்ளைகள்
என்பதாகும்..

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்தில் Relaxplzz

வியக்க வைக்கும் தகவல் : தர்மபுரியிலுள்ள "மல்லிகார்ஜுனர்" கோயிலிலுள்ள "நவாங்க" ம...

Posted: 12 Aug 2014 08:00 AM PDT

வியக்க வைக்கும் தகவல் :

தர்மபுரியிலுள்ள
"மல்லிகார்ஜுனர்" கோயிலிலுள்ள
"நவாங்க" மண்டபத்தில்
நூறு தூண்கள் உள்ளன.
அதில், இரு தூண்களின்
அடிப்பகுதி பூமியைத்
தொடுவதில்லை.
ஒரு மெல்லிய குச்சியை
நுழைத்து தூணின்
மறுப்பக்கத்திலிருந்து எடுத்து
இதைப் பரிசீலித்துப்பார்க்க முடியும்.
ஒவ்வொரு தூணும்
2 டன் முதல் 3 டன்
வரை எடை கொண்டது.......


93 வயது பாட்டி... நம் வாழ்த்துக்கள்

Posted: 12 Aug 2014 07:45 AM PDT

93 வயது பாட்டி... நம் வாழ்த்துக்கள்


:)

Posted: 12 Aug 2014 07:39 AM PDT

:)

Posted: 12 Aug 2014 07:30 AM PDT

:)


ஒரு நாளு ஒரு சிங்கத்து கிட்ட நம்ப ஆளு ஒருத்தன் மாட்டிக்கிட்டான். "ஐயோ கடவுளே...

Posted: 12 Aug 2014 07:15 AM PDT

ஒரு நாளு ஒரு சிங்கத்து கிட்ட
நம்ப ஆளு ஒருத்தன்
மாட்டிக்கிட்டான்.

"ஐயோ கடவுளே காப்பாத்து"ன்னு மண்டிபோட்டு
கடவுள கும்புட ஆரம்பிச்சுட்டான் .

கொஞ்சம் நேரம் கழிச்சி கண்ணை தொறந்து பாத்தா
அந்த சிங்கமும்
மண்டி போட்டு சாமி கும்பட்டுகுனு இருந்துது.

அத பாத்து
அவன் ஷாக் ஆயிட்டான்.

மெதுவா கேட்டான் .
" நீ இன்னாத்துக்கு இப்ப ப்ரே பண்ற"

சிங்கம் ; " டேய்... சாப்பிடறதுக்கு முன்னாடி நீங்கள்ளாம் ப்ரே பண்றதில்ல?" அது மாதிரி தான்..

#செத்தாண்டா சேகரு :P :P


குசும்பு... 3

ஒரு ஏழை, பணக்காரன் ஆகிவிட்டால்..... அவன், தனது உறவுகளை மறந்து விடுகின்றான்....!!...

Posted: 12 Aug 2014 06:58 AM PDT

ஒரு ஏழை,
பணக்காரன் ஆகிவிட்டால்.....
அவன், தனது உறவுகளை மறந்து விடுகின்றான்....!!!
ஒரு பணக்காரன்
ஏழை ஆகிவிட்டால்.......
அவனது உறவுகள், அவனை மறந்து விடுகின்றது.....!!!

-Pon Mani


"சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 3

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, ஆதி மனிதன் வசித்த குடியம் குகைகள்! திருவள்ளுர்...

Posted: 12 Aug 2014 06:42 AM PDT

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, ஆதி மனிதன் வசித்த குடியம் குகைகள்!

திருவள்ளுர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் அருகில் உள்ளது குடியம் குகை.


"அழகு தமிழ்நாடு"

:)

Posted: 12 Aug 2014 06:30 AM PDT

:)


இங்குள்ள பல பேருக்கு இவர் யார் என்று தெரிய வாய்பில்லை! உண்மையில் விளையட்டு துறை...

Posted: 12 Aug 2014 06:07 AM PDT

இங்குள்ள பல பேருக்கு இவர் யார் என்று தெரிய வாய்பில்லை!

உண்மையில் விளையட்டு துறைக்கு என்று ஒருவருக்கு விருது வழங்க வேண்டுமானால்! அதற்கு இவரை தான் முதல் ஆளாக பரிசீலிக்க வேண்டும்!

*1932 இல் 37 போட்டிகளில் 133 கோல் , 1934 -35 இல் 43 போட்டிகளில் 201 கோல் என இவர் அசுரத்தனமாக அடிப்பதை பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் 'நீங்கள் ஹாக்கி வீரர் என்று சொல்லி ஒரு கிரிக்கெட் வீரரை அணியில் சேர்த்து விட்டீர்கள்! இவர் ரன்களை போல அல்லவா கோல்கள் அடிக்கிறார்!' என்று சொல்லி இருக்கிறார்!

*சில வெளிநாட்டு பத்திரிக்கைகள் 'இவர் மட்டையில் பசையை தடவி வைத்திருப்பார் போலும்! பந்து அவர் மட்டையுடனே செல்கிறதே!' என எழுதின!

*ஆஸ்திரிய நாட்டில் இவர் நான்கு கைகளுடன் இருப்பது போல சிலை வைக்கப்பட்டு உள்ளது! அந்த நான்கு கைகளும் தலா ஒரு ஹாக்கி மட்டையை கையில் பிடித்த வண்ணம் இருக்கும்!

*1905 இல் பிறந்து 1979 இல் மறைந்த தியான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 தான் இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது!

*ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என அந்தக் காலத்து பத்திரிக்கைகள் இவரை வர்ணித்தன! 'ஹாக்கியின் கடவுள் " என்றும் வர்ணிக்கப்படுகிறார்! இவரைப்போல அசுரத்தனமாக எந்த வீரரும் இன்று வரை ஹாக்கி ஆடியதில்லை!

*ஹாலந்து நாட்டில் இவரது ஹாக்கி மட்டையை உடைத்து அதில் காந்தம் ஏதும் வைத்து இருக்கிறாரா என சோதித்து இருக்கிறார்கள்!

*ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தியான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை; பலமுறை தவறியபின்னர் தியான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

*தியான் சந்தின் திறமையை பார்த்த ஹிட்லர் ஜெர்மன் குடியுரிமையுடன், ராணுவத்தில் கலோனல் பதவியும் தருவதாக சொல்லி இருக்கிறார்! அந்த சலுகையை தயான் சந்த் மறுத்து விட்டார்!

*சர்வதேச ஹாக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை இவர் அடித்துள்ளார்.

இவர் பெயர் "தியான் சந்த்".

பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கபட்டது. விளையாட்டு அமைச்சகமும் இவருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு "பாரத் ரத்னா" கொடுக்கப்படுவதில்லை என்பதால் அதை அரசு மறுத்துவிட்டது.

நன்றி : சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா.


"சில அதிசயங்கள் - தகவல்கள்" - 2

தெரிந்து கொள்வோம்

Posted: 12 Aug 2014 05:54 AM PDT

தெரிந்து கொள்வோம்


தெரிந்து கொள்வோம் - 1

எளிமையான.... பசுமையான வீடு...! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 12 Aug 2014 05:45 AM PDT

எளிமையான....
பசுமையான வீடு...!

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:)

Posted: 12 Aug 2014 05:30 AM PDT

:)


கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!. ---------------------------------------------...

Posted: 12 Aug 2014 05:15 AM PDT

கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
-----------------------------------------------------------

1. பொருட்படுத்தாதீர்கள்.
------------------------------------

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.
----------------------------------------------------------------

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்.
---------------------------------------------------------

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.
--------------------------------------------------------------------------

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

டேய் யார கேட்டுடா என் ஆளுக்கு லவ் லெட்டர் குடுத்த.. ;-)

Posted: 12 Aug 2014 04:45 AM PDT

டேய் யார கேட்டுடா என் ஆளுக்கு லவ் லெட்டர் குடுத்த.. ;-)


:)

Posted: 12 Aug 2014 04:30 AM PDT

:)


ஐடியா அழகுசாமி ஒரு நாள் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க போனார். பலமுறை பணம் எடுக்கப் போர...

Posted: 12 Aug 2014 04:15 AM PDT

ஐடியா அழகுசாமி ஒரு நாள் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க போனார். பலமுறை பணம் எடுக்கப் போராடினார் பணம் வரவில்லை..

நொந்து போய் Bank- க்கு போன் பண்ணி சொன்னார். Bank-ல் கணக்கை சரிபார்த்த அதிகாரி அவரது கணக்கு சரியாக இருப்பதாக பதில் சொன்னார். பணமும் உள்ளது. பிளாக் செய்ய வில்லை எனவே தாராளமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றார். கணக்கில் பிரச்சனை இல்லை என பதிலளித்தார்.

அழகுசாமி மீண்டும் முயற்சித்தார். ஆனால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. கடுப்பான அவர் காவலாளியிடம் ஏ.டி.எம்-ல் பணடமில்லையா என்றார்?

காவலாளி பணம் இருக்கிறது சார். மற்றவர்கள் எல்லாம் எடுத்துட்டு போறாங்களே பாக்கலியா சார் என்றார்.

மீண்டும் மீண்டும் முயற்சித்த அழகுசாமியிடம் காவலாளி ஒருவேளை உங்க கார்டு damage ஆகியிருக்கும் என்றார்.

உடனே நம்ம ஐடியா அழகுசாமி " என்ன பேச்சுப்பா பேசுற? நான் என்ன முட்டாளா? கார்டு damage ஆகிடாம இருக்க தான் அதை Laminate பண்ணி பத்திரமா வைச்சிருக்கேன்னு பதிலளித்தார்.

:P :P

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்தில் Relaxplzz

உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177...

Posted: 12 Aug 2014 04:00 AM PDT

உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர்.

இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.

ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம்உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது !

(AUG 8TH 1173 -1372) தஞ்சையில் உள்ள சித்தர்களின் கட்டிடக்கலைக்குபெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது.

இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம். இப்போதுள்ள எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது? என்பது உலகுக்கே வியப்பாக உள்ளது.வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!

சிலநேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், அதைக்காட்டிலும்சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றிமறந்து விடுகின்றோம்!


:)

Posted: 12 Aug 2014 03:30 AM PDT

:)


எது நாகரீகம்...?. நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட்குட...

Posted: 12 Aug 2014 03:15 AM PDT

எது நாகரீகம்...?.

நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட்குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள்முழுக்க வேலை செஞ்சாங்க ???..

எந்த டூத் பேஸ்ட்ல உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கணங்க ???....

அமேஜான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய வச்சுதான் தலையிலதேச்சு முடிய வளாத்த்தங்கலா???...-

எந்த காஃபீ /டீ குடிச்சுட்டு அவங்கங்க வீட்டுக்காரம்மாவ
புரிஞ்சிக்கிட்டாங்க ???..

எந்த இந்ஸ்டிட்யூட்ல 10 லட்சம் செலவு பண்ணி படிச்சிட்டு ,தலப்பாகட்டு பிரியாணி கடை சமையல் மாஸ்டர் பிரியாணி செய்யிறாரு ????..

வாழ்க்கை தரத்தை உயர்த்திடோம்னு நினைச்சு ,நம்ம உடம்பு தரத்தை கீழ போட்டுட்டோமே ...

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்தில் Relaxplzz

இவர் பெயர் சந்தியா ....கேரளாவில் உள்ள இவர் ஒரு குடும்ப பெண்மணி ...இவரின் புகைப்ப...

Posted: 12 Aug 2014 03:01 AM PDT

இவர் பெயர் சந்தியா ....கேரளாவில் உள்ள இவர் ஒரு குடும்ப பெண்மணி ...இவரின் புகைப்படம் இணையத்தில் வரக் காரணம் ...இவரின் துணிச்சல் ...வீர சாஹசம் ஒன்றும் இவர் புரியவில்லை ...இரண்டு கேள்வி கேட்டு இருக்கிறார் ...யாரிடம் ...அரசியல்வாதியிடம் ...

கேரளாவில் எதற்கு எடுத்தாலும் ஒரு ஹர்த்தால் (அதாவது நம்ம ஊருல இது பந்த் )... நடத்துவார்கள்....இல்லை என்றால் ரோட்டில் நின்று கொண்டு பொதுமக்களை தங்கள் வேலைகளை பார்க்க விடாமல் எதையோ கூவி கொண்டு இருப்பார்கள் ...எல்லா ஊரிலும் இது தான் என்றாலும் கடவுளின் தேசத்தில் இது கொஞ்சம் அதிகம் ....அப்படி ஒரு நாள் ரோட்டில் நின்று சில அரசியல் தலைகள் வழக்கம் போல் கூவி கொண்டு ரோட்டில் யாரையும் விடாமல் செய்ய அந்த வழியாக வந்த இந்த சந்தியா அவர்களிடம் '' இந்த போராட்டத்தினால் பொதுமக்களுக்கு என்ன கிடைக்கும் ....உங்களுக்கு தான் இதனால் லாபம் ''

(Who is getting benefited out of the protests and strikes conducted by politicians every now and then ? Other than politicians and political parties , anyone is getting benefited out of it ?)

12,13 வயது பெண்ணை கற்பழித்து கொன்று குவிக்கும் சம்பவங்கள் நாட்டில் நடக்கும் பொது அதை குறித்து எந்த அரசியல் வாதிகளும் இப்படி ரோட்டில் நின்று போராடவில்லை ஏன்?

( When female children of 12 to 13 yrs are getting brutally raped and killed, why no politicians or political parties are coming up with any protests or strikes ?)

இந்த கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை ...அதில் ஒரு அரசியல் நாதாரி சந்தியாவை எதோ தவறாக பேச முற்ப்பட அங்கிருந்த மற்ற மக்களும் சந்தியாவுக்கு ஆதரவாக பேச ஆரம்பிக்க ...இவர்களுக்கு அல்லு இல்லை ... உடனே அந்த இடத்தை விட்டு போய் விட்டார்கள் .....

ஆக இந்த அரசியல் --------களுக்கு தைரியம் கொடுப்பதே நாம் தான் ....
நாம், மக்களாகிய நாம் ஒழுங்காக இருந்தால் எல்லா அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் ஒழுங்காக இருப்பார்கள் .....
இவர்களை தட்டிக்கேட்டால் நாம் நன்றாக இருப்போம் ..இதை ஒரு பெண் நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள் .

-Nantha.


பொது செய்திகள் - 2

:)

Posted: 12 Aug 2014 02:54 AM PDT

கத்திபாராவில் சுத்தி செல்லும் வாகனங்களை பறந்து கடக்கும் மெட்ரோ!!

Posted: 12 Aug 2014 02:40 AM PDT

கத்திபாராவில் சுத்தி செல்லும் வாகனங்களை பறந்து கடக்கும் மெட்ரோ!!


:)

Posted: 12 Aug 2014 02:30 AM PDT

:)


மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், "...

Posted: 12 Aug 2014 02:15 AM PDT

மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன்,

"ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான்.

கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!''

""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான்.

பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?''..

கணவன் பொறுமையாகச் சொன்னான்,

""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே?

அப்ப எனக்கு எப்படி இருக்கும்?''..

:P :P

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்தில் Relaxplzz

0 comments:

Post a Comment