Interesting Tamil Facebook posts |
- இன்று உலக யானைகள் தினம்மாம் !!! பேசிப் பேசியே நாட்டைப் பிடிக்கும் மனிதர்களுக்கு...
- #மூங்கில் ஒரு நாளில் 4 அடி உயரம் வளரும். #முதன் முதலில் மூங்கிலிலிருந்து தான் க...
- Classic Scene forever
- ஒரு மெகா டன் அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விளைவுகள்: **1.6 K.M.அகலத்திற்கு ஒளிக...
- சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் ரஜினியைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது...
- This "young cop look" is getting Impressive day by day! Looks Very different fro...
- :o
- Purinjavanga like pannunga... Appaiye yenna purinjathu nu comment pannunga...
- ராபின் வில்லியம்ஸ் மரணம் ! "அவ்வை சண்முகி "படத்தின் ஒரிஜினல் பதிப்பில் ( Mrs. D...
- < புதிய பாரதி > ஓடி விளையாடுவாயா பாப்பா! -நீ ஓய்ந்திருப்பதேனடி பாப்பா! கூடி விள...
- 'லட்சம் பிரச்சினையை வச்சிகிட்டு போராடிகிட்டிருக்கேன், நீ வந்துட்ட கத்தி சுத்தின்...
- Good morning frnds
Posted: 12 Aug 2014 09:50 AM PDT இன்று உலக யானைகள் தினம்மாம் !!! பேசிப் பேசியே நாட்டைப் பிடிக்கும் மனிதர்களுக்கு, பேசத் தெரியாத விலங்குகளிடமிருந்து காட்டை பிடிப்பது அத்தனை கஷ்டமல்ல..!! காட்டிலிருந்து வந்தவன் காட்டை விலை பேசுகிறான், விலங்கிலிருந்து பிறந்தவன் விலங்கை ஓட விரட்டுகிறான், மனித, வனவிலங்கு மோதல்கள் கூட இனத் தகராறு தான்..!! நிலத்தை அபகரிக்க விலங்கினத்தை அழிக்கிறான்..!! சுய நலம் காக்க கொலை செய்ய துடிக்கிறான்..!! அறிவு ஐந்து என்றாலும் அவர்களுக்கும் உணர்ச்சி கொப்பளிக்கும் இதயமுண்டு, கொஞ்சி மகிழ குடும்பமுண்டு, பார்த்து ரசிக்க கண்களுண்டு, நம்மைப் போலவே ...!! மனிதனில்லா உலகில் விலங்குகள் குறையின்றி வாழும், ஆனால் விலங்கில்லா உலகில் மனித வாழ்வு சாத்தியமற்றது..!! அப்பாவியான, யாரும் கேட்க நாதியற்ற விலங்குகளின் மேல் திணிக்கப்படும் ஒவ்வொரு வன்முறையும் உலக வரலாற்றின் கறுப்பு தினங்களே..!! ![]() |
Posted: 12 Aug 2014 09:30 AM PDT #மூங்கில் ஒரு நாளில் 4 அடி உயரம் வளரும். #முதன் முதலில் மூங்கிலிலிருந்து தான் காகிதம் தயாரிக்கப்பட்டது. #மீன்பிடி தூண்டிலுக்கு மூங்கில் தான் பயன்படுத்தப்படுகிறது. #13000 அடி உயரமுள்ள இடத்தில் கூட மூங்கில் வளரும். #ஆசியாவில் தான் மூங்கிலின் பயன்பாடு அதிகம். #கம்ப்யூட்டர் நகரம் என்று அழைக்கப்படுவது சான்பிரான்ஸிஸ்கோ. #ஏலக்காய் செடி 40 ஆண்டுகள் வரை காய்க்கும். #பப்பாளிக் காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடல் இளைக்கும். #E-mail என்பதன் விரிவாக்கம் Electronic Mail என்பதாகும். #ஐ.நா.சபையில் முதலில் இந்தியில் பேசியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். #உலகில் அதிகளவில் வாழைப் பழங்களை சாப்பிடுபவர்கள் ஜெர்மானியர்களே. #பூக்கும் தாவரங்கள் உலகில் தோன்றி 141மில்லியன் ஆண்டுகளாகின்றன. |
Posted: 12 Aug 2014 09:20 AM PDT |
Posted: 12 Aug 2014 08:35 AM PDT ஒரு மெகா டன் அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விளைவுகள்: **1.6 K.M.அகலத்திற்கு ஒளிக்கதிர் தோன்றும். **கடுமையான வெப்ப அலை பரவத் துவங்கும். **சில நிமிடங்களில் கடுமையான வெடிப்பு நிகழும். **மின் காந்தத் துடிப்பு அலைகளினால் மின்சாரம் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் பழுதாகும். **வெடிப்பினால் ஏற்படும் வெப்பம் ஒரு கி.மீ.சுற்றளவிற்கு சுமார் பத்து மில்லியன் டிகிரி சென்டிகிரேட் இருக்கும். **இந்த அதிக வெப்பத்தினால் மனிதன்,மரம்,செடி,கொடிகள்,உயிரினங்கள் அனைத்தும் ஒரு நொடியில் ஆவியாகிப் போகும். **2.5 கி.மி.க்கு அப்பால் உள்ள மரம்,பிளாஸ்டிக் மற்றும் துணி வகைகள் தானாகப் பற்றி எரியும். **சுமார் எட்டு கி.மி.க்கு அப்பால் உள்ள மனிதர்களின் ஆடைகள் எரியத் துவங்கும். **11 கி.மி..க்கு அப்பால் உள்ள மனிதர்களுக்கு சாவு ஏற்படும் அளவுக்கு தீப்புண்கள் ஏற்படும். **மரச்சாமான்கள்,பெட்ரோல் பங்குகள் தீப்பற்றி எரியும். **2.5 மில்லியன் மக்கள் சில வாரங்களில் அழிவர். **அடுத்த பத்து ஆண்டுகளுக்கு காற்றில் கலந்திருக்கும் கதிரியக்கத்தால் மிகப் பல கொடுமைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். |
Posted: 12 Aug 2014 07:50 AM PDT |
This "young cop look" is getting Impressive day by day! Looks Very different fro... Posted: 12 Aug 2014 07:21 AM PDT |
Posted: 12 Aug 2014 05:40 AM PDT |
Purinjavanga like pannunga... Appaiye yenna purinjathu nu comment pannunga... Posted: 12 Aug 2014 01:50 AM PDT |
Posted: 11 Aug 2014 10:10 PM PDT |
Posted: 11 Aug 2014 09:48 PM PDT < புதிய பாரதி > ஓடி விளையாடுவாயா பாப்பா! -நீ ஓய்ந்திருப்பதேனடி பாப்பா! கூடி விளையாட பாப்பா! - ஒரு துணை கூட இல்லையடி பாப்பா! சின்னஞ்சிறு குருவி ஒன்றை - நீ தேடிப் பார்த்திடடி பாப்பா! வண்ணப் பறவைகளை நூலில் நீ படமாக காணடி பாப்பா! கொத்தித் திரியுமந்த கோழி - அதை KFCயில் கண்டிடலாம் பாப்பா! எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதைத் திதியன்று நினைத்திடு பாப்பா! பாலைப் பொழியும் பசு பாப்பா! - அதைப் போஸ்டர் தின்னவிடு பாப்பா! வாலைக் குழைக்கும் நல்ல நாய்தான் - அதை பெருமைக்கு வளர்த்திடு பாப்பா! வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு வயலில் உழுதுவரும் மாடு அண்டிப்பிழைக்கும் நம்மை ஆடு- இவை ஓய்ந்துவிட்டால் விரட்டியடி பாப்பா! காலை எழுந்தவுடன் கணினி - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல ஐபாட் மாலை முழுவதும் டி.வி - என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா! பொய் சொல்ல வேணுமடி பாப்பா! - என்றும் புறம் சொல்ல வேண்டுமடி பாப்பா! சொல்ல மறந்து நீயிருந்தால் உனக்கு தெய்வம் கூட துணையில்லை பாப்பா! பாதகம் செய்பவரை கண்டால் - நீ பதுங்கிக் கொள்ள வேணுமடி பாப்பா! ஓடி ஒளிந்து விடு பாப்பா அவர் முகத்தை மறந்துவிடு பாப்பா! சொல்லில் தாழ்வு தமிழ்ச்சொல்லே! அதை ஒதுக்கி படித்திடடி பாப்பா! ஆங்கில வழியில் நல்ல கல்வி அதை புகழ்ந்து படித்துவிடு பாப்பா! சாதிகள் உண்டடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் வேண்டும் - நீ இதை சொல்ல மறுத்தால் உனக்கு எங்கும் நுழைவு இல்லை பாப்பா! உயிர்களிடத்தில் அன்பு வேணும் -தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும், வயிர முடைய நெஞ்சு வேணும் - இதை நீ கனவில் காணலாம் பாப்பா.! - மீசை இன்னும் துடிக்கும்.... |
Posted: 11 Aug 2014 09:26 PM PDT 'லட்சம் பிரச்சினையை வச்சிகிட்டு போராடிகிட்டிருக்கேன், நீ வந்துட்ட கத்தி சுத்தின்னு...' - நிருபரிடம் சீறிய சீமான்! |
Posted: 11 Aug 2014 09:19 PM PDT |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment