Tuesday, 2 June 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஒரு பொண்ணு போன் பண்ணி ...சார் 7500 மதிப்புள்ள பொருட்கள் ..உங்களுக்கு இலவசமா அனுப...

Posted: 02 Jun 2015 02:20 AM PDT

ஒரு பொண்ணு போன் பண்ணி ...சார் 7500 மதிப்புள்ள பொருட்கள் ..உங்களுக்கு இலவசமா அனுப்புறோம் சார் ..உங்க மொபைல் நம்பர் ஹேப்பி குலுக்கல்ல (அது என்ன குலுக்கலோ ) செலக்ட் ஆகிருக்கு ...நீங்க அட்ரஸ் சொல்லுங்கன்னு கேட்டுச்சு ...

கொரியர் சார்ஜ் நான்தானே கட்டணும்னு கேட்டேன் ..
ஆமா சார்...அது வெறும் 2500 மட்டும்தான்னு அசால்ட்டா சொல்லிட்டு ...அட்ரஸ் சொல்லுங்கன்னு மறுபடியும் கேட்டுச்சு ...

கொரியர் சார்ஜ் எல்லாம் வேணாம் நானே வந்து வாங்கிகிறேன் ..உங்க அட்ரஸ் சொல்லுங்க கேட்டேன் ...போன வச்சுருச்சு ... ;-)

7500 ரூவா பரிசு போச்சே...என்னை வாழ்த்துங்க பிரண்ட்ஸ் . :P

- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் @ Relaxplzz

இளையாராஜா என்றால் இசைக்கு ராஜா என்று தான் நம் மனதில் நினைக்கத் தோன்றும். அந்த நி...

Posted: 01 Jun 2015 11:30 PM PDT

இளையாராஜா என்றால் இசைக்கு ராஜா என்று தான் நம் மனதில் நினைக்கத் தோன்றும். அந்த நினைப்பும் நூற்றுக்கு நூறு உண்மை தான். அவரின் பாடலுடன், நீண்ட பயணம் எத்தனை சுகமானது என்று அனுபவத்தில் உணர்ந்தவர்களுக்கே இந்த வாக்கியத்தின் சத்தியம் புரியும்.

கடந்த டிசம்பர் மாதம் ( வருடம் முடிவில் ), திருவண்ணாமலையில் ஒரு 3 நாட்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு நாள் ரமண ஆசிரமம் போய் இருந்தோம். ஆசிரமத்தின் அனைத்து இடங்களையும் பொறுமையாக பார்த்து விட்டு சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் செல்ல வெளியில் வரும் பொழுது காலணிகள் விடும் இடத்திற்கு சற்று முன்பு, இவர், நம் இராக தேவன் உள்ளே நுழைந்தார். தனியாக உள்ளே அமைதியாக, வெண்மையிலும், வெண்மையான தூய பளீர் வெள்ளை ஜிப்பா, வேட்டியுடன் நுழைந்தார்.

அவரின் கண்களில் அத்தனை காருண்யம். உதடுகளில் ஒரு சினேக புன்னகை. என் கூட இருந்த ஒர் தோழி, அவர் கூட ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாம் என்று என் காதில் கிசுகிசுத்தாள். எனக்கு அது உவப்பாக இல்லை. இருப்பது ரமணர் ஆசிரமம். அத்தனை பக்தர்கள் சுற்றி அமைதியாக இருக்கும் போது, அப்படி செய்வது ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்று தோன்றியதால், ஒரே வார்தையில் வேண்டாம் என்று அழுத்தமாக கூறி விட்டு, அவரைப் பார்த்து ஒர் வணக்கமும், சின்னதாக சிரிப்புமாக நகர்ந்து விட்டோம். பதிலுக்கு அவரும் மலர்ந்த முகத்துடன் இரு கைக் கூப்பி மிக அழகாக வணங்கிவிட்டு, மிக மெதுவாக எங்களைக் கடந்து சென்றார். 70 வயதில் கூட பார்க்க 50 வயது மதிக்க தகுந்த தோற்றத்தில் இருந்தார்.

அனைவருக்கும் தெரிந்தவராக, இசையை ரசிக்கும் மக்கள் போற்றும் மனிதராக இருக்க வேண்டிய வரம் வாங்கி அவர் வந்துள்ளார். அதற்காக, நாம் அவரை எல்லா இடங்களிலும், அவரின் தனிமையை எடுத்துக் கொள்வது நாகரிகமில்லை என்று தோன்றியதால் தான் மெதுவாக நகர்ந்து வந்தேன். இல்லையென்றால், " சார் ஒரு Selfie please" என்று கேட்டு இருப்பேன். உண்மையை சொன்னால், அவரும் அன்று நல்ல மனநிலையில் இருந்ததாக தான் தோன்றியது. அப்படி கேட்டு இருந்தால், அனேகமாக அவர் சரி என்று ஒரு நிமிடம் எங்களுக்கு ஒதுக்கி தான் இருப்பார் என்றே தோன்றியது......
:)

நோய், நொடியில்லாமல் பல காலம் வாழ எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகள் இளையராஜா வுக்கு....!

Many More Happy Returns of the Day Sir !

- Latha Swaathi @ Relaxplzz


"இசைத்தலைவனுக்கு இன்று பிறந்தநாள்" இதயம் ஒரு கோவில்.. என்றெழுதினாய். ஆம். எங்க...

Posted: 01 Jun 2015 10:36 PM PDT

"இசைத்தலைவனுக்கு இன்று பிறந்தநாள்"

இதயம் ஒரு கோவில்..
என்றெழுதினாய்.

ஆம்.
எங்கள் இதயக்கோவிலின்
இசைதெய்வம் நீயல்லவா..!

அம்மாசொன்ன ஆரிரரோ..
என்றெழுதினாய்.

ஆனால் உன் ஆரிரரோவில்
எத்தனையோ அம்மாக்கள் தூங்கிப்போயினரே..!

நிலா அது வானத்துமேல..
என்றெழுதினாய்.

ஆனால் உன்பாடலைக்கேட்க
நிலா நிலத்திற்குவந்ததை நீயறிவாயா..?

இசையில் தொடங்குதம்மா விரகநாடகமே..
என்றெழுதினாய்.

எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொருநாளும்
உன்னிசையிலல்லவா தொடங்குகிறது..!

எங்கிருந்தோ அழைக்கும் என்கீதம்..
என்றெழுதினாய்.

எங்கிருந்தழைத்தாலும் ஓடிவருவது எங்களின் ஜீவன் என்பதை நீயறிவாயா..?

மரத்தவச்சவன் தண்ணீயூத்துவான்..
என்றெழுதினாய்.

எங்களுக்கு இசைநீரூற்றுவதற்காக
இறைவனால் அனுப்பப்பட்ட இசைத்தூதன் நீயல்லவா..!

இறைவனிடம் என் சுயநலத்திற்காகவேண்டுகிறேன்.

இறைவா...!
இவனுக்கு நீண்ட ஆயுளைக்கொடு.

இசையுலகம் சுழன்றுகொண்டேயிருக்கட்டும்.

- ஃபீனிக்ஸ் பாலா

Relaxplzz


செம க்யூட் செல்லம்ஸ் <3 பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Jun 2015 10:58 AM PDT

செம க்யூட் செல்லம்ஸ் ♥

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


மற்றவர்களும் நம்மைப்போலவே.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ....

Posted: 01 Jun 2015 10:10 AM PDT

மற்றவர்களும் நம்மைப்போலவே..
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார்.

அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.

கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.

அவர் பார்ப்பதற்கு படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும்,நல்லஉயரமாகவும்,
கரு,கருவென்று இருந்தார்.

வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.

அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,

''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள்.

என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார்.

பெட்டகக் காப்பாளர் சொன்னார்,

பரவாயில்லை,கொடுங்கள்.

நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று,

உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும்,

சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி,

அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''என்றார்.

உலக இயல்பு...
..........................

நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.

நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.

நம்மைப்போல்தான் மற்றவர்களும் எண்ணம் கொண்டு இருப்பார்கள் என்று எண்ண வேண்டும்.

எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால்
நமக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள்.

ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை,நிறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு சகிப்புத் தன்மை
வந்துவிடும்.

Relaxplzz

ஒரே கல்லில் தமிழனின் கை வண்ணம் அனைவரும் பார்த்து இருபிர்கள், பல கற்களை கொண்டு ஒர...

Posted: 01 Jun 2015 09:32 AM PDT

ஒரே கல்லில் தமிழனின் கை வண்ணம் அனைவரும் பார்த்து இருபிர்கள், பல கற்களை கொண்டு ஒரு சிற்பம் உருவாக்க முடியுமா???
நம் முன்னோர்களால் அதுவும் சாத்தியம் ஆகிற்று....
இங்கு இருக்கும் யானை பல கற்களால் உருவம் ஆக்கப்பட்டது....
- சித்தாமூர்,செஞ்சிக்கோட்டை


"தமிழன் சாதித்த கட்டிடக்கலை"

0 comments:

Post a Comment