Relax Please: FB page daily Posts |
Posted: 14 Jun 2015 09:10 AM PDT நாட்டுல ஒரு ராஜா. அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான். அரசனின் முகத்தைக் கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம். ஆகவே அமைச்சர் ஒரு யோசனை சொன்னார். 'அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?' 'ஆமாம்' என்றான் அரசன். 'ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லையே!' 'மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே' என்றார் அமைச்சர். 'புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்?' அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!' 'குரு' என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன். அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள். சம்பிரதாயங்கள் முடிந்தபிறகு அரசன் தன் குருவைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களைக் கொட்டினான். அவற்றைச் சரி செய்ய தான் மனதில் வைத்திருக்கும் தீர்வுகளையும் சொன்னான். குரு எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டார். கடைசியாக அரசன் கேட்டான்… 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?' அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு 'நீ புறப்படலாம்' என்றார். அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. புதிய மலர்ச்சி. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் நாட்டை நோக்கிப் பயணமானான். அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. 'அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?' என்று ஆர்வத்தோடு கேட்டார். 'உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான். என் யோசனை அவனுக்கு தேவைப்படவில்லை' என்றார் குரு. அப்படி என்ன செய்திருப்பார் குரு?. . . . . . . 'நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!' - //சாய்ந்து கொள்ள தோள் இருப்பின் துன்பங்கள் பெரிதாய் அழுத்துவதில்லை.// Relaxplzz |
Posted: 13 Jun 2015 10:10 AM PDT ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள் அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்" என்று அருளினார் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர் 'அந்தபட்டம் கைக்கு வர வேண்டும், அந்தபெண் வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடித்தார். வரத்தின் மீது நம்பிக்கை வந்தது 7வது வரமாக தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர் சிறைக்கு செல்ல வேண்டினார். அதே போல் வோடபோன் நிறுவனர் ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார். மகிழ்ந்த அவர் மீதமுள்ள 3 வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார். அவற்றை பயன்படுத்த தான் உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல் வரமாக "எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார். நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர், "10 வாய்ப்புகள் தருவதாக சொல்லி 7 வாய்ப்புகள் தான் தந்தாய் 8வது வாய்ப்பை பயன்படுத்தியும் பலிக்காமல் நான் இறந்துவிட்டேன். கடவுள் பொறுமையாக, "நீ மட்டும் 10 ரூபாய்க்கு கார்டு வாங்குனா 7ரூபாய்க்கு தான் பேச விடுர யார ஏமாத்த பாக்குற #போடா_நரகத்துக்கு Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment