Tuesday, 12 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து


ஒரு சிகரட்டை நண்பன் கூட ஷேர் பண்ணி அடிச்சா நியாயமா 50 சதவீத இழுப்பு நமக்கு கிடைச்சிடுது. இதே கேர்ள் ஃபிரண்டு கூட ஷேர் பண்ணி அடிச்சா , பத்த வச்சதும் அவ புடுங்கி இழுக்க ஆரம்பிச்சி , கடைசில ஃபில்டர் கிட்ட வந்ததும் நம்ம கிட்ட குடுத்து , நாம ஒரு இழுப்பு இழுத்ததும் , யேய் ஃபில்டர் கிட்ட வந்துடிச்சி , அதைப் போய் இழுக்குறயே அல்பம்னு திட்டி , கீழ போடசொல்லிடறா :-(

Posted: 12 Aug 2014 12:37 AM PDT

ஒரு சிகரட்டை நண்பன் கூட ஷேர் பண்ணி அடிச்சா நியாயமா 50 சதவீத இழுப்பு நமக்கு கிடைச்சிடுது. இதே கேர்ள் ஃபிரண்டு கூட ஷேர் பண்ணி அடிச்சா , பத்த வச்சதும் அவ புடுங்கி இழுக்க ஆரம்பிச்சி , கடைசில ஃபில்டர் கிட்ட வந்ததும் நம்ம கிட்ட குடுத்து , நாம ஒரு இழுப்பு இழுத்ததும் , யேய் ஃபில்டர் கிட்ட வந்துடிச்சி , அதைப் போய் இழுக்குறயே அல்பம்னு திட்டி , கீழ போடசொல்லிடறா :-(

இன்னிக்கி ஒண்ணும் சீரியஸான பெருசான வேலை இல்லை. சின்ன சின்னதா நச்சி பிடிச்ச வேலை சிலது இருந்திச்சி. ரொம்ப நாளா தள்ளிப்போட்டுகிட்டே வந்தேன். என்னிக்கா இருந்தாலும் அதை நான் தான் செஞ்சி தொலைக்கணும். ஜனநாயக நாட்ல பல வசதிகள் இருந்தாலும் , இதைப்போல சில கிச்சி மிச்சி . இன்னிக்கி அதை செஞ்சிடலாம்னு நேத்தே முடிவு பண்ணி மன உளைச்சல்ல உழண்டுகிட்டு இருந்தேன். அதிகாலை இருமல் , காலையில் சளி . ஜுரம் வந்தா தேவலாமேன்னு நினைச்சிட்டு கொஞ்சம் நல்லா குளிச்சேன். அட ! ஜுரமும் வந்துடிச்சி. ஜாலி !

Posted: 12 Aug 2014 12:32 AM PDT

இன்னிக்கி ஒண்ணும் சீரியஸான பெருசான வேலை இல்லை. சின்ன சின்னதா நச்சி பிடிச்ச வேலை சிலது இருந்திச்சி. ரொம்ப நாளா தள்ளிப்போட்டுகிட்டே வந்தேன். என்னிக்கா இருந்தாலும் அதை நான் தான் செஞ்சி தொலைக்கணும். ஜனநாயக நாட்ல பல வசதிகள் இருந்தாலும் , இதைப்போல சில கிச்சி மிச்சி . இன்னிக்கி அதை செஞ்சிடலாம்னு நேத்தே முடிவு பண்ணி மன உளைச்சல்ல உழண்டுகிட்டு இருந்தேன். அதிகாலை இருமல் , காலையில் சளி . ஜுரம் வந்தா தேவலாமேன்னு நினைச்சிட்டு கொஞ்சம் நல்லா குளிச்சேன். அட ! ஜுரமும் வந்துடிச்சி. ஜாலி !

பார்க்கிங்க் - வேலி முட்டி கிராமங்களில் ஆடு சுவற்றில் முட்டிக்கொண்டு ஒரு மார்க்கமாக நின்றுகொண்டிருக்கும்.வேலி முட்டி என்ற மதுவை உட்கொண்டு விட்டு வேலியையோ சுவற்றையோ முட்டிக்கொண்டு விசித்திரமான போஸில் குடிமகன்கள் நின்று கொண்டு இருப்பார்கள்.இவற்றையெல்லாம் காணக்கொடுத்து வைக்காத நகரத்து மக்கள் இதே போல எகனை மொகனையாக பார்க் செய்யப்பட்டு இருக்கும் காரை பார்த்து மனதை தேற்றிக்கொள்ளலாம். தற்போது பலருக்கு ஓரு குன்ஸாக கார் ஓட்டத்தெரிந்து விடுகிறது.பார்க்கிங்க் செய்ய சுத்தமாக தெரியாது.சிட்டியில் ஓட்டுவது சிரமம் என்ற நினைப்பு பலருக்கு இருக்கலாம், அது தவறு.உண்மையில் சிட்டியில் ஓட்டுவதுதான் சுலபம். ஏனென்றால் அக்கம்பக்கத்தில் நெருக்கமாக ஓட்டிக்கொண்டு வருபவர்களே உங்களை ஒழுங்காக ஓட்ட வைத்து விடுவார்கள். ரோபோ போல ஸ்டியரிங்கை பிடித்து அமர்ந்திருந்தால் போதும். ஏடுகுண்டலவாடாவை தரிசிக்க செல்கையில் நீங்களா நடந்து செல்கிறீர்கள் ? கூட்டம்தானே உங்களை தள்ளிக்கொண்டு செல்கிறது ? அதேபோலத்தான் சிட்டி டிரைவிங்கும். ஆனால் பார்க்கிங்க் செய்ய டிரைவிங்க் நேர்த்தி வேண்டும். பார்க்கிங்க் செய்யத்தெரியாமல் பலர் ஏன் சொதப்புகிறார்கள் என்றால் ,பெரும்பாலும் இவர்களுக்கு பார்க்கிங்க் செய்தே பழக்கம் இல்லை. பல இடங்களில் வேலட் பார்க்கிங்க். பல இடங்களில் பார்க்கிங்கே இல்லை . எப்படி பார்க்கிங்க் செய்து பழகுவது? கிடைத்த இடத்தில் முகத்தை திருப்பிக்கொண்டு காரை நிறுத்துவதற்கு பேர் பார்க்கிங்க் அல்ல. முதன்முதலில் கார் ஓட்டக்கற்றுக்கொண்டு ஓட்ட ஆரம்பிப்பவர்கள் ஓட்டும்போது மற்ற கார்களையோ சுவரையோ இடித்து டிங்கு வாங்குவதை விட பார்க்கிங்க் செய்யும்போது காரின் முகறையை பேர்ப்பதுதான் வழக்கம்.சிலருக்கு பார்க்கிங்க் என்றாலே டென்ஷன் , அலர்ஜி , நடுக்கம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து மூளையை சொறிந்து விட்டு குத்து டான்ஸ் போடும்.அப்படிப்பட்டவர்களை மால் பார்க்கிங்கிலோ , சினிமா தியேட்டர் பார்க்கிங்கிலோ பார்த்திருக்கலாம். ரிவர்ஸ் கியரை போட்டு விட்டு ,அது பாட்டுக்கு நக்ச்ஷிக்கோ நக்ச்ஷிக்கோ நக்ச்ஷிக்கோ என கத்திக்கொண்டு இருக்க சம்மந்தப்பட்ட நபர் டிரைவர் சீட்டில் கால்கள் நடுங்க அமர்ந்து கொண்டு ஒன்றுமே செய்யாமல் ஸ்டியரிங்கை பற்றியபடி தேவாங்கு போல அமர்ந்திருப்பதைக் காணலாம். பார்க்கிங்கை வைத்து பல காமடிகள் கூத்துக்கள் நம்முரில்தான் நடக்கும். பைக் கூட நுழைய முடியாத தெருவாக இருக்கும்.அந்த தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளின் முன்பும் டூ நாட் பார்க் இன் ஃப்ரண்ட் ஆஃப் தி கேட் என போர்டு மாட்டியிருக்கும். ஹோட்டலின் வாசலிலோ , தியேட்டரின் வாசலிலோ பார்க்கிங்க் ஃபுல் என ஒரு போர்டை மாட்டிவிட்டு அலட்சியமாக கேட்டை மூடிவிட்டு சென்றுவிடுவார்கள்.பார்க்கிங்க் இல்லாததால் உண்டாகும் வியபார இழப்பைப் பற்றி அக்கறையே கிடையாது. ஒருமுறை சென்னையின் நடுவில் இருக்கும் மிகப்பிரதானமான த்ரிஷாவுக்கு பிடித்த ஐந்து நட்சத்திர விடுதி வாசலில் ஐந்து பேர் நின்று கொண்டு , ஹோட்டலின் உள்ளே வர யத்தனிக்கும் அனைத்து கார்களையும் , பார்க்கிங்க் ஃபுல் என கூறி திருப்பி அனுப்பிக்கொண்டு இருந்தனர். முதலமைச்சர்கள் முதற்கொண்டு வைத்தியம் பார்த்துக்கொள்ளும் மிகப் பிரசித்தமான அந்த மருத்துவமனைக்கென்று பிரத்யேகப் பார்க்கிங்க் கிடையாது.மருத்துவமனைக்கு வெளியே ரோட்டின் ஓரம் இருக்கும் கார்ப்பரேஷன் பார்க்கிங்க்தான்.அதிலும் பாதி பார்க்கிங்கை அந்த நிறுவனத்தின் நர்ஸிங்க் கல்லூரி பேருந்துகளும் ஆம்புலன்ஸுகளுமே ஆக்கிரமித்துக்கொள்ளும். வேலட் பார்க்கிங்க் என போர்டு வைத்து இருப்பார்கள்.ஆளே இருக்க மாட்டார். அப்படியே அங்கே ஆள் இருந்தாலும் அவருக்கும் நிறுத்த இடம் வேண்டுமல்லவா ? அவரால் மெரீனா பீச்சில்தான் கொண்டு போய் நிறுத்த முடியும்.அது அந்த மருத்துவமனையில் இருந்து 10 கிலோ மீட்டர் இருக்கும். அங்கே போயிருப்பார் போல. பார்க்கிங்கிற்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பணத்தை வாங்கிக்கொண்டு “பார்க்கிங்க் அட் ஓனர்ஸ் ரிஸ்க் “ என கொட்டை எழுத்தில் எழுதி நக்கலடிப்பார்கள். ஒரு அலுவலகத்திற்கு காரில் செல்கையில் கேட்டினுள் கார் பாதி நுழைந்ததுமே பேண்ட் அவிழ்ந்து விழுவது கூட கவனிக்காமல் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் போல புயலென பறந்து வருவார் வாட்ச்மேன்.நாம் ஏதோ படு கேவலமான காரியம் செய்துவிட்டதைப்போல காறி உமிழ்ந்துவிட்டு படு அலட்சியமாக திட்டுவார். வெளிய போங்க என அதட்டலாக சொல்வார். எப்படி வந்தது இவருக்கு இவ்வளவு அதிகாரம் என வியப்பாக இருக்கும். பார்க்கிங்க் இடத்தை பாதுகாக்கிறார் அல்லவா ? அதனால் கிடைத்த அதிகாரம். அபார்ட்மெண்டில் சிலர் தங்கள் மனைவியை / காதலியை கூட தாரைவார்த்து கொடுத்து விடுவார்கள் , ஆனால் அவர்களுடைய பார்க்கிங்க் ஸ்பேஸை கட்டிப்பிடித்துக்கொண்டு கிடப்பார்கள்.ஒரு நிமிடம் கூட அடுத்தவர் கார் நிற்க அனுமதிக்க மறுப்பார்கள். முன்பெல்லாம் கன்னிப்பெண் வீட்டில் இருக்கையில் தங்கள் வீட்டின் முன்னால் கட்டிளங்காளையர் நடமாட்டம் இருந்தால் எப்படி பதட்டமாகி திரிவார்களோ , அதைவிட பத்து மடங்கு டென்ஷனாகி விடுகிறார்கள் தற்போது ,தங்கள் வீட்டின் முன்பு வேறு யாரோ கார் நிறுத்தும்போது . இந்த பிரச்சனையாலேயே பாதிக்கப்பட்டு சிலர் மாரடைப்பில் தங்கள் பாடியை சுடுகாட்ட்டில் பக்காவாக பார்க் செய்து விடுகின்றனர். நான்கு தியேட்டர்கள் இருக்கும் ஒரு காம்ப்ளக்ஸில் காரை ஹேண்ட் பிரேக் போடாமல் நிறுத்துங்கள் என்பார்கள். ஒன்றன்பின் ஒன்றாக இடித்துக்கொண்டு நின்றுகொண்டிருக்கும் கார்களை தள்ளி விட நான்கைந்து ஆட்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.அவர்கள் கார்களை தள்ளி தள்ளி வழி ஏற்படுத்திக்கொடுக்க , நாம் நம் காரை வளைந்து நெளிந்து வெளியே எடுக்க வேண்டும். மல்டிப்ளெக்ஸ் மாலுக்கு சினிமா பார்க்கச்சென்றால் உங்களின் டிக்கட் ரேட்டை விட பார்க்கிங்க் ரேட் அதிகமாக இருக்கும்.ஒரு புது மாலுக்கு சென்றிருந்தேன்.தரைத்தளம் மட்டுமின்றி 8 மாடி பார்க்கிங்க் வசதி உள்ள மால். எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு வெளியேறலாம் என காரை எடுத்தால் , நம்புங்கள், மெயின் ரோட்டை அடைய ஒன்றரை மணி நேரம் ஆனது . ஒன்றரை மணி நேரமும் மாலுக்குள்ளேயே ஆமை போல நகர்ந்துகொண்டேயிருந்தன கார்கள். என்னதான் உயிர் போகும் அவசரம் என்றாலும் வெளியேற முடியாத வண்ணம் ஜாங்கிரி போல பலரும் சிக்கிக்கொண்டனர். ஏன் இப்படி ஆனது , எப்போது இது சரியாகும் என்று விளக்கிச்சொல்லக் கூட ஆளில்லை. என்ன எழவு என தெரியாமலேயே அனைவரும் எரிச்சலோடு அமர்ந்திருந்தனர்.காருக்குள் அசதியில் , பசி மயக்கத்தில் குழந்தைகள் தூங்கி விட்டனர்.வளைந்து நெளிந்து குகைக்குள் இருந்து வெளி வருவது போல ஒருவழியாக வெளிவந்து பார்த்தால் மாலில் இருந்து வெளியேறும் வாகனங்களை மெயின் ரோடில் சடாரென குறுகலான ரோட்டின் மூலம் இணைத்திருந்ததால் டிராஃபிக் ஜாம் ஆகி இருந்தது. அந்த மெயின் ரோடே சின்ன ரோடுதான். திடீரென அங்கே ஒரு மால் முளைத்து இவ்வளவு கார்கள் படையெடுக்கும் என அந்த மெயின் ரோடு கனவில் கூட நினைத்துப்பார்த்திருக்காது. ஆனால் இந்த மாலுக்கு பர்மிஷன் கொடுத்தவர்களுக்கு மிக நன்றாக முன்பே தெரிந்திருக்கும். மாலின் ஆட்களும் தங்கள் இடம் வீணாகக்கூடாது என்ற பரந்த நோக்கத்துடன் தங்கள் மாலில் இருந்து வெளியேறும் ரோட்டை திடுமென கஞ்சத்தனமாக மெயின் ரோட்டில் இணைத்திருக்கக்கூடாது.பேரலலாக கொஞ்ச தூரம் தங்கள் ரோட்டை நீட்டி , பின் இணைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் கண்டு பொருமிக்கொண்டு இருந்தால் , இவ்வளவு களேபரத்திற்கு இடையிலும் செக் போஸ்ட் வைத்து மால் ஆட்கள் பார்க்கிங்க் கட்டணம் வசூலித்துக்கொண்டு இருந்தனர்.காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி கத்தினேன். 2 மணி நேரம் என்னை மாலுக்குள் சிறை வைத்து விட்டீர்கள்.நீங்கள்தான் நஷ்ட ஈடு தரவேண்டும். அதை விட்டு விட்டு பார்க்கிங்க் சார்ஜ் வாங்கி இன்னும் தாமதப்படுத்துகிறீர்கள் என்று சண்டை போட்டதும் செக் போஸ்ட் ஓப்பனாகி சில கார்கள் மட்டும் சென்று ஓரளவுக்கு கொஞ்சம் ஆசுவாசப்பட்டது மாலின் பார்க்கிங்க் ஸ்பேஸ். புதுப்பட ரிலீஸின்போது படம் பார்க்காதவர்கள் பாடும் திண்டாட்டமாகிவிடும்.உள்ளே படம் முடிந்து காரை வெளியே எடுத்தால்தான் வெளியே இருப்பவர்களால் உள்ளே விட முடியும்.அதுவரை வெளியே இரண்டு கிலோமீட்டருக்கு கார்கள் நின்றுகொண்டு டிராஃபிக்கை நாறடிக்கும்.போக்குவரத்து காவலர்களும் காணிக்கை வாங்கியிருப்பதால் ,ஒரு ஃபார்மாலிட்டிக்கேனும் கையை கூட பிசையாமல் நின்றுகொண்டு இருப்பார். தமிழில் பூங்கா, ஆங்கிலத்தில் பார்க். நம் ஆட்கள் பார்க் என்று இருப்பதால் அதை பார்க்கிங்க் செய்யும் இடம் என நினைத்துக்கொண்டு அதை சுற்றிலும் பார்க் செய்து விடுவார்கள்.அரசங்கமும் அவ்வாறே கருதிக்கொண்டு பார்க்கை சுற்றிலும் பார்க்கிங்க் டோக்கனுடன் ஆட்களை நிப்பாட்டி விடும். ஏதேனும் எக்ஸிபிஷன் , கிரிக்கெட் என நடந்தால் பார்க்கிங்க் மேனேஜ்மெண்டை பார்த்து விழுந்து வ்ழிந்து சிரிக்க வேண்டியதுதான்.ஒரு சைன் போர்டும் இருக்காது. கும்மிருட்டில் தடவிக்கொண்டு போவது போல மனம் போன போக்கில் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஒரு உதவியும் ஏற்பாடு செய்திருக்கமாட்டார்கள்.எங்கேனும் தெய்வாதீனமாக இடம் கிடைத்து பார்க்கிங்க் செய்த அடுத்த கணமே டோக்கனுடன் அங்கே ஒருவர் ப்ரசன்னமாவது மட்டுமே தமிழனின் பார்க்கிங்க் மேனேஜ்மெண்ட் கான்சப்ட்.சில கண்காட்சி நடக்கும் இடங்களில் புதர்களை கடமைக்கு சீரமைத்து பார்க் செய்யச்சொல்வார்கள். மிச்ச மீதி இருக்கும் முட்கள் டயரையும் நம் காலையும் ஒருங்கே பதம் பார்த்து நம்மையே நடமாடும் கண்காட்சியாக்கிவிடும்.அதற்கும் 50 ரூபாய் தண்டம் அழ வேண்டியது மட்டுமே இங்கேயும் வேடிக்கை. தன் பங்குக்கு தானும் கொஞ்சம் காமடி செய்யலாம் என முடிவெடுத்தது ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா. நம்மூரில் மட்டும் இந்த காமடியை அரங்கேற்றியது .ஊரெல்ல்லாம் பார்க்கிங்குத்தானே கட்டணம் வசூலிக்கிறார்கள் ? இங்கே மட்டும் பார்க் பண்ணு பண்ணாம போ , உள்ளே வந்து 5 நிமிஷத்துக்குள்ள வெளியே போகலைன்னா 67 ரூபா சார்ஜ், அதுவும் 10 நிமிடத்துற்குள் வெளியேறினால்தான். இல்லைன்னா இன்னும் அதிகம். அவ்வளோ பெரிய ஏர்போர்ட்ல நுழைஞ்சி இறக்கிவிட்டோ ஏற்றிக்கொண்டோ வெளியேற ஐந்து நிமிடம் போதுமா ? உள்ளே ஸ்பீட் லிமிட் 10 கிமீ / மணி தான் .விரைவில் வெளியேற வேண்டும் என்று 80 கிமீ வேகத்தில் ஓட்ட முடியுமா? அது எப்படியோ ஏதேனும் விதிமுறைகள் போடவேண்டும் என்றாலே நம்மூருக்கு மட்டும் ஒரு பரமார்த்த குருவின் சீடர்தான் மாட்டுவார் போலிருக்கிறது.இந்த சீடர் விதிமுறையை இப்படி போட்டு அடித்த கூத்தில், ஏர்போர்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கில் கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலை தேவையில்லாமல் ஜாம் ஆகிறது.ஏர்போர்டுக்கு உள்ளேயும் கால் டாக்ஸி டிரைவர்கள் ஐந்து நிமிடத்திற்குள் வெளியேற வேண்டும் என்று பதட்டத்துடன் நடுநடுங்கியபடி ஓட்டுகின்றனர். ரயில் நிலையங்களை எடுத்துக்கொண்டால் பெங்களூர் , ஹைதரபாத் எல்லாம் நல்ல பார்க்கிங்க் வசதிகளோடும் கார்கள் வந்து செல்ல ஏதுவாகவும் இருக்கும்.நம்மூர் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் காரை உள்ளே நுழைப்பதே பெரும்பாடு. யாரையேனும் பிக்கப் செய்ய வந்திருந்தால் ,அவரை பிக்கப் செய்து காருக்குள் அடைத்து வெளியேறுவதற்குள் மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கி உங்கலுடைய லங்க்ஸ் வாய் வழியே வெளியே வந்து விடும். 2 கிளாஸ் தண்ணீர் போட்டு திரும்ப அதை நீங்கள் முழுங்க வேண்டியிருக்கும்.ரயில் நிலையத்திற்குள் இருக்கும் பார்க்கிங்க் ஸ்பேசும் ரொம்ப ரொம்ப கம்மி. தமிழ்நாட்டில் மக்களும் அரசாங்கத்திற்கும் நிறுவனங்களுக்கும் போட்டியாக பார்க்கிங்க் விஷயத்தில் எகிறி அடிக்கிறார்கள். கார் வைத்திருக்கும் 60 சதவீதம் ஆட்களுக்கு வீட்டில் பார்க்கிங்க் ஸ்பேஸ் இருக்காது என்றே நினைக்கிறேன். தங்கள் தெருவில் இரு மருங்கிலும் கார்களை வரிசையாக பார்க்கிங்க் செய்து வைத்திருப்பார்கள். அந்த தெருவில் நாம் காரிலோ பைக்கிலோ சென்றால் எதோ தீம்பார்க்குக்குள் அட்வென்ச்சர் ரைட் போவது போல இருக்கும். மேலும் ஒரு பொதுவான தெருவில் கார் ஓட்டிக்கொண்டு இருக்கிறோம் என்ற மனநிலையே வராது.யார் வீட்டு வராண்டாவிலோ ஓட்டிக்கொண்டு இருப்பது போன்ற மனநிலையை நமக்கு வரவழைத்து விடுவார்கள். தெருவிலேயே கார்கள் , பைக்குகள் , சைக்கிள்கள் நின்று கொண்டிருக்கும். ஒரு காருக்கும் இன்னொரு பைக்குக்கும் இடையில் கயறு கட்டி உள்பாவாடை முதற்கொண்டு காயப்போட்டு இருப்பார்கள்.தெருவில் கார் ஓட்டிச்செல்லும் நம்மை , அவர்களின் இடத்தை ஆக்கிரமிக்க வந்த பன்னாட்டு கம்பனியின் சுரண்டல் முதலாளி போல குரோதத்துடன் நோக்குவார்கள். சிலருக்கு வீட்டினுள் பார்க்கிங்க் ஸ்பேஸ் இருந்தாலும் வெளியேதான் விடுவார்கள்.இல்லையென்றால் வேறு யாரேனும் அந்த இடத்தில் அவர்கள் காரை பார்க் செய்து விடுவார்கள் என்ற தமிழருக்கே உரித்தான லேட்ரல் திங்கிங்கே காரணம். சென்னையில் தி நகரை எடுத்துக்கொண்டால் இருபதற்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் தனியாக பார்க்கிங்க் ஏரியா வளைத்துக்கொண்டு உள்ளன. கோடிகள் சர்வ சாதாரனமாக புழங்கும் புகழ்பெற்ற தி நகர் போன்ற இடத்திலேயே அரசாங்கத்தால் இன்னும் பார்க்கிங்க் ஏரியா உருவாக்க முடியவில்லை. மொத்த தமிழகத்திற்கும் பார்க்கிங்க் வசதியை தமிழக அரசு எப்போது நிர்மாணித்து தரும் என்று யோசித்தால் மூளை ஆயில் தீர்ந்த இஞ்சின் போல சூடாகிறது. கொள்கை அளவில் , தியரட்டிக்கலாக கூட அரசிடம் இதற்கென ஒரு ஐடியா இருப்பது போல தெரியவில்லை.இப்படியே போனால் டாஸ்மாக்கை விட திகம் வருமானம் ஈட்டித்தரும் தொழிலாகிவிடும் , டிராஃபிக் போலீஸ் தொழில். ஆம் , நோ பார்க்கிங்கில் ஃபைன் போடுவது மூலம் கோடிக்கணக்கில் பணத்தை அள்ள முடியும்.கார்கள் தினமும் பெருகிக்கொண்டேயுள்ளன. கடமைக்கு ஆங்காங்கே ரோட்டின் ஓரம் சில இடங்களில் மட்டும் பார்க்கிங்க் போர்டு வைப்பதன் மூலம் தன் கடமை முடிந்துவிட்டதாக அரசு நினைக்கிறது. நோ பார்க்கிங்க் போர்டுகள்தான் எங்கு நோக்கினும் தெரிகிறது. டி நகரில் ஒரு டயக்னாஸ்டிக் செண்டர் உள்ளது. என் அம்மாவுக்கு ரத்தப் பரிசோதனைக்காக அந்த டயக்னாஸ்டிக் செண்டரின் எதிரில் ரோட்டின் ஓரமாக காரை பார்க் செய்தேன். அது நோ பார்க்கிங்க் என்பது எனக்குத் தெரியும். அந்த செண்டரில் கார் பார்க்கிங்க் வசதி இல்லை. அரசும் அந்த இடதைச்சுற்றி எங்கும் பார்க்கிங்க் வசதி செய்து கொடுத்திருக்கவில்லை.வேலை முடிந்து திரும்ப வந்து பார்த்தால் வீலில் லாக் போடிருந்தார்கள்.அரை மணி நேர காத்திருத்தலுக்கு பின் வந்து லாக்கை அவிழ்த்து 100 ரூபாய் ஃபைன் போட்டனர். கட்டி விட்டு கிளம்பினேன்.அந்த மாதத்திலேயே அடுத்தடுத்து அதே இடத்திற்கு செல்ல வேண்டி வந்தது. அதே போல காரை அங்கேயே பார்க் செய்து , அவர்களும் லாக் போட்டு , ஃபைன் கட்டி , அதே கதையே தொடர்ந்தது. மூன்றாவது முறை சார்ஜண்ட் என்னை அடையாளம் கண்டு கொண்டார். ஏன் சார்? அதான் லாக் போடறோமே , திரும்ப திரும்ப இங்கயே ஏன் நிறுத்தறீங்க ? இல்ல சார் வேற இடம் இங்க 2 கிலோ மீட்டர் குள்ள இல்ல , அதுவும் இல்லாம மல்டி ப்லக்ஸ்ல நிறுத்தினாலும் 100 ரூவா ஆயிடுது. இங்க லாக் வேற போட்டு ரொம்ப பாதுகாப்பா காரை பாத்துக்கறீங்க , அதான் சந்தோஷமா 100 ரூவாய் பார்க்கிங்க் சார்ஜ் கொடுத்துடலாம்னு. வேற வழியும் இல்லை சார் என்றேன். தொப்பியை கழற்றி தலைக்கு காற்று வருவது போல விசிறிக்கொள்ள ஆரம்பித்தார். நன்றி : இங்கு பஞ்சர் போடப்படும் , மோட்டார் விகடன்.

Posted: 11 Aug 2014 10:16 PM PDT

பார்க்கிங்க் - வேலி முட்டி கிராமங்களில் ஆடு சுவற்றில் முட்டிக்கொண்டு ஒரு மார்க்கமாக நின்றுகொண்டிருக்கும்.வேலி முட்டி என்ற மதுவை உட்கொண்டு விட்டு வேலியையோ சுவற்றையோ முட்டிக்கொண்டு விசித்திரமான போஸில் குடிமகன்கள் நின்று கொண்டு இருப்பார்கள்.இவற்றையெல்லாம் காணக்கொடுத்து வைக்காத நகரத்து மக்கள் இதே போல எகனை மொகனையாக பார்க் செய்யப்பட்டு இருக்கும் காரை பார்த்து மனதை தேற்றிக்கொள்ளலாம். தற்போது பலருக்கு ஓரு குன்ஸாக கார் ஓட்டத்தெரிந்து விடுகிறது.பார்க்கிங்க் செய்ய சுத்தமாக தெரியாது.சிட்டியில் ஓட்டுவது சிரமம் என்ற நினைப்பு பலருக்கு இருக்கலாம், அது தவறு.உண்மையில் சிட்டியில் ஓட்டுவதுதான் சுலபம். ஏனென்றால் அக்கம்பக்கத்தில் நெருக்கமாக ஓட்டிக்கொண்டு வருபவர்களே உங்களை ஒழுங்காக ஓட்ட வைத்து விடுவார்கள். ரோபோ போல ஸ்டியரிங்கை பிடித்து அமர்ந்திருந்தால் போதும். ஏடுகுண்டலவாடாவை தரிசிக்க செல்கையில் நீங்களா நடந்து செல்கிறீர்கள் ? கூட்டம்தானே உங்களை தள்ளிக்கொண்டு செல்கிறது ? அதேபோலத்தான் சிட்டி டிரைவிங்கும். ஆனால் பார்க்கிங்க் செய்ய டிரைவிங்க் நேர்த்தி வேண்டும். பார்க்கிங்க் செய்யத்தெரியாமல் பலர் ஏன் சொதப்புகிறார்கள் என்றால் ,பெரும்பாலும் இவர்களுக்கு பார்க்கிங்க் செய்தே பழக்கம் இல்லை. பல இடங்களில் வேலட் பார்க்கிங்க். பல இடங்களில் பார்க்கிங்கே இல்லை . எப்படி பார்க்கிங்க் செய்து பழகுவது? கிடைத்த இடத்தில் முகத்தை திருப்பிக்கொண்டு காரை நிறுத்துவதற்கு பேர் பார்க்கிங்க் அல்ல. முதன்முதலில் கார் ஓட்டக்கற்றுக்கொண்டு ஓட்ட ஆரம்பிப்பவர்கள் ஓட்டும்போது மற்ற கார்களையோ சுவரையோ இடித்து டிங்கு வாங்குவதை விட பார்க்கிங்க் செய்யும்போது காரின் முகறையை பேர்ப்பதுதான் வழக்கம்.சிலருக்கு பார்க்கிங்க் என்றாலே டென்ஷன் , அலர்ஜி , நடுக்கம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து மூளையை சொறிந்து விட்டு குத்து டான்ஸ் போடும்.அப்படிப்பட்டவர்களை மால் பார்க்கிங்கிலோ , சினிமா தியேட்டர் பார்க்கிங்கிலோ பார்த்திருக்கலாம். ரிவர்ஸ் கியரை போட்டு விட்டு ,அது பாட்டுக்கு நக்ச்ஷிக்கோ நக்ச்ஷிக்கோ நக்ச்ஷிக்கோ என கத்திக்கொண்டு இருக்க சம்மந்தப்பட்ட நபர் டிரைவர் சீட்டில் கால்கள் நடுங்க அமர்ந்து கொண்டு ஒன்றுமே செய்யாமல் ஸ்டியரிங்கை பற்றியபடி தேவாங்கு போல அமர்ந்திருப்பதைக் காணலாம். பார்க்கிங்கை வைத்து பல காமடிகள் கூத்துக்கள் நம்முரில்தான் நடக்கும். பைக் கூட நுழைய முடியாத தெருவாக இருக்கும்.அந்த தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளின் முன்பும் டூ நாட் பார்க் இன் ஃப்ரண்ட் ஆஃப் தி கேட் என போர்டு மாட்டியிருக்கும். ஹோட்டலின் வாசலிலோ , தியேட்டரின் வாசலிலோ பார்க்கிங்க் ஃபுல் என ஒரு போர்டை மாட்டிவிட்டு அலட்சியமாக கேட்டை மூடிவிட்டு சென்றுவிடுவார்கள்.பார்க்கிங்க் இல்லாததால் உண்டாகும் வியபார இழப்பைப் பற்றி அக்கறையே கிடையாது. ஒருமுறை சென்னையின் நடுவில் இருக்கும் மிகப்பிரதானமான த்ரிஷாவுக்கு பிடித்த ஐந்து நட்சத்திர விடுதி வாசலில் ஐந்து பேர் நின்று கொண்டு , ஹோட்டலின் உள்ளே வர யத்தனிக்கும் அனைத்து கார்களையும் , பார்க்கிங்க் ஃபுல் என கூறி திருப்பி அனுப்பிக்கொண்டு இருந்தனர். முதலமைச்சர்கள் முதற்கொண்டு வைத்தியம் பார்த்துக்கொள்ளும் மிகப் பிரசித்தமான அந்த மருத்துவமனைக்கென்று பிரத்யேகப் பார்க்கிங்க் கிடையாது.மருத்துவமனைக்கு வெளியே ரோட்டின் ஓரம் இருக்கும் கார்ப்பரேஷன் பார்க்கிங்க்தான்.அதிலும் பாதி பார்க்கிங்கை அந்த நிறுவனத்தின் நர்ஸிங்க் கல்லூரி பேருந்துகளும் ஆம்புலன்ஸுகளுமே ஆக்கிரமித்துக்கொள்ளும். வேலட் பார்க்கிங்க் என போர்டு வைத்து இருப்பார்கள்.ஆளே இருக்க மாட்டார். அப்படியே அங்கே ஆள் இருந்தாலும் அவருக்கும் நிறுத்த இடம் வேண்டுமல்லவா ? அவரால் மெரீனா பீச்சில்தான் கொண்டு போய் நிறுத்த முடியும்.அது அந்த மருத்துவமனையில் இருந்து 10 கிலோ மீட்டர் இருக்கும். அங்கே போயிருப்பார் போல. பார்க்கிங்கிற்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பணத்தை வாங்கிக்கொண்டு "பார்க்கிங்க் அட் ஓனர்ஸ் ரிஸ்க் " என கொட்டை எழுத்தில் எழுதி நக்கலடிப்பார்கள். ஒரு அலுவலகத்திற்கு காரில் செல்கையில் கேட்டினுள் கார் பாதி நுழைந்ததுமே பேண்ட் அவிழ்ந்து விழுவது கூட கவனிக்காமல் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் போல புயலென பறந்து வருவார் வாட்ச்மேன்.நாம் ஏதோ படு கேவலமான காரியம் செய்துவிட்டதைப்போல காறி உமிழ்ந்துவிட்டு படு அலட்சியமாக திட்டுவார். வெளிய போங்க என அதட்டலாக சொல்வார். எப்படி வந்தது இவருக்கு இவ்வளவு அதிகாரம் என வியப்பாக இருக்கும். பார்க்கிங்க் இடத்தை பாதுகாக்கிறார் அல்லவா ? அதனால் கிடைத்த அதிகாரம். அபார்ட்மெண்டில் சிலர் தங்கள் மனைவியை / காதலியை கூட தாரைவார்த்து கொடுத்து விடுவார்கள் , ஆனால் அவர்களுடைய பார்க்கிங்க் ஸ்பேஸை கட்டிப்பிடித்துக்கொண்டு கிடப்பார்கள்.ஒரு நிமிடம் கூட அடுத்தவர் கார் நிற்க அனுமதிக்க மறுப்பார்கள். முன்பெல்லாம் கன்னிப்பெண் வீட்டில் இருக்கையில் தங்கள் வீட்டின் முன்னால் கட்டிளங்காளையர் நடமாட்டம் இருந்தால் எப்படி பதட்டமாகி திரிவார்களோ , அதைவிட பத்து மடங்கு டென்ஷனாகி விடுகிறார்கள் தற்போது ,தங்கள் வீட்டின் முன்பு வேறு யாரோ கார் நிறுத்தும்போது . இந்த பிரச்சனையாலேயே பாதிக்கப்பட்டு சிலர் மாரடைப்பில் தங்கள் பாடியை சுடுகாட்ட்டில் பக்காவாக பார்க் செய்து விடுகின்றனர். நான்கு தியேட்டர்கள் இருக்கும் ஒரு காம்ப்ளக்ஸில் காரை ஹேண்ட் பிரேக் போடாமல் நிறுத்துங்கள் என்பார்கள். ஒன்றன்பின் ஒன்றாக இடித்துக்கொண்டு நின்றுகொண்டிருக்கும் கார்களை தள்ளி விட நான்கைந்து ஆட்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.அவர்கள் கார்களை தள்ளி தள்ளி வழி ஏற்படுத்திக்கொடுக்க , நாம் நம் காரை வளைந்து நெளிந்து வெளியே எடுக்க வேண்டும். மல்டிப்ளெக்ஸ் மாலுக்கு சினிமா பார்க்கச்சென்றால் உங்களின் டிக்கட் ரேட்டை விட பார்க்கிங்க் ரேட் அதிகமாக இருக்கும்.ஒரு புது மாலுக்கு சென்றிருந்தேன்.தரைத்தளம் மட்டுமின்றி 8 மாடி பார்க்கிங்க் வசதி உள்ள மால். எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு வெளியேறலாம் என காரை எடுத்தால் , நம்புங்கள், மெயின் ரோட்டை அடைய ஒன்றரை மணி நேரம் ஆனது . ஒன்றரை மணி நேரமும் மாலுக்குள்ளேயே ஆமை போல நகர்ந்துகொண்டேயிருந்தன கார்கள். என்னதான் உயிர் போகும் அவசரம் என்றாலும் வெளியேற முடியாத வண்ணம் ஜாங்கிரி போல பலரும் சிக்கிக்கொண்டனர். ஏன் இப்படி ஆனது , எப்போது இது சரியாகும் என்று விளக்கிச்சொல்லக் கூட ஆளில்லை. என்ன எழவு என தெரியாமலேயே அனைவரும் எரிச்சலோடு அமர்ந்திருந்தனர்.காருக்குள் அசதியில் , பசி மயக்கத்தில் குழந்தைகள் தூங்கி விட்டனர்.வளைந்து நெளிந்து குகைக்குள் இருந்து வெளி வருவது போல ஒருவழியாக வெளிவந்து பார்த்தால் மாலில் இருந்து வெளியேறும் வாகனங்களை மெயின் ரோடில் சடாரென குறுகலான ரோட்டின் மூலம் இணைத்திருந்ததால் டிராஃபிக் ஜாம் ஆகி இருந்தது. அந்த மெயின் ரோடே சின்ன ரோடுதான். திடீரென அங்கே ஒரு மால் முளைத்து இவ்வளவு கார்கள் படையெடுக்கும் என அந்த மெயின் ரோடு கனவில் கூட நினைத்துப்பார்த்திருக்காது. ஆனால் இந்த மாலுக்கு பர்மிஷன் கொடுத்தவர்களுக்கு மிக நன்றாக முன்பே தெரிந்திருக்கும். மாலின் ஆட்களும் தங்கள் இடம் வீணாகக்கூடாது என்ற பரந்த நோக்கத்துடன் தங்கள் மாலில் இருந்து வெளியேறும் ரோட்டை திடுமென கஞ்சத்தனமாக மெயின் ரோட்டில் இணைத்திருக்கக்கூடாது.பேரலலாக கொஞ்ச தூரம் தங்கள் ரோட்டை நீட்டி , பின் இணைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் கண்டு பொருமிக்கொண்டு இருந்தால் , இவ்வளவு களேபரத்திற்கு இடையிலும் செக் போஸ்ட் வைத்து மால் ஆட்கள் பார்க்கிங்க் கட்டணம் வசூலித்துக்கொண்டு இருந்தனர்.காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி கத்தினேன். 2 மணி நேரம் என்னை மாலுக்குள் சிறை வைத்து விட்டீர்கள்.நீங்கள்தான் நஷ்ட ஈடு தரவேண்டும். அதை விட்டு விட்டு பார்க்கிங்க் சார்ஜ் வாங்கி இன்னும் தாமதப்படுத்துகிறீர்கள் என்று சண்டை போட்டதும் செக் போஸ்ட் ஓப்பனாகி சில கார்கள் மட்டும் சென்று ஓரளவுக்கு கொஞ்சம் ஆசுவாசப்பட்டது மாலின் பார்க்கிங்க் ஸ்பேஸ். புதுப்பட ரிலீஸின்போது படம் பார்க்காதவர்கள் பாடும் திண்டாட்டமாகிவிடும்.உள்ளே படம் முடிந்து காரை வெளியே எடுத்தால்தான் வெளியே இருப்பவர்களால் உள்ளே விட முடியும்.அதுவரை வெளியே இரண்டு கிலோமீட்டருக்கு கார்கள் நின்றுகொண்டு டிராஃபிக்கை நாறடிக்கும்.போக்குவரத்து காவலர்களும் காணிக்கை வாங்கியிருப்பதால் ,ஒரு ஃபார்மாலிட்டிக்கேனும் கையை கூட பிசையாமல் நின்றுகொண்டு இருப்பார். தமிழில் பூங்கா, ஆங்கிலத்தில் பார்க். நம் ஆட்கள் பார்க் என்று இருப்பதால் அதை பார்க்கிங்க் செய்யும் இடம் என நினைத்துக்கொண்டு அதை சுற்றிலும் பார்க் செய்து விடுவார்கள்.அரசங்கமும் அவ்வாறே கருதிக்கொண்டு பார்க்கை சுற்றிலும் பார்க்கிங்க் டோக்கனுடன் ஆட்களை நிப்பாட்டி விடும். ஏதேனும் எக்ஸிபிஷன் , கிரிக்கெட் என நடந்தால் பார்க்கிங்க் மேனேஜ்மெண்டை பார்த்து விழுந்து வ்ழிந்து சிரிக்க வேண்டியதுதான்.ஒரு சைன் போர்டும் இருக்காது. கும்மிருட்டில் தடவிக்கொண்டு போவது போல மனம் போன போக்கில் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஒரு உதவியும் ஏற்பாடு செய்திருக்கமாட்டார்கள்.எங்கேனும் தெய்வாதீனமாக இடம் கிடைத்து பார்க்கிங்க் செய்த அடுத்த கணமே டோக்கனுடன் அங்கே ஒருவர் ப்ரசன்னமாவது மட்டுமே தமிழனின் பார்க்கிங்க் மேனேஜ்மெண்ட் கான்சப்ட்.சில கண்காட்சி நடக்கும் இடங்களில் புதர்களை கடமைக்கு சீரமைத்து பார்க் செய்யச்சொல்வார்கள். மிச்ச மீதி இருக்கும் முட்கள் டயரையும் நம் காலையும் ஒருங்கே பதம் பார்த்து நம்மையே நடமாடும் கண்காட்சியாக்கிவிடும்.அதற்கும் 50 ரூபாய் தண்டம் அழ வேண்டியது மட்டுமே இங்கேயும் வேடிக்கை. தன் பங்குக்கு தானும் கொஞ்சம் காமடி செய்யலாம் என முடிவெடுத்தது ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா. நம்மூரில் மட்டும் இந்த காமடியை அரங்கேற்றியது .ஊரெல்ல்லாம் பார்க்கிங்குத்தானே கட்டணம் வசூலிக்கிறார்கள் ? இங்கே மட்டும் பார்க் பண்ணு பண்ணாம போ , உள்ளே வந்து 5 நிமிஷத்துக்குள்ள வெளியே போகலைன்னா 67 ரூபா சார்ஜ், அதுவும் 10 நிமிடத்துற்குள் வெளியேறினால்தான். இல்லைன்னா இன்னும் அதிகம். அவ்வளோ பெரிய ஏர்போர்ட்ல நுழைஞ்சி இறக்கிவிட்டோ ஏற்றிக்கொண்டோ வெளியேற ஐந்து நிமிடம் போதுமா ? உள்ளே ஸ்பீட் லிமிட் 10 கிமீ / மணி தான் .விரைவில் வெளியேற வேண்டும் என்று 80 கிமீ வேகத்தில் ஓட்ட முடியுமா? அது எப்படியோ ஏதேனும் விதிமுறைகள் போடவேண்டும் என்றாலே நம்மூருக்கு மட்டும் ஒரு பரமார்த்த குருவின் சீடர்தான் மாட்டுவார் போலிருக்கிறது.இந்த சீடர் விதிமுறையை இப்படி போட்டு அடித்த கூத்தில், ஏர்போர்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கில் கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலை தேவையில்லாமல் ஜாம் ஆகிறது.ஏர்போர்டுக்கு உள்ளேயும் கால் டாக்ஸி டிரைவர்கள் ஐந்து நிமிடத்திற்குள் வெளியேற வேண்டும் என்று பதட்டத்துடன் நடுநடுங்கியபடி ஓட்டுகின்றனர். ரயில் நிலையங்களை எடுத்துக்கொண்டால் பெங்களூர் , ஹைதரபாத் எல்லாம் நல்ல பார்க்கிங்க் வசதிகளோடும் கார்கள் வந்து செல்ல ஏதுவாகவும் இருக்கும்.நம்மூர் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் காரை உள்ளே நுழைப்பதே பெரும்பாடு. யாரையேனும் பிக்கப் செய்ய வந்திருந்தால் ,அவரை பிக்கப் செய்து காருக்குள் அடைத்து வெளியேறுவதற்குள் மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கி உங்கலுடைய லங்க்ஸ் வாய் வழியே வெளியே வந்து விடும். 2 கிளாஸ் தண்ணீர் போட்டு திரும்ப அதை நீங்கள் முழுங்க வேண்டியிருக்கும்.ரயில் நிலையத்திற்குள் இருக்கும் பார்க்கிங்க் ஸ்பேசும் ரொம்ப ரொம்ப கம்மி. தமிழ்நாட்டில் மக்களும் அரசாங்கத்திற்கும் நிறுவனங்களுக்கும் போட்டியாக பார்க்கிங்க் விஷயத்தில் எகிறி அடிக்கிறார்கள். கார் வைத்திருக்கும் 60 சதவீதம் ஆட்களுக்கு வீட்டில் பார்க்கிங்க் ஸ்பேஸ் இருக்காது என்றே நினைக்கிறேன். தங்கள் தெருவில் இரு மருங்கிலும் கார்களை வரிசையாக பார்க்கிங்க் செய்து வைத்திருப்பார்கள். அந்த தெருவில் நாம் காரிலோ பைக்கிலோ சென்றால் எதோ தீம்பார்க்குக்குள் அட்வென்ச்சர் ரைட் போவது போல இருக்கும். மேலும் ஒரு பொதுவான தெருவில் கார் ஓட்டிக்கொண்டு இருக்கிறோம் என்ற மனநிலையே வராது.யார் வீட்டு வராண்டாவிலோ ஓட்டிக்கொண்டு இருப்பது போன்ற மனநிலையை நமக்கு வரவழைத்து விடுவார்கள். தெருவிலேயே கார்கள் , பைக்குகள் , சைக்கிள்கள் நின்று கொண்டிருக்கும். ஒரு காருக்கும் இன்னொரு பைக்குக்கும் இடையில் கயறு கட்டி உள்பாவாடை முதற்கொண்டு காயப்போட்டு இருப்பார்கள்.தெருவில் கார் ஓட்டிச்செல்லும் நம்மை , அவர்களின் இடத்தை ஆக்கிரமிக்க வந்த பன்னாட்டு கம்பனியின் சுரண்டல் முதலாளி போல குரோதத்துடன் நோக்குவார்கள். சிலருக்கு வீட்டினுள் பார்க்கிங்க் ஸ்பேஸ் இருந்தாலும் வெளியேதான் விடுவார்கள்.இல்லையென்றால் வேறு யாரேனும் அந்த இடத்தில் அவர்கள் காரை பார்க் செய்து விடுவார்கள் என்ற தமிழருக்கே உரித்தான லேட்ரல் திங்கிங்கே காரணம். சென்னையில் தி நகரை எடுத்துக்கொண்டால் இருபதற்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் தனியாக பார்க்கிங்க் ஏரியா வளைத்துக்கொண்டு உள்ளன. கோடிகள் சர்வ சாதாரனமாக புழங்கும் புகழ்பெற்ற தி நகர் போன்ற இடத்திலேயே அரசாங்கத்தால் இன்னும் பார்க்கிங்க் ஏரியா உருவாக்க முடியவில்லை. மொத்த தமிழகத்திற்கும் பார்க்கிங்க் வசதியை தமிழக அரசு எப்போது நிர்மாணித்து தரும் என்று யோசித்தால் மூளை ஆயில் தீர்ந்த இஞ்சின் போல சூடாகிறது. கொள்கை அளவில் , தியரட்டிக்கலாக கூட அரசிடம் இதற்கென ஒரு ஐடியா இருப்பது போல தெரியவில்லை.இப்படியே போனால் டாஸ்மாக்கை விட திகம் வருமானம் ஈட்டித்தரும் தொழிலாகிவிடும் , டிராஃபிக் போலீஸ் தொழில். ஆம் , நோ பார்க்கிங்கில் ஃபைன் போடுவது மூலம் கோடிக்கணக்கில் பணத்தை அள்ள முடியும்.கார்கள் தினமும் பெருகிக்கொண்டேயுள்ளன. கடமைக்கு ஆங்காங்கே ரோட்டின் ஓரம் சில இடங்களில் மட்டும் பார்க்கிங்க் போர்டு வைப்பதன் மூலம் தன் கடமை முடிந்துவிட்டதாக அரசு நினைக்கிறது. நோ பார்க்கிங்க் போர்டுகள்தான் எங்கு நோக்கினும் தெரிகிறது. டி நகரில் ஒரு டயக்னாஸ்டிக் செண்டர் உள்ளது. என் அம்மாவுக்கு ரத்தப் பரிசோதனைக்காக அந்த டயக்னாஸ்டிக் செண்டரின் எதிரில் ரோட்டின் ஓரமாக காரை பார்க் செய்தேன். அது நோ பார்க்கிங்க் என்பது எனக்குத் தெரியும். அந்த செண்டரில் கார் பார்க்கிங்க் வசதி இல்லை. அரசும் அந்த இடதைச்சுற்றி எங்கும் பார்க்கிங்க் வசதி செய்து கொடுத்திருக்கவில்லை.வேலை முடிந்து திரும்ப வந்து பார்த்தால் வீலில் லாக் போடிருந்தார்கள்.அரை மணி நேர காத்திருத்தலுக்கு பின் வந்து லாக்கை அவிழ்த்து 100 ரூபாய் ஃபைன் போட்டனர். கட்டி விட்டு கிளம்பினேன்.அந்த மாதத்திலேயே அடுத்தடுத்து அதே இடத்திற்கு செல்ல வேண்டி வந்தது. அதே போல காரை அங்கேயே பார்க் செய்து , அவர்களும் லாக் போட்டு , ஃபைன் கட்டி , அதே கதையே தொடர்ந்தது. மூன்றாவது முறை சார்ஜண்ட் என்னை அடையாளம் கண்டு கொண்டார். ஏன் சார்? அதான் லாக் போடறோமே , திரும்ப திரும்ப இங்கயே ஏன் நிறுத்தறீங்க ? இல்ல சார் வேற இடம் இங்க 2 கிலோ மீட்டர் குள்ள இல்ல , அதுவும் இல்லாம மல்டி ப்லக்ஸ்ல நிறுத்தினாலும் 100 ரூவா ஆயிடுது. இங்க லாக் வேற போட்டு ரொம்ப பாதுகாப்பா காரை பாத்துக்கறீங்க , அதான் சந்தோஷமா 100 ரூவாய் பார்க்கிங்க் சார்ஜ் கொடுத்துடலாம்னு. வேற வழியும் இல்லை சார் என்றேன். தொப்பியை கழற்றி தலைக்கு காற்று வருவது போல விசிறிக்கொள்ள ஆரம்பித்தார். நன்றி : இங்கு பஞ்சர் போடப்படும் , மோட்டார் விகடன்.

0 comments:

Post a Comment